BK Murli 25 July 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 25 July 2016 Tamil

    25.07.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! இப்பொழுது நீங்கள் புது உலகிற்குச் செல்ல வேண்டும், இந்த துக்கமான நாட்கள் முடிவடைந்து கொண்டிருக்கின்றது, ஆகையால் பழைய கடந்து போன விசயங்களை மறந்து விடுங்கள்.



    கேள்வி:

    கர்மயோகி குழந்தைகளாகிய நீங்கள் எந்த நிலையை நிரந்தரமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்?



    பதில்:

    அவ்வப்பொழுது சரீர நிர்வாகத்திற்கு தேகத்தில் வர வேண்டும் மற்றும் அவ்வபொழுது ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். தேக நினைவின்றி காரியம் செய்ய முடியாது. ஆகையால் பயிற்சி செய்ய வேண்டும் - தேக அபிமானியாக ஆவது பிறகு ஆத்ம அபிமானியாக ஆகி விடுங்கள், இந்த பயிற்சி குழந்தைகளாகிய உங்களைத் தவிர உலகில் வேறு யாரும் செய்ய முடியாது.



    பாட்டு:

    விழித்தெழுங்கள் நாயகிகளே விழித்தெழுங்கள் ......



    ஓம்சாந்தி.

    ஆன்மீகத் தந்தை கூறுகின்றார் - இனிமையிலும் இனிமையான ஆத்மாக்கள் அதாவது குழந்தைகள் இந்த பாட்டைக் கேட்டீர்கள். இது தான் ஞானப் பாடல்கள் என்று கூறப்படுகின்றது. இந்த பாட்டு மிகவும் நன்றாக இருக்கின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது விழித்தெழுந்து விட்டீர்கள். நாடகத்தின் ரகசியத்தையும் இப்பொழுது அறிந்து கொண்டீர்கள். பக்தி மார்க்கத்தின் விந்தையைப் பார்த்து விட்டீர்கள் அல்லவா! எதுவெல்லாம் கடந்து முடிந்ததோ அது உங்களது புத்தியில் இருக்கின்றது. நீங்கள் தங்களது கடந்து முடிந்த 84 பிறவிகளின் சரித்திரத்தை அறிந்திருக்கின்றீர்கள். தந்தை 84 பிறவிகளின் கதையைக் கூறியிருக்கின்றார். இது புது உலகிற்கான புது விசயமாகும். தந்தையின் மூலம் நீங்கள் புது விசயங்களைக் கேட்கின்றீர்கள். தந்தை குழந்தைகளுக்கு தைரியம் கொடுக்கின்றார். குழந்தைகளே! இப்பொழுது புது உலகிற்குச் செல்ல வேண்டுமெனில், பழைய விசயங்களை மறந்து விடுங்கள். இந்த வேதம், சாஸ்திரம் போன்ற என்ன என்ன பக்தி மார்க்கத்தின் வழக்கங்கள் உள்ளதோ இவையனைத்தும் அழிந்து போய்விடும். அங்கு பக்தி மார்க்கத்தின் அடையாளமும் இருக்காது. அங்கு பக்தியின் பலன் கிடைத்து விடும். பக்தர்களுக்கு தந்தை வந்து பலன் கொடுக்கின்றார். தந்தை வந்து பக்தியின் பலன் எவ்வாறு கொடுக்கின்றார்? என்பதை குழந்தைகள் அறிந்திருக்கின்றீர்கள். யார் அதிக பக்தி செய்திருக்கின்றார்களோ அவர்களுக்கு கண்டிப்பாக அதிக பலன் கிடைக்கும். ஞானத்தில் முயற்சியும் அவர் அதிகமாக செய்வார். நாம் ஆத்மாக்கள் அதிக பக்தி செய்திருக்கின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். கண்டிப்பாக அவர்கள் ஞானத்திலும் தீவிரமாகச் செல்வார்கள். அப்பொழுது தான் இந்த லெட்சுமி நாராயணனைப் போன்று உயர்ந்த பதவி அடைவார்கள். இப்பொழுது ஞானம் மற்றும் யோகாவில் உங்களது முயற்சி இருக்கின்றது. ஆத்ம அபிமானியாக இருக்க வேண்டும், பிறகு தேகதாரியாகவும் ஆக வேண்டும். காரியம் செய்தாலும் தந்தையை நினைவு செய்ய வேண்டும். தேகமின்றி நாம் காரியம் செய்ய முடியாது. பாபாவை நினைவு செய்ய வேண்டும் என்பது சரி தான். ஆனால் தன்னை ஆத்மா என்று உணர வேண்டும், தேகத்தை மறப்பதன் மூலம் காரியம் நடை பெறாது. காரியம் செய்தே ஆக வேண்டும். தந்தையின் நினைவில் அதிக போதை ஏற்படுகின்றது. எழுந்தாலும், அமர்ந்தாலும், நடந்தாலும், சுற்றினாலும் தந்தையை நினைவு செய்யுங்கள். இருப்பினும் வயிற்றுக்கு உணவு தேவையல்லவா! ஆத்ம அபிமானியாக இருக்க வேண்டும். ஆத்ம அபிமானியாக இந்த நேரத்தில் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும் கிடையாது. தன்னை ஆத்மா என்று கூட புரிந்து கொள்ளலாம், ஆனால் பரமாத்மாவின் அறிமுகம் கிடையாது. நான் ஆத்மா, அழிவற்றவன், இந்த சரீரம் அழியக் கூடியது என்றும் புரிந்து கொள்ளலாம், ஆனால் இவ்வாறு புரிந்து கொள்வதனால் விகர்மம் விநாசம் ஆவது கிடையாது. புண்ணிய ஆத்மா, பதீத ஆத்மா என்றும் கூறுகின்றனர். நான் ஆத்மா, இது எனது சரீரம். இது