BK Murli 24 April 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 24 April 2016 Tamil

    24.04.2016  காலை முரளி         ஓம் சாந்தி       ''அவ்யக்த பாப்தாதா'' ரிவைஸ் 05.04.2016  மதுபன்

     '' சக்திசாலியான கர்மங்களின் (காரியங்களின்) ஆதாரம் - தர்மம் ''

    இன்று பாப்தாதா தன்னுடைய உலகை மாற்றம் செய்யும் மற்றும் உலகிற்கு நன்மை செய்யும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதிலிருந்து பிராமண வாழ்க்கை ஏற்பட்டதோ அப்பொழுதிலிருந்தே இந்த மகான் கடமையின் எண்ணம் கொண்டீர்கள். பிராமண வாழ்க்கையின் முக்கியமான கர்மமே (செயலே) இது தான். மனித வாழ்க்கையில் ஒவ்வொரு ஆத்மாவின் விசேஷமாக இரண்டு தாரணைகள் இருக்கின்றன. ஒன்று தர்மம், இன்னொன்று கர்மம். தர்மத்தில் நிலைத்திருக்க வேண்டும் மற்றும் கர்மம் செய்ய வேண்டும். தர்மம் இன்றி வாழ்க்கையின் கர்மத்தில் வெற்றி கிடைக்க முடியாது. தர்மம் என்றால் விசேஷ தாரணை (கடைபிடித்தல்). நான் என்னவாக இருக்கிறேன்? இதே தாரணை அதாவது தர்மத்தின் ஆதாரத்தினால் நான் என்ன செய்ய வேண்டும் என்பது புத்தியில் தெளிவாகிறது. யதார்த்த தர்மம் அதாவது தாரணை இருந்தாலும் சரி, யதார்த்தமற்றது இருந்தாலும் சரி! சக்தியற்ற கர்மமும் யதார்த்தமற்ற தாரணை அதாவது நான் மனிதன் என்னுடைய தர்மமே மனித தர்மம், இதைத் தான் நீங்கள் தேக அபிமானம் என்று கூறுகிறீர்கள். இதே தர்மத்தின் ஆதாரத்தில் கர்மமும் தவறாக நடந்தன. அந்த மாதிரி பிராமண வாழ்க்கையிலும் நான் சிரேஷ்ட ஆத்மா என்ற இந்த யதார்த்த தாரணை இருக்க வேண்டும். நான் ஆத்மா அமைதி, ஆனந்தம் மற்றும் சுக சொரூபமானவன். இதே ஆதாரத்தில் என்னுடைய கர்மமும் மாறிவிட்டது. ஒருவேளை கர்மத்தில் உயர்ந்ததற்கு பதிலாக சாதாரண கர்மம் நடந்துவிட்டது என்றால், அதன் ஆதாரமும் இதே தர்மம் அதாவது நான் சிரேஷ்ட ஆத்மா, சிரேஷ்ட குணங்களின் சொரூபமானவன் என்ற இந்த தாரணையின் குறைவு ஏற்பட்டுவிடுகிறது. அப்படியானால் அஸ்திவாரம் எது? இதன் காரணமாகத் தான் தர்ம ஆத்மா என்ற வார்த்தை கூறப்படுகிறது. நீங்கள் அனைவரும் தர்ம ஆத்மா தான் இல்லையா? தர்ம ஆத்மாக்கள் மூலமாக இயல்பாகவே வீணானவை மற்றும் சாதாரண கர்மம் முடிவடைந்துவிடுகின்றன. எனவே நான் எப்பொழுதும் தர்மத்தில் நிலைத்திருக்கிறேனா என்று முதலில் சோதனை செய்யுங்கள். பிறகு கர்மம் தானாகவே சக்தி நிறைந்ததாக நடந்துக் கொண்டே இருக்கும். நான் யார்? இது தான் முதல் பாடம். 'நான் யார்' என்ற கேள்வியில் முழு ஞானமும் வந்துவிடுகிறது. நான் யார் என்ற இந்த கேள்விக்கே பதில் தேடினீர்கள் என்றால், எவ்வளவு நீண்ட பட்டியல் உருவாகிவிடும்! இப்பொழுதே ஒரு நொடியில் ஒருவேளை நினைவில் கொண்டு வந்தீர்கள் என்றால் எத்தனை பட்டங்கள் நினைவில் வந்துவிடும். ஏனென்றால் கர்மத்தின் ஆதாரத்தில் அனைவரையும் விட அதிகமான பட்டங்கள் உங்களுக்குத் தான் இருக்கிறது. தந்தையின் பட்டமாக என்ன இருக்கிறதோ அவை அனைத்தும் உங்களுடையதும் தான், அனைத்திலும் மாஸ்டர் ஆகிவிட்டீர்கள் இல்லையா? முழுக் கல்பத்தில் இவ்வளவு பெரிய பட்டங்களின் பட்டியல் வேறு யாருக்கும் இருக்காது. தேவதைகளுக்கும் இருக்காது. உங்களுடைய பட்டங்களை மட்டும் எழுதத் தொடங்கினீர்கள் என்றால், ஒரு சிறிய புத்தகமே தயாராகிவிடும். இந்த சங்கமயுகத்தின் பட்டங்கள் உங்களுடைய கல்விக்குக் கிடைத்த பட்டங்கள் ஆகும். அவர்களுடைய பட்டங்கள் எவ்வளவு தான் பெரியதாக இருந்தாலும், உங்கள் கல்விக்கு எதிரில் அவை ஒன்றுமே இல்லை. அந்த அளவு போதை இருக்கிறதா? இருந்தும் நான் யார்? என்ற வார்த்தை தான் வரும். தினசரி புதுப்புது பட்டங்களை நினைவில் வையுங்கள். அதாவது அந்த பட்டங்களின் தாரணை சொரூபமான தர்ம ஆத்மா ஆகி, செயல்களைச் செய்யுங்கள். காரியம் செய்துக் கொண்டே தர்மத்தை விடாதீர்கள். தர்மம் மற்றும் கர்மத்தின் இணைப்பு ஏற்படுவது இந்த சங்கமயுகத்தின் விசேஷம் ஆகும்.



