BK Murli Tamil 13 June 2018

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli Tamil 13 June 2018

        13.06.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


        

        "இனிமையான குழந்தைகளே! உங்களை மனிதக் கூட்டத்தின் துக்கங்களின் வேதனைகளிலிருந்து விடுவிப்பதற்காக உங்களனைவருடைய பிராண (உயிருக்கு) ஆதாரமாக இருப்பவர் வந்துள்ளார், அவர் உங்களுக்கு சொர்க்கத்தின் ஆஸ்தியைத் தருகின்றார். அவர் சர்வவியாபி அல்ல.

        

        கேள்வி :

        இந்த இராஜயோகத்தில் எந்த ஒரு யோகம் சதா இணைந்துள்ளது (கம்பைண்டு)?

        

        பதில் :

        இந்த இராஜயோகத்தில் பிரஜாயோகம் சதா இணைந்துள்ளது. ஏனெனில் இராஜா இராணியுடன் கூட பிரஜைகளும் வேண்டும். அனைவருமே இராஜாவாகி விட்டால் யார் மீது ராஜ்யம் செய்வார்கள்? எல்லாருமே சொல்கிறார்கள், நாங்கள் மகாராஜா மகாராணி ஆவோம் என்று. நாங்கள் இராஜயோகம் கற்றுக் கொள்ள வந்துள்ளோம். ஆனால் இராஜா, இராணி ஆவதற்கோ மிகவும் தைரியம் வேண்டும். முழு பலம் வேண்டும். பாபா மீது முழுமையாக சமர்ப்பணம் ஆகவேண்டும். அப்போது தான் இராஜபதவியில் போக முடியும்.

        

        பாடல் :

        அன்பிற்குரியவரே, வந்து சந்தியுங்கள்....

        

        ஓம் சாந்தி.

