BK Murli Tamil 14 June 2018

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli Tamil 14 June 2018


        14.06.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

        

        இனிமையான குழந்தைகளே! சேவைக்கான புதுப்புது யுக்திகளை உருவாக்கிக் கொண்டே இருங்கள். பாரதத்தை தெய்வீக சுயராஜ்ஜியமாக உருவாக்குவதில் பாபாவுக்கு முழுமையிலும் முழுமையான உதவியாளர் ஆகுங்கள்.

       

        கேள்வி:

        பாபா குழந்தைகளுக்கு எந்த ஒரு நினைவைக் கொடுத்து, என்ன ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறார்?

       

        பதில்:

        பாபா நினைவூட்டுகிறார்--குழந்தைகளே, நீங்கள் கல்ப கல்பமாக மாயையை வென்றவர் உலகத்தை வென்றவர் ஆகி இருந்தீர்கள். நீங்கள் தாய் தந்தையின் சிம்மாசனத்தின் மீது வெற்றி அடைந்துள்ளீர்கள். எனவே நீங்கள் மாயையின் புயலைப் பார்த்து பயப்படக்கூடாது. ஒருபோதும் மாயையின் வசமாகி குலத்திற்கு களங்கம் விளைவிக்கக் கூடாது. செல்லமான குழந்தைகளே, இந்த வயதான தந்தையின் தாடிக்கு மதிப்பு வையுங்கள். பாபாவின் பெயருக்கு களங்கம் விளையுமாறு எந்த ஒரு காரியமும் செய்து விடக் கூடாது. நீங்கள் யோக பலத்தின் மூலம் விகாரங்களை விரட்டுங்கள். பாபாவுக்குச் சமமாக நிராகாரி, நிரகங்காரி ஆகுங்கள்.

       

        பாடல்:

        சபதம் எடுத்து உன் வாசலுக்கு வந்துள்ளோம்........

       

        ஓம் சாந்தி

        இனிமையிலும் இனிமையான காணாமல் போய்க் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே, எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து குழந்தைகளுக்கு கண்டிப்பாக அன்பு கிடைக்கிறது என்று நல்ல முறையில் தெரிந்து கொண்டீர்கள். எப்படி எல்லைக்குட்பட்ட தந்தை, தான் படைத்த குழந்தைகளிடம் அன்பு செலுத்துகிறார், நல்ல முறையில் வளர்க்கிறார், தன்னுடைய குலம் விருத்தி அடைய வேண்டும் என்று அவர்களுக்கு சேவை செய்கிறார். பக்தி மார்க்கத்தில் கூட எல்லைக்கப்பாற்பட்ட தந்தையை அனைவரும் நினைவு செய்கின்றனர். கண்டிப்பாக தந்தையிடமிருந்து கிடைக்கிறது. இங்கேயும் பாபா சொல்கிறார்--நான் உங்களின் தந்தையாகவும் இருக்கிறேன், கல்வியைக் கொடுப்பவராகவும் இருக்கிறேன், அதாவது நாடகத்தின் ஆதி, மத்திய, அந்திம (கடைசி) ஞானத்தைக் கொடுப்பவராகவும் இருக்கிறேன். இதைத் தான் ஞானம் என்று சொல்லப்படுகிறது. மற்றபடி சாஸ்திரங்களில் பக்தி மார்க்கத்தின் ஞானம் இருக்கிறது. அதிலிருந்து முக்தி, ஜீவன்முக்தி எதுவும் கிடைக்க முடியாது. பாபா சொல்கிறார், அனைவருக்கும் முக்தி, ஜீவன்முக்தி அளிக்கும் வள்ளலாக நான் இருக்கிறேன். முக்தி, ஜீவன் முக்தி அளிக்க நான் தான் வர வேண்டியதாய் இருக்கிறது. கல்ப கல்பத்திற்கும், கல்பத்தின் சங்கமத்தில் நான் தான் வர வேண்டியிருக்கிறது. நாடகத்தின் படி 5 விகாரங்கள் என்ற மாயை உங்களை துக்கமானவர்களாக ஆக்கி விடுகிறது. இப்போது துக்கத்தின் மலை விழப்போகிறது, வினாசம் ஏற்படப் போகிறது என்று உங்களுக்குத் தெரியும். அந்த நேரம் இரத்த வெள்ளத்தின் கோர தாண்டவத்தின் பாகம் நடிக்க வேண்டி இருக்கும். எத்தனை இரத்த நதிகள் பாயும்! சத்யுகத்தில் நெய் ஆறு ஓடும். இங்கே ரத்த நதிகள் ஓடும் அதே நேரத்தில் தான் வெற்றி முழக்கமும் ஏற்படுகிறது. அப்போது மிகவும் துக்கப்படுவார்கள். இப்போது குழந்தைகள் நன்றாக பாபாவின் சேவையை அதிகப்படுத்த வேண்டும். உதவியாளர்களாகிய உங்கள் மூலம் தான் பாரதம் சொர்க்கமாகிறது. நாம் காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட பிராமண குல பூஷண குழந்தைகள் தான் பாரதத்தை மீண்டும் தெய்வீக சுயராஜ்யமாக ஆக்குகின்றோம் என்று உங்களுக்குத் தெரியும். பாபாவிடமிருந்து தெய்வீக சுயராஜ்யத்தின் ஆஸ்தி எடுக்கிறோம். பாபா சொல்கிறார், குழந்தைகளே சேவைக்கான யுக்திகளை உருவாக்கிக் கொண்டே இருங்கள். பாபாவினுடைய சிந்தனை கூட வருகிறதல்லவா! இதைத் தான் சுயதரிசனச் சக்கரம் எனப்படுகிறது. இது மிக நல்ல விசயம். இதன் மூலம் நீங்கள் நன்றாக சேவை செய்ய முடியும். இந்த இராஜ்ஜியத்தை ஸ்தாபனை செய்வதில், அதாவது பாரதத்தை இராவண ராஜ்ஜியத்திலிருந்து மாற்றி இராம இராஜ்ஜியத்தை ஸ்தாபனை செய்வதில் எந்த செலவும் கிடையாது. நீங்கள் வன்முறையற்ற அஹிம்சாவாதிகள் ஆவீர்கள். நீங்கள் சர்வ குணங்கள் நிறைந்த, 16 கலைகள் சம்பூர்ணமான, சம்பூர்ண நிர்விகாரி, அஹிம்சா பரமோ தர்மத்தினராக ஆகின்றீர்கள்.

