BK Murli Tamil 20 October 2018

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli Tamil 20 October 2018

    20.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்



    இனிமையான குழந்தைகளே ! ஒரு பாபாவைத் தவிர வேறு யாருடைய நினைவும் கடைசியில் வராதபடி, நினைவில் இருக்கப் பயிற்சி செய்யுங்கள்.



    கேள்வி :

    குழந்தைகளாகிய நீங்கள் எந்த ஒரு ஸ்ரீமத்தை கடைபிடிக்கும் போது அதிர்ஷ்டசாஆக முடியும் ?



    பதில் :

    குழந்தைகளே தூக்கத்தை வென்றவர் ஆகுங்கள் என்பது பாபாவின் ஸ்ரீமத் ஆகும். அதிகாலை நேரம் மிகவும் நன்றாக இருக்கும். அந்த நேரத்தில் எழுந்து தந்தையாகிய என்னை நினைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி ஆகலாம். ஒரு வேளை அதிகாலை எழாமல் யார் தூங்குகின்றனரோ அவர் அனைத்தையும் இழக்கின்றனர். தூங்குவது, சாப்பிடுவது என்று மட்டும் இருந்தால் இழப்பு ஆகும். அதிகாலையில் எழக்கூடிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.



    பாட்டு :

    நீ இரவெல்லாம் தூங்கியே கழித்தாய்...........



    ஓம் சாந்தி.

    இந்தக் கதை குழந்தைகளைப் பற்றியதாகும். தந்தை கூறுகிறார் - குழந்தைகளே! சாப்பிடுவது மற்றும் தூங்குவது மட்டும் வாழ்க்கை கிடையாது. குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த அழியாத ஞான ரத்தினங்கள் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. பை நிரம்பிக் கொண்டு இருக்கின்றது. இந்த நேரத்தில் தூங்கிக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டும் இருந்தால் இழப்பாகும். பக்தி மார்க்கத்திலும் சரி, ஞான மார்க்கத்திலும் சரி, காலையில் எழுந்திருப்பதற்கு மிகவும் மகிமை இருக்கின்றது. ஏனென்றால் அதிகாலை நேரம் மிகவும் அமைதியாக இருக்கின்றது. ஆத்மாக்கள் அனைத்தும் தனது சுயதர்மத்தில் இருக்கின்றது. அசரீரி ஆகி ஓய்வைப் பெறுகிறது. அச்சமயம் நினைவு நன்றாக இருக்கின்றது. பகலில் மாயாவின் தாக்கம் இருக்கிறது.. இந்த நேரம் மட்டும் தான் நல்ல நேரம். இப்பொழுது நாம் கிளிஞ்சலில் இருந்து வைரம் போல மாறிக் கொண்டு இருக்கின்றோம். நீங்கள் என்னுடைய குழந்தைகள், நான் உங்களுடைய குழந்தை என குழந்தைகளிடம் பாபா கூறுகின்றார். தந்தை குழந்தையாகின்றார். இது கூட புரிந்து கொள்ளக்கூடிய விஷயம் ஆகும். தந்தை தனது குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுக்கின்றார். அப்படியே நான் வியாபாரியாகவும் இருக்கின்றேன். உங்களுடைய உடல், மனம் அனைத்தும் கூழாங்கல் போன்று மதிப்பற்றதாகும். அவர் உங்களுடைய பழையவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு பிறகு உங்களுக்கே கொடுக்கின்றார். டிரஸ்டியாக இருந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். நீங்கள் பல பிறவிகளாக அர்ப்பணம் ஆகிவிடுவேன் என பாடி வந்தீர்கள். நமக்கு ஒருவர் தான், வேறு யாரும் இல்லை. ஏனென்றால் அனைவரும் பிரிய தர்ஷினிகள். ஒரே பிரிய தர்ஷனைத்தான் நினைப்பார்கள். தேகம் உட்பட அனைத்து சம்பந்தங்களையும் மறந்து ஒருவரின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். அதாவது கடைசியில் இந்த உடல் அல்லது வேறு எதுவும் நினைவில் வரக்கூடாது. அந்த அளவிற்கு பயிற்சி செய்ய வேண்டும். காலை நேரம் மிகவும் நல்லதாகும். இது உங்களுடைய உண்மையிலும் உண்மையான யாத்திரையாகும். அவர்கள் ஒவ்வொரு பிறவியிலும் யாத்திரைகள் செய்து வந்தனர். ஆனால் முக்தியைப் பெறவில்லை. எனவே அது பொய்யான யாத்திரை அல்லவா? இதுவே ஆன்மீகமான உண்மையான முக்தி மற்றும் ஜீவன் முக்திக்கான யாத்திரையாகும். மனிதர்கள் தீர்த்த யாத்திரைகளுக்கு செல்லும் போது அமர்நாத், பத்திரிநாத் என நினைக்கிறார்கள் அல்லவா? நான்கு இடங்கள் முக்கியமானதாகும். நீங்கள் எத்தனை இடங்களுக்குச் சென்று இருக்கின்றீர்கள்? எவ்வளவு பக்தி செய்திருப்பீர்கள்? அரை கல்பமாக செய்து வந்தீர்கள். இப்போது இந்த விஷயங்களை யாரும் அறிவதில்லை. தந்தை வந்து விடுவித்து, வழிகாட்டியாக இருந்து உடன் அழைத்துச் செல்கிறார். எவ்வளவு அதிசயமான வழிகாட்டி! குழந்தைகளை முக்தி, ஜீவன் முக்தி தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். இது போன்ற வழிகாட்டி வேறு யாரும் இல்லை. சந்நியாசிகள் முக்திதாம் என்று மட்டும் கூறுவார்கள். ஜீவன் முக்திதாம் என்ற வார்த்தை அவர்கள் வாயிலிருந்து வராது. அது காகத்தின் எச்சிலுக்குச் சமமான அற்பகால சுகம் என நினைக்கின்றார்கள். பாபா துக்கத்தை நீக்கி சுகம் கொடுப்பவர் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். ஓ தாய் தந்தையே! நாங்கள் உங்கள் குழந்தையானதும் எங்களுடைய துக்கம் அனைத்தும் விலகி விடுகின்றது. நாங்கள் அரை கல்பத்திற்கு சுகம் நிறைந்தவர்களாக மாறுகின்றோம். இது புத்தியில் இருக்கின்றது அல்லவா? வேலை போன்றவற்றில் ஈடுபடும் போது மறந்து போகின்றது. காலையில் எழுவதில்லை. யார் தூங்குகின்றாரோ அவர் இழந்தார்.



