BK Murli 10 April 2016 In Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 10 April 2016 In Tamil

    10.04.2016  காலை முரளி  ஓம் சாந்தி   ''அவ்யக்த பாப்தாதா'' ரிவைஸ் 27.03.1981  மதுபன்

     '' தந்தைக்குப் பிரியமானவராக, அனைவருக்கும் பிரியமானவராக, தன் மனதிற்குப் பிரியமானவராக எப்படி ஆவது? ''


    இன்று பாப்தாதா விசேஷமாக எதற்காக வந்திருக்கிறார்? இன்று விசேஷமாக இரட்டை வெளிநாட்டு குழந்தைகளுடன் ஆன்மீக உரையாடல் செய்வதற்காக வந்திருக்கிறார்கள். கொடுக்கல் வாங்கல் செய்வதற்காக வந்திருக்கிறார்கள். வெகு தொலை தூரங்களிலிருந்து அனைத்து குழந்தைகளும் மதுபனிற்கு வந்திருக்கிறார்கள் என்றால் மதுபனின் தந்தை, வந்திருக்கும் குழந்தைகளுக்கு பிரத்யேகமாக ஞானத்தின் ஆன்மீக உரையாடல் மூலம் உபசரிப்பதற்காக வந்திருக்கிறார். இன்று பாப்தாதா யாருக்காவது எந்த விஷயத்திலாவது கடினம் அனுபவம் ஆகவில்லையே என்று குழந்தைகளிடமிருந்து கேட்பதற்காக வந்திருக்கிறார். தந்தை மற்றும் உங்களுடைய சந்திப்பும் சுலபமாகிவிட்டது இல்லையா? எப்பொழுது சந்திப்பு சுலபமானது, அறிமுகம் சுலபமாகக் கிடைத்தது, எளிய மார்க்கம் (வழி) கிடைத்தது, இருந்தும் ஏதாவது கடினம் இல்லையே? கடினம் இல்லை, ஆனால் யாராவது கடினமாக ஆக்கிவிடவில்லையே? தந்தை மூலமாக என்னென்ன பொக்கிஷம் கிடைத்திருக்கிறதோ அதன் சாவியை எப்பொழுது போட விரும்புகிறீர்களோ அப்பொழுது போடுங்கள், அந்த மாதிரி விதி உங்களிடம் வந்துவிட்டதா? விதி இருக்கிறது என்றால், சித்தியும் (பலன்) அவசியம் இருக்கும். விதியில் குறை இருக்கிறது என்றால் சித்தியும் ஏற்படுவதில்லை. உங்களுடைய நிலைமை என்ன?



    அனைவரும் உயரே பறந்துக் கொண்டிருக்கிறீர்களா? உயர்ந்த தந்தையின் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளாகஆகிவிட்டீர்கள் என்றால், நடந்து செல்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது! உயரே பறக்கத் தான் வேண்டும். பாதையில் நடந்து சென்றீர்கள் என்றால் இடையில் எங்காவது தடைவர முடியும், ஆனால் பறப்பதில் எந்த தடையும் இருக்காது. அனைவரும் பறக்கும் பறவைகள். ஞானம் மற்றும் யோகாவின் இறகுகள் அனைவரையும் நன்றாகப் பறக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. பறந்து பறந்து களைப்பு ஏற்படுவதில்லையே? அனைவருக்கும் களைப்பற்றவர் ஆகுக! என்ற வரம் கிடைத்து விட்டதா? விஷயமும் மிக சுலபமானதே தான். அனுபவம் செய்ய வேண்டும் மற்றும் அனுபவத்தை சொல்ல வேண்டும். அனுபவத்தை சொல்வது மிக சுலபமானதாக இருக்கும் தான் இல்லையா? தன்னுடைய விஷயத்தைத் தான் கூறுகிறீர்கள். எனவே மிக சுலபமானதே தான். உறவுகளின் விஷயங்களைக் கூறுவதில் என்ன கடினம் இருக்க முடியும்? இரண்டு விஷயங்களை மட்டும் கூற வேண்டும். ஒன்று