       

        நாங்கள் பாபாவின் உதவியாளராகி பாரதத்தை வைரத்துக்குச் சமமாக ஆக்குவோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். கல்ப கல்பமாக நாம் இந்த சேவையை செய்து கொண்டே இருக்கிறோம். இப்போது நாம் இறை தந்தையின் சேவையில் இருக்கிறோம். இறைதந்தையின் மாணவர்களாகவும் இருக்கிறோம். இறைதந்தையின் குழந்தைகளாகவும் இருக்கிறோம். நம்மீது மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. உருவாகின்ற குழந்தைகள் மீதும் பொறுப்பு இருக்கிறது. பாபா சொல்கிறார், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், எந்த தவறும் செய்து விடக் கூடாது. பாரதவாசிகளுக்கு எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைவதற்கான வழியை எவ்வித மாகச் சொல்வது என்று பாபா வித விதமான சேவைகள் சொல்கிறார். இந்த ஆஸ்தி 21 பிறவிகளுக்கு சத்யுகத்தின் பிறப்புரிமை ஆகும். சத்யுக தெய்வீக சுயராஜ்ஜியம் இறை தந்தையிடமிருந்து உங்கள் பிறப்புரிமை ஆகும். பாபா சொர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். முயற்சி இங்கே தான் செய்ய வேண்டும். சத்யுகத்தில் செய்யலாம் என்பது கிடையாது. பாபா புரிய வைக்கிறார் என்றால் அனைத்து குழந்தைகளும் கேட்கிறார்கள். இந்த சுயதரிசனச் சக்கரத்தை இரும்புத் தகடுகளில் பெரியதாக உருவாக்கி முக்கிய இடங்களில் வையுங்கள். கீழே அனைத்தும் எழுதப்பட்டிருக்கிறது. அதைப் பார்ப்பவர்கள் 'இது சரியானது' என்று புரிந்து கொள்வார்கள். சமயம் அருகாமையில் வந்து கொண்டே இருக்கும். இப்போது மீண்டும் சத்யுகம் நெருக்கத்தில் வந்துவிட்டது என்று மனிதர்களின் மனதிற்குள் தோன்றும். நேரத்திற்கு ஏற்றார் போல, குழந்தைகளுக்கு சேவைக்கான வழிகாட்டுதலை பாபா கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அதன்படி செய்தால் சேவை அதிகரிக்கும். ஒவ்வொரு வரும் தம்தம் வீட்டிலும் இந்த போர்டை வையுங்கள். அதில் சிவபாபாவின் சித்திரமும் இருக்கும், இவர் தான் கீதையின் பகவான், பிறகு எழுதப்பட்டிருக்கிறது 'தெய்வீக உலக ராஜ்யம் உங்களின் பிறப்புரிமை ஆகும்'. ஒவ்வொருவரும் தமது வீட்டில் போர்டு வையுங்கள். நீங்கள் ஞான கங்கைகள் அல்லவா! போர்டு பார்த்து நிறைய பேர் வருவார்கள். அவர்களுக்குப் புரிய வையுங்கள், ஆத்மாக்களாகிய உங்களின் தந்தை நிராகாரமானவர். நீங்கள் சகோதர சகோதரர்கள் ஆவீர்கள். நாம் அந்த தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுத்துக் கொண்டிருக்கிறோம். போகப்போக, அதே பகவான் வந்திருக்கிறார் என்று மிகவும் கோலாகலம் ஏற்படும். பிரம்மாகுமார் பிரம்மாகுமாரிகள் என்ற பெயர் தான் இருக்கும். சிவபாபாவுக்குக் கூட பெயர் உள்ளது. போகப்போக, ராஜாங்கம் கண்டிப்பாக ஸ்தாபனை ஆகும் என்று மனிதர்கள் புரிந்து