BK Murli 23 June 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 23 June 2017 Tamil


    23.06.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

    இனிமையான குழந்தைகளே! ஞானத்தின் அஸ்திவாரம் நம்பிக்கை, நிச்சயபுத்தியுடன் முயற்சி செய்தால் இலட்சியத்தை அடைந்து விடுவீர்கள்.

     

    கேள்வி:

    எந்த ஒரு விசயம் மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய மற்றும் நம்பிக்கை வைக்க வேண்டிய விசயமாகும்?

     

    பதில்:

    இப்போது அனைத்து ஆத்மாக்களின் கணக்கு வழக்கு முடிவடையப் போகிறது. அனைவரும் கொசுக் கூட்டம் போன்று தனது இனிய வீட்டிற்கு செல்வார்கள். பிறகு புது உலகிற்கு குறைந்த ஆத்மாக்கள் தான் வருவார்கள். இந்த விசயம் மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய மற்றும் நம்பிக்கை வைக்க வேண்டிய விசயமாகும்.

     

    கேள்வி:

    தந்தை எந்த குழந்தைகளைப் பார்த்து குஷியடைகின்றார்?

     

    பதில்:

    எந்த குழந்தைகள் தந்தையிடம் முழுமையாக பலியாகிறார்களோ, யார் மாயையினால் பாதிப்படையவில்லையோ அதாவது அங்கதனைப் போன்று ஆடாது, அசையாது இருக்கிறார்களோ அப்படிப்பட்ட குழந்தைகளைப் பார்த்து தந்தை குஷியடைகின்றார்.

     

    பாட்டு:

    மனிதர்களே, பொறுமையாக இருங்கள் .......

     

    ஓம்சாந்தி.

