BK Murli 12 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 12 July 2017 Tamil

    12.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! சதா குஷியில் இருப்பீர்களானால் சொர்க்கத்தின் இராஜ பதவியினுடைய நஷா ஒருபோதும் மறக்காது.



    கேள்வி :

    பாபா எந்த ஓரு அற்புதமான நாற்று நடுகிறார்?



    பதில் :

    பதித் மனிதர்களைப் பாவன தேவதைகளாக ஆக்கி விடுவது-இந்த அற்புதமான நாற்றை பாபா தாம் நடுகின்றார். எந்த தர்மம் மறைந்து விட்டுள்ளதோ, அதை ஸ்தாபனை செய்வது ஓர் அற்புதமான விஷயமாகும்.



    கேள்வி :

     பாபாவின் சிறந்த நடைமுறை எது?



    பதில் :

    சாமர்த்தியமாக குழந்தைகளை சோழியிலிருந்து வைரமாக ஆக்குவது - இதுவே இது பாபாவின் நடைமுறையாகும். மற்றப்படி கிருஷ்ணருக்கு எந்த ஒரு சரித்திரமும் கிடையாது. அவரோ சிறிய குழந்தை!



    பாடல் :

    இரவு நேரப் பயணி......



    ஓம் சாந்தி.

    இனிமையிலும் இனிமையான குழந்தைகள் அறிவீர்கள், இந்தப் பாடல் இங்கே இயற்றப் பட்டதல்ல. இந்தப் பாடலை எப்போது கேட்கிறீர்களோ, அப்போது புரிந்து கொள்கிறீர்கள், நிச்சயமாக பாபா நமது கையைப் பிடித்துக் கொண்டு அழைத்துச் செல்கிறார். எப்படி சின்னக் குழந்தைகள் இருக்கிறார்கள், புரிந்து கொள்கிறார்கள், கையைப் பிடிக்காமல் போனால் கீழே விழந்து விடக் கூடாதே! அப்படியே இப்போது நீங்கள் அறிந்து கொண்டு விட்டீர்கள், இது பயங்கர இருள்(அஞ்ஞானம்). அடி மேல் அடி வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். புத்தியும் சொல்கிறது, ஒரு பாபா தாம் சொர்க்கத்தை, உண்மையான கண்டத்தை ஸ்தாபனை செய்பவர். உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் அந்த உண்மையான தந்தை-அவரை மகிமை செய்ய வேண்டியுள்ளது, மற்றவர்களை நிச்சயபுத்தி உள்ளவர்களாக ஆக்குவதற்காக. பாபா சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர் அல்லது ஹெவன்லி காட்ஃபாதர். அவர் தாம் குழந்தைகளாகிய உங்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். ஹெவன்லி காட்ஃபாதர் என்றால் ஹெவனை ஸ்தாபனை செய்பவர். நிச்சயமாக ஹெவன் ஸ்தாபனை செய்கிறார். பிறகு அந்த ஹெவனுக்கு மாலிக் ஸ்ரீகிருஷ்ணர். அவர் (சிவபாபா) சொர்க்கத்தைப் படைப்பவராகிறார், இவர் (ஸ்ரீகிருஷ்ணர்) சொர்க்கத்தின் இளவரசர் ஆகிறார். படைப்பவரோ ஒரு பாபா தான். சொர்க்கத்தின் இளவரசராக (ஹெவன்லி பிரின்ஸ்) ஆகவேண்டும். ஒருவர் மட்டும் அதுபோல் இருக்க மாட்டார். 8 ராஜ பரம்பரை என எண்ணிச் சொல்லப்படுகின்றது. இதுவும் நிச்சயம்-பாபாவிடமிருந்து ஆஸ்தியாகப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். பாபா சொர்க்கத்தைப் படைப்பவர். நாம் அந்த பாபாவிடமிருந்து கல்ப-கல்பமாக ஆஸ்தி பெறுகின்றோம். 84 பிறவிகளை முடிக்கின்றோம். அரைக்கல்பம் சுகம், அரைக்கல்பம் துக்கம். அரைக்கல்பம் இராம ராஜ்யம், அரைக்கல்பம் இராவண ராஜ்யம். இப்போது நாம் மீண்டும் ஸ்ரீமத்படி நடந்து சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். இது மறப்பதற்கான விஷயமல்ல. உள்ளுக்குள் மிகுந்த குஷி இருக்க வேண்டும். ஆத்மாவுக்கு உள்ளுக்குள் குஷி இருக்கின்றது. ஆத்மாவின் துக்கம் அல்லது சுகம் முகத்தில் வருகின்றது. தேவதைகளின் முகம் எவ்வளவு மலர்ந்த முகமாக