    உண்மையில் நமக்கு வைரம் போன்ற வாழ்க்கை கிடைத்திருக்கின்றது என நீங்கள் அறிகிறீர்கள். இப்போது கூட ஒரு வேளை அதிகாலையில் தூக்கத்திலிருந்து எழவில்லை என்றால் அவர் அதிர்ஷ்டசாலி இல்லை எனப் புரிந்து கொள்ளலாம். அதிகாலை எழுந்து மிகவும் அன்பான தந்தையை, பிரிய தர்ஷனை நினைப்பதில்லை. அரை கல்பமாக பிரியதர்ஷன் பிரிந்து இருந்தார். மேலும் முழு கல்பமும் நீங்கள் தந்தையை மறக்கின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் பிரிய தர்ஷனை தந்தை ரூபத்தில் நினைக்கின்றீர்கள். பிரியதர்ஷினி பிரியதர்ஷனை நினைக்கின்றாள். அவரைத் தந்தை என்றும் கூறலாம். இப்போது தந்தை எதிரில் இருக்கின்றார் என்றால் அவர் வழிப்படி நடக்க வேண்டும். ஸ்ரீமத் படி ஒருவேளை நடக்கவில்லை என்றால் கீழே விழந்து விட்டனர். ஸ்ரீமத் என்றால் சிவபாபாவின் வழியாகும். எங்களுக்கு என்ன தெரியும், யாருடைய வழி கிடைத்திருக்கிறது என்று கூறக்கூடாது. இவர் சொல்லும் வழிக்குக் கூட அவர் பொறுப்பாளர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். லௌகீகத்தில் கூட குழந்தைகளுக்கு தந்தை பொறுப்பு அல்லவா? குழந்தை தந்தையை வெளிப்படுத்த வேண்டும். இந்த பிரம்மா உடல் கூட தந்தையை வெளிப்படுத்துகின்றது. மிகச் செல்லமான குழந்தை. மிகவும் நல்ல நல்ல குழந்தைகள் கூட நாம் யாருடைய வழிப்படி நடக்கின்றோம், நமக்கு யார் டைரக்ஷன் கொடுக்கின்றார் என்பதை அறியவில்லை. பாபாவை நினைப்பதே இல்லை. அதிகாலை எழுவதில்லை. நினைப்பதில்லை என்றால் விகர்மம் வினாஷம் ஆகாது. எவ்வளவு கடினமாக உழைத்தாலும் கூட கர்ம போகம் இருந்து கொண்டேயிருக்கின்றது என பாபா கூறுகின்றார். ஏனென்றால் ஒரு பிறவியின் விஷயம் இல்லை அல்லவா? பல பிறவிகளின் கணக்கு வழக்காகும். இந்த பிறவியின் பாவங்களைத் தெரிவிக்கும் போது பாதியாகக் குறையும் என டைரக்ஷன் கிடைத்திருக்கின்றது. பாபா கூறுகின்றார் - நானும் அறிகிறேன், தர்மராஜ் கூட அறிகின்றார். நிறைய பாவம் செய்திருக்கின்றனர். தர்மராஜ் கர்ப்ப சிறையில் தண்டனை கொடுத்திருக்கின்றார். இப்பொழுது நீங்கள் முயற்சி செய்து விகர்மங்களை அழிக்கின்றீர்கள். எனவே கர்ப்ப மாளிகை கிடைக்கின்றது. அங்கு மனிதர்களை பாவம் செய்விக்க, தண்டனை அடைய வைக்க மாயை கிடையாது. அரை கல்பம் ஈஸ்வரிய இராஜ்ஜியம், அரைகல்பம் இராவண இராஜ்யம். பாம்பின் எடுத்துக் காட்டும் இங்கே தான். சந்நியாசிகள் காப்பி செய்துள்ளனர். பாபா குளவியின் எடுத்துக் காட்டு கூட கூறுகின்றார். குளவி புழுவை தனது வீட்டுக்குள் கொண்டு வருகின்றது. நீங்களும் பதீதர்களை அழைத்து வருகின்றீர்கள். பிறகு அவர்களை சூத்திரனிலிருந்து பிராமணராக மாற்றுகின்றீர்கள். உங்களுடைய பெயரே பிராமணி ஆகும். இந்த குளவியின் எடுத்துக் காட்டு மிகவும் நன்றாக