        பிரியதர்சனை அழைப்பது யார்? பிரியதர்சனியானவள் மணமகள் அல்லது பக்தை என்று சொல்லப் படுகிறாள். பிரிய தர்சனை அழைக்கின்றார்கள், பகவானை, அதாவது தந்தையை. இதில் சர்வவியாபியின் ஞானம் நிற்காது. பிரியதர்சனை அழைக்கின்றனர். 'வந்து சந்தியுங்கள். ஜீவாத்மாக்கள் தங்களுடைய பரமபிதா பரமாத்மாவை அழைக்கின்றனர். ஓ! பரமபிதா பரமாத்மா, வாருங்கள், இரக்கம் காட்டுங்கள். சொர்க்கத்தில் இம்மாதிரி அழைக்க மாட்டார்கள். நிச்சயமாக இது துக்க உலகமாக இருப்பதால்தான் பிரியதர்சனை அழைக்கின்றனர். பிரியதர்சன் பகவான் ஒருவரே! படைப்பவர் ஒருவரே! உலகத்தின் அல்லது சிருஷ்டியின் சக்கரமும் ஒன்றே தான். குழந்தைகளுக்குத் தெரியும், கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வரும். சத்யுகத்தில் மீண்டும் ஒரே ஆதிசனாதன தேவி- தேவதைகளின் இராஜ்யம் இருக்கும். இது ஞானம் இல்லையா? குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள், பிரியதர்சன் எப்படி வந்திருக்கிறார் என்பதை. சிவனோ நிராகாராக இருக்கிறார். நீங்கள் அனைவரும் நிராகாரி ஆத்மாக்கள். இங்கே வந்திருக்கிறீர்கள், நாடகத்தின் பாகத்தை நடிப்பதற்காக. இப்போது நிராகார் தந்தை எப்படி வந்தார்? இராஜயோகத்தை யார் கற்றுத் தந்தார்? கிருஷ்ணரோ கற்றுத்தர இயலாது. அவரோ சத்யுக ஸ்தாபனை செய்பவர் அல்ல. அவரை, படைப்பவர் எனச் சொல்ல மாட்டார்கள். ஜீவாத்மாக்கள் அனைவருக்கும் பிரியதர்சன் என்று ஒரு பரமபிதா பரமாத்மா படைப்பவர் நிராகாரையே சொல்வார்கள். அவர் சொல்கிறார், எனது பிறந்த நாளை சிவஜெயந்தியைக் கொண்டாடுகின்றனர். எனது பிறவி கிருஷ்ணருடையதைப் போன்றது அல்ல. கிருஷ்ணர் எப்படி தாயின் கர்ப்பத்தில் பிறவி எடுக்கின்றார். அதுவும் குழந்தைகளுக்கு சாட்சாத்காரமாகக் காட்டப் பட்டுள்ளது. பாபா சொல்கிறார், எனது பெயர் ருத்ரன் என்பதாகும். கீதையில் உள்ளது.. இது ருத்ரஞான யக்ஞம் அதாவது சிவனால் படைக்கப் பெற்ற யக்ஞம். ஆக, நிச்சயமாக நிராகார் சிவன் சாகாரத்தில் (மனித சரீரத்தில்) வரவேண்டியுள்ளது. பாபா வந்து சொல்லிப் புரிய வைக்கிறார். இந்தப் பாடலில் இரண்டு வரிகளிலேயே சர்வவியாபியின் ஞானம் விடுபட்டுப் போகின்றது. பிரியதர்சனைக் கிருஷ்ணன் எனச் சொல்ல மாட்டார்கள். அழைக்கின்றனர், ஓ காட்ஃபாதர்!, ஓ, பிராண ஆதாரமே! ஏனென்றால் இவர் அனைவருடைய பிராணனுக்கும் (உயிர்களுக்கும்) ஆதாரம். அனைவரையும் மனிதக் கூட்டத்தின் துக்கங்களிலிருந்து விடுவிக்கின்றார். ஆக, அவர் நிச்சயமாக இங்கே வந்தாக வேண்டும். பாபா சொல்கிறார், நான் கல்ப-கல்பமாக கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகின்றேன். இதுவே கல்யாண்காரி சங்கமயுகம். சத்யுகத்திற்குப் பிறகோ இரண்டு கலைகள் குறைந்து விடுகின்றன. இந்த சங்கமயுகமே உயர்ந்து செல்வதற்கான யுகம். இதில் புத்தி மூலம் செயலாற்ற வேண்டும். புதியவர்களுக்கு மிக சுலபமாகப் புரிய வைக்கிறார்கள். உங்களுடைய தந்தை பரமபிதா பரமாத்மா சிவன். அவரை நினைவு செய்யுங்கள், போதும்! மற்ற குரு, முனிகள் முதலானோருடைய மந்திரங்களெல்லாம் பக்தி மார்க்கத்தினுடையவை. பக்தி அரைக்கல்பம் நடைபெறுகின்றது. பிறகு ஞானத்தின் ஆஸ்தி