தன்னுடைய குடும்பத்தின் அதாவது சம்மந்தத்தின் விஷயம் மற்றும் இரண்டாவது பிராப்தியின் விஷயம். எனவே பாப்தாதா எப்பொழுதும் குழந்தைகளை மகிழ்ச்சியாக இருப்பவர்களாகத் தான் பார்க்கிறார். எப்பொழுதாவது முழுநாளில் ஒரே இரசனை நிறைந்த சீரான நிலைக்குப் பதிலாக வேறு இரசனை ஈர்க்க வில்லையே? ஒரே இரசனையில் இருப்பவர்களாக ஆகிவிட்டீர்களா? பற்றுதலை வென்று நினைவு சொரூபமானவராக ஆகிவிட்டீர்களா? இப்பொழுதோ கீதையின் யுகம் முடிவடைய வேண்டும். அனைவரும் ஞானத்தின் பலனான பிராப்தியில் வந்துவிட்டீர்கள் இல்லையா? நினைவு சொரூபம் ஆவது என்ற இது தான் ஞானத்தின் பலன். அப்படியானால் இப்பொழுது முயற்சி செய்வது முடிவடைந்துவிட்டது. சுயசொரூபத்தின் வர்ணனையாக என்ன கூறுகிறீர்களோ, அந்த அனைத்து குணங்களும் எப்பொழுதும் அனுபவத்தில் இருக்கிறது தான் இல்லையா? எப்பொழுது விரும்புகிறீர்களோ அப்பொழுது ஆனந்த சொரூபம் ஆகிவிடுங்கள், எப்பொழுது விரும்புகிறீர்களோ அப்பொழுது அன்பு சொரூபம் ஆகிவிடுங்கள். எந்த சொரூபத்தை விரும்புகிறீர்களோ, எவ்வளவு நேரம் விரும்புகிறீர்களோ அதே சொரூபத்தில் நிலைத்திருக்க முடியுமா? இப்படியும் இல்லாமல் ஏற்கனவே அப்படி ஆகியிருக்கிறீர்கள் தான் இல்லையா? தந்தையின் குணமாக என்ன இருக்கிறதோ அதுவே குழந்தைகளின் குணமாகும். எது தந்தையின் கடமையாக இருக்கிறதோ, அதுவே குழந்தைகளின் கடமை. எது தந்தையின் நிலையோ அதுவே குழந்தைகளின் நிலை என்ற இவற்றைத் தான் சங்கமயுகத்தின் பிராப்தி என்று கூறுவது. அப்படியானால் பிராப்தி ஆனவர்களா அல்லது முயற்சி செய்பவர்களா? நீங்கள் பிராப்தி சொரூபமானவர்களா? அடைய வேண்டும், ஆவதில்லை, எப்படி ஆகும் என்ற இந்த பேச்சு மாறிவிட்டது இல்லையா? இன்று தரையில், நாளை ஆகாயத்தில் அப்படி மேலே கீழே சென்று வருபவர்களாக இல்லையே? இன்று கேள்விக்குறி இடுவது, நாளை முற்றுப்புள்ளி வைப்பது என்று அப்படி செய்யவில்லையே? ஒரே இரசனை அதாவது ஒரே முழுமையான மூட் (மனநிலையில்) இருப்பவர். மூடும் (மனநிலையும்) மாறக்கூடாது. அனேக குழந்தைகளுடைய மூட் மாறுகிறது என்பதை பாப்தாதா வதனத்திலிருந்து பார்க்கிறார். சில நேரம் ஆச்சரியப்படும் மூட், சில நேரம் கேள்விக்குறியின் மூட் மற்றும் சில நேரம் குழப்பத்தின் மூட். சில நேரம் டென்ஷன் மற்றும் சில நேரம் அட்டென்ஷனின் ஊஞ்சலோ ஆடுவதில்லையே? மதுபனில் இருந்து பிராப்தி அடைந்த சொரூபத்தில் செல்ல வேண்டும். முயற்சியும் எதுவரை செய்துக் கொண்டே இருப்பீர்கள் தந்தை என்னவாக இருக்கிறாரோ அப்படியே குழந்தைகள். தந்தைக்கு எப்பொழுதாவது மூட் ஆஃப் ஆகிறதா? இப்பொழுதோ தந்தைக்குச் சமமாக ஆக வேண்டும். குழந்தைகள் இல்லையா? குழந்தைகளோ தந்தையை விட பெரியவர்களாக ஆக வேண்டும். புகார்கள் அனைத்தும் முடிவடைந்துவிட்டனவா? உண்மையில் விஷயம் மிகச் சிறியதாக