Bk Murli Tamil 16 November 2018

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    Bk Murli Tamil 16 November 2018



    16.11.2018 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்



    இனிமையான குழந்தைகளே,நீங்கள் ஆன்மீக வழிகாட்டி ஆகியாத்திரை செய்ய வேண்டும்மற்றும் செய்விக்க வேண்டும்,நினைவு தான் உங்களுடையயாத்திரை ஆகும். நினைவு செய்துகொண்டே இருந்தால் குஷியின்அளவு அதிகரிக்கும்.



    கேள்வி:

    நிராகார உலகத்துக்கு சென்றதுமேஎந்த சமஸ்காரம் முடிந்து போய்விடுகிறது, எந்த சமஸ்காரம் அப்படியே இருந்து விடுகிறது?



    பதில்:

    அங்கே ஞானத்தின் சமஸ்காரம்முடிந்து போய் விடுகிறது,பிராலப்தத்தின் (பலன்) சமஸ்காரம் அப்படியே இருந்து விடுகிறது. அந்தசமஸ்காரங்களின் ஆதாரத்தில்தான் குழந்தைகளாகிய நீங்கள்சத்யுகத்தில் பலனைஅனுபவிக்கிறீர்கள், அங்கே பிறகுபடிப்பு அல்லது முயற்சிக்கானசமஸ்காரம் இருக்காது. பலன் கிடைத்ததும் ஞானம் முடிந்துபோய்விடுகிறது.



    பாடல்:

    இரவுப் பிரயாணிகளேகளைப்படையாதீர்கள்..............



    ஓம் சாந்தி.

