BK Murli 14 January 2018 Tamil
14.01.2018 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா''
ரிவைஸ் 19.04.1983 மதுபன்
''சங்கமயுகத்தின் பிரபு பலன் என்ற பழத்தை அருந்துவதினால்
அனைத்து பிராப்திகள் ஆகின்றன ''
இன்று பாப்தாதா தனது அனைத்து அன்பிற்குரிய குழந்தைகளுக்கு அன்பிற்கான பலனைக் கொடுப்பதற்காக, சந்திப்பு செய்வதற்காக, அன்பின் பிரத்யக்ஷ பலன், அன்பின் பாவனையின் சிரேஷ்ட பலனைக் கொடுப்பதற்காக குழந்தைகளின் சபையில் வந்திருக்கிறோம். பக்தியில் கூட அன்பு மற்றும் பாவனை பக்த ஆத்மாவின் ரூபத்தில் இருந்தது. அந்த மாதிரி பக்தன் ரூபத்தில் பக்தி இருந்தது. ஆனால் சக்தி இருக்கவில்லை. அன்பு இருந்தது, ஆனால் அறிமுகம் மற்றும் சம்மந்தம் உயர்ந்ததாக இருக்கவில்லை. பாவனை இருந்தது, ஆனால் அற்ப காலத்தின் விருப்பங்கள் நிரம்பிய பாவனையாக இருந்தது. இப்பொழுது கூட அன்பு மற்றும் பாவனை இருக்கிறது. ஆனால் நெருக்கமான சம்மந்தத்தின் ஆதாரத்தில் அன்பு இருக்கிறது. அதிகாரத்தன்மையின், சக்தியின், அனுபவத்தின் அதிகாரத்தின் சிரேஷ்ட பாவனை இருக்கிறது. யாசிக்கும் பாவனை மாறி, சம்மந்தம் மாறி அதிகாரத்தன்மையின் நிச்சயம் மற்றும் போதை ஏறிவிட்டது. அந்த மாதிரி சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு எப்பொழுதும் பிரத்யக்ஷ பலன் பிராப்தி ஆகியிருக்கிறது. நீங்கள் அனைவரும் பிரத்யக்ஷ பலனின் அனுபவம் நிறைந்த ஆத்மாக்களாக இருக்கிறீர்களா? பிரத்யக்ஷ பலன் என்ற பழத்தை அருந்திப் பார்த்திருக்கிறீர்களா? மற்ற பழங்களோ சத்யுகத்திலும் கிடைக்கும். மேலும் இப்பொழுது கலியுகத்திலும் அதிக பழங்கள் அருந்தியிருக்கிறீர்கள், ஆனால் சங்கமயுகத்தின் பிரபுவின் பழத்தை, பிரத்யக்ஷ பலன் என்ற பழத்தை ஒருவேளை இப்பொழுது அருந்தவில்லை என்றால் முழு கல்பத்திலும் அருந்த முடியாது. பாப்தாதா அனைத்து குழந்தைகளிடம் பிரபு பழம், அழியாத பழம், அனைத்து சக்திகள், அனைத்து குணங்கள், அனைத்து சம்மந்தத்தின் அன்பின் சாறு நிரம்பிய பழத்தை அருந்தியிருக்கிறீர்களா? என்று கேட்கிறார். அனைவருமே அருந்தியிருக்கிறீர்களா அல்லது யாராவது அருந்தாமல் இருக்கிறார்களா? இது ஈஸ்வரிய மந்திரம் நிரம்பிய பழம் இந்தப் பழத்தை அருந்துவதினால் இரும்பிலிருந்து தங்கத்தையும் விட அதிக மதிப்புள்ள வைரமாக ஆகிவிடுகிறீர்கள். இந்த பழத்தின் மூலம் என்ன எண்ணம் வைப்பீர்களோ அதை அடைய முடியும். அழியாத பழம், அழியாத பிராப்தி. அந்த மாதிரி பிரத்யக்ஷ பலன் என்ற பழத்தை அருந்துபவர் எப்பொழுதுமே மாயாவின் நோயினால் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக இருக்கிறார். துக்கம், அமைதியின்மையிலிருந்து, அனைத்து தடைகளிருந்தும் எப்பொழுதுமே தூரமாக இருப்பதற்கான அமர பழம் கிடைத்து விட்டது. தந்தையின் குழந்தை ஆவது என்றால் அந்த மாதிரி சிரேஷ்ட பழம் கிடைப்பது.