கொள்வார்கள். யக்ஞத்தில் தடை ஏற்படுகிறது. ஏனெனில் யாரும் ராஜா ராணி இல்லை. பிரஜைகளின் மீது பிரஜைகளின் இராஜ்யம் அகும். பிறருக்குப் புரிய வையுங்கள். அவர்கள் பிரம்மாகுமாரிகளிடம் வந்தாலும் கூட குழப்பத்தை உண்டு பண்ணுகின்றனர். அனைத்து தர்மங்களும் சேர்ந்து ஒன்றாகி விடும் என்று புரிந்து கொள்கின்றனர். இப்போது இருக்கும் அனேக தர்மங்கள் எப்படி ஒன்றாகச் சேரும். அவர்களே நாங்கள் எந்த தர்மத்தையும் ஏற்பதில்லை என்றும் சொல்கின்றனர். தன்னுடைய தர்மத்தை மறப்பது கூட நாடகத்தில் இருக்கிறது. மற்ற தர்மங்கள் ஸ்தாபனை ஆகும் போது தேவி தேவதா தர்மம் மறைந்து போய் விடுகிறது. எனவே அனைவரும் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்கின்றனர். தேவதா தர்மம் மறைந்து விட்டதால் இப்போது பாபா சொல்கிறார், மீண்டும் நாம் தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்ய வந்திருக்கிறோம். அனைத்து தர்மங்களின் அழிவு கூட கண் முன்னே நிற்கிறது. மிச்சம் இன்னும் எவ்வளவு நேரம் இருக்கப் போகிறது! ஆபத்துக்களும் வரத் தான் செய்யும். சத்யுகம் வர இன்னும் லட்சம் வருடங்கள் இருக்கின்றன என்று மனிதர்கள் சொல்லிவிடுகிறார்கள். இன்று நரகத்தில் இருக்கிறோம், நாளை சொர்க்கத்திற்குச் செல்வோம் என்று உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்களாகிய நாம் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறோம். இப்போது 84 பிறவிகள் முடிந்து விட்டன. துக்கத்தின் பாகம் முடிந்து விட்டது. நாம் சொல்கிறோம் 'போதும் பாபா! இப்போது நாங்கள் வந்தே விட்டோம்'. இது கடைசிப் பிறவி. பிரியதர்ஷன் பாபா வந்திருக்கிறார். பாபா சொல்கிறார், இப்போது தூய்மையான உலகத்திற்கு தகுதியானால் கூடவே அழைத்துச் செல்வேன். யோகத்தின் மூலம் தகுதி அடைய வில்லையானால் தண்டனை அடைய வேண்டிவரும். பிறகு பதவியும் குறைந்து விடும். இது சகஜமான விசயம் ஆகும். எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்கப்பாற் பட்ட சுகம் கிடைக்கிறது. ஆகையால் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையையும் எல்லைக்கப்பாற்பட்ட சுகத்தின் ஆஸ்தியையும் நினைவு செய்ய வேண்டும். எவ்வளவு வேண்டுமோ நினையுங்கள், எவ்வளவு நினைப்பீர்களோ, அப்படியே பதவி கிடைக்கும். 8 மணி நேரம் கண்டிப்பாக நினைக்க வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். கல்பத்திற்கு முன்பு செய்தது போலவே குழந்தைகள் முயற்சி செய்கின்றனர் என்பதும் பாபாவுக்குத் தெரியும். மிக அன்பான பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைய யார் எவ்வளவு முயற்சி செய்கின்றனர் என்ப து சாட்சியாகிப் பார்க்கப்படுகிறது .கல்ப கல்பத்திற்கும் அதையே அடைவதற்கு அதிகார உரிமையுடையோராகின்றனர்.

