BK Murli 19 June 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 19 June 2016 Tamil

    19.06.2016  காலை முரளி   ஓம் சாந்தி  ''அவ்யக்த பாப்தாதா''  ரிவைஸ் 09.10.1981  மதுபன்


     “உள்நோக்குப் பார்வை உடையவர் தான் எப்பொழுதும் பந்தனமற்றவராகவும், யோக சொரூபமானவராகவும் இருப்பார் ''

    இன்று பாப்தாதா தன்னுடைய நிரந்தர சகயோகி, நிரந்தர சக்தி சொரூப, எப்பொழுதும் விடுபட்டிருக்கும் மற்றும் யோக சொரூபமான விசேஷமான குழந்தைகளை அமிர்தவேளையிலிருந்து விசேஷ ரூபத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தைகளின் இரண்டு விஷயங்களை விசேஷமாகப் பார்த்தார். ஒரு விஷயம் - விடுபட்டவராக (முக்த்) எந்த அளவு ஆகியிருக்கிறார். இரண்டாவது விஷயம் – ஜீவன்முக்த்தாக எந்த அளவு ஆகியிருக்கிறார்? ஜீவன்முக்த் என்றால் யோக சொரூபமானவர் ! பாப்தாதாவிடமும் குழந்தைகளின் மனதின் எண்ணங்களின் கோடுகள் ஒவ்வொரு விநாடியும் மிகத் தெளிவாகத் தென்படுகின்றன. கோடுகளைப் பார்த்து புன்முறுவலிட்டுக் கொண்டே பாப்தாதா விசேஷமாக ஒரு விஷயத்தின் சித்திரத்தை பார்த்தார். அந்த சித்திரத்தில் இரண்டு விதமான லட்சணங்களைப் பார்த்தார்.



    ஒன்று 'எப்பொழுதும் உள்நோக்குப் பார்வை உடையவர்'. அதன் காரணமாக சுயம் அவரும் எப்பொழுதும் சுகக்கடலில் மூழ்கிக் கொண்டே மற்ற ஆத்மாக்களுக்கும் சுகத்தின் எண்ணம் மற்றும் வைப்ரேஷன் (எண்ண அலைகள்) மூலமாக, உள்உணர்வு மற்றும் வார்த்தை மூலமாக, சம்மந்தம் மற்றும் தொடர்பு மூலமாக எப்பொழுதும் சுகத்தின் அனுபவத்தை செய்விக்கிறார்.



    இரண்டாவது - 'வெளிமுகமாக இருப்பவர்'. அவர்கள் எப்பொழுதும் வெளிமுகமாக இருக்கும் காரணத்தினால், வெளிமுகம் என்றால் உடல் உணர்வு, நபர்களின் எண்ணம், சுபாவம் மற்றும் தேக உணர்வின் வைப்ரேஷன், எண்ணம், வார்த்தைகள் மற்றும் சம்மந்தம், தொடர்பு மூலமாக ஒவ்வொருவரையும் வீணானதின் பக்கம் திசை திருப்பக்கூடிய, எப்பொழுதும் அற்ப காலத்தின் லட்டு சாப்பிட்டு பிறரையும் இதையே சாப்பிடக் கொடுக்கக்கூடிய, எப்பொழுதும் ஏதேனும் வித விதமானசிந்தனையில் இருக்கக்கூடிய உள்மனதின் சுகம், சாந்தி மற்றும் சக்தியிலிருந்து எப்பொழுதும் விலகியிருக்கக்கூடிய, அவ்வப்போது சிறிதளவு மட்டுமே குஷியின் அனுபவம் செய்யக்கூடிய அந்த மாதிரி வெளிமுகமானவர்களையும் பார்த்தோம்.