பொதுவான விசயமாகும். மூல விசயமாக தந்தை புரிய வைப்பது என்னை நினைவு செய்யுங்கள். சரீர நிர்வாகத்திற்காக தேக அபிமானத்தில் வர வேண்டும். தேகத்திற்கு உணவு கொடுக்க வேண்டும், தேகமின்றி எதுவும் செய்ய முடியாது. ஒவ்வொரு பிறப்பிலும் சரீர நிர்வாகத்தை செய்து வந்தீர்கள். காரியம் செய்தாலும் தனது நாயகனை நினைவு செய்யுங்கள். அந்த நாயகனைப் பற்றி யாருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. அந்த நாயகன் அதாவது தந்தையிடமிருந்து நமக்கு ஆஸ்தி கிடைக்க வேண்டும். மேலும் அவரது நினைவின் மூலம் விகர்மங்களும் விநாசம் ஆகும். இதனை யாரும் புரிய வைப்பது கிடையாது. குழந்தைகளாகிய நீங்கள் புது விசயங்களைக் கேட்கின்றீர்கள். வீட்டிற்குச் செல்வதற்கான வழி நமக்கு கிடைத்திருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். தனது வீட்டிற்குச் சென்று பிறகு ராஜ்ஜியத்திற்கு வருவோம். பாபா புது கட்டிடத்தை உருவாக்குகின்றார் எனில் கண்டிப்பாக உள்ளம் விரும்பும் அல்லவா? - அங்கு சென்று அமர வேண்டும். இப்பொழுது உங்களுக்கு வழி கிடைத்திருக்கின்றது. அதனை வேறு யாரும் அறியவில்லை. எவ்வளவு தான் யக்ஞம், தவம் போன்றவைகள் செய்கின்றனர், தலையை உடைத்துக் கொண்டே இருக்கின்றனர். சத்கதியை அடைய முடியாது. இந்த உலகிலிருந்து அந்த உலகிற்குச் செல்ல முடியாது. இதனையும் புரிந்து கொள்ள வேண்டும். சாஸ்திரங்களில் லட்சம் ஆண்டுகள் என்று எழுதி விட்டனர். அதனால் மனிதர்களின் புத்தி வேலை செய்வது கிடையாது. நீங்கள் நல்ல முறையில் புரிந்து கொள்ள முடியும் - நேற்றைய விசயமாகும். பாரதம் சொர்க்கமாக இருந்தது, நாம் ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்களாக இருந்தோம். தேவி தேவதா தர்மம் அதிக சுகம் கொடுக்கக் கூடிய தர்மமாகும். பாரதம் போன்ற சுகம் வேறு யாரும் அடைய முடியாது. சொர்க்கத்தில் வேறு எந்த தர்மத்தைச் சார்ந்தவர்களும் போக முடியாது. உங்கள் சுகம் போன்று வேறு யாருக்கும் இருக்க முடியாது. எவ்வளவு வேண்டுமென்றாலும் முயற்சி செய்து கொள்ளட்டும்! செல்வம் செலவு செய்தாலும் கூட சொர்க்கம் போன்ற சுகம் அடைய முடியாது. யாருக்காவது ஆரோக்கியம் இருக்கும், ஆனால் செல்வம் இருக்காது. சிலருக்கு செல்வம் இருக்கும், ஆனால் ஆரோக்கியம் இருக்காது. இது துக்கமான உலகமாகும். ஆக இப்பொழுது தந்தை கூறுகின்றார் - ஹே, ஆத்மாக்களே! விழித்தெழுங்கள். உங்களுக்கு இப்பொழுது ஞானம் என்ற மூன்றாவது கண் கிடைத்திருக்கின்றது. எவ்வளவு விழிப்புணர்வு வந்திருக்கின்றது! நீங்கள் முழு உலகின் சரித்திர பூகோளத்தை அறிந்திருக்கின்றீர்கள். தந்தை அனைத்தையும் அறிந்தவர் அல்லவா! அதற்காக அவர் அனைவரின் உள்ளத்தையும் அறிந்தவர் என்பது பொருள் அல்ல. இவர் யார்? எவ்வளவு புரிய வைக்கின்றார்? இவர் எவ்வளவு தூரம் தூய்மையாக இருக்கின்றார்? எவ்வளவு தூரம் பாபாவை நினைவு செய்கின்றார்? நான் ஒவ்வொருவரைப் பற்றியும் இவ்வாறு உட்கார்ந்து ஏன் சிந்திக்க வேண்டும் ..... ஆத்மாக்களாகிய நீங்கள் தங்களது பரம்பிதா பரமாத்மாவை நினைவு செய்யுங்கள் என்று நான் வழி கூறுகின்றேன். இந்த சிருஷ்டிச் சக்கரத்தை புத்தியில் வைக்க வேண்டும். கண்டிப்பாக ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். தேக அபிமானத்தின் காரணத்தினால் தான் உங்களுக்கு இந்த துர்கதி ஏற்பட்டிருக்கின்றது. இப்பொழுது நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். குடும்ப விவகாரத்தில் இருந்தாலும் தாமரை மலர் போன்று ஆக வேண்டும். சுவதரிசன சக்கரதாரிகளும் நீங்கள் தான், தேவதைகளிடத்தில் சங்கு போன்றவைகள் கிடையாது. இந்த ஞானம் என்ற சங்கு பிராமணர்களாகிய உங்களிடத்தில் இருக்கின்றது. சீக்கியர்கள் சங்கு ஊதுகின்றனர். மிக அதிகமான ஓசை எழுப்புகின்றனர். நீங்களும் இந்த ஞானத்தை வந்து கொடுக்கின்றீர்கள் எனில், பெரிய சபைகளில் ஒலிபெருக்கி (கர்ன்க் நல்ங்ஹந்ங்ழ்) வைக்கின்றீர்கள். நீங்கள் இங்கு ஒலிபெருக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆசிரியர் படிப்பு கற்பிக்கின்றார் எனில் ஒலிபெருக்கி வைத்துக் கொள்வாரா என்ன? இங்கு சிவபாபாவை