BK Murli 11 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 11 July 2017 Tamil

    11.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

    இனிமையான குழந்தைகளே - நீங்கள் ஆன்மீக படையினர் ஆவீர்கள். உங்களைத் தவிர யாருமே முழு உலகத்தை இராவணனிடமிருந்து காப்பாற்ற முடியாது. இதே தூய்மையான போதையில் இருக்க வேண்டும்.



    கேள்வி:

    பாப்தாதா எந்த குழந்தைகளின் சமர்ப்பணத்திற்கு புகழ் பாடுகிறார்?



    பதில்:

    அடி வாங்கி கொண்டிருக்கும் பொழுது கூட சிவபாபாவை நினைவு செய்து கொண்டிருக்கும் அந்த அபலைகளான பந்தனத்தால் கட்டுண்டு கிடக்கும் பெண் குழந்தைகளின் தியாகத்திற்கு நான் பலியாகிறேன் என்று பாபா கூறுகிறார். அடி வாங்குவதால் இன்னும் நஷ்டோமோகா – மோகத்தை அழித்தவர்களாக ஆகிக் கொண்டே போகிறார்கள். அது காரணமாக அவர்களுடைய பதவி இன்னுமே உயர்ந்ததாக ஆகி விடுகிறது. அப்பேர்ப்பட்ட குழந்தைகளுக்கு தந்தை தைரியமூட்டுகிறார். குழந்தைகளே, நீங்கள் தன்னை ஆத்மா என்று உணருங்கள். இந்த தேகம் உங்களுடையது அல்ல. நீங்கள் தந்தையினுடையவராக ஆகி வீட்டுள்ளீர்கள். எனவே உங்களது நிலை பக்குவப்பட்டுக் கொண்டே போகும். உண்மையான உள்ளத்தில் தலைவன் திருப்தி அடைவார்.



    பாடல் :

    உன்னை அடைந்து ..



    ஓம் சாந்தி.

