BK Murli 20 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 20 July 2017 Tamil

    20.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே, நீங்கள் படிப்பில் ஒருபோதும் களைத்துப்போகக்கூடாது, களைப்பற்றவராக ஆக வேண்டும். களைப்பற்றவர் ஆவது என்றால் கர்மாதீத் நிலை அடைவதாகும்.



    கேள்வி-

    குழந்தைகளாகிய நீங்கள் இப்போது எந்த உறுதிமொழி எடுத்துள்ளீர்கள் மற்றும் ஏன்?



    பதில்-

    யாருக்கும் துக்கம் கொடுக்க மாட்டோம் அனைவருக்கும் சுகத்தின் வழி சொல்வோம் என்று நீங்கள் உறுதிமொழி செய்துள்ளீர்கள்.



    கேள்வி-

    எந்தக் குழந்தைகளுக்கு யக்ஞத்தி-ருந்து பாலனை நடக்கிறது?



    பதில்-

    யார் தன்னை டிரஸ்டியாக புரிந்து கொள்கிறார்களோ அதாவது முழு மனதுடன் அனைத்தையும் சமர்ப்பணம் செய்கிறார்களோ அவர்களின் பாலனை யக்ஞத்தி-ருந்து நடக்கிறது, அவர்கள் குடும்ப விவகாரத்திலும் இருக்கிறார்கள், தொழிலும் செய்கிறார்கள், ஆனால் டிரஸ்டியாக இருக்கிறார்கள். அதாவது சிவபாபாவின் பண்டாராவி-ருந்து சாப்பிடுகிறார்கள்.



    பாடல்-

    நீங்கள் தான் தாயும் தந்தையும்,,,,,,,,,,,,,,,



    ஓம்சாந்தி.