    எப்படி ஆத்மா மற்றும் பரமாத்மாவின் துண்டிக்கப்பட்ட சம்மந்தத்தை தந்தை இணைத்துவிட்டாரோ, அதே போன்று தர்மம் மற்றும் கர்மத்தின் சம்மந்தத்தையும் இணைத்துவிட்டீர்கள் என்றால், தர்ம ஆத்மாவாக பிரத்யக்ஷ்ம் ஆவீர்கள். இன்று பாப்தாதா யார் தர்மம் மற்றும் கர்மத்தை இணைத்து நடந்துக் கொள்கிறார்கள், ஒன்றைப் பிடிக்கிறார்கள், ஒன்றை விட்டு விடுகிறார்கள் என்ற அனைத்து குழந்தைகளின் இந்தக் காட்சியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். எப்படி கர்ம யோகா இருக்கிறது என்றால், கர்மம் மற்றும் யோகாவின் இணைந்த நிலை, ஒருவேளை இரண்டில் ஒன்றை விட்டு விட்டீர்கள், எப்படி ஊஞ்சல் ஆடுவதற்கு இரண்டு கயிறுகளும் அவசியமாக இருக்கிறது. ஒருவேளை ஒரு கயிறு அறுந்துவிட்டது, அல்லது மேலும் கீழுமாக ஆகிவிட்டது அல்லது சிறியதும் பெரியதுமாக ஆகிவிட்டது என்றால், என்ன நிலைமை ஆகும். இதே நிலை தான் ஏற்படும். அதே போலவே தர்மம் மற்றும் கர்மம் இரண்டின் இணைதல் மூலம் அனைத்து பிராப்திகளினாலும் ஊஞ்சலாடிக் கொண்டே இருப்பீர்கள். மேலே கீழே சென்றுவிடுவதினால் பிராப்தியின் ஊஞ்சலில் இருந்து பிராப்தியற்ற சொரூபத்தை அனுபவம் செய்துவிடுகிறீர்கள். நடைமுறையில் சோதனை செய்யத் தெரிவதில்லை. எனவே ஆடுவதற்குப் பதிலாக என்ன செய்வது, எப்படி செய்வது? என்று கதற ஆரம்பிக்கிறீர்கள். எப்படி அஞ்ஞானிகளிடம் நான் யார் என்ற இந்த கேள்விக்கு விடை தெரியவில்லை என்று கூறுகிறீர்கள். அதேபோல் நான் யார் என்று தன்னிடம் கேளுங்கள்! இதை நல்ல முறையில் தெரிந்திருக்கிறீர்களா? இதில் கூட மூன்று நிலைகள் இருக்கின்றன ஒன்று தெரிந்து கொள்வது, இரண்டாவது தன்னை ஏற்றுக் கொள்வது, மூன்றாவது ஏற்றுக் கொண்டு நடந்துக் கொள்வது அதாவது அதனுடைய சொரூபம் ஆவது! அப்படி நீங்கள் எந்த நிலை வரை வந்து சேர்ந்திருக்கிறீர்கள்? தெரிந்து கொள்வதிலோ அனைவரும் பாஸ் தான் இல்லையா? மேலும் மூன்றாவது எண்ணில் இருக்கும் ஏற்றுக் கொண்டு நடந்துக் கொள்வது அதாவது சொரூபம் ஆவது இதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சொரூபம் ஆகிவிட்டீர்கள் என்றால், சொரூபத்தை எப்பொழுதாவது மறக்க முடியுமா? தன்னை தேகம் என்று உணர்வது தவறாகும். ஆனால் சொரூபம் வரை வந்துவிட்டீர்கள் என்றால் மறக்க வைத்தாலும் மறக்க முடியாது. மறக்கிறீர்கள் தான் இல்லையா? அதே போல் ஒவ்வொரு பட்டத்தையும் எதிரில் வைத்து அதை சொரூபத்தில் கொண்டு வந்திருக்கிறேனா என்று பாருங்கள். எப்படி தினசரி பாப்தாதா சுயதரிசன சக்கரதாரியின் பட்டத்தை நினைவூட்டுகிறார். எனவே