    குழந்தைள் பாட்டு கேட்டீர்களா? இவ்வாறு தந்தை மட்டுமே கூற முடியும். சந்நியாசியோ, சீடர்களோ வேறு யாரும் கூற முடியாது. பரலௌகீக எல்லையற்ற தந்தை மட்டுமே குழந்தைகளுக்கு கூறுகின்றார். ஏனெனில் ஆத்மாவில் தான் மனம், புத்தி இருக்கிறது. இப்போது பொறுமையாக இருங்கள் என்று ஆத்மாக்களுக்கு கூறுகின்றார். இப்போது உங்களது சுகமான நாட்கள் வந்து கொண்டிருக்கிறது. இது துக்கதாமம் ஆகும். இதற்குப் பிறகு சுகதாமம் வந்தே ஆக வேண்டும். சுகதாமத்தை தந்தை தான் ஸ்தாபனை செய்வார் அல்லவா! தந்தை தான் குழந்தைகளுக்கு பொறுமையாக இருக்க அறிவுருத்துகின்றார். முதலில் நம்பிக்கை இருக்க வேண்டும் அல்லவா! பிரம்மாவின் வாய்வழி வம்சத்தினர்களுக்குத் தான் நம்பிக்கை ஏற்படுகிறது. இல்லையெனில் இவ்வளவு பிராமணர்கள் எங்கிருந்து வந்தார்கள்? பி.கு என்பதன் பொருள் ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள். இவ்வளவு பேர் பி.கு என்று கூறுகின்றனர் எனில் அவசியம் பிரஜாபிதா பிரம்மா இருப்பார் அல்லவா! இவ்வளவு பேருக்கும் ஒரே ஒரு தாய், தந்தை தான் இருக்கின்றார், மற்ற அனைவருக்கும் தனித்தனியாக தாய், தந்தை இருப்பர். இங்கு உங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு தாய், தந்தை. புது விசயம் அல்லவா! நீங்கள் முன்பு பிராமணர்களாக இருக்கவில்லை, இப்போது ஆகியிருக்கிறீர்கள். அந்த பிராமணர்கள் விகார வம்சத்தினர்கள், நீங்கள் வாய்வழி வம்சத்தினர்கள். நமக்கு புரிய வைப்பது யார்? என்று ஒவ்வொரு விசயத்திலும் நம்பிக்கை இருக்க வேண்டும். பகவான் தான் புரிய வைக்கின்றார், இப்போது கலியுகத்தின் கடைசியாகும், யுத்தம் எதிரில் இருக்கிறது. யாதவர்களாகிய ஐரோப்பியர்களும் இருக்கின்றனர், அவர்கள் தான் அணுகுண்டு போன்றவற்றை தயாரித்து இருக்கின்றனர். வயிற்றிலிருந்து உலக்கை வெளிப்பட்டது என்ற பாடல் உள்ளது. இது தற்கால ஏவுகணைகளை குறிப்பதாகும். அதன் மூலம் தனது குலமே விநாசம் ஆனது என்று கூறப்பட்டிருக்கிறது. உண்மையில் குலத்தை அவசியம் விநாசம் செய்வர். இருப்பதும் ஒரே ஒரு குலம். நாங்கள் விநாசம் செய்வோம் என்று ஒவ்வொருவரிடத்திலும் கூறுகின்றனர். இவ்வாறும் எழுதப்பட்டிருக்கிறது. ஆக குழந்தைகளே! பொறுமையாக இருங்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். இப்போது இந்த பழைய உலகம் அழிய வேண்டும். கலியுகம் விநாசம் ஆகும் போது தான் சத்யுகம் வரும். அது அவசியம், அதற்கு முன்பாகவே தான் ஸ்தாபனை ஆகியிருக்க வேண்டும். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை, சங்கர் மூலம் விநாசம் என்றும் பாடப்பட்டிருக்கிறது. முதலில் புதியதை ஸ்தாபனை செய்வார், பிறகு பழையதை ஸ்தாபனை எப்போது முடிவடைகிறதோ அப்போது விநாசம் ஏற்படும். ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இதுவோ தனிப்பட்ட பாதையாகும், இதை யாரும் புரிந்து கொள்வது கிடையாது. யாரும் ஒருபோதும் கூறியதும் கிடையாது. மற்ற மடங்கள் இருப்பது போன்று இந்த பி.கு வும் ஒரு மடம் என்று நினைக்கின்றனர். இது அவர்களது குற்றம் கிடையாது. கல்பத்திற்கு முன்பும் இவ்வாறு தடை போட்டிருந்தனர். இது ருத்ர ஞான யக்ஞமாகும். ருத்ரன் என்று சிவன் கூறப்படுகின்றார். அவரே இராஜயோகம் கற்பிக்கின்றார். இது பழமையான எளிய இராஜயோகம் என்று கூறப்படுகிறது. பழமையான என்பதன் பொருளையும் புரிந்து கொள்வது கிடையாது. இந்த சங்கமயுகத்தின் விசயமாகும். தூய்மையின்மை மற்றும் தூய்மை சங்கமம் ஆகிறது அல்லவா! சத்யுக ஆரம்பத்தில் ஒரே ஒரு தர்மம் தான் இருந்தது. அவர்கள் அசுர குடும்பத்தினர்கள், நீங்கள் தெய்வீக குடும்பத்தினர்கள். யுத்தத்திற்கான விசயம் ஏதுமில்லை. இதுவும் தவறாகும். சகோதர, சகோதரர்களாகிய நீங்கள் எப்படி சண்டையிட்டுக் கொள்ள முடியும்?

     

