BK Murli Tamil 15 June 2018

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli Tamil 15 June 2018

        15.06.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்




        இனிமையான குழந்தைகளே! மன்மனாபவ என்ற ஊசியானது அனைத்து துக்கங்கள் என்னும் நோயிலிருந்து விடுவிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆத்ம அபிமானிகளாக ஆகும்பொழுது தூய்மை, சுகம், சாந்திக்கான ஆஸ்தி கிடைத்து விடும்.

        

        கேள்வி:

        தந்தையினுடைய எந்த ஒரு மகிமையை குழந்தைகளாகிய நீங்கள் நடைமுறையில் சுவைத்திருக்கின்றீர்கள்?

        

        பதில்:

        மிகவும் இனிமையானவர், மிகவும் அன்பானவராக கள்ளங்கபடமற்ற தந்தை சிவன் இருக்கின்றார் என்று தந்தையின் மகிமையில் கூறுகின்றீர்கள். இதனை நடைமுறையில் குழந்தை களாகிய நீங்கள் சுவைத்திருக்கின்றீர்கள். இனிமையான பாபா, நம்மை மிகவும் இனிமையானவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார் என்பதை நீங்கள் அனுபவத்தில் கூறுகின்றீர்கள். குழந்தைகளே! சதா உயிருடன் இருங்கள் என்று பாபா தனது இனிமையான குழந்தைகளுக்கு ஆசீர்வாதமும் செய்கின்றார். மிக இனிமையான தந்தையினுடையவர்களாக ஆகியிருக்கின்றீர்களெனில் அவரைப் போன்று இனிமையான மலர்களாக ஆகுங்கள்.

        

        பாட்டு:

        மனிதர்களே, பொறுமையாக இருங்கள் .........

        

        ஓம் சாந்தி.

