BK Murli 25 January 2017 Tamil
25.01.2017 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! தேக அபிமானத்தில் வருவதால் தான் விகாரங்கள் உருவாகின்றன. அதனால் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள், மற்ற அனைத்து தொடர்புகளையும் விட்டு, ஒருவர் தொடர்பில் (பாபாவுடன்) இணைவோம்.
கேள்வி :
எந்த ஒரு விளையாட்டு இயற்கையானது, ஆனால் மனிதர்கள் அதனை இறைவன் செயல் என நினைக்கின்றனர்?
பதில்:
டிராமாவில் உள்ள இந்த இயற்கைச் சேதங்கள் வரும் போது விநாச காலத்தில் சமுத்திரத்தின் ஓர் உயரமான அலையினாலேயே அனைத்துக் கண்டங்களும் தீவுகள் முதலானவையும் அழிந்து போகும். அதனுடைய ஒத்திகை இப்போதும் கூட நடந்து கொண்டே இருக்கிறது. இவையனைத்தும் இயற்கையான விளையாட்டாகும். இதை மனிதர்கள் இறைச்செயல் எனச் சொல்லி விடுகின்றனர். ஆனால் பாபா சொல்கிறார், நான் எந்த ஒரு கட்டளையையும் (டைரக்ஷ்ன்) இயற்கைக்கு தருவதில்லை. இவையனைத்தும் டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளன.
பாடல் :
என் மனம் என்ற வாசலில் வந்தவர் யார்?........
ஓம் சாந்தி.
யார் வந்தார் என்றால் யாருடைய நினைவு வந்தது? அவர் வந்து மனதில் அமர்ந்து விட்டார், அப்படியென்றால் சர்வவியாபி என்றாகி விடும். அப்படி இல்லை. என் நினைவில் யார் வந்தார்? அகால மூரத் (அழியாத மூர்த்தி). அவரைக் காலன் விழுங்க முடியாது.. சீக்கியர்களிடம் அகால் தக்த் (அழியாத ஆசனம்) கூட உள்ளது. அவர்களிடம் அகாகளும் (அழியாதவர்கள்) உள்ளனர். சீக்கிய தர்மம் இல்லற மார்க்கத்தின் தர்மம் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஒரே ஓர் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் மறைந்து விட்டது. மற்றது சந்நியாச தர்மம்-துறவறத்தினுடையது. வீடு-வாசலை விட்டு எல்லைக்குட்பட்ட சந்நியாசம் செய்து தூய்மை ஆகின்றனர். காட்டிலோ நிச்சயமாக தூய்மையாகவே இருப்பார்கள். ஒவ்வொரு தர்மத்தின் பழக்க-வழக்கங்கள் வெவ்வேறாக இருக்கும். போதனைகளும் வெவ்வேறாக இருக்கும். அது துறவற மார்க்கத்தின் தர்மம். அவர்களைப் பின்பற்று வோரும் கூட வீடு-வாசலை விட்டு வெளியேறிக் காவியுடை உடுத்த வேண்டியிருக்கும். பிறகு அவர்கள் சொல்லலாம், வீடு-வாசல் என்று இல்லறத்தில் இருந்தாலும் நீங்கள் ஞானத்தைப் பெற முடியும் என்று. ஆனால் அவர்களுடையது ஒன்றும் ஞானம் கிடையாது. சந்நியாசிகள் அது போல் செய்விக்கவும் முடியாது. உண்மையில் யார் சத்கதி கொடுப்பவரோ, அவர் தான் குரு ஆவார். அவரோ ஒருவர் மட்டுமே ஆவார். குரு நானக்கும் கூட போதனை அளித்துள்ளார். அவரும் பரமாத்மாவுக்குத் தான் மகிமை செய்கிறார். ஏக் ஓம்கார் (இறைவன் ஒருவர், அவர் சத்தியமானர், செய்பவர், செய்விப்பவர்), அகால மூரத் (அழியாதவர்). இப்போது உங்களுக்கு அந்த அகால மூரத், அதாவது பரமபிதா பரமாத்மாவின் நினைவு தான் உள்ளது. அகால மூரத், பிறப்பு-இ.