    தீபாவளி வந்து கொண்டிருக்கிறது தான் இல்லையா? வியாபாரிகளோ தங்களது அவ்வப்போது கணக்கைப் பார்ப்பார்கள். பழைய கணக்கையும், புதிய கணக்கையும் பார்ப்பார்கள். தந்தை என்ன பார்ப்பார்? தந்தையும் ஒவ்வொரு குழந்தையின் பழைய கணக்குகள் எதுவரை முடிவடைந்து இருக்கிறது, புது கணக்கில் என்னென்ன சேமித்திருக்கிறார்கள் என்ற இந்தக் கணக்கைத் தான் பார்க்கிறார். அப்படி இன்று இந்த வேறுபாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஏனென்றால் பிரம்மா பாபா இந்த நேரம் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நேற்று கூட கூறியிருந்தோம் (திறப்பு விழாவிற்காக). திறப்பு விழாவிற்காக என்ன தயார் செய்து கொண்டிருக்கிறீர்கள்? யார் மூலமாவது திறப்பு விழாவை செய்விக்கிறீர்கள் என்றால், என்ன செய்வீர்கள்? எந்தப் பொருட்களை வைப்பீர்கள். திறப்பு விழாவிற்காக எந்த ரிப்பனை அல்லது மலர் மாலையை கட்டுகிறீர்களோ முதலில் அதை கத்திரிக்கோலால் வெட்டுவீர்கள், இவ்வாறு திறப்பு விழா நடக்கிறது. மேலும் அந்த கத்திரிக் கோலைக் கூட எங்கே வைக்கிறீர்கள்? மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டில் வைக்கிறீர்கள். இதன் மூலம் என்ன நிரூபணம் ஆகிறது? பந்தனத்திலிருந்து விடுபடுவதற்கு முன்பு தன்னை குணங்களின் மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்பு இயல்பாகவே பந்தனமற்றவராக ஆகிவிடுவீர்கள். ஆக திறப்பு விழாவிற்கான ஏற்பாட்டை எப்படி செய்ய வேண்டும்? ஒரு பக்கம் தன்னை சம்பன்னம் (முழுமை) ஆக்க வேண்டும், ஆனால் சம்பன்னம் ஆவதற்கு முன்பு வெளிமுகமான பந்தனங்களிலிருந்து விடுபட வேண்டும். அந்த மாதிரி தயாராகியிருக்கிறீர்களா? வெளிமுகமாக இருப்பதின் ருசி வெளியிலிருந்து மிக நன்றாக கவர்ந்திழுக்கும். எனவே அதற்கு கத்திரி போடுங்கள். இந்த ருசி தான் சூட்சும பந்தனம் ஆகி வெற்றியின் லட்சியத்திலிருந்து தூரமாக்கி விடுகிறது. புகழ், பெருமை கிடைத்துவிடுகிறது. ஆனால் ‘பிரத்யக்ஷம்’ மற்றும் ‘வெற்றி’ கிடைக்க முடியாது. எனவே இப்பொழுது திறப்பு விழாவிற்கான தயார் செய்யுங்கள். திறப்பு விழாவிற்கு தயார் செய்பவர்கள் எப்பொழுதும் மலர்களின் தோட்டத்தில் பாப்தாதா மூலமாக நடப்பட்ட பூச்செடிகள், மலர்களின் சிறப்புக்களின் நறுமணத்தை எடுப்பதில், மேலும் அந்த நறுமணத்தை நுகர்வதில் எப்பொழுதும் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். அதாவது அவருடைய ‘ வாழ்க்கை’ என்ற தட்டில் எப்பொழுதும் மலரே மலர் தான் நிரம்பி இருக்கும். அந்த மாதிரி தயாராகியிருக்கிறீர்களா? இதில் நம்பர் ஒன் ஆக