இருக்கும். ஆனால் யோசித்து யோசித்து சிறிய விஷயத்தை பெரியதாக்கி விடுகிறீர்கள். அடிக்கடி யோசிக்கும் காரணத்தினால் அந்த விஷயம் சிறியதிலிருந்து பெரியதாகிவிடுகிறது. இது ஏன் வந்தது, இது ஏன் நடந்தது என்று யோசிக்கும் காரியத்தைச் செய்யாதீர்கள். பரீட்சை வந்தது அதைச் செய்ய வேண்டும். பரீட்சை ஏன் வந்தது என்று கேள்வி எழுமா என்ன? வேஸ்ட் மற்றும் பெஸ்ட்டை (வீணானது மற்றும் சிறந்தது) ஒரு நொடியில் தீர்மானித்து அதை ஒரு நொடியில் முடிவு கட்டுங்கள். வீணானது என்றால் அரைக் கல்பத்திற்காக அதை வீணான காகித பெட்டியில் போட்டுவிடுங்கள். வீணான காகித பெட்டி மிகப்பெரியது. நீதிபதி ஆகுங்கள், வக்கீல் ஆகாதீர்கள். வக்கீல் சிறிய வழக்கையும் பெரியதாக்கிவிடுவார். மேலும் நீதிபதி ஒரு நொடியில் ஆம் அல்லது இல்லை என்று தீர்ப்பளித்துவிடுவார். வக்கீல் ஆகிறீர்கள் என்றால் கருப்பு கோட் வந்துவிடுகிறது. இது தந்தையின் குணமா அல்லது இல்லையா என்று ஒரு நொடிக்கான தீர்ப்பு தான். இல்லை என்றால் வீணான காகித பெட்டியில் போட்டுவிடுங்கள். ஒருவேளை தந்தையின் குணமாக இருக்கிறது என்றால் சிறந்ததின் கணக்கில் சேமிப்பு ஆக்குங்கள். பாப்தாதாவின் உதாரணமோ எதிரில் இருக்கிறது தான் இல்லையா? அதேபோல் செய்ய வேண்டும். அதாவது பின்பற்ற வேண்டும். எந்தவொரு புது மார்க்கத்தையும் உருவாக்க வேண்டாம். எந்தவொரு புது ஞானத்தையும் கண்டுபிடிக்க வேண்டாம். தந்தை என்ன கூறுகிறாரோ அதன் சொரூபமாக வேண்டும். அனைத்து வெளிநாட்டினரும் 100 சதவிகிதம் பிராப்தி அடைந்து கொண்டிருக்கிறீர்களா? சங்கமயுகத்தின் பிராப்தியின் பலன் - ''தந்தைக்குச் சமமாக ஆவது''. எதிர்கால பிராப்தி ''தேவதை பதவி''. அப்படி தந்தைக்குச் சமமானவர் ஆகி தந்தையின் கூடவே அதே நிலையில் அமருவதற்கான அனுபவத்தை கொஞ்ச நேரமோ செய்வீர்கள் தான் இல்லையா? எந்தவொரு இராஜா ஆசனத்தில் அமர்கிறார் என்றால் கொஞ்ச நேரமாவது அமருவார் இல்லையா? இப்பொழுது அமர்ந்தார் உடனே இறங்கிவிட்டார் என்று அப்படி இல்லையே. அப்படி தந்தைக்குச் சமமான நிலை அதாவது முழுமையான நிலையின் ஆசனதாரி ஆவது என்பது தான் சங்கமயுகத்தின் பிராப்தி. இந்த பிராப்தியையும் அடைய வேண்டும் இல்லையா? மேலும் அதிக காலம் அடைய வேண்டும். நீண்ட காலத்தின் சம்ஸ்காரத்தை இப்பொழுது நிரப்ப வேண்டும். நிரம்பிய வாழ்க்கை வேண்டும். நிரம்பிய நிலை கொஞ்ச காலம் மட்டுமில்லை ஆனால் முழு வாழ்க்கையும் இருக்க வேண்டும். பரிஷ்தா வாழ்க்கை, யோகி வாழ்க்கை, சகஜ வாழ்க்கை. வாழ்க்கை கொஞ்ச காலம் இருக்கும். இப்பொழுது பிறந்தார், அடுத்த நேரம் சென்றுவிட்டார் என்றால் அதை வாழ்க்கை என்று கூறமாட்டோம். அடைந்துவிட்டோம் என்று கூறுகிறீர்கள், அப்படி என்ன அடைந்தீர்கள்? ஏறுவது, இறங்குவதை