BK Murli 4 April 2016 In Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 4 April 2016 In Tamil

    04.04.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! இப்போது இந்த கலியுகம் முடியப் போகிறது. ஆகவே, நீங்கள் இதை உதைத்து தள்ளிவிட வேண்டும். தங்களின் முகம் சொர்க்கத்தின் பக்கம் இருக்க வேண்டும்.



    கேள்வி:

    பாபா தன்னுடைய குழந்தைகளை புண்ணிய ஆத்மாவாகுவதற்கு என்ன விதிமுறையைக் கூறுகிறார்?



    பதில்:

    குழந்தைகளே! புண்ணிய ஆத்மாவாக வேண்டும் என்றால் தவறு செய்யாதவர்கள் ஆகுங்கள். இராவணன் உங்களை நிறைய தவறு செய்ய வைத்துவிட்டான். தவறுகள் செய்து செய்து நீங்கள் பாவ ஆத்மா ஆகிவிட்டீர்கள். கோபம் மற்றும் காமத்தின் தவறுகளை இராவணன் செய்விக்கிறான். உங்களை இந்த விகாரங்களின் மீது வெற்றி அடையச் செய்வதற்காக பாபா வந்திருக்கிறார். இப்போது நீங்கள் தவறு செய்யாதவர்களாகி, நிர்விகாரி ஆகுங்கள்.



    பாடல்:

    ஆகாய சிம்மாசனத்தை விட்டு.....



    ஓம் சாந்தி.

