BK Murli 5 June 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 5 June 2016 Tamil

    05.06.2016  காலை முரளி  ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா''  ரிவைஸ் 06.10.1981  மதுபன்

     “ஞானசூரியன் தந்தையின் மாஸ்டர் ஞான சூரிய குழந்தைகளுக்கு சேவைக்கான வாழ்த்து ''


    இன்று உலகின் கண்மணியானவர் தன்னுடைய கண்களின் நட்சத்திரங்களைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார். கண்ணின் மணிகளோடு சந்திப்பதற்காக வந்திருக்கிறார். முழு உலகின் பார்வை யார் மேல் இருக்கிறதோ, அவருடைய பார்வை யார் மேல் இருக்கிறது? யாரை முழு உலகமும் நினைவு செய்கிறதோ, அவர் யாரை நினைவு செய்கிறார்? யாருடைய மகிமையை முழு உலகமுமே பாடுகிறதோ, சுயம் அவரே யாருடைய மகிமையைப் பாடுகிறார்? அப்படியானால் பெரியவராக யார் ஆனார்? குழந்தைகளா அல்லது தந்தையா? அப்படி பாப்தாதா அந்த மாதிரி கண்ணின் மணிகளோடு சந்திப்பதற்காக வந்திருக்கிறார். எந்தக் குழந்தைகள் தந்தைக்காக மற்றும் சேவைக்காக தன்னையே அர்ப்பணம் செய்திருக்கிறார்களோ, அந்த மாதிரி குழந்தைகளுக்கு பிரதிபலனைக் கொடுப்பதற்காக பாப்தாதாவும் அர்ப்பணமாகிறார்.



    தந்தையின் எதிரில் இன்று அந்த மாதிரி விலைமதிக்கமுடியாத இரத்தினங்கள் இருக்கிறார்கள். அவர் எங்கே இருந்தாலும், உடலால் தூரமான இடத்தில் இருந்தாலும், இன்றைய சபையில் உங்கள் அனைவரின் உடன் இருக்கிறார். தந்தையின் எதிரில் ஸ்தூலமாக அமர்ந்திருக்கிறீர்கள். இன்று யார் எதிரில் தந்தை அமர்ந்திருக்கிறார் என்று தெரிந்திருக்கிறீர்களா? இன்று தந்தையின் எதிரில் தேடிக் கண்டெடுக்கப்பட்ட மிகப்பிரிய மான எப்பொழுதும் இதயசிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் 9 இரத்தினங்கள் எதிரில் இருக்கிறார்கள். அஷ்ட மற்றும் இஷ்ட ஆத்மாக்கள் எதிரில் இருக்கிறார்கள். எங்களை பாப்தாதா நினைவு செய்கிறார் என்று அவர்களும் தெரிந்திருக்கிறார்கள். திவ்ய தரிசனத்தில் அவர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி இரத்தினங்களின் விசேஷங்களை பாப்தாதா எப்பொழுதும் மாலையாக நினைவு செய்கிறார். தந்தை அந்த மாதிரி இரத்தினங்களைப் பார்த்து என்ன பாடல் பாடுகிறார்? அந்தப் பாடலை கேட்டிருக்கிறீர்களா? அது எது? பாப்தாதாவின் பாடல் நீளமானது அல்ல, மிகச் சுருக்கமானது. 'ஆஹா என்னுடைய குழந்தைகளே ஆஹா' என்பது தான் தந்தையின் பாடலாகும். அப்படியானால் இந்தப் பாடலை கேட்க முடிகிறதா? எத்தனை தடவைகள் கேட்கிறீர்கள்? குழந்தைகள் என்ன பதில் கூறுகிறீர்கள்? தந்தையோ ஒருவர், மேலும் அவருக்கு அனேக குழந்தைகள் இருக்கிறார்கள் ! அப்படி தந்தை அனைத்து குழந்தைகளின் பாடலைக் கேட்கிறார். பாடலைக் கேட்கும் பொழுது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. சிலர் ஒரு மாதிரியாக பாடுகிறார்கள், சிலர் வேறு மாதிரி பாடுகிறார்கள். எப்படி பாடுகிறார்கள் என்று கூறலாமா? சிலர் 'ஆஹா பாபா ஆஹா' என்று கூறுகிறார்கள், சிலர் 'ஆஹா என்னுடைய பாபா ஆஹா' என்று கூறுகிறார்கள். மேலும் சிலர் 'ஆம் பாபா ஆம்' என்று கூறுகிறார்கள். இன்னும் கூறலாமா - சிலர் வேறு வழியில்லை என்ற நிர்பந்தத்தில் பாடுகிறார்கள், அப்படி என்ன நிர்பந்தம்? ஏனென்றால் தந்தையை நினைவு செய்யாமல் எதுவுமே கிடைக்காது. எனவே நினைவு செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்கிறார்கள், 'ஆஹா பாபா ஆஹா' என்ற பாடலை பாடவே தான் வேண்டும். ஒருவருக்கு மனதின் வீணையின் இசை இருக்கிறது. மேலும் இன்னொருவருக்கு வாயின் இசை இருக்கிறது. அப்படி பாப்தாதாவோ பாடலை கேட்பார் தான் இல்லையா? எந்தப் பாடல் பாடுகிறார். தந்தை மற்றும் குழந்தைகளின் கதைகளைக் கூறலாமா என்ன? ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் கதை இருக்கிறது. அனைத்து கதைகளையும் ஒன்றாக்கினோம் என்றால் எத்தனை ஆகி விடும்? ஒவ்வொருவரது தினசரி கதை கூட வேறு வேறாகும். அப்படி தந்தை கேட்க வேண்டுமா அல்லது இல்லையா? நீங்கள் அனைவரும் பாபா அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று முறையீடு செய்கிறீர்கள் இல்லையா? அங்கேயும் இதே வேலை தான் செய்கிறார். எவற்றை உடலில் இருக்கும் போது செய்திருந்தாரோ அவற்றையே தற்போது செய்கிறார். சாகாரத்தில் நேரம் அதிகம் எடுத்தது. மேலும் இப்பொழுது நேரம் குறைவாக ஆகிறது.