மட்டும் அடைந்துவிட்டீர்களா? கடும் உழைப்பை அடைந்துவிட்டீர்களா? பிராப்தியை அடைந்துவிட்டீர்களா? தந்தைக்குச் சமமான வாழ்க்கையை அடைந்துயவிட்டீர்களா? கடின உழைப்பை எவ்வளவு காலம் செய்வீர்கள்? அரைக்கல்பம் அனேக விதமான கடின உழைப்பை செய்தீர்கள். குடும்ப விவகாரம், பக்தி, பிரச்சனைகள் அப்படி எவ்வளவு கடின உழைப்பு செய்தீர்கள். சங்கமயுகமோ அன்பாக இருப்பதற்கான யுகம். கடின உழைப்பிற்கான யுகம் இல்லை, சந்திப்பிற்கான யுகம். ஜோதி மற்றும் விட்டில் பூச்சிகள் ஒன்றர இணையும் யுகம் ஆகும். உழைப்பு என்று கூறுகிறீர்கள், ஆனால் உழைப்பு இல்லவே இல்லை. குழந்தை ஆவது என்றால் கடின உழைப்பு செய்வதா என்ன? ஆஸ்தியாக கிடைத்ததா அல்லது கடின உழைப்பில் கிடைத்ததா? குழந்தையோ தலையின் கிரீடமாக இருப்பார். வீட்டின் அலங்காரமாக இருப்பார், தந்தையின் குழந்தையாக இருப்பவர் எஜமானன் ஆகுபவராக இருப்பார். அப்படி எஜமானன் ஏன் கீழே வருகிறார். உங்களுடைய பெயரைப் பாருங்கள் எவ்வளவு உயர்ந்தது. எவ்வளவு உயர்ந்த பெயர் அப்படி பெயரும் மற்றும் நீங்கள் செய்யும் செயலும் ஒன்றாக இருக்கிறது தான் இல்லையா? உயர்ந்த மேடையில் எப்பொழுதும் தந்தையுடன் இருங்கள். உண்மையான ஸ்தானமோ அது தான். தன்னுடைய ஸ்தானத்தை ஏன் விடுகிறீர்கள்? உண்மையான ஸ்தானத்தை விடுவது என்றால் வேறு வேறு விஷயங்களில் அலைவது. ஓய்வாக அமருங்கள், போதையில் அமருங்கள் அதிகாரத்துடன் அமருங்கள். கீழே வந்த பிறகு இப்பொழுது என்ன செய்வது என்று கூறுகிறீர்கள். கீழே ஏன் வர வேண்டும், பிறகு அதன் காரணமாக கொஞ்சம் சுமையும் அனுபவமும் ஆகிறது. சுமையை தன் தலை மேல் வைத்துக் கொள்ளாதீர்கள். எப்பொழுது நான், எனது என்பது வருகிறதோ அப்பொழுது சுமை தலை மேல் வந்துவிடுகிறது. நான் என்ன செய்வது, எப்படி செய்வது, செய்ய வேண்டியதாக இருக்கிறது என்று கூறுகிறீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? பெயர் மட்டும் உங்களுடையது, செய்யும் காரியம் தந்தையினுடையதாக இருக்கிறது. அன்றைய நாளில் பொம்மையை பார்த்தீர்கள் அது அதுவாகவே இயங்கிக் கொண்டிருந்ததா அல்லது யாராவது இயக்கிக் கொண்டிருந்தார்களா? அறிவியல் இயக்கி வைக்க முடியும் என்றால் தந்தை இயக்கிவைக்க முடியாதா. இதுவோ குழந்தைகளின் பெயரை புகழடையச் செய்ய வேண்டும் என்பதற்காக தந்தை குழந்தைகளை பொறுப்பாளர் ஆக்கிவிடுகிறார், ஏனென்றால் தந்தை இந்த பெயர் ரூபத்திலிருந்து விலகியிருக்கிறார். எப்பொழுது தந்தை சுமையைக் கொடுத்துவிடு என்று அவரே வாய்ப்பளிக்கிறார் என்றால் நீங்கள் நடனம் ஆடுங்கள் மற்றும் உயரே பறந்து மட்டும் செல்லுங்கள், ஏன் சுமையைத் தூக்குகிறீர்கள்? எப்படி சேவை நடக்கும், எப்படி சொற்பொழிவு நிகழ்த்துவோம் . . . . இந்த கேள்விக்கோ இடமே இல்லை. தன்னை ஒரு கருவி என்று மட்டும் புரிந்து தொடர்பை