மட்டுமே நினைவு செய்ய வேண்டும், அப்பொழுது விகர்மம் விநாசம் ஆகும். நான் சர்வசக்திவான் அல்லவா! ஓசை தூர தூரம் வரைக்கும் கேட்க வேண்டும் என்பதற்காக நீங்கள் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துகின்றீர்கள். அதுவும் நாளடைவில் காரியத்திற்குப் பயன்படும். மரணம் எதிரிலேயே இருக்கின்றது என்பதை நீங்கள் கூற வேண்டும். இப்பொழுது அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். மகாபாரத யுத்தமும் எதிரில் இருக்கின்றது. மகாபாரத யுத்தம் ஏற்பட்டது, விநாசம் ஏற்பட்டது என்று கீதையிலும் எழுதப்பட்டிருக்கின்றது. நல்லது, பிறகு என்ன நடந்தது? பாண்டவர்களும் மறைந்து இறந்து விட்டனர். தந்தை புரிய வைக்கின்றார் - முதலிலேயே விநாசம் ஆகிவிட்டால் பிறகு பாரதம் காலியாகி விடும். பாரதம் அழிவற்ற கண்டமாகும். காலியாக ஆவது கிடையாது. பிரளயம் ஏற்படுவது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியும். பாபா அழிவற்றவர் எனில் அவரது பிறப்பிடமும் அழிவற்றதாகும். குழந்தைகளுக்கு குஷி இருக்க வேண்டும் – அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் பாபா சுகம், சாந்தி கொடுக்கின்றார். யார் வந்தாலும் அமைதி வேண்டும் என்று கூறுகின்றனர். ஆத்மாவிற்கு அந்த அளவிற்கு அமைதி ஏன் நினைவிற்கு வருகின்றது? சாந்திதாமம் ஆத்மாக்களின் வீடு அல்லவா! வீடு யாருக்கு நினைவிற்கு இருக்காது. அயல்நாட்டில் யாராவது இறந்து விட்டால் இவரது சொந்த பூமிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல், துக்கத்திலிருந்து முக்தி கொடுக்கும் சிவபாபாவின் பிறப்பிடம் பாரதம் என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டால் அவருக்கு அதிக மதிப்பு இருக்கும். ஒரே ஒரு சிவனிற்கு அர்ச்சனை செய்வர். இப்பொழுது எத்தனை பேருக்கு மலர் தூவி அர்ச்சனை செய்து வருகின்றனர்! யார் அனைவருக்கும் சுகம் சாந்தி கொடுக்கக் கூடியவரோ அவரது பெயரையே மறைத்து விட்டனர். யார் தந்தையை நல்ல முறையில் அறிந்திருக்கின்றார்களோ அவர்கள் தான் ஆஸ்தி அடைவதற்கான முயற்சி செய்கின்றனர். எனது பெயரே துக்கத்தை நீக்கி சுகம் கொடுப்பவர். துக்கத்திலிருந்து விடுவித்து என்ன செய்வார்? சாந்தி தாமத்தில் சாந்தி இருக்கும், சுகதாமத்தில் சுகம் இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். சாந்திதாமத்தின் இடம் தனி, சுகதாமத்தின் இடம் தனி, இது துக்கதாமமாகும். அனைவருக்கும் இந்த நேரத்தில் துக்கமே துக்கம் தான். நாம் அப்படிப்பட்ட சுகத்திற்குச் செல்கின்றோம், அதாவது அங்கு 21 பிறவிகளுக்கு எந்த விதமாக துக்கமும் இருக்காது என்பதை நீங்கள் அறிவீர்கள். பெயரே சுகதாமம். எவ்வளவு இனிய பெயராகும்! தந்தை கூறுகின்றார் - உங்களுக்கு எந்த கஷ்டமும் கொடுப்பது கிடையாது. தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும். தன்னை ஆத்மா என்று உணர வேண்டும். இந்த ஞானம் பாபா உங்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றார். சத்யுகத்தில் ஆத்ம ஞானம் இருக்கின்றது, நான் ஆத்மா, இந்த சரீரத்தை விடுத்து அடுத்த பிறப்பு எடுப்பேன். இது ஆத்ம அபிமானி என்று கூறப்படுகின்றது. இது ஆன்மீக ஞானமாகும். வேறு யாரும் கொடுக்க முடியாது. ஆத்மாக்களுக்கு ஆன்மீகத் தந்தை வந்து ஞானம் கொடுக்கின்றார். ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு கொடுக்கின்றார். மனிதர்கள் முற்றிலும் ஆழ்ந்த இருளில் இருக்கின்றனர். இப்பொழுது அனைவருக்கும் வெளிச்சம் கிடைத்திருக்கின்றது. நீங்கள் அஞ்ஞான நித்திரையிலிருந்து விழித்திருக்கின்றீர்கள். அனைத்து நாயகிகளுக்கும் நாயகன் ஒரே ஒரு தந்தையாவார். தந்தை கூறுகின்றார் - நான் உங்களது தந்தையாகவும் இருக்கின்றேன், நாயகனாகவும் இருக்கின்றேன், குருக்களுக்கெல்லாம் குருவாகவும் இருக்கின்றேன். சுப்ரீம் ஆசிரியராக இருக்கின்றேன். அனைத்து குருக்களுக்கெல்லாம் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒரு சத்குரு ஆவார். குழந்தைகளே! நான் அனைவருக்கும் சத்கதி செய்கின்றேன் என்று கூறுகின்றார். கதிக்குப் பிறகு சத்கதி ஏற்படுகின்றது.