றப்பு அற்றவர் (அயோனி) என்பதாக மகிமை செய்கின்றனர். சுயம்பு என்றால் படைப்பவர். பயமற்றவர், பகையற்றவர், யார் மீதும் வெறுப்பில்லாதவர், அகால மூரத்... சத்குரு பிரசாதம், ஜப சாகேப் (இறைவன் பெயரை ஜபிப்பது)- இவையனைத்தும் பரமபிதா பரமாத்மாவின் மகிமைகள். அகால மூரத்தைத் தான் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள் தான் சொல்கின்றனர்: சத்யுகம், அதாவது ஆரம்பம் சத்தியமானது, இது மீண்டும் நிரூபணம் ஆகும் என்பதும் சத்தியம். பிறகு இதையும் சொல்கின்றனர். அசுத்தத் துணிகளைத் தூய்மைப் படுத்துபவர். பதீத-பாவனர் என்றால் அசுத்தத் துணிகளைத் தோய்த்து சுத்தம் செய்கிறார். அதனால் தான் அவருக்கு மகிமை பாடுகின்றனர். பிறகு சொல்கின்றனர் அசங்க் சோர் ஹராம் கோர்.... (தீய குணங்களின் வசமாகித் திரியும் குருடர்கள் மற்றும் மூர்க்கர்கள், மற்றவர் வருமானத்தைத் திருடும் கொள்ளையர் அதிகமாக உள்ளனர். அப்படிப்பட்ட விகார உலகத்தில் நிராகார் சிவபாபா அவதரித்து சண்டை, துக்கம் நோய் முதலிய அனைத்தையும் அழித்து குஷி. சுகம் நிறைந்த தெய்விக ராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறார்). இதுவும் கூட இச்சமயத்தின் மகிமையாகும். பிறகு நானக் சொன்னார் நீஞ்ச் விசார் கர்.....(தீய செயல்கள், தீய பேச்சுகள் இருந்தால் பலனும் தீயதாகவே இருக்கும்). பிறகு அவர் மீது பஹார் (சமர்ப்பணம்) ஆகி விடுகின்றனர். நிச்சயமாக அவர் வந்திருக்கிறார் என்பதால் தான் பஹார் ஆகின்றனர். பாபா சொல்கிறார்- அகல்யாக்கள், கணிகைகள், (விகார தொழில் புரிபவர்கள்) சாதுக்களுக்கும் கூட விமோசனம் தருவதற்காக நான் வருகிறேன். ஆக, அனைவரும் தூய்மை இல்லாதவர்கள் என்றாகிறது. இப்போது இது எல்லையற்ற விஷயம் என்றால் நிச்சயமாக எல்லையற்ற மாலிக் (படைப்பவர்) தான் வந்து புரிய வைப்பார். பிரம்மா, விஷ்ணு, சங்கர் கூட என் படைப்புகள் தான். பிரம்மா மூலம் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை, சங்கர் மூலம் அநேக தர்மங்களின் விநாசம். மற்றவர்கள் யார் வருகின்றனரோ, அவர்கள் தங்களின் தர்மத்தின் ஸ்தாபனை செய்கின்றனர். அந்த குருமார்கள் சத்கதி அளிக்கும் வள்ளல்கள் என்பது கிடையாது. யாருக்கு சத்கதி அளிப்பார்கள்? அவர்களின் வம்சாவளியே முழுமை யாக வளர்ச்சி அடையவில்லை என்றால் எப்படி சத்கதி அளிப்பார்கள்? பாபா சொல்கிறார்- நான் வந்து ஆதி சநாதன தர்மத்தின் ஸ்தாபனை மற்றும் அதர்மங்களின் விநாசம் செய்விக்கிறேன். இச்சமயம் அனைவரும் தமோபிரதானமாக, பாவாத்மாவாக ஆகி விட்டுள்ளனர். இந்த எல்லையற்ற டிராமாவின் பார்ட்தாரியாக (நடிகர்களாக) உள்ள ஆத்மாக்கள் தெரிந்திருக்க வேண்டும், சிருஷ்டிச் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்று. பாபா வந்து குழந்தைகளாகிய நம்மைத் திரிகாலதரிசியாக ஆக்குகிறார். இதையும் புரிந்து கொண்டுள்ளோம். நிச்சயமாக பாபா வந்து சொர்க்கத்தை-உண்மையான கண்டத்தின் ஸ்தாபனை செய்வார், மற்றும் பொய்யான கண்டத்தின் விநாசம் செய்வார். உண்மையான கண்டத்தினை ஸ்தாபனை செய்பவர். சத்தியமானவராக இருப்பார் இல்லையா? இந்த அனைத்து விஷயங்களையும் பாபா தான் புரிய வைக்கிறார். அனைவருமோ தாரணை செய்ய முடியாது-ஏனென்றால் தேக அபிமானம் அதிகம் உள்ளது. எவ்வளவு தேகி அபிமானியாக இருக்கின்றனரோ, தங்களை ஆத்மா, அசரீரி என உணர்ந்துள்ளனரோ, பாபாவை நினைவு செய்பவர்களானால் தாரணை ஆகும். தேக அபிமானிக்கு தாரணை ஆகாது. யோகத்தின் மூலம் தான் ஆத்மாவின் பாவங்கள் சாம்பலாகும். பகலோ தேக அபிமானம் உள்ளது. ஆகவே தேகி அபிமானி ஆவதற்கான பயிற்சி எப்போது செய்ய வேண்டும்?
