Brahma Kumaris Murli Tamil 16 September 2019

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    Brahma Kumaris Murli Tamil 16 September 2019

    Brahma Kumaris Murli Tamil 16 September 2019
    Brahma Kumaris Murli Tamil 16 September 2019

    16.09.2019 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா,   மதுபன் 

    இனிமையான குழந்தைகளே! தங்களுடைய பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான கவனம் கொள்ளுங்கள். தங்களது நேரத்தை பரசிந்தனையில் (பிற விசயங்களை சிந்தித்தல்) வீணடிக்காதீர்கள். தாங்கள் (ஞானத்தை) அரைக்க அரைக்க தான் போதை ஏறும். 

    கேள்வி: 


    ஞானம் ஒரு விநாடிக்குரியதாக இருந்தும் கூட தந்தை இவ்வளவு விளக்கமாகப் புரிய வைப்பதற்கான அல்லது இவ்வளவு நேரம் கொடுப்பதற்கான அவசியம் ஏன் உள்ளது? 

    பதில்: 


    ஏனெனில் ஞானம் அளித்த பிறகு குழந்தைகளுக்குள் சீர்திருத்தம் ஆகி உள்ளதா? இல்லையா? என்பதையும் தந்தை பார்க்கிறார் மற்றும் மீண்டும் திருந்துவதற்கான ஞானத்தை அளித்துக் கொண்டே இருக்கிறார். முழு விதை மற்றும் விருட்சத்தின் ஞானத்தை அளிக்கிறார். எனவே அவருக்கு ஞானக்கடல் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ஒரு வினாடியினுடைய மந்திரத்தை அளித்துவிட்டுச் சென்றுவிட்டார் என்றால், ஞானக்கடல் என்ற பட்டம் கூட கிடைக்க முடியாமல் போய் விடும். 

    ஓம் சாந்தி. 


    ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். பக்தி மார்க்கத்தில் பரமபிதா பரமாத்மா சிவனை இங்கு தான் பூஜிக்கிறார்கள். இவர் வந்து சென்றுள்ளார் என்பது புத்தியில் இருக்கிறது தான். எங்கெல்லாம் லிங்கம் பார்க்கிறார்களோ அவருக்கு பூஜை செய்கிறார்கள். சிவன் பரந்தாமத்தில் இருப்பவர் ஆவார், வந்து சென்றுள்ளார் என்பதையோ புரிந்துள்ளார்கள். எனவே அவருடைய ஞாபகார்த்தமாக பூஜிக்கிறார்கள். எந்த நேரத்தில் நினைவு செய்யப்படுகிறதோ பின் அவர் நிராகாரமானவர் ஆவார், பரந்தாமத்தில் வசிப்பவர் ஆவார் என்பது புத்தியில் அவசியம் வருகிறது. அவரை சிவன் என்று கூறி பூஜிக்கிறார்கள். கோவிலில் சென்று தலை வணங்குகிறார்கள். லிங்கத்தின் மீது பால், பழம், நீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்கின்றனர், ஆனால் அதுவோ ஜடப் பொருள் ஆகும். ஜடப் பொருளின் பக்தி தான் செய்கிறார்கள். அவர் சைதன்யமானவர் (உயிர்ப் பொருள்) அவருடைய இருப்பிடம் பரந்தாமம் ஆகும் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர்கள் பூஜை செய்யும்பொழுது பரந்தாமத்தில் வசிப்பவர் ஆவார், அவர் வந்து சென்றுள்ளார் என்பது புத்தியில் இருக்கிறது. அதனால் தான் இந்த சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த சிலை ஒன்றும் சிவன் கிடையாது. அது அவருடைய உருவம் ஆகும். அதே போல தேவதைகளைக் கூட பூஜிக்கிறார்கள். ஜட சித்திரங்கள் உள்ளன. சைதன்யமாக (உயிர்ப் பொருளாக) இல்லை. ஆனால் அதுபோல உயிர் பொருளாக இருந்தவர்கள் எங்கு சென்றார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. அவசியம் மறுபிறவி எடுத்து கீழே வந்திருக்கக் கூடும். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. யாரெல்லாம் பூஜிக்கத்தக்க தேவதைகளாக இருந்தார்களோ அவர்கள் புனர்ஜென்மம் எடுத்துக் கொண்டே வந்துள்ளார்கள் என்பதைப் புரிந்துள்ளீர்கள். ஆத்மா அதே தான். ஆத்மாவின் பெயர் மாறுவதில்லை. மற்றபடி சரீரத்தின் பெயர் மாறுகிறது. அந்த ஆத்மா ஏதோ ஒரு சரீரத்தில் இருக்கிறார். மறுபிறவியோ எடுத்தே ஆக வேண்டும். யார் முதன் முதல் சரீரத்தை உடையவர்களோ அவர்களைப் பூஜிக்கிறீர்கள் (சத்யுக இலட்சுமி நாராயணரை பூஜிக்கிறீர்கள்). இச்சமயம் தந்தை அளிக்கும் ஞானத்தின் மீது உங்களுடைய கவனம் செல்கிறது. எந்த படத்திற்கு பூஜை செய்கிறார்களோ அவர் முதல் நம்பரில் இருப்பவர் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். இந்த லட்சுமி நாராயணர் சைதன்யமாக இருந்தார்கள். இங்கு தான் பாரதத்தில் இருந்தார்கள். இப்பொழுது இல்லை. அவர்கள் புனர்ஜென்மம் எடுத்து எடுத்து வெவ்வேறு பெயர் ரூபங்கள் எடுத்து 84 பிறவிகளின் பாகத்தை நடித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. இது யாருடைய கவனத்தில் கூட வருவதில்லை. சத்யுகத்தில் அவசியம் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது இல்லை. இதுவும் யாருடைய புத்தியிலும் வருவதில்லை. நாடகத்திட்டபடி மீண்டும் உயிருள்ளவர்களாக அவசியம் வருவார்கள் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். மனிதர்கள் புத்தியில் இந்த எண்ணமே வருவதில்லை. மற்றபடி இவர்கள் இருந்தார்கள் என்ற அளவிற்கு அவசியம் புரிந்திருக்கிறார்கள். இப்பொழுது இவர்களுடைய ஜடச் சித்திரங்கள் உள்ளன. ஆனால் அவர்கள் உயிருள்ளவர்களாக எங்கே சென்றுவிட்டார்கள் என்பது யாருடைய புத்தியிலும் வருவதில்லை. மனிதர்களோ 84 இலட்சம் புனர்ஜென்மங்கள் என்று கூறிவிடுகிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு 84 பிறவிகள் தான் எடுக்கிறார்கள், 84 இலட்சம் அல்ல என்பதும் தெரிந்து விட்டுள்ளது. இப்பொழுது இராமச்சந்திரனுக்கு பூஜை செய்கிறார்கள். இராமர் எங்கு சென்றார் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. ஸ்ரீராமரின் ஆத்மாவோ அவசியம் புனர்ஜென்மம் எடுத்துக் கொண்டே இருக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இங்கு தேர்வில் தோல்வி அடைந்துவிடுகிறார். ஆனால் ஏதாவதொரு ரூபத்தில் அவசியம் இருப்பார் அல்லவா? இங்கே தான் புருஷார்த்தம் (முயற்சி) செய்துக் கொண்டே இருக்கிறார். இவ்வளவு இராமரின் பெயர் புகழுடையது என்றால் அவசியம் வருவார். அவர் ஞானம் எடுக்க வேண்டி வரும். இப்பொழுது எதுவும் தெரிய வருவதில்லை. எனவே அந்த விஷயத்தை விட்டு விட வேண்டி வருகிறது. இந்த விஷயங்களில் செல்வதால் கூட நேரம் வீணாகிப் போகிறது. இதை விட நாம் ஏன் நமது நேரத்தை பயனுள்ளதாக ஆக்கக் கூடாது? நமது முன்னேற்றத்திற்காக பேட்டரி சார்ஜ் செய்யலாமே! மற்ற விஷயங்களின் சிந்தனை என்பதோ பரசிந்தனை ஆகிவிடுகிறது. இப்பொழுதோ தன்னைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும். நாம் தந்தையை நினைவு செய்வோம். அவரும் (இராமரின் ஆத்மா) அவசியம் படித்துக் கொண்டிருப்பார். தனது பேட்டரி சார்ஜ் செய்து கொண்டிருப்பார். ஆனால் நீங்கள் உங்களுடையதை செய்ய வேண்டும் தான். அரைக்க அரைக்கத் தான் போதை ஏறும் என்று கூறப்படுகிறது. 