பவர் ஹவுஸுடன் இணைத்து அமர்ந்துவிடுங்கள். பிறகு சொற்பொழிவு செய்ய முடிகிறதா அல்லது இல்லையா என்று பாருங்கள். அந்த பொம்மை நடக்க முடியும் என்றால் உங்களுடைய வாய் பேச முடியாதா? உங்களுடைய புத்தியில் திட்டம் போட முடியாதா? எப்படி என்று கூறியவுடனே அந்த வயருக்கு மேல் இரப்பர் வந்துவிட்டது என்பது போல் ஆகும். இரப்பர் வந்துவிட்ட காரணத்தினால் கனக்ஷ்ன் (தொடர்பு) இணைவதில்லை. மேலும் உடனடி பலன் தென்படுவதில்லை. எனவே களைப்படைந்துவிடுகிறீர்கள். என்னவாகும் என்று தெரியவில்லை என்று கூறுகிறீர்கள். தந்தை கருவியாக்கியிருக்கிறார் என்றால் அவசியம் ஏதோ ஒன்று இருக்கும் இல்லையா? ஒருவேளை ஏதாவது ஒரு இடத்தில் 6-லிருந்து 8 பேர் மட்டும் தான் இருக்கிறார்கள் என்றால் மற்ற இடங்களிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். ஏன் மனமுடைந்து போகிறீர்கள்? அக்கம் பக்கத்திற்குச் செல்லுங்கள், சுற்றி வாருங்கள். சுற்றுப்பகுதியோ மிகப்பெரியது. ஒரு இடத்திலிருந்து 8 பேர்கள் உருவானால் கூட குறைந்தது இல்லை. இருந்தும் ஒரு மூலையில் மறைந்திருந்தவர்களை உருவாக்கினீர்கள் என்றால் உங்களுக்கு எவ்வளவு மகிமை செய்வார்கள்! தந்தையின் கூடவே பொறுப்பிலிருக்கும் ஆத்மாக்களுக்கும் உள்ளப்பூர்வமாக ஆசீர்வாதங்கள் கொடுக்கிறார்கள் தான் இல்லையா? எந்த இடத்திலிருந்தாவது ஒரு இரத்தினம் உருவானால் கூட அந்த ஒருவருக்காகவும் செல்லத் தான் வேண்டும் இல்லையா? அவரை விட்டுவிடுவீர்களா என்ன? பிறகு அந்த ஆத்மா வஞ்சிக்கப்பட்டு இருந்துவிடும். எவ்வளவு உருவாகுமோ அந்த அளவு உருவாக்குங்கள், பிறகு முன்னேறிச் செல்லுங்கள். இப்பொழுதோ உலகின் ஒரு மூலை வரை சென்றடைந்து இருக்கிறீர்கள். காடும் மிகப்பெரியது, வேட்டை மிருகங்களும் அதிகமாக இருக்கின்றன. ஏன் யோசிக்கிறீர்கள்? யோசிப்பதற்கான காரணமாக என்ன இருக்கிறது? புத்தியில் வீணானது நிரம்பிவிட்ட காரணத்தினால் டச்சிங் (உணர்வது) ஏற்படுவதில்லை. பகுத்தறியும் சக்தி காரியம் செய்வதில்லை. எவ்வளவு தெளிவாக இருக்குமோ அந்த அளவு எந்த பொருள் எப்படி இருக்குமோ அது தெளிவாகத் தென்படும். அப்படி ஏன், என்ன என்ற காரணங்களினால் நிர்ணய சக்தி டச்சிங் பவர் (உணர்த்துதலை புரிந்து கொள்ளும் சக்தி) காரியம் செய்வதில்லை. பிறகு களைப்பு ஏற்படுகிறது அல்லது மனமுடைந்து போய்விடுகிறார்கள். எந்த இடங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறீர்களோ அங்கே ஏதோ ஒரு மறைந்திருந்த இரத்தினம் உருவாகியிருக்கிறது அதனால் தான் சென்றீர்கள் இல்லையா? ஒரு இடத்திலிருந்து ஒருவர் கூட உருவாகவில்லை என்ற அப்படி ஒரு ஸ்தானம் கூட கிடையாது. சில இடங்களில் வாரிசு உருவானார்கள், சில இடங்களில் பிரஜைகள், சில இடங்களில் செல்வந்தர்கள் உருவானார்கள். அனைவரும் வேண்டும் இல்லையா? அனைவருமே