       

        பாபா சொர்க்கத்திற்காக இராஜயோகத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். லௌகீக தந்தையும் குழந்தைகளை எவ்வளவு பராமரிக்கிறார்! எல்லைக்கப்பாற்பட்ட தந்தை கூட எவ்வளவு பராமரிக்க வேண்டியுள்ளது. மாயை பெரிய கஷ்டம் கொடுக்கிறது, நோய்வாய்ப்பட வைக்கிறது. பிறகு பாபா வந்து மருந்து கொடுக்கிறார். இது சஞ்சீவினி மூலிகை ஆகும். மற்றபடி மலையிலிருந்து ஹனுமான் எந்த லிமூகையும் கொண்டு வரவில்லை. பாபா மற்றும் ஆஸ்தியை மட்டும் நினைவு செய்ய வேண்டும். பாபாவை நினைவு செய்யாமல் ஆஸ்தியை நினைவு செய்ய முடியாது. இப்போது பக்தி மார்க்கம் அல்லது பிரம்மாவின் இரவு முழுமையடைகிறது. பிறகு பாபா வந்து பகலை ஸ்தாபனை செய்கிறார். அரை கல்பம் பிரம்மாவின் பகல், அரை கல்பம் பிரம்மாவின் இரவு ஆகும். இது காரிருள் அல்லவா! அடிக்கடி குழந்தைகள் அமர்ந்து புரிய வைத்தார்கள் என்றால், லௌகிக-பரலௌகீக தாய் தந்தையை நன்றாக வெளிக்காட்டலாம். படைப்பவராகிய தந்தையின் காரியம்--பெண்கள்-குழந்தைகள் ஆகியோரை தன்னுடைய துணையாக ஆக்குவதாகும். தன்னுடைய படைப்பிற்கும் (குடும்பத்தினருக்கும்) வழி காட்ட வேண்டும். காமச் சிதையிலிருந்து மாறி ஞானச் சிதையில் அமர வேண்டும். இந்த போர்டை மிக நன்றாக உருவாக்க முடியும். பாபாவுக்கு மிகுந்த கவலை இருக்கிறது. பாபா நிராகாராகவும் நிரகங்காரியாகவும் இருக்கிறார். குழந்தைகளை நன்றாக பாலனை செய்கிறார். 'போகும் வழியில் பிராமணன் பிடிபட்டார்' என்று சொல்கிறார்கள் அல்லவா! இப்படி பரமாத்மாவின் பிரவேசம் ஏற்படும் என்றோ, தான் பிரம்மா ஆகி நாராயணன் ஆவேன் என்றோ பாபாவுக்குத் (பிரம்மாவுக்கு) தெரியாது. எவ்வளவு நிந்தனை அடைந்திருக்கிறார். பாபா சொல்கிறார், உன்னை விட என்னை அதிகம் நிந்தனை செய்கின்றனர். உன்னை ஓரிரண்டு நிந்தனை தான் செய்கின்றனர். என்னை கல்லிலும் முள்ளிலும் இருப்பதாக சொல்லிவிட்டனர். என்னை எத்தனை நிந்தனை செய்து விட்டனர். இராஜ்ய பாக்கியத்தை அடைய வேண்டுமென்றால் நிந்தனை வாங்குவது பெரிய விசயமா என்ன! என்னை அரை கல்பமாக நிந்தனை செய்து கொண்டே இருக்கின்றனர். இந்த விளையாட்டு கூட நாடகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