யார் செல்வீர்கள்? மதுபனைச் சேர்ந்தவர்களா அல்லது டெல்லியைச் சேர்ந்தவர்களா? உயர்ந்த பதவி கிடைக்கும். பாப்தாதாவுடன் சேர்ந்து திறப்பு விழா செய்பவர்கள், இதை விட பெரிய பாக்கியம் வேறு ஏதாவது இருக்கிறதா? சமமாக (பாபாவிற்கு) இருக்கும் ஆத்மாக்கள் தான் உடன் சேர்ந்து திறப்பு விழா செய்வார்கள். திறப்பு விழா செய்வது என்றால், நிரந்தரமாக சூட்சும வதனவாசி ஆவது அல்லது மூலவதனவாசி ஆவது என்று அப்படி நினைக்கவில்லையே? பிரம்மா பாபாவுடன் மூலவதன நிவாசியாக அனைவரும் ஆவார்களா அல்லது குறைந்தவர்கள் தான் ஆவார்களா? என்ன நினைக்கிறீர்கள்? அனைவரும் சேவை ஸ்தானத்தை (சென்டர்) விட்டு விட்டு உடன் செல்வீர்களா? உடன் செல்வீர்களா அல்லது நின்று விடுவீர்களா? (உடன் செல்வோம்). நல்லது. பிரம்மா பாபா சூட்சும வனத்திற்குச் சென்று விட்டார். பிறகு நீங்கள் இங்கேயே ஏன் அமர்ந்து விட்டீர்கள்? அப்படியானால் என்ன செய்வீர்கள்? (தாதியுடன்) (உடன் செல்வோம்). நல்லது. தீதி - தாதி இருவருடன் செல்வீர்களா? என்ன ஆகும். இதுவும் விசித்திர இரகசியம் ஆகும். அப்படி ஏதாவது நிறைவேறாத ஆசைகள் இருந்து விடவில்லையே? (சங்கமயுகம் பிடித்திருக்கிறது) பாப்தாதாவே சென்று விடுவார். இருந்தும் இங்கேயே இருப்பீர்களா? எதுவரையிலும் இருக்க வேண்டும்? உடன் (பாபாவுடன்) செல்பவரோ தர்மராஜிற்கு டாடா காண்பிப்பார், தர்மராஜிடம் செல்லவே மாட்டார். நல்லது. தந்தையோ தெளிவான கணக்கைப் பார்க்க விரும்புகிறார். கொஞ்சமாவது பழைய கணக்கு அதாவது வெளிமுகத்தின் கணக்கு, எண்ணம் மற்றும் சம்ஸ்கார ரூபத்தில் இருந்து விடக்கூடாது. எப்பொழுதும் அனைத்து பந்தனங்களிலிருந்தும் விடுபட்ட மற்றும் யோக சொரூப, இந்த வெளிமுகமான வாயுமண்டலத்தை அகற்றுவதற்காக இவ்வருடம் விசேஷமாக சமிக்ஞை தருகிறோம். சேவை செய்யுங்கள், அதிகமாகச் செய்யுங்கள். ஆனால் வெளிமுகமானவரிலிருந்து உள்முகமானவராகிச் செய்யுங்கள். அது உள்நோக்குப் பார்வை உடைய முகம் மூலம் உருவாகும். சேவையில் வெளிமுகத்தில் அதிகம் வந்து விடுகிறீர்கள். எனவே சேவை நல்லது தான், சேவை அதிகமாக செய்கிறார்கள். இது பெயரை நாலாபுறங்களிலும் பரவ மட்டும் செய்விக்கிறது. இவர்களுடைய தந்தை மிக நல்லவர், தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்தவர் என்று வெளிப்படுத்துவதின் (பிரத்யக்ஷத்தின்) வெற்றி குறைவாக இருக்கிறது. எனவே வெளிமுகமாக இருப்பதின் ரிசல்ட்டாக அதிகம் பாராட்டுவார்கள் ஆனால் மகிழ்ச்சி நிறைந்தவர்களாக ஆக மாட்டார்கள் என்று கூறியிருந்தோம். 'தந்தையின் குழந்தையாக ஆகி விட வேண்டும்' என்ற இது தான் மகிழ்ச்சி நிறைந்தவர் ஆவது.