    நீங்கள் சதோபிரதானமாக இருக்கும்பொழுது உங்களுக்கு மிகவுமே உயர்ந்த பதவி இருந்தது என்று தந்தை கூறியுள்ளார். இப்பொழுது மீண்டும் புருஷார்த்தம் (முயற்சி) செய்யுங்கள். என்னை நினைவு செய்யுங்கள் அப்பொழுது விகர்மங்கள் விநாசம் ஆகும். குறிக்கோள் அல்லவா! இதை சிந்தனை செய்து செய்து சதோபிரதானமாக ஆகிவிடுவீர்கள். நாராயணனையே நினைவு செய்வதால் நாம் நாராயணனாக ஆகிவிடுவோம். கடைசி நேரத்தில் யார் நாராயணனை நினைவு செய்தார்களோ.. நீங்கள் பாவங்கள் நீங்கிவிடும் வகையில் தந்தையை நினைவு செய்ய வேண்டும். பிறகு நாராயணர் ஆகவே வேண்டும். இது நரனிலிருந்து நாராயணர் ஆவதற்கான மிக உயர்ந்த (யுக்தி) வழி ஆகும். ஒரு நாராயணரோ ஆக மாட்டார் அல்லவா? இதுவோ முழு பரம்பரை ஆகிறது. தந்தை (ஹையெஸ்ட்) மிக உயர்ந்த புருஷார்த்தம் (முயற்சி) செய்விப்பார். இது இருப்பதோ இராஜ யோகத்தின் ஞானமாக. அது கூட முழு உலகிற்கு அதிபதி ஆக வேண்டும். எவ்வளவு புருஷார்த்தம் (முயற்சி) செய்வீர்களோ அந்த அளவிற்கு அவசியம் நன்மை உள்ளது. ஒன்று தன்னை ஆத்மா என்று அவசியம் நிச்சயம் செய்யுங்கள். ஒரு சிலர் "குறிப்பிட்ட இந்த ஆத்மா உங்களை நினைவு செய்கிறார்" என்று கூட எழுதுகிறார்கள். ஆத்மா சரீரத்தின் மூலமாக எழுதுகிறது. ஆத்மாவின் தொடர்பு சிவபாபா உடன் உள்ளது. நான் ஆத்மா குறிப்பிட்ட இந்த சரீரத்தின் பெயர் ரூபம் உடையவன் ஆவேன். இதை அவசியம் கூற வேண்டி இருக்கும் அல்லவா? ஏனெனில் ஆத்மாவின் சரீரத்தின் மீது தான் பல்வேறு பெயர்கள் இடப்படுகின்றன. நான் ஆத்மா உங்களின் குழந்தை ஆவேன். ஆத்மாவாகிய என்னுடைய சரீரத்தின் பெயர் குறிப்பிட்ட இது ஆகும். ஆத்மாவின் பெயரோ ஒருபொழுதும் மாறுவது இல்லை. நான் ஆத்மா குறிப்பிட்ட இந்த சரீரம் உடையவன் ஆவேன். சரீரத்தின் பெயரோ அவசியம் வேண்டும். இல்லையென்றால் காரியங்கள் நடக்க முடியாது. நான் கூட இந்த பிரம்மாவின் உடலில் தாற்காலிகமாக வந்துள்ளேன் என்று இங்கு தந்தை கூறுகிறார். இவருடைய ஆத்மாவிற்கும் கூட புரிய வைக்கிறார். நான் இந்த சரீரம் மூலமாக உங்களுக்கு கற்பிக்க வந்துள்ளேன். இது என்னுடைய சரீரம் அல்ல. நான் இந்த உடலில் இறங்கி இருக்கிறேன். பிறகு என்னுடைய இருப்பிடத்திற்குச் சென்றுவிடுவேன். நான் வந்திருப்பதே குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த மந்திரத்தை