BK Murli 21 January 2018 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 21 January 2018 Tamil



    21.01.2018      காலை முரளி     ஓம் சாந்தி        ''அவ்யக்த பாப்தாதா''

    ரிவைஸ்      21.04.1983      மதுபன்



    '' சங்கமயுகத்தின் மரியாதைகளின்படி (விதிமுறை)

    நடப்பது தான் புருஷோத்தமன் ஆவது ''



    இன்று பாப்தாதா அனைத்து மரியாதை புருஷோத்தம குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சங்கமயுகத்தின் மரியாதைகள் தான் புருஷோத்தமம் ஆக்குகிறது. எனவே மரியாதை புருஷோத்தமம் என்று கூறுவது. இந்த தாழ்ந்த மனித ஆத்மாக்கள் மற்றும் தாழ்ந்த இயற்கையின் வாயுமண்டலம், வைப்ரேஷன் (எண்ண அலைகள்)லிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான சுலபமான வழி இந்த மரியாதைகள். மரியாதைகளுக்குள்ளே இருப்பவர் எப்பொழுதும் கடின உழைப்பிலிருந்து விடுபட்டு இருக்கிறார். எப்பொழுது மரியாதைகளின் கோட்டிலிருந்து எண்ணம், சொல் மற்றும் காரியத்தின் மூலம் வெளியே சென்று விடுகிறாரோ அப்பொழுது கடின உழைப்பு செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஒவ்வொரு அடிக்காக பாப்தாதா மூலம் மரியாதைகள் கிடைத்திருக்கின்றன - அதன் பிரகாரமே ஒவ்வொரு அடியும் எடுத்து வைப்பதினால் இயல்பாகவே மரியாதை புருஷோத்தமர் ஆகிவிடுகிறார். அமிர்தவேளையில் தொடங்கி இரவு வரையான விதிமுறைகளை, மரியாதைப் பூர்வம் நிறைந்த வாழ்க்கையை நீங்கள் நன்றாகத் தெரிந்திருக்கிறீர்கள். அதன் பிரகாரம் நடக்க வேண்டும். இது தான் புருஷோத்தமன் ஆவது. எப்பொழுது பெயரே புருஷோத்தமர் என்றால், அனைத்து சாதாரண புருஷர்களிலிருந்தும் (ஆத்மாக்களிலிருந்து) உத்தமமானவர். சிரேஷ்ட ஆத்மா என்னுடைய முதல் முக்கியமான விஷயம் நினைவு, உத்தமமாக இருக்கிறதா? என்று இதை சோதனை செய்யுங்கள். நினைவு உத்தமமாக இருக்கிறது என்றால், உள்உணர்வு மற்றும் பார்வை, மனநிலை இயல்பாகவே சிரேஷ்டமாக இருக்கும். நினைவின் மரியாதைக் கோட்டை தெரிந்திருக்கிறீர்களா? நானும் சிரேஷ்ட ஆத்மா மேலும் அனைவரும் ஒரு சிரேஷ்ட தந்தையின் ஆத்மாக்கள். விதவிதமான ஆத்மாக்கள், விதவிதமான பங்கைச் செய்பவர்கள். இந்த முதல் பாடம் இயற்கையான ரூபத்தில் நினைவு சொரூபத்தில் இருக்க வேண்டும். தேகத்தைப் பார்த்துக் கொண்டும் ஆத்மாவைப் பார்க்க வேண்டும். இந்த சக்திசாலியான நினைவு ஒவ்வொரு விநாடியும் சொரூபத்தில் வர வேண்டும், நினைவு சொரூபம் ஆகிவிட வேண்டும். நானும் ஆத்மா, இவரும் ஆத்மா என்று நினைவில் மட்டும் இருந்தால் போதாது. ஆனால் நானும் ஆத்மாவே தான், இவரும் ஆத்மாவே தான். இந்த முதல் நினைவின் மரியாதை தன்னை எப்பொழுதும் தடையற்றவராக ஆக்குகிறது. மேலும் மற்றவர்களுக்கும் இந்த சிரேஷ்ட நினைவின் சக்தி நிறைந்த வைப்ரேஷனைப் பரப்புவதற்கு பொறுப்பாளர் ஆகிவிடுகிறேன், அதன் மூலம் மற்றவர்களும் தடையற்றவர் ஆகிவிடுகிறார்கள்.