    இங்கே முன்னால்சிவபகவானுடைய மகாவாக்கியம்ஆகும். கீதையில் ஸ்ரீகிருஷ்ணபகவானுடைய மகாவாக்கியம்என்று காட்டுகிறார்கள். ஆனால்கிருஷ்ணர் அந்த பெயர்,உருவத்தில் முன்னால் இருக்க முடியாது. இவரோ முன்னால்இருந்து சொல்கிறார், நிராகாரபகவானுடைய மகாவாக்கியம்.கிருஷ்ணருடைய வாக்கியம்என்றால், அது சரீரத்திலிருந்து (சாகார் நிலையிருந்து)சொல்வதாகி விடுகிறது. வேதசாஸ்திரங்கள் போன்றவைசொல்பவர்கள் கூட பகவானுடையமகாவாக்கியம் என்று சொல்லமாட்டார்கள். ஏனெனில் அந்த சாது,சன்னியாசி, மகாத்மா போன்றஅனைவரும் சரீரத்தில்இருக்கிறார்கள். மேலும் பாபாசொல்கிறார் - ஏ, ஆன்மீகப்பிரயாணியே! என்று. ஆன்மீகத்தந்தை கண்டிப்பாகஆத்மாக்களுக்குத் தான் சொல்வார்– குழந்தைகளே களைப்படையாதீர்கள்!யாத்திரையில் நிறைய பேர்களைப்படையும் போது திரும்பிவந்து விடுகிறார்கள். அது உலகியயாத்திரை ஆகும். அநேககோயில்களில் உலகிய தீர்த்தயாத்திரை செல்கின்றனர். சிலர்சிவனுடைய கோயில்களுக்குச்செல்கின்றனர், அங்கே அனைத்தும்பக்தி மார்க்கத்தின் உலகியசித்திரங்களைவைத்திருக்கின்றனர். இவரோசுப்ரீம் ஆத்மா பரமபிதா பரமாத்மாஆத்மாக்களுக்குச் சொல்கிறார், ஏ,குழந்தைகளே! இப்போது என்ஒருவனோடு புத்தியோகத்தைச்செலுத்துங்கள், மேலும் ஞானமும்தருகின்றார். தீர்த்தங்களுக்கு செல்லும் போது அங்கேயும்பிராமணர்கள்அமர்ந்திருக்கின்றனர், கதைகள்,கீர்த்தனைகள் பாடுகின்றனர்.உங்களுடையதோ ஒரே ஒரு சத்தியநாராயணனின் கதை ஆகும்,நரனிலிருந்து நாராயணன்ஆவதற்கான கதை ஆகும்.உங்களுக்குத் தெரியும், முதலில் இனிமையான வீட்டுக்கு (ஸ்வீட்ஹோம்) செல்வோம், பிறகு விஷ்ணுபுரிக்கு வருவோம். இந்தநேரம் நீங்கள் பிரம்ம புரியில்இருக்கிறீர்கள், இதை பிறந்த வீடுஎன்று சொல்லப்படுகிறது.உங்களிடம் ஆபரணங்கள் போன்றஎதுவும் இல்லை, ஏனெனில் நீங்கள்பிறந்த வீட்டில் இருக்கிறீர்கள்.உங்களுக்குத் தெரியும், மாமியார்வீட்டில் (சத்யுகத்தில்) நமக்குஅளவற்ற சுகம் கிடைக்கும்.கலியுகத்தின் மாமியார் வீட்டில்அளவற்ற துக்கமாக இருக்கிறது.நீங்கள் அக்கரைக்கு அதாவது,சுகதாமத்துக்குச் செல்ல வேண்டும்.இங்கே இருந்து மாற்றப்படவேண்டும். பாபா அனைவரையும்கண்ணுக்குள் அமர்த்தி அழைத்துச்செல்கிறார். கிருஷ்ணருடையதந்தை அவரைக் கூடையில்வைத்து அக்கரைக்கு அழைத்துச் சென்றதாகக் காட்டுகிறார்கள்அல்லவா! ஆக இந்தஎல்லைக்கப்பாற்பட்ட தந்தைகுழந்தைகளாகிய உங்களை அக்கரைக்கு மாமியார் வீட்டுக்குகொண்டு செல்கிறார். முதலில் தன்னுடைய நிராகார வீட்டுக்குக்கொண்டு செல்வார், பிறகுமாமியார் வீட்டுக்கு அனுப்பிவைப்பார். அங்கே இந்த அனைத்துமாமியார் வீடு மற்றும் பிறந்தவீட்டின் விசயங்கள் மறந்து விடும்.