    தந்தை அமர்ந்து பிரம்மாவின் மூலம் அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கின்றார். உண்மையின் முக்கிய தர்மங்கள் நான்கு. அவர்களது தர்ம சாஸ்திரங்களும் நான்கு. அவைகளில் முதன்மையானது ஆதி சனாதன தேவி, தேவதா தர்மம். அதன் சாஸ்திரம் அனைத்து சாஸ்திரங்களுக்கும் மேலானது (தலையானது) கீதையாகும். இது பாரதத்தின் முக்கிய சாஸ்திரமாகும். இதன் மூலம் தான் ஆதி சனாதன தேவி, தேவதா தர்மம் அதாவது சூரியவம்சி மற்றும் சந்திரவம்சி தர்மம் ஸ்தாபனை ஆனது. அவசியம் சங்கமத்தில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். இது கும்பம் என்றும் கூறப்படுகிறது. ஆத்மா-பரமாத்மாவின் மேளா, கும்ப மேளா(விழா) என்றும் கூறப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இது மங்களகரமான, கல்யாணகாரி மேளா ஆகும். கலியுகம் மாறி சத்யுகம் ஏற்பட்டே ஆக வேண்டும். அதனால் தான் கல்யாணகாரி என்று கூறப்படுகிறது. சத்யுகத்திலிருந்து திரேதா ஏற்படுகிறத, பிறகு திரேதாவிலிருந்து துவாபரம் ஏற்படும் போது கலைகள் குறைந்து கொண்டே செல்கிறது. தீங்கு ஏற்பட்டுக் கொண்டே செல்கிறது. பிறகு நன்மை செய்யக் கூடியவர் அவசியம் தேவை. எப்போது முழுமையாக தீங்கு ஏற்பட்டு விடுகிறதோ அப்போது அனைவருக்கும் நன்மை செய்வதற்காக தந்தை வருகின்றார். புத்திக்கு வேலை கொடுக்க வேண்டும். நன்மை செய்யும் பொருட்டு தந்தை அவசியம் சங்கமத்தில் வருகின்றார். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் தந்தை. அனைவரும் துவாபரத்தில் கிடையாது. சத்யுகம், திரேதாவிலும் அனைவரும் கிடையாது. கடைசியில் எப்போது அனைத்து ஆத்மாக்களும் வந்து விடுகிறார்களோ அப்போது தான் தந்தை வருவார். ஆக தந்தை வந்து தான் பொறுமையாக இருக்க அறிவுறுத்துகின்றார். பாபா, இந்த பழைய உலகில் அதிக துக்கம் இருக்கிறது, சீக்கிரம் அழைத்துச் செல்லுங்கள் என்று குழந்தைகள் கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார் - இல்லை குழந்தைகளே! இது உருவாக்கப்பட்ட நாடகமாகும். உடனேயே கீழான நிலையிலிருந்து உயர்ந்த நிலை அடைந்து விடமாட்டீர்கள். நிச்சய புத்தியுடையவர்களாக ஆக வேண்டும், பிறகு முயற்சி செய்ய வேண்டும். விநாடியில் ஜீவன்முக்தி என்று கூறப்பட்டிருப்பது சரியே. குழந்தை ஆவது என்றால் ஆஸ்திக்கு உரிமையாளவர் ஆவதாகும். பிறகு அங்கும் வரிசைக்கிரமமான பதவி இருக்கிறது அல்லவா! உயர்ந்த பதவி அடைவதற்காக படிப்பில் முயற்சி செய்ய வேண்டும். உடனேயே கர்மாதீத நிலை ஏற்பட்டு விடும் என்பது கிடையாது. பிறகு சரீரமும் விட வேண்டியிருக்கும். இவ்வாறு சட்டம் கிடையாது. மாயையிடம் நல்ல முறையில் யுத்தம் செய்ய வேண்டும். யுத்தம் 8-10-15 ஆண்டுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களது யுத்தம் மாயையிடத்தில் இருக்கிறது. எதுவரை தந்தையிருக்கிறாரோ அதுவரை யுத்தம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். கடைசியில் யார், எந்த அளவிற்கு மாயாவை வென்றீர்கள்? எத்தனை பேர் கர்மாதீத நிலை அடைந்திருக்கின்றனர்? என்ற ரிசல்ட் கடைசியில் வெளிப்படும். எவ்வளவு முடியுமோ தனது வீட்டை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். அது