    இன்று விசேஷமாக குழந்தைகள் செய்த சேவைக்கான பிரதிபலனை வழங்குவதற்காக வந்திருக்கிறார். எப்படி குழந்தைகள் அன்போடு சேவையின் பந்தனத்தில் கட்டப்பட்டு இருக்கிறார்களோ அதே போன்று தந்தையும் குழந்தைகளின் அன்பிற்கு கட்டுப்பட்டுள்ளார்.



    (ஜெயந்தி சககோதரியுடன்) இன்று எங்கே சந்தித்து கொண்டிருக்கிறீர்கள்? இன்று விசேஷமாக பாப்தாதா எங்கே வந்திருக்கிறார்? மதுபன்னிலோ வரத்தான் செய்கிறார், ஆனால் இது எந்த சபை இதனிடையில் சந்தித்து கொண்டிருக்கிறீர்கள்? லண்டனில் விசேஷமாக எங்கே சந்திப்பீர்கள்? பாப்தாதா இன்று தோட்டத்தில் சந்தித்து கொண்டிருக்கிறார், இது அல்லாவின் தோட்டம் தான் இல்லையா? ஏனென்றால், தோட்டத்தில் சந்திப்பது என்றால் எல்லைக்கப்பாற்பட்ட நிலையில் சந்திப்பது. பாப்தாதாவிற்காக இந்த தோட்டம் அனைத்தையும் விட மிகவும் நல்லது. அந்த தோட்டங்களோ வைகுண்டத்தின் தோட்டங்கள், அவற்றின் எதிரே இவ்வுலகிலுள்ள இந்த தோட்டங்கள் ஒன்றுமே இல்லை. நல்லது. இங்கே வந்து ஆஜராகி விட்டோமில்லையா? மாஸ்டர் எஜமானருக்கு எதிரில் ஆஜராகி வந்தாகிவிட்டது.. அனைவரையும் பார்த்தும் குஷி ஏற்படுகிறது. சேவையை ஊக்கம் மற்றும் உற்சாகம் நிறைந்து செய்து வெற்றி அடைந்ததற்காக அனைவருக்கும் பாராட்டுக்கள் ! சேவையில் முழுமையாக ஈடுபட்டு ஒருவர் இன்னொருவரை விட முன்னுக்குச் செல்வதற்கான பந்தயத்தை நன்றாகச் செய்து கொண்டிருக்கிறீர்கள். போட்டியில்லை, பந்தயம் செய்து கொண்டிருக்கிறீர்கள். எனவே வெளிநாட்டு சேவைக்கு பொறுப்பாளர் ஆகியிருக்கும் பெரும்பான்மையான இரத்தினங்கள் பிரதிபலனை நன்றாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.



