BK Murli Tamil 21 June 2018

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli Tamil 21 June 2018

        21.06.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


           "இனிமையான குழந்தைகளே! ஈஸ்வரிய குழந்தைப் பருவத்தை மறந்து, உயர்ந்ததிலும் உயர்ந்த ஆஸ்தியை இழந்து விடக் கூடாது. முழுத் தேர்ச்சி பெறுவீர்களானால் சூரியவம்ச இராஜ குலத்தில் இராஜ்யம் கிடைக்கும்

        

        கேள்வி:

        சத்யுகம் மற்றும் திரேதாவில் எந்த ஓர் ஆத்மாவும் தனது கர்மத்தின் கணக்கை சேர்க்க வேண்டியதில்லை, ஏன்?

        

        பதில் :

        ஏனெனில் சத்யுக-திரேதாவில் வரக்கூடிய ஆத்மாக்கள் சங்கமயுக பிராலப்தத்தையே (பலனை) அனுபவிக்கிறார்கள். அவர்கள் சங்கம யுகத்தில் தந்தை மூலம் அப்படிப்பட்ட கர்மத்தைக் கற்றுக் கொள்கின்றனர், அதனால் 21 பிறவிகள் வரை அவர்களுக்கு எந்த ஒரு கர்மமும் கணக்கில் சேராது. பிறகு எந்த ஒரு கர்மத்தின் பலனாகவும் துக்கம் அனுபவிக்க வேண்டியிருக்காது.

        

        பாடல் :

        குழந்தைப் பருவத்தின் நாட்களை மறந்து விடலாகாது......

        

        ஓம் சாந்தி.
        குழந்தைகள் இனிமையிலும் இனிமையான பாடலைக் கேட்டீர்கள். எல்லையற்ற தந்தை குழந்தைகளுக்குச் சொல்லிப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்ரீ ஸ்ரீ அல்லது சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமானவர் தான் பரமபிதா பரமாத்மா எனப்படுகிறார். சிவபகவான் வாக்கு அல்லது ருத்ர பகவான் வாக்கு என்றும் சொல்கின்றனர். ருத்ரன் என்று பரமபிதா பரமாத்மா தான் சொல்லப்படுகின்றார். ஆக, பரமபிதா பரமாத்மா இந்த சரீரத்தின் மூலம் தம்முடைய குழந்தைகளுக்குச் சொல்லிப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் ஆத்மா என்று வேறு எந்த மனிதரோ, சாது, சந்நியாசிகள் போன்ற யாரும் சொல்ல மாட்டார்கள். உங்களுடைய பரமபிதா இந்த கமலவாய் (பிரம்மா) மூலம் பேசிக்கொண்டிருக்கிறார். பசுவின் வாய் (கௌமுக்) என்கின்றனர். இப்போது தண்ணீரின் எந்த ஒரு விஷயமும் இல்லை. தந்தை ஞானக்கடலாக இருக்கிறார். ஸ்ரீ ஸ்ரீ 108 ருத்ரமாலை அல்லது சிவமாலை உள்ளது இல்லையா? முதலாவதாக இதை முழு உறுதி கொள்ளுங்கள், அதாவது பாபா ஆத்மாக்களாகிய நமக்குக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார். ஆத்மா தான் சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்கின்றது. ஆத்மா தான் படிக்கின்றது, உடல் உறுப்புகள் மூலமாக. ஆத்மா, தானே சொல்கின்றது, நான் ஒரு சரீரத்தை விட்டு வேறொன்றை எடுக்கின்றேன். வெவ்வேறு பெயர், வடிவம், தேசம், காலம் சத்யுகத்தில் புனர்ஜென்மம் எடுக்கிறேன் என்றால் பெயர்-வடிவம் மாறிவிடுகின்றது. ஆகவே இதை ஆத்மா கூறுகின்றது. முதலில் சத்யுகத்தில் இருக்கிறேன் என்றால், புனர் ஜென்மமும் (மறுபிறவி) சத்தியுகத்தில் ஏற்படுகிறது. அதாவது பாபா புரிய வைக்கின்றார்: நீங்கள் சொர்க்கத்திலிருந்தால் புனர் ஜென்மம் அங்கே எடுக்கிறீர்கள். பிறகு பெயர் ரூபம் மாறிவிடுகிறது.

