BK Murli 3 October 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 3 October 2016 Tamil

    03.10.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

    இனிமையான குழந்தைகளே! மகாவீரர் ஆகுங்கள். மாயாவின் புயலிடம் சண்டையிடுவதற்குப் பதிலாக ஆடாமல் அசையாமல் இருங்கள்.



    கேள்வி :

    பிரம்மா பாபாவிற்கு முன்பு பல தொல்லைகள் இருந்த போதிலும் அவர் ஒரு போதும் கோபப்படவில்லை. ஏன்?



    பதில்:

    ஏனென்றால் நமக்கு பாபாவிடமிருந்து (சிவபாபா) சொத்து கிடைக்கிறது என்ற போதை பாபாவிற்கு (பிரம்மா) இருந்தது. போன கல்பத்தைப் போன்றே அனைத்தும் நடந்துக் கொண்டிருக்கிறது. எதுவும் புதியது அல்ல. அனைவரையும் விட அதிகமாக திட்டுக்கள் பாபாவிற்கு கிடைத்தது. பிறகு கிருஷ்ணரைக் கூட திட்டு கின்றார்கள். ஒரு வேளை நாமும் திட்டு வாங்க வேண்டும் என்றால், என்ன பெரிய விஷயம் ! உலகம் நம்முடைய விஷயங்களைப் பற்றி அறியவில்லை என்றால் நிச்சயமாகத் திட்டுவார்கள். ஆகையினால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் வருத்தம் ஏற்படவில்லை. இவ்வாறே அப்பாவைப் பின்பற்றுங்கள்.



    பாடல் :

    கள்ளம் கபடம் அற்றவர் விசித்திரமானவர்.....



    ஓம் சாந்தி.

