BK Murli 26 June 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 26 June 2017 Tamil

    26.06.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே ! அனைவருக்கும் பாபாவின் அறிமுகத்தை எப்படிக் கொடுப்பது என இரவும் பகலும் இதே சிந்தனையில் இருங்கள். தந்தை மகனை வெளிப்படுத்தி விட்டார். மகன் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். இதில் புத்தியை ஈடுபடுத்த வேண்டும்.



    கேள்வி :

    ஞானம் சிறிது கூட வீணாகாமல் இருக்க எந்த விஷயத்தில் கவனம் வைக்க வேண்டும்?



    பதில் :

    ஞானச் செல்வத்தைக் கொடுப்பதற்கு முதலில் நம்முடைய பிராமண குலத்தினரா என பாருங்கள். சிவபாபாவின் அல்லது தேவதைகளின் பக்தர்களா என பார்த்து முயற்சி செய்து அவர்களுக்கு ஞானச் செல்வத்தை அளியுங்கள். இந்த ஞானத்தை அனைவரும் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். யார் சூத்திரனிலிருந்து பிராமணன் ஆகிறார்களோ அவர்களுக்குத் தான் புரியும். நீங்கள் முயற்சி செய்து ஒவ்வொரு விஷயத்தையும் அனைவருக்கும் கூறுங்கள். அனைவருக்கும் சத்கதி அளிக்கக் கூடிய வள்ளல் ஒரு தந்தை தான். நீங்கள் அசிரீரி ஆகி என்னை நினைத்தால் உங்களுடைய படகு கரை சேர்ந்து விடும் என அவர் கூறுகிறார்.



    பாடல் :

    ஓம் நமசிவாய.....



    ஓம் சாந்தி.

    தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார்கள். இரண்டு தந்தையும் வந்து விட்டனர். அந்த தந்தை வேண்டுமானாலும் புரிய வைக்கலாம், இந்த தந்தை வேண்டுமானாலும் புரிய வைக்கலாம். நீங்கள் பாபாவின் நினைவில் அமைதியில் அமர்கிறீர்கள். இதற்குத் தான் உண்மையான அமைதி என கூறப்படுகிறது என்று பாபா புரிய வைக்கின்றார். இது பிரதிப் பலனைக் கொடுக்கக் கூடிய உண்மையான அமைதியாகும். அது பொய்யானது. தங்களின் சுய தர்மத்தை பற்றியே அறியவில்லை. தன்னைப் பற்றியும் தனது பரம்பிதா பரமாத்மா பற்றியும் தெரியவில்லை என்றால் அமைதி, சக்தியை யார் கொடுப்பார்கள். சாந்தியின் வள்ளல் தந்தை தான், குழந்தைகளே! அசரீரியாகி தன்னை ஆத்மா என உணருங்கள் என பாபா கூறுகிறார். நீங்கள் அழிவற்றவர் அல்லவா. தங்களுடைய சுய தர்மத்தில் அமருங்கள். வேறு யாரும் இவ்வாறு அமருவதில்லை. உண்மையில் ஆத்மா தான் ஒரு உடலை விட்டு இன்னொரு உடலை எடுக்கிறது. பரம்பிதா பரமாத்மா ஒருவர் தான். அவருடைய மகிமைகள் அளவற்றது. அவர் தந்தை யாவார். சர்வ வியாபி கிடையாது. ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்துவதில் தான் உங்களின் வெற்றி இருக்கிறது. பிறகு கீதையின் பகவான் கூட தெளிவாகி விடுவார். நிறைய கருத்துககள் உங்களுக்கு கிடைக்கிறது. சத்குரு அகால்..... அவரே அகால மூர்த்தி என சீக்கியர்கள் கூட கூறுகின்றார்கள். அவர் விடுவிக்கக் கூடியவராகவும், அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் எனவும் கூறுகின்றார்கள். துக்கத்திலிருந்து விடுவிக்கின்றார். பதீத பாவனரும் ஒரு தந்தையே. இது போன்ற கருத்துக்களை எப்போதும் விசார சாகர மந்தனம் செய்ய வேண்டும். தந்தையை மறந்ததால் தான் அனைவருக்கும் துர்கதி ஏற்பட்டிருக்கிறது. பகவான் ஒருவரே. வேறு யாரையும் பகவான் என கூற முடியாது. சூட்சும வதனவாசியை கூட பகவான் என கூற முடியாது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒரு பகவான். இங்கேயோ மனித சிருஷ்டியில் மறுபிறவியில் வருகிறார்கள். பரம்பிதா பரமாத்மாவோ மறுபிறவியில் வருவதில்லை. பிறகு நாய், பூனை அனைத்திலும் பரமாத்மா இருக்கிறார் என எப்படி கூறுகிறார்கள். பாபாவின் அறிமுகத்தை எப்படிக் கூறுவது என முழு நாளும் புத்தியில் இருக்க வேண்டும். அனைவருக்கும் எப்படி வழி காட்டுவது என்று இரவும் பகலும் நீங்கள் இதே சிந்தனையில் இருங்கள். பதீதமானவர்களை தூய்மையாக்கக் கூடியவர் ஒரு தந்தையே. பிறகு கீதையின் பகவான் கூட நிரூபணமாகி விடும். குழந்தைகளாகிய நீங்கள் வெற்றி அடைய வேண்டும். எனவே, கடினமாக உழைக்க வேண்டும். யானை படை, குதிரை படை, காலாட்படை இருக்கிறது அல்லவா?.



