BK Murli 26 July 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 26 July 2016 Tamil

    26.07.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

    இனிமையான குழந்தைகளே - நீங்கள் பாபாவிற்குச் சமமாக உண்மையிலும் உண்மையான செய்தியாளராக, தூதுவராக வேண்டும், அனைவருக்கும் வீட்டிற்குச் செல்வதற்கான செய்தியைக் கொடுக்க வேண்டும்



    கேள்வி:-

    இன்றைக்கு இருக்கும் மனிதர்களுடைய புத்தி எந்த பக்கம் அலைபாய்கிறது?



    பதில்:-

    அலங்காரத்தின் பக்கம். மனிதர்களை கவர்ச்சிப்பதற்கு அனேக விதமான அலங்காரம் செய்கிறார்கள். இந்த அலங்காரங்களை படங்களிலிருந்து தான் கற்கிறார்கள். பார்வதி கூட இப்படி அலங்காரம் செய்திருந்தார் என்று நினைக்கிறார்கள், சிகை அலங்காரம் போன்றவைகளை செய்திருந்தார். குழந்தைகளாகிய நீங்கள் இந்த தூய்மையற்ற உலகத்தில் அலங்காரம் செய்ய வேண்டாம், என்று பாபா கூறுகின்றார். உங்களை அப்படிப்பட்ட இயற்கையான அழகு இருக்கும் உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். அலங்காரத்திற்கான அவசியமே கிடையாது.



    பாட்டு:-

    நீங்கள் தான் தாயும் தந்தையும்.....................



    ஓம் சாந்தி.

    குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். மகிமை பாடும்போது புத்தி மேலே சென்று விடுகிறது. அவர் தான் படகோட்டி, பதீத-பாவனன் அல்லது உண்மையிலும் உண்மையான செய்தியாளர் என்று ஆத்மா தான் பாபாவை சொல்கிறது. பாபா வந்து ஆத்மாக்களுக்கு செய்தி கொடுக்கின்றார், மற்றபடி யாரை செய்தி கொடுப்பவர் அல்லது அறிமுகமளிப்பவர் என்று சொல்லப்படுபவர்களில் சிலர் சிறியவர்களாகவோ அல்லது பெரியவர்களாகவோ இருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் செய்தியைக் கொடுப்பதில்லை. பொய்யான மகிமை செய்து விட்டார்கள். ஒரு பாபாவைத் தவிர இந்த மனித சிருஷ்டியில் வேறு யாருக்கும் மகிமை கிடையாது, என்பதை குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். அனைத்தையும் விட அதிக மகிமை இந்த லஷ்மி - நாராயணனுடையதாகும். ஏனென்றால் இவர்கள் புதிய உலகத்தின் எஜமானர்களாவர். அதையும் பாரதவாசிகள் தெரிந்திருக்கிறார்கள். பாரதம் பழமையான தேசம் என்பதை மட்டும் உலகத்தில் இருப்பவர்கள் தெரிந்திருக்கிறார்கள். பாரதத்தில் தான் தேவி- தேவதைகளின் இராஜ்ஜியம் இருந்தது. கிருஷ்ணரையும் இறைவன் என்று சொல்லி விட்டார்கள். பாரதவாசி கள் இவர்களை பகவான்-பகவதி என்று சொல்கிறார்கள். இந்த பகவான்-பகவதி சத்யுகத்தில் இராஜ்ஜியம் செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. பகவான் தேவி-தேவதைகளின் இராஜ்ஜியத்தை ஸ்தாபனை செய்தார். புத்தியும் நாம் பகவானின் குழந்தைகள் என்று தான் சொல்கிறது, அப்படி என்றால் நாமும் பகவான்-பகவதியாக இருக்க வேண்டும் அல்லவா? அனைவரும் ஒருவருடைய குழந்தைகளாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் பகவான்-பகவதி என்று சொல்ல முடியாது. அவர்களை தேவி-தேவதைகள் என்று சொல்லப்படுகிறது. இவையனைத்து விஷயங்களையும் பாபா வந்து புரிய வைக்கின்றார். பாரதவாசிகளாகிய நாங்கள் முதலில் புதிய உலகத்தில் இருந்தோம், என்று பாரதவாசிகள் சொல்வார்கள். அனைவரும் புதிய உலகத்தை விரும்புகிறார்கள். காந்திஜியும் கூட புதிய உலகம், புதிய இராமராஜ்ஜியம் வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இராமராஜ்ஜியம் என்பதின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. இன்றைக்கு மனிதர்களுக்கு தங்களுடைய அகங்காரம் எவ்வளவு இருக்கிறது. கலியுகத்தில் கல்புத்தி, சத்யுகத்தில் தங்கபுத்தியாகும். ஆனால் இந்த அறிவு யாருக்கும் இல்லை. பாரதம் தான் சத்யுகத்தில் தங்கபுத்தியுடையதாக இருந்தது. இப்போது பாரதம் கலியுகத்தில் கல்புத்தியாக இருக்கிறது. மனிதர்கள் இதையே சொர்க்கம் என்று புரிந்து கொள்கிறார்கள். சொர்க்கத்தில் விமானம் இருந்தது, பெரிய பெரிய மாளிகைகள் இருந்தன, அவையனைத்தும் இப்போது இருக்கிறது என்று சொல்வார்கள். அறிவியல் எவ்வளவு வளர்ந்திருக்கிறது, எவ்வளவு சுகம் இருக்கிறது. அலங்காரம் போன்றவை எவ்வளவு இருக்கிறது! புத்தி முழுவதும் முழு நாளும் அலங்காரத்திற்குப் பின்னாலேயே இருக்கிறது. செயற்கையாக அழகை அடைய முடி போன்றவைகளை எப்படி எல்லாம் மாற்றுகிறார்கள். இவையனைத்தையும் கவர்ச்சிப்பதற்காகவே உருவாக்குகிறார்கள். எவ்வளவு செலவு செய்கிறார்கள். இந்த அலங்காரங்கள் அனைத்தும் சித்திரங்களிலிருந்து வந்திருக்கிறது. பார்வதியைப் போல் நாம் முடியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இவையனைத்தையும் கவர்சிப்பதற்காகவே உருவாக்குகிறார்கள். முன்பு பாரசி மக்களின் பெண்கள் தங்களைப் பார்த்து விரும்பி விடக்கூடாதென்று முகத்தில் கருப்பு வலை போன்ற துணியை அணிவார்கள். இதனை வேஸ்யாலயம் தூய்மையற்ற உலகம் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் தான் தாயும் தந்தையும் நீங்கள் தான் என்று பாடுகிறார்கள், ஆனால் இப்படி யாரை சொல்ல வேண்டும்? தாய்-தந்தை யார்? என்பதை கூட தெரிந்திருக்கவில்லை. கண்டிப்பாக தாய்-தந்தையர் தான் ஆஸ்தி கொடுத்திருப்பார்கள். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு சுகத்தின் ஆஸ்தியை கொடுத்திருந்தார். பாபா நாங்கள் தாங்கள் சொல்வதைத் தவிர வேறு யார் சொல்வதையும் கேட்க மாட்டோம் என்றும் சொல்கிறார்கள். சிவபாபாவின் மகிமை பாடப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர் கள். பிரம்மாவின் ஆத்மா கூட அதுவே சொல்கிறது - நாம் தூய்மையாக இருந்தோம் இப்போது தூய்மையற்றவர்களாக ஆகியிருக்கிறோம். பிரம்மாவின் குழந்தைகளும் அப்படி சொல்வார்கள், பிரம்மாகுமார குமாரிகளாக இருந்து பிறகு 84 பிறவிகளின் கடைசியில் தூய்மையற்றவர்களாக ஆகியிருக்கிறோம். யார் நம்பர் ஒன் தூய்மையாக இருக்கிறார்களோ, அவர்கள் தான் நம்பர் ஒன் தூய்மையற்றவராக ஆகின்றார். எப்படி தந்தையோ அப்படி குழந்தைகள். பிரம்மா அவரே கூட கூறுகின்றார், சிவபாபாவும் கூட இவருடைய நிறைய பிறவிகளின் கடைசியில் நான் வருகின்றேன் என்று கூறுகின்றார். முதல் நம்பரில் பூஜிக்கத்தக்க லஷ்மி - நாராயணனின் இராஜ்ஜியத்தில் இருந்தார்கள். இப்போது சங்கமயுகமாகும், நீங்கள் கலியுகத்தில் இருந்தீர்கள், இப்போது சங்கமயுகத்தவர்களாக ஆகியுள்ளீர்கள். பாபா சங்கமயுகத்தில் தான் வருகின்றார், நாடகப்படி குழந்தைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது குழந்தைகளுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது. நாம் தான் தேவதைகளாக இருந்தோம் பிறகு சத்திரியர்களாக, வைசியர்களாக, சூத்திரர்களாக ஆகியிருக்கிறோம். முழு சக்கரத்தையும் நீங்கள் நன்றாக தெரிந்துள்ளீர்கள். நாம் 84 பிறவிகள் எடுத்திருக்கிறோம், இது மிகவும் சகஜமானதாகும். நிறைய பேருடைய புத்தியில் இது கூட நிற்பதில்லை. மாணவர்களில் வரிசைக்கிரமம் என்பது இருக்கத்தான் செய்கிறது. வலப்புறமிருந்து ஆரம்பித்தால் முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம், குழந்தைகள் கூட அவர்களாகவே எங்களுடையது மூன்றாம் தரம் புத்தி என்று அவர்களாகவே கூறுகிறார்கள். எங்களால் யாருக்கும் புரிய வைக்க முடியாது என்று கூறுகிறார்கள். மனம் நிறைய விரும்புகிறது ஆனால் பேச முடியவில்லை, பாபா என்ன செய்வது? இது தங்களுடைய கர்மத்தின் கணக்கு-வழக்காகும். இப்போது பாபா கூறுகின்றார் - நான் உங்களுக்கு கர்மம்-அகர்மம்-விகர்மத்தின் நிலையின் ஞானத்தை கூறுகின்றேன். கர்மம் செய்ய வேண்டும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். மூன்றாம் தர புத்தியுடையவர்கள் இந்த விஷயங்களை புரிந்து கொள்ள முடியாது. இது இருப்பதே இராவண இராஜ்ஜியமாகும், ஆனால் இது யாருக்கும் தெரியாது. இராவண இராஜ்ஜியத்தில் மனிதர்கள் விகர்மங்கள் தான் செய்வார்கள் எனும்போதும் கீழே விழத்தான் செய்வார்கள். துக்கமான உலகத்தில் தான் குருவிடம் செல்ல வேண்டியிருக்கிறது. சத்கதிக்காகவே குருவிடம் செல்கிறார்கள் முக்திக்கு அழைத்துச் செல்வதற்கு. அது நிர்வாண தாமமாகும் - சப்தத்திலிருந்து விடுபட்ட இடமாகும், மனிதர்கள் தங்களை வானப்பிரஸ்திகள் என்று சொல்கிறார்கள். அது வெறும் பேச்சுக்கு மட்டுமே ஆகும். வானப்பிரஸ்திகளின் சபையும் இருக்கிறது. அனைத்து சொத்துக்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு குருவிடம் சென்று அமர்ந்து விடுகிறார்கள். உணவு போன்றவற்றை கண்டிப்பாக