    இது பக்தி மார்க்கத்தைச் சார்ந்தவர்களின் பாடல் ஆகும். ஞான மார்க்கத்தில் பாட்டு போன்றவை கள் பாடப்படுவதில்லை. உருவாக்கப்படுவதும் இல்லை. அவசியமும் இல்லை. ஏனென்றால் பாபாவிடமிருந்து ஒரு நொடியில் ஜீவன் முக்தியின் சொத்து கிடைக்கிறது என பாடப்பட்டிருக்கிறது. அதில் பாட்டு போன்றவைகளின் அவசியம் இல்லை. நமக்கு எல்லயைற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சொத்து கிடைக்கிறது என நீங்கள் அறிகிறீர்கள். பக்தி மார்க்கத்தின் பழக்க வழக்கங்கள் என்ன இருக்கிறதோ அது இதில் வராது. குழந்தைகள் கவிதைகள் போன்றவைகளை எழுதுகிறார்கள். அது மற்றவர்களுக்குக் கூறுவதற்காக ஆகும். அதைக் கூட நீங்கள் புரிய வைக்காதவரை யாரும் புரிந்துக் கொள்ள முடியாது. இப்போது குழந்தைகாளகிய உங்களுக்கு அப்பா கிடைத்திருக்கிறார் என்றால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். தந்தை 84 பிறவிகளின் சக்கரத்தின் ஞானத்தைக் கூறியிருக்கிறார். இப்போது நாம் சுயதரிசன சக்கரதாரி ஆகியிருக்கிறோம் என்றால் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். பாபாவிடமிருந்து உலகத்திற்கே அதிபதியாகிக் கொண்டிருக்கிறோம். நிச்சய புத்தி தான் வெற்றியைக் கொடுக்கிறது. யாருக்கு நிச்சயம் இருக்கிறதோ அவர்கள் சத்யுகத்திற்குப் போவார்கள். எனவே குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். அப்பாவைப் பின்பற்றுங்கள். நிராகார தந்தை இந்த உடலில் எப்போது பிரவேசம் ஆனாரோ அப்போதிலிருந்து இவருக்கு நிறைய தொல்லைகள் ஏற்பட்டது என குழந்தைகள் அறிகிறீர்கள். சகோதரர்களுடன் சண்டை, ஊர் மக்களுடன் சண்டை, முழு சிந்தி இனத்தவருடனும் சண்டை நடந்தது. குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் சீக்கிரம் திருமணம் செய்வியுங்கள் என கூறுவார்கள். திருமணம் செய்யாமல் வேலை எப்படி நடக்கும். கீதை படிப்பதைத் தவறவில்லை. கீதையின் பகவான் சிவன் என்பது தெரிந்து விட்ட பிறகு அந்த கீதையைப் படிப்பதை விட்டு விட்டார். பிறகு தானே உலகத்திற்கு அதிபதி ஆகின்றோம் என்ற போதை ஏற்பட்டு விட்டது. அந்த கீதையை விட்டு விட்டார். இதுவோ சிவபகவான் வாக்கு! பிறகு தூய்மையாக இருப்பதனால் பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டது. சகோதரர், சித்தப்பா என எவ்வளவு பேர் இருந்தனர். இதில் தைரியம் வேண்டும் அல்லவா? நீங்களும் மகாவீர் மகாவீராங்கனை. ஒரு பாபாவைத் தவிர வேறு எந்த கவலையும் இல்லை. புருஷ் என்றால் படைப்பவர். படைப்பவர் தூய்மையாகிறார் என்றால், படைப்புகளையும் தூய்மையாக மாற்ற வேண்டும். தூய்மையான அன்னப்பறவை மற்றும் அசுத்தமான நாரை எப்படி ஒன்றாகச் சேர்ந்திருக்க முடியும்? படைப்பவர் என்னுடைய வழிப்படி நடக்க வேண்டும் என்றால் நட, இல்லை என்றால் வெளியே சென்று விடு என்று கட்டளை இடுவார். லௌகீக பெண்ணிற்குத் திருமணம் ஆகி விட்டது என உங்களுக்குத் தெரியும். அவருக்கு ஞானம் கிடைத்த உடன் ஆஹா, தூய்மையாகுங்கள் என்று பாபா கூறுகிறார் என்றால் நான் ஏன் மாறக்கூடாது என்று கூறினார். நான் விஷத்தைக் கொடுக்க மாட்டேன் என கணவருக்குப் பதில் கொடுத்து விட்டார். அவ்வளவுதான், இந்த விஷயத்தில் தான் பலருக்கு சண்டை ஏற்பட்டது. பெரிய பெரிய வீடுகளில் இருந்து பெண் குழந்தைகள் வந்தனர். எதையும் பொருட்படுத்தவில்லை. யாருடைய அதிர்ஷ்டத்தில் இல்லையோ புரிந்துக் கொள்ளவும் முடியவில்லை. தூய்மையாக இருக்க முடியும் என்றால் இருங்கள், இல்லை என்றால் சென்று தங்களுக்கானதை செய்துக் கொள்ளுங்கள். இவ்வளவு தைரியம் வேண்டும் அல்லவா? பாபா முன்பு எத்தனை பிரச்சனைகள் ஏற்பட்டது. பாபா எப்போதாவது கோபப்பட்டதை பார்த்திருக்கிறீர்களா? செய்தி தாட்களில் அமெரிக்கா வரை சென்றது. எதுவும் புதியதல்ல. இதுவோ போன கல்பத்தைப் போன்று