    குழந்தைகளுக்கு தந்தை கிடைத்து விட்டார். மேலும் இப்போது அனுபவத்துடன் சொல்கிறார்கள் முள்ளி-ருந்து மலராக வேறு யாரும் மாற்ற முடியாது. பாரதம் தெய்வீக மலர்களின் தேவதா உலகமாக இருந்தது. இப்போது முட்களின் காடாக உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது என்ன கேட்கிறீர்களோ அவற்றை மகா வாக்கியமாக கேட்கின்றீர்கள். அதைக் கூறக் கூடியவர் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை அல்லவா? அவருடைய ஒவ்வொரு விஷயமும் (மகான்) உயர்ந்ததாகும். உயர்ந்த சுகத்தின் கடலாக இருக்கிறார். உயர்ந்த ஞானக் கடலாக இருக்கிறார். உயர்ந்த அமைதிக் கடலாக இருக்கிறார். குழந்தைகள் நன்றாகப் புரிந்து கொண்டீர்கள், முன்பு ஒவ்வொரு விஷயத்திலும் முள்ளாக இருந்தீர்கள். ஒவ்வொரு கர்மேந்திரியம் மூலமாக ஒருவருக்கொருவர் துக்கம் கொடுத்து வந்தீர்கள். இப்போது நாம் கர்மேந்திரியங்கள் முலமாக யாருக்கும் துக்கம் கொடுக்காமல் இருப்பதற்கான உறுதிமொழி செய்கின்றோம். எப்படி பாபா துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவராக இருக்கின்றாரோ அப்படியே குழந்தைகளும் ஆக வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது, ஒவ்வொருவருக்கும் சுக தாமத்தின் வழி தான் சொல்ல வேண்டும். இந்த அனைத்து பிரம்மா குமார் குமாரிகளும் யாருடைய வழிப்படி நடக்கிறார்கள்? ஸ்ரீமத்படி நடக்கிறார்கள். பிரம்மாவின் வழி என்று பாடப்பட்டுள்ளது. குரு பிரம்மா, குரு விஷ்ணு என்று அனைவரும் சொல்- விடுகிறார்கள். ஆனால் குருவை பிறகு பகவான் என்று சொல்ல முடியாது. அவர்களை தேவதை என்று சொல்லப்படுகிறது. அவர்களை தாய் தந்தை என்றும் சொல்ல முடியாது. பாபா புரிய வைத்திருக்கிறார் - லௌகீக தாய் தந்தையிடமிருந்து அல்ப கால சுகத்திற்கான ஆஸ்தி கிடைக்கிறது. அது கிடைத்தாலும் பரலௌகீக தாய் தந்தையை நினைவு செய்கிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரரை நினைவு செய்ய மாட்டார்கள். அவர்களை தாய் தந்தையர் என்று சொல்ல மாட்டார்கள். அவர்கள் சூட்சும வதனவாசிகள் ஆவர். அவர்களை பிரம்மா தேவதா நமஹ, விஷ்ணு தேவதா நமஹ என்று சொல்கிறார்கள். இத்தனை குழந்தைகளும் யாரையும் தாய் தந்தையர் என்று சொல்ல முடியாது. சொர்க்கத்தில் லட்சுமி நாராயணரை கூட அனைவரும் தாய் தந்தை என்று சொல்ல முடியாது. நீங்கள் தான் தாயும் தந்தையும் நாங்கள் குழந்தைகள் என்று பரலௌகீக தாய் தந்தைக்காக பாடுகிறார்கள். ஆசீர்வாதம், கிருபை நிறைய கேட்கிறார்கள். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள் - எல்லைக்கப்பாற்பட்ட தந்தை எப்படி ஆசீர்வாதம் அல்லது கிருபை காட்டுகிறார். ஆயுஸ்வான் பவ! சிரஞ்சீவி பவ ! என்று சொல்வதில்லை. தந்தையோ வந்து சகஜ இராஜயோகம் மற்றும் ஞானத்தின் படிப்பினைக் கொடுக்கிறார். பக்தி மார்க்கத்தில் ஒருவருக்கொருவர் ஆசீர்வாதம் அல்லது கிருபை நிறைய கொடுக்கிறார்கள். நல்ல பார்வை பார்ப்பது, இரக்க பார்வை கொள்வது. இவை பரம்பிதா பரமாத்மாவைத் தவிர யாராலும் செய்ய முடியாது. பார்வை பட்டதும் தேவதை ஆகி விடுவார்கள் என்பது கிடையாது. இதுவோ பாடசாலை ஆகும். பாடசாலையில் படிக்க வேண்டும்.