உள்ளது! அவர்கள் சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். புரிய வைப்பதற்காக பாபா போர்டு முதலியவற்றைத் தயார் செய்வித்துக் கொண்டிருக்கிறார். ஹெவன்லி காட்ஃபாதரின் மகிமையே தனி. மேலும் ஹெவன்லி பிரின்ஸின் மகிமையும் தனி. அவர் படைப்பவர், இவர் படைப்பு. குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைப்பதற்காக பாபா யுக்தியுடன் எழுதிக் கொண்டே இருக்கிறார், மனிதர்களுக்கு நல்லபடியாகப் புரிய வேண்டுமென்ப தற்காக. யாரைப் பரமபிதா பரமாத்மா எனச் சொல்கிறார்களோ, அவர் தாம் பதீதபாவன். அவர் எல்லையற்ற படைப்பவர். அதுவும் சொர்க்கத்தைத் தான் நிச்சயம் படைப்பார். சத்யுக திரேதாவை மனிதர்கள் சொர்க்கம் எனச் சொல்கின்றனர். சொர்க்கம் மற்றும் நரகம் பாதிப்பாதி உள்ளது. சிருஷ்டியும் கூட நிச்சயமாக பாதிப்பாதி தான்-புதியது மற்றும் பழையது. அந்த ஜட மரத்தின் ஆயுள் தீர்மானிக்கப்பட்டதல்ல. இந்த மரத்தின் ஆயுள் தீர்மானிக்கப்பட்டதாகும். இந்த மனித சிருஷ்டியாகிய மரத்தின் ஆயுள் முழுவதும் மிகச் சரியானதாகும். இதுபோல் வேறெதற்கும் கிடையாது. ஒரு வினாடி கூட வித்தியாசம் இருக்க முடியாது. வெரைட்டி மரமாகும். மிகச் சரியாக உருவானது, உருவாக்கப்பட்ட நாடகமாகும். இந்த விளையாட்டு 4 பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜெகன்னாத்புரியில் அரிசி சமைப்பதற்காக அடுப்பில் ஏற்றுகின்றனர். அதில் 4 பாகங்கள் உள்ளன. இந்த சிருஷ்டியும் கூட நான்கு பாகங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வினாடி கூட கூடவோ குறைவாகவோ இருக்க முடியாது. நீங்கள் அறிவீர்கள், பாபா 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட சொல்லிப் புரிய வைத்திருந்தார். அதுபோலவே இப்போதும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். நிச்சயம் உள்ளது, 5000 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஹெவன்லி காட்ஃபாதர் சொர்க்க ஸ்தாபனை செய்பவர், சொர்க்கத்தின் இராஜபதவி கிடைக்கச் செய்வதற்காகத் தகுதியுள்ளவர்களாக நம்மை ஆக்கிக் கொண்டிருக்கிறார். பாபா லாயக்காக ஆக்குகிறார். இராவணன் லாயக்கில்லாதவர்களாக ஆக்குகிறான். இதன் மூலம் பாரதம் சோழி போல் ஆகிவிடுகின்றது. பாபா அப்படி நம்மைத் தகுதியுள்ளவர்களாக ஆக்குகிறார், பாரதம் வைரம் போல் ஆகிவிடுகின்றது. நம்பர்வார் பதவிகளோ இருக்கவே செய்கின்றன. ஒவ்வொருவருக்கும் அவரவருடைய கர்ம பந்தனங்களின் கணக்கு-வழக்கு உள்ளது. சிலர் கேட்கின்றனர், நான் வாரிசாவேனா, பிரஜையாவேனா என்று. பாபா சொல்கிறார், உங்களுடைய கர்ம பந்தனங்களைப் பாருங்கள். கர்ம-அகர்ம-விகர்மத்தின் கதியோ பாபா தாம் சொல்லிப் புரிய வைக்கிறார். பாபா எப்போதுமே சொல்கிறார், தனித்தனி அறிவுரை கேளுங்கள், தனக்காக. பாபா சொல்வார், உங்களுடைய கணக்கு வழக்குகள் எந்த விதமாக உள்ளன, நீங்கள் என்ன பதவி பெற முடியும் என்று. முழு ராஜதானியும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. ஒரு பாபா தாம் ஸ்தாபனை செய்கிறார். மற்ற அனைவரும் அவரவர் தர்மங்களை ஸ்தாபனை செய்கின்றனர். சத்யுகத்தில் லட்சுமி-நாராயணர் ராஜ்யம் இருந்தது இல்லையா? அது அவர்களின் பிராப்தி அதுவும் நம்பர்வார். அவர்கள் அந்த பிராப்தியை எப்படி அடைந்தனர்? இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? பாபா சொல்கிறார், நான் கல்ப-கல்பமாக கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன். இதுபோன்ற அநேகக் கல்பங்களின் சங்கமங்கள் கழிந்துபோய் விட்டன, இனியும் போய்க்கொண்டே இருக்கும். அதற்கு எந்த ஒரு முடிவும் கிடையாது. புத்தியும் சொல்கிறது, பதீதபாவன் பாபா சங்கமயுகத்தில் தான் வருவார். அப்போது பதீத் ராஜ்யத்தை வினாசம் செய்வித்து பாவன ராஜ்யத்தின் ஸ்தாபனை செய்ய வேண்டிய சமயமாக இருக்கும். இந்த சங்கமயுகத்திற்குத் தான் மகிமை. சத்யுக திரேதாவின் சங்கமத்தில் எதுவும் நடைபெறுவதில்லை. அதுவோ வெறுமனே ராஜ்யத்தின் மாற்றம் ஏற்படுகின்றது. லட்சுமி-நாராயணரின் ராஜ்யம் மாறி இராம்-சீதாவின் ராஜ்யம் ஏற்படும். இங்கோ எவ்வளவு தொந்தரவுகள் நடக்கின்றன! பாபா சொல்கிறார், இப்போது இந்தப் பதீத் உலகம் முழுவதும் அழிந்துவிடப் போகின்றது. அனைவரும் சென்றாக வேண்டும். பாபா சொல்கிறார், நான் அனைவருக்கும் வழிகாட்டி ஆகிறேன். துக்கத்திலிருந்து விடுவித்து சதா காலத்துக்குமாக சுக, சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்கிறேன். நீங்கள் அறிவீர்கள், நாம் சுகதாம் செல்வோம். மற்ற அனைவரும் சாந்திதாம் செல்வார்கள். இச்சமயம் மனிதர்கள் சொல்லவும் செய்கிறார்கள், மனதுக்கு சாந்தி எப்படிக் கிடைக்கும் என்று. சுகம் எப்படிக் கிடைக்கும் என்று ஒருபோதும் கேட்கவே மாட்டார்கள். சாந்தி வேண்டுமென்று தான் சொல்கிறார்கள். அனைவரும் சாந்தியில் தான் போகப் போகிறவர்கள். பிறகு தத்தமது தர்மங்களில் வருவார்கள். தர்மத்தின் விருத்தியோ ஏற்பட்டேயாக வேண்டும். அரைக்கல்பம் சூரியவம்ச, சந்திரவம்ச இராஜாங்கம்.. பிறகு மற்ற தர்மங்கள் வருகின்றன. இப்போது ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தைச் செர்ந்தவர்கள் யாரும் கிடையாது. தர்மமே மறைந்து விடுகின்றது. மீண்டும் ஸ்தாபனை ஆகின்றது. கன்று இப்போது நடப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாபா இந்தக் கன்றை நடுகின்றார். அவர்கள் பிறகு இந்த மரங்கள் முதலியவற்றின் கன்றுகளை நடுகின்றனர். இந்தக் கன்று எவ்வளவு அற்புதமாக உள்ளது! இவர்களும் தங்களை தேவி-தேவதா தர்மத்தினர் எனச் சொல்ல மாட்டார்கள். பாபா புரிய வைக்கிறார், எப்போது இத்தகைய நிலைமை ஏற்படுகிறதோ, அப்போது நான் வருகிறேன். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு நான் அனைத்து சாஸ்திரங்களின் ரகசியத்தைச் சொல்லிப் புரிய வைக்கிறேன். இப்போது நீங்கள் தீர்மானியுங்கள்-யார் சரி என்பதை. இராவணன் தவறான வழிமுறை தருபவன். அதனால் நேர்மையற்றவன் எனப்படுகிறான். பாபா உண்மையானவர். உண்மையான பாபா உண்மையையே சொல்வார். உண்மையான கண்டத்திற்காக உண்மையான ஞானத்தைச் சொல்கிறார். மற்றபடி இந்த வேத-சாஸ்திரங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையவை. எவ்வளவு மனிதர்கள் படிக்கிறார்கள்! இலட்சக்கணக்கான கீதாப்பாடசாலைகள அல்லது வேத பாடசாலைகள் இருக்கும். பல பிறவிகளாகப் படித்தே வந்துள்ளனர். கடைசியில் ஏதேனும் நோக்கம் குறிக்கோள் இருக்க வேண்டும். பாடசாலைக்கு நோக்கம் குறிக்கோள் இருக்க வேண்டும். சரீர நிர்வாகத்திற்காகப் படிக்கின்றனர். நோக்கம் குறிக்கோள் உள்ளது. என்னென்ன படிக்கின்றனரோ, சாஸ்திரங்களைச் சொல்கின்றனரோ, அதனால் சரீர நிர்வாகம் நடைபெறுகின்றது. மற்றப்படி முக்தி-ஜீவன்முக்தி அடைகின்றனர் என்பது கிடையாது. மனிதர்கள் பக்தி செய்வது பகவானை