நடக்கிறது. இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? நாம் நம்முடைய தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைய வேண்டும். தனது படைப்பை காப்பாற்ற வேண்டும். அனைத்து படைப்புகளும் இச்சயமத்தில் அழுக்காக இருக்கிறது என பாபாவிற்குத் தெரியும். நான் தான் அனைவரையும் தூய்மையாக மாற்ற வேண்டும். பாபாவிற்குத் தான் அனைவரும் பதீத பாவனர், விடுவிக்கக் கூடியவர் வாருங்கள் என்று கூறுகிறார்கள். எனவே அவருக்கு தான் இரக்கம் ஏற்படுகிறது. இரக்க மனம் உடையவர் அல்லவா? குழந்தைகளே எந்த விஷயத்திலும் பயப்படா தீர்கள் என பாபா புரிய வைக்கின்றார். பயப்படுவதால் இவ்வளவு உயர்ந்த பதவி அடைய முடியாது. தாய்மார்கள் மீது தான் கொடுமைகள் இழைக்கப்படுகிறது. இதுவும் அடையாளம் ஆகும். திரௌபதியை துகிலுரித்தனர். பாபா 21 பிறவிகளுக்கு துகிலுரிப்பதிலிருந்து காப்பாற்றுகிறார். உலகில் இருப்பவர்கள் இந்த விஷயங்களை அறியவில்லை. சத்கதியை அளிக்கும் வள்ளலோ நான் அல்லவா? எதுவரை மனிதர்கள் துர்கதியை அடைய வில்லையோ அதுவரை நான் எப்படி வந்து சத்கதியைக் கொடுக்க முடியும். பதீத அழுக்கான சிருஷ்டியாக மாற வேண்டும். ஒவ்வொரு பொருளும் புதியதிலிருந்து நிச்சயமாகப் பழையதாகிறது. பழைய வீட்டை விட வேண்டியிருக்கிறது. புது உலகம் தங்க யுகம். பழைய உலகம் இரும்பு யுகம் ஆகும். எப்போதும் புதியதாக இருக்க முடியாது. இந்த சிருஷ்டி சக்கரத்தைப் பற்றி நீங்கள் அறிகிறீர்கள். தேவி தேவதையின் இராஜ்யம் மீண்டும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. மீண்டும் உங்களுக்கு கீதா ஞானத்தைக் கூறுகின்றேன் என பாபா கூறுகின்றார். இங்கே இராவண இராஜ்யத்தில துக்கம் இருக்கிறது. இராம இராஜ்யம் என்று எதற்கு கூறப்படுகிறது. இதுவும் யாருக்கும் தெரியவில்லை. மேலும் புரிந்துக் கொள்ளவும் இல்லை. நான் சொர்க்கம் மற்றும் இராம இராஜ்யத்தை உருவாக்குவதற்காக வந்திருக்கிறேன் என பாபா கூறுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் பல முறை இராஜ்ஜியத்தை அடைந்திருக்கிறீர்கள். மேலும் இழந்தும் இருக்கிறீர்கள். இது அனைவரின் புத்தியில் இருக்கிறது. 21 பிறவிகள் சத்யுகத்தில் வசிக்கிறார்கள். 21 பிறவிகள் என்றால் வயதாகும் போது தான் சரீரத்தை விடுகிறார்கள். அகால மரணம் ஒரு போதும் ஏற்படுவதில்லை. இப்போது நீங்கள் திரிகர்லதர்ஷி ஆகிறீர்கள். நாம் பல பிறவிகளாக பக்தி செய்திருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். இராவண இராஜ்யத்தில கூட எவ்வளவு பகட்டு இருக்கிறது பாருங்கள். இது கடைசி நேரத்தின் பகட்டாகும். இராம இராஜ்ஜியம் சத்யுகத்தில் இருக்கும். அங்கே விமானம் போன்ற அனைத்தும் இருந்தது. பிறகு அவை அனைத்தும் மறைந்து விட்டன. மீண்டும் இச்சமயம் இவை அனைத்தும் வந்திருக்கிறது. இப்போது இது அனைத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். யார் கற்றுக் கொள்கின்றார்களோ அவர்கள் அந்த சம்ஸ்காரத்தை எடுத்துக் கொண்டு செல்வார்கள். பிறகு அங்கே வந்து விமானத்தைச் செய்வார்கள். இது உங்களுக்கு எதிர் காலத்தில் சுகம் கொடுக்கக் கூடியதாக இருக்கும். இந்த விமானம் போன்றவைகளை பாரதவாசிகள் உருவாக்கலாம். ஒன்றும் புது விஷயம் அல்ல. புத்திசாலிகள் அல்லவா? இந்த விஞ்ஞானம் பிறகு உங்களுக்குப் பயன்படும். இப்போது இந்த விஞ்ஞானம் துக்கத்திற்காக இருக்கிறது, பிறகு அங்கே சுகத்திற்காக இருக்கும். அங்கேயோ ஒவ்வொரு விஷயமும் புதியதாக இருக்கிறது. இப்போது புது உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. தந்தையும் புது உலகத்தின் ராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். எனவே குழந்தைகள் மகாவீர் ஆக வேண்டும். பகவான் வந்து விட்டார் என்பது உலகத்தில் யாருக்கும் தெரியவில்லை.



    இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலருக்குச் சமமாக தூய்மையாக மாறுங்கள் என கூறுகிறார். இதில் பயப்பட வேண்டியது எதுவும் இல்லை. ஒரு வேளை திட்டலாம். இவருக்கு கூட திட்டுக்கள் நிறைய கிடைத்திருக்கிறது. கிருஷ்ணரையும் திட்டினர் என காண்பித்திருக்கின்றனர். இப்போது கிருஷ்ணரைத் திட்ட முடியாது. கலியுகத்தில் தான் திட்டுக்களை வாங்கியிருக்கிறார். உங்களுடைய ரூபம் இப்போது என்னவாக இருக்கிறதோ, கல்பத்திற்கு பிறகு அதே சமயம் வரும். இடையில் வராது. ஒவ்வொரு பிறவியிலும் தோற்றம் மாறிக் கொண்டே போகிறது. ஒரு ஆத்மாவிற்கு 84 பிறவிகளில் ஒரே மாதிரியான தோற்றம் கிடைக்காது. சதோ, ரஜோ, தமோவில் வந்துக் கொண்டே இருக்கிறார்கள். தோற்றம் மாறிக் கொண்டே போகிறது. இந்த நாடகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 84 பிறவிகளில் எந்த தோற்றத்தை எடுத்தோமோ அதையே தான் எடுப்போம். இவர்களுடைய தோற்றம் மாறி அடுத்த பிறவியில் லஷ்மி நாராயணன் ஆவார்கள் என நீங்கள் அறிகிறீர்கள். உங்களுடைய புத்தியின் பூட்டு இப்போது திறந்திருக்கிறது. இப்போது இது புதிய விஷயமாகும். பாபாவும் புதியவர், விஷயங்களும் புதியன. இந்த விஷயங்கள் யாருடைய புத்தியிலும் சீக்கிரம் புரிவதில்லை. அதிர்ஷ்டத்தில் இருந்தால் சிறிது புரிந்துக் கொள்வார்கள். மகாவீரர்கள் யாரும் புயலைப் பார்த்து பயப்பட மாட்டார்கள். அந்த நிலை கடைசியில் வரும். ஆகவே அதீந்திரிய சுகத்தைத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் கோபகோபியரிடம் கேளுங்கள் என்று பாடப்பட்டிருக்கிறது. குழந்தைகளாகிய உங்களை சொர்க்கத்திற்கு தகுதி அடைய வைக்க பாபா வந்திருக்கிறார். போன கல்பத்தைப் போன்று நரகத்தின் அழிவு நடக்கத்தான் வேண்டும். சத்யுகத்தில் ஒரேயொரு தர்மம் இருக்கும். எல்லாம் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஒரே தர்மம் இருக்க வேண்டும். இராம இராஜ்யம், இராவண இராஜ்யம் தனித்தனி என்பது புரியவில்லை. இங்கே விகாரங்கள் இல்லாமல் பிறவி எடுக்க முடியாது. அழுக்கு சேர்ந்திருக்கிறது அல்லவா? இப்போது பாபாவின் மீது நிச்சயம் இருக்கிறது என்றால் முழுமையாக ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் அல்லவா. ஒவ்வொருவரின் நாடியும் பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ஆலோசனையும் வழங்கப்படுகிறது. பாபா குழந்தைகளுக்குக் கூறியிருக்கிறார்- ஒரு வேளை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்றால் செய்துக் கொள்ளுங்கள், நிறைய உற்றார் உறவினர் இருக்கின்றனர். அவர்கள் செய்து வைப்பர். எனவே ஒவ்வொருவரின் நாடியும் பார்க்கப்படுகிறது. பாபா இந்த நிலையில் நாங்கள் தூய்மையாக வாழ விரும்புகின்றோம், எங்களுடைய உறவினர் எங்களை வீட்டிலிருந்து வெளியேற்ற விரும்புகின்றனர், இப்போது என்ன செய்ய வேண்டும் என கேட்கிறீர்கள். தூய்மையாக இருக்க வேண்டும் ! ஒரு வேளை இருக்க முடியவில்லை என்றால் சென்று திருமணம் செய்துக் கொள்ளுங்கள். புரிந்துக் கொள்ளுங்கள் யாருக்காவது நிச்சயம் நடந்து விட்டது ராசியாக இருக்க வேண்டும். தடை ஒன்றும் கிடையாது. விலங்கு போடும் போது உன்னுடைய கணவனே உனக்கு குரு என்று கூறுகிறார்கள். நல்லது. அச்சமயம் நீங்கள் அவரை எழுத வையுங்கள், நான் உன்னுடைய குரு, ஈஸ்வரன் என ஒத்துக் கொண்டால் இவ்வாறு எழுதுங்கள் சரி, இப்போது நான் உனக்கு கட்டளை இடுகிறேன், தூய்மையாக வாழ வேண்டும். (இப்படி சொல்லக் கூடாது) தைரியம் வேண்டும் அல்லவா? குறிக்கோள் மிகவும் உயர்ந்தது. இருவரும் ஒன்றாக எப்படி இருக்க முடியும் என்பதை அனைவருக்கும் காட்ட முடியும். பிராப்தி மிகவும் பலமானது, பிராப்தியைப் பற்றி தெரியாத போது தான் தீபற்றி எரிந்தது. இவ்வளவு பெரிய பிராப்தி கிடைக்கிறது என்றால் இந்த ஒரு பிறவி தூய்மையாக இருப்பது என்ன பெரிய விஷயம் என பாபா கூறுகின்றார். நான் உன்னுடைய கணவர், ஈஸ்வர் என்னுடைய கட்டளைப் படி தூய்மையாக இருக்க வேண்டும் பாபா வழிமுறைகளைக் கொடுக்கின்றார். பாரதத்தில் இந்த விதி சட்டம் இருக்கிறது. மனைவிக்கு, உன்னுடைய கணவனே உனக்கு ஈஸ்வர் அவருடைய கட்டளைப் படி நடக்க வேண்டும் என கூறுகிறார்கள். கணவனின் காலைப் பிடித்து விட வேண்டும். ஏனென்றால் லஷ்மி, நாராயணனின் காலைப் பிடித்து விட்டார் என நினைக்கிறார்கள். இந்தப் பழக்கம் எங்கிருந்து வந்தது? இந்த பொய்யான சித்திரங்களில் இருந்துதான். சத்யுகத்திலோ இது போன்ற விஷயங்கள் கிடையாது. நாராயணன் எப்போது களைத்து போனார்? லஷ்மி அமர்ந்து காலை பிடித்து விடுவதற்கு, களைப்பின் விஷயமே கிடையாது. இதுவோ துக்கத்தின் விஷயம் ஆகி விடுகிறது. அங்கே துக்கம் எங்கிருந்து வந்தது. எனவே எவ்வளவு பொய்யான விஷயங்களை எழுதியுள்ளனர். பாபாவிற்கு சிறு வயதிலிருந்தே வைராக்கியம் இருந்தது. ஆகவே பக்தி செய்தார்.