பாபா சொல்கிறார், தூக்கத்தை வென்றவர் ஆகுங்கள். பாபா எவ்வளவு நல்ல பாயின்ட்டுகளைப் புரிய வைக்கிறார்! அதுபோலவும் அநேகக் குழந்தைகள் உள்ளனர் முரளி கேட்பதே இல்லை. படிப்போ முக்கிய மானதாகும். எப்படியாவது முரளி படிக்க வேண்டும். ஆனால் விகாரங்களில் விழுந்து கொண்டே இருப்பதும் முரளி வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருப்பதுமாக இருக்கக் கூடாது. (பவித்திரதாவின்) கேரண்டி தராத வரை அவர்களுக்கு முரளி அனுப்பக் கூடாது. முரளி படிக்கவில்லை என்றால் அவர்களின் கதி என்னவாகும்? நல்ல-நல்ல குழந்தைகளும் கூட முரளி படிப்பதில்லை. நஷா ஏறி விடுகின்றது. இல்லையென்றால் ஒரு நாள் கூட முரளியைத் தவற விடக் கூடாது. தாரணை ஆவதில்லை என்றால் புரிந்து கொள்ள வேண்டும்-தேக அபிமானம் உள்ளது. அவர்கள் உயர்ந்த பதவி பெற முடியாது. பாபா தெளிவாகப் புரிய வைக்கிறார். குழந்தைகளும் கூட புரிய வைக்க வேண்டும். பாபாவோ வெளியில் செல்ல முடியாது. பாபா குழந்தைகளுக்கு நேரில் தான் புரிய வைக்கிறார். இந்தப் பெரிய அம்மாவும் கூட குப்தமாக உள்ளார். சக்திகள் வெளியில் செல்ல முடியாது. மகாநாடு நடைபெறுகின்றது. அதில் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தின் பிரதிநிதிகள் யாரும் இல்லை. இந்தப் பாயின்ட்டையும் புரிய வைக்க வேண்டும். மற்ற தர்ம பிதாக்கள் யாரெல்லாம் வருகின்றனரோ, அவர்கள் தர்ம ஸ்தாபனை செய்வதற்காக மட்டுமே வருகின்றனர். அதர்மங்களை விநாசம் செய்வதற்காக அல்ல. சத்திய தர்மத்தின் ஸ்தாபனை மற்றும் அநேக தர்மங்களின் விநாசம் சங்கமயுகத்தில் தான் நடைபெறுகின்றது. கீழே இறங்கும் கலை நடைபெறும் போது பாபா வருகிறார். முன்னேறும் கலையோ ஒரு முறை மட்டுமே நடைபெறுகின்றது. இதைப்பற்றி ஒரு சுலோகம் கூட உள்ளது-சின்ன வயதில் படித்தது. குருநானக் சொல்லியிருக்கிறார்-அனைவரும் நிந்தனையாளர்கள், பொய்யானவர்கள். ஒருவர் கூடப் தூய்மையாக இருப்பதில்லை. சீக்கிய தர்மத்தில் அகாகள் உள்ளனர்-அவர்களுக்கு மேலே கருப்பான சக்கரத்தையும் காட்டுகின்றனர். இது சுயதரிசனச் சக்கரமாகும். இதுவும் தூய்மையின் அடையாளமாகும். கங்கணமும் கட்டுகின்றனர்-இரண்டுமே தூய்மையின் அடையாளங்களாகும். ஆனால் அந்த மனிதர்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வில்லை. தூய்மையாகவும் இருப்பதில்லை. பூணூல் கூட தூய்மையின் அடையாளமாகும். தற்சமயமோ அனைத்தையும் விட்டு விட்டனர். பிராமண குலம் உத்தமமானது. பிறகு தலையில் பெரிய குடுமியை வைக்கின்றனர். ஆனால் யாருமே தூய்மையாவதில்லை. பதீத-பாவனர் ஒரே ஒரு பரமாத்மா வந்து அனைவரையும் தூய்மையாக்குகிறார். புத்தர், கிறிஸ்து முதலானவர்கள் கூட பதீத-பாவனர் கிடையாது. குருமாரோ உலகில் அநேகர் உள்ளனர். அவர்கள் கற்பிப்பவர், பாடம் சொல்லித் தருபவர்கள். மற்றப்படி அனைவருக்கும் சத்கதி அளிப்பவர், பதீத-பாவனர் ஒருவர் மட்டுமே. அனைவரையும் தூய்மையாக்கி உடன் அழைத்துச் செல்வதற்காக நான் தான் வருகிறேன். ஞானக்கடலுடன் உதவியாளர்களாக ஞான கங்கைகளாகிய நீங்களும் இருக்கிறீர்கள். கங்கை நதியின் மீதும் தேவிகளின் உருவங்களை வைத்துள்ளனர். இப்போது உண்மையில் ஞான கங்கைகள் நீங்கள். ஆனால் உங்களுக்கு இப்போது பூஜை நடைபெறுவதில்லை. ஏனென்றால் நீங்கள் இப்போது தகுதியுள்ளவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பூஜாரியில் இருந்து பூஜைக்குரியவராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு உங்களது பூஜை செய்யும் பழக்கம் முடிந்து போகும். பாபா இந்த ரகசியத்தைப் புரிய வைக்கிறார். ஆனால் யாருடைய புத்தியிலும் பதிவதில்லை. ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். தேக அபிமானத்தை விட்டுக் கொண்டே இருங்கள். இந்த உற்றார் உறவினர் அனைவரும் அழிந்து போவார்கள். நாம் அனைவரும் சென்று விடுவோம். ஆனால் உலகமோ இருக்கும் இல்லையா? பாபா சொல்கிறார், நான் புது சிருஷ்டியின் படைப்பாளர். ஆனால் நான் வருவதோ தூய்மை இல்லாத உலகில் தான் இல்லையா? அதனால் தான் என்னைப் பதீத-பாவனர் எனச் சொல்கின்றனர். அதனால் இது நிச்சயமாகப் தூய்மையற்ற உலகமாகவேத்தான் இருக்கும் அல்லவா. தூய்மையான உலகத்தில் தூய்மையற்றவர்கள் இருக்க மாட்டார்கள். பரமாத்மாதான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர், அதனால் அவரை ஹெவன்லிகாட் ஃபாதர் எனச் சொல்கின்றனர். கிறிஸ்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்வதில்லை. ஆம், அச்சமயம் மேலிருந்து வரும் ஆத்மாக்கள் சதோபிரதான நிலையில் இருப்பார்கள். மற்ற யாரும் தூய்மை இல்லாதவர்களை தூய்மை ஆக்குவதில்லை. தூய்மை இல்லாதவர்கள் என்று சொல்கிற மாதிரி குழந்தைகள் நீங்கள் எந்த ஒரு விகர்மமும் செய்யக் கூடாது. தேக அபிமானத்தினால் தான் விகர்மங்கள் உருவாகின்றன. நீங்கள் கேரண்டி தருகிறீர்கள், வேறு தொடர்புகளை விட்டு ஒருவரது தொடர்பில் இணைவோம். இப்போது அந்த உறுதிமொழியை நிறைவேற்றுங்கள். இல்லையென்றால் தண்டனை பெறுவீர்கள். கிரந்தத் திலும் உங்கள் முன்னேறும் கலையினால் அனைவருக்கும் நன்மை எனச் சொல்லப்பட்டுள்ளது. வாக்கியம் நன்றாக உள்ளது. ஆனால் என்னென்ன படித்துள்ளனரோ, அனைத்தையுமே மறக்க வேண்டியுள்ளது. (பிரம்மா) பாபாவுக்கோ குழந்தைகளின் பெயர்களும் முழுமையாக நினைவில்லை. ஏனென்றால் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். அதனால் பாபா சொல்லி விடுகிறார். குஷியாக இருங்கள், பாபா