        

        தந்தை நிராகார் சிவபாபா இந்த ரதத்தில் வந்து சொல்லிப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகளே! இப்போது நீங்கள் என்னுடைய குழந்தைகளாக ஆகியிருக்கிறீர்கள். உங்களுக்கு மிகுந்த குஷி அதிகரித்துள்ளது. நாம் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம், இந்த பிரம்மா மூலம். ஆத்மா சொல்கின்றது, நான் இந்த சரீரத்தின் மூலம் வக்கீல் அல்லது டாக்டரின் பாகத்தை நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆத்மா நாம் அசரீரியாக இருந்தோம், பிறகு கர்ப்பத்தில் வந்து சரீரத்தை தாரணை செய்திருக்கிறோம். தந்தை சொல்கிறார், நானோ கர்ப்பத்தில் வருவதில்லை. பரமபிதா பரமாத்மா ஒரு சரீரம் விட்டு வேறு சரீரம் எடுப்பதாக நான் சொல்வதில்லை. இல்லை, நீங்கள் தான் அதுபோல் எடுக்கின்றீர்கள். இந்த தாதா எடுக்கின்றார். இந்த ஆத்மா 84 பிறவிகளை முழுமையாக எடுத்துள்ளது. இந்த ஆத்மா தன்னுடைய பிறவிகளைப் பற்றி அறியாதிருந்தது. இப்போது 84 பிறவிகளைப் பற்றி அறிந்து கொண்டு விட்டது. ஆத்மா தான் சொல்கின்றது, நான் சூரியவம்ச குலத்தில் பிறவி எடுத்தேன். பிறகு மறுபிறவி எடுத்தே வந்திருக்கிறேன். பிறகு சந்திரவம்சி குலத்தில் ஜென்மம் எடுத்தேன். பிறகு புனர் ஜென்மம் எடுத்து எடுத்தே சத்யுகம், திரேதா, துவாபர, கலியுகத்தில் வந்தேன். ஆத்மா சொல்கின்றது, துவாபரயுகத்தில் நான் பாபாவை மிகவும் நினைவு செய்தேன். பரமபிதா பரமாத்மாவின் லிங்கரூபத்தின் பூஜையும் செய்தேன். நான் ஆத்மா சத்யுகத்தில் மாலிக்காக (எஜமான்) இருந்தேன். அங்கே யாருக்கும் பூஜை செய்ததில்லை. சொர்க்கத்தில் பக்தி இருப்பதில்லை. அரைக் கல்பமாக பக்தி செய்தேன். இப்போது மீண்டும் தந்தையின் முன்னிலையில் வந்துள்ளேன். இப்போது நீங்கள் அனைவரும் நிராகார் தந்தையின் முன்னிலையில் வந்திருக்கிறீர்கள், சாகார் பாபா (பிரம்மா) மூலமாக தந்தை சொல்கிறார், இந்த ஈஸ்வரிய ஜென்மத்தை மறந்துவிடலாகாது. சொல்கிறார்கள் பாபா, இதுவோ மிகவும் கஷ்டமானது என்று. அட, இது என்ன கஷ்டமான விஷயம்? ஆத்மாக்களாகிய உங்களுடைய தந்தை நான். நான் வந்துள்ளேன், உங்களை தூய்மையற்றதிலிருந்து தூய்மையாக ஆக்குவதற்காக. நீங்கள் சொர்க்கத்தில் ஆட்சி செலுத்துவதற்காகப் படிக்கின்றீர்கள். ஞானத்தின் சம்ஸ்காரம் பரமபிதா பரமாத்மாவாகிய எனக்குள் உள்ளது. அதனால் என்னை ஞானக்கடல் என்றும் மனித சிருஷ்டியின் விதை வடிவம் என்றும் சொல்கின்றனர். அவர் தாமே சொல்கின்றார், நிச்சயமாக நான் படைப்பவராக உள்ளேன், நான் பரந்தாமத்தில் வசிக்கின்றேன். நான் இங்கே ஒரே ஒரு தடவை வருகின்றேன். படிப்பு சொல்லித்தர வேண்டி வரும்போது. தூய்மை இழந்த சிருஷ்டியை தூய்மை ஆக்குகின்றேன். நிச்சயமாகப் தூய்மை இல்லாமல் இருப்பவர்கள் தான் நினைவு செய்வார்கள். சத்யுகத்தில் தூய்மையாக இருப்பதால் நினைவு செய்ய மாட்டார்கள். ஆத்மாக்களாகிய எங்களை வந்து தூய்மையாக்குங்கள் என்று அங்கு யாரும் சொல்ல மாட்டார்கள். தூய்மையில்லாதவர்களாக ஆக்கியது மாயா. அதனால் தான் தூய்மையாக்குங்கள் எனச் சொல்கின்றனர். ஆனால் நான் எப்போது வருகின்றேன் என்பது அவர்களுக்குத் தெரியாது. நான் வருவது