    தந்தை புரிய வைத்திருக்கின்றார் - ஒவ்வொரு ஆத்மாவும் திரும்பிச் செல்ல வேண்டும். ஆத்மா தான் சதோ பிரதானம், சதோ, ரஜோ, தமோவாக ஆகின்றது. சிலருக்கு மிகக் குறைந்த பாகம் இருக்கின்றது. வந்தனர், சென்றனர். கொசுக்களைப் போன்று பிறக்கின்றனர், இறந்து விடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய முடியாது. தந்தையிடமிருந்து தூய்மை, சுகம், சாந்திக்கான ஆஸ்தி அடைகின்றீர்கள். தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்குப் புரிய வைக்கின்றார். தந்தை நிராகாராக இருக்கின்றார். அவரும் இந்த வாயின் மூலம் புரிய வைக்கின்றார். சிவபாபாவின் கோயில்களும் கூட மிக உயர்வாக கட்டுகின்றனர். தீர்த்த யாத்திரைக்கு, மேளாவிற்காக மிக மிக தொலைவில் செல்கின்றனர். மேலே ஞான அமிர்தம் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கின்றதா என்ன? எவ்வளவு செலவு செய்கின்றனர்? அரசாங்கமும் கூட அவர்களுக்காக எவ்வளவு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கின்றது! தொந்தரவு ஏற்படுகின்றது அல்லவா! தீர்த்த யாத்திரைகளுக்கு சிறு குழந்தைகளை எப்படி அழைத்துச் செல்வார்கள்? குழந்தைகளை கவனிப்பதற்கு யாரிடத்திலாவது ஒப்படைத்து விட்டு சென்று விடுகின்றனர். கூட அழைத்துச் செல்வது கிடையாது. இரண்டு மூன்று மாதம் யாத்திரை செய்கின்றனர். இங்கு நீங்கள் வருகின்றீர்கள், நீங்கள் அமர்ந்து கேட்க வேண்டும், படிக்க வேண்டும். சிறு குழந்தை கேட்காது. நீங்கள் இங்கு வருவதே ஞானம் மற்றும் யோகா கற்றுக் கொள்வதற்காக. தந்தை வந்து ஞானம் கூறுகின்றார் எனில், எந்த ஓசையும் இருக்கக் கூடாது. இல்லையெனில் கவனம் செல்கின்றது. அமைதியாக அமர்ந்து கவனம் கொடுத்து கேட்க வேண்டும். யோகா மிகவும் எளிது. எந்த காரியமாவது செய்து கொண்டே இருங்கள். புத்தியின் தொடர்பானது (யோகா) அங்கு ஈடுபட்டிருக்க வேண்டும். பாபாவின் நினைவில் இருப்பதன் மூலம் வருமானம் மிக அதிக மாக கிடைக்கின்றது. நாம் சதா ஆரோக்கியமானவர்களாக ஆவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தனக்குத் தானே உரையாடல் செய்ய வேண்டியிருக்கின்றது. பாபாவின் நினைவில் இருந்து உணவையும் தனது கைகளினால் உருவாக்க வேண்டும். கைகளினால் காரியமும் செய்யுங்கள், மற்றபடி தனது தந்தையையும் நினைவு செய்யுங்கள். உங்களுக்கும் நன்மை ஏற்படும். மேலும் நினைவில் இருப்பதன் மூலம் பொருளும் நன்றாக உருவாகி விடும். உங்களுக்கு உலக ராஜ்ஜியம் கிடைக்கின்றது. நீங்கள் இங்கு வருவதே லெட்சுமி நாராயணன் ஆவதற்காக. நாம் சூரியவம்சி ஆவோம் என்று அனைவரும் கூறுகின்றீர்கள்.