       

        பாபா சொல்கிறார்--செல்லக் குழந்தைகளே! நான் இவருக்குள் வந்திருக்கின்றேன். இவருடைய தாடிக்கு கொஞ்சம் மதிப்பு வையுங்கள். இப்போது எந்த களங்கமும் ஏற்படுத்தி விடக்கூடாது. விகாரங்களை யோக பலத்தால் விரட்டிக் கொண்டே இருங்கள். கல்ப கல்பமாக நீங்கள் மாயையின் மீது வெற்றி அடைந்து உலகத்தை வென்றவர் ஆகி இருந்தீர்கள். சொர்க்கத்தின் எஜமானனாகவும் பிரஜையாகவும் ஆகிறார்கள். ஆகையால் முயற்சி செய்து தாய் தந்தையின் சிம்மாசனத்தின் மீது வெற்றி அடையுங்கள். இதன் பெயரே இராஜயோகம். பாபாவுக்குத் தெரியும், இந்த மம்மா பாபா முதல் நம்பரில் போகிறார்கள். மம்மா தூய்மையான கன்னிகை, இவர் (பிரம்மா) அதர் குமார் ஆவார். வீட்டில் குழந்தைகள் அப்படிப்பட்ட காரியம் செய்தால் தந்தை சொல்கிறார், என்னுடைய தாடிக்கு மரியாதை வையுங்கள், பெயரைக் கெடுத்து விடாதீர்கள். நல்ல முறையில் வீட்டுக்கு வீடு போர்டு வைக்க வேண்டும்--வந்து எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுங்கள். இராஜாக்கள், சன்னியாசிகள் போகப்போக விழிப்படைவார்கள். நாளுக்கு நாள் நீங்களும் தீவிரமாகிக் கொண்டே செல்கிறீர்கள். சக்தி கிடைத்துக் கொண்டே செல்கிறது. எதிரே வினாசம் இருப்பதைப் பார்க்கிறீர்கள். சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இது ருத்ர ஞான யக்ஞம் ஆகும். நாம் பிராமணர்கள் ஆவோம். பிராமணர்கள் மீண்டும் தேவதை ஆவார்கள். எவ்வளவு முயற்சி செய்கிறோமோ, அவ்வளவு உயர்ந்த பதவி அடைவீர்கள். நாளுக்கு நாள் மிக சகஜமாகிக் கொண்டே செல்கிறது. பாபாவின் ரூபத்தையும் புரிந்து கொண்டீர்கள். அவர் நட்சத்திரமாக இருக்கிறார். ஆனால் புதியவர்களுக்கு முதலிலேயே இதை சொல்லக் கூடாது. நன்றாகப் புரிந்து கொள்ளும் போது, அத்தனை பெரிய ரூபமா? என்று கேட்பார்கள். அப்போது புரிய வையுங்கள். இதன் சாட்சாத்காரம் நிறைய பேருக்கு ஏற்படுகிறது. ஆனால் எந்த அர்த்தத்தையும் புரிந்து கொள்வதில்லை. எப்படி ஆத்மா ஜொலிக்கக் கூடிய நட்சத்திரமோ, அது போலத் தான் பாபாவும். அவரைத் தான் பரம பிதா பரம்-ஆத்மா என்று சொல்லப்படுகிறது. ஆக பரமாத்மா ஆகி விடுகிறார். அவர் இவருக்குள் வருகிறார். வந்து அருகில் (புருவ மத்தியில்) அமர்கிறார். குருவுக்கு அருகில் சிஷ்யர்கள் அமர்கிறார்கள் அல்லவா! அவர் குழந்தைகளாகிய உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார். இவரும் (பிரம்மா) கூடவே இருக்கிறார். பாப்தாதா இணைந்து இருக்கிறார். ஆனால் இது ஆழமான ரகசியம் ஆகும். யாரேனும் கேட்கும் போது இதைப் புரிய வைக்க வேண்டும். இல்லையானால் பாபா-பாபா என்று சொல்லிக் கொண்டே இருங்கள். பாபா சொர்க்கத்திற்காக இராஜயோகம் கற்றுக் கொடுக்கிறார். இந்த நேரம் வரை என்ன நடந்ததோ அது நாடகம் என்று குழந்தைகளுக்குத் தெரியும். தடைகள் வந்து கொண்டு தான் இருக்கும். குழந்தைகளையும் மாயை ஒரேடியாக புயலில் தள்ளிவிடும். ஆனால் கையை விட்டு விடக் கூடாது. மாயை முதலையாக இருக்கிறது. நல்ல நல்ல குழந்தைகளையும் தின்று விடுகிறது. கல்பத்திற்கு முன்பு கூட ஆகி இருந்தது. யார் நல்ல விசாலபுத்தி உடைய குழந்தைகளோ, அவர்கள் ஒவ்வொரு விசயத்தையும் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் 'நாம் யாருக்கு எப்படி-எப்படி புரிய வைப்பது, தானம் செய்வது' என்று விசார் சாகர மந்தனம் (ஞான