    பாண்டவ சேனை சந்திப்பை செய்வதற்கோ வந்திருக்கிறார்கள். ஆனால் சந்திப்பின் கூடவே முதலில் மரியாதையின் கோட்டின் அஸ்திவாரமாகிய 'நினைவில் இருப்பவராக ஆகுக' என்ற வரதானத்தையும் எப்பொழுதும் உடன் எடுத்துச் செல்லுங்கள். 'நினைவில் இருப்பவராக ஆகுக' என்பது தான் சக்திசாலி ஆகுக என்பதாகும். என்னென்ன கேட்டிருக்கிறீர்களோ அதன் சாரமாக என்ன எடுத்துச் செல்வீர்கள்? சாரம் நினைவிருப்பவராக ஆகுக. இதே வரதானத்தை எப்பொழுதும் அமிர்தவேளையில் மீண்டும் மீண்டும் நினைவு செய்யுங்கள். ஒவ்வொரு காரியம் செய்வதற்கு முன்பும் இந்த வரதானத்தின் சக்திசாலியான நிலையின் ஆசனத்தில் அமர்ந்து இது வீணானதா அல்லது பயனுள்ளதா என்று நிர்ணயம் செய்து பிறகு காரியத்தில் வர வேண்டும். காரியம் செய்த பிறகும், செய்த காரியத்தின் தொடக்க நேரத்திலிருந்து இறுதி நேரம் வரை சக்திசாலியாக இருந்ததா என்று சோதனை செய்யுங்கள். இல்லை என்றால் அனேக குழந்தைகள் காரியத்தின் தொடக்க நேரத்தில் சக்திசாலியான சொரூபத்தோடு தொடங்குகிறார்கள். ஆனால் இடையில் சக்தியின் நடுவே வீணானது மற்றும் சாதாரண காரியமாக எப்படி ஆகிவிட்டது. சக்திசாலிக்குப் பதிலாக வீணானதின் வரிசையில் எப்படி மற்றும் எந்த நேரம் சென்றேன் என்ற இது தெரிவதில்லை. பிறகு இறுதியில் எப்படி செய்ய வேண்யடிதாக இருந்ததோ அப்படி செய்யவில்லை என்று யோசிக்கிறார்கள். ஆனால் முடிவாக என்ன ஆனது. செய்த பிறகு யோசிப்பது திரிகாலதரிசி ஆத்மாக்களின் லட்சணம் இல்லை. எனவே மூன்று காலங்களின் நினைவில் இருப்பவராக ஆகுக மற்றும் சக்திசாலியாக ஆகுக. என்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்று புரிந்ததா? சக்திசாலியான நிலையின் ஆசனத்தையும் ஒருபொழுதும் விடக்கூடாது. இந்த ஆசனம் தான் ஹன்ஸ் ஆசனம் அதாவது அன்னப் பறவையின் ஆசனம். அன்னப்பறவையிடம் நிர்ணய சக்தியின் விசேஷம் இருக்கிறது. நிர்ணய சக்தி மூலமாக எப்பொழுதுமே மரியாதா புருஷோத்தமன் நிலையில் முன்னேறிச் சென்று கொண்டே இருப்பீர்கள். இந்த 'ஆசனம்' மற்றும் இந்த 'மரியாதா புருஷோத்தமன்' என்ற ஈஸ்வரிய பட்டம் எப்பொழுதுமே உங்கள் கூடவே இருக்கட்டும். நல்லது - இன்றோ வாழ்த்துக்கள் மட்டும் தெரிவிப்பதற்கான நாள். சேவைக்காக சென்று கொண்டிருக்கிறீர்கள் என்றால் வாழ்த்துக்கள் கூறுவதற்கான நாள் தான் இல்லையா? குடும்பத்து வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கவில்லை. ஆனால் சேவை ஸ்தானத்திற்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள். கொக்குகளின் மத்தியில் சென்று கொண்டிருக்கிறீர்கள். ஆனால் சேவைக்காகச் சென்று கொண்டிருக்கிறீர்கள். கர்ம பந்தனம் என்று நினைத்து செல்லாதீர்கள். ஆனால் சேவைக்கான சம்மந்தம். கர்ம பந்தனத்தை முடிப்பதற்காக அமர்ந்து கொண்டிருக்கவில்லை. ஆனால் சேவையின் சம்மந்தத்தை வைத்து நடந்து கொள்வதற்காக அமர்ந்திருக்கிறீர்கள். இது கர்ம பந்தனம் இல்லை. ஆனால் சேவைக்கான பந்தனம். நல்லது.