சுயதரிசன சக்கரதாரி என்ற சங்கமயுகத்தின் சொரூபத்தைத் தெரிந்துக் கொள்ளும் அளவில் கொண்டு வந்திருக்கிறீர்களா அல்லது ஏற்றுக் கொள்ளும் வரையிலா அல்லது சொரூபமாகவே கொண்டு வந்திருக்கிறீர்களா? எப்பொழுதுமே சுயதரிசனம் சுற்றிக் கொண்டு இருக்கிறதா அல்லது பரதரிசனம் சுயதரிசனத்தை மறக்க வைத்துவிடுகிறதா? இந்த உடலைப் பார்ப்பது கூட பரதர்சனம் (வெளிமுகமாகவே பார்த்துக் கொண்டிருப்பது) தான். நான் சுயம் ஆத்மா. தேகம் விலகி இருப்பதாகும், இயற்கையும் விலகியது. இயற்கையின் உணர்வில் வருவது கூட இயற்கையின் வசமாவது. இதுவும் பரதர்சனத்தின் (பிறவற்றின்) சக்கரம். எப்பொழுது தன்னுடைய தேகத்தைப் பார்ப்பதும் பரதர்சனம் என்றால் மற்றவர்களின் உடலைப் பார்ப்பதை எப்படி சுயதர்சன சக்கரம் என்று கூறுவோம். வீணான எண்ணம் அல்லது பழைய சம்ஸ்காரம் என்ற இதுவும் தேக உணர்வின் சம்மந்தத்தில் வருவது. ஆத்மீக சொரூபத்தின் சம்ஸ்காரம், எது தந்தையின் சம்ஸ்காரமாக இருக்கிறதோ அது தான் ஆத்மாவின் சம்ஸ்காரம். தந்தையின் சம்ஸ்காரத்தை தெரிந்திருக்கிறீர்களா? அவர் எப்பொழுதும் உலகிற்கு நன்மை செய்பவர், பரோபகாரி, இரக்க மனமுடையவர், வரமளிப்பவர் . . . அந்த மாதிரியான சம்ஸ்காரம் இயற்கையான சொரூபத்தில் உருவாகியிருக்கின்றனவா? சம்ஸ்காரத்தை உருவாக்குவது என்றால், எண்ணம், சொல் மற்றும் செயல் இயல்பாகவே அதன்படி இருக்கும். சம்ஸ்காரம் அந்த மாதிரியானது அது ஆத்மாவை இயல்பாகவே தனக்கு ஏற்றபடி நடத்திக் கொண்டே இருக்கும். இதை வேறு வார்த்தைகளில் - இது என்னுடைய நேச்சர் என்று கூறுகிறார்கள். தந்தைக்குச் சமமான நேச்சர் ஆகிவிட வேண்டும் - எப்பொழுதும் வரம் அளிப்பவர், எப்பொழுதும் உபகாரி, எப்பொழுதும் இரக்க மனம் உடையவர். அப்படி கடின உழைப்பு செய்ய வேண்டும். எப்பொழுது நான் யார் என்பதை சொரூபத்தில் கொண்டு வருகிறீர்களோ, இதே தர்மத்தை செய்யும் காரியங்களில் கடைபிடிப்பீர்களோ அப்பொழுது தான் சொரூபம் வரை கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கூறுவோம். இல்லை என்றால் தெரிந்தவர் மற்றும் ஏற்றுக் கொண்டவர் பட்டியலில் சென்றுவிடுவீர்கள். என்னுடைய தர்மமே இது தான் என்ற நினைவை எப்பொழுதும் வைத்துக் கொள்ளுங்கள். இதே தர்மத்தில் எப்பொழுதும் நிலைத்திருங்கள், என்ன நடந்தாலும் சரி, அது நபர் மூலமாகவோ, இயற்கை மூலமாகவோ அல்லது சூழ்நிலை மூலமாகவோ இருந்தாலும், உங்களுடைய சுலோகனாக 'உயிரே சென்றாலும் தர்மத்தை விடமாட்டோம்' என்று இருக்கிறது. இதே சுலோகனை மற்றும் உறுதிமொழியை எப்பொழுதும் நினைவில் வையுங்கள்.