        மனிதர்கள் நோய்வாய்ப் படும்பொழுது நோயிலிருந்து விடுபடுவதற்காக டாக்டர் ஆறுதல் கொடுப்பார். அது உலகீய வியாதி ஆகும். இவர் ஆன்மீக டாக்டர் என்பது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். ஆத்மாவிற்குத் தான் நோய் ஏற்பட்டிருக்கின்றது. ஆகையால் ஆத்மாவிற்கு ஞானம் என்ற ஊசி போடப்படுகின்றது. ஆத்மாவிற்குத் தான் ஞான ஊசி போடப்படுகின்றதே தவிர உடலுக்கு அல்ல. எந்த ஊசியோ, மருந்தோ அல்ல. இந்த ஒரு ஊசி மட்டுமே போதும். எந்த ஊசி? மன்மனாபவ, அசரீரி பவ என்ற ஊசியாகும். ஆத்ம அபிமானியாக இருப்பதன் மூலம் தூய்மை, சுகம், சாந்திக்கான ஆஸ்தி சேமிப்பாகின்றன. எந்த அளவிற்கு ஆத்ம அபிமானியாகி தந்தையை நினைவு செய்கின்றீர்களோ, அந்த அளவிற்கு ஆஸ்தியானது சேமிப்பாகிக் கொண்டிருக்கும். அரைகல்பத்திற்கான துக்கத்தை தூரமாக்கக் கூடியவர் வந்திருக்கின்றார் என்பதை குழந்தைகள் அறிந்திருக்கின்றீர்கள். அதனால் தான் ஹர ஹர மகாதேவ் என்று கூறுகின்றனர். இப்பொழுது அவர் மகாதேவன் அல்ல, துக்கத்தைப் போக்கும் தந்தையாவார். துக்கத்தை நீக்கி சுகம் கொடுக்கக் கூடிய தந்தையாக இருக்கின்றார். நாம் அரைகல்பத்திற்கு ஏதாவது துக்கத்தை பார்த்துக் கொண்டு வந்தோம் என்பதை குழந்தைகள் அறிந்திருக்கின்றீர்கள். இப்பொழுது நோய் அதிகரித்து விட்டது. ஐந்து விகாரங்கள் அதிக துக்கமானவர்களாக ஆக்கி விட்டது. ஆகையால் கல்பத்தின் இந்தக் கணக்கை இப்பொழுது சரி செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். வியாபாரிகளுக்கு 12 மாதக் கணக்கு இருக்கின்றதல்லவா! சேமிப்புக் கணக்கு வைக்கின்றனரல்லவா! வேலையாட்கள் சேமிப்புக் கணக்கை அறிந்திருக்கமாட்டார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த வியாபாரம் நகை வியாபாரமாகும். இதுவும் ஞான இரத்தினாமாக இருக்கின்றது. நமக்கு இலாபம் ஏற்படுகின்றதா? அல்லது நஷ்டம் ஏற்படுகின்றதா? என்பதை வியாபாரிகள் அறிந்திருப்பார்கள். சில நேரங்களில் இலாபம், சில நேரங்களில் நஷ்டம். இவ்வாறு ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. உங்களது அரைகல்பத்திற்கான சேமிப்பானது இல்லை என்று ஆகி விட்டது, இப்பொழுது மீண்டும் சேமிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு இல்லை என்று ஏன் ஆனது? ஏனெனில் நீங்கள் தேகாபிமானியாக ஆகிவிட்டீர்கள். மாயை இராவணன் சேமிப்பை அழித்து விட்டது. மாயை அனைவரையும் நஷ்டத்தில் தள்ளி விட்டது. அதனால் ஏழைகளாக ஆகி விட்டீர்கள். பாபா! நீங்கள் உண்மையை கூறுகின்றீர்கள், மாயை மிகவும் நஷ்டப்படுத்தி விட்டது என்று குழந்தைகளாகிய நீங்கள் கூறுகின்றீர்கள். நஷ்டம் ஏற்பட்டு, ஏற்பட்டு அனைவரும் சோழியைப் போன்று ஆகி விட்டீர்கள். இப்பொழுது சத்திய தந்தை நம்மை நரனிலிருந்து நாராயணனாக்குவதற்கான வழியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அந்த ஸ்ரீமத் மூலமாக நாம் சிரேஷ்டமாவோம் மற்றும் நமக்கு அரைகல்பத்திற்கான சேமிப்பு ஆகி விடும். இவ்வாறு ஒரே ஒரு முறை மட்டுமே