இருக்கின்றது. நடைமுறையில் பலர் வருகின்றார்கள். சிலர் அரை குறையாகவே இருக்கின்றார்கள். சிலர் உதிர்ந்து போகின்றார்கள், சிலர் இறந்தும் போகிறார்கள். மாயை பெரிய புயலைக் கொண்டு வருகின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் அனுமான் ஆவீர்கள். மாயை எவ்வளவு தான் புயலைக் கொண்டு வந்தாலும் நாம் பாபா மற்றும் சொர்க்கத்தை மறக்கக்கூடாது. எச்சரிக்கையாக இருங்கள் என அடிக்கடி பாபா கூறுகின்றார். மனிதர்கள் கஷ்டப்படுவதற்காகவே தீர்த்த யாத்திரைகளுக்குப் போகின்றார்கள். இங்கேயோ வேறு எங்கும் செல்வதில்லை. ஒரே ஒரு தந்தை மற்றும் சுகதாமத்தை நினைத்துக் கொண்டே யிருங்கள். உண்மையில் நீங்கள் வெற்றி அடையக்கூடியவர்கள். இதற்கு புத்தியோக பலம், ஞான பலம் என்று கூறப்படுகின்றது. நினைப்பதால் பலம் கிடைக்கின்றது. புத்தி பூட்டு திறக்கின்றது. ஒரு வேளை யாராவது நியமத்திற்குப் புறம்பாக நடந்தால் அவர்களின் புத்தியின் பூட்டு மூடிக்கொள்கிறது. ஒருவேளை நீங்கள் அவ்வாறு செய்தால் நாடகத்தின் படி புத்தி பூட்டப்பட்டு விடும் என பாபா புரிய வைக்கின்றார். விகாரத்தில் ஈடுபடாதீர்கள் என்று யாருக்கும் கூற முடியாது. நாம் இவ்வளவு பாவம் செய்துவிட்டோமே என உள்ளுக்குள் அரித்துக் கொண்டே இருக்கும். அறியாமை காலத்தில் கூட அரித்திருக்கின்றது. இறக்கும் போது ஐயோ! ஐயோ! என்கிறார்கள். கடைசியில் அனைத்து பாவங்களும் எதிரில் வருகின்றது. கர்ப்ப சிறையில் சென்ற உடனேயே ஆரம்பமாகி விடும். கடைசியில் நிச்சயமாக நினைவு வரும். எனவே நீங்கள் ஐயோ ஐயோ எனக் கூறக்கூடாது என்றால் இப்போது பாவம் செய்யாதீர்கள் என பாபா கூறுகின்றார். சிறைப் பறவைகள் கூட இருக்கின்றார்கள் அல்லவா? நீங்கள் கூட சிறைப் பறவைகளாக இருந்தீர்கள். இப்போது பாபா சிறைப் பறவைகளின் தண்டனைகளில் இருந்து விடுவிக்கின்றார். தந்தையாகிய என்னை நினைத்தால் பாவங்களின் தண்டனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் பாவனமாக மாறுவீர்கள் எனக் கூறுகின்றார். ஒரு வேளை கீழே விழந்துவிட்டால் அடி படும். முதலில் அசுத்த அகங்காரம், பிறகு காமம், கோபம். காமம் மிகப் பெரிய எதிரியாகும். இதுவே உங்களுக்கு முதல், இடை, கடை துக்கம் கொடுத்திருக்கின்றது. நீங்கள் முதல், இடை, கடை சுகத்திற்காக முயற்சி செய்கிறீர்கள். எனவே முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். காலையில் எழ முடியவில்லை என கூறுகிறார்கள். பிறகு பதவியும் உயர்ந்த பதவி அடைய முடியாது. வேலைக்காரர் ஆக வேண்டியதுதான். அங்கே சாணம் போன்றவைகளை எடுக்க வேண்டியதில்லை. தோட்டியும் கிடையாது. இப்பொழுது கூட வெளிநாடுகளில் வேலைக்காரர்களை வைப்பதில்லை. தானாகவே சுத்தம் செய்கின்றனர். அங்கே அழுக்கு கிடையாது. மற்றபடி தாழ்ந்தவர், வேலைக்காரன் மற்றும் வேலைக்காரி போன்றோர் இருக்கின்றனர்.



    தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்து இரகசியங்களையும் தெரிவிக்கின்றார். உங்களுடைய புத்தியில் இராஜ்யம் முழுவதும் இருக்கின்றது. நீங்கள் நாடகத்தினைப் புரிந்து கொண்டீர்கள். முதலில் முக்கியமாக நீங்கள் சக்கரத்தைப் புரிய வைக்க வேண்டும். இப்பொழுது திறப்பு விழாவிற்காக குடியரசுத் தலைவர் போன்றவர்களை அழைக்கிறார்கள். திறப்பு விழாவிற்கு முன்பாக அவர்களுக்கு பாரதம் உயர்ந்ததாக இருந்தது, இப்பொழுது கீழானதாக மாறிவிட்டது எனப் புரிய வையுங்கள் என்று குழந்தைகளுக்கு தந்தை டைரக்ஷன் கொடுக்கின்றார். பாரதத்தில் பூஜைக்குரிய தேவி தேவதைகள் தான் இப்பொழுது பூஜாரி மனிதர்கள் ஆகிவிட்டனர். இதை நிச்சயமாகப் புரியவைக்க வேண்டும். சிருஷ்டிச் சக்கரத்தின் இரகசியத்தை இவர்கள் புரியவைக்கின்றார்கள் என அவர்களே கூற வேண்டும். இதை அறிந்திருப்பவர்களுக்கு திரிகாலதர்ஷி என்று பெயர். மனிதர்களாக இருந்து நாடகத்தை அறியவில்லை என்றால் அவர்களால் என்ன பயன்? பலர் பி.கேகளின் பவித்திரதா மிகவும் நல்லது என்கிறார்கள். அனைவருக்கும் பவித்திரதா பிடித்திருக்கின்றது. சந்நியாசிகள் பவித்திரமாக இருக்கின்றார்கள். தேவதைகள் பவித்திரமாக இருக்கின்றார்கள். எனவே தான் அவர்களின் கால்களில் விழுந்து வணங்குகின்றார்கள். ஆனால் இது வேறு விஷயம் ஆகும். ஒரு பரமாத்மா தான் பதீத பாவனராக இருக்க முடியும். பதீதத்திலிருந்து பாவனமாக எந்த மனித குருவும் மாற்ற முடியாது. இதைப் புரிய வைக்க வேண்டும். தயவு செய்து இந்த விஷயத்தை தாங்கள் புரிந்து கொண்டால் தங்களின் பதவி மிகவும் உயர்ந்ததாகி விடும். பாரதம் பூஜைக்குரிய நிலையில் இருந்து எப்படி பூஜாரி ஆகின்றது, பாரதவாசிகள் எவ்வாறு 84 பிறவிகள் எடுக்கின்றனர் என்பதைப் புரிய வைக்க வேண்டும். இந்த விஷயங்களை நிச்சயமாகப் புரிய வைக்க வேண்டும். கிறிஸ்துவிலிருந்து 3000 வருடங்களுக்கு முன்பு பாரதவாசிகள் தேவி தேவதைகளாக இருந்தனர். அதற்கு சுகதாமம் சொர்க்கம் என்று பெயர். சொர்க்கத்தில் இருந்து இப்பொழுது நரகம் ஆகிவிட்டது. இதை நீங்கள் புரிய வைத்தால் உங்களுக்கு நிறைய மகிமைகள் ஏற்படும். செய்தியாளர்களுக்குக் கூட பார்ட்டி கொடுக்க வேண்டும். பிறகு அவர்கள் தீ வைக்கட்டும் அல்லது தண்ணீர் ஊற்றட்டும். அவர்களிடம் அனைத்தும் இருக்கின்றது. சண்டை நிச்சயமாக ஏற்படும் எனக் குழந்தைகள் அறிகிறீர்கள். பாரதத்தில் இரத்த ஆறு பெருகி ஓடும். எப்பொழுதும் இங்கிருந்து தான் இரத்த நதி தோன்றியிருக்கின்றது. இந்து முஸ்ஸீம்களுக்கு இடையே மிகப்பெரிய சண்டை நடந்திருக்கின்றது. பிரிவினை ஏற்பட்ட பிறகு எத்தனை மனிதர்கள் வீட்டை இழந்து விட்டனர். ஒரேயடியாக சிறு சிறு இராஜ்ஜியங்கள் ஆகிவிட்டது. தங்களுக்குள் சண்டையிட்டு பிரிவினைகளையும் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். முதலில் இந்துஸ்தான், பாகிஸ்தான் என எதுவும் தனியாகக் கிடையாது. பாரதத்தில் தான் இரத்த நதி ஓடும். பிறகு நெய்யாறு ஓடும். விளைவு என்ன? கொஞ்சம் தப்பித்துக் கொள்வார்கள். நீங்கள் பாண்டவர்கள் மறைவான(குப்த) வேடத்தில் இருக்கின்றீர்கள்.