குழந்தைகள் தான் கொடுப்பார்கள். ஆனால் வானப்பிரஸ்தம் என்பதின் அர்த்தத்தை யாரும் புரிந்து கொள்வதில்லை. நாம் நிர்வாணதாமத்திற்கு செல்ல வேண்டும், என்று யாருடைய புத்தியிலும் வருவதில்லை. அதை வீடாகப் புரிந்து கொள்வதில்லை. ஜோதி ஜோதியோடு ஐக்கியமாகி விடும் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். நிர்வாணதாமம் இருப்பதற்கான இடமாகும். முன்பெல்லாம் 60 வருடங்களுக்கு பிறகு வானப்பிரஸ்தம் போனார்கள். இது ஒரு விதியாகவே இருந்தது. இப்போது கூட அப்படி செய்கிறார்கள். சப்தத்தைக் கடந்து யாரும் செல்ல முடியாது என்று இப்போது நீங்கள் புரிய வைக்கலாம். இதற்கு பாபாவைத் தான் அழைக்கிறார்கள், ஹே பதீத பாவனன் தந்தையே வா, எங்களை தூய்மையாக்கி வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். முக்திதாமத்தில் ஆத்மாக்களின் வீடு இருக்கிறது. சத்யுகத்தில் யார் இருக்கின்றனர்! எப்படி விருத்தியாகிறது! என்று சத்யுகத்தைப் பற்றியும் குழந்தைகளாகிய உங்களுக்கு புரிய வைத்திருக்கிறேன். மக்கள்தொகை கூட யாருக்கும் தெரியவில்லை. இராமராஜ்ஜியத்தில் மக்கள்தொகை எவ்வளவு இருக்கும்! குழந்தைகள் போன்றவை எப்படி பிறவி எடுப்பார்கள்! எதையும் புரிந்து கொள்வதில்லை. இந்த நாடகத்தின் சக்கரத்தைப் புரிய வைக்கும் வித்வான், ஆச்சாரியார், பண்டிதர்கள் யாரும் இல்லை. 84 லட்சம் பிறவிகளின் சக்கரம் எப்படி இருக்க முடியும்? எவ்வளவு தவறான விஷயங்கள். நூல் முற்றிலும் சிக்கலில் இருக்கிறது. பாபா கர்மம்-அகர்மம்-விகர்மத்தின் அனைத்து ரகசியத்தையும் புரியவைத்திருக்கிறார், என்பதை இப்போது நீங்கள் தெரிந்திருக்கின்றீர்கள். சத்யுகத்தில் உங்களுடைய கர்மம், அகர்மமாக ஆகி விடுகிறது. அங்கே கெட்ட கர்மம் எதுவும் நடப்பதில்லை, ஆகையினால் கர்மம், அகர்மமாக ஆகி விடுகிறது. இங்கே மனிதர்கள் என்னவெல்லாம் கர்மம் செய்கிறார்களோ, அவை விகர்மங்களாக ஆகி விடுகிறது. நாம் சிறியவர்கள் பெரியவர்கள் அனைவருக்கும், முழு உலகத்திற்கும் இப்போது வானப்பிரஸ்த நிலை என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அனைவரும் சப்தத்தைக் கடந்து செல்லக் கூடியவர்கள். தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரே! வாருங்கள், வந்து எங்களை தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக்குங்கள்! என்று அழைக்கிறார்கள். ஆனால் எதுவரை தூய்மையான புதிய உலகம் வர வில்லையோ, அதுவரை இங்கே தூய்மையற்ற உலகத்தில் தூய்மையானவர்கள் யாரும் இருக்க முடியாது. இருக்கின்ற தூய்மையற்ற உலகம் அனைத்தும் அழிந்து விடப்போகிறது. நாம் மீண்டும் புதிய உலகத்திற்கு செல்ல வேண்டும், என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். எப்படி செல்வீர்கள்? இவையனைத்தும் ஞானமாகும். இது புதிய ஞானம், புதிய உலகம், அமரலோகம் அல்லது தூய்மையான உலகத்திற்கானதாகும். இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் அமர்ந்துள்ளீர்கள். இருக்கின்ற மற்ற மனிதர்கள் யாரும் பிராமணர்கள் கிடையாது, அவர்கள் கலியுகத்தில் இருக்கின்றார்கள், என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நாம் அனைவரும் சங்கமயுகத்தில் இருக்கிறோம். சத்யுகத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம், இது சங்கமயுகமாகும். அது சொர்க்கமாகும். அதனை சங்கமயுகம் என்று சொல்லப்படுவதில்லை. சங்கமம் இப்போதாகும். இந்த சங்கமயுகம் அனைத்திலும் சிறியதாகும். இதனை லீப் யுகம் என்று சொல்லப்படுகிறது, இதில் மனிதர்கள், பாவ ஆத்மாவிலிருந்து தர்மாத்மாவாக ஆகிறார்கள் ஆகையினால் இதனை தர்மாவு யுகம் என்றும் சொல்லப்படுகிறது. கலியுகத்தில் அனைத்து