    எப்பொழுதும் வீணானதை முடிவுகட்டி சக்தசாலி நிலையின் ஹன்ஸ் ஆசனத்தின் நிலையில் இருக்கக்கூடிய, ஒவ்வொரு காரியத்தையும் மூன்று காலங்களையும் தெரிந்த சக்தி மூலம், மூன்று காலங்களையும் சக்திசாலியாக ஆக்கக்கூடிய, எப்பொழுதும் இயல்பாக ஆத்மீக நிலையில் நிலைத்திருக்கக்கூடிய அந்த மாதிரி மரியாதா புருஷோத்தம சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    பார்ட்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு

    1) எப்பொழுதும் தன்னை சிரேஷ்ட பாக்கியவான் என்று அனுபவம் செய்கிறீர்களா? யாருடைய தந்தையே பாக்கியத்தை உருவாக்குபவராக இருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு பாக்கியவானாக இருப்பார். பாக்கியத்தை உருவாக்குபவர் தந்தை என்றால் அவர் ஆஸ்தியில் என்ன கொடுப்பார்? அவசியம் சிரேஷ்ட பாக்கியம் தான் கொடுப்பார் இல்லையா? எப்பொழுதும் பாக்கியத்தை உருவாக்கும் தந்தை மற்றும் பாக்கியம் இரண்டுமே நினைவில் இருக்க வேண்டும். எப்பொழுது தன்னுடைய சிரேஷ்ட பாக்கியம் நினைவில் இருக்குமோ அப்பொழுது மற்றவர்களையும் பாக்கியவானாக ஆக்குவதற்கான ஊக்கம் உற்சாகம் இருக்கும். ஏனென்றால் நீங்கள் வள்ளலின் குழந்தைகள். பாக்கியத்தை உருவாக்கும் தந்தை பிரம்மா மூலமாக அனைவருக்கும் பாக்கியத்தை வழங்கினார் என்றால், நீங்கள் பிராமணர்களும் என்ன செய்வீர்கள். எது பிரம்மாவின் காரியமோ அதுவே பிராமணர்களின் காரியம். அந்த மாதிரி நீங்கள் அனைவருக்கும் பாக்கியத்தை வழங்குபவர்கள். வெளி உலக மனிதர்கள் துணிகள் வழங்குவார்கள், உணவு பொருட்கள் வழங்குவார்கள், தண்ணீர் வழங்குவார்கள். ஆனால் சிரேஷ்ட பாக்கியத்தையோ பாக்கியத்தை உருவாக்குபவரின் குழந்தைகள் தான் வழங்க முடியும். அந்த மாதிரி நீங்கள் பாக்கியத்தை வழங்கக்கூடிய சிரேஷ்ட பாக்கியவான் ஆத்மாக்கள் யாருக்கு பாக்கியம் கிடைத்திருக்கிறதோ அவருக்கு அனைத்தும் பிராப்தி ஆகியிருக்கிறது. பொதுவாக ஒருவேளை இன்று யாருக்காவது துணி வழங்கினீர்கள் என்றால், நாளை உணவு பொருட்களும் குறைவாக ஆகிவிடும், நாளை உணவு பொருட்கள் கொடுத்தீர்கள் என்றால், குடிக்கும் தண்ணீரும் குறைவாக ஆகிவிடும். இவ்வாறு ஒவ்வொரு பொருளையும் எதுவரை கொடுத்துக் கொண்டே இருப்பீர்கள். அதன் மூலம் திருப்தியாக முடியாது. ஆனால் ஒருவேளை பாக்கியத்தை வழங்கினீர்கள் என்றால் எங்கு பாக்கியம் இருக்கிறதோ அங்கு அனைத்தும் இருக்கிறது. பொதுவாக யாருக்காவது ஏதாவது பிராப்தி ஆகிவிடுகிறது என்றால் ஆஹா! என்னுடைய பாக்கியமே! என்று கூறுவார்கள். எங்கு பாக்கியம் இருக்கிறதோ அங்கு அனைத்து பிராப்தியும் இருக்கிறது. அப்படி நீங்கள் அனைவரும் சிரேஷ்ட பாக்கியத்தை தானம் செய்பவர்கள். நீங்கள் அந்த மாதிரி சிரேஷ்ட பெரும் வள்ளல்கள், சிரேஷ்ட பாக்கியவான்கள். இதே நினைவு எப்பொழுதும் பறக்கும் கலையில் எடுத்துச் செல்லும். எங்கு சிரேஷ்ட பாக்கியத்தின் நினைவு இருக்குமோ அங்கு அனைத்து பிராப்தியின் நினைவு இருக்கும். இந்த பாக்கியத்தை வழங்குவதில் பரந்த மனம் உடையவர் ஆகுங்கள். இங்கோ அனைத்தும் அளவற்றது உள்ளது. எப்பொழுது குறைவாக இருக்குமோ அப்போது கஞ்சத்தனம் வர முடியும். ஆனால் இதுவோ குறைவற்றது. எனவே வழங்கிக் கொண்டே இருங்கள். எப்பொழுதும் கொடுத்துக் கொண்டே இருங்கள், ஒரு நாள் கூட தானம் செய்யாமல் இருக்காதீர்கள். நிரந்தரமான வள்ளல் எந்த நேரமும் தன்னுடைய கஜானாவை திறந்து வைத்திருப்பார்கள். ஒரு மணி நேரம் கூட தானம் செய்வதை நிறுத்துவதில்லை. பிராமணர்களின் வேலையே எப்பொழுதும் வித்யா (கல்வி) பெறுவது மற்றும் வித்யாவை தானம் செய்வது. எனவே இதே காரியத்தில் எப்பொழுதும் முழுமையாக ஈடுபட்டு இருங்கள்.



