BK Murli 3 July 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 3 July 2016 Tamil

    03.07.2016  காலை முரளி  ஓம் சாந்தி  ''அவ்யக்த பாப்தாதா''  ரிவைஸ் 14.01.1981  மதுபன்

     '' அனைத்து பொக்கிஷங்களின் சாவி ஒரு வார்த்தை - ''பாபா'' ''


    இன்று பாக்கியத்தை உருவாக்கும் தந்தை தன்னுடைய பாக்கியசாலி குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். பாக்கியசாலியாகவோ அனைவரும் ஆகியிருக்கிறார்கள். ஆனால் பாக்கியசாலி வார்த்தையின் முன்பு சௌபாக்கியசாலி எங்கே, பலகோடி மடங்கு பாக்கியசாலி எங்கே! பாக்கியசாலி என்ற வார்த்தை மேலே கூறிய இரண்டிற்கும் கூறப்படுகிறது. எங்கே நூறு மேலும் எங்கே பலகோடி, வித்தியாசம் உள்ளதில்லையா. பாக்கியத்தை உருவாக்குபவர் ஒரே ஒருவர் தான். உருவாக்குவதற்கான விதியும் ஒன்றே தான். காலம் மற்றும் வேளையும் ஒன்றே தான். இருந்தும் வரிசைக்கிரமம் ஆகிவிட்டார்கள். உருவாக்குபவரின் விதி எவ்வளவு உயர்ந்தது மற்றும் சுலபமானது. எப்படி உலகியல் முறையில் கூட இன்றைய நாட்களில் யார் மேலேயாவது கிரஹங்களின் சோதனை காரணமாக அதிர்ஷ்டம் மாறிவிடுகிறது என்றால், அந்த சோதனையை அகற்றுவதற்காக, உயர்ந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக எத்தனை விதமான விதிகளைச் செய்கிறார்கள். எவ்வளவு நேரம், எவ்வளவு சக்தி மற்றும் செல்வத்தை செலவு செய்கிறார்கள். இருந்தும் அற்ப காலத்தின் எதிர்காலம் உருவாகிறது. ஒரு ஜென்மத்திற்குக் கூட உத்திரவாதம் கிடையாது. ஏனென்றால், அவர்கள் உருவாக்குபவர் மூலமாக எதிர் காலத்தை மாற்றுவதில்லை. அற்பமான, அற்ப சித்தியை பெற்றிருக்கும் நபர் மூலமாக அற்ப காலத்தின் பிராப்தி அடைகிறார்கள். அவர் அற்பமான நபர் மேலும் இங்கே உருவாக்குபவர். உருவாக்குபவர் மூலமாக அழியாத எதிர்காலத்தின் ரேகையை போட்டுக் கொள்ள முடியும். ஏனென்றால் பாக்கியத்தை உருவாக்கும் இரண்டு தந்தைகளும் இந்த நேரம் குழந்தைகளுக்காக ஆஜராக இருக்கிறார்கள். எந்த அளவு உருவாக்குபவரிடமிருந்து பாக்கியத்தைப் பெற விரும்புகிறீர்களோ அந்த அளவு இப்பொழுது பெற முடியும். இந்த நேரம் பாக்கியத்தை உருவாக்குபவர் பாக்கியத்தைக் கொடுப்பதற்காக வந்திருக்கிறார். நாடகத்தின் அனுசாரம் இந்த நேரத்திற்கு வரதானம் இருக்கிறது. பாக்கியத்தின் நிரம்பிய களஞ்சியம் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது, உடலின் களஞ்சியம், மனதின், செல்வத்தின், இராஜ்ஜியத்தின், இயற்கையை