    பாரதத்திற்குத் தான் பாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைத்தது என குழந்தைகள் அறிகிறீர்கள். இப்போது பறிக்கப்பட்டிருக்கிறது, பிறகு பாபா இருக்கின்றார். பாபா பாரதத்தில் தான் வருகிறார். இத்தனை தர்மங்கள் இருக்கின்றது. அது அனைத்தும் முடியப் போகிறது. பிறகு சத்யுகம் வரும். ஐயோ, ஐயோ என்பதற்குப் பிறகு வெற்றி முழக்கம் ஏற்படும். மனிதர்கள் துக்கம் ஏற்படும் போது இராமா! என்கிறார்கள் அல்லவா! இராமரின் பெயரில் தானம் அளியுங்கள் என கூறுகிறார்கள் அல்லவா?. இதைப் பற்றி சுலோகன் கூட உருவாக்கப்பட்டிருக்கிறது. சீக்கியர்களுக்குக் கூட நிறைய பெயர்கள் இருக்கிறது. அவர்கள் கூட அழிவற்ற சிம்மாசனம் (அகால் தக்த்) என்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களின் சிம்மாசனம் எது? ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் அகால மூர்த்தி. உங்களை காலன் யாரும் சாப்பிட முடியாது இந்த சரீரம் அழிந்து போகும். அழிவற்ற சிம்மாசனம் அமிர்தசரசில் இருக்கிறது என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அழிவற்ற சிம்மாசனம் என்பது மகா தத்துவமாகும். ஆத்மாக்களாகிய நாமும் அங்கே வசிக்கக் கூடியவர்கள். பாபா! தங்களின் சிம்மாசனத்தை விட்டு விட்டு வாருங்கள் என பாடுகிறார்கள். அது அனைவருக்குமே அமைதியின் சிம்மாசனம் ஆகும். இராஜ்ய சிம்மாசனம் என்பது அனைவருக்கும் என்று கூற மாட்டார்கள். பாபாவின் சிம்மாசனமே நம்முடையது. அங்கிருந்து நாம் நடிப்பதற்காக வந்திருக்கிறோம். மற்றபடி ஆகாயத்தை விடக் கூடிய விஷயம் எதுவும் இல்லை. பாபாவின் அறிமுகத்தை யாருக்கு எப்படி அளிப்பது என்பதில் குழந்தைகள் புத்தியை செலுத்த வேண்டும். தந்தை மகனை வெளிப்படுத்துகிறார் மகன் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். நம்முடைய தந்தை யார். அவருடைய சொத்து என்ன எதற்கு அதிபதியாகலாம். இது புத்தியில் இருக்கிறது. முக்கியமானது பாபாவின் அறிமுகம் ஆகும். அனைத்து சண்டையும் இதில் தான் இருக்கிறது. அதிகப்படியான தவறின் நாடகம் அல்லவா?. தவறு செய்விப்பவன் இராவணன்.