இன்று பாப்தாதா வந்திருக்கும் விசேஷமான பாண்டவ சேனையைப் பார்த்து மகிழ்ச்சியோ அடைந்து கொண்டு தான் இருக்கிறார். கூடவே பிரம்மா பாபாவின் இனத்தவருடன் எப்பொழுதும் விருந்து செய்யப்படுகிறது, பிக்னிக் கொண்டாடப்படுகிறது. அப்படி இன்று இந்த பிரபு பழத்தின் பிக்னிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். லட்சுமி நாராயணன் கூட இந்த மாதிரி பிக்னிக் செய்ய மாட்டார். பிரம்மா பாபா மற்றும் பிராமணர்களின் இது ஆன்மீக பிக்னிக். பிரம்மா பாபா தன் இனத்தவரைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் நம் இனத்தவராகத் தான் ஆக வேண்டும். ஒவ்வொரு அடியிலும் தந்தையைப் பின்பற்றி நடப்பவர், சமமாக இருக்கும் துணைவர்கள் என்றால் நம் இனத்தவர். அந்த மாதிரி நம் இனத்தவர் தான் இல்லையா அல்லது என்ன செய்வது, எப்படி செய்வது என்று இப்பொழுது யோசிக்கிறீர்களா? யோசிப்பவர்களா அல்லது சமமாக ஆகுபவர்களா? ஒரு நொடியில் ஒப்பந்தம் செய்பவர்களா அல்லது இப்பொழுது கூட யோசிப்பதற்காக நேரம் வேண்டுமா? ஒப்பந்தம் செய்து விட்டு வந்திருக்கிறீர்களா அல்லது ஒப்பந்தம் செய்வதற்காக வந்திருக்கிறீர்களா? அனுமதி யாருக்குக் கிடைத்திருக்கிறது, அனைவருமே படிவத்தை நிரப்பி இருக்கிறீர்களா? அல்லது சிறிய பிராமணிகளிடம் விஷயத்தைக் கூறிவிட்டு வந்து விட்டீர்களா? அந்த மாதிரி மிக இனிமையான விஷயங்கள் கூறுகிறார்கள். பாப்தாதாவிடம் அனைவரின் மனதின் விஷயங்கள் மற்றும் சாதுர்யத்தின் விஷயங்கள் இரண்டுமே வந்து சேர்கிறது. நியமப்பிரகாரம் ஒப்பந்தம் செய்து விட்டு வர வேண்டும். ஆனால் மதுபன்னில் சில ஒப்பந்தம் செய்பவர்களும் வந்து விடுகிறார்கள். செய்து விட்டு வருவதற்குப் பதிலாக இங்கு வந்து ஒப்பந்தம் செய்கிறார்கள். எனவே பாப்தாதா எண்ணிக்கையில் தரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். எண்ணிக்கையின் விசேஷம் அதனுடையது, தரத்தின் விசேஷம் அதனுடையது. இரண்டுமே வேண்டும் தான். பூச்செண்டு பல விதமான வண்ணம் நிறைந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. இலைகளும் இல்லை என்றால் பூச்செண்டு பார்க்க அழகாக இருக்காது. அப்படி நீங்கள் அனைவருமே பாப்தாதாவின் வீட்டின் அலங்காரமாக இருக்கிறீர்கள், அனைவரின் வாயிலிருந்தும் பாபா என்ற வார்த்தையோ வெளியாகத் தான் செய்கிறது. குழந்தைகள் வீட்டின் அலங்காரமாக இருக்கிறார்கள். இப்பொழுது கூட பாருங்கள் இந்த ஓம் சாந்தி பவன் என்ற ஹால் நீங்கள் அனைவரும் வந்ததினால் அலங்கரிக்கப்பட்டது தான் இல்லையா? அப்படி வீட்டின் அலங்காரம், தந்தையின் அலங்காரம் நீங்கள் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டே இருங்கள். எண்ணிக்கையிலிருந்து தரத்தில் பரிவர்த்தனை ஆகிவிடுங்கள். புரிந்ததா? இன்றோ சந்திப்பதற்கான நாளாக மட்டும் இருந்தது. இருந்தும் பிரம்மா பாபாவிற்குத் தன் இனத்தினர் மேல் விருப்பம் வந்தது. எனவே பிக்னிக் செய்தோம். நல்லது.