    அந்த மாதிரி எப்பொழுதும் உள்நோக்குப் பார்வையுடைய, எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்த நிலையில் இருக்கும், மற்ற ஆத்மாக்களையும் எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாக ஆக்கக்கூடிய, எப்பொழுதும் தன்னை குணம் நிரம்பியவராக, தந்தைக்குச் சமமானவராக, எப்பொழுதும் சுகக்கடலில் மூழ்கியிருக்கும், எப்பொழுதும் ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற இந்த முழு ஈடுபாட்டில் மூழ்கியிருக்கக்கூடிய, அந்த மாதிரி உயர்ந்த ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    டில்லி மண்டலம் –

    பாப்தாதாவிற்கு அனைத்து குழந்தைகளும் மிகப் பிரியமானவர்கள். ஏனென்றால், பாப்தாதா விசேஷங்களின் ஆதாரத்தில் நாடகத்தின் அனுசாரம் தேர்ந்தெடுத்து இந்த பிராமண குடும்பத்தின் பூச்செண்டை உருவாக்கியிருக்கிறார். இது சைத்தன்ய மலர்களின் பூச்செண்டு தான் இல்லையா? ஒவ்வொரு மலரின் விசேஷம், வண்ணம் ரூபம் அதனதனுடையதாக இருக்கும். சிலவற்றில் நறுமணம் அதிகமாக இருக்கும். சிலவற்றில் வண்ணம், ரூபம் பூச்செண்டில் அலங்கரிப்பதற்கானதாக இருக்கும். ஆனால் இரண்டுமே அவசியம் தான் ! ரோஜா மலர்களால் மட்டுமே பூச்செண்டை உருவாக்குங்கள், அடுத்து பலவகையான மலர்களாலானதையும் உருவாக்குங்கள். அதில் எது அழகாக இருக்கும்? எனவே பலவகைகளும் தேவை. ஆனால் ரோஜா மலர்களையோ எப்பொழுதும் மத்தியில் வைப்பார்கள் மற்றும் மற்ற பல்வேறு வகையான மலர்களையும் ஓரங்களில் வைப்பார்கள். அப்படி நான் யார்? இதை ஒவ்வொருவரும் தன்னைத் தானே தெரிந்திருக்கிறீர்கள். பாப்தாதாவின் எல்லைக்கப் பாற்பட்ட மலர் செண்டில் என்னுடைய இடம் எங்கிருக்கிறது என்ற அதையும் தெரிந்திருக்கிறீர்கள். ஏனென்றால், மலர்செண்டின் உள்ளேயோ இருக்கிறீர்கள் இல்லையா? இதுவோ உறுதி தான்! எனவே தான் மதுபன்னின் உள்ளே வந்திருக்கிறீர்கள்.