சேமிப்பாகின்றது. நல்ல முறையில் சேமிப்பு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி அடைய வேண்டுமெனில் ஆத்ம அபிமானியாக ஆகுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள். ஆத்மா தான் பதீதமாகின்றது, ஆகையால் பாவாத்மா, புண்ணிய ஆத்மா என்று கூறப்படுகின்றது. பாவ சரீரம் என்று கூறப்படுவதில்லை. மாயை இராவணன் பாவாத்மாக்களாக ஆக்குகின்றது. தந்தையை நினைவு செய்யவில்லையெனில் புண்ணிய ஆத்மாவாக எவ்வாறு ஆக முடியும்? நம்பர் ஒன் பூதமாக இருப்பது அசுத்த அகங்காரமாகும். மாயை எவ்வளவு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது! உலகத்தினருக்கு இந்த இலாப நஷ்டத்தைப்பற்றி யாருக்கும் தெரியாது. இவ்வாறு தந்தை மட்டுமே கூற முடியும். ஸ்ரீமத் பகவானின் மகாவாக்கியம். ஒரே ஒருவர் தான் பகவானாக இருக்க முடியும், அவர் வந்து இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். இந்த யோகமானது அதிகமான லாபத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். மனிதர்களை முன்னேற்றி விடுகின்றது. ஒரு விசயத்தில் நம்பிக்கை இருந்தால் போதும், மற்றும் ஒரு தந்தையை நினைவு செய்தால் போதும். பொறுமையாக இருக்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்கின்றீர்கள். நமது அதிர்ஷ்டமானது விழிப்படைந்திருக்கின்றது என்பதை அறிந்திருக்கின்றீர்கள். பாபா நம்மை அக்கரைக்கு அழைத்துச் செல்லக் கூடியவர். இந்த விகார உலகிலிருந்து சிவாலயத்திற்கு அழைத்துச் செல்வதற்கு பாபா வந்திருக்கின்றார். பட கோட்டியாக இருப்பவர் ஒரே ஒருவர். பதீத பாவனாக இருப்பவரே படகோட்டி என்று கூறப்படுகின்றார். புத்திசாலியாக நீந்தக் கூடியவர்கள் மிகவும் யுக்தியுடன் நீந்துவார்கள். எளிமையான முறையில் நீந்துவதற்கு கற்பிக்கின்றார். பாபா, புத்தி யோகத்தின் மூலம் அதாவது நினைவின் மூலம் நம்மை எவ்வளவு எளிமையான முறையில் கலியுகக் கரையிலிருந்து, சத்யுகக் கரைக்கு அழைத்துச் செல்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். இவர் ஆத்மாக்களிடத்தில் உரையாடிக் கொண்டிருக்கின்றார். தந்தை வந்து ஆத்மாக்களின் ஜோதியை ஏற்றுகின்றார். அவரை தீபம் என்றும் சொல்கிறோம். ஜோதி சொரூபமானவர் என்றும் கூறப்படுகின்றது. மனிதர்கள் இறந்து விட்டால் தீபம் ஏற்றி வைப்பார்கள். அதில் நெய் ஊற்றிக் கொண்டே யிருப்பார்கள். உங்களுக்கு ஞான நெய் அரைகல்பத்திற்கு எங்கும் கிடைக்காத காரணத்தினால் அனைவரின் தீபங்களும் மறைந்து அதாவது அணைந்து விட்டது. சிறிது எரிந்து கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் ஆழந்த இருளாக இருக்கின்றது. சத்யுகத்தில் ஆழ்ந்த வெளிச்சம் இருக்கும். இப்பொழுது மீண்டும் ஆத்மாக்களாகிய உங்களது தீபம் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கூடவே செல்வதற்கான மூன்றாவது கண்ணும் உங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இனிமையிலும் இனிமையான, செல்லமான குழந்தைகளே..... என்று