    முதலில் கவர்னருக்கு அறிமுகம் கொடுங்கள். முதலில் யாரிடம் சென்றாலும் அவர்களின் மகிமை செய்யப்படுகிறது. ஆனால் அவர்களுக்காக என்ன எழுதப்பட்டு இருக்கின்றது என்ற இரகசியம் உங்களுக்குத் தான் தெரியும். இந்த இராஜ்யம் கானல் நீர் போன்றது என்பது அவர்களுக்குத் தெரியாது. நாடகத்தின் படி அவர்கள் அவர்களுடைய திட்டங்களை உருவாக்குகின்றார்கள். மகா பாரதத்தில் பிரளயம் நடந்து விட்டது எனக் காண்பிக்கின்றார்கள். இப்பொழுது மகா பிரளயம் எதுவும் நடக்கவில்லை. குழந்தைகளாகிய உங்களுக்குள் ஒவ்வொரு நொடியும் சிருஷ்டிச்சக்கரத்தின் ஞானம் ஒலிக்க வேண்டும். இவர்களுக்கு இந்த போதனைகளைக் கொடுப்பது யார் என அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது நாம் கூட உண்மையில் சிவனின் குழந்தைகள் எனப் புரிந்து கொள்வார்கள். பிரஜா பிதா பிரம்மாவிற்குக் கூட குழந்தைகள் ஆவர். இது வம்சம் ஆகும். பிரஜா பிதா பிரம்மா கிரேட் கிரேட் கிரான்ட்ஃபாதர் ஆவார். மனித சிருஷ்டியின் பெரியவர் பிரம்மா ஆகிவிட்டார் அல்லவா! சிவனை இவ்வாறு கூற முடியாது. அவரை தந்தை என்று தான் கூறலாம். கிரேட் கிரேட் கிரான்ட்ஃபாதர் என்ற பட்டம் பிரஜா பிரதா பிரம்மாவிற்குத் தான். நிச்சயமாக கிரான்ட் மதர், கிரான்ட் சில்ட்ரன் இருப்பார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இது அனைத்தையும் புரிய வைக்க வேண்டும். அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை சிவனாவார். பிரம்மா மூலமாக சிருஷ்டியைப் படைக்கின்றார். பிறகு நம்முடைய வம்சங்கள் எத்தனை தோன்றுகின்றது என நீங்கள் அறிகிறீர்கள். இது போன்ற கண்காட்சிகள் ஒவ்வொரு மூலையிலும் செய்ய வேண்டும். தாங்கள் ஏற்பாடு செய்து தாருங்கள் என கவர்னருக்குப் புரிய வைக்க வேண்டும். பாருங்கள்! நமக்கு மூன்று அடி நிலம் கூட கிடைப்பது இல்லை. பிறகு நாம் உலகத்திற்கு அதிபதியாகின்றோம். நீங்கள் ஏற்பாடு செய்து தந்தால் நாங்கள் பாரதத்தை சொர்க்கமாக மாற்றும் சேவை செய்வோம். அவர் உங்களுக்கு சிறிது உதவி செய்தாலும் கூட அனைவரும் கவர்னர் கூட பிரம்மா குமார் ஆகிவிட்டார் என அவரைக் கூற ஆரம்பித்து விடுவார்கள். நல்லது