    சத்யுகத்தில் நீங்கள் ஆத்ம உணர்வடையவராக இருந்தீர்கள். மற்றபடி நாம் பரம்பிதா பரமாத்மாவை அறிந்திருக்கிறோம் என கூற மாட்டீர்கள். இல்லை. அங்கே சுகமே சுகமாகும். துக்கத்தில் அனைவரும் நினைக்கிறார்கள். பக்தி மார்க்கம் முடிவடைந்து விட்டது. ஞான மார்க்கம் ஆரம்பம் ஆகிவிட்டது. ஆஸ்தி கிடைத்து விட்டது. பிறகு ஏன் பகவானை நினைப்பார்கள். கல்ப கல்பமாக ஆஸ்தி கிடைக்கிறது. இந்த நாடகமே இவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது. தந்தையை யாரும் அறியவில்லை. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா அறிமுகத்தைக் கொடுத்துவிட்டார். இரவும் பகலும் புத்தியில் இவ்வாறு ஓடிக் கொண்டிருக்க வேண்டும். இது புத்திக்கான உணவாகும். எப்படி பாபாவின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள். பாபாவின் அவதாரம் ஒன்று தான் என்று பாடப்பட்டிருக்கிறது. கலியுகத்தின் முடிவு, சத்யுகத்தின் ஆரம்பம் ஆகிய சங்கமத்தில் பதீதமானவர்களை தூய்மையாக்குவதற்காக நிச்சயம் வருவார் புரிந்துக் கொள்கிறார்கள். முக்கியமானது கீதையாகும். கீதையினால் தான் வைரம் போன்று மாற முடியும். மற்ற சாஸ்திரங்கள் அனைத்தும் கீதையின் குழந்தை குட்டிகள் ஆகும். அதன் மூலமாக எந்த ஆஸ்தியும் கிடைக்காது. அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாயாக விளங்ககுவது கீதையாகும். ஸ்ரீமத் புகழ் வாய்ந்தது. ஸ்ரீ என்றால் எல்லாவற்றையும் விட உயர்ந்தது. ஸ்ரீ ஸ்ரீ 108 ருத்ர மாலை. இது சிவபாபாவின் மாலையாகும். அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை இவர் என நீங்கள் அறிகிறீர்கள். பாபா! பாபா! என்று அனைவரும் கூறுகிறார்கள் அல்லவா? பாபாவின் படைப்பு படைக்கப்பட்டு இருக்கிறது. இதை யாரும் அறியவில்லை. உங்களுக்கு அதிகமான துன்பத்தைக் கொடுக்கவில்லை என பாபா கூறுகிறார். பாபாவை மட்டும் மறந்ததால் விழுந்திருக்கிறீர்கள். அவரை அறிய வேண்டும். இப்போது நீங்கள் காரிருலிளிருந்து நல்ல வெளிச்சத்திற்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஞான நடனம் ஆட வேண்டும். மீரா பக்தியின் நடனம் ஆடினார். பொருளைப் புரிந்துக் கொள்ளவில்லை. வியாச பகவான் என்கிறார்கள். இப்போது வியாசரோ தந்தை ஆவார். அவர் கீதையை சொல்கின்றார். நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் தந்தை ஒருவர் தான் அவரிடமிருந்து தான் சொத்து கிடைக்கிறது என்று தெளிவு படுத்தலாம். இல்லை என்றால் பாரதத்திற்கு சொர்க்கத்தின் ஆஸ்தியை யார் கொடுப்பார்கள்?. சொர்க்கத்தின் ஸ்தாபனை