BK Murli Tamil 10 June 2018

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli Tamil 10 June 2018



        10.06.2018           காலை முரளி                                ஓம் சாந்தி '                      'அவ்யக்த பாப்தாதா''

        ரிவைஸ்           25.05.1983           மதுபன்


       

        '' பிரம்மா பாபாவிற்கு குழந்தைகளிடமிருந்து ஒரு விருப்பம் ''

       

        இன்று பாப்தாதா அனைத்து குழந்தைகளுடைய சேவையின், நினைவின் மற்றும் தந்தைக்குச் சமமாக ஆவதின் சார்ட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். பாப்தாதா மூலமாக என்னென்ன பொக்கிஷங்கள் கிடைத்திருக்கின்றன, தந்தையை நிராகார மற்றும் ஆகார ரூபத்திலிருந்து சாகாரத்தில் அழைத்திருக்கிறீர்கள், மேலும் பாப்தாதாவும் குழந்தைகளின் அன்பில், குழந்தைகள் அழைத்ததினால் வந்திருக்கிறார், சந்திப்பு செய்தார், இப்பொழுது அதன் பலன் சொரூபமாக அனைத்து குழந்தைகளும் எந்தவிதமான பழமாக ஆகியிருக்கிறார்கள் – பிரத்யக்ஷ பழமாக ஆகியிருக்கிறார்களா? பருவ காலத்து பழமாக ஆகியிருக்கிறார்களா? பார்ப்பதற்கு அழகான ரூபமுடைய பழமாக ஆகியிருக்கிறார்களா மற்றும் நல்ல ரூபம் மற்றும் நல்ல சாறு நிறைந்த பழமாக ஆகியிருக்கிறார்களா? நேரடி பாலனையின் அர்த்தம் மரத்திலேயே பழுத்த பழமாக ஆகியிருக்கிறீர்களா அல்லது பழுக்காத பழங்களை ஏதாவது ஓரிரு விசேஷம் என்ற மசாலாவின் ஆதாரத்தில் தன்னை பார்ப்பதற்கு மிக வண்ணம், ரூபம் உடைய வராக கொண்டு வந்திருக்கிறீர்களா அல்லது இது வரையிலும் பழுக்காத பழமாகவே இருக்கிறீர்களா? என்று குழந்தைகளின் இந்த சார்ட்டை பார்த்துக் கொண்டிருந்தோம். சங்கமயுகத்தின் விசேஷத்தின் பிரகாரம், பிரத்யக்ஷ பழம் கிடைக்கும் நேரத்திற்கு ஏற்றாற்போல், ஒவ்வொரு பாடத்திலும், ஒவ்வொரு அடியிலும், காரியத்தில் பிரத்யக்ஷ பலன் கொடுக்கக்கூடிய, பிரத்யக்ஷ பழத்தை அருந்தக்கூடிய தந்தையின் பாலனையால் பழுத்த வண்ணம், ரூபம், சாறு மூன்றினால் நிரம்பிய விலைமதிக்க முடியாத பழமாக இருக்க வேண்டும். இப்பொழுது உங்களை நீங்களே நான் யார் என்று கேளுங்கள். எப்பொழுதும் தந்தையுடன் இருப்பதின் வண்ணம், எப்பொழுதும் பிரம்மா பாபாவிற்குச் சமமாக தந்தையை வெளிப்படுத்தும் ரூபம், எப்பொழுதும் அனைத்து பிராப்திகளின் சாறு அந்த மாதிரி தந்தைக்குச் சமமாக ஆகியிருக்கிறேனா? இன்றைய நாட்களில் பிரம்மா பாபா பிராமண குழந்தைகளின் சமமான சம்பன்ன நிலையை விசேஷமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். முழு நேரமும் ஒவ்வொரு விசேஷ குழந்தையின் சித்திரம் மற்றும் சரித்திரம் இரண்டையும் எதிரில் வைத்து எந்த அளவு சம்பன்னம் ஆகியிருக்கிறார் என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார். மாலையின் மணியாக