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம் :

    1. கிளிஞ்சல் போன்ற உடல் மனம் பொருள் எதுவாக இருந்தாலும் அதை பாபாவிடம் அர்பபணித்து பிறகு டிரஸ்டியாக இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும். பற்றுதலை நீக்க வேண்டும்.



    2. அதிகாலையில் எழுந்து தந்தையை அன்புடன் நினைக்க வேண்டும். ஞான பலம் மற்றும் புத்தி யோக பலத்தால் மாயை மீது வெற்றி அடைய வேண்டும்.



    வரதானம்:-

    சதா ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகள் மூலம் பறக்கும் கலையில் பறக்கக்கூடிய சிரேஷ்ட ஆத்மா ஆகுக.



    ஞானம், யோகத்தின் கூடவே ஒவ்வொரு நேரத்திலும், ஒவ்வொரு கர்மத்திலும், ஒவ்வொரு நாளும் புதிய ஊக்கம், உற்சாகம் இருக்க வேண்டும், இதுவே பறக்கும் கலைக்கான ஆதாரம் ஆகும். எத்தகைய காரியமாக இருந்தாலும், அது சுத்தப்படுத்தும் காரியமோ, பாத்திரம் தேய்க்கும் காரியமோ, சாதாரண காரியமோ, எதுவாக இருந்தாலும் அதிலும் கூட ஊக்கம், உற்சாகம் இயற்கையாக மற்றும் நிரந்தரமாக இருக்க வேண்டும். பறக்கும் கலையில் பறக்கும் சிரேஷ்ட ஆத்மாக்கள் ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகள் மூலம் சதா பறந்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் ஒருபொழுதும் குழப்பமடைய மாட்டார்கள். சின்னச் சின்ன விசயங்களில் களைப்படைந்து நிற்கமாட்டார்கள்.



    சுலோகன்:-

    யார் பணிவான உள்ளத்துடன், களைப்படையாதவராக மற்றும் சதா சுடர்விடும் ஜோதியாக இருக்கிறார்களோ, அவர்களே விஷ்வ கல்யாணகாரி ஆவார்கள்.


    ***OM SHANTI***

    No comments

    Say Om Shanti to all BKs