அளிக்க. அப்படியின்றி மந்திரத்தை அளித்து விட்டுச் சென்றுவிடுகிறேன் என்பதல்ல. இல்லை. எந்த அளவிற்கு சீர்திருத்தம் ஏற்பட்டுள்ளது என்று குழந்தைகளைப் பார்க்கவும் வேண்டியுள்ளது. பிறகு திருத்துவதற்கான அறிவுரை அளித்துக் கொண்டே இருக்கிறார். ஒரு விநாடியின் ஞானம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் என்றால், பின் ஞானக்கடல் என்றும் அழைக்க முடியாது. எவ்வளவு காலம் ஆகிவிட்டுள்ளது! உங்களுக்குப் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். கல்ப விருட்சத்தைப் பற்றி, பக்தி மார்க்கத்தின் எல்லா விஷயங்களும் புரிய வேண்டிய விளக்கங்கள் ஆகும். விஸ்தாரமாகப் புரிய வைக்கிறார். ஹோல்ஸேல் - ஒட்டு மொத்தமாக என்றால் மன்மனாபவ. ஆனால் இவ்வாறு கூறி ஒன்றும் சென்றுவிட மாட்டார். பாலனையும் (மேற்பார்வை) செய்ய வேண்டி வரும். ஒரு சில குழந்தைகள் தந்தையை நினைவு செய்து செய்து பின் காணாமல் போய் விடுகிறார்கள். குறிப்பிட்ட இந்த பெயருடைய இந்த ஆத்மா - மிகவும் நன்றாக படித்துக் கொண்டிருந்தார் - நினைவோ வரும் அல்லவா? பழைய பழைய குழந்தை கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தார்கள்! அவர்களை மாயை விழுங்கிவிட்டது. ஆரம்பத்தில் எவ்வளவு பேர் வந்தார்கள்! சட்டென்று வந்து தந்தையின் மடியை எடுத்துக் கொண்டார்கள். பட்டி அமைந்தது. இதில் அனைவரும் தங்களது (லக்) பாக்கியத்தை அமைத்துக் கொண்டார்கள். பிறகு பாக்கியத்தை சேமித்து கொண்டே இருக்க இருக்க மாயை ஒரேயடியாக ஊதித் தள்ளிவிட்டது. நிலைத்திருக்க முடியவில்லை. பிறகு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் இவ்வாறே ஆகும். எவ்வளவு பேர் சென்றுவிட்டார்கள்! பாதி மரமோ அவசியம் போய் விட்டன. ஒரு பக்கம் விருட்சம் விருத்தி அடைந்துள்ளது தான். ஆனால் பழையவர்கள் சென்றுவிட்டார்கள். அவர்களில் ஒரு சிலர் படிப்பதற்கு மீண்டும் அவசியம் வருவார்கள் என்று புரிந்து கொள்ளலாம். நாம் தந்தையிடம் படித்து கொண்டிருந்தோம் என்பது நினைவிற்கு வரும். மற்ற எல்லோரும் இதுவரை படித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் தோற்றுவிட்டோம். மீண்டும் களத்தில் வருவார்கள். பாபா மீண்டும் வர அனுமதிப்பார். பிறகும் வந்து புருஷார்த்தம் (முயற்சி) செய்யட்டுமே! ஏதாவதொரு நல்ல பதவி கிடைத்துவிடும். 

    இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, என் ஒருவனை நினைவு செய்தீர்கள் என்றால் பாவங்கள் நீங்கிவிடும் என்று தந்தை நினைவூட்டுகிறார். இப்பொழுது எப்படி நினைவு செய்கிறீர்கள்? பாபா பரந்தாமத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறீர்களா? ஆனால் பாபாவோ இங்கு இரதத்தில் அமர்ந்துள்ளார். இந்த இரதம் பற்றி அனைவருக்கும் தெரிந்து கொண்டே போகிறது. இது பாக்கியசாலி இரதம் ஆகும். இதில் வந்துள்ளார். பக்தி மார்க்கத்தில் இருக்கும்பொழுது அவரை பரந்தாமத்தில் நினைவு செய்து கொண்டிருந்தீர்கள். ஆனால் நினைவினால் என்ன ஆகும் என்பதைத் தெரியாமல் இருந்தீர்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு சுயம் தந்தை இந்த இரதத்தில் வந்து ஸ்ரீமத் அளிக்கிறார். எனவே பாபா இங்கு இந்த மரண உலகத்தில் புருஷோத்தம (ஆத்மா உயர்ந்த நிலை அடையக்கூடிய) சங்கம யுகத்தில் இருக்கிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். நாம் பிரம்மாவை நினைவு செய்ய வேண்டியதில்லை என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். என் ஒருவனை நினைவு செய்யுங்கள், நான் இந்த இரதத்தில் இருந்து உங்களுக்கு இந்த ஞானத்தை அளித்துக் கொண்டிருக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். நான் இங்கே இருக்கிறேன் என்று என்னுடைய அறிமுகத்தையும் அளிக்கிறேன். இதற்கு முன்போ நீங்கள் பரந்தாமத்தில் வசிப்பவர் ஆவார் என்று புரிந்து இருந்தீர்கள். வந்து சென்றிருக்கிறார். ஆனால் எப்பொழுது என்பது தெரியாமல் இருந்தது. அனைவருமே தானே வந்து சென்றிருக்கிறார்கள். யாருடையதெல்லாம் படங்கள் உள்ளனவோ அவர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. யார் செல்கிறார்களோ அவர்கள் மீண்டும் அவரவர் நேரப்படி வருகிறார்கள். பல்வேறு பாகங்களை நடித்து கொண்டே இருக்கிறார்கள். சொர்க்கத்திற்கோ யாரும் போவதே இல்லை. சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் முயற்சி (புருஷார்த்தம்) செய்ய வேண்யுள்ளது என்று தந்தைப் புரிய வைத்துள்ளார். மேலும் பழைய உலகத்தின் முடிவு புதிய உலகத்தின் ஆரம்பம் வேண்டும். இதற்கு புருஷோத்தம சங்கமயுகம் என்று கூறப்படுகிறது. இந்த ஞானம் இப்பொழுது உங்களுக்கு உள்ளது. மனிதர்கள் ஒன்றுமே தெரியாமல் உள்ளார்கள். சரீரம் எரிந்து விடுகிறது மற்றது ஆத்மா சென்றுவிடுகிறது. இப்பொழுது கலியுகம் ஆகும். எனவே அவசியம் பிறவி கூட கலியுகத்தில் தான் எடுப்பார்கள். சத்யுகத்தில் இருந்தார்கள். பின் பிறவி கூட சத்யுகத்தில் தான் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆத்மாக்களின் முழு (ஸ்டாக்) இருப்பு நிராகாரி உலகத்தில் இருக்கும் என்பதையும் அறிந்துள்ளீர்கள். இதுவோ புத்தியில் பதிந்துள்ளது தானே! பிறகு அங்கிருந்து வருகிறார்கள். இங்கு சரீரத்தை தாரணை செய்து ஜீவ ஆத்மா ஆகிவிடுகிறார்கள். எல்லோரும் இங்கு வந்து ஜீவ ஆத்மா ஆக வேண்டும். பிறகு வரிசைக்கிரமமாக திரும்பிச் செல்ல வேண்டும். எல்லோரையும் கூட்டிச் செல்ல மாட்டார். இல்லையென்றால் பிரளயம் ஆகிவிடும். பிரளயம் ஆகிவிட்டது என்று காண்பிக்கிறார்கள். விளைவு எதுவும் காண்பிப்பதில்லை. இந்த உலகம் ஒருபொழுதும் காலி ஆக முடியாது என்பதை நீங்களோ அறிந்துள்ளீர்கள். "இராமரும் சென்றார் பெரிய