அதுவோ நிராகார பிறந்த வீடு,அங்கே இந்த ஞானம் மறந்து போய்விடுகிறது, ஞானத்தின்சமஸ்காரம் வெளியேறி விடுகிறது.பிராலப்தத்தின் (பலன்) சமஸ்காரம்அப்படியே இருந்து விடுகிறது. பிறகுகுழந்தைகளாகிய உங்களுக்குபிராலப்தம் தான் நினைவில்இருக்கிறது. அதன் படி சுகத்தில்போய் பிறப்பு எடுப்பீர்கள். சுகதாமம்செல்ல வேண்டும். பலன்கிடைத்ததும் ஞானம் முடிந்து போய்விடுகிறது. உங்களுக்குத்தெரியும், இதன் பலனாக நமக்குமீண்டும் அதே நடிப்பு கிடைக்கும்.உங்களுடைய சமஸ்காரமேபிராலப்தத்தினுடையதாகஆகிவிடும். இப்போது முயற்சியின்சமஸ்காரம் ஆகும். முயற்சி மற்றும் பிராலப்தம் இரண்டினுடையசமஸ்காரமும் அங்கே இருக்கும்என்பது கிடையாது. அங்கே இந்தஞானம் இருப்பதில்லை. ஆக இதுஉங்களுடைய ஆன்மீக யாத்திரைஆகும், பாபா உங்களது தலைமைவழிகாட்டி ஆவார். நீங்களும்ஆன்மீக வழிகாட்டிஆகிவிடுகிறீர்கள், அனைவரையும்கூடவே அழைத்துச் செல்கிறீர்கள்.அவர்கள் உலகிய வழிகாட்டிகள்,நீங்களோ ஆன்மீக வழிகாட்டிகள்ஆவீர்கள். அவர்கள் கூட்டம்கூட்டமாக செல்கின்றனர்.குறிப்பாக அமர்நாத்துக்கு மிகவும்கொண்டாட்டத்துடன்செல்கின்றனர். பாபாபார்த்திருக்கிறார், நிறைய சாதுசன்னியாசிகள் மேளதாளங்களைகொண்டு செல்கின்றனர். குளிர்காலமாக இருப்பதால் டாக்டரையும் கூடவே அழைத்துச் செல்கிறார்கள்.நிறைய பேர்நோய்வாய்படுகின்றனர்.உங்களுடைய யாத்தியோரையோ மிக சகஜமானதாகும். பாபாசொல்கிறார், நினைவில் இருப்பதுதான் உங்களுடைய யாத்திரைஆகும். நினைவு தான் முக்கியம்.குழந்தைகள் நினைவு செய்துகொண்டே இருந்தால் குஷியின்அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். கூடவேமற்றவர்களையும் யாத்திரையில்கூட்டிச் செல்ல வேண்டும். இந்தயாத்திரை ஒரே ஒரு முறை தான்ஏற்படுகிறது. அந்த உலகியயாத்திரைகளோ பக்திமார்க்கத்திலிருந்து ஆரம்பமாகிறது.அது கூட பக்தியின் ஆரம்பத்தில்கிடையாது. உடனுக்குடன் கோயில்,சித்திரங்கள் உருவாகி விடுகிறதுஎன்பது கிடையாது.அவையனைத்தும் கொஞ்சம்கொஞ்சமாக பின்னால்உருவாக்கப்பட்டுக் கொண்டேசெல்கிறது. முதன்முதலில் சிவனுடைய கோயில் உருவாகும்.அது கூட முதலில் வீட்டில் சோமநாத்கோயிலை உருவாக்குகின்றனர்,ஆக எங்கேயும் செல்வதற்கானஅவசியம் கிடையாது. இந்தகோயில் போன்றவை பின்னால்உருவாகிறது, நேரம் பிடிக்கிறது.போகப்போக புதிய சாஸ்திரங்கள்,புதிய சித்திரங்கள், புதியகோயில்கள் போன்றவைஉருவாகிக் கொண்டே போகிறது.இதில் நேரம் எடுக்கிறது, ஏனெனில்படிப்பவர்களும் வேண்டுமல்லவா!