    குழந்தைகள் முன்னால் அமர்ந்துள்ளார்கள். நாம் சேனையில் உள்ளோம் என்பதை அறிந்தும் உள்ளார்கள். யாருடைய படை? இறைவனினுடையது. என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நாம் இராவணன் மீது வெற்றி அடைந்து கொண்டிருக்கிறோம். அதாவது இந்த முழு சிருஷ்டியை இராவண ராஜ்யத்திலிருந்து விடுவித்து நமது ராஜ்யத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். அமர்ந்திருப்பதோ பாருங்கள், எவ்வளவு சாதாரண முறையில் அமர்ந்துள்ளீர்கள். எந்த கை கால்களையும் இயக்குவதில்லை. ஆனால் மிகவுமே வலிமையுள்ள சேனை ஆவீர்கள். நீங்கள் இறைவனுக்கு உதவி செய்பவர்கள் ஆவீர்கள். இறைவனும் மறைமுகமாக இருக்கிறார். நீங்களும் மறைமுகமாக உள்ளீர்கள். அவரை (ஷாஹன்ஷா) பேரரசர் என்றும் கூறுகிறார்கள். உங்களுடைய யுத்தம் எவ்வளவு வலிமையுள்ளது மற்றும் மறைமுகமானது என்றால் நீங்கள் விகாரங்கள் மீது வெற்றி அடைந்து முழு உலகத்தின் மீது வெற்றி அடைந்து விடுகிறீர்கள். அந்த படை எப்படி இருக்கிறதோ அதே போல நாமும் ஆன்மீகப் படையினர் ஆவோம் என்று உங்களுக்கு உணர்வு ஏற்படும். பாரதத்தினுடைய எல்லாமே இந்த படையை பொருத்து உள்ளது என்பதை உணர்ந்திருக்கிறீர்கள். நமது படை மட்டும் இல்லை என்றால் மற்றவர்கள் வெற்றி அடைந்து விடுவார்கள். அந்த சேனையிலோ அவ்வப்பொழுது அரசர்களைக் கூட விரட்டி அடித்து விட்டு ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்து விடுகிறார்கள். எங்களைத் தவிர வேறு யாரும் தேசத்தைக் காப்பாற்ற முடியாது என்று ராணுவம் நினைக்கிறது. உங்களுக்குக் கூட தூய்மையான அகங்காரம் உள்ளது. ஈசுவரிய படையைச் சேர்ந்த எங்களைத் தவிர யாருமே இராவணனிடமிருந்து காப்பாற்ற முடியாது. இப்பொழுது அந்த ராணுவத்தையும் பாருங்கள் மற்றும் இதையும் பாருங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே இருக்கிறீர்கள். உங்களிடம் எந்த ஒரு ராணுவ உடையோ ஆயுதம் ஆகியவையோ இல்லை. அவர்களோ எவ்வளவு உடைகளை அணிகிறார்கள். எப்படி வேஷம் போடுகிறார்கள். ஹோலியில் கூட வேஷம் போடுகிறார்கள். இராமருக்குக் கூட சேனை காண்பிக்கிறார்கள். அந்த சேனையில் குரங்கு முகம் கொடுத்து விட்டுள்ளார்கள். அதுவோ பொம்மைகளின் விளையாட்டு தான் செய்கிறார்கள். நாம் இராவணன் என்ற 5 விகாரங்களின் சிறையிலிருந்து விடுதலை அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஒன்றோ இராவணனினுடைய சிறை மற்றொன்று இராவணனின் வழிப்படி நடப்பவர்களின் சிறை. பக்தியினடையதும் சங்கிலிகள், குருக்களினுடையதும் சங்கிலிகள், பின் கணவரினுடையதும் சங்கிலிகள். இராவணனினுடைய வழியில் நீங்கள் எவ்வளவு துக்கம் அடைகிறீர்கள். இராவணன் எங்களை மிகவும் துன்புறுத்துகிறான் என்று எவ்வளவு கூப்பிடுகிறீர்கள். எந்த அளவிற்கு நாம் யோகத்தில் இருக்கிறோமோ அந்த அளவிற்கு நமது ஆத்மா துக்கத்திலிருந்து விடுபடுகிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அபலைகள் மீது கொடுமையோ நிறைய ஆகிறது. நிறைய அடி வாங்குகிறார்கள். இப்பொழுது நாம் என்ன செய்வது என்று அபலைகள் கூப்பிடுகிறார்கள். தந்தை பின் தைரியம் கொடுக்கிறார். நீங்கள் உங்களை ஆத்மா என்று உணருங்கள் என்பதையோ புரிய வைத்துள்ளார். இந்த தேகம் நம்முடையது கிடையாது. நாம் இறந்து விட்டுள்ளோம். தந்தையினுடையவராக ஆகி விட்டுள்ளோம். வேறு எந்த உபாயமும் கிடையாது. நாமோ சிவபாபாவினுடையவர் ஆவோம். யார் உண்மையான குழந்தைகளாக இருக்கிறார்களோ அவர்களது நிலை பக்குவமாக இருக்கிறது. சிறிதளவு கூட விகாரத்தின் பக்கம் சிந்தனை செய்வதில்லை. அப்பேர்ப்பட்ட குழந்தைகள் மீது யாராவது வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்கிறார்கள் என்றால், அதனுடைய