    லண்டன் அஸ்திவாரம், எனவே 10 வருடங்களுக்குள் என்னென்ன சேவை செய்திருக்கிறீர்களோ அதற்கு பலனாக பாப்தாதா எந்த தீபத்தை ஏற்றுவார்? நாலாபுறங்களிலுமுள்ள வெளிநாட்டு குழந்தைகளிலிருந்து முக்கியமாக யார் சேவையில் இரவு பகலாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ, அந்த விசேஷ ஆத்மாக்களின் விசேஷத்தின் தீபத்தை பாப்தாதா ஏற்றுவார். குணங்கள் என்ற எண்ணெய் விட்டு, விசேஷங்களின் தீபத்தை ஏற்றிக் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்கள் உரித்தாகுக ! சேவைக்கான பாராட்டுக்கள் உரித்தாகுக !! ஹாங்காங்கைச் சேர்ந்தவர்களுக்கும் இதே பாடலை கூறுங்கள். அவர்களுக்கும் 10 வருடங்கள் ஆகிவிட்டது. இன்று இரு நாட்டவர்களுக்கும். 10 வருடங்களுக்கான வாழ்த்துக்கள் ! லண்டனில் இருக்கும் நெருக்கமான குழந்தைகள் வெளிநாட்டில் மாஸ்டர் ஞான சூரியனின் சொரூபத்தில் சேவையின் ஊக்கம் உற்சாகத்தின் கிரணங்களை மிக நன்றாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள், எனவே ஞான சூரியன் தந்தை மாஸ்டர் ஞான சூரிய குழந்தைகளுக்கு, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.



    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்களும் தியாகம் மற்றும் பாக்கியம், தியாகத்தின் மூலமாக பாக்கியத்தை அடைந்ததற்கான நிரூபணத்தை மிக நன்றாகக் காண்பித்திருக்கிறார்கள். பாப்தாதா ஆஸ்திரேலியாவின் சேவைக்காக பொறுப்பாளர் ஆகியிருக்கும் குழந்தைகளுக்கு ஒரே சீராக, ஆடாத அசையாமல் இருந்ததற்கான சான்றிதழை வாழ்த்துக்களாகக் கொடுக்கிறார். அதே போலவே நைரோபியைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்களின் விசேஷத்தின் காரணமாக பாப்தாதா வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார். அது என்ன விசேஷம்? மிக உணர்வுப்பூர்வமாக தந்தை மற்றும் தந்தையின் சேவையில் ஈடுபடுவதில் மிக நல்ல குழந்தைகள் ! அவர்கள் சூழ்நிலைகளைப் பார்ப்பதில்லை, சேவையைப் பார்க்கிறார்கள். சேவையில் நாம் அனைவரும் ஒருவர், இந்த நிரூபணம் கொடுப்பதின் விசேஷத்தை மிக நன்றாகக் காண்பித்திருக்கிறார்கள். சேவை மேல் அன்பு என்றால், பாப்தாதா மேல் அன்பு. அகற்றுவது மற்றும் உள்ளடக்குவது இரண்டின் நல்ல அதிசயத்தை காண்பித்திருக்கிறார்கள். எனவே பாப்தாதா அந்த மாதிரி விசேஷம் உள்ள குழந்தைகளை மகாவீர் குழந்தைகள் என்று கூறுகிறார்.



    அமெரிக்காவும் குறைந்தது அல்ல, அமெரிக்காவைச் சேர்ந்தவர்களோ செய்தியை வலுவாக பரப்பக்கூடிய மைக்கை பிடித்து விட்டார்கள். சேவைக்கான சாதனம் சகஜமாக மற்றும் உயர்ந்ததாகக் கிடைத்து விட்டது. அமெரிக்காவில் என்னென்ன சேவை நிலையங்கள் இருக்கின்றனவோ அவை அனைத்தும் வி.ஐ.பி –க்களின் சேவையில் மிக நல்ல வெற்றியை அடைந்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது வெளிநாட்டில் வி.ஐ.பி களுக்கு சேவை செய்வது கடினம் இல்லை தான் இல்லையா? இப்பொழுது லண்டனிலும் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.