மடம் ஆகியவை விருத்திஅடையும்போது, சாஸ்திரங்கள்உருவாக்குவதற்கான சிந்தனைவரும். ஆக இத்தனைதீர்த்தஸ்தலங்கள் உருவானது,கோயில்கள் உருவானது,சித்திரங்கள் உருவானது நேரம்எடுக்கிறது அல்லவா! துவாபரயுகத்திலிருந்து பக்திஆரம்பமானதாகசொல்லப்படுகிறது என்றாலும்நேரம் எடுக்கிறதல்லவா! பிறகுகலைகள் குறைந்து கொண்டேபோகும். முதலில் அவிபச்சாரி பக்தி,பிறகு விபச்சாரி பக்தி (கலப்பட)ஆகிவிடுகிறது. இந்த அனைத்துவிசயங்களும் நல்ல முறையில்சித்திரங்கள் மூலம் நிரூபித்துச்சொல்லப்படுகிறது. புரியவைப்பவர்களின் புத்தியில் இதேஓடிக்கொண்டிருக்கும் - இப்படிஇப்படியாக சித்திரங்களைஉருவாக்கி, இதைப் புரியவைக்கலாம் என்று. அனைவரின்புத்தியிலும் இது ஓடாது.வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள்அல்லவா! சிலருடைய புத்தியில் முற்றிலும் ஓடுவதில்லை, அவர்பிறகு பதவியும் அப்படித் தான்அடைவார். இவர் என்னவாகஆவார், எவ்வளவு முன்னேறுவார்என்று தெரிந்துவிடுகிறது. நீங்கள்புரிந்துகொண்டே போவீர்கள்.எப்போது சண்டை போன்றவைவருமோ அப்போது நடைமுறையில்பார்ப்பார்கள். பிறகு மிகவும்பச்சாதாபப்படுவார்கள். அந்த நேரம்படிக்க முடியாது. சண்டை நடக்கும்நேரத்தில் அய்யோ அய்யோ என்றகூக்குரல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும், கேட்கவே முடியாது.என்ன ஆகும் என்றே தெரியாது.பிரிவினை (பாகிஸ்தான்) ஏற்பட்டபோது என்ன நடந்தது என்றுபார்த்தீர்கள் அல்லவா! இந்தவினாச நேரத்தில் நிறைய நடக்கஇருக்கிறது. ஆம் மற்றபடிசாட்சாத்காரம் ஆகியன நிறையஏற்படும், அதிலிருந்து இவர்எவ்வளவு படித்திருக்கிறார் என்று தெரிந்துவிடும். நிறையபச்சாதாபப்படவும் செய்வார்கள்,சாட்சாத்காரமும் ஏற்படும் - பாருங்கள் நீங்கள் படிப்பை விட்டுவிட்டீர்கள், அதனால் இந்தநிலைமை ஆகிவிட்டது. தர்மராஜர்சாட்சாத்காரம் காட்டாமல் எப்படிதண்டனை கொடுப்பார்?அனைத்தையும் சாட்சாத்காரம்காண்பிப்பார். பிறகு அந்த நேரம்ஒன்றும் செய்ய முடியாது. ஆ! என்அதிர்ஷ்டமே என்று சொல்வார்கள்.முயற்சிக்கான காலமோ கடந்துவிட்டது. இப்போதே ஏன் முயற்சி செய்யக்கூடாது என்று பாபாசொல்கிறார். சேவை மூலமாகவேபாபாவின் மனதில் அமர முடியும்.பாபா சொல்வார், இந்தக் குழந்தைநல்ல சேவை செய்கிறது.இராணுவத்தில் யாரேனும்இறந்தால், அவருடைய நண்பர்கள்உறவினர்களுக்கும் கூட வெகுமதிகொடுக்கிறார்கள். இங்கேஉங்களுக்கு வெகுமதி கொடுப்பவர் எல்லைக்கப்பாற்பட்ட பாபா ஆவார்.பாபாவிடமிருந்து எதிர்காலத்தின்21 பிறவிகளுக்கு வெகுமதிகிடைக்கிறது. ஒவ்வொருவரும்தன்னுடைய மனதில் கைவைத்துகேட்க வேண்டும், நான்எந்தளவிற்கு படிக்கின்றேன்?தாரணை ஏற்படவில்லை என்றால்அதிர்ஷ்டத்தில் இல்லை.அப்படிப்பட்ட கர்மம்செய்திருக்கிறார்கள், என்று சொல்வார்கள். மிக மோசமானகர்மம் செய்பவர்கள் ஒன்றும்அடைய முடியாது.