அரைக்கல்பம் நடைபெறுகின்றது. ஞானம் அங்கே இருக்காது. ஞானம் தரப்படுவது துர்கதியிலிருந்து சத்கதிக்கு அழைத்துச் செல்வதற்காக. குருவின் வேலை, சிஷ்யர்கள் அல்லது பின்பற்றுவோருக்கு கதி-சத்கதி அளிப்பது. ஆனால் கதி-சத்கதி என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. சொர்க்கத்தின் சத்கதி அளிப்பவர் ராம் எனப் பாடவும் செய்கின்றனர். பதீத பாவன், சீதைகள் (ஆத்மாக்கள்) அனைவருக்கும் இராம். குழந்தைகள் அறிவார்கள், சத்யுகத்தில் ஒரு தர்மம் மட்டுமே இருக்கும். சூரியவம்சி இராஜ்யம் நடைபெறும். பிறகு இராம இராஜ்யம் திரேதாவில் இரண்டு கலைகள் குறைந்து விடுகின்றன. அங்கே இராவணன் முதலானோர் இருக்க மாட்டார்கள். தொந்தரவுகளின் விஷயம் எதுவும் இருக்காது. இந்த உலகம் முழுவதுமே இலங்கை -- இங்கே இராவணனின் இராஜ்யம் நடைபெறுகின்றது. இச்சமயம் மனிதர்கள் அனைவரும் குரங்குகளைவிட மோசமாக உள்ளனர். ஏனெனில் அனைவருக்குள்ளும் ஐந்து விகாரங்கள் பிரவேசமாகி உள்ளன. மனிதர்களிடம் எவ்வளவு கோபம் உள்ளது! ஒருவர் மற்றவரை எப்படிக் கொலை செய்கிறார்கள்! சாவதற்கும் சாகடிப்பதற்குமான ஏற்பாடுகளைச் செய்கின்றனர். நீங்கள் அனைவரும் விகாரிகளாக இருந்தீர்கள். இப்போது பாபா வந்து இராவணனின் மீது வெற்றி கொள்ள வைக்கிறார். சாஸ்திரங்களில் என்னென்னவெல்லாம் எழுதியிருக்கிறார்கள்! வால் தீப்பிடித்தது, இலங்கை முழுவதும் எரிந்து விட்டது என்பதெல்லாம் இல்லை. உண்மையில் இலங்கை என்பது இந்த உலகம் முழுவதுமே ஆகும். பிராமணகுல பூஷண் குழந்தைகளாகிய நீங்களும் முதலில் பதீத்தாக (தூய்மையற்ற நிலை) இருந்தீர்கள். இப்போது நீங்கள் மாயா மீது வெற்றி கொள்கிறீர்கள். தந்தை வந்து புத்தியின் பூட்டைத் திறந்திருக்கிறார். புத்திவான்களின் புத்தியாகத் தந்தை இருக்கிறார் இல்லையா? மனிதர்களோ என்னென்னவெல்லாம் சொல்லி புத்தியைக் கெடுத்து விட்டிருக்கிறார்கள்! பாபா சொல்கிறார், இது பிறகும் கூட நடக்கத் தான் செய்யும். சர்வவியாபியின் ஞானம் முதலில் இல்லாதிருந்தது. பரமாத்மா முடிவற்றவர் என்று சொன்னார்கள். முடிவற்றவர் என்று சொல்லி விட்டுப் பிறகு அவரை சர்வவியாபி எனச் சொல்வது எவ்வளவு பெரிய தவறு! சிவோகம் தத்தத்வம் (நானும் சிவன், நீயும் சிவன்) என்று சொல்லிவிடுகின்றனர். சில சமயம் சிவோகம் என்றும், சில சமயம் பிரம்மோகம் என்றும் சொல்லி விடுகின்றனர். பிறகு அது தவறாகி விடுகின்றது. பிரம்மமோ வசிப்பதற்கான இருப்பிடம். சிவபாபா பிரம்ம தத்துவத்தில் வசிக்கின்றார். அதனால் அதன் பெயர் பிரம்மாண்டம். ஆத்மாக்களாகிய நாமும் அங்கே வசிப்பவர்கள் தாம். அவர்கள் பிறகு சிவனை பெயர், ரூபத்திற்கு அப்பாற்பட்டவர் எனச் சொல்லி விடுகின்றனர். இவை அனைத்தும் புரியவைக்க வேண்டிய விஷயங்கள் இல்லையா? அதுவும் எப்போது ஒருவர் ஒரு வாரம் தொடர்ந்து ஞானம் கேட்டுப் புரிந்து கொள்கின்றாரோ அப்போது தான் ஞானத்தின் வண்ணமானது அவர் மீது படியும். இதையும் புரிய வைக்க வேண்டும். அதாவது அவர் உங்களுடைய எல்லையற்ற தந்தையும் கூட, அவரிடமிருந்து பாரதத்திற்கு ஜீவன் முக்தியின் ஆஸ்தி கிடைக்கின்றது. மற்ற அனைவருக்கும் முக்தியின் ஆஸ்தி கிடைக்கின்றது.