சாந்திதாமம் ஆகும். சப்தங்களை கடந்து இருக்கும் இடமாகும். இப்போது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் குμயிருக்கிறது. இந்த நாடகம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது? என்பதை நீங்கள் அறிவீர்கள். மூன்று லோகங்களையும் நீங்கள் அறிவீர்கள், வேறு யாருடைய புத்தியிலும் கிடையாது. பாபாவும் சாஸ்திரம் போன்றவைகளை அதிகம் படித்திருக்கின்றார். ஆனாலும் இந்த விசயங்கள் புத்தியில் இல்லை. கீதை படித்திருந்தார், ஆனாலும் நாம் தூர தேசமாகிய பரந்தாமத்தில் வசிக்கக் கூடியவர்கள் என்பது புத்தியில் இல்லை. பரம்பிதா பரமாத்மா என்று அழைக்கப்படக் கூடிய நமது பாபா பரந்தாமத்தில் இருக்கின்றார் என்பது இப்போது தெரிந்து கொண்டார். அவரைத் தான் பதீத பாவனனே வாருங்கள் என்று அனைவரும் நினைவு செய்கின்றனர். திரும்பி யாரும் செல்ல முடியாது. எவ்வாறு ஞாபக மறதிக்கான விளையாட்டு இருக்கிறது அல்லவா! எங்கு சென்றாலும் மூடிய கதவு எதிரில் வந்து விடுகிறது, இலட்சத்தை அடைய முடிவது கிடையாது. களைப்படைகின்ற போது யாராவது வழி கூற வேண்டும் என்று புலம்புவர். இங்கும் எவ்வளவு தான் வேத சாஸ்திரங்கள் படித்தாலும், தீர்த்த யாத்திரைக்குச் சென்றாலும் நாம் எங்கு செல்கிறோம்? என்று எதுவும் தெரியாது. இன்னார் ஜோதி ஜோதியுடன் கலந்து விட்டார் என்று மட்டும் கூறி விடுகின்றனர். தந்தை கூறுகின்றார் - யாரும் திரும்பி செல்ல முடியாது. நாடகம் முடிவடைகின்ற போது அனைத்து நடிகர்களும் மேடைக்கு வந்துவிடுவர். இது நியமமாகும். அனைவரும் அந்த ஆடையில் நின்று விடுவர். அனைவருக்கும் முகத்தை காண்பித்த பிறகு ஆடையை மாற்றிக் கொண்டு வீட்டிற்கு சென்று விடுவர். பிறகு அதே பாகத்தை திரும்பவும் நடிப்பர். இது எல்லையற்ற நாடகமாகும். இப்போது நீங்கள் ஆத்ம அபிமானிகளாக ஆகிறீர்கள், நாம் ஆத்மாக்கள் இந்த சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுப்போம் என்பதை அறிவீர்கள். மறுபிறவி இருக்கிறது அல்லவா! 84 பிறவிகளில் 84 பெயர்களை நாம் சூட்டிக்கொண்டிருக்கிறோம். இப்போது இந்த நாடகம் முடிவடைந்து விட்டது. அனைவரும் இற்றுப் போன நிலையாகி விட்டனர். இப்போது திரும்பவும் நடைபெறும். உலக சரித்திர, பூகோளம் திரும்பவும் நடைபெறும். இப்போது நமது பாகம் முடிவடையும், திரும்பிச் செல்வோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தையின் கட்டளையும் ஒன்றும் குறைந்தது கிடையாது. பதீத பாவனாகிய தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார் - குழந்தைகளே! உங்களுக்கு மிக எளிய வழியை கூறுகிறேன். அமர்ந்தாலும், எழுந்தாலும், நடந்தாலும் நான் நடிகன் என்பதை நினைவில் வையுங்கள். 84 பிறவிகள் இப்போது முடித்து விட்டேன். இப்போது தந்தை மலர்களாக ஆக்குவதற்காகவும், மனிதனிலிருந்து தேவதையாக ஆக்குவதற்காக தந்தை வந்திருக்கின்றார். தூய்மையற்றவர்களாகிய நம்மை தூய்மையாக்கிக் கொண்டிருக்கின்றார். தூய்மையற்ற நிலையிலிருந்து பிறகு தூய்மையாக நாம் பல முறை ஆகியிருக்கிறோம் மற்றும் மீண்டும் ஆவோம். சரித்திர, பூகோளம் திரும்பவும் நடைபெறும். முதலில் தேவி தேவதா தர்மத்தினர் தான் வருவார்கள். இப்போது நாற்று நடப்படுகிறது. நாம் குப்தமாக