    பாபா புரிய வைக்கின்றார் - இனிமையான குழந்தைகளே!நீங்கள் இந்த ஆன்மீகயாத்திரையில் தங்கள் உடன்இருப்பவர்களையும் அழைத்து வரவேண்டும். ஒவ்வொருவருக்கும்இந்த யாத்திரையைப் பற்றி சொல்வது உங்கள் கடமையாகும்.இது எங்களுடைய ஆன்மீகயாத்திரை என்று சொல்லுங்கள்.அது உலகிய யாத்திரையாகும்.இரங்கூனில் ஒரு ஒலி எழுப்பும் குளம் இருக்கிறது, அங்கேகுளிப்பதின் மூலம் தேவதையாக ஆகிவிடுவதாக காட்டுகிறார்கள்.ஆனால் அப்படி தேவதையாகஒன்றும் ஆவதில்லை. இது ஞானக்குளியல் செய்வதற்கானவிஷயமாகும், இதன் மூலம் நீங்கள்சொர்க்கத்தின் இராணியாகஆகின்றீர்கள். மேலும் ஞான யோகபலத்தின் மூலம் வைகுண்டத்திற்குபோவது மற்றும் வருவதுஉங்களுக்கு சாதாரணவிஷயமாகும். திரும்பத்திரும்பகாட்சி பார்ப்பதற்கு (டிரான்ஸ்)செல்லாதீர்கள், என்றுதடுக்கப்படுகிறது, இதுபழக்கமாகிவிடும். ஆக இதுஞானத்தின் மானசரோவர் ஆகும்,பரமபிதா பரமாத்மா வந்து இந்தமனித உடலின் மூலமாக ஞானம்சொல்கின்றார், ஆகையால் இதைமான சரோவர், என்றுஅழைக்கப்படுகிறது. மானசரோவர்என்ற வார்த்தை கடல் என்றவார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. ஞானக்கடலில் ஞானக் குளியல் செய்வது மிகவும் நல்லதாகும். சொர்க்கத்தின்இராணி மகாராணி, என்றுஅழைக்கப்படுகிறார். பாபாசொல்கின்றார், நீங்களும் சொர்க்கத்தின் எஜமானர்ஆகுங்கள். பாபாவிற்குகுழந்தைகளின் மீது அன்புஇருக்கிறது, ஒவ்வொருவரின் மீதும்இரக்கம் வருகிறது, சாதுக்களின்மீது கூட இரக்கம் வருகிறது.சாதுக்களையும்கடைத்தேற்றுகிறார், என்றுகீதையில் எழுதப்பட்டிருக்கிறது.ஞானம் யோகத்தின் மூலமாககடைத்தேற்றப்படுகிறது.குழந்தைகளாகிய உங்களுக்குபுரிய வைப்பதில் சுறுசுறுப்புவேண்டும். சொல்லுங்கள் - நீங்கள்அனைத்தையும்தெரிந்திருக்கிறீர்கள் ஆனால் மோர்போன்றவற்றைதெரிந்திருக்கிறீர்கள், மற்றபடிவெண்ணெய் ஊட்டுபவரைப் பற்றிநீங்கள் தெரிந்து கொள்ளவேஇல்லை. பாபா எவ்வளவு நல்லமுறையில் புரிய வைக்கின்றார்.ஆனால் யாருடைய புத்தியிலாவதுபதிய வேண்டுமல்லவா! பாபாவைத்தெரிந்து கொள்வதின் மூலம்மனிதர்கள் வைரத்தைப்போல் ஆகிவிடுகிறார்கள், தெரிந்துகொள்ளாததின் மூலம் மனிதர்கள்சோழியைப் போல முற்றிலும்தூய்மையற்றவர்களாக இருக்கிறார்கள். பாபாவைத்தெரிந்து கொள்வதின் மூலம் தான்தூய்மையாகின்றார்கள்.தூய்மையற்ற உலகத்தில் தூய்மையானவர் யாரும் இருக்கமுடியாது. மகாரதி குழந்தைகள்நல்ல விதமாகப் புரிய வைக்கமுடியும். எத்தனை பிரம்மாகுமார-குமாரிகள் இருக்கின்றார்கள்!பிரஜாபிதா பிரம்மா என்ற பெயர்கூட பிரபலமாக இருக்கிறது.இவர்கள் பிரஜாபிதாபிரம்மாவினுடையவாய்வம்சாவழியினர் ஆவர்.பிரம்மாவிற்கு தான் 100 கரங்கள், 1000 கரங்கள் காட்டுகின்றார்கள்.இத்தனை கரங்கள் இருக்கமுடியாது, என்பதும் புரியவைக்கப்படுகிறது. மற்றபடி பிரம்மாவோ அதிகம்குழந்தைகளுடையவர் ஆவார்.பிரம்மா யாருடைய குழந்தை?இவருக்கு தந்தை இருக்கிறார் அல்லவா! பிரம்மாசிவபாபாவினுடையகுழந்தையாவார். இவருக்கு வேறுயார் தந்தையாக இருக்க முடியும்?மனிதர்கள் யாரும் இருக்கமுடியாது. பிரம்மா, விஷ்ணு, சங்கர்சூட்சுமவதனவாசிகளாகப்பாடப்படுகின்றனர். அவர்கள்இங்கே வர முடியாது. பிரஜாபிதாபிரம்மா கண்டிப்பாக இங்கே தான்இருப்பார் அல்லவா! சூட்சும வதனத்தில் பிரஜைகளைப் படைக்கமாட்டார். ஆக பரமபிதா பரமாத்மாவந்து இந்த பிரம்மாவின்கமலவாயின் மூலமாக சக்திசேனையைப் படைக்கின்றார்.