        

        பாபா சொல்கின்றார், குழந்தைகளே! இப்போது நாடகம் முடிகின்றது. உங்களுடைய 84 பிறவிகள் முடிவுற்றன. இவ்வளவு காலம் பாகத்தை நடித்து விட்டீர்கள். இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். பாபா வந்து நமக்காக இராஜதானி ஸ்தாபனை செய்கின்றார். நிச்சயமாக அது சங்கமயுகத்தில் தான் ஸ்தாபனையாகும். அப்போது தான் சத்யுகத்தில் நீங்கள் ஆஸ்தி பெறுவீர்கள். உங்களுக்கு எவ்வளவு நல்ல கர்மம் கற்றுத் தருகிறார்! இலட்சுமி-நாராயணர் என்ன செய்தார்கள், இவ்வளவு உயர்ந்தவர்களாக ஆவதற்கு? இப்போது நீங்கள் அறிவீர்கள், பாபா இராஜயோகம் கற்றுத் தருகின்றார். சத்யுகத்தில் கற்றுத்தர மாட்டார். அங்கே இருப்பதோ இலட்சுமி-நாராயணரின் ராஜ்யம். இது கல்யாண்காரி சங்கமயுகம். இதில் நல்லபடியாகப் புருஷார்த்தம் செய்ய வேண்டும். பாபா சொல்கிறார், இந்த தேக உணர்வை விட்டு, தன்னை ஆத்மா என நிச்சயம் செய்து தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் அடி வாங்கிக் களைத்து விட்டிருக்கிறீர்கள். பிரம்மா முகவம்சாவளி பிராமண, பிராமணிகள் தான் திரிகாலதர்சி ஆகின்றார்கள். ஆக்குகின்றவர் பாபா.