    அப்படி இந்த வருடம் விசேஷ நபர்களுக்கு சேவை செய்வதற்கான வரதானம் வெளிநாட்டினருக்குக் கிடைத்திருக்கிறது. எத்தனை வருடங்கள் கடினமாக இருந்தது? மேலும் எப்படி சுலபமாகி விட்டது என்ற அது தெரிய வந்ததா? வெளிநாட்டில் நாலாபுறங்களில் உள்ள முக்கியமான இடங்களின் பெயரை கூறினோம். ஆனால் இன்னும் நாலாபுறங்களிலும் உள்ள மற்ற இடங்களிலும் சேவையின் அலை மிக நன்றாகப் பரவியுள்ளது. கயானாவாக இருந்தாலும், ஜெர்மனியாக இருந்தாலும், மொரிசீயசும் இருக்கிறது. அனைவரின் பெயரையும் கூற வேண்டும். ஒவ்வொரு இடத்திற்கும் அவரவர்களுக்கென்ற விசேஷம் இருக்கிறது. இப்பொழுது இவர்கள் விசேஷ நிகழ்ச்சி மூலம் விசேஷ ஆத்மாக்களைத் தயார் செய்திருக்கிறார்கள், அதே போல் நாலாபுறங்களிலும் நல்ல ஊக்கம் உற்சாகம் இருக்கிறது. எனவே அனைவரின் பெயரையும் குறித்துக் கொள்ளுங்கள்.



    (தாதி அவர்கள் மற்றும் லச்சு சகோதரி வெளிநாட்டு சேவை செய்து திரும்பி வந்திருக்கிறார்கள்.)

    தாதியுடன் –

    பேலன்ஸ் (சமநிலை) மற்றும் பிளசிங் (ஆசீர்வாதம்) -இரண்டின் அனுபவம் செய்தீர்களா? பயணம் நன்றாக இருந்ததா? (லச்சு சகோதரியுடன்) இவரும் வெளிநாட்டு யாத்திரை செய்து வந்திருக்கிறார். இவரும் தபஸ்யா செய்தார் இல்லையா? இவரும் அதிர்ஷ்டசாலி தான் ! சிறு வயது பருவத்திலிருந்தே உயர்ந்த சங்கத்தில் இருந்திருக்கிறார். மிக நெருக்கமாக இருந்திருக்கிறார். இந்த மாதிரி பாக்கியம் கூட அனைவருக்கும் இருக்காது. இப்பொழுது வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து என்ன செய்தீர்கள்? எங்காவது சொற்பொழிவு நிகழ்த்தினீர்களா? இப்பொழுது பயிற்சி செய்யுங்கள். வகுப்பு எடுப்பதற்கும் பயிற்சி செய்யுங்கள். மிக அதிகமாக நேரடியாக கேட்டிருக்கிறீர்கள். நகத்தில் மறைத்து வைத்து கூறும் விஷயங்களையும் கேட்டிருக்கிறீர்கள். அதற்கு பிரதிபலனோ கொடுக்க வேண்டும் இல்லையா? நல்லது. சேவை செய்யும் குழந்தைகள் எங்காவது செல்கிறார்கள் என்றால் சேவைக்கான நிரூபணத்தை அவசியம் கொடுக்கிறார்கள். கொடுத்தீர்கள் தான் இல்லையா? சேவைக்குத் தகுதியானவர் என்றால் சேவை ! சேவை மற்றும் சேவை. பார்ப்பதும் சேவை, பேசுவதும் சேவை, நடப்பதும் சேவை மற்றும் செய்வதும் சேவை. ஐந்து படங்களை காண்பிக்கிறீர்கள் இல்லையா ! 'தீயதை பார்க்காதீர்கள், தீயதை பேசாதீர்கள் . . . .' காண்பித்தீர்கள். இங்கே ஆம் என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். அப்படி இந்த ஐந்து விஷயங்களில் அவர்கள் இல்லை என்று கூறுகிறார்கள். இங்கே ஆம் என்று கூறுகிறார்கள். இதைத் தான் சேவைக்குத் தகுதியானவர் என்று கூறுவது. அப்படி சேவைக்குத் தகுதியானவரின் படமாக என்ன ஆனது? சேவை செய்வது மிக நன்றாக இருந்தது தான் இல்லையா ? ஒவ்வொரு ஸ்தானத்தின் விசேஷங்களினால் சம்பன்னம் ஆகி ஆகி நாலாபுறங்களிலும் சேவையில் முழுமை நிலை வந்து விடும். எனவே இந்த அனுபவமும் நன்றாக இருக்கிறது.



    யமுனை நதிக்கரையும் வந்திருக்கிறது (டெல்லி குரூப்). மேலும் கூடவே யமுனை நதிக்கரையில் நாடகம் செய்பவர்கள் கர்நாடகாவும் வந்திருக்கிறது. பாம்பேயோ அதிகப்படியாக (கொசுறு) வந்துள்ளது. நல்லது! யமுனை நதிக்கரையும் இருக்கிறது. மேலும் யமுனை நதியின் நடுவில் தோட்டமும் இருக்கிறது அப்படி அதன் நடுவில் பாப்தாதாவுடன் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். இருந்தாலும் சேவைக்கான அஸ்திவாரமோ டெல்லி ! மேலும் அனைவரும் சேவைக்கான கால்களை பதித்ததும் டெல்லியில் தான். பெரும்பான்மையான மகாரதிகள் சேவைக்காக டெல்லியில் கால் பதித்திருக்கிறார்கள். நல்லது. டெல்லி என்ன செய்ய வேண்டும்? என்று பின்பு கூறுவோம். இன்றோ தோட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறோம் இல்லையா?



    அந்த மாதிரி விளையாட்டில் விளையாட்டை பார்க்கக்கூடிய, வாழைப்பழம் (ஹிந்தியில் கேளா) மற்றும் சந்திப்பு (ஹிந்தியில் சந்திப்பு) இரண்டையும் அனுபவம் செய்யக்கூடிய, எப்பொழுதும் தந்தையின் குணத்தின் மகிமை பாடக்கூடிய, கூடவே தன்னை தந்தைக்குச் சமமாக மாஸ்டர் குணம் நிறைந்தவராக ஆக்கக்கூடிய, எப்பொழுதும் உலகின் நற்சிந்தனையாளர், எப்பொழுதும் உலகிற்கு நன்மை செய்யக்கூடிய விஷ்வ கல்யாணகாரி, அந்த மாதிரி சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம் !



    தீதி அவர்களுடன் –

    பறக்கும் பறவை ஆகி சேவையின் பங்கை செய்து கொண்டே தன்னுடைய ஓய்வு ஸ்தானத்தில் வந்து சேர்ந்து விட்டீர்களா? சுருக்கமான மற்றும் இனிமையான பயணமாக இருந்ததா? பாப்தாதாவும் குழந்தைகளின் தைரியம் மற்றும் சேவையின் ஊக்கத்திற்கான மன தைரியமானது மருந்தின் வேலையைச் செய்து விடுகிறது. எத்தனை பேர்களுக்கு ஆசீர்வாதம் கொடுத்தீர்கள். இப்பொழுது விசேஷ ஆத்மாக்கள் உங்களுடைய பங்கே ஆசீர்வாதம் கொடுப்பது தான். கண்களினாலானாலும் சரி, நெற்றியின் மணியின் மூலமாக இருந்தாலும் சரி, பேசுபவர்களோ அதிகம் இருக்கிறார்கள், ஆனால் இப்பொழுது நீங்கள் அனைவரும் செய்ய வேண்டிய காரியம் ஆசீர்வாதம் வழங்குவது ! எப்படி சாகார பாபாவைப் பார்த்திருக்கிறீர்கள், இறுதி கர்மாதீத் நிலையின் பங்கு என்னவாக இருந்தது? ஆசீர்வாதம் கொடுப்பது. சமநிலையின் விசேஷமும் இருந்தது மற்றும் ஆசீர்வாதத்தின் அதிசயமும் இருந்தது. நீங்களும் தந்தையைப் பின்பற்றி நடங்கள். இது தான் மிக சுலபமான சேவை, கூடவே சக்திசாலியானதும் இது தான். பொதுவாகவே எந்தவொரு பொருள் சக்திசாலியானதாக இருக்கிறதோ, அது எவ்வளவு சக்திசாலியானதோ அந்த அளவே அதனுடைய ரூபத்தில் மிகச் சிறியதாக இருக்கும். எப்படி விதை சக்திசாலியாக இருக்கிறது, ஆனால் விதை எவ்வளவு சிறியதாக இருக்கிறது. அணு சக்திசாலியானது, எவ்வளவு சிறியதாக இருக்கிறது? அதே போல் ஆத்ம நினைவிலிருந்து ஆசீர்வாதம் கொடுப்பது இதுவும் மிக சுலபமானது மற்றும் சக்திசாலியானது. நேரமும் குறைவு, கடின உழைப்பும் குறைவு மற்றும் ரிசல்ட் அதிகம் ! மேலும் அதுவும் அதிக காலத்திற்காக. இந்த நேரம் கேட்டீர்கள் உடன் அந்த நேரமே மறந்தீர்கள் என்று அப்படி இல்லை. அனுபவம் ஆகிவிடுகிறது இல்லையா? அப்படி சக்திசாலியான ஆத்மாக்கள் உங்களுடைய இந்த நேரத்து சேவை ஆசீர்வாதம் கொடுப்பது.