கடிதத்திலும் எழுதியிருக்கின்றார். தந்தையும் மிக இனிமையானவராக இருக்கின்றார் அல்லவா! பாபா மிக இனிமையானவராக, மிக அன்பானவராக இருக்கின்றார் என்பதை நீங்கள் நடைமுறையில் உணர்ந்திருக்கின்றீர்கள். நம்மை எவ்வளவு இனிமையானவராக ஆக்குகின்றார்! நாமும் எவ்வளவு இனிமையானவர்களாக இருந்தோம், எவ்வளவு அன்பானவர்களாக இருந்தோம் என்பதை நீங்களும் அறிந்திருக்கின்றீர்கள். பிறகு நாமே பூஜ்ய நிலையிலிருந்து பூஜாரிகளாக ஆகி தன்னையே பூஜை செய்து கொண்டிருக்கின்றோம். நாமே இலட்சுமி நாராயணனாக அதாவது சூரிய வம்சிகளாக இருந்தோம், பிறகு நாமே சந்திர வம்சத்தினர்களாக ஆனோம். இப்பொழுது மீண்டும் சூரிய வம்சத்தினர்களாக ஆகின்றோம் அதாவது இலாபத்தில் செல்கின்றோம். ஆகையால் தந்தையை நினைவு செய்ய வேண்டும் மற்றும் படிக்க வேண்டும். இது மிகவும் அதிசயமான விசயங்களாகும். ஜனகருக்கு விநாடியில் ஜீவன் முக்தி கிடைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. நமக்கும் ஜனகரைப் போன்ற ஞானம் தேவை. நீங்கள் அனைவரும் ஜனகர்களாக இருக்கின்றீர்களல்லவா! வீட்டிற்கு எஜமானர்களாக இருக்கின்றீர்களல்லவா! சிலர் பெரிய செல்வந்தர்களாகவும், சிலர் குறைவாகவும் இருக்கின்றனர். ஆனால் ஜனகராக இருக்கின்றீர்கள். ஏழைகளும் தன்னை வீட்டிற்கு எஜமானன் என்று நினைக்கின்றனர். ஆக நீங்கள் ஒவ்வொருவரும் தன்னை ஜனகர் என்று நினையுங்கள். விநாடியில் ஜீவன் முக்தி கிடைக்கும். தந்தையை ஏழைப் பங்காளன் என்று கூறப்படுகின்றது. ஏனெனில் அனைவரையும் விட பாரதவாசிகள் மட்டுமே ஏழைகளாக ஆகியிருக்கின்றனர். இப்பொழுது நீங்கள் முற்றிலும் பிச்சைக்காரர்களாக ஆக வேண்டும். இந்த தேகமும் தனது என்று நினைக்காதீர்கள். கம்பும் எடுக்காதீர்கள் என்ற ஒரு கதை இருக்கின்றதல்லவா! முக்கியமானது தேக அகங்காரம் என்று தந்தை கூறுகின்றார். அதனை மறந்து விடுங்கள். ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள். நான் ஆத்மா, இது சரீரம் என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கின்றீர்கள். ஒரு சரீரத்தை விட்டு விட்டு மற்றொன்று எடுக்கின்றது. மறுபிறப்பை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். எந்த யுகத்தில் இருப்பார்களோ அந்த யுகத்தில் தான் மறுபிறப்பும் எடுப்பார்கள். 84 பிறப்புகள் உள்ளதல்லவா! இது சக்கரமாகும். குழந்தைகளாகிய உங்கள் மூலமாகவே ஆதி என்பது ஆரம்பமாகும். பிறகு கீழே வருகின்றீர்கள். இது தான் சுயதரிசனமாகும். மூன்றாவது கண்ணும் உங்களுக்கு கிடைத்திருக்கின்றது. எந்த அளவிற்கு தந்தையை நினைவு செய்கின்றீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவியை அடைவீர்கள். ஜீவன் முக்தியானது அனைவருக்கும் கிடைக்கின்றது. முதலில் முக்தியில் செல்ல வேண்டும். நீங்களும் முதலில் முக்தியில் செல்கின்றீர்கள். பிறகு ஜீவன் முக்திக்கு வருகின்றீர்கள். சொர்க்கத்தில் முதன் முதலில் தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள் வருவார்கள். அந்த தர்மமானது இப்பொழுது மறைந்து விட்டது.