        

        சுயதர்சன சக்கரத்தையும் நீங்கள் சுற்றுகிறீர்கள். விஷ்ணு திரிகாலதரிசியெல்லாம் கிடையாது. அவர்கள் பிறகு விஷ்ணுவுக்கு அலங்காரம் கொடுத்து விட்டிருக்கிறார்கள். உண்மையில் பிராமணர்களாகிய நீங்கள் தான் திரிகாலதரிசி ஆகிறீர்கள். வர்ணங்களைப் பற்றியும் புரியவைக்கப் பட்டுள்ளது. அவற்றுள் உயர்ந்தது பிராமணவர்ணம். பாரதவாசிகள் சித்திரங்களை உருவாக்குகிறார்கள். அதில் மிக உயர்ந்த பிராமண வர்ணத்தைக் காட்டாமல் மறைத்து விட்டார்கள். பிரஜாபிதா பிரம்மா இருக்கிறார் இல்லையா? ஆகவே முதலில் பிராமணர்களின் மேன்மை இருக்க வேண்டும். இச்சமயம் அனைவரும் சூத்திரர்கள். நீங்கள் முகவம்சாவளி பிராமணர்களாக ஆகியிருக்கிறீர்கள்.

        

        பாடலும் கேட்டீர்கள், பிரியத்திற்குரியவரே வந்து சந்தியுங்கள்... சர்வவியாபியின் விஷயம் இல்லை. இப்போது பிரியதர்சினிகளாகிய நீங்கள் அன்பருக்கு முன்பு அமர்ந்துள்ளீர்கள். அன்பர் தம்முடைய சொர்க்கத்தின் ஆஸ்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். எவ்வளவு நல்ல அன்பர்! கிருஷ்ணர் பட்டராணி ஆக்குவதற்காக விரட்டினார் என்கிறார்கள். ஆனால் பட்டராணி என்பது என்ன என்பது அவர்களுக்குத் தெரியாது. இப்போது நீங்கள் அறிந்து கொண்டீர்கள், மேலும் சொர்க்கத்தின் மகாராஜா - மகாராணி ஆவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். இது இராஜயோகம், இதில் பிரஜாயோகம் இணைந்துள்ளது. இராஜா-இராணி மட்டுமே உருவாக மாட்டார்கள். அனைவருமே சொல்கின்றனர், இராஜா-இராணி ஆவோம் என்று. நாம் வந்திருப்பது இராஜயோகம் கற்றுக் கொள்வதற்காக. ஆனால் அனைவரும் மகாராஜா - மகாராணி ஆக முடியாது. தைரியம் வேண்டும். முழு பலம் இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் தீவிர பக்தி செய்யும் போது சாட்சாத்காரம் ஆகின்றது. சிவனுக்கு பலியாகின்றனர். உண்மையில் பலியாவதும் இங்குள்ள விஷயம் தான். இதுவும் புரியவைக்கப்பட்டுள்ளது... கீதை, பாகவதம், இராமாயணம், வேதம் முதலியவை சத்யுக- திரேதாயுகங்களில் இருப்பதில்லை. இவை பரம்பரையாக இருந்து வந்தவை என்பதெல்லாம் இல்லை. இவை துவாபரயுகத்திலிருந்து தான் வந்திருக்கின்றன. பிறகு துவாபரயுகத்தில் தான் உருவாகும். முஸ்லீம்கள் வந்து இராஜ்யத்தைப் எடுத்துக் கொண்டார்கள். முகம்மது கஜினி கொள்ளையடித்தான்... இந்த விஷயங்களை யெல்லாம் அறிந்து கொண்டிருக்கிறீர்கள். நாமே தான் பூஜைக்குரிய நிலையிலிருந்து பூஜாரி ஆகி நம்முடைய கோயில்களைக் கட்டினோம். அப்படியாயின் நமக்கு எவ்வளவு சொத்துகள் இருந்திருக்கும்! 5000 ஆண்டுகளின் விஷயம். அதுவும் ஆரம்பத்தில். பிறகு பக்திமார்க்கத்திலும் கூட உங்களுக்கு எவ்வளவு செல்வம் இருக்கின்றது! யார் வைரம் வைடூரியங்களால் கோயில் கட்டினார்களோ, அவர்களுக்குரிய மாளிகை எப்படி இருந்திருக்கும்! பெயர் எவ்வளவு உயர்ந்தது! இலட்சுமி-நாராயணரை எவ்வளவு அலங்கரிக்கப்பட்டவர்களாகப் பார்க்கிறீர்கள்! இப்போதோ பாவப்பட்டவர்களிடம் பைசா இல்லை. முன்போ இலட்சுமி-நாராயணருக்கு எல்லாமே வைரங்களால் செய்திருந்தார்கள். பின்னால் அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். அங்கோ தங்கத்தாலான செங்கற்கள் இருக்கின்றன. நீங்கள் அவற்றால் மாளிகை கட்டுகின்றீர்கள். புத்தியும் நல்லதாக இருக்கும். இப்போதோ புத்தியில்லை. அதனால் தான் ஏழையாகி விட்டீர்கள் இல்லையா? சிவபாபா மீது அல்லது தேவதைகள் மீது எவ்வளவு களங்கங்கள் சொல்லப் பட்டுள்ளன! அதனால் பாபா சொல்கிறார், யதா யதாஹி... எப்போது இவரது உடலில் பிரவேசமா கின்றேனோ அப்போது தான் பிராமணர்களைப் படைப்பேன். பிரம்மாவின் வாயின் மூலம் பாரதத்தில் தான் வந்து பிராமணர்களைப் படைக்கின்றேன். வெளிநாட்டுக்குப் போவேனா என்ன? யார் நம்பர் ஒன் பூஜாரியாக இருந்தரோ, இப்போது பூஜாரி ஆகியிருக்கிறாரோ அவருடைய பதீத் (தூய்மையற்ற) சரீரத்தில் தான் வருகின்றேன். திரிமூர்த்தி எனச் சொல்கின்றனர். அதிலிருந்து சிவனை எடுத்து விட்டார்கள். திரிமூர்த்தி பிரம்மா என்று சொன்னால் அதற்கு அர்த்தமே இருக்காது. பாபா சொல்கிறார், கல்ப-கல்பமாக சங்கமயுகத்தில் இவ்வுடலில் வந்து பிராமணர்களாகிய உங்களைப் படைக்கின்றேன். பிராமண-பிராமணிகளாகிய உங்களுக்கு இது சர்வோத்தம யுகம். இப்போது நீங்கள் ஈஸ்வரிய மடியில் இருக்கின்றீர்கள். ஈஸ்வர் பாபாவிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி அடைகின்றீர்கள். நீங்கள் அறிவீர்கள், அவரையே நினைவு செய்து-செய்தே நாம் அவரிடம் சென்றடைந்து விடுவோம். சொல்கிறார்கள் இல்லையா? கடைசிக் காலத்தில் யார் பெண்ணை நினைக்கிறார்களோ எப்படி நினைவோ அப்படியே ஜென்மம் கிடைக்கின்றது. இது கடைசிக் காலம். உங்களுக்கு பாபா வந்து புரிய வைக்கின்றார். இச்சமயம் தந்தையாகிய என்னையே நினைவு செய்ய வேண்டும். தேகி அபிமானி ஆகுக, அசரீரி ஆகுக. தன்னை ஆத்மா என நிச்சயம் செய்து பரமபிதா பரமாத்மாவாகிய என்னை நினைவு செய்யுங்கள். ஓரிடத்தில் நிஷ்டையில் அமர்ந்து விடக் கூடாது. குழந்தைகளோ நடமாடும் போதும், அமரும் போதும், எழுந்திருக்கும் போதும் தந்தையை நினைவு செய்கின்றனர் இல்லையா?