நினைவில் வளமாக வாழுங்கள். நான் குழந்தைகளை மறப்பதும் இல்லை, அவர்களின் பெயர்- வடிவங்களை சதா நினைப்பதும் இல்லை. ஆனால் சேவாதாரிக் குழந்தைகளை பாபா அவசியம் நினைவு செய்கிறார். இன்னார் மிக நல்ல உதவியாளர். பணக்காரர்கள் அஞ்ஞான இருளில் உள்ளனர். மரணம் முன்னாலேயே உள்ளது என்பதை யாரும் அறியவில்லை. பகவான் சொல்கிறார்-நான் இராஜயோகம் கற்பிக்கிறேன். ஆக, நிச்சயமாக ஞானத்தின் மூலம் கல்வியின் தேவதை ஆகின்றனர். முழு இராஜதானியும் முறைப்படி உருவாகிக் கொண்டுள்ளது. நீங்கள் அறிவீர்கள், தரவரிசைப்படி நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். பாபா சொல்கிறார், நான் இராஜதானியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறேன். அநேக தர்மங்களின் விநாசம் செய்விக்கிறேன். பரம சத்குரு ஒருவர் தான். உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் ஒரு பகவான் தான் என்பது பாடப் பட்டுள்ளது. உயர்ந்தவரிலும் உயர்ந்த பிரம்மா, விஷ்ணு, சங்கரையும் கூட பகவான் என்று சொல்வதில்லை. அப்படி இருக்கும் போது ராமர், கிருஷ்ணரை பகவான் என்று எப்படிச் சொல்ல முடியும்? சிவபாபா ஞானக்கடல் பதீத-பாவனர். பக்தர்கள் பகவானை நினைவு செய்கின்றனர். பிரம்மா விஷ்ணு சங்கரை நினைவு செய்வதில்லை. இவர்கள் (பக்தர்கள்) தான் அநேக உருவங்களை வழிபடும் கலப்பட பக்தி செய்பவர்களாக ஆகி விட்டுள்ளனர். ஆக, எவ்வளவு நல்ல நல்ல விஷயங்கள் தாரணை செய்வதற்குரியவை உள்ளன! யார் செய்வார்களோ, அவர்கள் அடைவார்கள். நீங்கள் ஞான கங்கைகள். நதிகளாகிய உங்களுக்குத் தான் கரை உள்ளது. கடலோ எங்கும் செல்ல முடியாது. ஆனால் அது ஜடமான கடல். இவர் சைதன்யமானவர். அதிலோ ஒரு புயலின் அலை எழுமானால் அதிக நஷ்டம் ஏற்பட்டு விடும். விநாச காலத்தில் தீவிரமான புயல் வரும். அனைத்துக் கண்டங்கள், தீவுகள் எல்லாமே அழிந்து போகும். அதில் தாமதமாகாது. இயற்கைச் சேதங்களை இறைச்செயல் எனச் சொல்வதில்லை. அதனால் தான் சங்கர் மூலம் விநாசம் எனச் சொல்லப் பட்டுள்ளது என்றால் இறைச்செயல் என்றே ஆகிறது இல்லையா? ஆனால் பாபா சொல்கிறார்-நான் ஒன்றும் அது போன்ற கட்டளையெல்லாம் கொடுப்பதில்லை. இவையனைத்தும் டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளன. புயல்கள், இயற்கைச் சேதங்கள் முதலிய அனைத்தும் தங்களின் காரியத்தைச் செய்யும். கல்ப-கல்பமாக இந்தச் சேதங்கள் வரத் தான் செய்யும். அனைத்துக் கண்டங்களும் அழிந்து போகும். மற்றப்படி ஒரு பாரதம் மட்டும் மிஞ்சி இருக்கும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஒத்திகை நடந்து கொண்டே இருக்கும். இந்த இயற்கையின் விளையாட்டு ஏற்கனவே உருவாக்கப் பட்டதாகும்.