    யார் இவ்வாறு பாபாவை அழைத்தது? குழந்தைகள் பாபாவை அழைத்தனர். இப்போது இந்த மகா தத்துவமே (ஆத்ம உலகம்) சிம்மாசனம். அங்கே ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மா வசிக்கிறார்கள். தந்தை, மற்றும் குழந்தைகள் இருவருமே சாந்திதாமவாசிகள். தந்தையை அழைக்கிறார்கள். பகவான் தான் பாபா என்று கூறப்படுகிறார். 108-ன் மாலை உருவாகிக் கொண்டிருக்கிறது என பாபா கூறுகிறார். இது யாருடைய மாலை? என பூஜிக்கக் கூடியவர்களுக்குத் தெரியவில்லை. மேலே சிவபாபா நிராகாரர் இருக்கிறார். அவருக்கு சரீரம் இல்லை. அவரைத் தான் அழைக்கிறார்கள். ஓ, பதீத பாவனா, ஓ, காட் பாதர், ஞானக் கடல், சாந்தியின் கடல்..... இவ்வாறு குழந்தைகள் தந்தையை மகிமை செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் தந்தையை அறியவில்லை. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. சுகம் மற்றும் துக்கத்தின் விளையாட்டாகும். சாந்திதாமத்தில் இருந்து இங்கே நடிப்பதற்காக வருகிறார்கள். உண்மையில் ஆத்மா சாந்திதாம வாசியாகும். பிறகு நடிப்பதற்காக கர்மத்தில வர வேண்டியிருக்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்த அனைவருக்கும் சத்கதியைக் கொடுக்கக் கூடிய வள்ளல் மற்றும் பாரத வாசிகளை உலகத்திற்கு அதிபதியாக மாற்றக் கூடிய தந்தையாவார். இலஷ்மி நாராயணன் முழு உலகத்திற்கும் அதிபதியாக இருந்தார் அல்லவா? அவர்களுடைய கோவில்களைக் கட்டி பூஜை செய்கிறார்கள். இங்கே அங்கே என கோவில்கள் அனேகம் உள்ளன. இந்த இலஷ்மி நாராயணன் இந்த இராஜ்யத்தை எப்படி அடைந்தனர் என்பது அவர்களுக்குத் தெரியாது. சத்யுகத்தின் ஆரம்பத்தில் உலகத்திற்கே அதிபதியாக இருந்தனர். வேறு எந்த தர்மமும் (மதமும்) இல்லை. அதற்கு ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் என்று கூறப்படுகிறது. இதை பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். ரூபத்தை மாற்றிக் கொண்டு வாருங்கள் என கூறுகின்றார்கள். மற்ற ஆத்மாக்கள் நடிப்பதற்காக வரக்கூடியவர்கள். தாயின் கர்ப்பத்தில் பிரவேசம் ஆகின்றனர். எல்லோருக்கும் அவரவருக்கென்று நடிப்பதற்கென பாகம் கிடைத்திருக்கிறது. பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்குக் கூட தனக்கென்று சூட்சும உடல் இருக்கின்றது. அவர்களை பகவான் என்று கூற முடியாது. பிரம்ம தேவதாய நமஹ, விஷ்ணு தேவதாய நமஹ, சிவ பரமாத்மாய நமஹ என்று கூறப்படுகிறது. சிவா நிராகாரர் தனி, சங்கர் சூட்சும உடலில் இருப்பவர் தனி என பாரதவாசிகளுக்குத் தெரியவில்லை. அந்த சங்கரர் தேவதை. அவர் சிவபரமாத்மா என்று கூறப்படுகிறார். சிவன் மற்றும் சங்கர் இருவரும் ஒன்றாக இருக்க முடியாது. இவ்வளவும் புத்தியில் இல்லை. அவர் உயர்ந்ததிலும் உயர்ந்த நம்முடைய தந்தையாவார். பிரம்மா, விஷ்ணு, சங்கர் சூட்சும வதனத்தின் படைப்புகள்! படைக்கக் கூடியவர் தந்தைதான் அனைவருக்கும் மிகவும் அன்பான தந்தையாவார். நீங்கள் தாய் தந்தை. நான் உங்களுடைய குழந்தை. இவ்வாறு கூட அவருடைய மகிமையைப் பாடுகிறார்கள், பாபா வாருங்கள் என அழைக்கிறார்கள். ஏனென்றால் மாயாவின் நிழல் விழுந்திருக்கிறது. இராவண இராஜ்யம் அல்லவா? நிராகாரர் தந்தை இப்போது ரூபத்தை மாற்றிக் கொண்டு உடலில் வந்திருக்கிறார் என குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிகிறீர்கள். தந்தை நிராகார நிலையில் இருந்து