    இந்த நேரம் சென்ற கல்பத்து பழைய குழந்தைகளாக இருந்தவர்கள் புதிய குழந்தைகளாக வந்திருக்கிறார்கள். பழையதிலும் பழையதாக இருக்கிறீர்கள். மேலும் புதியவர்களாகவும் இருக்கிறீர்கள். புதிய குழந்தைகள் என்றால், அனைவரையும் விட சிறிய, அனைவரையும் விட செல்லமானவர்கள். புதிய இலை பார்ப்பதற்கு அனைவருக்கும் நன்றாக இருக்கும். அதனால் புதியவராக இருந்தாலும் கூட, அதிகாரத்தில் (உரிமையை அடைவதில்) நம்பர் ஒன். அந்த மாதிரி எப்பொழுதும் முயற்சி செய்து கொண்டே இருங்கள். அனைத்தையும் விட முதல் அதிகாரம் தூய்மையின் அதிகாரம். அதன் ஆதாரத்தில் சுகம், சாந்தி அனைத்து அதிகாரங்களும் பிராப்தியாக கிடைத்துவிடுகின்றன. அப்படி முதலில் தூய்மையின் அதிகாரத்தைப் பெறுவதில் எப்பொழுதும் நம்பர் ஒன் ஆக இருக்க வேண்டும். அப்பொழுது பிராப்தியிலும் கூட நம்பர் ஒன் ஆகிவிடுவீர்கள். தூய்மையின் அஸ்திவாரத்தை ஒருபொழுதும் பலஹீனம் ஆக்காதீர்கள். அப்பொழுது தான் கடைசியில் வந்தாலும் வேகமாகச் செல்பவராக ஆக முடியும். பாப்தாதாவிற்கும் குழந்தைகள் மீண்டும் தங்களுடைய அதிகாரத்தைப் பெறுவதற்கு வந்து சேர்ந்துவிட்டார்கள் என்று பார்த்து குஷி ஏற்படுகிறது. எனவே நன்றாக முயற்சி செய்யுங்கள். இப்பொழுது கூட வெகு காலதாமதம் என்ற அறிக்கைப் பலகை மாட்டப்படவில்லை. அனைத்து இடங்களும் காலியாக இருக்கின்றன, யார் என்று நிச்சயம் செய்யப்படவில்லை. எந்த எண்ணைப் பெற விரும்புகிறீர்களோ அதைப் பெற முடியும், அந்த அளவு கவனம் வைத்து நடந்துக் கொண்டே இருங்கள். அதிகாரி ஆகிக் கொண்டே இருங்கள். தகுதிகளை நடைமுறையில் கடைபிடித்து தகுதியானவர் ஆகிக் கொண்டே இருங்கள்.