பாபாவைத் தவிர யாரும் செய்ய முடியாது.. அனைவரையும் விடுவிக்க வேண்டியது. ஒரு பாபாவின் வேலையாகும். போப் கூட ஒன்றாக வேண்டும் என்று கூறினார். ஆனால் அது எப்படி நடக்கும்?. நாம் அனைவரும் ஒருவருடையவராக ஆகி இருக்கிறோம் அல்லவா?. பிறகு சகோதரன் சகோதரி எப்படி? இதை அறிய வேண்டும். ஒன்றாகுதல் என்றால் தந்தைத்துவம் ஆகிவிட்டது. இங்கேயோ அனைவரும் சகோதரர்கள் அல்லவா. ஓ, கடவுளே இரக்கம் காட்டுங்கள் என்று முழு உலகமும் அழைக்கிறது. எனவே நிச்சயம் இரக்க மற்றவர்களாக இருந்துக் கொண்டிருக்கிறார்கள். இரக்கம் அற்று இருக்க வைப்பவர் யார் என அறியவில்லை. இரக்கம் காட்டக் கூடியவர் ஒரு தந்தை யாவார். இராவணன் இரக்கம் அற்றவன் அவனை எரித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் எரியவில்லை. எதிரி இறந்து விட்டால் அடிக்கடி எரிக்க மாட்டார்கள். என்ன உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என யாருக்கும் தெரியவில்லை. முன்பு நீங்களும் காரிருளில் இருந்தீர்கள். இப்போது இல்லை அல்லவா? எனவே, மனிதர்களுக்கு எப்படி புரிய வைப்பது?. பாரதத்தை சுகதாமமாக மாற்றக் கூடியவர் ஒரேயொரு தந்தை தான். பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். இதுவும் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். இருப்பினும் யார் சூத்திரனிலிருந்து பிராமணன் ஆவார்களோ அவர்களே புரிந்துக் கொள்வார்கள். என்னுடைய பக்தர்களுக்கும் முயற்சி செய்து ஞானம் அளியுங்கள் என பாபா கூறுகின்றார். ஞானச் செல்வத்தை வீணாக்காதீர்கள். தேவதைகளின் பக்தர்கள். நிச்சயம் தேவதா குலத்தைச் சார்ந்தவர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒரு தந்தை. அனைவரும் அவரை நினைக்கிறார்கள். இவரோ சிவபாபா அல்லவா. தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். யார் நல்ல வேலைகளை செய்து போகிறார்களோ அவர்கள் பூஜிக்கப்படுகிறார்கள். கலியுகத்தில் யார் மூலமாகவும் நல்ல வேலைகள் நடப்பதில்லை. ஏனென்றால் இங்கேயோ அசுர இராவணனின் வழியாகும். சுகம் எங்கே இருக்கிறது. எவ்வளவு நன்றாக பாபா புரிய வைக்கிறார். ஆனால் எப்போது பாபாவின் அறிமுகம் கொடுக்கிறோமோ அப்போது தான் புத்தியில் பதியும். இவர் தந்தையாகவும் இருக்கிறார். டீச்சராகவும் இருக்கிறார். சத்குருவாகவும் இருக்கிறார். இவருக்கு அப்பா, டீச்சர். சத்குரு, இல்லை. முதன் முதலில் தாய் தந்தை பிறகு டீச்சர் மற்றும் சத்கதி அளிக்கக் கூடியவர் குரு. எல்லையற்ற தந்தை ஒருவரே! அப்பா, டீச்சர் சத்குரு. இது அதிசயமாக இருக்கிறது.