எப்பொழுதும் பிரபு பழத்தை அருந்துவதற்கு உரியவர், எப்பொழுதும் பிரம்மா பாபாவிற்குச் சமமாக ஒரு நொடியில் ஒப்பந்தம் செய்யக்கூடிய, ஒவ்வொரு காரியத்திலும் கர்மயோகி, பிரம்மா பாபாவைப் பின்பற்றக் கூடிய, அந்த மாதிரி தந்தைக்குச் சமமான விசேஷ ஆத்மாக்களுக்கு, நாலாபுறங்களிலும் உள்ள தரமாக மற்றும் அதிக எண்ணிக்கையில் இருக்கும் குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
பார்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு (அதர்குமாரர்களுடன்)
1) எப்பொழுதும் தன்னை இந்த உலகில் கோடியில் ஒருவரானவன் நான் என்று அப்படி அனுபவம் செய்கிறீர்களா? எப்பொழுதெல்லாம் கோடியில் சிலர் அந்த சிலரிலும் சிலர் என்ற விஷயத்தை கேட்கிறீர்களோ அப்பொழுது அது நான் தான் என்று தன்னை நினைக்கிறீர்களா? எப்பொழுது மீண்டும் அதே மாதிரி நடக்கிறது என்றால் அந்த மீண்டும் நடக்கும் பங்கில் ஒவ்வொரு கல்பமும் நீங்கள் தான் விசேஷமாக இருப்பீர்கள் இல்லையா? அந்த மாதிரி அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும். நிச்சயபுத்தி உடையவர்கள் எப்பொழுதும் அனைத்து விஷயங்களிலும் கவலையின்றி இருப்பார்கள். நிச்சயத்தின் அடையாளம் கவலையற்ற நிலை. கவலைகள் அனைத்தும் அகன்று விட்டன. தந்தை கவலைகளின் சிதையிலிருந்து பாதுகாத்து விட்டார் இல்லையா? கவலைகளின் சிதையிலிருந்து தூக்கி இதயசிம்மாசனத்தில் அமர்த்தி விட்டார். தந்தை மீது அன்பு ஏற்பட்டது மேலும் அந்த அன்பின் ஆதாரத்தில் அன்பு நினைவின் அக்னியில் கவலைகள் அனைத்துமே ஒன்றுமே இருக்கவில்லை என்பது போல் அழிந்து விட்டன. ஒரு விநாடியில் அழிந்து விட்டன தான் இல்லையா? அந்த மாதிரி தன்னை நற்சிந்தனையுள்ள ஆத்மா என்று அனுபவம் செய்கிறீர்களா? எப்பொழுதாவது கவலை வரவில்லையே? உடலின் கவலையும் இல்லை, மனதில் எந்த வீணான கவலையும் இல்லை, மேலும் பணத்தின் கவலையும் இல்லை ஏனென்றால், சாதாரண உணவு தான் அருந்த வேண்டும் மேலும் தந்தையின் மகிமை பாட வேண்டும். சாதாரண உணவோ கண்டிப்பாக கிடைக்கும். அந்த மாதிரி பணத்தின் கவலையும் இல்லை, மனதின் வேதனையும் இல்லை மற்றும் கர்மத்தின் விளைவுகளை அனுபவிக்கும் உடல் சம்மந்தப்பட்ட கவலைகளும் இல்லை. ஏனென்றால் இது இறுதிப் பிறவி. மேலும் இறுதி நேரம் இதில் அனைத்தும் முடிவடைய வேண்டும் என்று தெரிந்திருக்கிறீர்கள். எனவே எப்பொழுதுமே நல்லதையே நினைப்பவர்களாக இருக்கிறீர்கள். என்ன ஆகும் என்று எந்தக் கவலையும் இல்லை. ஞானத்தின் சக்தி மூலம் அனைத்தையும் தெரிந்து கொண்டீர்கள். எப்பொழுது அனைத்தையும் தெரிந்து கொண்டீர்களோ அப்பொழுது என்ன ஆகும் என்ற இந்தக் கேள்வி அகன்று விட்டது - ஏனென்றால், என்ன ஆகுமோ அது மிக நல்லதாகத் தான் ஆகும் என்ற ஞானம் இருக்கிறது. எனவே எப்பொழுதுமே நற்சிந்தனையாளர், எப்பொழுதும் கவலைகளிலிருந்து விலகிய நிச்சயபுத்தி உடைய கவலையற்ற ஆத்மாக்கள், இது தானே வாழ்க்கை. ஒருவேளை