    2) எப்பொழுதும் தன்னை சங்கமயுகத்தின் வைரத்திற்குச் சமமான ஆத்மாக்கள் என்று அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் அனைவரும் உண்மையான வைரங்கள் தான் இல்லையா? வைரத்திற்கு மிகுந்த மதிப்பு இருக்கும். உங்களுடைய பிராமண வாழ்க்கைக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது! எனவே பிராமணர்களை எப்பொழுதும் உச்சங்குடுமி வைத்திருப்பதாக காண்பித்திருப்பார்கள். குடுமி என்றால் உயர்ந்த ஸ்தானம். பார்க்கப் போனால் தேவதைகள் தான் உயர்ந்தவர்கள். ஆனால் தேவதைகளையும் விட நீங்கள் பிராமணர்கள் உயர்ந்தவர் கள். அந்த மாதிரி போதை இருக்கிறதா? நான் தந்தையினுடையவன், தந்தை என்னுடையவர் என்ற இது தான் ஞானம் இல்லையா? இந்த ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 'என்ன அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டேன்' என்ற இந்த பாடல் மனதில் எப்பொழுதும் ஒத்துக் கொண்டே இருக்கட்டும். வாய்மூலம் பாடும் பாடலை ஒரு மணி நேரம் பாடினால் கூட களைப்படைந்து விடுவீர்கள். ஆனால் இந்தப் பாடல் பாடுவதில் களைப்பு ஏற்படாது. தந்தையின் குழந்தை ஆவதினால் அனைத்துமாக ஆகிவிடுகிறீர்கள், நடனம் ஆடுபவராகவும், பாடல் பாடுபவராகவும், ஓவியராகவும் ஆகிவிடுகிறீர்கள். நடைமுறையில் தன்னுடைய ஃபரிஷ்தாவின் சித்திரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். புத்தியின் நினைவு மூலமாக எவ்வளவு நல்ல சித்திரத்தை உருவாக்கி விடுகிறீர்கள்! அப்படி நீங்கள் என்ன கூறுகிறீர்களோ அவை அனைத்தும் நடக்கட்டும். மிகப்பெரிய வியாபாரியாகவும் இருக்கிறீர்கள். பல ஆலைகளுக்கு உரிமையாளர்களாகவும் இருக்கிறீர்கள். எனவே எப்பொழுதும் தன்னுடைய இந்த பதவியையும் நினைவில் வையுங்கள். சில நேரம் சுரங்கத்தின் எஜமானன் ஆகிவிடுகிறீர்கள் என்றால் சில நேரம் ஓவியர் ஆகிவிடுங்கள், சில நேரம் நடனம் ஆடுபவர் ஆகிவிடுங்கள்... மிக ரமணீகரமான ஞானம், வரண்டது அல்ல. சிலர் என்ன தினசரி அதே ஆத்மா பரமாத்மாவின் ஞானத்தையே கேட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா என்று கூறுகிறார்கள், ஆனால் இந்த ஆத்மா, பரமாத்மாவின் ஞானம் வரண்ட ஞானம் அல்ல. மிகவும் ரமணீகரமான ஞானம், தினசரி தன்னுடைய புதுப்புது பட்டங்களை மட்டும் நினைவில் வையுங்கள். நான் ஆத்மா தான், ஆனால் எந்த மாதிரியான ஆத்மா? சில நேரம் ஓவியன் என்ற ஆத்மா, சில நேரம் வியாபாரி என்ற ஆத்மா.... அந்த மாதிரி இரமணீகரத்தோடு முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள். தந்தையும் இரமணீகரமானவர் தான் இல்லையா? பாருங்கள். சில நேரம் வண்ணான் ஆகிவிடுகிறார் என்றால், சில நேரம் உலகத்தைப் படைப்பவர் ஆகிவிடுகிறார். சில நேரம் பணிவான சேவகன் ஆகிவிடுகிறார்..... எப்படி தந்தை இருக்கிறாரோ அதே மாதிரி குழந்தைகள் நீங்களும் இருங்கள்.... அந்த மாதிரியே இந்த இரமணீகரமான ஞானத்தை சிந்தனை செய்து மகிழ்ச்சியாக இருங்கள்.