சங்கமயுகத்தில். வேறு எந்தச் சமயத்திலும் நான் வருவதில்லை. இப்போது தான் வந்திருக்கின்றேன். இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் என் மடியைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், பாபா மீண்டும் புராதன இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். அதன் மூலம் பாரதம் தூய்மை அடைகின்றது. இது நிராகார் ஈஸ்வரனின் பாடசாலை. நிராகார் பாபா சொல்கின்றார், நான் இந்த சரீரத்தில் வருகின்றேன். இந்த பிரம்மா உங்களுடைய பெரிய அம்மா ஆவார். அந்த மம்மா சரஸ்வதி ஜெகதம்பா-பிரம்மாவின் மகள். பெரிய மம்மா பாலனை செய்ய முடியாது. அதனால் அந்த ஜெகதம்பா நிமித்தமாக்கப் பட்டிருக்கிறார். இவருடைய (பிரம்மா) சரீரத்தை ஜெகதம்பா எனச் சொல்ல மாட்டார்கள். இவர் தாய்-தந்தையாக உள்ளார். இந்த பிரம்மா மாதாவாகவும் உள்ளார். ஆஸ்தி மாதாவிடமிருந்து கிடைக்காது. பிறகும் கூடத் தந்தையிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கும். இந்த பிரம்மா என்ற அம்மாவின் முகவம்சாவளி நீங்கள். தந்தை சொல்கின்றார்: குழந்தைகளே! என்னுடையவர் ஆகி, நீங்கள் சொர்க்கத்தின் இராஜபதவி அடைவதற்காகப் புருஷார்த்தம் செய்து-செய்து பிறகு எங்காவது மாயாவின் யுத்தத்தில் தோற்றுவிடக் கூடாது. ஓடிப் போய்விடக் கூடாது. இந்த ஈஸ்வரிய குழந்தைப் பருவத்தினை மறந்து விடலாகாது. மறந்து போனால் பிறகு அழ நேரிடும். ஆக, ஜெகதம்பா என அழைக்கப்படுகின்ற பி.கே.சரஸ்வதி பாலனை செய்வதற்காக நிமித்தமாக ஆகியுள்ளார். இவர் (பிரம்மா) எப்படிப் பாலனை செய்ய முடியும்? கலசம் முதல் முதலில் இவருக்குக் கிடைக்கின்றது. முதலில் இவரது காது கேட்கின்றது. பிறகு ஜெகதம்பா பாலனைக்காக உள்ளார். இப்போது தந்தை சொல்கின்றார், நான் சங்கமயுகத்தில் உங்களை அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். எப்படி தர்ம மாதம் புருஷோத்தம மாதம் எனச் சொல்லப் படுகின்றது இல்லையா? அதே போல் இதுவும் கூடப் புருஷோத்தம யுகம். இங்கே உத்தமத்திலும் உத்தமமான ஆத்மாவாக ஆக வேண்டும். புருஷோத்தம் என்றால், உத்தமத்திலும் உத்தமமான ஆத்மாக்கள் யார்? இந்த ஸ்ரீ லட்சுமி-நாராயணர், இந்த நரன்-நாரி உயர்ந்தவரிலும் உயர்ந்தவராக எப்படி., யார் மூலம் ஆனார்கள்? பாபா சொல்கின்றார், என் மூலமாக. என்னுடைய பெயரும் கூட ஸ்ரீ ஸ்ரீ சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமானவர். இந்த ஸ்ரீ நாராயணர் போன்ற மனிதர்களை நான் உருவாக்குகின்றேன். தூய்மை இல்லாதவர்களைப் தூய்மையாக்குகிறேன். இதன் மூலம் பிறகு இந்த லட்சுமி-நாராயணர் போலவே புருஷோத்தம் மற்றும் புருஷோத்தமி ஆகின்றனர். பாபா சொல்கிறார்: குழந்தைகளே! தேகத்துடன் கூட தேக சம்மந்தங்கள் அனைத்தையும் மறந்து விடுங்கள். என்னிடம் மட்டுமே உங்கள் யோகத்தை வையுங்கள். நீங்கள் சொல்கிறீர்கள், நாங்கள் பாபாவின் குழந்தைகள் ஆகியிருக்கிறோம். பாபா ஸ்தாபிக்கின்ற சொர்க்கத்திற்கு நாங்கள் எஜமானர் ஆவோம். பாபா சொல்கிறார், என்னையே நினைவு செய்யுங்கள். இது ஆத்மாவின் அல்லது புத்தியின் யாத்திரை. ஆத்மா தான் தாரணை செய்ய வேண்டும். சரீரமோ ஜடம். ஆத்மாவின் பிரவேசத்தின் மூலம் இது சைதன்யமாகின்றது.