    நமது மம்மா பாபா இந்த நேரத்தில் பிரம்மா சரஸ்வதியாக இருக்கின்றனர், அடுத்த பிறப்பில் லெட்சுமி நாராயணனாக ஆவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். எதிர்காலத்தில் யார் என்ன ஆவார்கள்? என்று யாருடைய பிறப்பு பற்றியும் யாருக்கும் தெரியாது. நேரு என்னவாகப் பிறந்தார்? யாருக்குத் தெரியும். சிறிது தானம் செய்திருந்தார் எனில் இங்கு நல்ல குலத்தில் பிறப்பு எடுப்பர். இப்பொழுது நீங்கள் முழுமையாக அறிந்து கொண்டீர்கள். இப்பொழுது இவர்களது பெயர் ஆதிதேவன் பிரம்மா, ஆதிதேவி சரஸ்வதி. அவர்களே பிறகு சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவார்கள். இவர்களது குழந்தைகளும் கூடவே இருப்பர். அவர்களும் நாம் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவோம் என்று கூறுவர். இது பக்காவாகும். சூட்சுமவதனத்திலும் நீங்கள் பார்க்கின்றீர்கள் - தேவிகளின் கோயில்களிலும் அதிக மேளா கொண்டாடுகின்றனர். இப்பொழுது ஜெகதம்மா ஒரே ஒருவர் தான். அவரது முகமும் ஒன்று போலவே இருக்க வேண்டும். மம்மாவையும் நீங்கள் பார்க்கின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கும் தோற்றம் இருக்கின்றது - பிறகு அதர்குமாரி என்று பெயர் வைத்து விட்டனர். நாம் தான் இவ்வாறு ஆகின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் அனைவரும் பிரம்மா குமார், குமாரிகள். (யுகல்களும்) நாம் பிரம்மா குமார், குமாரி என்று கூறுகின்றனர். ஒரு தந்தையின் குழந்தைகள். உங்களது நினைவுச் சின்னமாகும். இந்த ஞானத்தை நீங்கள் பொருளுடன் கொடுக்கின்றீர்கள். இது தில்வாலா கோயிலாகும். ஆனால் இதனை நீங்கள் தான் புரிய வைக்க முடியும். நாம் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றோம், இராஜயோகத்தின் மூலம் ஸ்ரீமத்படி பாரதத்தை சொர்க்கமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நல்லது.