        

        இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! சதா அமைதியாக இருங்கள், சிரஞ்சீவி ஆகுங்கள், அதாவது அதிக பிறவிகள் எடுத்து வாழுங்கள் என்று தந்தை இப்பொழுது ஆசீர்வாதம் செய்கின்றார். ஆசீர்வாதமானது தந்தையிடமிருந்து கிடைக்கின்றது. நாம் சிரஞ்சீவியாக எப்படி ஆவது? என்று ஒவ்வொருவரும் சுய முயற்சி செய்ய வேண்டும். தந்தையை நினைவு செய்வதன் மூலமாகவே நீங்கள் சிரஞ்சீவிகளாக ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த ஆசீர்வாதம் தந்தை செய்கின்றார். நீண்ட ஆயுளுடன் இருங்கள் என்று பிராமணர் களும் ஆசீர்வாதம் செய்கின்றனர். குழந்தைகளே! சதா உயிருடன் வாழ்ந்து கொண்டே இருங்கள் என்று தந்தையும் கூறுகின்றார். நாம் சிரஞ்சீவிகளாக ஆகிக் கொண்டிருக்கின்றோம் என்பதை நீங்களும் அறிந்திருக்கின்றீர்கள். அரை கல்பத்திற்கு ஒருபொழுதும் காலன் சாப்பிடாது. சத்யுகத்தில் இறப்பு என்ற பெயர் இருக்காது. இங்கு மனிதர்கள் இறப்பதற்குப் பயப்படுகின்றனர் அல்லவா! நீங்கள் இறப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள். சரீரத்தை விட்டு விட்டு சொர்க்கவாசியாவதற்காக நாம் தங்களது தந்தையிடத்தில் செல்வோம். நிர்வாண்தாம் செல்வதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம், சந்நியாசிகளால் செய்ய முடியாது. அவர்கள் தானும் முக்தி அடைவதில்லை, மற்றவர்களுக்கும் கொடுப்பதில்லை.