யார் இருக்கிறார், மேலும் எத்தனை பேர் தன்னுடைய வரிசை எண்ணில் வந்து சேர்ந்து விட்டார்கள் என்ற அந்த கணக்கின் படி ரிசல்ட்டைப் பார்த்து விசேஷமாக பிரம்மா பாபா கூறினார் - பிராமண ஆத்மா என்றால், ஒவ்வொரு காரியத்திலும் பாப்தாதாவை பிரத்யக்ஷம் செய்பவர். காரியம் என்ற எழுதுகோள் மூலமாக ஒவ்வொரு ஆத்மாவின் இதயத்தில், புத்தியில் தந்தையின் சித்திரத்தை அல்லது சொரூபத்தை வரையக்கூடிய ஆன்மீக ஓவியராக ஆகியிருக்கிறீர்கள் இல்லையா? இப்பொழுது பிரம்மா பாபாவிற்கு இந்த சீசனின் ரிசல்ட்டில் குழந்தைகளிடம் ஒரு விருப்பம் இருக்கிறது. என்ன விருப்பமாக இருக்கும்? ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய காரியங்கள் என்ற கண்ணாடி மூலமாக தந்தையின் சாட்சாத்காரம் செய்விக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு அடியிலும் தந்தையைப் பின்பற்றி நடந்து தந்தைக்குச் சமமாக அவ்யக்த ஃபரிஷ்தா ஆகி கர்மயோகியின் பங்கை செய்ய வேண்டும் என்ற இந்த ஆசை தான் தந்தைக்கு இருக்கிறது. இந்த விருப்பத்தை நிறைவேற்றுவது கடினமா அல்லது சுலபமா? பிரம்மா பாபாவோ எப்பொழுதுமே தொடக்கத்திலிருந்தே 'உடனடி தானம் மகாபுண்ணியம்' என்ற இதே சம்ஸ்காரத்தை சாகார ரூபத்தில் கொண்டு வந்தவராக இருந்தார் இல்லையா! செய்யலாம், யோசிக்கலாம், திட்டத்தை உருவாக்குவோம் என்ற இந்த சம்ஸ்காரத்தை எப்பொழுதாவது பிரம்மா பாபாவிடம் நடைமுறை ரூபத்தில் பார்த்தீர்களா? உடனே செய்வதற்கான மகாமந்திரம் ஒவ்வொரு எண்ணம் மற்றும் காரியத்தில் பார்த்தீர்கள் இல்லையா? அதே சம்ஸ்காரத்தின் பிரகாரம் குழந்தைகளிடமிருந்தும் என்ன விருப்பத்தை வைப்பார். சமமாக ஆக வேண்டும்என்ற விருப்பம் வைப்பார் இல்லையா? அனைவரையும் விட முதலில் பாப்தாதா மதுபன்னைச் சேர்ந்தவர்களை முன்னுக்கு வைக்கிறார். நீங்கள் இருப்பதும் முன்னுக்குத் தான் இல்லையா? அனைவரும் மிக நல்ல ஒரு உதாரணத்தை எங்கு பார்க்கிறார்கள்? மிகப்பெரிய ஷோ கேஸ் மதுபன் தான் இல்லையா. பாரதம் மற்றும் வெளிநாட்டிலிருந்து அனைவரும் அனுபவம் செய்வதற்காக மதுபன்னில் வருகிறார்கள் இல்லையா? அந்த மாதிரி மதுபன் அனைத்தையும் விட பெரிய காட்சி பெட்டகம். அந்த மாதிரி காட்சி பெட்டகத்தில் வைக்கப்படும் காட்சிப் பொருள் எவ்வளவு விலை மதிக்க முடியாததாக இருக்கும். பாப்தாதாவை சந்திப்பதற்காக மட்டும் வருவதில்லை ஆனால் பரிவாரத்தின் பிரத்யக்ஷ ரூபத்தை பார்ப்பதற்காகவும் வருகிறார்கள். அந்த ரூபத்தை காண்பிப்பவர்கள் யார்? பரிவாரத்தின் பிரத்யக்ஷ சாம்பிள், கர்மயோகியின் பிரத்யக்ஷ சாம்பிள், களைப்பற்ற சேவாதாரியின் பிரத்யக்ஷ சேம்பிள் வரதான பூமியின் வரதானி சொரூபத்தின் பிரத்யக்ஷ சாம்பிள் யார்? மதுபன் நிவாசிகள் தான் இல்லையா?