மனிதர்களும் அதர்மிகளாக இருக்கிறார்கள். அங்கே அனைவரும் தர்மாத்மாவாக இருக்கிறார்கள். பக்தி மார்க்கத்திற்கு எவ்வளவு அதிகமான தாக்கம் இருக்கிறது. கற்களினால் ஆன மூர்த்திகளை செய்கிறார்கள், அதை யாரும் பார்ப்பதால் மட்டுமே குஷி அடைந்து விடுகிறார்கள். இது கல் பூஜையாகும். பூஜைக்காக சிவனுடைய கோவிலுக்கு எவ்வளவு தூரம் செல்கிறார்கள். சிவனுடைய சித்திரத்தை வீட்டில் கூட வைக்கலாம். பிறகு இவ்வளவு தூரம் ஏன் அலைய வேண்டும்? இந்த ஞானம் இப்போது புத்தியில் வந்திருக்கிறது. இப்போது உங்களுடைய கண்கள் திறந்திருக்கிறது, புத்தியின் கபாலம் திறந்திருக்கிறது. பாபா ஞானம் கொடுத்திருக்கிறார். பரமபிதா பரமாத்மா இந்த மனித சிருஷ்டியின் விதைரூபமாவார், ஞானக்கடல், ஞானம் நிறைந்த வராவார். ஆத்மாவும் அந்த ஞானத்தை தாரணை செய்கிறது. ஆத்மா தான் ஜனாதிபதி போன்றவர்களாக ஆகிறது. மனிதர்கள் தேக-அபிமானிகளாக இருக்கின்ற காரணத்தால் தேகத்தையே மகிமை பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆத்மா தான் அனைத்தையும் செய்கிறது என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தை சுற்றி முற்றிலும் துர்கதியை அடைந்துள்ளீர்கள். இப்போது ஆத்மாக்களாகிய நாம் பாபாவை அறிந்து கொண்டோம். பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கிறோம். ஆத்மா கண்டிப்பாக சரீரத்தை தாரணை செய்ய வேண்டும். சரீரம் இல்லாமல் ஆத்மா எப்படி பேசும். எப்படி கேட்கும்! நான் நிராகாரமானவன் என்று பாபா கூறுகின்றார். நானும் சரீரத்தை ஆதாரமாக எடுக்கின்றேன். சிவபாபா இந்த பிரம்மாவின் சரீரத்தின் மூலம் சொல்கின்றார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இந்த விஷயங்களை பிரம்மாகுமார குமாரிகளாகிய நீங்கள் தான் புரிய வைக்கின்றீர்கள். உங்களுக்கு இப்போது ஞானம் கிடைத்திருக்கிறது. பிரம்மாவின் மூலம் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை நடக்கிறது. அதே தந்தை தான் இராஜயோகம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார், இதில் குழப்பமடைவதற்கான விஷயம் எதுவும் இல்லை. சிவபாபா நமக்கு புரிய வைக்கின்றார். பிறகு நாம் மற்றவர்களுக்குப் புரிய வைக்கின்றோம். நமக்கும் கூட சொல்பவர் சிவபாபா தான் ஆவார். இப்போது நாங்கள் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாகிக் கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் சொல்வீர்கள். இது இருப்பதே தூய்மையற்ற உலகம், இராவண இராஜ்ஜியம் அல்லவா, என்று பாபா புரிய வைக்கின்றார். இராவணன் பாவாத்மாக்களாக மாற்றுகின்றான். இதை வேறு யாரும் தெரிந்திருக்கவில்லை. இராவணனுடைய கொடும்பாவியை எரிக்கிறார்கள் ஆனால் எதையும் புரிந்து கொள்வதில்லை. சீதையை இராவணன் கவர்ந்து சென்று விட்டான், இதை செய்தான்............... எவ்வளவு கதைகளை அமர்ந்து எழுதியிருக்கிறார்கள். அமர்ந்து கேட்கும்போது அழுது விடுகிறார்கள். அவை அனைத்தும் கட்டுக் கதைகளாகும். பாபா நம்மை விகர்மங்களை வென்றவர்களாக மாற்றுவதற்கு புரிய வைக்கின்றார். என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று கூறுகின்றார். வேறு எங்கேயும் புத்தியை ஈடுபடுத்தாதீர்கள். சிவபாபா நமக்கு அவருடைய அறிமுகத்தை கொடுத்திருக்கிறார். தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் பாபா வந்து தன்னுடைய அறிமுகத்தை கொடுக்கின்றார். இப்போது நீங்கள், எவ்வளவு இனிமையான பாபா என்று புரிந்து கொள்கிறீர்கள், அவர் நம்மை சொர்க்கத்திற்கு எஜமானர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார். நல்லது!



    இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம்:-

    1) கர்மம்-அகர்மம் மற்றும் விகர்மத்தின் நிலையை தெரிந்து உயர்ந்த கர்மம் செய்ய வேண்டும். ஞான தானம் செய்து தர்மாத்மாவாக ஆக வேண்டும்.



    2) இது வானப்பிரஸ்த நிலையாகும் - இந்த கடைசி நேரங்களில் தூய்மையாகி தூய்மையான உலகத்திற்குச் செல்ல வேண்டும். தூய்மையாவதற்கான செய்தியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.



    வரதானம்:

    பற்றுதலை பற்றற்றதாக மாற்றி விடக் கூடிய சக்தி சொரூபம் ஆவிர்களாக.



    சக்தி சொரூபம் ஆக வேண்டும் என்றால் பற்றுதலை பற்றற்றதாக மாறி விடுங்கள். தங்களது தேகத்தில், சம்பந்தங்களில் ஏதாவது பொட்களில் எங்காவது பற்றுதல்(ஈர்ப்பு) இருக்கிறது என்றால் மாயை கூட வர முடியும். மேலும் சக்தி ரூபமாக ஆக முடியாமல் போய் விடும். எனவே முதலில் பற்றற்றவராக ஆகுங்கள். அப்பொழுது மாயையின் தடைகளை எதிர்; கொள்ள முடியும். தடைகள் வரும் பொழுது கத்துவதற்கு அல்லது பயப்படுவதற்குப் பதிலாக சக்தி ரூபத்தை தாரணை செய்து கொண்டு விட்டீர்கள் என்றால் தடைகளை வென்றோர்;(விக்கின விநாசகர்;) ஆகி விடுவீர்கள்.



    சுலோகன்:

    கருணை என்பது சுயநலமற்றதாகவும் பற்றுதல்களிலிருந்து விடுபட்டதாகவும் இருக்க வேண்டும், சுயநலத்துடன் கூடியதாக இருக்கக் கூடாது.


    ***OM SHANTI***