        

        நாம் பாபாவை நினைவு செய்து செய்து சரீரத்தை விட்டு விடுவோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். பாபா, நாம் சீக்கிரம் செல்ல வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். எப்பொழுது விநாசம் ஆகும்? நாம் எப்பொழுது செல்வோம்? நாம் எப்பொழுது செல்ல வேண்டும்? என்று நீங்கள் கேட்கக் கூடாது. இவ்வாறு நீங்கள் கூறுவது பாபா, நீங்கள் எப்பொழுது திரும்பிச் செல்கின்றீர்கள்? என்று கேட்பது போன்றாகும். நீங்கள் சிவபாபாவிடத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் ஈஸ்வரிய குழந்தைகளாக இருக்கின்றீர்கள். உங்களது நினைவுச் சின்னங்கள் தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மிக அன்பான தந்தையின் குழந்தைகளாக ஆகியிருக்கின்றீர்கள் எனில் நீங்களும் தந்தையைப் போன்று மிக இனிமையானவர்களாக, மிக அன்பானவர்களாக ஆக வேண்டும். மேலும் அனைவரையும் ஆக்க வேண்டும். நேரம் எடுத்துக் கொள்கிறது. சிலர் மிக விரைவாக ஓடுகின்றனர், சிலர் குறைவாக ஓடுகின்றனர். முந்தைய கல்பத்தைப் போன்று இந்த நேரம் வரைக்கும் இன்னார் இந்த அளவிற்கு முன்னேறி மலர்களாக ஆகியிருக்கின்றார் என்று கூறலாம். இவ்வளவு பேர் மொட்டுக்களாக இருக்கின்றனர். சிலர் மொட்டிலிருந்து மலர்களாக ஆகி, பிறகு மீண்டும் முட்களாக ஆகிவிடுகின்றனர். மாயையின் புயல்கள் வரும் பொழுது மொட்டும் இருக்காது, மலரும் இருக்காது. மிகப் பெரிய முட்களாக ஆகிவிடுகின்றனர். அதிகமான அபலைகளின் மீது தீங்கு ஏற்படுகின்றது. கட்டுப்பாடு ஏற்பட்டு விடுகின்றது. அதிக நஷ்டம் ஏற்படுகின்றது. உள்ளுக்குள் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்....... என்று பிருந்தாவனத்தைப் பற்றிக் கூறுவர். இது ஞான நடனத்திற்கான விசயமாகும். குழந்தைகளாகிய நீங்கள் ஞான நடனம் செய்வதற்காக எங்கிருந்தெல்லாம் வருகின்றீர்கள்! புத்துணர்வு அடைந்த பிறகு சென்று ஞான நடனம் செய்யக் கூடியவர்களையே பாபா மேகங்கள் என்று கூறுகின்றார். இன்னும் சிறிது காலம் தான் இருக்கின்றது என்று பாபா கூறுகின்றார். இது மிகவும் நல்ல நேரமாகும். எவ்வளவு நேரம் கிடைத்தாலும் மிகவும் நல்லதாகும். நமது மனநிலை பக்குவமாகிக் கொண்டே செல்லும். தந்தை இரத்தினம் கொடுப்பதற்காக வந்திருக்கின்றார் அல்லவா! இப்பொழுது வரைக்கும் மிகவும் பக்குவமற்றவர்களாக இருக்கின்றனர். அனைவருக்கும் சேமிப்பு ஏற்படுவதில்லை. மிகப் பெரிய ராஜ்ஜியம் ஸ்தாபனை ஆகின்றது. நாம் தந்தையை நினைவு செய்வதன் மூலம் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றோம் என்பதை நீங்கள் மட்டுமே அறிந்திருக்கின்றீர்கள். தந்தை மற்றும் பொக்கிஷத்தின் நினைவு இருக்கின்றது. நினைவின் மூலமாகவே நாம் நமது சுயராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றோம். சுயம் ஆத்மாவிற்கு இப்பொழுது இராஜ்யம் கிடையாது. இப்பொழுது மீண்டும் இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக ஆவோம். இந்த போதை ஆத்மாவிற்கு இருக்கின்றது. ஆத்மா இந்த கர்மேந்திரியங்களின் மூலம் வர்ணனை செய்கின்றது. ஆத்மாவிற்குத் தான் இந்த நாடகச் சக்கரத்தின் ஞானம் கிடைத்திருக்கின்றது. விதை மற்றும் மரத்தை அறிந்து கொண்டீர்கள். நானும், நீங்களும் கல்பத்திற்கு முன்பும் இருந்தோம், இப்பொழுதும் இருக்கின்றோம், பிறகு கல்பத்திற்குப் பின்பும் இருப்போம் என்று தந்தை கூறுகின்றார். முழு கல்ப மரத்தைப் பற்றி அறிந்து கொண்டீர்கள். முதன் முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். இவர் அனைத்து ஆத்மாக்களின் நிராகாரமான தந்தையாக இருக்கின்றார். முதன் முதலில் பிராமணர்களைப் படைக்கின்றார். சூத்திர வர்ணத்தில் உள்ளவர்களை பிராமணர்களாக ஆக்குகின்றார். இது மிகப் பெரிய அடையாளமாகும். பிராமணனிலிருந்து தேவதா, பிறகு சத்திரியர், பிறகு இஸ்லாமியர்கள், பிறகு பௌத்தவர்கள் போன்றவர்கள் அனைவரும் வெளிப்படுகின்றனர். இவர் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையாக இருக்கின்றார். ஸ்தூலத்தில் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையாக பிரம்மா இருக்கின்றார். ஆன்மீகத் தந்தையாக சிவபாபா இருக்கின்றார். மூலவதனம், சூட்சுமவதனம் மற்றும் ஸ்தூலவதனமாகும். பிரம்மாவின் மூலமாக இந்த பிராமணர்கள் உருவாகின்றனர். பிறகு இந்த தேவதைகள், சத்திரியர்கள், வைஷ்ணவர்கள், சூத்திரர்களாக ஆவீர்கள். சுருக்கமாக புத்தியில் அனைத்தும் இருக்கின்றது. சரீர நிர்வாகமும் செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் கர்மயோகிகளாக இருக்கின்றீர்கள். தொழில் மற்றும் செயல்கள் செய்வதற்கு 8 மணி நேரம் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அதனை செய்தே ஆக வேண்டும். அரசாங்க வேலையானது 8 மணி நேரத்திற்கு இருக்கும். அரசாங்கத்திற்கும் முதன்மை நீதிபதிகள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் முழுமையான தீர்ப்பு கொடுப்பதில்லை. இது பாண்டவ அரசாங்கமாகவும் இருக்கின்றது, மேலும் தர்மராஜராகவும் இருக்கின்றார். நல்ல முறையில் சேவை செய்யவில்லையெனில், ஆத்ம அபிமானியாக ஆகவில்லையெனில், ஏதாவது தவறான செயல்கள் செய்து விட்டால் அதற்கான தண்டனை அதிகமாக அடைய வேண்டியிருக்கும் என்று குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்படுகிறது. இது மிக உயர்ந்த அரசாங்கமாகவும் இருக்கின்றது, இவர் உயர்ந்த சுப்ரீம் நீதிபதியாகவும் இருக்கின்றார். ஏதாவது தவறுகள் செய்தால் பிறகு அதற்கு டிரிபூனல் இருப்பார்கள். குறிப்பாக குழந்தைகளாகிய உங்களுக்காகவே. அரசாங்கத்திடமும் தீர்ப்புகள் இருக்குமல்லவா! இங்கு நடைபெற்று வருகின்றது. யார் எப்படிப்பட்டச் செயல்களை செய்கின்றார்களோ அவர்கள் அப்படிப்பட்ட பலனை அடை கின்றனர். இது ஆன்மீக அரசாங்கமாக இருக்கின்றது. ஆத்மாவிற்கு தண்டனை கிடைக்கின்றது. இங்கு ஸ்தூல் தண்டனைகள் கிடைக்கின்றது. அது குப்தமான தண்டனையாகும். கர்ப்பத்தில் தண்டனையை அனுபவிக்கின்றது. என்னை வெளியில் கொண்டு வாருங்கள் என்றும் கூறுகின்றது. ஆனால் சிறைப்பறவைகளாக அரைகல்பத்திற்கு ஆகியே தீர வேண்டும். பிறகு அரைகல்பத்திற்கு நீங்கள் கர்ப்பமாளிகையில் இருப்பீர்கள். இந்த பதீத உலகில், பதீத சரீரத்தில் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு நான் எவ்வளவு சேவை செய்கின்றேன்! என்று தந்தை கூறுகின்றார். நான் இவரது உடலில் தான் வர வேண்டியிருக்கின்றது. அவருக்கு பெயர் பிரம்மா என்று வைக்கப்பட்டிருக்கின்றது. பிரம்மா, சரஸ்வதியே ஸ்ரீ நாராயணனாகவும், ஸ்ரீ இலட்சுமியாகவும் ஆகின்றனர். அதே போன்றே அவரது குழந்தைகளும் இருப்பார்கள். நாம் தாய், தந்தையின் உள்ளத்தை ஜெயிக்கக் கூடியவர்கள் என்பதை தாங்கள் அறிந்திருக்கின்றீர்கள். ஒருவருக்கொருவர் வாரிசாக ஆகிக் கொண்டிருக்கின்றனர். முதலில் வந்தவர்கள் பிறகு கீழே வர ஆரம்பித்து விடுகின்றனர். மாயாவை வெல்லும் பொழுது சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகி விடுவீர்கள் என்று இங்கு கூறப்படுகின்றது. பதீத மனிதர்களால் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக முடியாது. நாடகத்தில் எனக்கு கல்ப கல்பத்திற்கு பாகம் இருக்கின்றது என்று பாபா கூறுகின்றார். நாடகம் முடிவடைகின்றது என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். சத்யுகத்தின் சரித்திர பூகோள மானது மீண்டும் நடைபெறும். மீண்டும் நாமே தேவி தேவதைகளாக ஆவோம். நீங்கள் இந்த சக்கரத்தை அறிந்திருக்கின்றீர்கள். உங்களது அதிஷ்டமானது விழிப்படைந்திருக்கின்றது. ஞான சூரியனாக இருக்கக் கூடியவர் உங்களது அதிஷ்டத்தை விழிப்படையச் செய்து கொண்டிருக்கின்றார். தேகாபிமானம் தான் அதிர்ஷ்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கின்றது. முக்கிய விசயம் என்னவெனில் ஆத்ம அபிமானியாக ஆகுங்கள். தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். எவ்வளவு எளிமையான விசயமாகும்! இது 5 ஆயிரம் ஆண்டிற்கான விசயம் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள்.