தாசியாக (வேலைக் காரர்) ஆக்குவதின், பக்தனாக ஆக்குவதற்காக இப்படி அனைத்து பாக்கியத்தின் களஞ்சியங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. யாருக்கும் உருவாக்குபவர் மூலமாக விசேஷ பிராப்திக்கான வாய்ப்பு கிடைப்பதில்லை, அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்பு. ஏதாவது விஷயத்தின் காரணமாகவும் பந்தனத்தின் ரூபத்தில் இல்லை. பிற்காலத்தில் வந்ததின் காரணமாக, இல்லறத்தில் இருக்கும் காரணமாக, உடல் நோயின் காரணமாக, ஆயுளின் காரணமாக, ஸ்தூல பட்டம் அல்லது படிப்பின் காரணமாக, எந்த விதமான காரணத்தின் பூட்டு களஞ்சியத்தில் போடப்பட வில்லை. இரவு பகலாக பாக்கியத்தை உருவாக்குபவரின் களஞ்சியம் நிரம்பி மற்றும் திறந்திருக்கிறது. எந்தவொரு காவலாளியும் இல்லை. இருந்தும் பாருங்கள், பெறுவதில் வரிசைக்கிரமம் ஆகிவிடுகிறார்கள். பாக்கியத்தை உருவாக்குபவர் வரிசைக்கிரமத்தில் கொடுப்பதில்லை, இங்கே பாக்கியத்தைப் பெறுவதற்காக (க்யூ) வரிசையோ இல்லை தானே ! அமிர்தவேளையில் பாருங்கள், பாரதம் மற்றும் வெளிநாட்டின் அனைத்து குழந்தைகளும் ஒரே நேரத்தில் பாக்கியத்தை உருவாக்குபவருடன் சந்திப்பை செய்வதற்கு வருகிறார்கள் என்றால் சந்திப்பு நடந்து விடுகிறது. சந்திப்பதே கிடைப்பதாகிவிடுகிறது. யாசிப்பதோ இல்லை ஆனால் மிகப் பெரிய தந்தையை சந்திப்பது என்றால் பாக்கியத்தின் பிராப்தியை அடைவது. ஒன்று தந்தை குழந்தைளுக்கு கிடைப்பது மற்றும் இன்னொன்று ஏதாவது பொருள் கிடைப்பது. அப்படி சந்திப்பும் ஆகிவிடுகிறது மற்றும் பாக்கியம் கிடைப்பதும் ஆகிவிடுகிறது. ஏனென்றால் பெரிய மனிதர் ஒருபொழுதும் யாரையும் வெறும் கையோடு அனுப்ப முடியாது, ஆக தந்தையோ உருவாக்குபவர், வரமளிப்பவர், நிரம்பிய களஞ்சியம் உடையவர். காலியாக எப்படி அனுப்ப முடியும்? இருந்தும் பாக்கியசாலி, சௌபாக்கியசாலி, பலமடங்கு பாக்கியசாலி, பலகோடி மடங்கு பாக்கியசாலியாக ஏன் ஆகிறார்கள்? கொடுப்பவரும் இருக்கிறார், பாக்கியத்தின் பொக்கிஷமும் நிரம்பி இருக்கிறது. நேரத்தின் வரதானமும் இருக்கிறது. இந்த அனைத்து விஷயங்களின் ஞானம் அதாவது அறிவும் இருக்கிறது. அறியாத வராகவும் இல்லை, இருந்தும் ஏன் வித்தியாசம்? (நாடகத்தின் அனுசாரம்) நாடகத்திற்கும் இப்பொழுது வரதானம் இருக்கிறது, எனவே நாடகம் என்று கூற முடியாது.