சாகாரத்திற்கு வராத வரை இராஜயோக ஞானத்தை எப்படி கற்பிக்க முடியும்? ஆகவே தான் நான் சாதாரண உடலில் தற்காலிகமாக வருகிறேன் என பாபா கூறுகின்றார். பிராமணர்களுக்கு உணவளிக்கிறார்கள் அல்லவா? என்னுடைய மனைவியின் திதி அல்லது தந்தையின் திதி என்கிறார்கள். அதாவது அவர்களுடைய ஆத்மாவை அழைக்கிறார்கள். அவர்களுக்காக அனைத்தையும் தயாராக வைக்கிறார்கள். இப்போது சரீரம் அழிந்துவிட்டது. அவர்கள் வர முடியாது. மற்ற படி அவருடைய ஆத்மாவை அழைக்கலாம். ஆத்மாவை அழைக்கிறார்கள். பிறகு அவர்களிடம் நீங்கள் சுகமாக இருக்கிறீர்களா? எங்கே இருக்கிறீர்கள் என கேட்கிறார்கள்? முன்பு இந்த பழக்கம் நிறைய இருந்தது. நடப்பதோ அனைத்தும் நாடகப்படி ஆகும். இப்போதோ தமோபிரதானமாகிவிட்ட காரணத்தால் அவ்வளவு நடப்பதில்லை. அந்த ஆத்மா பிராமணனின் உடலில் வர முடியும் என்றால் நான் ஏன் வர முடியாது. நானும் வருகிறேன் என பாபா புரிய வைக்கிறார். யதா யதாஹி...... பாரத வாசிகள் தங்களின் தர்மம் மற்றும் கர்மத்தை மறந்து தர்மத்தை அழிப்பவர்களாகிவிட்டனர். அப்போது மீண்டும் நான் வருகிறேன். தேவி தேவதைகள் சர்வகுண சம்பன்னர்களாக (அனைத்து குணங்களும் நிரம்பிய), 16 கலைகள் சம்பூரணமாக, சம்பூரண நிர்விகாரியாக இருந்தனர். இப்போது உங்களுக்கு யோக பலம் கற்பிக்கப்படுகிறது. அதன் மூலமாக நீங்கள் உலகத்திற்கு அதிபதியாகிறீர்கள். அதுபோல அங்கே யோக பலத்தால் குழந்தைகள் பிறக்கிறார்கள். இங்கே வந்திருப்பதே நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காகவும். இராஜயோகம் கற்றுக் கொள்வதற்காகவும் ஆகும். இந்த வம்சம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. சூரிய வம்சம் இருந்தது. பிறகு மறுபிறவி எடுத்துக் கொண்டே சந்திர வம்சத்தில் வந்தனர். வளர்ச்சி அடைந்துக் கொண்டே போனது. எனவே உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தந்தை பரமாத்மா. எப்படி ஆத்மா புள்ளியாக இருக்கிறதோ அதுபோன்று நானும் புள்ளியாக இருக்கிறேன் என பரமாத்மா கூறுகிறார். நான் வந்து சாதாரண உடலில் பிரவேசம் ஆகிறேன். உங்களை மீண்டும் தேவதையாக மாற்றுகிறேன். உண்மையில் நீங்கள் சூரிய வம்சத்தினராக இருந்தீர்கள். பிறகு சந்திர வம்சத்தினர். பிறகு வைசிய, சூத்திர வம்சத்தில் வந்தீர்கள். 84 பிறவிகளின் கதையை யாரும் அறியவில்லை. 84 லட்சம் பிறவிகள் கிடையாது. அப்படி இருந்தால் சக்கரத்தின் ஆயுள் மிகவும் நீண்டதாக இருக்கும். சத்யுகம் லட்சகணக்கான வருடங்கள் என்று சிலர் கூறுகிறார்கள். அது அனைத்தும் பொய்யான ஞானம் என்று பாபா கூறுகிறார். சாஸ்திரங்களின் அனைத்தும் பக்தியினுடய ஞானம் ஆகும். அதன் மூலமாக இறங்கும் கலைதான் ஏற்படுகிறது. ஞானக் கடல் ஒரேயொரு தந்தை தான். ஸ்ரீகிருஷ்ணரின் மகிமை தனியாகும். சர்வகுண சம்பன்னர், 16 கலை சம்பூரண..... அகிம்சா பரமோ தேவி தேவதா தர்மம். பெரியதிலும் பெரிய இம்சை காமவிகாரத்தில் ஈடுபடுதல் ஆகும். அது அங்கே இருக்காது. இந்த காமத்தை வெற்றி அடைந்தால் நீங்கள் தூய்மையாகி தூய்மையான உலகத்திற்கு அதிபதியாகி விடலாம் என பாபா கூறுகின்றார். அரை கல்பமாக நீங்கள் மிகவும் அபவித்ரமான பாவ ஆத்மா ஆகிறீர்கள். 