பாவம் ஏற்படுவதில்லை. பாபா நாங்களோ உங்களுடையவர் ஆவோம். சரீரமோ பிணம் போல என்று முறையிடுகிறார்கள். அப்பேர்ப்பட்ட நிச்சய புத்தி உடையவர்கள் கூட மிக உயர்ந்த பதவியை அடைந்து விடுகிறார்கள். ஆனால் உண்மையான உள்ளம் இருக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட உண்மையான உள்ளத்தின் மீது அவசியம் தந்தை திருப்தி அடைவார். இங்கு இருக்கும் சகோதரிகள் கூட அடி வாங்கும் அந்த பெண் குழந்தைகள் நினைவு செய்யும் அளவிற்கு நினைவு செய்வதில்லை. தந்தையிடம் பந்தனம் உள்ளது என்ற கூக்குரல் வருகிறது. பாபா பந்தனத்திலிருந்து விடுவியுங்கள். யார் பந்தனத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இருக்கிறார்களோ அவர்கள் கூட பந்தனத்தில் இருக்கும் பெண்கள் நினைவு செய்யும் அளவிற்கு நினைவு செய்வது இல்லை. சிவபாபாவின் நினைவு மூலமாகத் தான் படகு கரையேறுகிறது. அவர்கள் எங்களை முரளி படிக்கக்கூட விடுவதில்லை என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். அட, நீங்கள் தந்தையை நினைவு செய்து கொண்டே இருங்கள். முரளியில் கூட தினமும் இது தான் புரிய வைக்கப்படுகிறது. முக்கியமான விஷயமாவது நினைவின் சார்ட் வையுங்கள். நான் பாபாவை எவ்வளவு நேரம் நினைவு செய்கிறேன். இந்த உழைப்பு நிறைய பேரால் ஆவது இல்லை. அடிக்கடி நினைவு மறந்து விடுகிறது. பந்தனத்தில் இருக்கும் பெண் குழந்தைகளோ அடி வாங்கி வாங்கி இன்னும் அதிகமாக நினைவு செய்கிறார்கள். அடி வாங்கியும் கூட நினைவு செய்யும் அந்த அபலைகளுக்குத் தான் நன்றி கூற வேண்டும். நீங்கள் உங்களை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்து கொண்டே இருங்கள் என்று பாபா கூறுகிறார். எந்த அளவு அதிகமாக அடிப்பார்களோ அந்த அளவு இன்னும் நீங்கள் "நஷ்டோ மோகா" - மோகத்தை நீக்கியவர்களாக ஆகிக் கொண்டே செல்வீர்கள். அடி கூட நல்ல பதவியை அமைத்து விடுகிறது. பாபாவிற்குக் கூட அப்பேர்ப்பட்ட பெண் குழந்தைகள் நினைவிற்கு வருகிறார்கள். ஆம். ஒரு சில மிகவும் நல்ல மகாரதிகள் கூட இருக்கிறார்கள். அவர்கள் நிறைய பேருக்கு சேவை செய்கிறார்கள். யோகியாக ஆக்குகிறார்கள். யோகத்திற்கு நிறைய மகிமை உள்ளது. நீங்களோ அனைவர் மீதும் இரக்கம் கொள்ள வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் கீதையை மேற்கோள் காட்டுகிறீர்கள். அவர்களுடைய புத்தியில் கிருஷ்ணபகவான் இராஜயோகத்தைக் கற்பித்தார் என்பது மட்டுமே உள்ளது. பரமபிதா பரமாத்மா ராஜயோகம் கற்பித்தார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இதை நிரூபிப்பதற்காகவே நீங்கள் பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது என்று கேட்கிறீர்கள். பிதா என்று கூறுகிறார்கள் அல்லவா? என்னுடன் யோகம் கொண்டீர்கள் என்றால் உங்களுடைய விகர்மங்கள் விநாசம் ஆகும் என்பது தந்தையினுடைய கட்டளை ஆகும். எந்த ஒரு மனிதனுடனும் யோகம் கொள்வது அல்ல. கற்பிப்பவரே மனிதராக இருந்தார் என்றால் உங்களுக்கு நன்மை ஆகாது. கீதையில் கூட தேகதாரியின் பெயர் வைத்து விட்டுள்ளார்கள். எங்களுக்கு நிராகார பரமபிதா பரமாத்மா யோகம் கற்பிக்கிறார் என்று நாம் கூறுகிறோம். நீங்கள் யாரையுமே நிந்திப்பதில்லை. நீங்களோ தந்தைக்கு மகிமை செய்கிறீர்கள். ஆனால் புரிய வைப்பவர்களோ மிகவும் கூர்மையானவர்களாகவும் புத்திசாலியாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் அங்கு பெரிய பெரிய வித்வான்கள் பண்டிதர்கள் கூட நிறைய வருகிறார்கள். சந்நியாசிளளினுடையதும் சேனை உள்ளது அல்லவா? எல்லோருடைய தலைவர்களும் வருகிறார்கள். குழந்தைகளாகி நீங்கள் எவ்வளவு சாமார்த்தியமுடையவர்களாக இருக்க வேண்டும் என்றால் பேச்சோ மிகவும் குறைவாகப் பேச வேண்டும். ஆனால் ஒரேயடியாக அம்பு போல பதிந்து விட வேண்டும். அதிகமாக எதுவுமே பேச வேண்டிய அவசியமே இல்லை ஏனெனில் அவர்கள் மிகவும் கோபமுடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுடையதும் பெரிய சேனை ஆகும். எங்கிருந்து அழைப்பு வந்தாலும் கூட நீங்கள் செல்லலாம். நம்மிடையே யார் யாரெல்லாம் நன்றாக முழக்கம் செய்ய கூடியவர்கள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் கூட புரிந்து கொள்ள முடியும். ஒரே ஒரு அல்ஃப் என்பதன் பொருளைத் தான் புரிய வைக்க வேண்டும். இரண்டு விஷயங்கள் உள்ளன அவ்வளவே. என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் உலகத்தின் அதிபதி ஆகி விடுவீர்கள் என்று தந்தை (அல்ஃப்) கூறுகிறார். இதுவோ (அல்ஃப்) பகவான் தான் கூற முடியும். அவர் தான் படைப்பு கர்த்தா ஆவார். ஹெவென்லி காட்ஃபாதர் ஆவார். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகி விடும் என்று அவர் கூறுகிறார். ஸ்ரீகிருஷ்ணரை நினைவு செய்வதால் விகர்மங்கள் விநாசம் ஆகாது. கிருஷ்ணர் இப்பொழுது எங்கே இருக்கிறார். அவரோ ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றை எடுத்து விட்டார். நிராகாரமானவரே அவினர்ஷி (அழியாதவர்) ஆவார். இந்த விஷயம் பற்றி முழு விளக்கவுரை அளிக்கிறார். எவ்வளவு தவறு செய்து விட்டுள்ளார்கள். நான் உங்களுக்கு உலகத்தில் ஆஸ்தி அளிக்கிறேன் என்று பகவான் கூறுகிறார். கிருஷ்ணர் எப்படி எல்லோருக்கும் ஆஸ்தி அளிப்பார்? கிருஷ்ணரோ பாரதத்தினுடையவர் ஆவார் அல்லவா? பதீதமாகவோ முழு உலகமே உள்ளது. அனைவரின் பதீத பாவனரோ ஒரே ஒரு நிராகாரமானவர் ஆவார். உங்களுடைய புத்தியில் இந்த எல்லா விஷயங்களும் உள்ளது. பக்தியின் பாகம் பற்றிய ஞானம் உள்ளது. முதன் முதலில் சிவனின் பூஜை ஆகிறது. சோமநாத்தின் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய சோமநாத்தின் கோவிலை யார் அமைத்தார்? வேறு யாருடைய சக்தியும் இல்லை. அவசியம் அந்த சமயத்தில் இப்பேர்ப்பட்ட கோவில் அமைக்கும் அளவிற்கு அவ்வளவு செல்வந்தராக இருந்திருக்கக் கூடும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துள்ளீர்கள். உண்மையில் நாம் எவ்வளவு செல்வந்தராக இருந்தோம். இவ்வளவு பெரிய சோமநாத்தின் கோவில் அமைத்துள்ளார் என்றால் அவசியம் மகாராஜாவாக இருந்திருக்க வேண்டும். தேவி தேவதைகள் சுயம் அவர்களே பூஜிக்கத் தக்கவர்களாக இருந்தார்கள். அவர்களே பூசாரி ஆகி விட்டார்கள். மீண்டும் அவர்களே பூஜைக்காக கோவில் அமைப்பார்கள். அப்படி இன்றி யாரோ ஒருவர் சோமநாத்தின் கோவில் அமைத்தார் என்பதல்ல. ஒருவர் அமைத்தார் பின் நிறைய பேர் கட்டினார்கள். பின் நிறைய கோவில்களைக் கொள்ளையடித்திருக்க வேண்டும். பல ஒட்டகங்களில் நிரப்பி எடுத்துச் செல்லுமளவு ஒரு கோவிலுக்குள்ளேயே எவ்வளவு சாமான்கள் வெளிப்பட்டது. படையெடுக்கும் பொழுது தலை நகரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு வெற்றி ஆகி விட்டது. உண்மையில் இந்த டில்லி பரிஸ்தான் தேவதைகள் வாழும் இடமாக இருந்தது என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. தர்மராஜர் ஸ்தாபனை செய்திருந்தார். டில்லி மீண்டும் பரிஸ்தான் ஆக மாறும். அதற்காக நாம் இராஜயோகம் கற்று கொண்டிருக்கிறோம். இப்பொழுது நீங்கள் கேட்கும் பொழுது புத்தியில் போதை ஏறுகிறது. நமது ராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்று புரிந்துள்ளீர்கள். நமது பெயர் பிரசித்தமாக உள்ளது. மறைமுகமான அஹிம்சை சேனை என்று கூறவும் படுகிறது. இவ்வளவு பெரிய பொருளை யாருமே புரிந்து கொள்வதில்லை. நீங்கள் ஸ்தூல ஆயுதங்களும் எடுப்பதில்லை. காம