நாங்கள் பிரம்மாவாய்வம்சாவழிகள், என்றஅறிமுகம் தர வேண்டும். நீங்கள்கூட பிரம்மாவின் குழந்தைகள்அல்லவா! பிரஜாபிதா பிரம்மாவோஅனைவருக்கும் தந்தையாவார்.பிறகு அவரிடமிருந்து மற்றகிளைகள் உருவாகின்றன, பெயர்மாறிக் கொண்டே போகிறது.இப்போது நீங்கள் பிராமணர்ஆவீர்கள். நடைமுறையில்பாருங்கள், பிரஜாபிதாபிரம்மாவிற்கு எவ்வளவு குழந்தைகள் இருக்கின்றனர்!கண்டிப்பாக குழந்தைகளுக்குத்தான் ஆஸ்தி கிடைக்கும்.பிரம்மாவிடமோ எந்த ஆஸ்தியும்கிடையாது, ஆஸ்தியோசிவபாபாவினுடையதாகும்.பிரம்மாவுக்கு சிவனிடமிருந்துசெல்வம் கிடைக்கிறது. எல்லைக்குஅப்பாற்பட்ட தந்தையிடமிருந்துதான் ஆஸ்தி கிடைக்கிறது.பிரம்மாவின் மூலம் சிவபாபாஅமர்ந்து படிப்பிக்கின்றார். நமக்குதாத்தாவின் ஆஸ்தி கிடைக்கிறது.பாபா நிறைய புரிய வைக்கின்றார்,ஆனால் யோகம் இல்லை. சட்டப்படிநடக்க வில்லை என்றால் பாபாவும்என்ன செய்வார்? இவருடைய அதிர்ஷ்டம் அப்படி என்று பாபாசொல்வார். இந்த நிலையில்உங்களுடைய பதவி என்னவாகஇருக்கும்? என்று பாபாவிடம்கேட்டால் பாபாவால் சொல்லமுடியும். மனம் கூட சாட்சியம்சொல்கிறது, நான் எவ்வளவு சேவைசெய்கின்றேன்?, எந்தளவிற்குஸ்ரீமத்படி நடக்கின்றேன்? ஸ்ரீமத்மன்மனாபவ, என்று சொல்கிறது.அனைவருக்கும் பாபா மற்றும்ஆஸ்தியினுடைய அறிமுகத்தைக்கொடுத்துக் கொண்டேஇருக்கின்றார்கள், தண்டோராஅடித்துக் கொண்டேஇருக்கிறார்கள். பாபா சைகைகாட்டிக் கொண்டே இருக்கின்றார்,நீங்கள் அரசாங்கத்திற்கும் புரியவைக்க வேண்டும். உண்மையில்பாரதத்தின் சக்தி போய்விட்டது,என்று அவர்களும் கூட புரிந்துகொள்ளட்டும். பரமபிதா பரமாத்மாசர்வசக்திவானோடு யோகம்இல்லை. இவரோடு நீங்கள் யோகம்ஈடுபடுத்துவதின் மூலம் நீங்கள்ஒரேயடியாக உலகத்தின் எஜமானர்ஆகிவிடுகின்றீர்கள், மாயையின் மீது கூட நீங்கள் வெற்றிஅடைகின்றீர்கள். குடும்பவிவகாரத்தில் இருந்து கொண்டேநீங்கள் மாயையின் மீது வெற்றிஅடைய வேண்டும். நமக்குஉதவியாளராக பாபாஇருக்கின்றார். எவ்வளவு புரியவைக்கப்படுகிறது, தாரணைசெய்ய வேண்டும். செல்வத்தைதானம் செய்தால் செல்வம்குறையாது, என்று பாபா புரியவைத்திருக்கின்றார். சேவைசெய்தீர்கள் என்றால் பாபாவின்மனதில் அமர முடியும்.இல்லையென்றால் மனதில்அமருவது இயலாததாகி விடும்.இதனுடைய அர்த்தம் பாபா அன்புசெய்வதில்லை என்பது கிடையாது.பாபா சேவை செய்பவர்கள் மீதுஅன்பு செலுத்துவார். உழைக்கவேண்டும். அனைவரையும்யாத்திரைக்குத் தகுதியானவர்களா உருவாக்குகின்றார். மன்மனாபவ.இது ஆன்மீக யாத்திரையாகும்,நீங்கள் என்னை நினைவுசெய்தீர்களானால், என்னிடம் வந்துசேர்ந்து விடுவீர்கள். சிவபுரிக்குவந்து பிறகு விஷ்ணுபுரிக்குசென்று விடுவீர்கள். இந்த விஷயங்களை குழந்தைகளாகியநீங்கள் மட்டும் தான்தெரிந்திருக்கிறீர்கள். வேறு யாரும்மன்மனாபவ என்பதின் அர்த்தத்தைபுரிந்து கொள்வதில்லை, ஆனால்நிறைய பேர் படிக்கிறார்கள். பாபாமகாமந்திரம் கொடுக்கின்றார்,என்னை நினைவு செய்வதன் மூலம்நீங்கள் விகர்மாஜீத்(பாவகர்மங்களை வென்றவர்)ஆகிவிடுவீர்கள். நல்லது.