21 பிறவிகள் சத்யுகம் திரேதாவில் மிகவும் சுகமுடையவராக இருந்தீர்கள். இப்போது கலியுக கடைசியில் நீங்கள் மிகவும் அழுக்காக மாறிவிட்டீர்கள். நான் சங்கமத்தில் தான் வருகிறேன். அப்போது தான் அழுக்கான உலகத்திலிருந்து தூய்மையான உலகமாக மாறுகிறது. இந்த கலியுகம் துக்க உலகம், கருமையான இருள் ஆகும். சத்யுகம் என்பது பகல் ஆகும். இந்த இலஷ்மி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. அவர்கள் எப்படி மாறுகிறார்கள். இதை பாபா புரிய வைக்கிறார். கீதை என்பதே ஒரு சிவபாபாவினுடைய ஸ்ரீமத் ஆகும். ஸ்ரீகிருஷ்ணரையோ அல்லது இலஷ்மி நாராயணரையோ ஞானக் கடல் என்று கூற மாட்டார்கள். இப்போது உங்களுக்கு ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் நீங்கள் மனிதனிலிருந்து தேவதையாகிறீர்கள். ஞானத்தினால் தான் நீங்கள் சொர்க்கத்திற்கு அதிபதியாகிறீர்கள். மற்ற அனைத்தும் பக்தி மார்க்கத்தின் கதைகள் ஆகும். பாரதம் உண்மையான கண்டமாக இருந்தது. பிறகு துவாபர யுகத்திலிந்து பொய்யான கண்டமாகி இருக்கிறது. முதன் முதலில் மிகவும் அன்பானவர் ஒரு சிவபாபா தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அனைத்து ஆத்மாக்களின் தந்தை. பிறகு ஒவ்வொருவருக்கும் லௌகீக தந்தை தனித்தனியாக இருக்கிறார். அவரிடமிருந்து எல்லைக்குட்பட்ட சொத்து கிடைக்கிறது. அவர் எல்லைக்குட்பட்ட பிரம்மா, எல்லைக்குட்பட்ட படைப்பவர். இவர் எல்லைக்கப்பாற்பட்ட படைப்பவர். எல்லையற்ற சொத்தைக் கொடுக்கக் கூடியவர் பாரதத்தில் தான் வருகிறார். சிவபாபா வந்திருக்கிறார் என்றால் நிச்சயம் பரிசு கொண்டு வந்திருப்பார். உள்ளங்கையில் சொர்க்கம், சொர்க்கத்தின் இராஜ்ய பதவியை எடுத்து வருகிறார். குழந்தைகளுக்குக் கூட பாபாவின் சொத்து கிடைக்கிறது அல்லவா? நம்முடைய சிவபாபா என்று இப்போது நீங்கள் கூறுகிறீர்கள். சிவபாபாவிடமிருந்து சொர்க்கத்தின் சொத்து கிடைக்கிறது. அவர் சாதாரண உடலில் வந்து இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். தேவதைகள் அழுக்கான உலகத்தில் கால்களை வைக்க முடியாது. அப்படி என்றால் கிருஷ்ணர் எப்படி வருவார்? இந்த ஒரு மிகப்பெரிய தவறால் பாரதம் எவ்வளவு ஏழையாகிவிட்டது. இப்போது பாபா வந்து குழந்தைகளாகிய உங்களை தவறற்றவராக மாற்றுகிறார். பிறகு அரை கல்பத்திற்கு எந்த தவறும் நடக்கக் கூடாது. தவறற்றவர்களாக மாறிவிடுவதால் நீங்கள் புண்ணிய ஆத்மா ஆகிறீர்கள். இராவண இராஜ்யத்திலிருந்து நீங்கள் தவறு செய்து செய்து பாவ ஆத்மா ஆகியிருக்கிறீர்கள். காம விகாரத்தில் ஈடுபடுதல், கோபப்படுதல் இந்த தவறுகளை இராவணன் செய்விக்கிறான். சத்யுகத்தில் 5 விகாரங்கள் இல்லை. அங்கே சம்பூரண நிர்விகாரியாக இருக்கிறார்கள். அசுரர்களுக்கும் தேவதைகளுக்கும் இடையே போர் நடந்தது என மனிதர்கள் கூறுகிறார்கள். இப்போது தேவதைகளோ சத்யுகத்தைச் சார்ந்தவர்கள், அசுரர்கள் கலியுகத்தை சார்ந்தவர்கள். இருவருக்கும் இடையில் எப்படி சண்டை நடக்கும். மனிதர்கள் கிருஷ்ணபுரிக்குச் செல்வதற்காக கிருஷ்ணரை நினைக்கிறார்கள். அது சத்யுகம் ஆகும். இது அசுர இராவண புரியாகும். பிறகு மூலவதனம் ஈஸ்வரிய புரி ஆகும். அங்கே ஆத்மாக்கள் வசிக்கின்றன. சிவபாபாவும் இருக்கின்றார். ஆத்மாக்களும் கூட இருக்கிறார்கள். பிறகு ஆத்மாக்கள் இங்கே நடிப்பதற்காக வருகிறார்கள். பாபாவும் வேற்று தேசத்தில் வேற்று உடலில் வர வேண்டியிருக்கிறது. இது இராவணனின் அழுக்கான தேசம் அல்லவா? ஓ, பதீத பாவனா வருங்கள் என அனைவரும் அழைக்கிறார்கள். சத்யுகத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. அவர்களை பகவான் பகவதி என்கிறார்கள்.