        

        ஆக, பாபா சொல்லிப் புரிய வைக்கிறார்: செல்லக் குழந்தைகளே! இந்த நினைவின் பயணம் மிக நீண்டது. தீர்த்த ஸ்தலங்களிலோ மனிதர்கள் சுற்றி வந்து திரும்புகின்றனர். தீர்த்த ஸ்தலங்களுக்குச் செல்லும் போது ஒருபோதும் அவர்கள் விகாரத்தில் போவதில்லை. கோபம், பேராசை முதலானவை வரலாம், ஆனால் தூய்மையாக நிச்சயம் இருப்பார்கள். பிறகு வீட்டுக்குத் திரும்பிவிட்டால் தூய்மையை இழந்து விடுவார்கள். இச்சமயம் அனைவருக்கும் ஆத்மாவும் பொய்யானதென்றால், சரீரமும் கூடப் பொய்யாகவே உள்ளது. லட்சுமி-நாராயணரின் ராஜதானியில் தொடங்கி எந்தெந்த ஆத்மாக்களெல்லாம் வந்திருக்கிறார்களோ, அனைவருமே இச்சமயம் தூய்மை இல்லாதவர்களாகவே உள்ளனர். சத்யுகத்தில் எல்லையற்ற சுகம், சாந்தி, தூய்மை இருக்கும். கலியுகத்தில் மூன்றுமே இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் துக்கம்-அசாந்தி. சிலருடைய வீட்டிலோ அவ்வளவு அசாந்தி நிறைந்துள்ளது. நரகத்தைப் போல. தங்களுக்குள் அதிகமாக அடித்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர். ஆகவே பாபா சொல்கிறார், இந்தக் குழந்தைப் பருவத்தை மறந்து விடக் கூடாது. மறந்து விட்டால் உயர்ந்ததிலும் உயர்ந்த ஆஸ்தியை இழந்து விடுவீர்கள். மறந்து விட்டீர்கள், கைவிட்டுப் போனீர்கள் என்றால் அதோகதியை அடைய நேரிடும். ஸ்ரீமத் படி நடப்பீர்களானால் சிரேஷ்ட ஸ்ரீலட்சுமி-நாராயண் ஆவீர்கள். சீதா-இராம் திரேதாவில் வந்துவிடுகின்றனர். இரண்டு கலைகள் குறைந்து விட்டன, அதனால் அவர்களுக்கு சத்திரிய அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அங்கே ஏதோ இராம-ராவணனின் யுத்தம் நடந்தது என்பதெல்லாம் இல்லை. யார் மாயா மீது வெற்றி கொள்கின்றனரோ அவர்கள் தேவதா வர்ணத்தில் செல்கின்றனர். யார் மாயாவிடம் தோல்வியுறுகின்றனரோ, இறுதித்தேர்வில் தவறி விடுகின்றனரோ, அவர்கள் சத்திரியர் எனப்படுவார்கள். அவர்கள் இராம்-சீதாவின் குலத்தில் சென்று விடுவார்கள். முழு மதிப்பெண்கள் 100, சூரியவம்சி நம்பர் ஒன்னாக சிம்மாசனத்தில் அமர்வார்கள். கொஞ்சம் மதிப்பெண்கள் குறைந்தால் இரண்டாம் நம்பர். 