    அதே நிராகார தந்தை இந்த சாகார உட-ல் வந்திருக்கிறார் என்று நீங்கள் இப்போது தெரிந்திருக்கிறீர்கள். மம்மா, பாபா, தாதா (தாய், தந்தை, மூத்த சகோதரர்) என்று இருப்பது குடும்பம் தான் அல்லவா, இது ஈஸ்வர்ய குடும்பம் ஆகும். இவ்வளவு பெரிய பாடசாலை நகரத்தி-ருந்து கொஞ்சம் தூரமாக இருக்க வேண்டும். இங்கேயும் பாருங்கள் நகரத்தி-ருந்து எவ்வளவு தூரமாக இருக்கிறது. எவ்வளவு நிசப்தம் பரவி இருக்கிறது? ஏனெனில், நமக்கு சாந்தி தான் வேண்டும். நாம் சாந்தி தாமம் செல்ல வேண்டும். சாந்திதாம் என்று எது சொல்லப்படுகிறது? இதை இப்போது நீங்கள் தெரிந்து கொள்கிறீர்கள். ஆத்மா சாந்த சொரூபமாகவே இருக்கிறது. மனதிற்கு சாந்தி வேண்டும் என்று சொல்ல முடியாது. ஆத்மாவில் தான் மனம் புத்தி இருக்கிறது அல்லவா, ஆத்மாவும் உடலும் தனித்தனிப்பட்டது. நாக்கு, காது போன்றவைக்கு சாந்தி தேவையில்லை. சாந்தி ஆத்மாவிற்குத் தான் தேவை. ஆத்மாவில் தான் முழு பாகமும் நிரம்பி இருக்கிறது. எப்போது உடல் கிடைக்கிறதோ அப்போது நடிப்பு வெளிப்படுகிறது. ஆத்மாவில் தான் முழு விளையாட்டும் நிரம்பி இருக்கிறது. இவ்வளவு சிறிய ஆத்மாவில் எவ்வளவு பாகம் இருக்கிறது. உடல் கிடைப்பதன் முலமாக அது நடிப்பை நடிக்கும். இதைக் கூட இப்போது நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். தேவி தேவதா தர்மத்தின் ஆத்மாவில் தான் 84 பிறவிகளின் பாகம் இருக்கிறது. இதை இப்போது நீங்கள் தெரிந்து கொள்கிறீர்கள். சத்யுகத்தில் தெரிந்து கொள்வதில்லை. வைரத்திற்குச் சமமான மதிப்பு மிக்க பிறவி என்று இந்த நேரத்திற்குத் தான் பாடப்பட்டுள்ளது. ஏனெனில் இப்போது நீங்கள் ஈஸ்வரிய குழந்தை ஆகியுள்ளீர்கள். மம்மா, பாபா என்று சொல்கின்றீர்கள் அல்லவா? நீங்கள் தான் தாயும் தந்தையும் என்று அஞ்ஞான காலத்தில் பாடுகிறார்கள். இது யாருடைய மகிமை என்பதைக் கூட தெரிந்து கொள்வதில்லை. நடைமுறையில் நீங்கள் அளவற்ற சுகத்தின் ஆஸ்தியை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது புரிந்து கொள்கிறீர்கள் - பல பிறவிகளாக சாஸ்திரங்களைப் படித்தும் கீழே தான் இறங்கி வந்தோம். இது கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. பக்தி செய்யத் தான் வேண்டும், பக்தி மாறாது, ஞானமும் மாறாது. பக்தியின் நிறைய பழக்க வழக்கங்கள் இருக்கிறது. நிறைய வேத சாஸ்திரங்கள் இருக்கிறது. பட்டியல் (-ஸ்ட்) போட்டால் நீண்ட பட்டியல் ஆகிவிடும், முழு உலகமும் என்னென்ன செய்து கொண்டிருக்கிறது. எத்தனை மேளா, திருவிழா போன்றவற்றை செய்கிறார்கள். இப்போது பாபா சொல்கிறார்- குழந்தைகளே, அரை கல்பமாக பக்தி செய்து செய்து களைத்துப் போய்விட்டீர்கள். இந்த படிப்பில் களைத்து போவதற்கான விஷயமே இல்லை. இதில் மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஏனெனில் இங்கே வருமானம் இருக்கிறது. வருமானத்தில் ஒருபோதும் கொட்டாவி போன்றவை வரக்கூடாது. தாரணை சரியாக இல்லை, ஞானத்தின் மதிப்பு தெரிவதில்லை என்றால் சோம்பேறித்தனம் வருகிறது. தந்தையின் நினைவில் அமர்வதன் முலம் மிகுந்த வருமானம் ஏற்படுகிறது. இதில் களைத்துப் போகக்கூடாது. நீங்கள் கண்டிப்பாக களைப்பற்றவராக ஆக வேண்டும் என்று புத்தி சொல்கிறது. முயற்சி செய்து கொண்டே களைப்பற்றவராக அதாவது கர்மாதீத் நிலையை அடைய வேண்டும். இப்போது முயற்சி செய்ய வேண்டும். மாலை எவ்வளவு சிறியதாக இருக்கிறது. நிறைய பிரஜைகள் உருவாகிறார்கள். பாபா முயற்சி செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார். தாய் தந்தையைப் பின்பற்றுங்கள் என்று சொல்கிறார். நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள் அல்லவா? பிரஜா பிதா பிரம்மாவின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் அல்லவா? சிவ பாபாவின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் என்று சொல்ல முடியாது. சிவ பாபாவின் குழந்தைகள் என்றால் ஆத்மாக்கள் ஆகும். அஞ்ஞான