இருக்கிறோம். நாம் கொண்டாட்டம் போன்றவைகள் ஏன் செய்ய வேண்டும்? நமக்குள் ஞானம் இருக்கிறது, மனதுள் குஷியிருக்கிறது. நமது தேவி, தேவதா தர்மம் அதாவது மரத்தின் கிளைகள் அனைத்தும், தர்மமும் கீழானதாக ஆகிவிட்டது, கர்மமும் (செயல்களும்) கீழானதாக ஆகிவிட்டது. இதே பாரதவாசிகளின் தர்மம், செயல்கள் சிரேஷ்டமானதாக இருந்தது. ஒருபோதும் மாயை பாவம் செய்ய வைக்கவில்லை. புண்ணிய ஆத்மாக்களின் உலகமாக இருந்தது. அங்கு இராவணன் கிடையவே கிடையாது. அங்கு காரியங்களால் எதிர்விளைவுகள் இல்லாமலிருக்கும். பிறகு இராவண இராஜ்யத்தில் காரியங்கள் எதிர்விளைவு கள் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. அங்கு தீயகர்மங்கள் ஏற்படவே முடியாது. கீழானவர்கள் யாரும் இருக்கவே முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத் மூலம் உலகிற்கு எஜமானர்களாக ஆகிறீர்கள். புஜ பலத்தின் மூலம் யாரும் உலகிற்கு எஜமானர்களாக ஆகிவிட முடியாது. இவர்கள் தங்களுக்கு ஒருவேளை சேர்ந்து விட்டால் உலகிற்கு எஜமானர்களாக ஆகிவிட முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் நாடகத்தில் பாகம் கிடையாது. இரண்டு பூனைகள் வெண்ணெய்க்காக சண்டையிடும் போது இடையில் வந்த குரங்கு சாப்பிட்டு விட்டது என்று காண்பிக்கின்றனர். கிருஷ்னரின் வாயில் வெண்ணெய் இருப்பதாக சாட்சாத்காரமும் செய்கின்றனர். இந்த சிருஷ்டிக்கான இராஜ்யம் என்ற வெண்ணெய் கிடைக்கிறது. மற்றபடி யுத்தம் என்பது யாதவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடைபெறுவதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். குறிப்பிட்ட இடத்தில் மிகப் பெரிய சண்டை ஏற்பட்டது என்பதை செய்தித்தாள்களில் படிக்கிறீர்கள். ஆக உடனேயே யாரையாவது கொலை செய்து விடுகின்றனர். பாரதத்தில் முதல் ஒரே ஒரு தர்மம் மட்டுமே இருந்தது. பிறகு மற்ற தர்மங்களின் இராஜ்யம் எங்கிருந்து வந்தது? கிறிஸ்தவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தனர், அப்போது இராஜ்யம் செய்தனர். இப்போது உண்மையில் முழு உலகின் மீதும் இராவணன் அதிகாரம் செலுத்தியிருக்கிறது. இது குப்தமான விசயமாகும். சாஸ்திரங்களில் இந்த விசயம் கிடையாது. இந்த விகாரங்கள் அரைக் கல்பத்திற்கான உங்களது எதிரியாகும், இதன் மூலம் நீங்கள் முதல், இடை, கடை துக்கம் அடைந்திருக்கிறீர்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். அதனால் தான் காக்கையின் எச்சலுக்கு சமமான சுகம் என்று சந்நியாசிகளும் கூறுகின்றனர். சொர்க்கத்தில் சதா சுகமோ சுகம் தான் இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. பாரதவாசிகளுக்குத் தெரியும், அதனால் தான் யாராவது இறந்து விட்டால் சொர்க்கத்திற்குச் சென்று விட்டதாக கூறுகின்றனர். சொர்க்கத்திற்கு எவ்வளவு மகிமை இருக்கிறது, ஆக இது ஒரு விளையாட்டாகும். ஆனால் நீங்கள் நரகவாசிகளாக இருக்கிறீர்கள் என்று யாரிடத்திலாவது கூறினால் கோபித்துக் கொள்வர். எவ்வளவு ஆச்சரியமான விசயமாகும்! சொர்க்கவாசி ஆகிவிட்டார் என்று வாயில் கூறுகின்றனர் எனில் அவசியம் நரகத்திலிருந்து தான் சென்றிருப்பார் அல்லவா! பிறகு நீங்கள் ஏன் அவர்களை அழைத்து நரகத்தின் பொருட்களை