33 சதவிகித மதிப்பெண்களுக்குக் கீழ் வந்துவிட்டால் இராஜ்யம் பின்னால் தாமதமாகக் கிடைக்கும். சூரியவம்சியின் இராஜ்யம் முடிவடைந்தபின் சந்திரவம்சியின் ராஜ்யம் நடைபெறும். சூரியவம்சி பிறகு சந்திரவம்சி ஆகிவிடுவார்கள். சூரியவம்சி ராஜதானி கடந்ததாக ஆகிவிட்டது. டிராமாவையும் கூடப் புரிந்து கொள்ள வேண்டும். சத்யுகத்திற்குப் பின் திரேதா, சதோபிரதானிலிருந்து சதோ ஆகிவிடுகின்றனர். கறை படிந்து கொண்டே செல்கின்றது. முதலில் தங்கம், பிறகு வெள்ளி, தாமிரம்... இப்போது உங்கள் ஆத்மாவில் கறை படிந்து விட்டது. ஆத்மாவின் ஜோதி மங்கிவிட்டுள்ளது. கல்புத்தியள்ளவராக ஆகியிருக்கின்றனர். பாபா பிறகு பாரஸ் (தங்க) புத்தியுள்ளவராக ஆக்குகின்றார். பாபா சொல்கின்றார், ஹே ஆத்மாக்களே! நடமாடும் போதும் எந்த ஒரு காரியம் செய்யும் போதும் பாபாவை நினைவு செய்யுங்கள். எட்டு மணி நேரம் பாண்டவ அரசாங்கத்திற்கு உதவி செய்யுங்கள். இப்போது நீங்கள் அசுரகுலத்திலிருந்து ஈஸ்வரிய குலத்திற்கு வந்திருக்கிறீர்கள். மீண்டும் அசுர குலத்திற்குச் செல்வீர்களானால், அதாவது அந்தக் குலத்தினரை நினைவு செய்வீர்களானால் பாவகர்மங்கள் வினாசமாகாது. முயற்சி எல்லாமே இதில் தான் உள்ளது. இல்லையென்றால் கடைசியில் மிகவும் அழுது பச்சாத்தாபப் படவேண்டி நேரிடும். பாவங்களின் சுமை அப்படியே இருந்து விட்டால் பிறகு உங்களுக்காகத் தீர்ப்பாயம் (பழ்ண்க்ஷன்ய்ஹப்) விசாரணைக்காக அமர்த்தப்படும். நீங்கள் இன்ன ஜென்மத்தில் இன்னின்ன பாவ காரியங்கள் செய்தீர்கள் என சாட்சாத்காரம் செய்விக்கப்படும். காசி கல்வெட்டிலும் கூட சாட்சாத்காரம் செய்வித்து தண்டனை தருகின்றனர்; இங்கும் கூட சாட்சாத்காரம் செய்வித்து தர்மராஜர் சொல்வார்: இதோ பார், பாபா உனக்கு இந்த பிரம்மா மூலம் பாடம் சொன்னார். உனக்கு இவ்வளவு கற்பித்தும் கூட நீ இன்னின்ன பாவங்களைச் செய்தாய். இந்த ஜென்மத்தினுடையது மட்டுமல்ல, ஆனால் பல பிறவிகளின் பாவங்களை சாட்சாத்காரம் செய்விப்பார். நேரம் அதிகம் பிடிக்கின்றது. அநேகப் பிறவிகளின் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்பதாகத் தோன்றும், பிறகும் கூட மிகவும் பச்சாத்தாபப் படுவார்கள், அழுவார்கள். ஆனாலும் என்ன செய்ய முடியும்? அதனால் முதலிலேயே சொல்லிவிடுகின்றேன். பெயரைக் கெடுத்தால் அதிக தண்டனை அடைய நேரிடும். அதனால் குழந்தைகளே! உங்கள் சத்குருவாகிய எனது பெயரைக் கெடுத்தவர்களாக ஆகாதீர்கள். இல்லையெனில் தண்டனைகளும் அடைவீர்கள், அதோடு பதவியும் குறைந்து போகும்.