    கிருஷ்ணரை ஷியாம் சுந்தர் என்கிறார்கள். இதற்கும் பொருள் இருக்கும் அல்லவா, சத்யுகம், திரேதா, துவாபர் கலியுகத்தில் ஏணிப்படியில் இறங்குகிறீர்கள். காமச்சிதையில் அமர்வதால் அழகான வெண்மையிலிருந்து கருப்பாகி விட்டீர்கள். இப்போது மீண்டும் ஞானச் சிதையில் அமர்ந்து அழகாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள். கிருஷ்ணரின் சித்திரத்தில் கூட நரகம் மற்றும் சொர்க்கம் காண்பிக்கப்பட்டுள்ளது. இப்போது இது கலியுகம். இதை காலால் உதைத்துத் தள்ளிவிடுங்கள். முகத்தை சத்யுகத்தை நோக்கி வையுங்கள் என்று பாபா கூறுகிறார். மன்மனாபவ. இப்போது தந்தையாகிய என்னை நீங்கள் மற்ற சங்கத்திலிருந்து புத்தியின் நினைவை துண்டித்து என்னுடன் வையுங்கள். இல்லறத்தில் வேண்டுமானாலும் இருங்கள். நீங்கள் கர்மயோகி அல்லவா? சிவபாபாவை மட்டும் நினைக்க வேண்டும். வேறு யாரையும் நினைக்கக் கூடாது. இந்த பழைய உலகம் பழைய உடல் அனைத்தும் அழிந்துப் போகக் கூடியது. ஆகவே தேகம் உட்பட தேகத்தின் அனைத்து உறவுகளையும் விட்டு விட்டு என்னை நினையுங்கள் என பாபா கூறுகிறார். தன்னை ஆத்மா என உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். இதை ஆத்மாக்களின் தந்தைப் புரிய வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்படி 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். மனிதர்கள் மனிதர்களாகத்தான் மாறுகிறார்கள். யாரும் கழுதை போன்று மாறுவது கிடையாது. கருட புராணத்தில் சுவாரசியமான விஷயங்களை எழுதி உள்ளனர். இச்சமயம் இருப்பது விகாரங்களின் நதியாகும். பாரதம் சத்யுகத்தில் பாற்கடலாக இருந்தது. இப்போது விஷக்கடலாக இருக்கிறது. இந்த பாரதம் சிவாலயம் என்றும் கூறப்படுகிறது. அங்கே அனைவரும் தூய்மையான தேவதைகளாக இருந்தனர். இப்போதோ தேவதா தர்மம் இல்லை. ஆகவே, தங்களை ஹிந்து என்று கூறிக் கொள்கிறார்கள். கிறிஸ்தவர் என்றால் கிறிஸ்தவர்கள் தான் அல்லவா? அவர்கள் ஐரோப்பாவில் இருப்பதால் ஐரோப்பிய தர்மம் என்று கூற முடியாது. இந்துக்களோ இந்துஸ்தானில் இருக்கும் காரணத்தால் கூறுகின்றனர். அவ்வாறு இந்து தர்மம் என்று கூற முடியாது. முதலில் பாரதம் கண்டம் என்ற பெயர் தான் இருந்தது. பரம்பிதா பரமாத்மா தேவி தேவதா தர்மத்தைப் படைத்தார். பரம்பிதா பரமாத்மா வந்து பிராமணன், தேவதா, சத்திரிய தர்மத்தை படைக்கிறார். இப்போது நீங்கள் பிராமண தர்மத்திலிருந்து மாறி சூரிய வம்சத்தினராக, சந்திர வம்சத்தினராக மாறுவீர்கள். சிவபாபா வந்து சூத்திரனிலிருந்து பிராமணனாக மாற்றுகிறார். பிறகு படிப்பினால் நீங்கள் சூரிய வம்சத்தினர், சந்திர வம்சத்தினர் ஆகிறீர்கள். எல்லையற்ற தந்தை 21 பிறவிகளுக்கு ஆஸ்தியை வழங்குகிறார். எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்குட்பட்ட சொத்து கிடைக்கிறது. பாரதம் சுக தாமமாக இருந்தது அல்லவா? இராம இராஜ்யத்தின் மகிமை பாடுகிறார்கள். அங்கே அதர்மத்தின் விஷயம் எங்கிருந்து வந்தது. அதற்குத் தான் கட்டு கதைகள், ஸ்டோரி என்று கூறப்படுகிறது. அதை படிப்பதால் கீழே தான் இறங்கி வந்தீர்கள். ஆகவே தான் பாபாவிடம் தாங்கள் வந்து அனைவருக்கும் சத்கதி வழங்குங்கள் என்று கூறப்படுகிறது. அனைத்து தர்மங்களைச் சார்ந்தவர்களும் ஓ, இறை தந்தையே! என்கிறார்கள். அவர் சங்கமத்தில் தான் வருகின்றார். அந்த கும்பமேளா தண்ணீருடையதாகும். அனைவரும் சென்று அழுக்கான உடலை கழுவுகிறார்கள். லட்சக்கணக்கானோர் செல்கிறார்கள். கங்கை பதீத பாவனி என்கிறார்கள். இப்போது பதீத பாவனர் ஒரு தந்தை தான் அல்லவா? கங்கை எப்படி ஆக முடியும். நான் சங்கமத்தில் தான் வருகிறேன் என பாபா கூறுகிறார். இந்த மரண உலகத்தில் இப்போது உங்களுடையது கடைசி பிறவியாகும் என்று குழந்தைகளுக்குக் கூறுகின்றேன். இப்போது அமர உலகத்திற்குப் போக வேண்டும் என்றால் தூய்மையாகுங்கள். தந்தை தான் வந்து நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான உண்மையான அமர கதையைக் கூறுகின்றார் அல்லது மூன்றாவது கண் கொடுத்த கதையைக் கூறுகின்றார். ஆத்மாவிற்கு மூன்றாவது கண் கிடைக்கிறது. தேவதைகளுக்கு மூன்றாவது கண் காட்டுகிறார்கள் அல்லவா? ஆனால் தேவதைகளுக்கு ஞானம் இல்லை. அவர்கள் பிராப்தி அதாவது சத்கதியை அடைந்துவிட்டனர். அங்கே ஞானத்தின் அவசியம் இல்லை. அங்கே குருவும் இல்லை. இப்போது அழிவு எதிரிலேயே உள்ளது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். ஹோலி அன்று வேஷம் போடுகிறார்கள் அல்லவா? வயிற்றிலிருந்து (புராணக் கதையில் கூறப்பட்டுள்ளது போன்று) உலக்கை வரவில்லை. இந்த புத்தியினால் அணுகுண்டுகளைத் தயாரிக்கிறார்கள். இதன் மூலமாக தங்களையே அழித்துக் கொள்கிறார்கள். கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் சண்டை நடைபெறவில்லை. நீங்கள் தான் உண்மையான வைஷ்ணவர்கள். இளைஞர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் தான் போர் நடக்கிறது. இதன் மூலம் இரத்த நதிகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. பாண்டவர்கள் இம்சை கொடுக்கக் கூடிய போரை செய்வதில்லை. இப்போதோ இயற்கையின் சீற்றங்கள் நிறைய நடக்க உள்ளன. நல்லது!