    டில்லியின் பாண்டவ பவனின் பாண்டவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நினைவுச் சின்னத்தில் கூட பாண்டவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற இந்த செய்தியைத் தான் கேட்டார்கள் இல்லையா. பாண்டவ பவன் அடுத்த மதுபன். அப்படி பாண்டவ பவனில் இருப்பவர்கள் சேவைக்கான என்ன திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அனைவரின் பார்வை சேவையின் காரணமாக பாண்டவ பவனின் பக்கம் செல்லும் அளவிற்கு அந்த மாதிரி ஏதாவது சேவை செய்யுங்கள், இது புது விஷயம் இல்லையா? அந்த மாதிரி ஏதாவது திட்டத்தை உருவாக்கியிருக்கிறீர்களா? இவ்வுலகில் பாண்டவ பவன் தான் விசேஷ பவன் ஆகும். அப்படி விசேஷத்தில் வி.ஐ.பி -யின் ஸ்தானம் ஆகிவிட்டது என்றால், எப்படி வி.ஐ.பி -யின் ஸ்தானமாக இருக்கிறதோ அப்படி வி.ஐ.பி -களின் சேவையும் நடக்க வேண்டும் இல்லையா. டெல்லி வி.ஐ.பி –க்களின் நகரம். மேலும் ஸ்தானமும் வி.ஐ.பி இடம், மேலும் செய்பவர்கள் நீங்களும் நல்ல மகாவீர் வி.ஐ.பி -க்கள். எனவே இப்பொழுது என்ன செய்வீர்கள்? தன்னுடைய தினசரி நடவடிக்கைகளை அந்த மாதிரி உருவாக்குங்கள். இப்பொழுது பாருங்கள் இங்கே (மதுபனில்) எவ்வளவு பெரிய காரியம் நடக்கிறது, தினசரி நடவடிக்கைகளை உருவாக்கியதின் காரணமாக நாலாபுறங்களின் காரியத்தில் வெற்றியை அடைந்து கொண்டிருக்கிறார்கள். சேவை அதிகரித்து கொண்டிருக்கிறது, ஆனால் தினசரி செயல்பாடுகளை உருவாக்கிய காரணத்தினால் அனைத்து காரியங்களும் சரியாக நடந்து கொண்டிருக்கின்றன, இந்த கவனம் இருக்கிறது. காலையிலிருந்து இரவு வரைக்குமான தன்னுடைய நிச்சயிக்கப்பட்ட நிகழ்ச்சியின் தினசரி டைரியை உருவாக்குங்கள். ஏனென்றால் நீங்கள் வெளியுலக ஆத்மாக்கள் இல்லை, பொறுப்பான ஆத்மாக்கள். உலகிற்கு நன்மை செய்யும் ஆத்மாக்கள். அப்படி எவ்வளவு பெரிய மனிதனாக இருப்பாரோ, அவருடைய தினசரி நடவடிக்கைகள் முன்பாகவே உருவாக்கப் படும். பெரிய மனிதரின் அடையாளம், மிகச் சரியாக இருப்பது ! மிகச் சரியாக இருப்பதற்கான சாதனம் தினசரி நடவடிக்கைகளை உருவாக்குவது. ஒரு நபர் பத்து நபர்களின் காரியத்தைச் செய்ய முடியும். ஏற்கனவே உருவாக்கியதனால் நேரம், சக்தி மிச்சமாகிவிடும். இதன் காரணமாக ஒன்றிற்குப் பதிலாக பத்து காரியம் நிறைவேறிவிடுகிறது. நல்லது - எப்பொழுதும் திருப்தியாக இருக்கும் ஆத்மாக்கள் தான் நீங்கள் இல்லையா? எப்பொழுதும் தந்தையுடன் இருக்கிறீர்கள். அதாவது எப்பொழுதும் திருப்தியாக இருக்கிறீர்கள். தந்தை மற்றும் நீங்கள் எப்பொழுதும் இணைந்திருக்கிறீர்கள் என்றால் அவ்வாறு இணைந்திருப்பதின் சக்தி எவ்வளவு பெரியது ஒரு காரியத்திற்குப் பதிலாக ஆயிரம் காரியங்களைச் செய்ய முடியும். ஏனென்றால், ஆயிரம் புஜங்கள் உடைய தந்தை உங்களுடன் இருக்கிறார்.



    2) அனைவரும் சகஜயோகிகள் தான் இல்லையா? தந்தையினுடையவர் ஆவது என்றால், சகஜயோகி ஆவது. ஏனென்றால், குழந்தை என்றால் பாக்கியசாலி. குழந்தைகளைத் தவிர தந்தைக்கு வேறு என்ன தான் இருக்கிறது? தாய் இருந்த போதிலும் பிராப்திக்கான ஆதாரம் தந்தை. அன்பின் சம்மந்தத்தில் தாய் நினைவில் வருவார், பிராப்தியின் சம்மந்தத்தில் தந்தை நினைவில் வருவார். யோகா செய்ய வேண்டும் என்பதில்லாமல், விரும்பாவிட்டாலும் கூட ஒரு தந்தையைத் தவிர வேறு யாருமே பார்வையில் வர வேண்டாம். தந்தை யினுடையவர் ஆவது என்றால் சகஜயோகி ஆவது. நல்லது - ஓம் சாந்தி.