சிந்தனை) செய்வார்கள். பாபா மனதிற்குப் பிடித்தமானவர் ஆவார். நீங்களும் மனதிற்குப் பிடித்தமானவர்களக இருக்கிறீர்கள். பாபா சொல்கிறார், நான் நட்சத்திரமாக இருக்கிறேன், எனக்குள் இந்த பாகம் (நடிப்பு) பதிவாகி உள்ளது. ஒவ்வொரு ஆத்மாவிலும் பாகம் நிறைந்துள்ளது. இந்த விசயங்களை அறிவியலின் அகங்காரம் புரிந்து கொள்ள முடியாது. அந்த அறிவியலின் ரிக்கார்டுகள் தேய்ந்து போய் விடும், உடைந்து போய் விடும். இந்த ஆத்மா நட்சத்திரம் அழியாதது. அதில் அழியாத பாகம் அடங்கியுள்ளது. இதற்கு ஒருபோதும் முடிவு ஏற்படுவது கிடையாது. முடிவு இல்லை என்றால் ஆரம்பமும் கிடையாது, போய்க் கொண்டே இருக்கிறது. இந்த நாடகத்தின் இரகசியத்தையும் நீங்கள் புரிந்து கொண்டே செல்கிறீர்கள். நீங்கள் கண்ணில்லாத குருடர்களின் கைத்தடி ஆவீர்கள். அவர்களுக்கு வழி சொல்ல வேண்டும். இப்போது அனைவருக்கும் வானப் பிரஸ்த நிலை ஆகும். சொல்லிசப்தத்திலிருந்து விடுபட்டுச் செல்ல வேண்டும். பாபா சொல்கிறார், நான் அனைவரையும் கூட்டிச் செல்வேன். ஆகையினால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாபாவை நினைவு செய்யுங்கள். அப்போது பாவ கர்மங்கள் வினாசம் ஆகும். இதற்கு ஆன்மீக யாத்திரை என்று சொல்லப்படுகிறது. பாபா சொல்கிறார்: ஏ! யாத்திரை செய்யும் குழந்தைகளே, களைப்படையாதீர்கள். பாபா மற்றும் அவரது படைப்பை (சொர்க்கத்தை) நினைவு செய்யுங்கள். சொர்க்கத்தின் எஜமானர் ஆக வேண்டும். இது மிக எளிதானது. எப்போதும் சிவபாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். மோட்டரை ஓட்டும் போதும் புத்தியோகம் எங்கே இருக்க வேண்டும்? பாபா தன் விசயத்தைச் சொல்கிறார்--நான் நாராயணனுக்கு பூஜை செய்ய அமர்ந்த போது புத்தி வேறு பக்கமாக சென்றது. பிறகு தன்னையே அடித்துக் கொண்டேன். இப்போதும் புத்தி அங்குமிங்கும் ஓடுகிறது. முயற்சி செய்து கொண்டே அவர் நினைவில் சரீரத்தை விட வேண்டும். மனிதர்கள் கிருஷ்ணரின் நினைவில் சரீரத்தை விட்டால் நாம் கிருஷ்ணபுரிக்கு சென்று விடலாம் என்று பக்தி செய்கிறார்கள். ஆனால் கிருஷ்ணர் அனைவருக்கும் தந்தை கிடையாது. அனைவருக்கும் ஒரே தந்தை தான். அனைவரின் சத்கதி வள்ளலாகிய இராமன் பாபா தான் வந்து அனைவருக்கும் சத்கதி கொடுக்கிறார். முக்தி அனைவருக்கும் கிடைக்கத் தான் செய்கிறது. பிறகு யாரெல்லாம் முதலில் வருகிறார்களோ, அவர்கள் முதலில் கண்டிப்பாக சுகத்தை அடைவார்கள். புதிய ஆத்மா மேலிருந்து வருகின்ற காரணத்தினால் அவர்களுக்கு மதிப்பு ஏற்படுகிறது. எந்த உடலில் பிரவேசம் செய்தாலும், அவர்களின் பெயர் புகழ் ஏற்படுகிறது. இராஜாங்கம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்று குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நாம் தேவி தேவதை ஆகிக் கொண்டிருக்கிறோம். பிராமணர்களாகிய நீங்கள் மட்டும் தான் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். மற்ற அனைவரும் கலியுகத்தில் இருக்கிறார்கள். இங்கே வருபவர்கள் இது கலியுகத்தின் கடைசி, உலகம் மாறிக் கொண்டிருக்கிறது என்று ஏற்றுக் கொள்வார்கள். ஆகையினால் தான் இந்த மிகப்பெரிய மஹாபாரத யுத்தம் நடக்கிறது. உங்கள் மூலமாக அனைவருக்கும் ஞானம் கிடைக்கிறது. மாதர்களை மேலே தூக்கி விட பாபா வருகிறார். ஏனெனில் மாதர்களின் மீது நிறைய கொடுமைகள் நடக்கிறது. நல்லது.