    தற்சமயத்திற்கு ஏற்றபடி தனது மற்றும் சேவை இரண்டின் வேகத்தில் சமநிலை வேண்டும். எவ்வளவு சேவையை பெற்றிருக்கிறேனோ அதற்கான பிரதிபலனை கொடுக்கிறேனா என்று ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். இப்பொழுது சேவை செய்வதற்கான நேரம். எவ்வளவு முன்னேறிச் செல்வீர்களோ அந்த அளவு சேவைக்குத் தகுதியான நேரமாக ஆகிக் கொண்டே இருக்கும். ஆனால் அந்த நேரம் அனேக பிரச்சனைகளும் இருக்கும். அந்த பிரச்சனைகளில் சேவை செய்வதற்காக இப்பொழுதிலிருந்தே சேவைக்கான பயிற்சி வேண்டும். அந்த நேரம் வந்து போவது கூட கடினமாக இருக்கும். மனசக்தி மூலமாகத் தான் முன்னேற்றம் அடைய வைக்கும் சேவை செய்ய வேண்டியதாக இருக்கும். அது கொடுப்பதற்கான நேரமாக இருக்கும். தனக்குள் நிரப்புவதற்கான நேரமாக இருக்காது. எனவே முன்பாகவே அனைத்து சக்திகளின் கையிருப்பை நிரப்பி வைத்து விட்டேனா என்று தன்னுடைய கையிருப்பை சோதனை செய்யுங்கள். அனைத்து சக்திகள், அனைத்து குணங்கள், அனைத்து ஞானத்தின் பொக்கிஷங்கள், நினைவின் சக்திகளால் நிரம்பியிருக்க வேண்டும். எந்தவொரு பொருளின் குறை இருக்கக்கூடாது.



    28-ம் தேதி அமிர்தவேளையில் பாப்தாதா சத்குருவார் (வியாழன்) தினத்திற்கான வாழ்த்துக்களை வழங்கினார் விருட்சபதி நாளுக்காக வாழ்த்துக்கள். விருட்சபதி நாள் அன்று நிரந்தரமாக பிரகஸ்பதியின் திசை நிலைத்திருக்க வேண்டும், எப்பொழுதும் இதே நினைவு சொரூபமாக இருக்க வேண்டும். இப்பொழுதோ அனைவருமே திடமான உறுதிமொழி எடுத்திருக்கிறீர்கள் இல்லையா? குமார் குரூப் தயார் ஆகிவிட்டது என்றால், அந்த செய்தி நாலாபுறங்களிலும் நன்றாக பரவி விடும். அரசாங்கம் வரை சென்றடைந்து விடும். ஆனால் அழியாதவர்களாக இருந்தீர்கள் என்றால் தான்! ஏதாவது தலைகீழான காரியங்களைச் செய்யாதீர்கள். ஊக்கம், உற்சாகம், தைரியம் நன்றாக இருக்கிறது. எங்கு தைரியம் இருக்கிறதோ அங்கு உதவியோ இருக்கவே இருக்கிறது. சக்திகள் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள். சக்திகள் இன்றியோ சிவனும் இல்லை. சிவன் இல்லை என்றால் சக்திகள் இல்லை, சக்திகள் இல்லை என்றால் சிவனும் இல்லை. தந்தையும் புஜங்கள் இன்றி என்ன செய்ய முடியும். அப்படியானால் முதல் புஜங்கள் யார்? ஆஹா நான் தான். நல்லது.