    விதி கூட பாருங்கள் எவ்வளவு சரளமானது. எந்தவொரு கடின உழைப்பையும் கூறுவதில்லை. தடுமாறவும் வைப்பதில்லை. செலவு செய்விப்பதில்லை. விதியும் ஒரே ஒரு வார்த்தை தான். அது எந்த ஒரு வார்த்தை? ஒரு வார்த்தையை தெரிந்திருக்கிறீர்களா? ஒரே ஒரு வார்த்தை தான். அனைத்து பொக்கிஷங்களின் மற்றும் உயர்ந்த பாக்கியத்தின் சாவி. சாவியும் அது தான், விதியும் அது தான். அது என்ன? 'பாபா' என்ற வார்த்தை தான் சாவி மற்றும் விதி. அப்படி சாவியோ அனைவரிடமோ இருக்கிறது தான் இல்லையா? இருந்தும் ஏன் வித்தியாசம்? ஏன் சாவி மாட்டிக் கொள்கிறதா? வலது பக்கத்திற்குப் பதிலாக இடது பக்கம் திருப்பி விடுகிறீர்கள். சுயசிந்தனைக்குப் பதிலாக பரசிந்தனை, இது தவறான பக்கம் சுற்றிய சாவி. சுயதரிசனத்திற்கு பதிலாக பரதரிசனம். மாறுவதற்கு பதிலாக பழி வாங்கும் பாவனை, சுயபரிவர்த்தனைக்குப் பதிலாக மற்றவர்கள் மாற வேண்டும் என்ற ஆசை வைப்பது. வேலை என்னுடையது, பெயர் கிடைப்பது தந்தைக்கு என்ற இதற்கு பதிலாக பெயர் எனக்கு, செய்வது தந்தை என்று இந்த விதமாக சாவியை தவறாகச் சுற்றிவிடுகிறார்கள். எனவே கஜானாக்கள் இருந்தபோதிலும் பாக்கியம் இல்லாதவராகி கஜானாவை அடைய முடிவதில்லை. பாக்கியத்தை உருவாக்குபவரின் குழந்தைகள் என்னவாக ஆகிவிடுகிறார்கள். கொஞ்சம் அஞ்சலி பெறுபவர்களாக ஆகிவிடுகிறார்கள். வேறு என்ன செய்கிறார்கள்?



    இன்றைய நாட்களின் உலகத்தில் மதிப்பு நிறைந்த பொருட்களை பாதுகாப்பு பெட்டகம் அல்லது இரும்பு பெட்டியில் வைக்கிறார்கள். அதை திறப்பதற்கான விதியாக இரண்டு சாவிகள் போடுகிறார்கள் மற்றும் இரண்டு முறை சாவியைத் திருப்ப வேண்டியதாக இருக்கும். ஒருவேளை இந்த விதியைக் கடைபிடிக்கவில்லை என்றால் வைக்கப்பட்ட பொருட்களை எடுக்க முடியாது. பாதுகாப்பு பெட்டகத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம் - நீங்கள் ஒரு சாவியை போடுவீர்கள், இன்னொரு சாவியை வங்கியைச் சேர்ந்தவர்கள் போடுவார்கள். அப்படி இரண்டு சாவி இருக்கும் இல்லையா? ஒருவேளை நீங்கள் உங்களுடைய சாவியை மட்டும் போட்டு திறக்க விரும்புனீர்கள் என்றால் கூட திறக்க முடியாது. அப்படி இங்கேயும் நீங்கள் மற்றும் தந்தை இருவர்களின் நினைவின் சாவி தேவையாக இருக்கிறது. அனேக குழந்தைகள் தன்னுடைய போதையில் வந்து நான் அனைத்தையும் தெரிந்து கொண்டேன் என்று கூறுகிறார்கள், நான் என்ன விரும்புகிறேனோ அதைச் செய்ய முடியும், செய்விக்க முடியும். தந்தையோ என்னை எஜமானன் ஆக்கிவிட்டார் என்று கூறுகிறார்கள். அப்படி தவறாக நான் என்ற போதையில் தந்தையுடன் இருக்கும் சம்மந்தத்தை மறந்து, தானே அனைத்தும் என்று நினைக்கத் தொடங்குகிறார்கள். மேலும் ஒரே சாவி மூலமாக பொக்கிஷத்தைத் திறக்க விரும்புகிறார்கள். அதாவது பொக்கிஷத்தை அனுபவம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் தந்தையின் உதவியின்றி மற்றும் துணையின்றி பொக்கிஷம் கிடைக்காது, எனவே இரண்டு சாவிகள் வேண்டும். சில குழந்தைகள் பாப்தாதா அதாவது இரண்டு தந்தைகளுக்குப் பதிலாக, தந்தை (சிவபாபா) மூலமாக பொக்கிஷத்தின் எஜமானன் ஆவதற்கான விதியைக் கடைபிடிக்கிறார்கள். இதன் காரணமாகவும் பிராப்தியிலிருந்து வஞ்சிக்கப்பட்டவர் ஆகிவிடுகிறார்கள். எங்களுக்கு நிராகாரமான தந்தையுடன் நேரடி தொடர்பு இருக்கிறது, சாகார பிரம்மா பாபாவும், நிராகார சிவபாபாவிடமிருந்து தான் பெற்றார். எனவே நாங்களும் நிராகார சிவபாபா மூலமாகவே அனைத்தையும் பெற்று விடுவோம், சாகார பாபாவின் அவசியம் என்ன இருக்கிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் அந்த மாதிரியான சாவி உடைந்த சாவி ஆகிவிடுகிறது. எனவே வெற்றி கிடைப்பதில்லை. இதில் வேடிக்கை என்ன வென்றால், தன்னுடைய பெயரை பிரம்மா குமார், குமாரி என்று கூறுவார்கள் மற்றும் தொடர்பை சிவபாபாவுடன் வைத்துக் கொள்வார்கள். அப்படியானால் தன்னை சிவகுமார், குமாரி என்று கூறுங்களேன்! ஏன் பிரம்மாகுமார், குமாரி என்று கூறுகிறீர்கள்? உங்களுடைய குடும்பப் பெயரே சிவவம்சி பிரம்மா குமார், பிரம்மா குமாரி என்றால், இரண்டு தந்தைகளின் சம்மந்தம் உள்ளதில்லையா?



    இன்னொரு விஷயம் - சிவபாபாவும் பிரம்மா மூலமாகத்தான் தன்னை பிரத்யக்ஷம் செய்திருக்கிறார். பிரம்மா மூலமாக பிராமணர்களைத் தத்தெடுத்திருக்கிறார். தனியாகச் செய்யவில்லை. பிரம்மா அம்மா தந்தையின் அறிமுகம் கொடுத்தார். பிரம்மா தாய் குழந்தைகளை வளர்த்து தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதற்கான தகுதியானவர் ஆக்கினார். மூன்றாவது விஷயம் இராஜ்ய பாக்கியத்தின் பலனை அடைவதில் யாருடன் வருவீர்கள்? நிராகாரமானவரோ நிராகார உலக வாசியாக ஆகிவிடுவார். சாகார பிரம்மா பாபாவின் கூடவே இராஜ்ய பாக்கியத்தின் பலனை அனுபவிப்பீர்கள். இவ்வுலகில் கதாநாயகனின் பங்கை ஏற்று செய்வதின் சம்மந்தம் சாகார பிரம்மா பாபாவுடன் இருக்கிறதா அல்லது நிராகாரமானவருடன் இருக்கிறதா? எனவே சாகார பாபா இன்றி அனைத்து பாக்கியத்தின் களஞ்சியத்தின் எஜமானனாக எப்படி ஆக முடியும்? அப்படி உடைந்த சாவியைப் போடாதீர்கள். பாக்கியத்தை உருவாக்குபவர் பிரம்மா மூலமாகத்தான் பாக்கியத்தை விநியோகித்தார். பிரம்மா குமார், குமாரியைத் தவிர வேறு யாருக்கும் பாக்கியம் உருவாக முடியாது.