       

        இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

       

        தாரணைக்கான முக்கிய சாரம்:

        1. ஒவ்வொருவருடைய முயற்சியையும் சாட்சியாகப் பார்த்துக் கொண்டே, தான் சுயம் 8 மணி நேரம் வரை நினைவில் இருப்பதற்கான பயிற்சி செய்ய வேண்டும்.

       

        2. பாபாவுக்குச் சமமாக மனதிற்குப் பிடித்தவராகி விசார் சாகர மந்தனம் (ஞான சிந்தனை) செய்து ஞான தானம் செய்ய வேண்டும். குருடர்களுக்கு கைத்தடி ஆக வேண்டும்.

       

        வரதானம் :

        அல்ப காலத்தின் சம்ஸ்காரங்களை அனாதி சம்ஸ்காரங்களால் மாற்றம் செய்யக் கூடிய வரதானி, மகாதானி ஆகுக.


       

        அல்ப காலத்தின் சம்ஸ்காரங்கள் பேச்சு மற்றும் கர்மங்களை செய்வித்தபடி இருக்கின்றன, ஆகையால், என்னுடைய உள் நோக்கம் அப்படி இருக்கவில்லை, என்னுடைய இலட்சியமாய் இருக்கவில்லை, ஆனாலும் இப்படி ஆகி விட்டது, நான் கோபித்துக் கொள்ளவில்லை, ஆனால் என்னுடைய பேசக் கூடிய சம்ஸ்காரமே அப்படித்தான்... என பலரும் சொல்கின்றனர். ஆக இந்த அல்ப காலத்தின் சம்ஸ்காரங்களும் கூட வலுக்கட்டாயத்தால் செய்யக் கூடியவர்களாக ஆக்கி விடுகின்றன. இப்போது இந்த சம்ஸ்காரங்களை அனாதி சம்ஸ்காரங்களால் மாற்றம் செய்யுங்கள். ஆத்மாவின் அனாதியான, உண்மையான (ஒரிஜினல்) சம்ஸ்காரங்களே எப்போதும் நிறைந்தவராக, எப்போதும் வரதானியாக மற்றும் மகாதானியாக இருப்பதாகும்.

       

        சுலோகன்:

        சூழ்நிலை என்னும் மலையை பறக்கும் கலையின் முயற்சியின் மூலம் கடந்து சென்று விடுவதுதான் பறக்கும் யோகி ஆவதாகும்.

       



    ***OM SHANTI***

    No comments

    Say Om Shanti to all BKs