    பாபா குழந்தைகளுக்கு மிகவும் நல்ல யுக்திகளைக் கற்றுத் தருகிறார். சில குழந்தைகளை உறவினர்கள் துன்புறுத்துகிறார்கள். சரி திருமணம் செய்துக் கொள்ளுங்கள், மனைவி உங்களுடையவர் ஆகிவிடுகிறார். பிறகு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. தங்களுக்குள் இணைந்து தூய்மையாக இருங்கள். வாழ்க்கைத் துணைவர் ஆகிவிட்டார். வெளிநாடுகளில் வயதாகி விடுகிறது என்றால் பார்த்துக் கொள்வதற்காகத் துணைவரை வைத்துக் கொள்கிறார்கள். சிவில் திருமணம் செய்கிறார்கள். விகாரத்தில் ஈடுபடுவதில்லை. இப்போது நாம் ஒரு பாபாவின் குழந்தை என நீங்கள் அறிகிறீர்கள். தங்களுக்குள் சகோதரன் சகோதரி ஆகிவிட்டீர்கள். தாத்தாவிட மிருந்து சொத்து அடைகிறீர்கள். அப்பாவை அழுக்கான உலகத்தில் அழைக்கிறார்கள். ஓ, பதீத பாவனா, அனைத்து சீதைகளின் இராமர். மனிதர்கள் இராம், இராம் என அழைக்கிறார்கள் என்றால், சீதைவை நினைக்க வில்லை. அவரை விட பெரியவர் லஷ்மி, ஆனால் ஒரு தந்தையைத் தான் நினைக்கிறார்கள். லஷ்மி நாராயணனை அழைக்கிறார்கள். சிவனை யாரும் அறியவில்லை. ஆத்மா புள்ளி என்றால் ஆத்மாக்களின் தந்தையும் புள்ளியாக இருப்பார் அல்லவா? அவருக்கு ஞானக்கடல் என்று கூறப்படுகிறது. ஆத்மாக்களாகிய நீங்களும் ஞானக் கடல் ஆகிறீர்கள். ஞானக்கடல் அமர்ந்து ஆத்மாக்ளாகிய உங்களுக்குப் புரிய வைக்கின்றார். ஆத்மா சைத்தன்யமாக இருக்கிறது. உங்களுடைய ஆத்மா ஞானக் கடல் ஆகிக் கொண்டிருக்கிறது. முழு சிருஷ்டியில் முதல், இடை, இறுதியின் ஞானம் உங்களுக்கு இருக்கிறது. இனிமையான குழந்தைகள் தைரியம் வைக்க வேண்டும். நமக்கு பாபாவின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் அல்லவா? எல்லையற்ற தந்தை எல்லையற்ற குழந்தைகளை சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றுகிறார் என்றால் நீங்களும் உங்களின் படைப்புகளை கையில் (கட்டுபாட்டில்) வைத்துக் கொள்ளுங்கள் என பாபா கூறுகின்றார். ஒரு வேளை பிள்ளை உங்களின் கட்டளையை ஏற்கவில்லை என்றால், பிள்ளை பிள்ளை கிடையாது. அது கெட்டபிள்ளை ஆகி விட்டது. கீழ் படிந்த, கட்டளை படி நடக்கக் கூடிய பிள்ளைகள் தான் சொத்துக்கு அதிகாரி ஆக முடியும். என்னுடைய ஸ்ரீமத்படி நடந்தால் நீங்கள் இவ்வாறு உயர்ந்தவர் ஆகலாம் என எல்லையற்ற தந்தை கூறுகின்றார். இல்லை என்றால் பிரஜையில் சென்று விடுவீர்கள். பாபா உங்களை நரனிலிருந்து நாராயணனாக மாற்றுவதற்காக வந்திருக்கிறார். இதுவே உண்மையான சத்திய நாராயணனின் கதையாகும். நீங்கள் இராஜ்யத்தை