    அந்த தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்தவர் என நீங்கள் அறிகிறீர்கள். அவரே பாரதத்திற்கு சொர்க்கத்தின் ஆஸ்தி அளிக்கக் கூடியவர். நரகத்திற்குப் பிறகு சொர்க்கம். நரகத்தின் அழிவிற்காக வினாச ஜுவாலைகள் காத்திருக்கிறது. ஹோகாவில் போலியாக செய்கிறார்கள் அல்லவா. பிறகு சுவாமிஜி இவர்களின் வயிற்றிலிருந்து என்ன வரும் என கேட்கிறார்கள். உண்மையில் பார்த்தோம் என்றால் ஐரோப்பியர்கள் யாதவர்களின் புத்தியினால் எவ்வளவு விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வெளியே வருகிறது. நீங்கள் முயற்சி செய்து ஒரேயொரு விஷயத்தை பற்றி புரிய வைக்க வேண்டும். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒருவரே!. தந்தை வருவதே பாரதத்தில் தான். தந்தை பாரதத்தில் வருகிறார் என்றால் இது எல்லா வற்றையும் விட மிகப் பெரிய தீர்த்தம் ஆகிவிட்டது. ஆனால் புரிந்துக் கொள்ளவில்லை. எது பழமையாகி விட்டதோ மீண்டும் வரும் என புரிந்துக் கொள்கிறீர்கள். நீங்கள் இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டீர்கள். இந்த ஞானத்தை பாபா கல்ப கல்பமாக கொடுக்கிறார் என்பது புத்தியில் இருக்கிறது. சிவனுக்குக் கூட பல பெயர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. பபுல் நாத் கோவில் கூட இருக்கிறது. முட்களை மலராக மாற்றியதால் பபுல் நாத் என்கிறார்கள். இவ்வாறு பல பெயர்கள் இருக்கிறது. இதனுடைய பொருளை நீங்களும் புரிய வைக்கலாம். எனவே பாபாவின் அறிமுகத்தைப் புரிய வையுங்கள் அவரை அனைவரும் மறந்து விட்டு இருக்கிறார்கள். முதலில் பாபாவை அறிந்துக் கொண்டால் தான் புத்தியின் தொடர்பு கிடைக்கும். பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். முக்தி தாமத்திலிருந்து மீண்டும் ஜீவன் முக்தி தாமத்திற்குச் செல்ல வேண்டும். இது பதீதமான ஜீவன் பந்தனம் ஆகும். குழந்தைகளே, அசரீரி ஆகுங்கள் என பாபா கூறுகின்றார். அசரீரி ஆகி பாபாவை நினையுங்கள். இதன் மூலமாகத் தான் படகு கரை சேரும். அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை அவர் ஒருவரே! பாபாவின் கட்டளை என்னை நினைத்தால் யோகத்தின் மூலம் விகர்மம் வினாசம் ஆகும். கடைசி நினைவிற்கு ஏற்ப நிலையை அடையலாம். நாம் திரும்ப போக வேண்டும். எவ்வளவு முடியுமோ சீக்கிரம் போகலாம். ஆனால் சீக்கிரமாக நடக்காது. உயர்ந்த பதவி அடைய வேண்டும் என்றால் அப்பாவை நினைக்க வேண்டும். நாம் ஒரு தந்தையின் குழநதைகள். இப்போது மன்மனாப என பாபா கூறுகின்றார். கிருஷ்ணர் கூற மாட்டார். கிருஷ்ணனர் எங்கே இருக்கிறார். இவரோ தந்தை. பரம்பிதா பரமாத்மா பிரஜா பிதா பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்கிறார் என்றால், நிச்சயமாக இங்கே இருக்க வேண்டும். இது சாகார அழுக்கான உலகம் ஆகும். அது தூய்மையான உலகம் ஆகும். அழுக்கான உலகத்தில் தூய்மையானவர் யாரும் இல்லை. மரத்தில் பாருங்கள், மேலே நிற்கிறார். மேலும் பிரம்மா கீழே தவத்தில் அமர்ந்திருக்கிறார். இவருடைய தோற்றத்தையே சூட்சும வதனத்தில் பார்கிறார். இவர் சென்று பரிஸ்தா ஆகிறார். ஸ்ரீகிருஷ்ணர் இச்சமயம் கருப்பாக இருக்கிறார் அல்லவா?. முதல் விஷயம் எது வரை புரிய வைக்க வில்லையோ அதுவரை புரிந்துக் கொள்ள முடியாது இதில் தான் கடின உழைப்பு தேவைப்படுகிறது. மாயா உடனடியாக பாபாவின் நினைவை மறக்க வைத்து விடுகிறது. நிச்சயத்தோடு நாங்கள் நாராயணன் பதவியை அடைவோம் என எழுதுகிறார்கள். இருப்பினும் மறந்து போகிறார்கள். மாயா மிகப் பெரிய எதிரியாகும். மாயாவின் புயல் எவ்வளவு வந்தாலும் ஆடக் கூடாது. அது கடைசி நிலையாகும். மாயா பலசாலி ஆகி சண்டை இடும். செம்மறி ஆடு போல இருந்தால் உடனடியாக விழ வைத்து விடும். பயப்படக்கூடாது. முதலில் அனைத்து நோய்களும் வெளியே வரும் என வைத்தியர்கள் கூறுகிறார்கள். மாயாவின் புயல் கூட நிறைய வரும். நீங்கள் உறுதி ஆகிவிட்டால் மாயாவின் அழுத்தம் குறைந்து போகும். இப்போது இவர்கள் அசைய மாட்டார்கள் என புரிந்துக் கொள்ளும். பாபா தான் வந்து கல் புத்தியிலிருந்து தங்க புத்தியாக மாற்றுகிறார். இது மிகவும் இரமணிகரமான ஞானம் ஆகும். பாரதத்தினுடையது பழைமையான இராஜயோகம் என பாடப்பட்டிருக்கிறது. இதை நீங்கள் அறிகிறீர்கள். நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம் :