வாழ்க்கையில் கவலையின்மை இல்லை என்றால் அது என்ன தான் வாழ்க்கை. அந்த மாதிரி சிரேஷ்ட வாழ்க்கையை அனுபவம் செய்கிறீர்களா? குடும்பத்தின் கவலையோ இல்லை தானே? ஒவ்வொரு ஆத்மாவும் தன்னுடைய கணக்கு வழக்கை முடித்துக் கொண்டும் இருக்கிறார். மேலும் உருவாக்கிக் கொண்டும் இருக்கிறார், இதில் என்ன கவலைப்பட வேண்டிய திருக்கிறது. எந்தக் கவலையும் இல்லை. முன்பு சிதையில் எரிந்து கொண்டிருந்தீர்கள், இப்பொழுது தந்தை அமிர்தம் ஊற்றி எரியும் சிதையிலிருந்து இறந்து மறுபிறவி எடுத்தவராக ஆக்கிவிட்டார். உயிருள்ளவராக ஆக்கிவிட்டார். எப்படி இறந்தவரை உயிருள்ளவராக ஆக்கினார் என்று கூறுகிறார்கள் இல்லையா? தந்தை அமிர்தத்தை குடிக்கக் கொடுத்தார். மேலும் அமரர் ஆக்கிவிட்டார். இறந்த பிணத்திற்குச் சமமாக இருந்தேன். மேலும் இப்பொழுது பாருங்கள் என்ன ஆகி விட்டேன். பிணமாக இருந்தவனிலிருந்து மகான் ஆகிவிட்டேன். முன்பு எந்த ஞானமும் இருந்ததில்லை, எனவே பிணத்திற்கு சமம் என்று தான் கூறுவோம் இல்லையா? மொழியும் என்ன கூறுனீர்கள், அஞ்ஞானி மனிதர்கள் பேசும்பொழுது என்ன வார்த்தை கூறுவார்கள் – செத்து தொலையேன் என்று தான் கூறுவார்கள் அல்லது நான் செத்து விட்டேன் என்றால் மிக நல்லது என்று கூறுவார்கள். இப்பொழுதோ இறந்து மறுபிறவி எடுத்தவர் ஆகிவிட்டீர்கள். விசேஷ ஆத்மாக்கள் ஆகிவிட்டீர்கள். இது தான் குஷி இல்லையா? எரிந்து கொண்டிருக்கும் பிணத்திலிருந்து அமரன் ஆகிவிட்டீர்கள் – இது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. பகவான் செத்த பிணத்திற்கும் உயிர் கொடுக்கிறார் என்று கேள்வி பட்டிருந்தோம். ஆனால் எப்படி செய்கிறார் என்ற இதை புரிந்து கொள்ளவில்லை. இப்பொழுதோ நானே உயிருள்ளவனாக ஆகிவிட்டேன் என்றால் எப்பொழுதும் குஷி மற்றும் போதையில் இருங்கள்.
டீச்சர்களுடன் சந்திப்பு –
சேவாதாரிகளின் விசேஷம் என்ன? சேவாதாரி என்றால் (அதிகாலையில்) கண்கள் திறந்தன மற்றும் எப்பொழுதும் தந்தையின் துணை, தந்தைக்குச் சமமான நிலையை அனுபவம் செய்வது. அமிர்தவேளையின் மகத்துவத்தை தெரிந்திருக்கும் விசேஷ சேவாதாரி. விசேஷ சேவாதாரியின் மகிமையே யார் விசேஷ வரதானத்தின் நேரத்தை தெரிந்திருக்கிறார் மற்றும் விசேஷ வரதானங்களை அனுபவம் செய்கிறார். ஒருவேளை அனுபவம் இல்லை என்றால் சாதாரண சேவாதாரியாக ஆனார், விசேஷமானவர் இல்லை. விசேஷ சேவாதாரி ஆக வேண்டும் என்றால், இந்த விசேஷ அதிகாரத்தை எடுத்து விசேஷமானவர் ஆக முடியும். யாருக்கு அமிர்தவேளையின், எண்ணத்தின், நேரத்தின் மற்றும் சேவையின் மகத்துவம் இருக்கிறதோ அந்த மாதிரி அனைத்து மகத்துவங்களைத் தெரிந்திருப்பவர் விசேஷ சேவாதாரியாக இருப்பார். எனவே இந்த மகத்துவத்தைத் தெரிந்து மகான் ஆக வேண்டும். இதே மகத்துவத்தை தெரிந்து நீங்களும் மகான் ஆகுங்கள். மேலும் மற்றவர்களையும், மகத்துவத்தைக் கூறி, அனுபவம் செய்வித்து மகான் ஆக்குங்கள். நல்லது – ஓம் சாந்தி.