    3) சகஜமுயற்சியாளர் மற்றும் சகஜயோகி குழந்தைகளின் முக்கிய அடையாளங்கள் -

    1) சகஜ முயற்சியாளர் என்றால், இமயமலை மாதிரி வந்திருக்கும் பிரச்சனைகளையும் பறக்கும் கலையின் ஆதாரத்தில் ஒரு நொடியில் கடந்து அனைத்து பிராப்திகளை சகஜமாக அடைபவராக இருப்பார்.



    2) எப்பொழுதும் தற்சமயத்து மற்றும் எதிர்காலத்து பிராப்தியை அடைவதின் அனுபவியாக இருப்பார். அவர்களுக்கு பிராப்தி, எப்படி இந்த ஸ்தூல கண்கள் மூலமாக ஸ்தூல பொருள் தெளிவாக தென்படுகிறதோ. அதே போல் எப்பொழுதும் தெளிவாகத் தென்படும்.



    3) சகஜ முயற்சியாளர் ஒவ்வொரு அடியிலும் பல மடங்கு அதிகமாக வருமானத்தின் அனுபவம் செய்வார். எந்தவொரு சக்தியிலிருந்து, எந்தவொரு குணத்தின் கஜானாவிலிருந்து, ஞானத்தின் பாய்ன்ட்டின் (துளியின்) கஜானாவிலிருந்து, குஷியிலிருந்து, போதையிலிருந்து ஒருபொழுதும் காலியாக இருக்க மாட்டார்.



    4) சகஜ முயற்சியாளர் சென்று கொண்டிருக்கும் மார்க்கத்தில் ஒருபொழுதும் கீழே விழ மாட்டார். மேலும் மார்க்கம் வளைந்து நெளிந்திருக்கிறது என்று சொல்லி, விழுந்து காயப்படுத்திக் கொள்ள மாட்டார். அவர் வழிகாட்டியாகி வழியை சுலபமாகக் கடந்து செல்வார் மற்றும் பிறரையும் கடந்து செல்ல வைப்பார்.



    5) அவர் அன்பில் இருக்க மட்டும் மாட்டார், ஆனால் அன்பிலேயே ஐக்கியமாகி இருப்பார். ஐக்கியமாகி இருப்பது என்றால் மூழ்கியிருப்பது. மூழ்குவது என்றால் சமம் ஆவது. அவர் சுலபமாகவே நாலாபுறங்களின் எதிர்மறை அதிர்வலைகளிலிருந்து வாயுமண்டலத்திலிருந்து விலகி இருப்பார்.



    6) சகஜ முயற்சியாளர் ஒருபொழுதும் அலட்சியமானவராக இருக்கமாட்டார். அவர் எப்பொழுதும் தந்தையின் துணையை அனுபவம் செய்வார். அந்த மாதிரி சகஜ முயற்சியாளர் தான் சகஜயோகி வாழ்க்கையின் அனுபவம் செய்ய முடியும். சகஜ முயற்சி என்றால், அலட்சியம் இராது.



    கேள்வி:

    சக்தி அவதார ஆத்மாக்கள் நீங்கள் எந்த கான்டிராக்ட் (வேலை ஒப்பந்தம்) எடுத்திருக் கிறீர்கள்?



    பதில் :

    வளைந்திருக்கும் மார்க்கத்தை நேராக ஆக்குவது அதாவது கலியுகத்தை சத்யுகம் ஆக்குவது என்ற இது உங்களுடைய கான்டிராக்ட். மார்க்கம் வளைந்திருக்கிறது என்று நீங்கள் அப்படி கூற முடியாது. மார்க்கத்தில் திடீரென்று விழுவது அல்லது காயம் ஏற்படுவது இதுவும் கவனத்தின் குறைவு தான்.