        

        எல்லையற்ற தந்தை சொல்கின்றார், மற்ற அனைவரிடமிருந்தும் புத்தியை நீக்கி, என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். இதில் தான் முயற்சி உள்ளது. 84 பிறவிகள் எடுத்தீர்கள், இப்போது இது கடைசிப் பிறவி. நீங்கள் பாபாவுடையவர் ஆகிவிட்டீர்கள் என்றால், அவரே எவ்வளவு இனிய பெயர்களைத் தந்திருக்கிறார்! பாபா சந்தேஷியின் (டிரான்ஸ் மெசேஜ்) மூலம் பெயர்களை அனுப்பினார். அங்கே மிக நல்ல-நல்ல பெயர்கள் இருக்கும். பிறகும் கல்பத்திற்கு முன்பு என்ன பெயர் இருந்ததோ அதே பெயர் தான் வைக்கப்படும். சர்வவியாபி என்பதன் அர்த்தத்தையும் புரியவைக்க வேண்டும் இல்லையா? பக்தர்கள் அனைவரும் பகவான் என்றால் பிறகு அவர்களுக்கு என்ன கிடைக்கும்? எதுவுமே கிடைக்காது. இப்போது நீங்கள் ஈஸ்வரிய மடியில் இருக்கிறீர்கள். ஈஸ்வரிய மடியினால் நீங்கள் பிராமணர் ஆகியிருக்கிறீர்கள். சூத்திர வர்ணம் முடிந்து போய்விட்டது. இந்த வர்ணங்களே பாரதவாசிகளுக்குத் தான். நீங்கள் அறிவீர்கள், நாம் சூத்திரவர்ணத்திலிருந்து மாறி பிராமண தர்மத்தில் வந்துள்ளோம். கல்பத்திற்கு முன்பு யார் பிராமண-பிராமணி ஆனார்களோ, அவர்களே இப்போதும் ஆவார்கள். மரம் விருத்தியடைந்து கொண்டே செல்கின்றது. எவ்வளவு நல்ல-நல்ல விஷயங்களைக் குழந்தைகளுக்கு பாபா சொல்கின்றார்! ஆனால் மாயாவின் புயல் வீசுவதால் நல்ல-நல்ல குழந்தைகளும் கூட விழுந்து விடுகின்றனர். யுத்தம் இருக்கின்றது இல்லையா? நீங்கள் சர்வசக்திவானின் குழந்தைகள் என்றால் மாயாவும் குறைந்ததல்ல. அரைக்கல்பம் இராவண ராஜ்யம் உள்ளது. இச்சமயம் மாயாவும் மிகுந்த வலிமையுடன் போராடும். இது புயல் எனப்படுகின்றது. அனுமானின் உதாரணம் உள்ளது இல்லையா? மாயாவின் புயல் எவ்வளவு தான் வந்தாலும் நீங்கள் அசையக் கூடாது. சதா மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். எவ்வளவு ருஸ்தம் (வலிமை மிக்க போர்வீரர்) ஆகிறீர்களோ, அந்த அளவு மாயாவும் வலிமையுடன் போராடும். இவர் தகுதியானவரா? இல்லையா? என்று சோதித்துப் பார்க்கும். சொல்கின்றனர்--பாபா, நான் முகத்தைக் கறுப்பாக்கிக் கொண்டேன். முகம் கறுப்பாகி விட்டது என்றால் புத்திக்குப் பூட்டுப் போடப் பட்டுவிட்டது. தாரணையாகாது, ஏனெனில் பாபாவுக்குக் களங்கம் ஏற்படுத்தி விட்டார்கள் இல்லையா? லௌகீக் தந்தையும் கூட சொல்கிறார் இல்லையா? நீ குலத்திற்குக் களங்கம் விளைவித்து விட்டாய் என்று. பாபா சொல்லிப் புரியவைக்கிறார். நீங்கள் ஒருபோதும் குலத்திற்குக் களங்கம் செய்தவர்களாக ஆகக் கூடாது. பாபா பரந்தாமத்திலிருந்து வந்திருக்கிறார், உங்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பதற்காக. பகவான் வாக்கு - நான் உங்களை இராஜாவுக்கெல்லாம் மேலான இராஜா ஆக்குவதற்காக வந்துள்ளேன். இராஜ்யம் நிச்சயமாக ஸ்தாபனை ஆகும். இச்சமயம் நீங்கள் எவ்வளவு பேர் பிராமணர் ஆனீர்களோ அவ்வளவு பேர் தான் (ஒவ்வொரு கல்பத்திலும்) ஆகிக் கொண்டே இருப்பீர்கள்.