       

        பாகவதத்தின் வாழ்க்கைக் கதையை கேட்பதற்கு மிகுந்த மகத்துவம் இருக்கிறது. முழு பாகவதத்திற்கு இந்த அளவு இருப்பதில்லை. அந்த மாதிரி சரித்திர பூமியில் வாழ்வது மதுபன் நிவாசிகள் தான் இல்லையா. தன்னுடைய மகத்துவத்தையோ நினைவு வைக்கிறீர்கள் தான் இல்லையா? மதுபன் நிவாசிகளுக்கு நினைவு சொரூபம் ஆவதில் கடினம் இருக்கிறதா அல்லது சுலபமா? மதுபன்னே பிரஜைகள் மற்றும் இராஜாக்கள் இரண்டு ஆத்மாக்களுக்கும் வரதானம் கொடுப்பது.

       

        இன்றைய நாட்களிலோ பிரஜை ஆத்மாக்களும் தன்னுடைய வரதானத்தின் உரிமையை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது பிரஜைகளும் வரதானம் பெற்றுக் கொள்கிறார்கள் என்றால் வரதான பூமியில் இருக்கக்கூடியவர்கள் எவ்வளவு வரதானங்களினால் நிரம்பிய ஆத்மாக்களாக இருப்பார்கள்? இப்பொழுதைய நேரத்திற்கு தகுந்தாற்போல் அனைத்து விதமான பிரஜைகள் தங்களுடைய அதிகாரத்தை பெறுவதற்காக நாலா புறங்களிலிருந்து வரத் தொடங்கி விட்டார்கள். நாலாபுறங்களிலும் சகயோகி மற்றும் தொடர்பில் வரும் ஆத்மாக்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரஜைகளின் சீசன் தொடங்கிவிட்டது. இராஜாக்களோ தயார் தான் இல்லையா! அல்லது இராஜாக்களின் கொடை எப்பொழுதாவது கிழிந்து விடுகிறது அல்லது இருப்பதே இல்லையா? இதய சிம்மாசனதாரி தான் கிரீடம் அணிந்தவராக ஆக முடியும். இதய சிம்மாசனதாரியாக இல்லை என்றால் கிரீடமும் பொருந்தாது. எனவே சின்ன சின்ன விஷயங்களில் நிலை குலைந்து போவார்கள். இந்த நிலை குலைந்து போவது இதய சிம்மாசனத்தில் அதாவது தன்னுடைய ஆசனத்தில் அமராமல் இருப்பதற்கான அடையாளம். ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ஆத்மாவை நபர்கள் என்ன ஆனால் இயற்கையும் நிலை குலைந்து போகச் செய்ய முடியாது. மாயாவின் பெயர் அடையாளமே இருக்காது. நீங்கள் அந்த மாதிரி ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கிரீடம் அணிந்திருக்கும் வரதானி ஆத்மாக்கள் தான் இல்லையா? புரிந்ததா? மதுபன்னின் பிராமணர்களின் வாழ்க்கைக்குள மகத்துவம் இருக்கிறது. நல்லது. இன்றோ மதுபன்நிவாசிகளுக்கு சந்திப்பதற்கான வாய்ப்பு மற்ற அனைவரும் கேளரியில் அமர்ந்திருக்கிறார்கள். கேளரியும் நல்லதாக கிடைத்தது தான் இல்லையா.?

       

        ஆதி இரத்தினங்கள், ஆதி நிலையில் வந்து விட்டீர்கள் இல்லையா? மத்தியம் மறந்து விட்டது தான் இல்லையா? கிளைகள் ஆகியவை அனைத்தும் விடுபட்டு விட்டன இல்லையா? ஆதி இரத்தினங்கள் அனைவரும் பறக்கும் பறவையாகி சென்று கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? பொன் மானின் பின்னாலேயும் செல்லாதீர்கள். எந்தவிதமான கவர்ச்சியின் வசமாகி கீழே வராதீர்கள். எப்படிப்பட்ட சூழ்நிலை புத்தி என்ற கால்களை அசைப்பதற்காக வந்தாலும் ஆனால் நீங்கள் ஆடாத அசையாதவர்கள், பற்றுதலை வென்று மற்றும் பணிவாக இருங்கள், அப்பொழுது தான் பறக்கும் பறவை ஆகி பறக்க முடியும், மேலும் பறக்க வைத்துக் கொண்டே இருப்பீர்கள். எப்பொழுதும் விலகி இருப்பவர் மற்றும் தந்தைக்குப் பிரியமானவர். ஒரு பொழுதும் எந்தவொரு நபரின் மேலும் ஏதாவது எல்லைக்குட்பட்ட பிராப்தியின் அன்பிற்குரியவராக ஆகாதீர்கள். ஞானம் நிறைந்த ஆத்மாக்களின் எதிரில் இந்த எல்லைக்குட்பட்ட பிராப்திகள் தான் பொன் மானின் ரூபத்தில் வருகின்றன. எனவே ஆதி இரத்தினங்கள், ஆதி பிதாவிற்குச் சமமாக எப்பொழுதும் நிராகாரி, நிர்விகாரி, நிர்அகங்காரியாக இருக்க வேண்டும். புரிந்ததா? நல்லது.