    1. அசரீரி ஆகி அப்பாவை நினைக்க வேண்டும். சுய தர்மத்தில் நிலைத்திருக்க பயிற்சி செய்ய வேண்டும். ஞானத்தின் நடனம் ஆட வேண்டும், ஆட வைக்க வேண்டும்.



    2. மாயாவின் புயலை பார்த்து ஆடி விடக் கூடாது. பயப்படக் கூடாது. உறுதியாகி மாயாவின் அழுத்தத்தை முடிக்க வேண்டும்.



    வரதானம் :

    ஆத்மீக உள்ளுணர்வு, பார்வையினால் துக்கத்தின் பெயர் அடையாளத்தை முடிக்கக் கூடிய சதா சுகம் அளிப்பவர் ஆகுக.



    பிராமணர்களின் உலகம் தனிப்பட்டது என்றால், பார்வை உள்ளுணர்வு அனைத்தும் தனிப்பட்டது. யார் போகும் போதும் வரும் போதும் ஆத்மீக பார்வை, ஆத்மீக உள்ளுணர்வில் இருக்கிறார்களோ அவர்களிடம் துக்கத்தின் பெயர் அடையாளம் இருக்க முடியாது. ஏனென்றால் சரீர உணர்வினால் தான் துக்கம் ஏற்படுகிறது. சரீர உணர்வை மறந்து ஆத்மீக சொரூபத்தில் நிலைத்திருந்தால் சதா சுகமே சுகமாகும். அவர்களுடைய சுகமயமான வாழ்க்கை மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக மாறி விடுகிறது. அவர்கள் எப்போதும் சுகத்தின் படுக்கையில் உறங்குகிறார்கள். மேலும் சுக சொரூபமாக இருக்கிறார்கள்.



    சுலோகன் :

    தன்னைப் பார்த்து தன்னுடைய குறைகளை அகற்றிக் கொண்டால் இறைவனின் அன்பு கிடைக்கும்.



    ***OM SHANTI***