சாப்பிட கொடுக்கிறீர்கள்? சொர்க்கத்தில் அவர்களுக்கு மிகவும் நல்ல உணவுகள் கிடைக்கும் அல்லவா! அதாவது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை அல்லவா! அங்கு என்ன என்ன இருக்கும்? என்பதை குழந்தைகள் பார்த்திருக்கின்றனர். நரகத்தில் என்ன என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? என்பதையும் பார்க்கிறீர்கள். குழந்தைகள் தந்தையை கொல்வதற்கும் தயங்குவது கிடையாது. மனைவிக்கு வேறு யார் மீதாவது காதல் ஏற்பட்டு விட்டால் கணவரையும் கொன்று விடுகிறாள். பாரதத்தில் ஒரு பாட்டும் இருக்கிறது - இன்றைய மனிதர்களுக்கு என்ன ஆகிவிட்டது என்று ஒருபுறம் கூறுகின்றனர், பிறகு நமது பாரதம் அனைத்தையும் விட நல்ல தங்கம் போனற தேசமாகும் என்று கூறுகின்றனர். அரே, பாரதம் அனைத்தையும் விட நன்றாக இருந்தது, இப்போது கிடையாது. இப்போது ஏழையாக இருக்கிறது. எந்த பாதுகாப்பும் கிடையாது. நாமும் அசுர குடும்பத்தினர்களாக இருந்தோம். இப்போது பாபா நம்மை ஈஸ்வரிய குடும்பத்தினர்களாக ஆக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். ஒன்றும் புதிய விசயமில்லை. கல்ப கல்பம், கல்பத்தின் சங்கமத்தில் நாம் மீண்டும் நமது ஆஸ்தியை அடைகிறோம். தந்தை ஆஸ்தி கொடுப்பதற்காக வருகின்றார். பிறகு மாயை சாபம் கொடுக்கிறது. எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது! மாயா! நீ எவ்வளவு சாதுர்யமாக இருக்கிறாய், நல்ல நல்ல குழந்தைகளையும் வீழ்த்தி விடுகிறாய் என்று தந்தை கூறுகின்றார். அந்த சேனைகளில் அடித்துக் கொள்வதற்கான எண்ணம் இருக்காது. அடி வாங்கிய பிறகு மைதானத்திற்கு மீண்டும் வந்து விடுவர். அவர்களது தொழிலே இது தான். அவர்களுக்கு பரிசும் கிடைக்கும். இங்கு குழந்தைகள் நீங்கள் சிவபாபாவிடத்தில் சக்தி அடைகிறீர்கள், மாயாவை வெல்கிறீர்கள். தந்தை வழக்கறிஞராக இருக்கின்றார், உங்களை மாயையிடமிருந்து விடுவித்து விடுகின்றார். நீங்கள் சிவசக்தி சேனைகளாக இருக்கிறீர்கள், தாய்மார்களை உயர்வாக வைக்கின்றார், வந்தே மாதரம். என்று கூறியது யார்? தந்தை. ஏனெனில் நீங்கள் தந்தையிடத்தில் பலியாகிறீர்கள். இவர் நன்றாக நின்றிருக்கிறார், அசைவது கிடையாது என்று பாபா குஷியடைகிறார். அங்கதனின் உதாரணம் இருக்கிறது அல்லவா! இராவணனால் அவரை அசைக்க முடியவில்லை. இது கடைசி நேரத்திற்கான விசயமாகும். கடைசியில் அந்த நிலை ஏற்படும். அந்த நேரத்தில் உங்களுக்கு மிகுந்த குஷி ஏற்படும், எதுவரை விநாசம் ஏற்படவில்லையோ, பூமி தூய்மையாக ஆகவில்லையோ அதுவரை தேவதைகள் வர முடியாது. முள் காடு அவசியம் தீ பற்றி எறிய வேண்டும். அனைத்து ஆத்மாக்களும் கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு கொசுக் கூட்டம் போன்று இனிய வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும். ஆயிரக்கணக்கான கொசுக்கள் இறக்கின்றன, அதனால் தான் இராமரும் சென்றார், இராவணனும் சென்றான் ....... திரும்பி செல்ல வேண்டும் அல்லவா! பிறகு நீங்கள் புது உலகிற்கு வருவீர்கள். அங்கு மிக குறைவானவர்கள் இருப்பர். இது புரிந்து கொள்ள வேண்டிய மற்றும் நம்பிக்கை வைக்க வேண்டிய விசயமாகும். இந்த ஞானம் பாபா தான் கொடுக்க முடியும். நல்லது.