காலத்தில் கூட சிவபாபா என்று சொல்-க் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் சிவபாபா யார்? அவருடைய பாகம் என்ன? இதை யாரும் தெரிந்து கொள்வதில்லை. சிவ பாபா சொல்கிறார் - என்னுடைய பாகமும் நாடகத்தில் பதிவாகியுள்ளது. நான் எதை விரும்புகிறேனோ அதைச் செய்வேன் என்பது கிடையாது. எனக்கும் கூட என்ன பாகம் உள்ளதோ அது தான் நடக்கும் அல்லவா? இதில் கிருபை அல்லது ஆசீர்வாதம் கேட்பதற்கான விஷயமே கிடையாது. ஞானம் யோகத்தின் மூலமாக குழந்தைகளை எப்படி பாலனை செய்வது என்று தந்தை தெரிந்திருக்கிறார். உங்களுடையது ஞானம் மற்றும் யோகத்தின் பலன் ஆகும். என்னை பாபா என்று சொல்கிறார்கள். ஏனெனில் படைப்பவராக இருக்கிறேன் அல்லவா? ஆக கண்டிப்பாக பாபா என்று தான் சொல்வார்கள். லௌகீக தாய் தந்தை இருந்தாலும் பரலௌகீக தந்தையை நினைவு செய்கிறார்கள். பரலௌகீக தாய் தந்தை இப்படி இருக்கிறார்கள், நமக்கு இராஜயோகம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இப்போது நீங்கள் தெரிந்து கொள்கிறீர்கள். உடல் நிர்வாகத்தை அனைவரும் செய்யத் தான் வேண்டும். பத்தியத்திற்காக இது புரிய வைக்கப்படுகிறது. தூய்மையற்ற எதையும் சாப்பிடக்கூடாது. மற்றபடி வீட்டில் இருக்கத்தான் வேண்டும். சமர்ப்பணம் ஆகி விட்டீர்கள் அல்லவா? பாபா இவையனைத்தும் உங்களுடையது, அனைத்தும் பாபாவுடையது என்று புரிந்து நடக்கிறார்கள் என்றால் அவர்கள் எதைச் சாப்பிடுகிறார்களோ அது யக்ஞத்தினுடையதாகும். நாம் டிரஸ்டி ஆவோம். நாம் யக்ஞத்தி-ருந்து சாப்பிடுகிறோம். அது சதோகுணமாக தான் இருக்கும். சமர்ப்பணம் ஆகவில்லை என்றால் தன்னை டிரஸ்டி என்று புரிந்து கொள்வதில்லை. ஆக அது யக்ஞத்தினுடையது என்று ஆகாது. முத-ல் தன்னை டிரஸ்டி என்று புரிந்து கொள்ள வேண்டும். ஈஸ்வரன் தான் அனைவருக்கும் கொடுக்கக்கூடியவர் என்று மனிதர்கள் சொல்லவும் செய்கிறார்கள். தேவதைகளின் பூஜை செய்கிறார்கள், அவர்கள் மூலமாகக் கிடைப்பதாகப் புரிந்து கொள்கிறார்கள். குருவிடமிருந்து கிடைக்கிறது என்றும் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் கொடுக்கக்கூடியவர் ஒரேயொரு தந்தையே ஆவார். அனைவருக்கும் கொடுக்கக்கூடியவர் ஒருவர் தான். பக்தி மார்க்கத்தில் ஒவ்வொருவரும் ஈஸ்வரனிடம் தான் காப்பீடு செய்கிறார்கள். அடுத்த பிறவியில் கிடைக்கும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். நீங்கள் கூட அனைத்தையும் பாபாவிடம் காப்பீடு செய்கிறீர்கள். இந்த படிப்பு அடுத்த பிறவிக்காக கிடைக்கிறது. நல்ல கர்மங்களின் பலன் கிடைக்கிறது. ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்கிறார்கள். ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் என்றால் காப்பீடு செய்கிறார்கள். அது பக்தி மறைமுகமானது மற்றும் இது நேரடியானது ஆகும். அவர்கள் பரம்பிதா பரமாத்மாவை தெரிந்திருக்கவில்லை என்பதால் அனைத்தையும் அர்ப்பணம் செய்ய முடிவதில்லை. இங்கேயோ அனைத்தையும் அர்ப்பணம் செய்கிறார்கள். தன்னை டிரஸ்டி என்று புரிந்து கொள்ளுங்கள் என்று பாபா சொல்கிறார். நீங்கள் எதைச் சாப்பிடுகிறீர்களோ அதை சிவ பாபாவின் யக்ஞத்தி-ருந்து சாப்பிடுகிறோம் என்று புரிந்து கொள்ளுங்கள். பராமரிப்பும் செய்ய வேண்டியிருக்கிறது. தமோகுணமான உணவு எதையும் படைக்க முடியாது. கோவி-ல் கூட சுத்தமான உணவு படைக்கப் படுகிறது. அவர்கள் வைஷ்ணவர்களாக இருக்கிறார்கள். அனைவரும் விகாரிகளே ஆவர். விகாரமற்ற உயர்ந்த உடல் இங்கே எங்கிருந்து வரும்? லட்சுமி நாராயணருடையது உயர்ந்த உடல் அல்லவா? கீழானவர் என்று விகாரியை சொல்லப்படுகிறது. யாரை அரைக்கல்பமாக அழைத்தோமோ அந்த தாய் தந்தையின் முன்னால் இப்போது நாம் அமர்ந்திருக்கிறோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அரைக்கல்பமாக பக்தி செய்தவர்கள் தான் இங்கே வருவார்கள். மிகத் தீவிரமாக பக்தி செய்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்களோ தீவிரமாக ஞானத்தைப் பெற வேண்டும். கொஞ்சத்தில் திருப்தியாகி விடக்கூடாது. புரிய வைப்பதற்காக எவ்வளவு கருத்துக்கள் சொல்லப்படுகிறது. வயதானவர்கள் அவ்வளவாகப் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு பாபா சொல்கிறார் - பரலௌகீக தந்தையினுடைய தந்தையின் அறிமுகம் கிடைத்து விட்ட பிறகு அந்த தந்தையை நினைவு செய்யுங்கள் என்பதை மட்டும் நீங்கள் புரிய வையுங்கள். நீங்கள் பக்தர்கள், அவர் பகவான் ஆவார். நீங்கள் என்னை நினைவு செய்தால் என்னுடைய முக்தி தாமத்திற்கு வந்து விடுவீர்கள் என்பது பகவானுடைய மகாவாக்கியம். என்னுடைய வைகுண்டத்திற்கு வந்து விடுவீர்கள் என்று கிருஷ்ணர் சொல்வார். முத-ல் நிர்வாண தாமத்திற்குச் செல்ல வேண்டும். ஆக கண்டிப்பாக நிராகார தந்தையை நினைவு செய்ய வேண்டும். கிருஷ்ணர் கூட உடலை உடையவராக ஆகிவிடுகிறார், அவரை நினைவு செய்வது என்பது 5 தத்துவங்களால் ஆன அழியக்கூடிய உடலை நினைவு செய்வதாகும். இது பக்தி மார்க்கம் ஆகிவிட்டது. பக்தி எவ்வளவு விஸ்தாரமானது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்போது தெரிந்து கொண்டீர்கள். இந்த ஞானத்தின் மூலம் ஒரு வினாடியில் சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைத்து விடுகிறது. பகலுக்குப் பின் இரவு இரவுக்குப் பின் பகலாகும். பக்தி என்பது இரவாகும். ஏமாற்றம் அடைகிறார்கள் அல்லவா? ஆகையினால் தான் இதற்கு காரிருள் இரவு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பிரம்மாவின் பகல் மற்றும் பிரம்மாவின் இரவு என்பதையும் தெரிந்திருக்கிறார்கள். ஏன் விஷ்ணுவுக்கு சொல்வதில்லை. இந்த ஞானம் பிராமணர்களாகிய உங்களுக்குத் தான் இப்போது கிடைக்கிறது, ஆகையால் தான் பிரம்மாவிற்காக பாடப்பட்டுள்ளது. பிரம்மா தான் பகல் மற்றும் இரவைத் தெரிந்திருக்கிறார். இப்போது இரவு முடிந்துவிட்டது, விடிய வேண்டும் என்பதை பிரம்மா தெரிந்திருக்கிறார். பிராமணர்களின் பகல் மற்றும் இரவாகும். இது புரிந்து கொள்ள வேண்டிய விசயமல்லவா! நம்முடைய இரவு மற்றும் பகல் என்று விஷ்ணு சொல்ல மாட்டார். இந்த ஞானத்தின் மூலம் தான் நாம் இவ்வளவு உயர்ந்த பலனை அடைகிறோம், பிறகு இந்த ஞானம் மறைந்து விடுகிறது, என்று நீங்கள் சொல்லலாம். நாடகத்தில் இந்த சாஸ்திரம் போன்றவையும் பதிவாகியுள்ளது. பிறகு அதே சாஸ்திரங்கள் உருவாகும், இதைத் தான் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகிறது என்று சொல்கிறார்கள். பூமியி-ருந்து சாஸ்திரம் வெளிவரும் என்பது கிடையாது. பாபா வந்து சத்தியத்தைக் கூறுகின்றார். மீண்டும் இந்த அதே பக்தி மார்க்கத்தின் விசயங்கள் வரும். உயர்ந்ததிலும் உயர்ந்த சிவபாபா பரந்தாமத்தில் இருக்கின்றார் என்பதை வயதான தாய்மார்களுக்கு நினைவூட்டுங்கள். ஆத்மாக்கள் எங்கே இருக்கின்றனவோ அது தான் உயர்ந்த இடம் மூலவதனமாகும். பிறகு பிரம்மா விஷ்ணு சங்கரர் சூட்சும வதனத்தில் இருக்கிறார்கள். பிறகு ஸ்தூல வதனத்தில் வந்தால் முத-ல் லட்சுமி நாராயணருடைய இராஜ்யம் ஆகும், அது புதிய படைப்பு. அதை பாபா படைத்துக் கொண்டிருக்கிறார், தூய்மையற்றவர்களை தூய்மையாக்கிக் கொண்டிருக்கிறார். பதீத பாவனரே, வாருங்கள்! என்று அழைக்கிறார்கள். கண்டிப்பாக முழு உலகமும் தூய்மையற்றவர்களால் நிரம்பி உள்ளது, அவர்களை வந்து தூய்மையாக்குகிறார். யார் உழைக்கிறார்களோ அவர்கள் தான் தூய்மையான உலகத்திற்கு வருவார்கள். முக்கியமான விசயம் தங்களுடைய தந்தை மற்றும் வீட்டை நினைவு செய்வதாகும். ஹே ஆத்மாக்களே, இப்போது வீடு செல்ல வேண்டும் என்பதையே அனைவருக்கும் சொல்லுங்கள், ஆத்மாக்களாகிய உங்களை அழைத்துச் செல்ல வேண்டும். அனைவருடைய உடலும் அழிந்துவிடும். ஆத்மா என்ற சம்பந்தத்தில் அனைவரும் சகோதர சகோதரர்கள். சகோதரர்களாக இருக்கிறோம். பிறகு உட-ன் சம்பந்தத்தில் சகோதர சகோதரிகள் ஆவோம். மிகவும் இனிமையிலும் இனிமையான விசயங்களாக உள்ளதல்லவா!