       

        அந்த மாதிரி ஒவ்வொரு காரியத்தில் தந்தையின் பிரத்யக்ஷ சொரூபத்தை காண்பிக்கக்கூடிய, புண்ணிய ஆத்மாக்களுக்கு, ஒவ்வொரு காரியத்தில் பிரம்மா பாபாவை பின்பற்றி நடப்பவர்களுக்கு, உலகின் எதிரில் ஓவியர் ஆகி, தந்தையின் சித்திரத்தை காண்பிக்கக்கூடிய - அந்த மாதிரி பிரம்மா பாபாவிற்கு சமமான சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

       

        அனைத்து மகாரதிகள் சேவைக்காக என்னென்ன திட்டங்களை உருவாக்கியிருக்கிறீர்கள், அதிலேயும் விசேஷமாக இளைஞர்களுக்காக உருவாக்கியிருக்கிறீர்கள் இல்லையா? இளைஞர்கள் வர்க்கத்தின் சேவை செய்வதற்கு முன்பாக எப்பொழுது இளைஞர்களின் வர்க்கம் அரசாங்கத்தின் எதிரில் பிரத்யக்ஷம் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை வைத்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், மைதானத்திற்கு வருவதற்கு முன்பு பேசுவது குறைவு, செய்வது அதிகம் என்ற இந்த ஒரு விஷயத்தின் மேல் எப்பொழுதும் கவனம் இருக்க வேண்டும். வாய் மூலமாக சொல்ல வேண்டியதில்லை ஆனால் காண்பிக்க வேண்டும். மேடையில் காரியத்தின் சொற்பொழிவை செய்ய வேண்டும். வாயினால் பேசும் சொற்பொழிவையோ தலைவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் ஆன்மீக இளைஞர்களின் வர்க்கம் வாயினால் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள் மட்டும் இல்லை - ஆனால் அவர்களுடைய கண்கள், நெற்றி, அவருடைய காரியம் சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு பொறுப்பாளர் ஆகிவிடட்டும். காரியத்தின் சொற்பொழிவை வேறு யாரும் செய்ய முடியாது. வாயினால் செய்யும் சொற்பொழிவை அனேகர்கள் செய்ய முடியும். செய்யும் காரியம் தந்தையை வெளிப்படுத்த முடியும். செய்யும் காரியம் ஆன்மீகத்தை நிரூபிக்க முடியும். இன்னொரு விஷயம் இளைஞர்களின் வர்க்கம் நிரந்தர வெற்றி அடைவதற்காக தங்களிடம் ஒரு ஆன்மீக தாயத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அது எது? மரியாதை கொடுப்பது தான் மரியாதையைப் பெறுவது. இந்த மரியாதை கொடுப்பதின் பதிவேடு வெற்றியின் அழியாத பதிவேடாக ஆகிவிடும். இளைஞர்களின் வர்க்கத்திற்காக எப்பொழுதும் வாயில் 'முதலில் நீங்கள்' என்ற வெற்றிக்கான மந்திரம் இருக்கட்டும். இந்த மகாமந்திரம் மனதில் மிக உறுதியாக இருக்கட்டும். வாய் மட்டும் 'முதலில் நீங்கள்' என்று கூறுகிறது மற்றும் மனதில் 'முதலில் நான்' என்று அப்படி இருக்க வேண்டாம். அந்த மாதிரி சிலர் சாதுர்யமானவர்களும் இருக்கிறார்கள், அவர்கள் வாய் மூலம் முதலில் நீங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் மனதில், முதலில் நான் என்ற பாவனை இருக்கிறது. முதலில் நான் என்பதை யதார்த்த ரூபத்தில் அழித்து மற்றவர்களை முன்னேற்றம் அடைய வைப்பது என்றால், தான் முன்னேறுவது என்று புரிந்து கொண்டு இந்த மகாமந்திரத்தை கடைபிடித்துக் கொண்டே வெற்றியை அடைந்து கொண்டே இருப்பார்கள். புரிந்ததா? இந்த மந்திரம் மற்றும் தாயத்து எப்பொழுதும் உடன் இருக்கிறது என்றால் பிரத்யக்ஷத்தின் முரசு ஒலித்து விடும்.