அவ்யக்த மகாவாக்கியங்கள் குழுவினருக்கு தனியாகக் கூறியது : பயன்படுத்துங்கள் மற்றும் வெற்றி அடைபவராக ஆகுங்கள்
எப்படி பிரம்மா பாபா நிச்சயத்தின் ஆதாரத்தில், ஆன்மீக போதையின் ஆதாரத்தில் கண்டிப்பாக நடக்கும் என்று ஞானம் தெரிந்தவராகி அனைத்தையும் பயனுள்ளதாக ஆக்கினார், தனக்காக எதையும் வைத்துக் கொள்ளவில்லை, அனைத்தையும் பயன்படுத்தினார். அதற்கான நடைமுறை எடுத்துக்காட்டாக இறுதி நாள் வரை உடல் மூலம் கடிதங்கள் எழுதி அதன் மூலம் சேவை செய்தார், வாய் மூலம் மகாவாக்கியங்களை உச்சரித்தார் என்பதையும் பார்த்தீர்கள். இறுதி நாளிலும் நேரம், எண்ணம், உடலையும் பயன்படுத்தினார். அந்த மாதிரி பயன்படுத்துவது என்பதின் அர்த்தமே உயர்ந்த காரியங்களுக்கு ஈடுபடுத்துவது என்பதாகும். அந்த மாதிரி யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு வெற்றி இயல்பாகவே பிராப்தி ஆகிறது. வெற்றி அடைவதற்கான விசேஷ ஆதாரமுமே ஒவ்வொரு விநாடி, ஒவ்வொரு மூச்சு, ஒவ்வொரு பொக்கிஷத்தையும் பயனுள்ளதாக ஆக்குவது. எண்ணம், சொல், காரியம், சம்மந்தம், தொடர்பு இந்த எதிலேயும் வெற்றியை அனுபவம் செய்ய விரும்புகிறீர்கள் என்றால், தனக்காகவும் மேலும் மற்ற ஆத்மாக்களுக்காகவும் பயன்படுத்திக் கொண்டே இருங்கள். வீணாகச் செல்ல விடாதீர்கள், பிறகு தானாகவே வெற்றியின் குஷியின் அனுபவம் செய்து கொண்டே இருப்பீர்கள். ஏனென்றால் பயனுள்ளதாக ஆக்குவது என்றால் தற்சமயத்திற்காக வெற்றி அடைபவர் ஆவது மேலும் எதிர்காலத்திற்காக சேமிப்பு செய்வது.