    ஜெயந்தி சகோதரியுடன் –

    உங்களில் எத்தனை ஆத்மாக்கள் நிரம்பியிருக்கிறார்கள்? இன்று எத்தனை ஆத்மாக்கள் உங்களில் நிரம்பியிருக்கிறார்கள்? சேவையில் மிக நன்றாக வேகமாக முன்னேறி இருக்கிறீர்கள். ஆத்மா உங்களுக்கு குடும்பத்தின், ஆன்மீக குடும்பத்தின், பரலோகத்தின் ஆக, மூவர்களின் வாழ்த்துக்கள் கிடைத்திருக்கிறது. உங்களுடைய பங்கை மிக நன்றாகச் செய்து கொண்டிருக்கிறீர்கள். அனைவராலும் விரும்பப்படுபவர் தான் இல்லையா? இந்த விஷயத்தின் நினைவின் காரணமாகத் தான் உங்கள் வாழ்க்கையில் வெற்றி இருக்கிறது. சேவையின் வெற்றிக்கான ஆதாரமே செய்பவர் செய்விப்பவர் தந்தையின் நினைவு இருப்பது. எனவே தான் பாதுகாப்பாகவும் இருக்கிறீர்கள். மேலும் வெற்றியும் அடைந்து கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? தந்தையைப் பின்பற்றி நடந்தீர்கள், ஆனால் பொறுப்பாளர் ஆகியிருக்கும் தன்னுடைய தாதியையும் (ஜானகி தாதி) பின்பற்றி நடந்தீர்கள், குணங்களைப் பின்பற்றினீர்கள். மிக நல்லது தான்! ஜனக்கிற்கு விசேஷ அன்பு கொடுங்கள். அவருக்கும் உடனடி பலனாக நோயற்ற உடல் கிடைத்திருக்கிறது. உடல்-காயா கல்பதரு ஆகிவிட்டது தான் இல்லையா?



    பொதுவாக கயானாவின் அஸ்திவாரத்தின் ஆதாரத்தில் அமெரிக்காவின் வி.ஐ.பி-க்கள் உருவானார்கள். அமெரிக்காவின் அஸ்திவாரமும் கயானா தான். வெளிநாட்டில் முதல் நம்பர் வி.ஐ.பி தம்பதியினர் கயானாவைச் சேர்ந்தவர்கள் தான். எனவே மிக மிக அன்பிற்குரியவர்கள், இருவர்களின் சேவையில் விசேஷம் இருக்கிறது. ஒருவர் இன்னொருவரை விட முன்னால் இருக்கிறார். அந்த மாதிரி ஆயிரத்தில் ஒருவர் தான் மலராக இருப்பார்கள். அதன் காரணமாக பெயரும் நன்றாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய பெண் குழந்தைகளும் மிக நல்ல குழந்தைகள். வீட்டையும் மிக நன்றாக தயார் செய்திருக்கிறார்கள். தடையை தடையற்றதாக ஆக்கிவிட்டார்கள். எனவே முழு பரிவாரமும் அன்பான பரிவாரம் ஆகிவிட்டது. அன்பானவர் களும் தான் கூடவே (பாபாவின்) அன்பில் ஐக்கியமாகி இருப்பவர்களும் தான். மேலும் வந்திருக்கும் அனைத்து பிராமணர்களின் ஈடுபாடு தந்தை மற்றும் சேவையில் மிக நன்றாக இருக்கிறது. அதிக கடின உழைப்பு செய்பவர்கள் இல்லை. மிக நல்லவர்கள். சில சில இடங்களில் கடின உழைப்பு குறைவாக செய்யும் இந்த விசேஷம் இருக்கிறது. கயானாவின் விசேஷம் உழைப்பு குறைவு, ஆர்வத்தில் மிக நன்றாக இருக்கிறார்கள். எனவே அனைவருக்கும் நினைவு கொடுங்கள், மேலும் இதே விசேஷத்தின் பரிசையும் கொடுங்கள்.