    பரமாத்மா அன்பில் எப்பொழுதும் ஐக்கியமாகி இருங்கள்

    (அவ்யக்த மகாவாக்கியம் - தனிப்பட்டது)



    பரமாத்மா அன்பின் அனுபவியாக ஆனீர்கள் என்றால், இதே அனுபவத்தின் மூலம் சகஜயோகி ஆகி, பறந்து கொண்டே இருப்பீர்கள். பரமாத்மாவின் அன்பு பறக்க வைப்பதற்கான சாதனம். மேலே பறப்பவர் ஒருபொழுதும் பூமியின் ஈர்ப்பில் வர முடியாது. எவ்வளவு தான் மாயாவின் ஈர்ப்பு இருந்தாலும், அந்த ஈர்ப்பு பறக்கும் கலையில் இருப்பவர்கள் வரை சென்றடைய முடியாது. இந்த பரமாத்மாவின் அன்பின் கயிறு மிக தொலை தூரத்தில் இருப்பவர்களையும் இழுத்து கொண்டு வந்து விடுகிறது. இது அந்த மாதிரி சுகம் நிறைந்த அன்பு. யார் இந்த அன்பில் ஒரு விநாடி மூழ்கிவிட்டால் கூட அவருடைய அனேக துக்கம் மறந்து விடும். மேலும் நிரந்தரமாக சுகத்தின் ஊஞ்சலில் ஆடத் தொடங்கிவிடுவார்கள். வாழ்க்கையில் என்ன வேண்டுமோ, ஒருவேளை அதை யாராவது கொடுத்து விட்டார் என்றால், அது தான் அன்பின் அடையாளமாக இருக்கும். தந்தைக்கு குழந்தைகள் உங்கள் மேல் அந்த அளவு அன்பு இருக்கிறது. அதன் காரணமாக வாழ்க்கையின் சுகம், சாந்தியின் அனைத்து மன விருப்பங்களை நிறைவேற்றி விடுகிறார். தந்தை சுகம் தான் கொடுக்கிறார் என்றல்ல, ஆனால் சுகக் களஞ்சியத்தின் அதிபதி ஆக்கிவிடுகிறார். கூடவே சிரேஷ்ட பாக்கியத்தின் ரேகையை போடுவதற்கான எழுதுகோலையும் கொடுக்கிறார். எவ்வளவு விரும்பிகிறீர்களோ அந்த அளவு உங்களுடைய பாக்கியத்தை நீங்கள் உருவாக்க முடியும். இது தான் பரமாத்மாவின் அன்பு. எந்தக் குழந்தைகள் பரமாத்மாவின் அன்பில் எப்பொழுதுமே ஐக்கியமாகி இருக்கிறார்களோ, அதிலேயே மூழ்கியிருக்கிறார்களோ, அவர்களுடைய பொலிவு மற்றும் ஜொலிப்பு, அனுபவங்களின் கிரணங்கள் அந்த அளவு சக்திசாலியாக இருக்கும். எந்தவொரு பிரச்சனையும் அருகில் வருவது என்ன கண்ணெடுத்து பார்க்கக் முடியாது. அவர்களுக்கு ஒருபொழுதும் எந்தவிதமான கடின உழைப்பு இருக்க முடியாது. தந்தைக்கு குழந்தைகள் மீது அந்தளவு அன்பு இருக்கிறது. அதன் காரணமாக அமிர்தவேளையிலிருந்தே குழந்தைகளை பாலனை செய்கிறார். நாளின் தொடக்கமே எவ்வளவு சிரேஷ்டமானதாக இருக்கிறது. சுயம் பகவான் சந்திப்பதற்காக அழைக்கிறார். ஆன்மீக உரையாடல் செய்கிறார், சக்திகளை நிரப்புகிறார். தந்தையின் அன்பு நிறைந்த பாடல் உங்களை எழுப்புகிறது. எவ்வளவு அன்புடன் அழைக்கிறார், எழுப்பிவிடுகிறார் - இனிமையான குழந்தைகளே, அன்பான குழந்தைகளே வாருங்கள் . . . என்று. அந்த மாதிரி இந்த அன்பின் பாலனையின் நடைமுறை சொரூபம் 'சகஜயோகி வாழ்க்கை'. யார் மீது அன்பு ஏற்படுகிறதோ அவருக்கு என்ன பிடிக்குமோ அதைத் தான் செய்வார்கள். தந்தைக்கு குழந்தைகள் நிலைகுலைந்து போவது பிடிக்கவில்லை. எனவே ஒருபொழுதும் என்ன செய்வது, விஷயமே அப்படிப்பட்டது எனவே நிலைகுலைந்து போய் விட்டேன் என்று கூறாதீர்கள். ஒருவேளை நிலைகுலையச் செய்யக் கூடியது, வருகிறது என்றாலும், நீங்கள் நிலைகுலைந்த நிலைக்கு வராதீர்கள். பாப்தாதாவிற்கு குழந்தைகள் மீது அந்த அளவிற்கு அன்பு இருக்கிறது. எனவே ஒவ்வொரு குழந்தையும் தன்னை விட முன்னுக்குச் செல்ல வேண்டும் என்றே அவர் நினைக்கிறார். உலகத்தில் கூட யார் மீது அதிக அன்பு இருக்குமோ அவரை தன்னையும் விட அதிகம் முன்னேறச் செய்வார்கள். இது தான் அன்பின் அடையாளம். அந்த மாதிரி பாப்தாதாவும் என்னுடைய குழந்தைகளிடம் இப்பொழுது எந்தக் குறையும் இருக்கலாகாது. அனைவரும் சம்பூர்ணமாக, சம்பன்னமாக மற்றும் சமமாக ஆகிவிட வேண்டும் என்று கூறுகிறார்.