வாளும் செலுத்துவது இல்லை. நீங்கள் தான் அஹிம்சை உடைய சத்தி சேனை ஆவீர்கள். நீங்கள் தான் யோக பலத்தினால் ராஜ்யத்தை அடைந்துள்ளீர்கள். உலகத்தின் அதிபதி ஆவதற்காக ஸ்ரீமத்படி நாம் ஒரு தந்தையை மட்டும் தான் நினைவு செய்கிறோம். இப்பொழுது இந்த நாடகம் முடிவடைகிறது என்பதை அறிந்துள்ளீர்கள். பிறகு புதியதாக ஆரம்பம் ஆகும். இது அவினர்ஷி நாடகம் ஆகும். இது ஒரு பொழுதும் விநாசம் ஆவதில்லை. மற்றபடி புதிய உலகம் வரும் பொழுது பழைய உலகம் அவசியம் அழிந்து போகிறது. சக்கரமோ சுற்றிக் கொண்டே இருக்கிறது. இது அனாதி நாடகம் ஆகும். எப்படி பகவானை எங்கும் ஆஜராக இருப்பவர் (ஹாஜிர் - நாஜிர்) என்கிறார்களோ அதுபோல இந்த நாடக சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இந்த நாடகத்தில் எல்லா நடிகர்களும் இருக்கவே இருக்கிறார்கள். மூலவதனம் மற்றும் ஸ்தூல வதனம் இருக்கவே இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிறகு சத்யுகம் திரேதா சக்கரம் சுற்றி வந்து மீண்டும் நடைபெறுகிறது. இது அவினர்ஷி நாடகம் ஆகும். நாமாகிய நடிகர்களும் நாடகத்தில் இருக்கவே இருக்கிறோம். ஆரம்ப முதல் கடைசி வரை எல்லோருடைய பாகமும் இருக்கவே இருக்கிறது. அந்த சிறிய நாடகமோ பழையதாக ஆகி விடுகிறது. இதுவோ ஒரு பொழுதும் பழையதாக ஆவதில்லை. இந்த அவினர்ஷி நாடகம் எப்பொழுதாவது பழையதாக ஆகிறதா என்ன? இல்லை. மற்றபடி நாம் பாகத்தில் வருகிறோம். புதியதிலிருந்து பழையதாக ஆகி மீண்டும் பழையதிலிருந்து புதியதாக ஆகி விடுகிறது. உண்மையில் நாம் ராஜா ராணியாக இருந்தோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது ஏழையாக ஆகி விட்டோம். ஆண்டியிலிருந்து மீண்டும் அரசனாக ஆகிறோம். ஆண்டி என்றால் பிச்சைக்காரன். தந்தை வந்து எல்லோருக்கும் வழி கூறுகிறார். உங்களுக்கு மிகுந்த போதை இருக்க வேண்டும். இந்த புதிய ஞானம் உங்களுக்குக் கிடைக்கிறது அதுவும் ஒரு முறைதான் கிடைக்கிறது. நாம் டைரக்ஷன்படி இந்த சிருஷ்டியில் நமது அரசாட்சியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துள்ளீர்கள் அல்லவா? என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் அரசாட்சியை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். ஆம். மற்றபடி இந்த கொடுமைகளோ ஆகத் தான் செய்யும். கொடுமை கூட வினைப்பயன் ஆகும். கணவன் மனைவியை அடிக்கிறான். அப்படியே யாராவது அடிக்க முடியுமா என்ன? நீங்கள் கூட அவரை அடித்திருக்கக் கூடும். அதே கணக்கு வழக்கு தீர்ந்து கொண்டு இருக்கிறது. இவை எல்லாமே கர்மங்களின் கணக்கு வழக்கு ஆகும். இப்பொழுது நீங்கள் ஸ்ரீமத்படி உயர்ந்த செயல்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள். இப்பொழுது எந்த ஒரு விதமான மோசமான செயலையும் செய்யாதீர்கள். அனைவருக்கும் தந்தையின் அறிமுகம் கொடுப்பது எல்லாவற்றையும் விட உயர்ந்த செயல் ஆகும் என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தந்தையின் கட்டளை கிடைத்துள்ளது. எல்லோரும் தந்தையைத் தான் மறந்து விட்டுள்ளார்கள். சிவனுக்கு பூஜை செய்கிறார்கள். ஆனால் எதுவுமே அறியாமல் உள்ளார்கள். அமர் நாத்தில் கூட பெரிய லிங்கம் அமைத்து வைத்துள்ளார்கள். இவ்வளவு பெரிய தந்தையின் ரூபம் இருக்குமா என்ன? எதுவுமே தெரியாது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இந்த எல்லா விஷயங்களையும் சரியாகப் புரிந்துள்ளீர்கள். நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. ஸ்ரீமத்படி எப்பொழுதும் உயர்ந்த செயல்களையே செய்ய வேண்டும். எந்த ஒரு மோசமான செயலும் ஆகிவிடக் கூடாது என்ற கவனம் கொள்ள வேண்டும். அநேகரை யோகியாக ஆக்கும் சேவை செய்ய வேண்டும்.