இராஜாவாக ஆகமாட்டார்கள். பிரஜையும் வேண்டும், பிரஜை உருவாக்கும் இந்தக் காரியத்தை பொறுப்பாளராகியிருக்கும் குழந்தைகள் தான் செய்ய வேண்டும் அல்லது நீங்கள் இராஜ குடும்பத்தினரை உருவாக்குவீர்கள் மற்றும் பாபா பிரஜைகளை உருவாக்குவாரா? இருவர்களையும் உருவாக்க வேண்டும் இல்லையா. இரண்டு விஷயங்களை மட்டும் பாருங்கள் ஒன்று தொடர்பு தெளிவாக இருக்கிறதா? இன்னொன்று மரியாதைகளின் கோட்டிற்கு உள்ளே இருக்கிறேனா? ஒருவேளை இரண்டு விஷயங்களும் சரியாக இருக்கிறது என்றால் ஒருபொழுதும் மனமுடைந்து போகமாட்டீர்கள். யாருடைய தொடர்பு தந்தையுடனோ மற்றும் பொறுப்பாளர் ஆகியிருப்பவருடனோ சரியாக இருக்கிறது என்றால், அவர் ஒருபொழுதும் வெற்றி அடையாதவராக இருக்க முடியாது. தந்தையுடன் மட்டும் தொடர்பு இருக்கிறது என்றால் அதுவும் சரியில்லை. குடும்பத்துடனும் வேண்டும், ஏனென்றால் தந்தையிடமிருந்தோ சக்தி கிடைக்கும் ஆனால் சம்மந்தத்தில் யாருடன் வர வேண்டும்? தந்தையுடன் மட்டும் தானா? இராஜ்யம் என்றால் பரிவாரத்தின் தொடர்பில் வருவது. மூன்று சான்றிதழ்கள் பெற வேண்டும். ஒன்று மட்டும் அல்ல.



    ஒன்று - தந்தைக்குப் பிரியமானவர் என்றால் தந்தையின் சான்றிதழ். இன்னொன்று மற்றவர்களுக்கும் பிரியமானவர் என்றால், தெய்வீக குடும்பத்தினரிருந்து திருப்தியின் சான்றிதழ். மூன்றாவது மனதிற்குப் பிரியமானவர் - தன்னுடைய மனதிலும் திருப்தி இருக்க வேண்டும். தன் மேலேயும் குழப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டாம். செய்ய முடியுமா, நான் இந்த மார்க்கத்தில் செல்ல முடியுமா. . . தெரியவில்லை. அப்படி தன்னுடைய மனதின் பிரியமானவர் என்றால் மனதின் திருப்தியின் சான்றிதழ். இந்த மூன்று சான்றிதழ்கள் வேண்டும். மும்மூர்த்தி இல்லையா? அப்படி இந்த மும்மூர்த்தி சான்றிதழ்கள் வேண்டும். இரண்டின் மூலமாகக்கூட காரியம் நடக்காது. மூன்றும் தேவை. சிலர் நான் என் மேலேயும் திருப்தியாக இருக்கிறேன், தந்தை மேலும் திருப்தியாக இருக்கிறேன் என்றாலும் நடக்காது. எப்பொழுது தந்தை திருப்தியாக இருக்கிறார், நீங்களும் திருப்தியாக இருக்கும்போது பரிவாரம் திருப்தியாக இல்லை என்பது இருக்கவே முடியாது. பரிவாரத்தைத் திருப்திபடுத்துவதற்காக ஒரே ஒரு சின்ன விஷயம் மட்டும் இருக்கிறது. 'மரியாதை கொடுங்கள் மற்றும் மரியாதையைப் பெறுங்கள்'. இந்த இசைத்தட்டு இரவு பகலாக பாடிக்கொண்டே இருக்க வேண்டும். மரியாதை கொடுப்பது என்ற இசைத்தட்டு நிரந்தரமாக ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். யார் எப்படிப்பட்டவராக இருந்தாலும் ஆனால் நீங்கள் வள்ளலாகி கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். பதிலுக்கு அவர் கொடுக்கிறாரோ அல்லது கொடுக்கவில்லையோ நீங்கள் கொடுத்துக் கொண்டே செல்லுங்கள், இதில் சுயநலமற்றவர் ஆகுங்கள். நான் இவ்வளவு கொடுத்திருக்கிறேன் அவரோ ஒன்றுமே கொடுக்கவில்லை. நான் நூறு தடவை கொடுத்திருக்கிறேன், அவரோ ஒரு தடவை கூட கொடுக்கவில்லை, அப்படி வேண்டாம். இதில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாதவராக ஆகுங்கள். பிறகு பரிவாரம் இயல்பாகவே திருப்தியாக இருக்கும். இன்று இல்லை என்றாலும் நாளை ஆகிவிடும். நீங்கள் கொடுப்பது சேமிப்பு ஆகிக் கொண்டே இருக்கும், அந்த சேமிப்பானது அவசியம் பலன் கொடுக்கும். மேலும் தந்தைக்குப் பிரியமானவராக ஆவதற்காக என்ன தேவை இருக்கிறது? தந்தையோ மிகவும் கள்ளம் கபடமற்றவர். தந்தை யாரை பார்த்தாலும் அனைவரும் நல்லதிலும் நல்லவர்களாகவே தென்படுகிறார்கள் 'நல்லவர் இல்லை' அப்படி யாருமே தென்படவில்லை. ஒவ்வொரு பாண்டவரும் ஒவ்வொரு சக்தியும் ஒருவர் இன்னொருவரை விட முன்னுக்கு இருக்கிறார். அப்படி தந்தைக்குப் பிரியமானவர் ஆவதற்காக - 'உண்மையான உள்ளத்தில் தந்தை திருப்தியாக இருக்கிறார்'. யாராக இருந்தாலும் - உண்மையாக இருப்பது, சத்தியமாக இருப்பது தந்தையை வெற்றி அடைந்துவிடுகிறது. மேலும் மனதிற்குப் பிரியமானவராக ஆவதற்கு என்ன தேவை? மனம் சொல்லும் வழியில் நடக்கக்கூடாது. மனதிற்கு விருப்பமானது அது வேறு ஆகும். மனதிற்கு பிரியமானவராக ஆவதற்கான மிக சுலபமான சாதனம் - ஸ்ரீமத்தின் கோட்டிற்கு உள்ளேயே இருங்கள். எண்ணத்தை செய்தாலும் கூட ஸ்ரீமத்தின் கோட்டிற்கு உள்ளே இருக்கட்டும். பேசுகிறீர்கள், காரியம் செய்கிறீர்கள் அப்படி என்ன செய்தாலும் கோட்டிற்கு உள்ளே இருக்கட்டும். அப்படி எப்பொழுதும் தன் மேலேயும் திருப்தியாகி மற்றவர்களையும் திருப்தி செய்ய முடியும். எண்ணம் என்ற விரல் கூட வெளியில் இருக்க வேண்டாம்.



    எவ்வளவு ஈடுபாடு, எவ்வளவு திட எண்ணம் இருக்கிறது என்று பாப்தாதாவும் தெரிந்திருக்கிறார். இடையிடையில் மட்டும் கொஞ்சம் மென்மையானவர்களாக ஆகிவிடுகிறீர்கள். எப்பொழுது மென்மையானவர் ஆகிவிடுகிறீர்களோ அப்பொழுது அதிக சினுங்கல்கள் செய்கிறீர்கள். அன்பு தான் இவர்களுடைய பயணசீட்டு, அதனால் தான் இங்கு வந்து சேருகிறார்கள். அன்பு இல்லை என்றால் அன்பின் பயணச்சீட்டு இல்லாமல் இங்கே எப்படி வந்து சேர முடியும்? இதே பயணச்சீட்டு தான் மதுபன் நிவாசி ஆக்குகிறது. நாலாபுறங்களிலும் உள்ள சேவைக்கு பொறுப்பாளர் ஆக்குகிறது. பாப்தாதாவோ பாராட்டுக்களோ கொடுத்திருக்கிறார் இல்லையா? என்ன உறுதிமொழி செய்து சென்றீர்களோ அதைக் கடைபிடிக்க வேண்டும். மற்றபடி வளர்ச்சி அடைந்துக் கொண்டே இருக்கும். ஸ்தாபனையோ செய்துவிட்டீர்கள் இல்லையா? சுயமுன்னேற்றம் மற்றும் சேவையின் முன்னேற்றம் - இரண்டின் சமநிலை இருந்தது என்றால் எப்பொழுதும் வளர்ச்சி அடைந்துக் கொண்டே இருக்கும்.