    பரமாத்மாவின் அன்பு ஆனந்தம் நிறைந்த ஊஞ்சல். இந்த சுகம் நிறைந்த ஊஞ்சலில் ஆடிக் கொண்டே எப்பொழுதும் பரமாத்மாவின் அன்பிலேயே ஐக்கியமாகி இருந்தீர்கள் என்றால், ஒருபொழுதும் ஏதாவது சூழ்நிலையின் மற்றும் மாயாவின் குழப்பமும் வர முடியாது. பரமாத்மாவின் அன்பு குறைவற்றது, துண்டிக்கப்படாத உறுதியானது, அந்த அளவு இருக்கிறது அதை அனைவரும் பிராப்தி செய்ய முடியும். ஆனால் பரமாத்மாவின் அன்பை பிராப்தி செய்வதற்கான விதி விலகியிருப்பவராக ஆவது. யார் எந்த அளவு விலகியிருக்கிறாரோ அந்த அளவு அவர் பரமாத்மா அன்பிற்கு உரியவர் ஆகிறார். பரமாத்மாவின் அன்பில் மூழ்கியிருக்கும் ஆத்மாக்கள் ஒருபொழுதும் எல்லைக்குட்பட்ட பிரபாவத்தில் வர முடியாது. எப்பொழுதும் அளவற்ற பிராப்திகளில் மூழ்கியிருப்பார்கள். அவரிடம் இருந்து எப்பொழுதும் ஆன்மீக நறுமணம் எப்பொழுதும் வரும். அன்பின் அடையாளம் - யார் மீது அன்பு ஏற்படுகிறதோ அவர் மீது அனைத்தையும் பலியாக்கி விடு வார்கள். தந்தைக்கு குழந்தைகள் மீது அந்தளவு அன்பு இருக்கிறது. அதனால் அந்த அன்பிற்கு பதிலாக தினசரி இவ்வளவு பெரிய கடிதம் எழுதுகிறார். அன்பு நினைவு கூறுகிறார் மற்றும் துணைவனாகி எப்பொழுது துணையைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். எனவே இந்த அன்பில் அனைத்து பலஹீனங்களை பலியாக்கி விடுங்கள். குழந்தைகள் மீது தந்தைக்கு அன்பு இருக்கிறது, எனவே தான் குழந்தைகள் என்னவாக இருக்கிறார்கள் மற்றும் எப்படி இருக்கிறார்கள் அப்படியே அவர்கள் என்னுடைய குழந்தைகள் என்று கூறுகிறார். அதே போல் நீங்களும் எப்பொழுதும் அன்பில் ஐக்கியமாகி இருந்து பாபா நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அனைத்துமே நீங்கள் தான் என்று உள்ளப்பூர்வமாகக் கூறுங்கள். ஒருபொழுதும் அசத்திய இராஜ்யத்தின் பிரபாவத்தில் வராதீர்கள். யார் அன்பிற்குரியவரோ அவரை நினைவு செய்வதில்லை, அவருடைய நினைவு இயல்பாகவே இருக்கும். அன்பு உள்ளத்தின் அன்பாக இருக்க வேண்டும், உண்மையானதாக மற்றும் சுயநலமற்றதாக இருக்க வேண்டும். எப்பொழுது என்னுடைய பாபா, அன்பான பாபா என்று கூறுகிறீர்களோ அப்பொழுது அன்பிற்குரியவர்களை ஒருபொழுதும் மறக்க முடியாது. மேலும் சுயநலமற்ற அன்பு தந்தையைத் தவிர வேறு எந்த ஆத்மாவிடமிருந்து கிடைக்க முடியாது. எனவே ஒருபொழுதும் எந்தவொரு தேவைக்காக நினைவு செய்யாதீர்கள். சுயநலமற்ற அன்பில் மூழ்கிவிடுங்கள்.