சிவசக்திகளாகிய நீங்கள் தான் எங்கும் சென்று புரிய வைக்க முடியும் சாந்தி ஸ்தாபனை ஆக நிலவ வேண்டும் என நீங்கள் அனைவரும் விரும்புகிறீர்கள். ஆனால் சாந்தி எங்கே உள்ளது என நீங்கள் அறிவீர்கள். சுகம் எங்கே உள்ளது, துக்கம் எங்கே உள்ளது இவையனைத்தும் புரிந்து கொள்வதற்கான விஷயங்களாகும். இப்போது இருப்பது துக்க தாமம். இதே பாரதம் சுகதாமமாக இருந்தது. ஆதி சநாதன தேவி-தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. கலியுகம் என்பது துக்கதாமம். இது நிச்சயமாக விநாசமாகி விடப் போகிறது. முதலில் (கலியுகத்தின்) இறுதி வந்த பின் மீண்டும் (சத்திய உலகம்) ஆரம்பம் வரும். மத்தியில் அநேக தர்மங்கள். சத்யுகத்தில் ஒரு தர்மம் மட்டுமே இருந்தது. இது டிராமாவின் சக்கரமாகும். இதில் 4 முக்கிய தர்மங்கள் உள்ளன. ஒரு தர்மத்தின் கால் மறைந்து விட்டுள்ளது. தேவதா தர்மத்தின் ஸ்தாபனை செய்பவர் யார்? இதைச் சொல்லுங்கள். பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலம் ஸ்தாபனை செய்கிறார். உண்மையில் நீங்களும் கூட பிரம்மாவின் குழந்தைகள் தான். சிவனுக்கும் நீங்கள் குழந்தைகள். பிரம்மாவின் குழந்தை களாக இருக்கும் காரணத்தால் உங்களுக்குள் நீங்கள் சகோதர-சகோதரிகள் ஆவீர்கள். நீங்கள் அறிவீர்கள், நாம் அவருடையவர்களாக ஆகியிருக்கிறோம். பரமபிதா பரமாத்மா முதலில் பிராமண தர்மத்தைப் படைக்கிறார். பிராமண தர்மம் தான் மிக உயர்ந்தது. மற்ற அனைத்து தர்மங்களைச் சேர்ந்தவர்களும் பின்னால் வருகிறார்கள்-நம்பர்வார். கடைசியில் உங்கள் வெளிப்பாடு (காணும்படியாக) அவசியம் நடைபெறும். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) ஞானத்தை தாரணை செய்வதற்காக எவ்வளவு முடியுமோ, அந்தளவு ஆத்ம அபிமானி ஆகி இருக்க வேண்டும். அசரீரி ஆவதற்கான அப்பியாசத்தை இரவும் பகலும் கண் விழித்துச் செய்ய வேண்டும்.
2) எப்படியாவது தினமும் முரளி கேட்கவும் மற்றும் படிக்கவும் வேண்டும். ஒரு நாள் கூடத் தவறவிடக் கூடாது. மற்ற தொடர்புகளை விட்டு ஒரு (பாபாவின்) தொடர்பில் இணைவதற்கான உறுதி மேற்கொள்ள வேண்டும்.
வரதானம் :
பாலக் ஸோ மாலிக் (குழந்தை மற்றும் எஜமான்) என்ற படிக்கட்டில் ஏறி இறங்குகிற கவலையற்ற டபுள் லைட் ஆகுக.
சதா இந்த நினைவு இருக்கட்டும்-மாலிக்குடன் கூடவே பாலகரும் உள்ளனர். மேலும் பாலகருடன் கூடவே மாலிக்கும் உள்ளார். பாலகன் ஆவதன் மூலம் சதா கவலையற்ற டபுள் லைட்டாக இருப்பீர்கள். மேலும் மாலிக்காக அனுபவம் செய்வதன் மூலம் மாலிக் தன்மையின் ஆன்மிக நஷா இருக்கும். அறிவுரை சொல்லும் போது மாலிக் மற்றும் எப்போது பெரும்பான்மையினர் முடிவு செய்கின்றனரோ, அச்சமயம் பாலகன். இந்த பாலகன் மற்றும் மாலிக் ஆவதற்கான ஓர் ஏணிப்படியும் உள்ளது. இந்த ஏணிப்படியில் சில நேரம் ஏறுங்கள், சில நேரம் இறங்குங்கள். சில நேரம் பாலகன் ஆகி விடுங்கள். சில நேரம் மாலிக் ஆகி விடுங்கள். அப்போது எந்த விதமான சுமையும் இருக்காது.
சுலோகன் :
யார் புருஷ் (ஆத்மா) ஆகி ரதத்தின் (சரீரம்) மூலம் காரியம் செய்கின்றனரோ, அவர்கள் தான் உண்மையான புருஷார்த்தி ஆவார்கள்.
தபஸ்வி மூரத் ஆகுங்கள்:
சமயத்தின் பிரமாணம் தனது தபஸ்வி சொரூபத்தின் மூலம் நாலாபுறமும் சகாஷ் (ஒளி மற்றும் சக்தி) கொடுப்பதற்கான, அதிர்வலைகள் கொடுப்பதற்கான, மனதின் மூலம் வாயுமண்டலத்தை உருவாக்குவதற்கான காரியம் செய்யுங்கள். இப்போது இந்த சேவை தான் அவசியமாக உள்ளது. ஏனென்றால் சமயம் மிகவும் ஆபத்தானதாக வந்து கொண்டிருக்கிறது.