    அந்த மாதிரி தந்தைக்குச் சமமாக எப்பொழுதும் உயர்ந்த தர்மம் மற்றும் காரியம் செய்யும், எப்பொழுதும் தர்ம ஆத்மா, எப்பொழுதும் சுயதரிசன சக்கரதாரி சொரூபம் உள்ள, எப்பொழுதும் அனைத்து பிராப்தி சொரூபமான, அம்மாதிரி உயர்ந்த ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    டீச்சர்களாக ஆகப் போகும் குமாரிகளின் குரூப்போடு பாப்தாதாவின் சந்திப்பு:

    இந்த குரூப் உலகிற்கு நன்மை செய்யப் போகும் குரூப் தான் இல்லையா? இந்த இலட்சியத்தை வைத்திருக்கிறீர்கள் தானே! தனக்கு நன்மை செய்து உலகிற்கும் நன்மை செய்பவராக ஆவோம் என்ற இதே உறுதியான எண்ணம் வைத்திருக்கிறீர்கள் தான் இல்லையா? பாப்தாதா பொறுப்பாளர் ஆகியிருக்கும் ஒவ்வொரு உயர்ந்த ஆத்மாக்களைப் பார்த்து இந்த ஒவ்வொரு குமாரியும் அனே ஆத்மாக்களுக்கு நன்மை செய்வதற்குப் பொறுப்பாளராக ஆகப் போகிறவர்கள் என்று குஷி அடைகிறார். பொதுவாக குமாரியை 100 பிராமணர்களையும் விட உத்தமமானவர் என்று கூறுவார்கள், ஆனால் 100 கூட ஒரு எல்லைக்குட்பட்டதாக ஆகிவிட்டது. இவர்கள் அனைவருமோ எல்லைக்கப்பாற்பட்ட உலகிற்கு நன்மை செய்பவர்கள். எல்லைக்கப்பாற்பட்டவர்கள் தான் நீங்கள் இல்லையா? எல்லைக்குட்பட்டது எண்ணத்தில் கூட இல்லை. பிறகு அனைவரும் போட்டியில் ஒருவர் இன்னொருவரைவிட முன்னுக்கு இருக்கிறீர்களா அல்லது வரிசைக்கிரமமாக இருக்கிறீர்களா? என்ன நினைக்கிறீர்கள். ஒவ்வொருவரிடமும் அவரவர்களின் விசேஷமோ இருக்கும். ஆனால் இங்கே அனைத்து விசேஷங்களில் நிரம்பியவராக இருக்கிறீர்களா? எப்பொழுது அனைத்து விசேஷங்களையும் தாரணை செய்வீர்களோ அப்பொழுது தான் முழுமையானவர் ஆக முடியும். அப்படியானால் என்ன இலட்சியம் வைத்திருக்கிறீர்கள்? விஷயம் மிகச் சிறியது தான், பெரிய விஷயம் ஒன்றும் இல்லை, எண்ணம் உறுதியாக இருக்கிறது என்றால் பிராப்தி இயல்பாகவே ஆகிவிடுகிறது. ஒருவேளை எண்ணம் மட்டும் இருக்கிறது, அதில் திடத்தன்மை இல்லை என்றால் கூட வித்தியாசம் ஏற்பட்டுவிடும். சில நேரம் எண்ணமோ இருக்கிறது, செய்யத் தான் வேண்டும் என்று கூறுகிறீர்கள் - இதை திட எண்ணம் என்று சொல்லமாட்டோம். திட எண்ணம் என்றால் செய்யத் தான் வேண்டும், நடக்கத் தான் வேண்டும். அப்படி 'வார்த்தை' வெளியாகிவிடுகிறது. ஆகவோ வேண்டும் என்று அப்படியில்லை. ஆனால் கண்டிப்பாக ஆக வேண்டும். இந்த இலட்சியத்தை வைத்தீர்கள் என்றால் நம்பர் ஒன் ஆகிவிடுவீர்கள். சகஜ வாழ்க்கை அனுபவம் ஆகிறதா? கடினம் இல்லையே? கல்லூரியின் சூழ்நிலை பிரபாவமோ ஏற்படுத்துவதில்லையே? உங்களுடைய சூழ்நிலை அவர்கள் மேல் பிரபாவம் ஏற்படுத்துகிறதா? எப்பொழுதும் தடையற்றவராக இருக்க வேண்டும். தன்னைப் பார்ப்பது என்றால் தடையற்றவர் ஆவது. தந்தையின் சம்ஸ்காரமாக இருப்பது தன்னுடைய சம்ஸ்காரம், பிறகு எப்படி கருவி என்ற அளவில் செய்து கொண்டிருக்கிறீர்கள், ஆனால் செய்விப்பவர் தந்தை. செய்பவர் - செய்விப்பவர் என்று என்ன வர்ணிக்கப்பட்டிருக்கிறதோ, அது இந்த நேரத்தின் நடைமுறை அனுபவம் ஆகும். நல்ல உதாரணம் ஆகியிருக்கிறீர்கள். எப்பொழுதும் உண்மையானவர் ஆகி நிரூபணம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். யார் நிரூபணம் கொடுக்கிறாரோ அவரைத் தான் உண்மையானவர் என்று கூறுவோம். எப்பொழுதாவது உங்களுக்குள் பிரச்சனை எதுவும் இல்லையே? ஞானம் நிறைந்தவராக ஆனதினால் ஒவ்வொருவரின் சம்ஸ்காரத்தையும் தெரிந்து சம்ஸ்காரத்தை மாற்றம் செய்வதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கிறீர்கள். இவரோ அப்படிப்பட்டவர் தான் என்று யோசிப்பதில்லை. ஆனால் இவர் அந்த மாதிரியானவரிலிருந்து இப்படி எப்படி ஆவது என்று இதை யோசிப்பீர்கள். இரக்க மனம் உடையவர் ஆவீர்கள். வெறுப்பு நிறைந்த பார்வை இல்லாமல் இரக்கப் பார்வை இருக்கும். ஏனென்றால் ஞானம் நிறைந்தவராக ஆகிவிட்டீர்கள் இல்லையா? சகஜ வாழ்க்கை மேலும் உயர்ந்த பிராப்தி, இந்த மாதிரியான பாக்கியம் வேறு எப்பொழுதாவது கிடைக்க முடியுமா? சேவைக்குத் தகுதியான நல்ல உதவிக்கரங்கள், அந்த மாதிரியே கரங்கள் உருவாகிக் கொண்டிருந்தது என்றால் மிக நல்லது. தைரியமுள்ள குழந்தைகளுக்கு தந்தையின் உதவி இருக்கிறது. சக்திகளோ வெற்றி அடைபவர்களாக இருக்கிறார்கள். சக்திகளுக்கு வெற்றி இல்லை என்பது இருக்கவே முடியாது.