        

        உங்களுக்கு சத்யமான தந்தை. சத்யமான ஆசிரியர், சத்குரு ஒருவரே! இப்போது பாபா சொல்கிறார், இந்த பிரம்மா குழந்தை என்னை மிகவும் நினைக்கின்றது. ஞானத்தையும் தாரணை செய்கின்றது. இவரும் மம்மாவும் நம்பர் ஒன்னாகத் தேர்ச்சி பெற்று, பிறகு லட்சுமி-நாராயணர் ஆகின்றனர். இவர்களுடைய சாம்ராஜ்யம் உருவாகின்றது. எல்லாருமே புருஷார்த்தம் செய்கிறார்கள் என்றால் நாமும் கூட மம்மா பாபாவைப் போல் முயற்சி செய்து அவர்களுடைய சிம்மாசனத்திற்கு மாலிக் (எஜமான்) ஆகவேண்டும். தாய்-தந்தையைப் பின்பற்றி வருங்கால சிம்மாசனத்திற்குத் தகுதியுள்ளவராக ஆகவேண்டும். படைப்பவர் மற்றும் படைப்பு பற்றிய இந்த ஞானத்தை வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாது. அவர்களோ முடிவற்றவர் எனச் சொல்லிவிடுகின்றனர் -- எங்களுக்குத் தெரியாது என்கின்றனர். ஆக, நாஸ்திகர்கள். அறிந்திராத காரணத்தால் பாரதவாசிகள் அல்லது குழந்தைகள் அனைவரும் துக்கத்தில் உள்ளனர். சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் தண்ணீருக்காக, நிலத்துக்காக. இது கடந்துபோன பிறவிகளின் கர்மங்களின் பலன் எனச் சொல்லப் படவும் செய்கிறது. இப்போது பாபாவிடமிருந்து நீங்கள் அப்படிப்பட்ட கர்மத்தைக் கற்றுக் கொள்கிறீர்கள், 21 பிறவிகளுக்கு ஒருபோதும் கர்மக் கணக்கை சேமிக்கத் தேவையில்லை. ஒரேயடியாக கர்மாதீத் நிலைக்குக் கொண்டுபோய் விடும். பகவான் வாக்கு - ஏ குழந்தைகளே! தந்தை அல்லது மணாளனாகிய என்னுடையவர்களாக ஆகிய பிறகு ஓருபோதும் கைவிட்டுப் போய்விடக் கூடாது. கைவிட்டுச் செல்ல வேண்டுமென்ற சங்கல்பம் கூட ஒருபோதும் வரக்கூடாது. அங்கே (சத்யுகத்தில்) ஒரு போதும் மனைவியானவள் கணவனை விவாகரத்து செய்வதற்கான சங்கல்பம் கூடச் செய்வதில்லை. குழந்தை ஓரு போதும் தந்தையைக் கைவிடுவதில்லை. இன்றைய உலகிலோ அநேகர் கைவிட்டு விடுகின்றனர். சத்யுகத்தில் ஒருபோதும் கைவிடுவதில்லை, ஏனெனில் அங்கே நீங்கள் இப்போதைய புருஷார்த்தத்தின் பயனை அனுபவிக்கிறீர்கள். ஆகையால் எந்த ஒரு துக்கத்தினுடைய அல்லது கைவிடுகின்ற கேள்வியே இல்லை.

        