    தொடக்க நேரம், அமிர்தவேளையில் தன்னுடைய இதயத்தில் பரமாத்மாவின் அன்பை சம்பூர்ண ரூபத்தில் நிரப்பி விடுங்கள். ஒருவேளை இதயத்தில் பரமாத்மாவின் அன்பு, பரமாத்மா சக்திகள், பரமாத்மாவின் ஞானம் முழுமையாக இருக்கிறது என்றால், ஒருபொழுதும் வேறு எந்தப் பக்கமும் பற்றுதலோ அல்லது அன்போ செல்ல முடியாது. இந்த பரமாத்மாவின் அன்பு இந்த ஒரு ஜென்மத்தில் மட்டும் தான் பிராப்தி ஆகிறது. 83 ஜென்மங்கள் தேவ ஆத்மாக்கள் மற்றும் சாதாரண ஆத்மாக்கள் மூலமாக அன்பு கிடைத்தது, இப்பொழுது தான் பரமாத்மாவின் அன்பு கிடைக்கிறது. அந்த ஆத்மாவின் அன்பு இராஜ்ய பாக்கியத்தை இழக்க வைத்து விடுகிறது. மேலும் பரமாத்மாவின் அன்பு இராஜ்ய பாக்கியத்தைக் கொடுக்கிறது. எனவே இந்த அன்பின் அனுபவங்களில் மூழ்கியிருங்கள். தந்தை மீது உண்மையான அன்பு இருக்கிறது என்றால் அந்த அன்பின் அடையாளம் - சமமானவராக, கர்மாதீத் ஆக ஆகுங்கள். 'செய்விப்பவர்' ஆகி காரியங்கள் செய்யுங்கள் மற்றும் செய்வியுங்கள். கர்ம இந்திரியங்கள் உங்களை செய்விக்கக்கூடாது. ஆனால் நீங்கள் கர்ம இந்திரியங்கள் மூலமாக செய்வியுங்கள். ஒருபொழுதும் மனம், புத்தி மற்றும் சம்ஸ்காரத்தின் வசமாகி, எந்தவொரு காரியத்தையும் செய்யாதீர்கள். நல்லது.



    வரதானம் :

    செய்விப்பவரின் நினைவு மூலம் மிகப்பெரிய காரியத்தை மிகச் சுலபமாகச் செய்யக்கூடிய கருவியாகி செய்பவர் ஆகுக.



    பாப்தாதா ஸ்தாபனையின் மிகப்பெரிய காரியத்தை தானே செய்விப்பவர் ஆகி கருவியாக இருக்கும். செய்பவர்கள் குழந்தைகள் மூலமாக செய்வித்துக் கொண்டிருக்கிறார். செய்பவர் - செய்விப்பவர் என்ற வார்த்தையில் தந்தை மற்றும் குழந்தைகள் இருவருமே இணைந்து இருக்கிறார்கள். கைகள் குழந்தைகளுடைது மற்றும் செய்யும் காரியம் தந்தையினுடையது. உதவிக்கரம் நீட்டுவதற்கான பொன்னான வாய்ப்பு குழந்தைகளுக்கு மட்டும் தான் கிடைக்கிறது. ஆனால் செய்விப்பவர் செய்வித்துக் கொண்டிருக்கிறார், மேலும் நாங்கள் கருவியாகி செய்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு காரியத்திலும் செய்விப்பவரின் ரூபத்தில் பாபா துணைவனாக இருக்கிறார்.



    சுலோகன் :

    ஞானம் நிறைந்த ஆத்மா யார் என்றால், முறையீடு செய்வதற்குப் பதிலாக திருப்தியாக இருக்கிறாரோ அவர் தான்.





    ***OM SHANTI***

    No comments

    Say Om Shanti to all BKs