    இரண்டாவது குரூப் (தனிப்பட்ட சந்திப்பு) -

    இந்த வருடம் ஒவ்வொரு குழந்தைக்கும் தான் மூன்று சான்றிதழ்களையும் (மனதிற்கு விருப்பமானவர், மக்களின் விருப்பமானவர் மற்றும் தந்தைக்கு விருப்பமானவர்) பெற வேண்டும் என்ற இந்த விசேஷ கவனம் வைக்க வேண்டும். மனதிற்கு விருப்பமானவரின் சான்றிதழ் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதைத் தெரிந்துக் கொள்வதற்கு பாப்தாதாவின் அறையில் சென்று செய்ய முடியும். ஏனென்றால் அந்த நேரம் தந்தை கண்ணாடி ஆகிவிடுகிறார். மேலும் என்னென்ன நடக்கிறதோ அது அந்தக் கண்ணாடியில் தெளிவாகத் தென்படுகிறது. ஒருவேளை அந்த நேரம் தந்தையின் எதிரில் தன்னுடைய மனம் நான் சரியாக இருக்கிறேன் என்று சான்றிதழ் கொடுக்கிறது என்றால், சரி என்று புரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை அந்த நேரம் மனதில் இது சரியில்லை என்று வருகிறது என்றால், தன்னை மாற்றம் செய்ய வேண்டும். ஒருவேளை உதாரணமாக அதிகமானவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக சில சமிக்ஞைகள் கொடுக்கிறார்கள், ஆனால் நான் தவறாக இருக்கிறேன் என்று தானே நினைப்பதில்லை, இருந்தும் எப்பொழுது மற்றவர்களுக்காக மேலே இருந்து இந்த கவனம் வைக்க வேண்டும் என்ற டைரக்ஷ்ன் கிடைக்கிறது என்றால், பிறகு அந்த நேரம் தன்னுடைய புத்தியை செலவழிக்கக் கூடாது. ஏனென்றால் ஒருவேளை சத்தியத்தின் சக்தி இருக்கிறது என்றால், இதனை 'சத்திய நிலை மகான் நிலை' என்று கூறப்படுகிறது. மேலும் யார் சுயம் அவரே வளைந்து கொடுக்கிறாரோ அவர் தான் மகான். ஒருவேளை உதாரணமாக நன்மை ஏற்பட வேண்டும் என்ற காரணத்தினால் வளைந்து கொடுக்க வேண்டியதாக இருந்தாலும் அது வளைந்து கொடுப்பது அல்ல. ஆனால் அது மகான் நிலை! அனேகர்களின் சேவைக்காக மகானாக இருப்பவருக்கு வளைந்து கொடுக்கத் தான் வேண்டி உள்ளது.