    நீங்கள் இப்போது விடுதியில் இருக்கின்றீர்கள். நீங்கள் இங்கே வசிக்கின்றீர்கள். வெளியில் இருக்கும் மோசமான சேர்க்கை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக விடுதியில் தங்க வைக்கப்படுகிறது. இங்கே உங்களுக்கு விகாரமற்றவர்களின் சேர்க்கை உள்ளது. நல்லது. இன்றைக்கு பிரம்மாபோஜனம் ஆகும். சிவபாபா சாப்பிடுவதில்லை. அவர் அபோக்தா (எதையும் உண்ணாதவர்) ஆவார். தேவதைகளுக்கு பிராமணர்களின் போஜனம் நன்றாக உள்ளது, ஏனெனில் இந்த பிராமணர்களின் போஜனத்தின் மூலம் தான் தேவதை ஆகிறார்கள். எனவே பிராமணர்களின் போஜனம் எவ்வளவு மகத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதனுடைய தாக்கம் அதிகமாக உள்ளது. உங்களுக்கு பக்கா யோகிகளின் போஜனம் கிடைத்தால் புத்தி மிகவும் நன்றாகிவிடும். முழு நாளும் சிவபாபாவின் நினைவில் இருந்து கொண்டு சுயதரிசன சக்கரத்தைச் சுற்றிக்கொண்டு போஜனம் சமைக்க யாராவது ஒருவர் வேண்டும், அப்படிப்பட்ட யோகி வேண்டும். நிறைய பேர் தூய்மையாக இருக்கிறார்கள். விதவைத்தாய்மார்கள் அல்லது குமாரிகள் கூட தூய்மையாக இருக்கிறார்கள். ஆனால் யோகியாக இருக்க வேண்டும். யோகியினுடைய போஜனம் கிடைத்தால் உங்களுக்கு அதிக முன்னேற்றம் ஏற்படும். அப்படி 5 முதல் 7 பேர் வேண்டும். இன்னும் போகப்போக உங்கள் நிலை அப்படி ஆகிவிடும். யோகத்தில் நிறைய உதவி கிடைக்கும். யோகத்தில் இருந்துகொண்டு போஜனம் சமைக்கக்கூடிய குழந்தைகள் வேண்டும். நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல்போய் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாராம்:

    1. தாய் தந்தையை பின்பற்றிக் கொண்டே ஞான யோகத்தின் மூலம் அனைவரையும் வளர்க்க வேண்டும். அந்த வளர்ப்பில் இருக்க வேண்டும். ஞானம் யோகத்தில் தீவிரமாகச் செல்ல வேண்டும்.



    2. தூய்மையான மற்றும் யோகியின் கைகளினால் உணவு உண்ண வேண்டும். புத்தியை சுத்தமாக்குவதற்காக உணவில் அதிக பத்தியம் வைக்க வேண்டும்.



    வரதானம்:

    சமர்ப்பண பாவனை மூலம் சேவை செய்து வெற்றி அடையக்கூடிய உண்மையான சேவாதாரி ஆகுக!



    யார் சமர்ப்பண பாவனை மூலம் சேவை செய்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான சேவாதாரி ஆவார். சேவையில் கொஞ்சம் கூட என்னுடையது என்ற எண்ணம் வரக்கூடாது. எங்கே என்னுடையது என்று வருகிறதோ அங்கே வெற்றி இருக்காது. இது என்னுடைய வேலை, என்னுடைய சிந்தனை, என்னுடைய கடமை என்று யாராவது நினைத்துக் கொள்கிறார்கள் - இந்த என்னுடையது வருவது என்பது பற்று உற்பத்தி ஆவதாகும். ஆனால் எங்கிருந்தாலும் நான் நிமித்தமாக இருக்கிறேன் என்ற நினைவு இருக்கட்டும், இது என்னுடைய வீடு அல்ல. மாறாக சேவை ஸ்தானம் எனும்போது சமர்ப்பண பாவனை மூலம் பணிவு மற்றும் பற்றற்றவர்களாகி வெற்றியை அடைந்து விடுவீர்கள்.



    சுலோகன்:

    எப்போதும் தங்களுடைய சுயமரியாதை (சுவமான்) என்ற இருக்கையில் இருந்தீர்கள் என்றால், அனைத்து சக்திகளும் கட்டளைகளை ஏற்றுக் கொண்டே இருக்கும்.



    ***OM SHANTI***