    உங்களுடைய நினைவு சின்னத்திலும் கூட பிரம்மா எப்பொழுது பாக்கியத்தை விநியோகித்தாரோ அப்பொழுது தூங்கிக் கொண்டிருந்தீர்களா? என்று கூட ஒரு பேச்சு உள்ளது. தூங்கிக் கொண்டிருந்தீர்களா அல்லது காணாமல் போய் விட்டீர்களா? எனவே தலைகீழாகச் சாவியை போடாதீர்கள். இரண்டு சாவிகளையும் போடுங்கள். இரண்டு தந்தையும் இருக்கிறார்கள், மேலும் நீங்கள் மற்றும் தந்தையும் இருவர்கள், இந்த சுலபமான விதியின் மூலம் நிரந்தரமாக பாக்கியத்தின் பொக்கிஷங்களினால் பலகோடி மடங்கு பாக்கியசாலி ஆக முடியும். காரணத்திற்கு நிவாரணம் செய்தீர்கள் என்றால், எப்பொழுதும் சம்பன்னம் ஆனவர்கள் ஆகிவிடுவீர்கள். புரிந்ததா? நல்லது.



    அந்த மாதிரி பாக்கியத்தை உருவாக்குபவரின் நிரந்தரமாக உயர்ந்த பாக்கியம் நிறைந்த குழந்தைகளுக்கு, சகஜ விதி மூலமாக உருவாக்குபவரையும் தன்னுடையவராக ஆக்கக்கூடிய, எப்பொழுதும் அனைத்து பாக்கியத்தின் பொக்கிஷங்களோடு விளையாடக்கூடிய, 'பாபா, பாபா' என்று சொல்ல வேண்டியது இல்லை ஆனால் 'பாபாவை' த்தன்னுடையவராக்கி மற்றும் பொக்கிஷங்களை அடைய வேண்டும், அந்த மாதிரி எப்பொழுதும் கட்டளைப்படி நடக்கும் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    பார்ட்டிகளுடன் தனிப்பட்ட சந்திப்பு -

    அதிகமாக கேட்டோ இருக்கிறீர்கள், கேட்ட பிறகு சொரூபமாக ஆகியிருக்கிறீர்களா? கேட்பது என்றால், சொரூபம் ஆவது. இதைத் தான் மனதிற்கு ரசனை என்று சொல்வது. கேட்பது மட்டும் இருக்கிறது என்றால் அது காதுக்கு ரசனையாக ஆகிவிட்டது. ஆனால் கேட்பது மற்றும் ஆவது இது தான் மனதிற்கு ரசனை. மந்திரமே மன்மனாபவ ! அதாவது மனதால் என் ஒருவனை மட்டும் நினைவு செய் என்றிருக்கிறது. மனதை தந்தையோடு இணைக்க வேண்டும். எப்பொழுது மனம் இணைந்து விடுகிறதோ, மேலும் மனம் எங்கே இருக்குமோ, அங்கே சொரூபமும் சுலபமாக ஆகிவிடும். பாருங்கள் எப்படி ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்திருந்து மனம், சுகம் மற்றும் குஷியின் விஷயங்களில் சென்று விடுகிறது என்றால் சொரூபமே அதுவாக ஆகிவிடுகிறது. அப்படி மனதின் ரசனை என்றால் எங்கு மனம் இருக்குமோ அந்த மாதிரி ஆகிவிடுவார்கள். இப்பொழுது காது ரசனைக்கான காலம் முடிந்து போயிற்று மேலும் மனதின் ரசனைக்கான காலம் நடந்து கொண்டிருக்கிறது. ஆக இப்பொழுது என்னவாகிவிட்டீர்கள்? பாக்கியத்தின் கஜானாக்களின் எஜமானன், மிக உயர்ந்த பாக்கியவான் ஆகிவிட்டீர்கள் இல்லையா? எப்படி தந்தையோ அப்படி நாங்கள். அந்த மாதிரி