சேவையில் வெற்றியை அடைவதற்காக சமர்ப்பண உணர்வு மேலும் கவலையற்ற நிலை வேண்டும். சேவையில் என்னுடையது என்ற உணர்வு கலந்து விடக் கூடாது. எந்தவொரு விஷயத்தின் கவலையும் இருக்க வேண்டாம். ஏனென்றால், கவலைப்படுபவர் சக்தியையும், வீணாக இழக்கிறார், மேலும் செய்ய வேண்டிய வேலையையும் இழந்து விடுகிறார். அவர் எந்த வேலைக்காக கவலைப்படுகிறாரோ அந்த வேலையும் கெட்டுப் போய் விடும். இரண்டாவது எப்பொழுது வெற்றி அடைபவராக ஆவதற்கான வழி ஒரு பலம் மற்றும் ஒருவர் மேல் உள்ள நம்பிக்கை. நிச்சயம் எப்பொழுதுமே கவலையற்றவர் ஆக்குகிறது. மேலும் கவலையற்ற நிலை உள்ளவர் என்னென்ன காரியம் செய்வாரோ அது அவசியம் வெற்றி அடையும். எப்படி பிரம்மா பாபா திட எண்ணம் மூலம் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியை அடைந்தார், திடத்தன்மை வெற்றியின் ஆதாரமாக இருந்தது. அந்த மாதிரி தந்தையைப் பின்பற்றி செய்யுங்கள். ஒவ்வொரு பொக்கிஷத்தையும், குணங்களையும், சக்திகளையும் காரியத்தில் ஈடுபடுத்தினீர்கள் என்றால், அதிகரித்துக் கொண்டே இருக்கும். மிச்சப்படுத்தும் விதி, சேமிக்கும் விதியைக் கடைபிடித்தீர்கள் என்றால் வீணானதின் கணக்கு இயல்பாகவே பரிவர்த்தனை ஆகி பயனுள்ளதாக ஆகிவிடும். தந்தை மூலமாக என்னென்ன பொக்கிஷங்கள் கிடைத்திருக்கின்றனவோ அவற்றை தானம் செய்யுங்கள், ஒருபொழுதும் கனவில் கூட தவறுதலாக பிரபு கொடுத்ததை தன்னுடையது என்று நினைக்காதீர்கள். என்னுடைய இந்த குணம், என்னுடைய சக்தி என்ற இந்த என்னுடையது வருவது என்றால் பொக்கிஷங்களை இழப்பது. தன்னுடைய ஈஸ்வரிய சம்ஸ்காரங்களையும் பயன்படுத்தினீர்கள் என்றால் வீணான சம்ஸ்காரம் தானாகவே சென்றுவிடும். ஈஸ்வரிய சம்ஸ்காரங்களை புத்தி என்ற பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்காதீர்கள். காரியத்தில் ஈடுபடுத்துங்கள். பயன்படுத்துங்கள். பயன்படுத்துவது என்றால் சேமிப்பது அல்லது அதிகரிப்பது. மனதின் எண்ணம் மூலம் பயன்படுத்துங்கள், வாய்மொழி மூலம் பயன்படுத்துங்கள், உறவு தொடர்பு மூலம், காரியம் மூலம், தன்னுடைய சிரேஷ்ட பழக்கத்தின் மூலம், தன்னுடைய மிக சக்திசாலியான உள்உணர்வு மூலம் பயனுள்ளதாக ஆக்குங்கள். பயன்படுத்துவது தான் வெற்றிக்கான சாவி. உங்களிடம் நேரம் மற்றும் எண்ணம் என்ற சிரேஷ்ட பொக்கிஷங்கள் என்ன இருக்கின்றனவோ அவற்றை 'குறைந்த செலவில் மிகுந்த பலன்' என்ற விதி மூலமாக பயனுள்ளதாக ஆக்குங்கள். எண்ணத்தின் செலவு குறைவாக இருக்க வேண்டும். ஆனால் பிராப்தி அதிகமாக இருக்க வேண்டும். ஒரு சாதாரண நபர் இரண்டு, நான்கு நிமிடங்கள் எண்ணத்தை ஓட வைத்த பிறகு, யோசித்த பிறகு வெற்றி மற்றும் பிராப்தி என்ன செய்ய முடியமோ அதை நீங்கள் ஓரிரு விநாடியில் செய்ய முடியும். அந்த மாதிரியே பேச்சு மற்றும் செயலைக் குறைவாகச் செலவழித்து வெற்றி அதிகமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அதிசயம் என்று மகிமை செய்யப்படும். எனவே உங்களிடம் என்னென்ன செல்வங்கள் இருக்கின்றன, நேரம், எண்ணம், மூச்சு, உடல், மனம், பணம் அனைத்தையும் பயனுள்ளதாக ஆக்குங்கள். வீணாக இழக்காதீர்கள், பிற்கால தேவைக்காக பாதுகாத்தும் வைக்காதீர்கள். ஞானம் மற்றும் சக்திகளின் செல்வத்தை ஒவ்வொரு நேரமும் என்னுடையது என்பதிலிருந்து விலகியவராகிப் பயன்படுத்தினீர்கள் என்றால் சேமிப்பாகிக் கொண்டே இருக்கும். பயன்படுத்துவது என்றால், பலமடங்கு வெற்றியை அனுபவம் செய்வது.
யார் நேரத்தை பயனுள்ளதாக ஆக்குகிறாரோ அவர் நேரத்தின் பயன்படுத்தியதின் பலன் சொரூபமாக இராஜ்ய பாக்கியத்தின் முழு காலமும் இராஜ்ய அதிகாரி ஆகிறார்கள்.