அடைவதற்காக வந்திருக்கிறீர்கள். இப்போது மம்மா பாபா இராஜா இராணி ஆகிறார்கள் என்றால், நீங்களும் தைரியம் வையுங்கள் பாபா நிச்சயமாக தனக்குச் சமமாக மாற்றுவார். பிரஜைகளாக மாறுவதில் திருப்தி அடைந்து விடக் கூடாது. நாங்கள் பாபாவிடமிருந்து முழு சொத்தையும் அடைவோம். அர்ப்பணம் ஆவோம் என முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் அவரை தங்களுடைய வாரிசாக்கிக் கொண்டால் உங்களுக்கு 21 பிறவிகளுக்கு அவர் சொத்து கொடுப்பார். பாபா குழந்தைகளுக்கு அர்ப்பணம் ஆகிவிடுகிறார். பாபா இந்த உடல் மனம் பொருள் அனைத்தும் உங்களுடையது என கூறுகிறார்கள். தாங்கள் தந்தையாகவும் இருக்கிறீர்கள் என்றால், குழந்தையாகவும் இருக்கிறீர்கள். தாயும் நீயே, தந்தையும் நீயே ஒரு பாபாவின் மகிமைகள் எவ்வளவு பெரியது. உலகில் இந்த விஷயங்களை யாரும் அறியவில்லை. அனைத்து விஷயங்களும் பாரதத்தின் உடையதாகும். இது அதே 5000 வருடத்திற்கு முன்பான போர் என குழந்தைகள் அறிகிறீர்கள். இப்போது சொர்க்கத்தின் ஸ்தாபனை நடந்துக் கொண்டிருக்கிறது. எனவே குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியில் இருக்க வேண்டும். பகவான் உங்களைத் தத்தெடுத்திருக்கிறார் என்றால் உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களை பாபா அலங்காரம் செய்துக் கொண்டிருக்கிறார். எல்லையற்ற தந்தை ஞானக் கடல் படிக்கவும் வைக்கிறார். நமக்கு முழு சிருஷ்டியின் முதல், இடை, இறுதியின் இரகசியத்தை புரிய வைக்கிறார். பாபாவைப் பற்றித் தெரிந்துக் கொள்ளாதவர்கள் நாத்திகர்கள் ஆவர். நீங்கள் அப்பா, மற்றும் ஆஸ்தியை அறிகிறீர்கள். நீங்களே ஆஸ்திகர்கள். லஷ்மி நாராயணன் ஆஸ்திகரா? அல்லது நாஸ்திகரா? சத்யுகத்தில் யாரும் பரமாத்மாவை நினைவு செய்வதில்லை என்று நீங்களே கூறுவீர்கள். அங்கே சுகம் இருக்கிறது. எனவே சுகத்தில் பரமாத்மாவை நினைவு செய்வதில்லை. ஏனென்றால் பரமாத்மாவைப் பற்றி அறிவதில்லை. இச்சமயம் நீங்கள் ஆஸ்திகராகி சொத்து அடைந்துக் கொண்டிருக்கின்றீர்கள். பிறகு அங்கே நினைக்க வேண்டியதில்லை. இங்கே நினைக்கிறீர்கள். ஆனால் அவரை அறியவில்லை. ஆகவே நாஸ்திகர் என கூறப்படுகிறது. அங்கே அறியவும் இல்லை. நினைவும் செய்வதில்லை. இந்த சொத்து நமக்கு சிவபாபாவிட மிருந்து தான் கிடைக்கிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்களை நாஸ்திகர் என கூற மாட்டார்கள். ஏனென்றால் தூய்மையாக இருக்கிறார்கள். நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம் :