        

        குழந்தைகள் நினைவு வைக்க வேண்டும், அந்தப் பரலௌகிக் தந்தைக்கு தந்தை யாரும் கிடையாது. அவரே மிக மேலான ஞானம் நிறைந்தவர், மனித சிருஷ்டியின் விதை வடிவமானவர், சைதன்யமானவர், பதீத பாவனர், இரக்க மனமுள்ளவர், ஆசீர்வாதங்களை அளிப்பவர். அவரைப் போல் ஆசீர்வாதமளிப்பவர் வேறு யாருமில்லை. அவர் தாமே தந்தை, ஆசிரியர், சத்குருவாக இருப்பவர். எல்லையற்ற தந்தையின் வீட்டில் நீங்கள் முன்னிலையிலேயே அமர்ந்திருக்கிறீர்கள். இது ஈஸ்வரிய குடும்பம். விருத்தி யடைந்து கொண்டே செல்லும். 84 பிறவிகளின் சக்கரமும் புத்தியில் நினைவிருக்கிறது. நாம் தான் தேவதையாக இத்தனை ஜென்மம், சத்திரியராக இத்தனை ஜென்மம், பிறகு நாமே தான் தேவதையாக ஆவோம். மாயா துக்க உலகத்தை உருவாக்குகின்றது. பாபா வந்து சுக உலகமாக ஆக்குகின்றார். எவ்வளவு சுலபம்! மிக நன்றாகப் புருஷார்த்தம் செய்ய வேண்டும். இப்போதைய புருஷார்த்தம் கல்ப-கல்பத்திற்கும் உங்களது புருஷார்த்தமாக ஆகிவிடும். கல்ப கல்பாந்தரமாக நாம் இதுபோல் புருஷார்த்தம் செய்தே வந்திருக்கிறோம் என்று சொல்வீர்கள். மம்மா பாபாவும் கூடப் புருஷார்த்தம் செய்கின்றனர். இவர்கள் தாம் பிறகு பூஜைக்குரிய அதே தேவி-தேவதா இலட்சுமி-நாராயணராக ஆவார்கள். ஸ்ரீமத் மூலம் நாம் சிரேஷ்டத்திலும் சிரேஷ்ட மானவர்களாக ஆகின்றோம். நல்லது.

        

        இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

        

        தாரணைக்கான முக்கிய சாரம் :

        1. இந்தக் கடைசிக் காலத்தில் ஒரு பாபாவை மட்டுமே நினைவு செய்வதற்கான அப்பியாசம் செய்ய வேண்டும். அசரீரி ஆகவேண்டும்.

        

        2. ஒருபோதும் குலத்திற்குக் களங்கம் விளைவிப்பவர் ஆகக்கூடாது. மாயாவின் புயல்களில் அசைந்து விடக் கூடாது. சதா மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

        

        வரதானம் :

        இணைந்த ரூபதாரி ஆகி, சேவையில் இறைவனின் மாயா ஜாலத்தை அனுபவம் செய்யக்கூடிய இறைவனின் உதவியாளர் ஆகுக.


        

        தன்னை வெறும் சேவாதாரியாக மட்டுமின்றி ஈஸ்வரிய சேவாதாரி என உணர்ந்து சேவை செய்யுங்கள். இந்த ஸ்மிருதியினால் நினைவு மற்றும் சேவை தானாகவே இணைந்ததாக ஆகி விடும். எப்போது இறைவனை உதவி செய்வதிலிருந்து பிரித்து விடுகிறீர்களோ, விடுகிறீர்களோ, அப்போது தனியாக இருக்கும் காரணத்தால் வெற்றியின் இலக்கு தொலைவில் இருப்பதாகத் தென்படும். அதனால் வெறும் உதவியாளராக இல்லாமல் இறைவனின் உதவியாளர் என்ற பெயர் சதா நினைவிருக்குமானால் சேவையில் தானாகவே இறைவனின் மாயாஜாலம் நிறைந்து விடும் மற்றும் நடக்க முடியாததும் நடக்கக் கூடியதாக ஆகி விடும்.

        

        சுலோகன் :

        கர்மயோகி ஆக வேண்டுமானால் கமல ஆசனதாரி (விலகிய மற்றும் அன்பானவராக) ஆகுங்கள்.

        




    ***OM SHANTI***

    No comments

    Say Om Shanti to all BKs