    2. உண்மையான உள்ளம் கொள்ள வேண்டும். சரீரமோ ஒரு பிணம் போல. இதன் அபிமானத்தை விட்டு விட வேண்டும். முழுக்க முழுக்க நஷ்டோமோகா (மோகத்தை அழித்தவர்) ஆக வேண்டும்.



    வரதானம்:

    நினைவு மற்றும் சேவை மூலமாக தங்களது பாக்கியத்தின் ரேகையை சிறந்ததிலும் சிறந்ததாக ஆக்கிக் கொள்ளக் கூடிய பாக்கியவான் ஆவீர்களாக.



    பிராமணர்களின் ஜாதகத்தில் மூன்றுமே காலங்கள் நல்லதிலும் நல்லதாக இருக்கின்றது. எது நடந்ததோ அதுவும் நல்லதே. மேலும் எது நடக்கப் போகிறதோ அது மிக மிக நல்லது. எல்லோருடைய நெற்றியிலும் சிறந்த அதிர்ஷ்டத்தின் ரேகை வரையப்பட்டுள்ளது. நினைவு மற்றும் சேவையில் எப்பொழுதும் மும்முரமாக இருங்கள். அவ்வளவே. எப்படி சரீரத்தில் மூச்சு இயல்பாக இருக்கிறதோ அப்படியே இவை இரண்டும் இயல்பானதாக இருக்க வேண்டும். பாக்கிய விதாதா தந்தையின் நினைவு மற்றும் சேவைக்கான இந்த விதி எப்பேர்ப்பட்டது அளித்துள்ளார் என்றால் அதன் மூலம் யார் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு தங்களது சிறந்த பாக்கியத்தை அமைத்துக் கொள்ள முடியும்.



    சுலோகன்:

    திருப்தி என்ற சீட்டில் அமர்ந்து நிலைமைகளின் விளையாட்டை பார்ப்பது தான் சந்துஷ்டமணி ஆவதாகும்.


    ***OM SHANTI***