    1. ஸ்ரீமத் படி நடப்பதற்கு முழுமையாக தைரியம் வைக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் பயப்படுதலோ கோபப்படவோ தேவை இல்லை.



    2. தங்களின் படைப்புகளை தங்களின் கைகளில் (கட்டுப்பாட்டில்) வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களை விகாரங்களில் இருந்து காப்பாற்ற வேண்டும். தூய்மையாவதற்கான ஆலோசனை வழங்க வேண்டும்.



    வரதானம் :

    தர்மம் மற்றும் கர்மம் இரண்டையும் சமநிலையில் வைக்கக் கூடிய தெய்வீக அல்லது சிரேஷ்ட புத்திசாலி ஆகுக !



    கர்மம் செய்யும் நேரத்தில் தர்மம் அதாவது தாரணையும் சம்பூரணமாக இருந்தால் தர்மம் மற்றும் கர்மம் இரண்டும் சமநிலையில் சரியாக இருப்பதால் பிரபாவம் அதிகரிக்கும். எப்போது கர்மம் முடிந்து விடுகிறதோ அதன் பிறகே தாரணை நினைவில் வந்தது என்பது கூடாது. புத்தியில் இரண்டு விஷயங்களும் சமநிலையில் இருந்தால் தான் சிரேஷ்ட அல்லது தெய்வீக புத்திசாலி என்று கூறுவார்கள். இல்லை என்றால் சாதாரண புத்தி, செயலும் சாதாரணம், தாரணைகளும் சாதாரணம் ஆகிவிடுகிறது. சாதாரண தன்மையில் சமநிலையில் கொண்டு வர முடியாது. ஆனால் சிரேஷ்ட தன்மையில் சமநிலை இருக்கும். எப்படி கர்மம் சிரேஷ்டமாக இருக்கிறதோ அப்படியே தாரணையும் சிரேஷ்டமாக இருக்கட்டும்.



    சுலோகன் :

    தன்னுடைய மனம், புத்தியை அனுபவம் என்ற சீட்டில் செட் செய்து விட்டால் ஒரு போதும் அப்செட் ஆகமாட்டீர்கள்.


    ***OM SHANTI***