அடைவதற்காக. பக்தி மார்க்கத்தில் சாட்சாத்காரங்களும் ஆகின்றன, அவ்வளவு தான். உடனே பகவானை அடைந்து விட்டோம் என்று இதிலேயே குஷியாகி! விடுகின்றனர். பகவானையோ அவர்கள் அறிந்து கொள்ளவே இல்லை. அனுமான், கணேஷ் அனைவருக்குள்ளும் பகவான் இருப்பதாக நினைக்கின்றனர். சர்வவியாபி என்பது புத்தியில் அமர்ந்துள்ளது இல்லையா? பாபா புரிய வைத்துள்ளார், யார் என்ன பாவனையோடு பக்தி செய்கிறார்களோ, அந்த பாவனையைப் பூர்த்தி செய்வதற்காக நான் சாட்சாத்காரம் செய்விக்கிறேன். அவர்கள் பகவானே கிடைத்து விட்டதாக நினைத்துக் குஷியடைந்து விடுகின்றனர். பக்த மாலையே தனி, மற்றும் ஞான மாலை தனி. இது ருத்ர மாலை எனச் சொல்லப் படுகின்றது. அது பக்த மாலை. யார் அதிகமாக ஞானத்தைப் பெற்றார்களோ, அவர்களுக்கு மாலை உள்ளது. மற்றும் அது அதிக பக்தி செய்பவர்களின் மாலை. பக்தியின் சம்ஸ்காரத்தைத் தான் எடுத்துச் செல்கின்றனர் என்றால் பிறகு பக்தியில் சென்று விடுகின்றனர். அந்த சம்ஸ்காரம் ஒரு பிறவி கூடவே செல்கின்றது. அடுத்த பிறவியிலும் கூட இருக்கும் என்பதில்லை. உங்களுக்கோ இந்த சம்ஸ்காரம் அவினாசியாக ஆகிவிடுகின்றது. இச்சமயம் எந்த சம்ஸ்காரங்கள் செல்கின்றனவோ, பிறகு சம்ஸ்காரங்களின் அனுசாரம் போய் ராஜா-ராணி ஆவார்கள். பிறகு சிறிது-சிறிதாகக் கலைகள் குறைந்து கொண்டே போகும். இப்போது நீங்கள் நடுவில் இருக்கிறீர்கள். புத்தி அங்கே ஈடுபட்டுள்ளது. நாம் அமர்ந்திருப்பது இங்கே என்றாலும் புத்தியோகம் அங்கே உள்ளது. ஆத்மாவுக்கு ஞானம் உள்ளது, அதாவது இப்போது நாம் சென்று கொண்டிருக்கிறோம். பாபாவைத் தான் நினைவு செய்கிறோம். நாம் ஆத்மா அப்பால் சென்று கொண்டிருக்கிறோம். இந்த சரீரத்தை இந்தப் பக்கமே விட்டு விடுவோம். இந்தக் கரையில் பழைய சரீரம், அந்தக் கரையில் அழகான சரீரம். இது ஹுசேனின் ரதமாகும். ஹுசேன் அகாலமூரத் (அழியாதவர்) எனச் சொல்லப் படுபவரின் ஆசனம் இது. ஆத்மாவோ அகால் (அழியாதது). ஆத்மா தங்கம், வெள்ளியில் வரவேண்டும். ஸ்டேஜஸ் (நிலைகள்) உள்ளன இல்லையா? பாபாவோ உயர்ந்தவரிலும் உயர்ந்தவர். அவர் பல்வேறு நிலைகளில் வருவதில்லை. ஆத்மாக்கள் ஸ்டேஜில் வரும். கோல்டன் ஏஜில் உள்ளவர் பிறகு சில்வரில் வரவேண்டும். இப்போது உங்களை அயர்ன் ஏஜில் (இரும்பு யுகம்) இருந்து கோல்டன் ஏஜிக்கு (தங்க யுகம்) அழைத்துச் செல்கின்றேன். தம்முடைய அறிமுகத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அவரை ஹெவன்லி காட்ஃபாதர் எனச் சொல்கின்றனர். அவருடையது அலௌகிக் தெய்வீக ஜென்மம். தாமே சொல்கிறார், நான் எப்படிப் பிரவேசமாகிறேன் என்று. எப்போது சமயம் முடிவடைகின்றதோ, அப்போது பகவானுக்கு சங்கல்பம் எழுகின்றது-நாம் போய்ப் படைப்பைப் படைக்க வேண்டும். டிராமாவில் அவருக்கு பாகம் உள்ளது. பரமபிதா பரமாத்மாவும் கூட டிராமாவுக்கு அடிமை. என்னுடைய பாகமே பக்தியின் பலனை அளிப்பது. பரமபிதா பரமாத்மா சுகம் கொடுப்பவர் என்று தான் சொல்லப்படுகின்றார். நல்ல காரியம் செய்தால் அல்பகாலத்துக்கு அதன் பிரதிபலன் கிடைக்கின்றது. நீங்கள் அனைவரைக் காட்டிலும் மிக நல்ல காரியம் செய்கிறீர்கள். அனைவர்க்கும் தந்தையின் அறிமுகம் கொடுக்கிறீர்கள். இப்போது பாருங்கள், ராக்கியின் பண்டிகை வருகின்றது என்றால் இதைப் பற்றியும் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். ராக்கி என்பது பதீதர்கள் பாவனமாவதற்கான, அபவித்திரமானவர்களைப் பவித்திரமாக ஆக்குகின்ற ரட்சா பந்தன். நீங்கள் முதலில் பதீதபாவன் பாபாவின் அறிமுகம் கொடுக்க வேண்டும். எதுவரை அவர் வரவில்லையோ, அதுவரை மனிதர்கள் பாவனமாக முடியாது. பாபா தாம் வந்து பவித்திரமாவதற்கான உறுதிமொழி எடுக்க வைக்கிறார். நிச்சயமாக எப்போதோ நடந்திருக்கிறது, அது வழக்கமாக நடந்து வந்துள்ளது. இப்போது நடைமுறையில் பாருங்கள், பிரம்மாகுமார் குமாரிகள் ராக்கி கட்டிக்கொண்டு பவித்திரமாக இருக்கின்றனர். பூணூல், கங்கணம் இதெல்லாம் பவித்திரதாவின் அடையாளங்கள். பதீதபாவன் பாபா சொல்கிறார், காமம் என்பது மகா சத்ரு. இப்போது என்னிடம் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் பவித்திரமாக இருப்போம் என்று. மற்றப்படி கங்கணம் முதலிய எதுவும் கட்ட வேண்டியதில்லை. பாபா சொல்கிறார், உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள், எனக்கு 5 விகாரங்களை தானமாகக் கொடுங்கள். இந்த ராக்கி கட்டுவது 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட நடந்தது. பதீதபாவன் பாபா வந்திருந்தார். வந்து ராக்கி கட்டியிருந்தார்- பவித்திரமாகுங்கள் என்று. ஏனென்றால் பவித்திர உலகத்தின் ஸ்தாபனை ஆகியிருந்தது. இப்போதோ நரகமாகும். நான் மீண்டும் வந்துள்ளேன். இப்போது ஸ்ரீமத்படி உறுதிமொழி எடுங்கள், பாபாவை நினைவு செய்யுங்கள். அப்போது நீங்கள் பாவனமாகி விடுவீர்கள். இப்போது பதீத் ஆகாதீர்கள். நீங்களும் கூட சொல்லுங்கள், பிராமணர்கள் நாங்கள் வந்துள்ளோம், உறுதிமொழி எடுக்க வைப்பதற்காக. நாம் உறுதிமொழி எடுக்கிறோம், நாங்கள் ஒருபோதும் பதீத் ஆகமாட்டோம். ஆனால் இப்படியும் எழுதிவிட்டுப் பிறகு அநேகர் முடிந்துபோய் விட்டனர். பதிதபாவன் பாபா வருவதே சங்கமயுகத்தில். பிரம்மா மூலமாக வந்து குழந்தைகளுக்குக் கட்டளையிடுகிறார், பவித்திரமாகுங்கள். இங்கே அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். நீங்களும் தீர்மானியுங்கள், அப்போது தான் பாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கும். நீங்கள் பவித்திர பிராமணரானால் பிறகு தேவதை ஆகிவிடுவீர்கள். பிராமணர்களாகிய நாம் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆல்பத்தையும் காட்ட வேண்டும்-இந்த ராக்கி கட்டுகின்ற வழக்கம் எப்போது ஆரம்பமாயிற்று? இப்போது சங்கமயுகத்தில் இந்தப் பவித்திரதாவின் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பிறகு 21 பிறவிகள் வரை பவித்திரமாக இருப்பீர்கள். இப்போது பாபா சொல்கிறார், என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். இதுபோன்ற பாயின்ட்டுகளைத் தயார் செய்து முதலிலேயே சொற்பொழிவைத் தயார் செய்ய வேண்டும். இந்த வழக்கம் எப்போதிருந்து ஆரம்பமாயிற்று? 5000 ஆண்டுகளின் விஷயமாகும். கிருஷ்ண ஜென்மாஷ்டமியும் 5000 ஆண்டுகளின் விஷயம். கிருஷ்ணருக்குச் சரித்திரமோ எதுவும் கிடையாது. அவரோ சிறு குழந்தை. சரித்திரமோ (வழிமுறை) ஒரு தந்தையினுடையது. அவர் தாம் தமது சாமர்த்தியத்தால் குழந்தைகளை சோழியிலிருந்து வைரம் போல் ஆக்குகின்றார். மகிமை அனைத்தும் அந்த ஒருவருக்கே! வேறு யாருடைய பிறந்த நாளையும் கொண்டாடுவது எந்தப் பயனும் தராது. ஒரு பரமபிதா பரமாத்மாவின் பிறந்த நாளைக் கொண்டாடினால் போதும். மனிதர்களோ எதையும் அறிந்து கொள்ளவில்லை. நல்லது.



    இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!



    தாரணைக்கான முக்கிய சாரம் :

    1) வாரிசாக ஆவதற்கு தன்னுடைய கணக்கு-வழக்குகள். கர்ம பந்தனங்கள் அனைத்தையும் முடித்துவிட வேண்டும். பாபாவிடமிருந்து கிடைத்துள்ள அறிவுரைப்படி மட்டுமே நடக்க வேண்டும்.



    2) அனைவருக்கும் பாபாவின் சத்தியமான அறிமுகத்தை கொடுத்துப் பதீத்ததிலிருந்து பாவனமாக்குவதற்கான உயர்ந்த காரியத்தைச் செய்ய வேண்டும். பவித்திரதாவின் ராக்கியைக் கட்டிக்கொண்டு பவித்திர உலகத்தின் எஜமான் தன்மையின் ஆஸ்தி பெற வேண்டும்.



    வரதானம் :

    ஞானத்தை ஒளி மற்றும் சக்தியின் (லைட்-மைட்) ரூபத்தில், சரியான சமயத்தில் காரியத்தில் ஈடுபடுத்தக் கூடிய ஞானம் நிறைந்த ஆத்மா ஆகுக.



    ஞானம் என்றால் நாலெட்ஜ். (ஆன்மீக அறிவு) நாலெட்ஜ் தான் ஒளி மற்றும் சக்தி எனச் சொல்லப்படுகின்றது. எப்போது லைட், அதாவது ஒளி உள்ளதோ, அதாவது இது தவறு, இது சரி, இது இருள், இது பிரகாசம், இது வீணானது, இது சக்திசாலியானது என அறிய முடியும் ஆகவே லைட் மற்றும் மைட் மூலம் நிறைவான (சம்பன்ன) ஆத்மா ஒரு போதும் இருளில் இருக்க முடியாது. இருள் எனப் புரிந்து கொண்டும் இருளில் இருந்தால் அவரை ஞானி அல்லது புத்திசாலி எனச் சொல்ல மாட்டார்கள். ஞானம் நிறைந்த ஆத்மா ஒரு போதும் தவறான கர்மங்களின் அல்லது சுபாவ சம்ஸ்காரங்களின் வசமாக ஆக முடியாது.



    சுலோகன் :

    ஹீரோ பார்ட் (முக்கிய பாத்திரமாக) நடிப்பதற்காக ஜீரோ (புள்ளியாகிய) பாபாவுடன் இணைந்தவராக இருங்கள்.



    ***OM SHANTI***