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்!



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. மிகவும் அன்பானவர் ஒரு சிவ தந்தை. அவரை அன்போடு நினைக்க வேண்டும். உண்மையிலும் உண்மையான வைஷ்ணவர் ஆக வேண்டும். எந்த ஒரு தவறும் செய்யக் கூடாது.



    2. இந்த மரண உலகத்தில் இது கடைசி பிறவியாகும். வினாசம் எதிரிலேயே உள்ளது. ஆகவே தந்தையிடமிருந்து முழு சொத்தும் அடைய வேண்டும். தூய்மையாக வேண்டும்.



    வரதானம்:

    தனக்காக பாப்தாதாவை அர்ப்பணம் செய்யக் கூடிய தியாக மூர்த்தி நிச்சய புத்தி உடையவர் ஆகுக!



    தந்தை கிடைத்துவிட்டார் என்றால் அனைத்தும் கிடைத்துவிட்டது என்ற பெருமிதம் அல்லது போதையில் அனைத்தையும் தியாகம் செய்யக் கூடிய ஞான சொரூபம், நிச்சய புத்தி உடைய குழந்தைகள் பாபா மூலமாக குஷி, அமைதி, சக்தி மற்றும் சுகத்தின் அனுபவத்தை செய்கின்ற போது உலக (குல) பழக்கவழக்கங்களைப் பற்றி பொருட்படுத்தாமல் எப்போதும் முன்னேறிக் கொண்டே செல்வார்கள். அவர்களுக்கு இந்த உலகத்தின் அனைத்தும் துச்சமாகவும், சாரமற்றதாகவும் அனுபவம் ஆகிறது. இப்படி தியாக மூர்த்தி, நிச்சய புத்தி உடைய குழந்தைகளிடம் பாப்தாதா தனது அனைத்து செல்வங்கள் உட்பட, அர்ப்பணம் ஆகிவிடுகிறார். குழந்தைகள் பாபா நாங்கள் உங்களுடையவர் என்று சங்கல்பம் செய்ததும், பாபாவும் தந்தையினுடையது அனைத்தும் உங்களுடையது என கூறுகிறார்.



    சுலோகன்:

    யார் தங்களுடைய ஒவ்வொரு எண்ணம் மற்றும் கர்மத்தினால் பாபாவினுடைய அன்பின் அதிர்வுகளைப் பரப்புகிறார்களோ அவர்களே சகஜயோகி ஆவர்.



    ***OM SHANTI***