குடும்பம் உடைய இராவணனும் சென்றார்" என்ற பாடல் உள்ளது. முழு உலகத்தில் இராவண சம்பிரதாயம் உள்ளது அல்லவா? இராம சம்பிரதாயமோ மிகவும் குறைவாக உள்ளார்கள். இராமரின் சம்பிரதாயமோ இருப்பதே சத்யுக திரேதாவில். நிறைய வித்தியாசம் இருக்கிறது. பின்னால் மற்ற கிளைகள் வெளிப்படுகின்றன. இப்பொழுது நீங்கள் விதை மற்றும் விருட்சம் பற்றியும் அறிந்துள்ளீர்கள். தந்தை எல்லாமே அறிந்துள்ளார். அதனால் தான் கூறிக் கொண்டே இருக்கிறார். எனவே அவருக்கு ஞானக்கடல் என்று கூறப்படுகிறது. ஒரே விஷயம் ஒருவேளை இருந்திருந்தால் பின் எந்த ஒரு சாஸ்திரம் போன்றவை உருவாகியிருக்க முடியாது. விருட்சத்தின் விளக்கம் பற்றிக் கூட புரிய வைத்து கொண்டே இருக்கிறார். மூல அடிப்படை விஷயம், முதல் நம்பர் பாடமாவது தந்தையை நினைவு செய்வது. இதில் தான் உழைப்பே உள்ளது. எல்லாமே இதையே பொருத்தது ஆகும். மற்றபடி விருட்சத்தையோ நீங்கள் அறிந்துள்ளீர்கள். உலகத்தில் இந்த விஷயங்களை யாருமே அறியாமல் உள்ளார்கள். நீங்கள் எல்லா தர்மத்தினருடைய நாள், கிழமை ஆகியவை எல்லாம் கூறுகிறீர்கள். அரைக் கல்பத்தில் இவை எல்லாம் வந்துவிடுகிறது. மீதம் இருப்பது சூரிய வம்சத்தினர் மற்றும் சந்திர வம்சத்தினர். இதற்காக நிறைய யுகங்கள் ஒன்றும் இருக்காது அல்லவா? இருப்பதே இரண்டு யுகங்கள். அங்கு மனிதர்களும் குறைவாக இருப்பார்கள். 84 இலட்ச பிறவிகளோ இருக்கவும் முடியாது. மனிதர்களின் அறிவுக்கு எட்டாமல் இருந்து விடுகிறது. எனவே மீண்டும் தந்தை வந்து அறிவை அளிக்கிறார். படைப்பு கர்த்தாவாக இருக்கும் தந்தையே வந்து படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை கடை பற்றிய ஞானத்தை அமர்ந்து அளிக்கிறார். பாரதவாசிகளோ முற்றிலும் ஒன்றும் அறியாமல் இருக்கிறார்கள். எல்லோரையும் பூஜித்துக் கொண்டே இருக்கிறார்கள். முகம்மதியர், பார்ஸி ஆகியோரை. யார் வருகிறார்களோ அவர்களைப் பூஜிக்க முற்பட்டு விடுகிறார்கள். ஏனெனில் தங்களுடைய தர்மம் மற்றும் தர்ம ஸ்தாபகரை மறந்துவிட்டுள்ளார்கள். மற்றவர்களோ எல்லோரும் அவரவர் தர்மத்தை அறிந்துள்ளார்கள். குறிப்பிட்ட இந்த தர்மம் எப்பொழுது யார் ஸ்தாபனை செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். மற்றபடி சத்யுக, திரேதாவின் சரித்திரம், பூகோளம் பற்றி யாருக்குமே தெரியாது. சிவபாபாவினுடையது இந்த ரூபம் ஆகும் என்று படங்களும் பார்க்கிறார்கள். அவரே உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை ஆவார். எனவே நினைவும் அவரையே செய்ய வேண்டும். இங்கு பிறகு எல்லோரையும் விட அதிகமாக கிருஷ்ணருக்கு பூஜை செய்கிறார்கள். ஏனெனில், அடுத்து இருக்கிறார் அல்லவா? அன்பும் அவரை செய்கிறார்கள். ஆக கீதையின் பகவான் கூட அவரென்று நினைத்து விட்டுள்ளார்கள். (ஞானத்தை) கூறுபவர் வேண்டும். அப்பொழுது தான் அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கும். தந்தை தான் கூறுகிறார். புது உலக ஸ்தாபனை மற்றும் பழைய உலகத்தின் விநாசம் செய்விப்பவர் ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. பிரம்மா மூலமாக ஸ்தாபனை, சங்கரன் மூலமாக விநாசம், விஷ்ணு மூலமாக பாலனை என்றும் எழுதுகிறார்கள். இந்த இடத்தைப் பற்றிய விஷயம் தான். ஆனால் அறிவு (ஞானம்) எதுவும் இல்லை. 