        இது நினைவின் யாத்திரை - பரமபிதா பரமாத்மாவிடம் செல்வதற்கான ஆன்மீக யாத்திரை. நிராகார் தந்தை நிராகார் ஆத்மாக்களுடன் பேசுகின்றார், இந்த (பிரம்மாவின்) வாய் மூலமாக. ஆக, இது பசுவின் வாய் ஆகிறது இல்லையா? பெரிய அம்மா அவர். நீங்கள் முகவம்சாவளி. அவரிடமிருந்து ஞானரத்தினங்கள் வெளிப்படுகின்றன. மற்றப்படி பசுவின் வாயிலிருந்து தண்ணீர் எப்படி வெளிப்படும்? பாபா இந்த வாயின் மூலம் அவினாசி ஞானரத்தினங்களைத் தருகின்றார். ஒவ்வொரு ரத்தினமும் லட்ச ரூபாய் பெறுமானமுள்ளது. எவ்வளவு நீங்கள் தாரணை செய்வீர்களோ...... முக்கியமானது மன்மனாபவ. இந்த ஒரு ரத்தினமே முக்கியமானது. எல்லையற்ற தந்தை சொல்கின்றார், என்னை நினைவு செய்வதால் நான் எல்லையற்ற சுகத்தின் ஆஸ்தியை அளிப்பதற்குக் கட்டுப் பட்டிருக்கிறேன். எதுவரை சரீரம் உள்ளதோ அதுவரை என்னை நினைவு செய்து கொண்டே இருப்பீர்களானால் உங்களுக்கு சொர்க்கத்தின் ராஜ பதவியைத் தருவேன். ஏனெனில் நீங்கள் கீழ்ப்படிதலுள்ளவராக, உண்மையுள்ளவராக ஆகின்றீர்கள். எவ்வளவுக்கு ஒருவர் நினைவில் இருக்கின்றாரோ, அவ்வளவுக்கு உலகத்தைப் தூய்மையாக ஆக்குகின்றார். நினைவினால் தான் விகர்மங்கள் வினாசமாகின்றன. குழந்தைகளை மாயா அடிக்கடி மறக்கச் செய்து விடுகின்றது. அதனால் எச்சரிக்கை செய்கின்றார். ஒருபோதும் தந்தையை மறந்து விடலாகாது. நான் உங்களை அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். சத்யுகத்திலிருந்து மீண்டும் நாடகம் ஆரம்பமாகி நடைபெறும். நான் சத்யுகத்தின் எஜமானன் ஆகமாட்டேன். உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜபதவியைக் கொடுக்கிறேன். நான் பிறகு அரைக்கல்பம் வானப்ரஸ்தத்தில் அமர்ந்து விடுவேன். பிறகு அரைக்கல்பத்திற்கு என்னை யாரும் நினைக்க மாட்டார்கள். துக்கத்தில் அனைவருமே நினைவு செய்கின்றனர். சுகத்தில் யாருமே நினைவு செய்வதில்லை. நல்லது.

        

        இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லலிக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

        

        தாரணைக்கான முக்கிய சாரம் :

        1. எட்டு மணி நேரம் பாண்டவ அரசுக்கு அவசியம் உதவி செய்ய வேண்டும். நினைவில் இருந்து உலகத்தைப் தூய்மையாக்குகின்ற சேவை செய்ய வேண்டும்.

        

        2. ஒருபோதும் எந்த ஒரு தலைகீழான கர்மத்தையும் செய்து சத்குருவின் பெயரைக் கெடுத்துவிடக் கூடாது. மம்மா-பாபாவைப் போல் புருஷார்த்தம் செய்து சூர்யவம்சி ராஜபதவியைப் பெற வேண்டும்.

        

        வரதானம் :

        தனது எனும் அதிகாரத்தின் (உரிமையின்) அனுபவத்தின் மூலம் அடிமைத்தனத்தை நீக்கக் கூடிய அனைத்து அதிகாரம் நிறைந்தவர் (சர்வ அதிகாரி) ஆகுக.

        

        தந்தையை தன்னவராக்கிக் கொள்வது என்றால் தனது அதிகாரத்தின் அனுபவம் ஆவதாகும். எங்கே அதிகாரம் உள்ளதோ அங்கே தன்னைக் குறித்த அடிமைத் தனமோ, சம்மந்தம் தொடர்பில் வரக்கூடிய அடிமைத் தனமோ, இயற்கை மற்றும் சூழ்நிலைகளில் வரக்கூடிய அடிமைத் தனமோ எதுவும் கிடையாது. எப்போது இந்த அனைத்து விதமான அடிமைத் தனங்களும் முடிந்து போய் விடுகிறதோ அப்போது முழுமையான அதிகாரி ஆகி விடுகிறீர்கள். யாரெல்லாம் தந்தையை அறிந்து கொண்டு தன்னுடையவராக ஆக்கிக் கொண்டார்களோ அவர்களே மகான் மற்றும் அதிகாரி ஆவர்.

        

        சுலோகன் :

        தனது சம்ஸ்காரங்களை மற்றும் குணங்களை அனைவருடனும் ஒத்துப் போகும்படியாக நடப்பதே விசேஷ ஆத்மாக்களின் சிறப்புத் தன்மையாகும்.

        

    ***OM SHANTI***

    No comments

    Say Om Shanti to all BKs