     

    இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

     

    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1) எழுந்தாலும், அமர்ந்தாலும், நடந்தாலும் தன்னை நடிகர் என்று புரிந்து கொள்ள வேண்டும். நான் 84 பிறவிக்கான பாகம் முடித்து விட்டேன், இப்போது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பது உள்ளத்தில் இருக்க வேண்டும். ஆத்ம அபிமானியாக இருக்க வேண்டும்.

     

    2) நிச்சயபுத்தியுடையவராகி முள்ளிலிருந்து மலர் ஆகக் கூடிய முயற்சி செய்ய வேண்டும். மாயையிடம் யுத்தம் செய்து வெற்றியடைந்து கர்மாதீத நிலை அடைய வேண்டும். எவ்வளவு முடியுமோ தனது வீட்டை நினைவு செய்ய வேண்டும்.

     

    வரதனாம்:

    தூய்மை என்ற பெருமிதத்தின் மூலம் சதா மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய புன்முறுவலுடனும், மகிழ்ச்சி நிறைந்த முகமுடையவராகவும் ஆகுக.

     

    தூய்மையின் பெருமிதம் என்றால் (இராயலான) அரசருக்குரிய தகுதியுடைய ஆத்மாக்கள் எப்போதும் குஷியில் நடனமாடிக் கொண்டே இருப்பார்கள். அவர்களது குஷி சில நேரங்களில் குறைவாக, சில நேரங்களில் அதிகமாக இருக்காது. நாளுக்கு நாள் ஒவ்வொரு நேரத்திலும் குஷி அதிகரித்துக் கொண்டே இருக்கும். உள் ஒன்று, புறம் ஒன்றாக அவர்கள் இருக்கமாட்டார்கள். உள்ளுணர்வு, பார்வை, வார்த்தை மற்றும் நடத்தை அனைத்திலும் சத்தியம் இருக்கும். இவ்வாறு சத்தியமான (ராயல்) கௌரவமிக்க ஆத்மாக்கள் மனதிலும் மற்றும் பார்வையிலும் சதா மகிழ்ச்சியாக இருப்பார்கள். புன்முறுவல் தான் மகிழ்ச்சி நிறைந்த முகம் நிரந்தரமாக இருக்கும்.

     

    சுலோகன்:

    உலகில் அனைத்திலும் மேன்மையான பலம் தூய்மையின் பலமாகும்.

     

    ***ஓம்சாந்தி***