    அது நிராகார சிருஷ்டி. இது சாகார சிருஷ்டி என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சிருஷ்டி (படைப்போ) இதுவே தான். இங்கு தான் இராம இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யம் ஆகிறது. மகிமை முழுவதும் இந்த இடத்தினுடையது தான். மற்றபடி சூட்சுமவதனத்தின் சாட்சாத்காரம் மட்டும் ஆகிறது. மூலவதனத்திலோ ஆத்மாக்கள் இருக்கிறார்கள். பிறகு இங்கு வந்து பாகத்தை ஏற்று நடிக்கிறார்கள். மற்றபடி சூட்சும வதனத்தில் என்ன இருக்கிறது? இது படம் அமைக்கப்பட்டுள்ளது. அது பற்றி தந்தைப் புரிய வைக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் இது போல சூட்சும வதனவாசி ஃபரிஸ்தா ஆக வேண்டும். ஃபரிஸ்தாக்கள் எலும்பு சதையில்லாமல் இருப்பார்கள். ததீசி ரிμ எலும்புகளையும் கொடுத்துவிட்டார் என்று கூறுகிறார்கள் அல்லவா? மற்றபடி சங்கரன் பற்றிய பாடல் எங்குமே இல்லை. பிரம்மா, விஷ்ணுவின் கோவில் உள்ளது. சங்கரனுடையது எதுவும் இல்லை. எனவே அவரை விநாசத்திற்காக வைத்துவிட்டார்கள். மற்றபடி இதுபோல கண் திறந்து விடுவதால் ஒன்றும் விநாசம் (அழிவு) செய்வதில்லை. தேவதைகள் பிறகு இம்சையின் காரியம் எப்படி செய்வார்கள்? அவர்களும் செய்வதில்லை. சிவபாபா அதுபோல உத்தரவும் (டைரக்ஷ்ன்) கொடுப்பதில்லை. உத்தரவு கொடுப்பவர் மீதும் வந்துவிடும் அல்லவா? கூறுபவரே மாட்டி விடுகிறார். அவர்களோ சிவன் மற்றும் சங்கரனையே ஒன்று என்று கூறிவிடுகிறார்கள். இப்பொழுது தந்தை கூட என்னை நினைவு செய்யுங்கள். "மாமேகம்" - என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார். அப்படியின்றி சிவ சங்கரனை நினைவு செய்யுங்கள் என்று கூறுவதில்லை. பதீத பாவனர் என்று ஒருவருக்குத் தான் கூறுகிறார்கள். பகவான் அமர்ந்து பொருளுடன் கூடி புரிய வைக்கிறார். இது யாருக்குமே தெரியாது. எனவே இந்தப் படத்தை பார்த்து குழம்பிவிடுகிறார்கள். அந்த படத்தின் பொருள் பற்றியோ அவசியம் கூற வேண்யுள்ளது அல்லவா? புரிந்து கொள்வதற்கு நேரம் பிடிக்கிறது. கோடியில் யாரோ ஒருவர் தான் வெளிப்படுகிறார். நான் யாராக இருக்கிறேன், எப்படி இருக்கிறேன் என்று கோடியில் ஒருவர் தான் என்னைக் கண்டறியக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நல்லது. 