    கேள்வி:

    எந்த வார்த்தை பிராமணர்களின் பாஷையினுடையதாக இருக்க முடியாது?



    பதில்:

    விரும்பாவிட்டாலும் நடந்து விடுகிறது என்ற இந்த வார்த்தையை மாஸ்டர் சர்வ சக்திவான் ஆத்மாக்கள் சொல்ல முடியாது. விருப்பம் ஒன்று மற்றும் செய்யும் காரியம் இன்னொன்றாக இருக்கிறது என்றால் சிவசக்தி என்று கூற மாட்டோம். சிவசக்தி என்றால் அடிமை அல்ல, அதிகாரி. அடிமைத்தனத்தின் வார்த்தைகள் பிராமண பாஷையினுடையது அல்ல.



    கேள்வி:

    தந்தையின் நினைவில் மூழ்கியிருப்பது அக்னியின் காரியம் செய்கிறது, எப்படி?



    பதில்:

    எப்படி அக்னியில் ஏதாவது பொருளை போட்டீர்கள் என்றால் அதனுடைய பெயர், ரூபம், குணம் அனைத்தும் மாறி விடுகிறது, அதே போல் எப்பொழுது தந்தையின் நினைவில் மூழ்கியிருக்கும் அக்னியில் இருக்கிறீர்கள் என்றால் பரிவர்த்தனை ஆகிவிடுகிறீர்கள் தான் இல்லையா.மனிதனிலிருந்து பிராமணன் ஆகிவிடு கிறீர்கள், பிறகு பிராமணனிலிருந்து பரிஷ்தா ஆகி தேவதை ஆகிவிடுகிறீர்கள். ஆக எப்படி பரிவர்த்தனை ஆனது? மூழ்கியிருக்கும் அக்னி மூலமாக தன்னுடையது என்பது எதுவும் இல்லை. மனிதன், மனிதனாக இருக்கவில்லை. பரிஷ்தா ஆகிவிட்டார். எப்படி பச்சை மண்ணை அச்சில் போட்டு நெருப்பில் போடுகிறார்கள் என்றால் செங்கல்லாக ஆகிவிடுகிறது அதே போல் இதுவும் பரிவர்த்தனை ஆகிவிடுகிறது எனவே இந்த நினைவைத் தான் ஜுவாலா ரூபம் என்று கூறுவது. ஜுவாலாமுகியும் பிரசித்தியாக இருக்கிறது என்றால் ஜுவாலாதேவி மற்றும் தேவதைகளும் பிரசித்தியாக இருக்கிறார்கள். நல்லது.



    வரதானம்:

    நிர்விகாரி மற்றும் பரிஷ்தா சொரூபத்தின் நிலையின் அனுபவம் செய்யக்கூடிய ஆத்ம அபிமானி ஆகுக.



    எந்தக் குழந்தைகள் ஆத்ம அபிமானியாக ஆகுகிறார்களோ அவர்கள் சுலபமாகவே நிர்விகாரி ஆகிவிடுகிறார்கள். ஆத்ம அபிமானி நிலை மூலமாக மனதின் எண்ணங்களிலும் விகாரமற்ற நிலையின் அனுபவம் ஆகிறது. அந்த மாதிரி நிர்விகாரி, யாருக்கு எந்த விதமான தூய்மையின்மை மற்றும் ஐந்து தத்துவங்களின் ஈர்ப்பு கவர்ச்சிக்க முடியாதோ அவரைத் தான் பரிஷ்தா என்று கூறுகிறோம். இதற்காக உடலில் இருந்து கொண்டே தன்னுடைய நிராகார ஆத்ம அபிமானி நிலையில் நிலைத்திருங்கள்.



    சுலோகன்:

    வாழ்க்கையில் அதீந்திரிய சுகத்தின் அனுபவம் செய்வதற்காக விசேஷமாக அமிர்தவேளையில் ஏகாந்த பிரியராக ஆகுங்கள்.

      

    ***OM SHANTI***