    வெகு காலமாக சுதந்திரமாக இருந்தவர்கள் தன்னை ஒரு குழு ரூபத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் ஒரு விசேஷம் என்று பார்த்தோம். இதுவும் மிக நல்ல மாற்றம். ஒவ்வொருவரும் தனியாக இருப்பவர்கள் நான்கு - ஆறு பேர்கள் சேர்ந்திருக்கிறார்கள். மேலும் சம்ஸ்காரத்தை ஒத்துப்போக வைத்திருக்கிறார்கள் என்ற இதுவும் அன்பின் பிரதிபலன் கொடுப்பதாகும். பாண்டவ பவன், சக்தி பவன் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற இதுவும் விசேஷம் தான். பாப்தாதா இந்த பிரதிபலனை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். ஒருவரின் பெயரை மனதில் வைப்பது, சிக்கனமாக இருப்பது இதுவும் பிரதிபலனைக் கொடுப்பது தான் இல்லையா? தன்னுடைய குடும்பத்தை பராமரிப்பதற்கு மற்றும் சேவையை செய்வதற்கு இரண்டிலும் பாதி பாதியாக்கி நடந்துக் கொள்வது என்ற புதிய கண்டுபிடிப்பும் நன்றாக இருக்கிறது. இரண்டு காரியங்கள் ஆகிவிட்டன இல்லையா? சம்பாதித்தீர்கள் மற்றும் ஈடுபடுத்தினீர்கள் அது சேவைக்காகவோ மற்றும் தனக்காகவோ இருக்கலாம். ஆனால் இங்கே சம்பாதித்தீர்கள் மற்றும் ஈடுபடுத்தினீர்கள் என்றால் இங்கே வங்கி கணக்கில் இருப்பதாக ஆவதில்லை. ஆனால் எதிர்காலத்தில் சேமிப்பாகிவிடுகிறது. புத்தியோ அனைத்திலிருந்தும் விடுபட்டு ஃப்ரீயாக இருக்கிறது தான் இல்லையா? வந்தது மற்றும் ஈடுபடுத்தினீர்கள். அப்படி கவலையற்ற மகாராஜா. பாண்டவர்கள் மற்றும் சக்திகள் இருவரிடையே பந்தயம் இருக்கிறது. தீபம் எரிந்தது மற்றும் எழுப்புவதற்காக செல்ல தொடங்கினார்கள். நல்ல இலட்சியம் வைத்திருக்கிறார்கள். பாரதத்தில் உதவிக் கரங்களை உருவாக்குவதில் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். மேலும் அங்கே ஏற்கனவே உருவாகிய உதவிக்கரங்கள் சுலபமாக வந்துவிடுகிறார்கள், இதுவும் வரதானம் ஆகும். பிற்காலத்தில் வருபவர்களுக்காக இது ஒரு லிப்ட் ஆகும். இங்கே உள்ளவர்களுக்கு பந்தனத்தை துண்டிப்பதில் காலம் எடுக்கிறது. மேலும் இவர்களுடைய பந்தனம் ஏற்கனவே வெட்டப்பட்டு இருக்கிறது. அப்படி லிஃப்ட் ஆகிவிட்டது தான் இல்லையா? மனதின் பந்தனம் மட்டும் இருக்க வேண்டாம். நல்லது!



    வரதானம்:

    எப்பொழுதும் சுயமரியாதையில் நிலைத்திருந்து பணிவான நிலை மூலமாக அனைவருக்கும் மரியாதை கொடுக்கக்கூடிய மரியாதைக்குரிய, பூஜைக்குரியவர் ஆகுக!



    எது தந்தையின் மகிமையாக இருக்கிறதோ அது தான் உங்களுடைய சுவமானம், சுவமானத்தில் நிலைத்திருந்தீர்கள் என்றால் பணிவானவர் ஆகிவிடுவீர்கள், பிறகு அனைவரிடமிருந்து இயல்பாகவே மரியாதை கிடைத்துக் கொண்டே இருக்கும். மரியாதை கேட்பதினால் கிடைக்காது. ஆனால் மரியாதை கொடுப்பதினால், சுவமானத்தில் நிலைத்திருப்பதினால், மரியாதையை தியாகம் செய்வதினால் அனைத்து மரியாதைக்குரியவர் மற்றும் பூஜைக்குரியவர் ஆவதற்கான பாக்கியம் கிடைத்துவிடுகிறது. ஏனென்றால் மரியாதை கொடுப்பது, கொடுப்பதல்ல ஆனால் பெறுவது.



    சுலோகன்:

    அனைத்தையும் தெரிந்தும், கூடவே செய்பவராகவும் ஆகி, சக்தியற்ற ஆத்மாக்களுக்கு அனுபவங்களின் பிரசாதத்தைக் கொடுத்துக் கொண்டே செல்லுங்கள்.



    ***OM SHANTI***