    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம். 

    தாரணைக்கான முக்கிய சாரம்: 


    1. எந்தவொரு விஷயத்தை பற்றிய சிந்தனையிலும் தனது நேரத்தை இழக்கக் கூடாது. தனது போதையில் இருக்க வேண்டும். தன்னைப் பற்றி சிந்தனை செய்து ஆத்மாவை சதோபிரதானமாக ஆக்க வேண்டும். 

    2. நரனிலிருந்து நாராயணர் ஆவதற்காக கடைசி நேரத்தில் ஒரு தந்தையின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். இந்த "ஹையெஸ்ட் யுக்தி" - மிக உயர்ந்த வழிமுறையை முன்னால் வைத்தபடியே "நான் ஆத்மா ஆவேன்" என்ற பயிற்சி செய்ய வேண்டும். இந்த சரீரத்தை மறந்துவிட வேண்டும். 

    வரதானம்: 


    தேக அபிமானத்திலிருந்து விடுபட்டவராகி பரமாத்மா அன்பை அனுபவம் செய்யக்கூடிய தாமரை மலரின் ஆசனத்திற்கு உரியவர் ஆகுக. 

    தாமரை மலர் மீது அமர்ந்திருப்பது தான் பிராமண ஆத்மாக்களின் சிரேஷ்ட மனநிலையின் அடையாளம். அப்படிப்பட்ட தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் ஆத்மாக்கள் இந்த தேக அபிமானத்திலிருந்து தானாகவே விடுபட்டு இருக்கிறார்கள். அவர்களின் உடலின் உணர்வு தனது பக்கம் கவர்ச்சிக்காது. எப்படி பிரம்மா பாபா நடக்கும் பொழுதும், காரியங்கள் செய்யும் பொழுதும் ஃபரிஸ்தா ரூபத்தின் அல்லது தேவதை ரூபத்தின் நினைவில் எப்பொழுதும் இருந்தார். அப்படி இயல்பாகவே ஆத்ம அபிமானி நிலையில் எப்பொழுதும் இருப்பது, இதற்கு தான் தேக அபிமானத்திலிருந்து விடுபட்டவர் என்று சொல்லப்படுகிறது. அப்படி தேக அபிமானத்திலிருந்து விடுபட்டு இருக்கக் கூடியவர் தான் பரமாத்மாவின் அன்பிற்குரியவராகி விடுகிறார். 

    சுலோகன்: 


    உங்களுடைய விசேஷத் தன்மைகள் மற்றும் குணங்கள் பிரபுவின் பிரசாதம், அவற்றை என்னுடையது என்று நினைப்பது தான் தேக அபிமானம் 

    ***ஓம்சாந்தி ***

    Brahma Kumaris Murli Tamil 16 September 2019

    No comments

    Say Om Shanti to all BKs