    எனவே இந்த விசேஷ கவனம் வையுங்கள். இதில் தான் அலட்சியம் வந்துவிடுகிறது. நான் சரியாக இருக்கிறேன், சரியாகத்தான் இருக்கிறீர்கள். ஆனால் யார் சரியாக இருக்க முடியுமோ அவர் தன்னை வளைந்து கொடுக்கச் செய்யவும் முடியும். ஒருவேளை உதாரணமாக என்னுடைய நடத்தை மூலமாக மற்றவர்களுக்கு ஏதாவது எண்ணம் உருவாகிறது என்றால் தன்னை வளைத்துக் கொள்வதில் நஷ்டம் என்ன? இருந்தும் அனைவரின் ஆசீர்வாதமோ கிடைத்துவிடும். இந்த ஆசீர்வாதம் கூட லாபமாக ஆனது இல்லையா? ஏன், என்ன என்பதில் செல்லாதீர்கள். இது ஏன், இது அப்படி ஆகுமா, இப்படி ஆகுமா என்ற இவற்றிற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இப்பொழுது இந்த விசேஷத்தை நாலாபுறங்களிலும் கலங்கரை விளக்கைப் போன்று சமமாக பரப்புங்கள். இதைத் தான் ஒருவர் கூறினார், இன்னொருவர் ஏற்றுக் கொண்டார் அதாவது அனேகர்களுக்கு சுகம் கொடுப்பதற்கு பொறுப்பாளர் ஆனார் என்று கூறுவது. இதில் நான் கீழே வந்துவிட்டேன் என்ற இதை நினைக்காதீர்கள். அப்படி வேண்டாம். தவறு செய்தேன் அதனால் நான் பரிவர்த்தனை செய்துக் கொண்டிருக்கிறேன், சேவைக்காக ஸ்தூலமாகவும் கொஞ்சம் உழைக்க வேண்டியது இருக்கிறது தான் இல்லையா? எனவே உயர்ந்தவராக, மகான் ஆத்மா ஆவதற்காக கொஞ்சம் கொஞ்சம் பரிவர்த்தனையும் (மாற்றம்) செய்தீர்கள் என்றால் கூட பாதகம் என்ன! இதில் அர்ச்சுனன் ஆகுங்கள், இதன் மூலம் சூழ்நிலை உருவாகும். ஒருவர் மூலம் இன்னொருவர், இன்னொருவர் மூலம் மூன்றாமவர். ஒருவேளை ஏதோ தவறு இருக்கிறது, மேலும் ஒப்புக் கொண்டீர்கள் என்றால் இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் தவறு இல்லை மற்றவர்களுக்காக செய்ய வேண்டியதாக இருக்கிறது என்ற இது தான் மகான் நிலை. இதில் ஒருவேளை இவர் இதைச் செய்தார் அதாவது கீழே இறங்கிவிட்டார் என்று யாருக்காவது புரிய வைக்கிறார் என்றால் கூட மற்றவர்கள் புரிந்து கொள்வதினால் ஒன்றும் ஆவதில்லை. தந்தையின் பட்டியலிலோ வரிசை எண் முன்னுக்கு இருக்கிறது இல்லையா? இதை அழுத்தி வைப்பது என்று கூறுவதில்லை. பிராமணர்களிடம் எதுவரை அழுத்துவார்கள், எதுவரை செத்துக் கொண்டிருப்போம், எதுவரை சகித்துக் கொள்வோம் என்ற மொழியும் இருக்கிறது தான் இல்லையா? ஒருவேளை இங்கே அழுத்துகிறார்கள் என்றால் கூட அனேகர்கள் உங்களுடைய கால்களை அழுத்திவிடுவார்கள். இது அழுத்தப்படுவது அல்ல. ஆனால் அனேகர்களுக்காக பூஜைக்குரியவர் ஆவது, மகான் ஆவது. நல்லது.