    இனிமையிலும் இனிமையான செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1) ஞானம் மற்றும் யோகாவின் மீது முழுமையிலும் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். கேட்கும் பொழுது மிகவும் அமைதியாக, மன ஒருமையுடன் அமர வேண்டும். கர்மயோகிகளாகவும் ஆக வேண்டும்.



    2) தந்தை கூறிய வீட்டிற்கான வழியை அனைவருக்கும் கூற வேண்டும். சுவதரிசன சக்கரதாரி ஆவதன் கூடவே ஞான சங்கும் ஊத வேண்டும்.



    வரதானம்:

    பொறுப்புகளை கவனித்து கொண்டிருந்தாலும் ஆகாரி மற்றும் நிராகாரி நிலையின் பயிற்சி மூலமாக சாட்சாத்கார மூர்த்தி ஆகுக.



          சாகார ரூபத்தில் இவ்வளவு பொpய பொறுப்புகளை பாத்த்துக் கொண்டிருந்தாலும் ஆகாரி மற்றும் நிராகாரி நிலையின் அனுபவத்தை செய்வித்துக் கொண்டே இருப்பதை போன்று அப்பாவைப் பின்பற்றுங்கள். சாகார ரூபத்தில் µபாpஸ்தா நிலையை அனுபவம் செய்யுங்க்ள. யாh; எவ்வளவு தான் அசாந்தி அல்லது கழப்பத்தில் பயந்து தங்கள் முன் வந்தாலும் தங்களின் ஒருபார்வை. உள்ளுணர்வு மற்றும் நினைவின் சக்தி அவர்களை முற்றிலும் சாந்தமாக்கும். உடலின் உணர்வில் வந்தாலும் அவ்யக்த நிலையை அனுவம் செய்தால் தான் சாட்சாத்கார மூர்த்தி என்று கூறுவார்கள்.



    சுலோகன்:

    யார் உண்மையான இரக்க மனம் உடையவர்களோ அவர்களுக்கு தேகம் மற்றும் தேக அபிமானத்தின் கவர்ச்சி எற்படாது.



    ***OM SHANTI***