யார் மூச்சை பயனுள்ளதாக ஆக்குகிறாரோ, அவர்கள் அனேக ஜென்மங்கள் நிரந்தரமாக ஆரோக்கியமாக இருப்பார்கள். ஒருபொழுதும் திடீரென்று மூச்சு நின்று விடாது, மாரடைப்பு ஏற்படாது.
யார் ஞான பொக்கிஷத்தை பயனுள்ளதாக ஆக்குகிறாரோ அவர் எதிர்காலத்தில் அனேக மந்திரிகளிடம் ஆலோசனை கேட்க வேண்டாத அளவிற்கு புத்திசாலி ஆகி விடுகிறார், அவரே புத்திசாலி ஆகி இராஜ்யத்தை நடத்துவிக்கிறார்.
யார் அனைத்து சக்திகளின் பொக்கிஷத்தைப் பயனுள்ளதாக ஆக்குகிறாரோ அதாவது அவற்றை காரியத்தில் ஈடுபடுத்துகிறாரோ அவர் அனைத்து சக்திகள் நிரம்பியவர் ஆகிவிடுகிறார். அவருடைய எதிர்கால இராஜ்யத்தில் எந்த சக்தியின் குறை இருக்காது. அனைத்து சக்திகளும் இயல்பாகவே இடைவிடாது, உறுதியாக, தடையற்று காரியத்தின் வெற்றியை அனுபவம் செய்விக்கும்.
யார் அனைத்து குணங்களின் பொக்கிஷத்தைப் பயனுள்ளதாக ஆக்குகிறாரோ அவர் அந்த மாதிரி குணம் நிறைந்தவர் ஆகிவிடுகிறார். அதன் பலனாக இந்தக் கடைசி ஜென்மத்திலும் அவருடைய ஜட விக்ரகத்திற்கு 'அனைத்து குணங்கள் நிரம்பிய தேவதையே' என்ற ரூபத்தில் மகிமை பாடப்படுகிறது.
யார் ஸ்தூல பணம், செல்வத்தின் பொக்கிஷத்தைப் பயனுள்ளதாக ஆக்குகிறாரோ அவர் 21 ஜென்மங்களுக்காக அனைத்து செல்வங்களும் நிறைந்தவராக இருப்பார். எனவே (சேவையில்) பயன்படுத்துங்கள் மேலும் வெற்றி அடைபவர் ஆகுங்கள். நல்லது.
வரதானம்:
என்னுடையதை உன்னுடையதில் பரிவர்த்தனை (மாற்றம்) செய்து எப்பொழுதும் லேசாக இருக்கக்கூடிய டபுள் லைட் ஃபரிஷ்தா ஆகுக.
நடைமுறை காரியங்கள் செய்து கொண்டே எப்பொழுதும் நான் ஃபரிஷ்தாவே தான் என்ற இதே நினைவு இருக்க வேண்டும். ஃபரிஷ்தாக்களின் சொரூபம் என்ன, பேச்சு என்ன, காரியம் என்ன . . . அது எப்பொழுதும் நினைவில் இருக்க வேண்டும். ஏனென்றால் எப்பொழுது தந்தையின் குழந்தை ஆகிவிட்டீர்கள், அனைத்தையும் என்னுடையதாக இருப்பதை உன்னுடையதாக ஆக்கிவிட்டீர்கள் என்றால் சுமையற்றவர் (ஃபரிஷ்தா) ஆகிவிட்டீர்கள். இந்த நிச்சயத்தை நிறைவேற்றுவதற்காக எப்பொழுதும் ஒரே ஒரு வார்த்தை நினைவில் இருக்க வேண்டும் - அனைத்தும் தந்தையினுடையது, என்னுடையது எதுவும் இல்லை. எங்கு என்னுடையது என்று வருகிறதோ அங்கு உன்னுடையது என்று கூறிவிடுங்கள், பிறகு எந்த சுமையும் அனுபவம் ஆகாது, எப்பொழுதும் பறக்கும் கலையில் பறந்து கொண்டே இருப்பீர்கள்.
சுலோகன் :
தந்தை மேல் பலி ஆவதற்கான மாலையை அணிந்து கொண்டீர்கள் என்றால், மாயாவிடம் தோல்வி ஏற்படாது.