    இந்த வருடம் ஏதாவது புது திட்டத்தை உருவாக்குங்கள். எப்படி பற்றுதலை வென்ற குடும்பத்தின் கதை கூறுகிறீர்கள். அதில் எந்த உறவினரிடம் சென்றாரோ அவர்களுக்கு ஞானம் சொன்னார் என்று கூறுகிறீர்கள். அப்படி இங்கேயும் குழந்தைகள் உங்களை யாராவது சந்திக்க வருகிறார்கள் என்றால் கூட அவர்களுக்கு நான் ஏதோ பரிஷ்தாவை சந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்ற அனுபவம் ஏற்பட வேண்டும். வந்தவுடனேயே அவர் மேல் மந்திரம் போடப்பட்டு விட வேண்டும். எங்கே சென்றாலும், யாரைச் சந்தித்தாலும் அவருக்கு மந்திர சக்தியின் அனுபவம் தான் ஆக வேண்டும். எப்படி தொடக்க காலத்தில் தந்தையைப் பார்த்தார், முரளி கேட்டார், பரிவாரத்தை பார்த்தார், மகிழ்ச்சி அடைந்துச் சென்றார் என்றால் அதேபோல் இப்பொழுதும் ஏதோ யோசித்து கொண்டு வந்தவர் பல மடங்கு அனுபவம் செய்து திரும்பிச் செல்ல வேண்டும். அந்த மாதிரி இப்பொழுது திட்டத்தை உருவாக்குங்கள். திட எண்ணம் மூலம் அனைத்தும் நடக்க முடியும். ஒருவேளை ஒருவர் அந்த மாதிரி அனுபவம் செய்விக்கிறார் என்றால் அனைவரும் அவரைப் பின்பற்றி செய்வார்கள்.



    வரதானம்:

    திருப்தியின் விசேஷம் மற்றும் உயர்ந்த தன்மை மூலமாக அனைவரின் இஷ்டமானவராக ஆகக்கூடிய வரமளிப்பவர் ஆகுக!



    யார் எப்பொழுதும் தன் மேலும் மற்றவர்கள் மேலும் திருப்தியாக இருக்கிறாரோ அவர் தான் அனேகர்களின் இஷ்ட மற்றும் அஷ்ட தேவதை ஆக முடியும். அனைத்தையும் விட மிகப்பெரிய குணம் என்று கூறினாலும், தானம் என்று கூறினாலும் அல்லது விசேஷம் மற்றும் உயர்ந்த நிலை என்று கூறினாலும் அது திருப்தி தான். திருப்தியான ஆத்மா தான் பிரபுவிற்குப் பிரியமானவர், மக்களுக்குப் பிரியமானவர் மேலும் தனக்கும் பிரியமானவராக இருப்பார். அந்த மாதிரி திருப்தியான ஆத்மா தான் வரமளிக்கும் ரூபத்தில் பிரசித்தி ஆவார். இப்பொழுது இறுதி நேரத்தில் மகாதானி ரூபத்தையும் விட அதிகமாக வரதானி ரூபம் மூலமாக சேவை நடக்கும்.



    சுலோகன்:

    யாருடைய நெற்றியில் எப்பொழுதும் வெற்றித் திலகம் மின்னிக் கொண்டிருக்கிறதோ அவர் தான் வெற்றி இரத்தினம் ஆவார்.


    ***OM SHANTI***