        

        ஆத்மா அபிமானியாகவே இருங்கள் என்று பாபா புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். பகவான் ஒரே ஒருவர், அவரையே பக்தர்கள் அனைவரும் நினைவு செய்கின்றனர் என்பதைப் புரிய வைக்க வேண்டும். பக்தர்களே பகவானாக இருக்கும் பொழுது பிறகு யாரை நினைவு செய்வது? பகவானை அடைவதற்காக பக்தர்கள் அதாவது சாதுக்கள் சாதனை செய்கின்றனர். ஜோதி ஜோதியுடன் ஐக்கியமாகி விட்டது என்று கூறுகின்றனர். ஆனால் நிர்வாண்தாமத்திற்கு எஜமானர் இருக்க வேண்டுமல்லவா! பிரம்மமே பகவான் என்று கூற முடியாது. இது உங்களது பிரமையாகும் என்று பகவான் கூறுகின்றார். நான் பிரம்மத்தில் நட்சத்திரமாக இருக்கின்றேன். ஆத்மாவில் 84 பிறவிகளுக்கான அழிவற்ற பாகம் பதிவாகி இருக்கின்றது, அதனை ஒருபொழுதும் அழிக்க முடியாதது போன்று நானும் இந்த நாடகம் என்ற பந்தனத்தில் இருக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். இது மீண்டும் அதே போன்று திரும்பவும் நடைபெறும். நல்லது.

        

        இனிமையிலும் இனிய செல்லமான குழந்தைகளுக்கு ஆன்மீக தாய், தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

        

        தாரணைக்கான முக்கிய சாரம்:

        1) அழிவற்ற ஞான ரத்தினங்களை தானம் செய்து உண்மையான வியாபாரியாக ஆக வேண்டும். உண்மையான தொழில் செய்ய வேண்டும்.

        

        2) ஆத்ம அபிமானியாவதற்கான முயற்சி செய்ய வேண்டும். ஞானம் நடனம் செய்தற்கு கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

        

        வரதானம்:

        செய்பவர், செய்விப்பவரின் நினைவின் மூலம் விக்னங்களின் விதையை அழிக்கக் கூடிய சக்திசாலி ஆத்மா ஆகுக.


        

        அனைத்து வகையான விக்னங்களுக்கும் விதையாக இருப்பது இரண்டு வார்த்தைகளாகும் - 1) அபிமானம், 2) அவமானம். சேவை களத்தில் நான் இதை செய்தேன், என்னால் தான் செய்ய முடியும் .. என்று அபிமானம் வருகிறது அல்லது என்னை ஏன் முன் நிறுத்தவில்லை, எனக்கு ஏன் இதை கூறினீர்கள், இது எனக்கு அவமானம் ஏற்படுத்தி விட்டது. என்ன இந்த பாவனை தான் வித விதமான விக்னங்களின் ரூபத்தில் வருகிறது. பகவானின் உதவியாளர்களாக இருக்கிறீர்கள், செய்பவர், செய்விப்பவர் தந்தை எனும் போது அபிமானம் எங்கிருந்து வந்தது? அவமானம் எப்படி ஏற்பட முடியும்? ஆகையால் இணைந்த ரூபத்தின் நினைவின் மூலம் சக்திசாலி ஆத்மா ஆகின்ற போது விக்னங்களின் விதைகள் சதா காலத்திற்கும் அழிந்து விடும்.

        

        சுலோகன்:

        ஞான சொரூபம் ஆக வேண்டுமெனில் தந்தை மற்றும் படிப்பின் மீது சமமான அன்பு இருக்க வேண்டும்.

        

     

    ***OM SHANTI***

    No comments

    Say Om Shanti to all BKs