       

        திட்டங்களோ மிக நன்றாக இருக்கின்றன/ ஆனால் பிளைன் (தெளிவான) புத்தி உடையவராகி பிளானை (திட்டத்தை) நடைமுறையில் கொண்டு வாருங்கள். சேவை நன்றாக செய்யுங்கள். ஆனால் ஞானத்தை அவசியம் பிரத்யக்ஷம் செய்யுங்கள். உலகத்திலும் சாந்தி, சாந்தி என்று மட்டும் அனைவரும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். அசாந்தியில் சாந்தியை கலந்து விடுகிறார்கள். அமைதி வேண்டும் என்று வெளிமுகமாகவோ அனைவரும் கோஷம் இடுகிறார்கள். அமைதியற்றவர்களும் அமைதியின் கோஷத்தைத் தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அமைதியோ வேண்டும். ஆனால் எப்பொழுது தன்னுடைய மேடையில் நிகழ்ச்சிகள் செய்கிறீர்கள் என்றால். தன்னுடைய அதிகாரத்துடன் பேசுங்கள். வாயுமண்டலத்தைப் பார்த்து பேசாதீர்கள். அதையோ நீண்ட காலம் செய்தீர்கள், மேலும் அந்த நேரத்திற்கு ஏற்றபடி அது சரியாக இருந்தது. ஆனால் இப்பொழுது பூமி எப்பொழுது உருவாகி விட்டது என்றால். ஞானத்தின் விதை போடுங்கள். சொற்பொழிவின் தலைப்பும் அந்த மாதிரி இருக்க வேண்டும். உலகத்தினர் ஆர்வம் காண்பிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக நீங்கள் தலைப்பை மாற்றிவிடுகிறீர்கள். ஆனால் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் வரட்டும். எத்தனை மேளாக்கள், எத்தனை மகாநாடுகள், எத்தனை கலந்துரையாடல்கள் ஆகியவை செய்திருக்கிறீர்கள். இத்தனை வருடங்களோ மக்களின் ஆதாரத்தில் தலைப்பை உருவாக்கினீர்கள். குப்த வேஷத்தில் இன்னும் எவ்வளவு காலம் தான் இருப்பீர்கள். இப்பொழுதோ பிரத்யக்ஷம் ஆகிவிடுங்கள். நேரத்திற்கு தகுந்தாற்போல் இதற்கு முன்பு என்ன நடந்ததோ அது நடந்தது தான். ஆனால் இப்பொழுது தன்னுடைய மேடையில் பரமாத்மா குண்டைப் போடுங்கள். இவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று அவர்களுடைய புத்தி சுற்றட்டும். இல்லை என்றால் மிக நல்ல விஷயம் பேசினார்கள் என்று மட்டும் கூறுகிறார்கள். அதனால் நல்லது, நல்லதாகவே இருந்து விட்டது. மேலும் கூறப்பட்டது, கூறப்பட்டதாகவே இருந்து விடுகிறது. ஏதாவது புதிதாக உண்டாக்குங்களேன். ஒவ்வொருவருக்கும் அவருடைய உரிமை இருக்கிறது. நல்ல பாய்ன்ட்டுக்களையும் பேசுங்கள், மேலும் அதிகாரத்துடன் மற்றும் அன்புடன் பேசினீர்கள் என்றால். யாரும் ஒன்றும் செய்ய முடியாது. பொதுவாக பல இடங்களில் நல்லதாக ஏற்றுக் கொள்கிறார்கள். தன்னுடைய விஷயங்களை தெளிவு படுத்துவதில் மிகவும் சக்தி நிறைந்தவர்கள் என்று நினைப்பார்கள். ஆனால் எந்த முறையில் பேச வேண்டும் அதையும் பார்க்க வேண்டும். ஆனால் அதிகாரம் மட்டுமின்றி, அன்பு மற்றும் அதிகாரம் இரண்டும் சேர்ந்தே இருக்க வேண்டும். அம்பும் எய்யுங்கள், கூடவே தேய்த்தும் விடுங்கள் என்று எப்பொழுதும் பாப்தாதா கூறுகிறார். மரியாதையையும் நல்ல முறையில் கொடுங்கள், ஆனால் தன்னுடைய சத்தியத்தையும் நிரூபியுங்கள். பகவான் கூறியது என்று கூறுகிறீர்கள் இல்லையா? தன்னுடையது என்றோ கூறுவதில்லை தானே! படங்களைப் பார்த்தும் பிரச்சனை செய்கிறார்கள் என்றால். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? படங்களையோ அகற்றிவிடுவதில்லை தானே? சாகார ரூபத்திலோ யாருடைய எதிரிலாவது முற்றிலும் அதிகாரத்தோடு சொல்வதின் பிரபாவமாக என்ன வெளியானது. எப்பொழுதாவது சண்டை ஏற்பட்டதா? இந்த முறையை சொற்பொழிவு செய்வதிலும் கற்றுக் கொள்ளுங்களேன். ஞானத்தின் முறையில் எப்படி பேசுவது என்பதைப் படித்திருக்கிறீர்கள் இல்லையா? இப்பொழுது மீண்டும் இந்த படிப்பை செய்யுங்கள். உலகத்தின் கணக்குப்படி தன்னை மாற்றியிருக்கிறீர்கள், பாஷையையும் மாற்றியிருக்கிறீர்கள் இல்லையா! எனவே உலகத்தின் ரூபத்தில் எப்பொழுது மாற்றம் செய்ய முடியும் என்றால். யதார்த்த ரூபத்தில் என்ன செய்ய முடியாது. எது வரை இந்த மாதிரியே நடக்கும்? இவர்கள் என்ன கூறுகிறார்களோ அது மிக நன்றாக இருக்கிறது என்று இந்த விஷயத்திலோ குஷி அடைகிறார்கள். கடைசியில் 'இது தான் யதார்த்த ஞானம்' என்று உலகத்தில் பிரசித்தி ஆக வேண்டும். இதனால் தான் கதி, சத்கதி கிடைக்கும். இந்த ஞானம் இன்றி கதி, சத்கதி கிடைக்காது. இப்பொழுதோ பாருங்கள், யோகா பயிற்சி முகாம் செய்து செல்கிறார்கள். வெளியில் சென்ற பிறகு மீண்டும் அதே போல பரமாத்மா எங்கும் நிறைந்தவர் என்று கூறுவார்கள். இங்கிருக்கும் போதோ யோகா மிக நன்றாகச் செய்தேன் என்று கூறுவார்கள், அஸ்திவாரம் மாறுவதில்லை. உங்களுடைய சக்தியின் பிரபாவத்தினால் பரிவர்த்தனை ஆகிவிடுகிறார்கள். ஆனால் அவர்களே சக்திசாலி ஆவதில்லை. என்ன நடந்ததோ அதுவும் அவசியம் தான்! இருந்தது. எந்த பூமி கட்டாந்தரையாக ஆகிவிட்டதோ அந்த பூமியில் ஏர் உழுது தகுதியான பூமியாக ஆக்குவதில் இந்த முறை தான் யதார்த்தமாக இருந்தது. ஆனால் இறுதியிலோ சக்திகள் தன்னுடைய சக்தி ரூபத்திலும் வருவார்கள் இல்லையா? அன்பின் ரூபத்தில் வாருங்கள், ஆனால் இவர்கள் சக்திகள் இவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் இதயத்தை பரிவர்த்தனை செய்யக்கூடியது, புத்தி மாறி விட வேண்டும் 'இல்லை' என்பது 'ஆம்' என்பதில் வந்து விட வேண்டும். இந்த ரூபமும் பிரத்யக்ஷம் ஆகும் இல்லையா. இப்பொழுது அதை பிரத்யக்ஷம் செய்யுங்கள் அதற்கான திட்டத்தை உருவாக்குங்கள். வருகிறார்கள், குஷியடைந்து செல்கிறார்கள். அதுவோ யாருக்கு இந்தளவு சௌகரியம், இந்தளவு அன்பு, உபசரிப்பு கிடைக்கிறது என்றால் அவசியம் திருப்தி அடைந்து செல்வார்கள். ஆனால் சக்தி ரூபம் ஆகிச் செல்வதில்லை. பிரம்மா பாபா அனைத்து பட விளக்கக் கண்காட்சியில் கேள்வி பதில் படத்தையும் மாட்டுங்கள் என்று கூறுவார்? அதில் எந்த விஷயம் இருந்தது? அம்பிற்கு சமமான விஷயங்கள் இருந்தது இல்லையா? படிவத்தை நிரப்பித் தர கூறுவார். இது சரியா அல்லது தவறா? ஆம் மற்றும் இல்லை என்று எழுதுங்கள். படிவத்தை நிரப்பி வாங்குவார் இல்லையா? எனவே என்ன திட்டங்களாக இருந்தது? ஒன்று அப்படியே நிரப்பி வாங்குவது. அவசரத்தில் சரி, தவறு என்று எழுதிவிட்டார். ஆனால் புரிய வைத்து நிரப்புங்கள். பிறகு அதன் அனுசாரம் யதார்த்தமாக படிவத்தை நிரப்புவார்கள். கண்டிப்பாக நிரூபிக்கவோ வேண்டும் அதற்கான திட்டத்தை நீங்கள் உங்களுக்குள் உருவாக்குங்கள். அதில் அன்பும் இருக்க வேண்டும், அதிகாரமும் இருக்க வேண்டும். மரியாதையும் இருக்க வேண்டும் மேலும் சத்தியமும் வெளிப்பட வேண்டும். அப்படியே யாரையாவது இழிவு படுத்துவோமா என்ன? அவைகளும் எங்களுடைய கிளை நிலையங்கள், எங்களிலிருந்து உருவானவை தான் என்ற இந்த லட்சியத்தோடு புரிய வையுங்கள். அவர்களுக்கு மரியாதை கொடுப்பதோ நம்முடைய கடமை. சிறியவர்களுக்கு அன்பு கொடுப்பதோ நம்முடைய பாரம்பரியம். நல்லது.