    "இனிமையிலும் இனிமையானகாணாமல் கண்டெடுக்கப்பட்டசெல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப் தாதாவின்அன்பு நினைவுகளும் காலைவணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்தந்தையின் நமஸ்காரம்"



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    (1) ஞான ஸ்நானம் செய்யவேண்டும். அன்போடு சேவைசெய்து பாபாவின்இதயசிம்மாசத்தில் அமர வேண்டும்.முயற்சிக்கான நேரத்தில்சோம்பேறித்தனமாக ஆகக் கூடாது.



    (2) பாபாவின் கண்ணிமைக்குள்அமர்ந்து கலியுக துக்கதாமத்திலிருந்து சுகதாமத்திற்குச் செல்ல வேண்டும்.ஆகையால் தன்னுடையஅனைத்தையும் மாற்றம்(டிரான்ஸ்ஃபர்) செய்து விடவேண்டும்.



    வரதானம்:

    அன்புக் கடல் மூழ்கி எனது என்றகறையைப் போக்கக் கூடிய தூய்மையான ஆத்மா ஆகுக.



    யார் சதா அன்புக் கடலில்மூழ்கியிருக்கிறார்களோ,அவர்களுக்கு உலகின் எந்த ஒருவிசயத்தைப் பற்றியும்விழிப்புணர்வு இருக்காது. அன்பில்மூழ்கியிருக்கின்ற காரணத்தினால்அவர்கள் எளிதாகவே அனைத்து விசயங்களையும் கடந்துவிடுவார்கள். இவர்கள் தன்னிலைமறந்து இருக்கின்றனர் என்றுபக்தர்களுக்காக கூறுவர், ஆனால்குழந்தைகள் சதா அன்பில்மூழ்கியிருப்பர். அவர்களுக்குஉலகத்தின் நினைவு இருக்காது,எனது எனது என்ற அனைத்தும்அழிந்து விடும். பல எனது என்பதுஅசுத்தமாக்கி விடுகிறது, ஒருதந்தை என்னுடையவர் எனும் போதுஅசுத்தம் அழிந்து விடுகிறது,மேலும் ஆத்மா தூய்மையாகிவிடுகிறது.



    சுலோகன்:

    புத்தியில் ஞான இரத்தினங்களைதாரணை செய்வது மற்றும் செய்விப்பது தான் தூயஅன்னப்பறவை ஆவதாகும்.



    ஓம்சாந்தி

    No comments

    Say Om Shanti to all BKs