    பார்ட்டிகளுடன் சந்திப்பு –

    சங்கமயுகத்தில் மிகப்பெரிய கஜானாவாக என்ன கிடைத்திருக்கிறது? குஷியின் கஜானா ! குஷியின் கஜானாவால் எப்பொழுதும் நிரம்பி இருங்கள். சில நேரம் குஷி அதிகம் மேலும் சில நேரம் குறைவான குஷி என்று அப்படி இருக்க வேண்டாம். எப்பொழுது அழியாத குறைவில்லாத எல்லையற்ற கஜானாவாக இருக்கிறது என்றால் சில நேரம் குறைவாக மற்றும் சில நேரம் அதிகமாக அப்படி இருக்க வேண்டாம். எப்பொழுதும் கஜானாவை பிராப்தி செய்வதில் ஒரே சீரான நிலையில் இருங்கள். குஷியில் இருக்கிறார்கள் என்ற இது மட்டுமல்ல ஆனால் குஷியில் ஒரே சீராக மற்றும் நிரந்தரமாக இருக்கிறார்கள் என்று இருக்க வேண்டும். வரிசை எண் இதன் ஆதாரத்தில் தான் உருவாகும். நிரந்தரம் மட்டும் இருக்கிறது, ஒரே சீரான நிலை இல்லை என்றால் கூட இரண்டாம் நம்பர் ஆகிவிடு. ஆனால் நிரந்தரமாக மற்றும் ஒரே சீராக அப்படி இரண்டுமே இருக்கிறது என்றால், நம்பர் ஒன் ஆகிவிடும். ஒருவேளை ஏதாவது பிரச்சனையில் வந்து விடுகிறீர்கள் என்றால், குஷியின் ஊஞ்சல் தொய்வாகி விடுகிறது, வேகமாக ஆடுவதில்லை, நின்று நின்று ஆடும். எனவே எப்பொழுதும் குஷியின் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே இருங்கள். சங்கமயுகம் அனுபவம் செய்வதற்கான யுகம். இது தான் இந்த யுகத்தின் விசேஷம் ஆகும். எனவே இந்த யுகத்தின் விசேஷத்தின் லாபத்தை எடுங்கள். நல்லது.



    வரதானம் :

    தன்னுடைய பூஜையை நினைவில் வைத்து, ஒவ்வொரு காரியத்தை பூஜைக்கு உரியதாக ஆக்கக்கூடிய பரம பூஜைக்குரியவர் ஆகுக !



    குழந்தைகள் உங்களின் ஒவ்வொரு சக்தியின் பூஜை, தேவி தேவதைகளின் ரூபத்தில் நடக்கிறது. சூரிய தேவதை, வாயு தேவதை, பூமா தேவி . . . . அதே போலவே பயமற்ற நிலையின் சக்தியின் பூஜை காளி தேவியின் ரூபத்தில் இருக்கிறது. எதிர்கொள்ளும் சக்திக்கான பூஜை துர்காவின் ரூபத்தில் இருக்கிறது. திருப்தியாக இருப்பது மற்றும் திருப்தி படுத்துவதின் சக்தியின் பூஜை சந்ன்தர்ஷி மாதாவின் ரூபத்தில் இருக்கிறது. காற்றிற்குச் சமமாக லேசாக இருக்கும் சக்தியின் பூஜை பவன் புத்திரர் ஹனுமான் ரூபத்தில் இருக்கிறது. அப்படி தன்னுடைய இந்த பூஜையை நினைவில் வைத்து ஒவ்வொரு காரியத்தையும் பூஜைக்குரியதாக ஆக்குங்கள் அப்பொழுது தான் பரம் பூஜைக்குரியவர் ஆவீர்கள்.



    சுலோகன்:

    வாழ்க்கையில் திருப்தி மற்றும் சரளத்தன்மையின் சமநிலை வைப்பது தான் மிகப் பெரிய விசேஷம் ஆகும்.



    ***OM SHANTI***