       

        வரதானம் :

        இரக்க உணர்வை தாரணை செய்து அனைத்து பிரச்சனைகளையும் முடிவு செய்யக்கூடிய மாஸ்டர் வள்ளல் ஆகுக.


       

        எந்த ஆத்மாக்களின் தொடர்பில் வருகிறீர்களோ, அவர்கள் எப்படிப்பட்ட சம்ஸ்காரம் உள்ளவர்களாக இருந்தாலும், எதிர்ப்பு செய்பவராக இருந்தாலும், சுபாவத்தோடு மோதுபவராக இருந்தாலும், கோபப்படுபவராக இருந்தாலும், எவ்வளவு தான் விரோதியாக இருந்தாலும், உங்களுடைய இரக்க பாவனை அவருடைய அனேக ஜென்மங்களின் கடுமையான கணக்கு வழக்கை ஒரு நொடியில் முடித்து விடும். நீங்கள் உங்களுடைய அனாதி, ஆதி வள்ளல் தன்மையின் சம்ஸ்காரத்தை வெளிப்படுத்தி மட்டும் இரக்க உணர்வை தாரணை செய்து விட்டீர்கள் என்றால். பிராமண குடும்பத்தின் அனைத்து பிரச்சனைகளும் முடிவடைந்து விடும்.

       

        சுலோகன் :

        தன்னுடைய இரக்க மனமுடைய சொரூபம் மற்றும் திருஷ்டி மூலம் ஒவ்வொரு ஆத்மாவையும் பரிவர்த்தனை (மாற்றம்) செய்வது தான் புண்ணிய ஆத்மா ஆவது.

      

    ***OM SHANTI

    No comments

    Say Om Shanti to all BKs