நினைக்கிறீர்கள் தான் இல்லையா? சாவியையும் கூறியிருக்கிறோம், மேலும் விதியையும் கூறியிருக்கிறோம். இப்பொழுது சாவியைப் போடுவது உங்களுடைய வேலை. சாவி போட்டு திறக்கத் தெரியும் இல்லையா? ஒருவேளை சாவியைத் தவறாக சுற்றிவிட்டீர்கள் என்றால், மிகக் கடினமாகிவிடும். சாவியும் உடைந்து விடும் கஜானாவும் சென்று விடும். அப்படி நீங்கள் அனைவரும் நேராக சாவி போடக்கூடிய பல கோடி மடங்கு பாக்கியசாலிகள் தான் இல்லையா? பல கோடி மடங்கு பாக்கியசாலியின் அடையாளமாக என்ன இருக்கும்? அவருடைய ஒவ்வொரு அடியிலும் பல மடங்கு இருக்கும். மேலும் அவர் ஒவ்வொரு அடியிலும் பல மடங்கு வருமானத்தை சேமிப்பு செய்வார். ஒரு அடி கூட பல மடங்கு வருமானத்திலிருந்து வஞ்சிக்கப்பட்டதாக இருக்காது. எனவே இரு மடங்கு, ஒரு மடங்கு என்று தாமரை மலரையும் கூறுகிறார்கள். ஒருவேளை தாமரை மலருக்குச் சமமாக இல்லை என்றால் கூட, தன்னுடைய பாக்கியத்தை உருவாக்க முடியாது. சேற்றில் மாட்டிக்கொள்வது என்றால், பாக்கியத்தை இழப்பது. அப்படி பதமாபதம் பாக்கியசாலி என்றால் பதம் (தாமரை) சமமாக இருப்பது. மேலும் பல மடங்கு வருமானம் செய்வது ! அப்படி இந்த இரண்டுமே அடையாளங்கள். எப்பொழுதும் விலகியிருப்பவராக மற்றும் தந்தைக்குப் பிரியமானவராக ஆகியிருக்கிறீர்களா? விலகி இருக்கும் நிலை தான் தந்தைக்குப்பிரியமானது. யார் எந்தளவு விலயிருப்பாரோ அந்த அளவு இயல்பாகவே தந்தைக்குப் பிரியமானவராக ஆகிவிடுகிறார். ஏனென்றால், தந்தையும் எப்பொழுதும் விலகியிருக்கிறார். அப்படி அவரும் தந்தைக்குச் சமமாக ஆகிவிட்டார் இல்லையா? அப்படி ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு அடி என்றால் ஒவ்வொரு விநாடி, ஒவ்வொரு எண்ணத்தில், ஒவ்வொரு வார்த்தையில், ஒவ்வொரு காரியத்தில் பல மடங்கு வருமானம் ஆகிறதா என்று சோதனை செய்யுங்கள். வார்த்தைகளும் சக்திசாலியான, காரியமும் சக்திசாலியானதாக, எண்ணமும் சக்திசாலியானதாக இருக்கிறதா என்று சோதனை செய்யுங்கள். சக்தி நிறைந்த நிலையில் வருமானம் இருக்கும், வீணானதில் வருமானம் சென்று விடும். எனவே ஒவ்வொருவரும் தன்னுடைய சார்ட்டை நீங்களே சோதனை செய்யுங்கள். செய்வதற்கு முன்பு சோதனை செய்வது, இது தான் யதார்த்தமான சோதனை. ஆனால் செய்த பிறகு சோதனை செய்தீர்கள் என்றால் எதைச் செய்துவிட்டோமோ அதுவோ நடந்து விட்டது இல்லையா? எனவே முதலில் சோதனை செய்ய வேண்டும், பிறகு செய்ய வேண்டும். முதலில் யோசிப்பது பிறகு செய்வது, இது தான் விவேகம் நிறைந்த மற்றும் ஞானம் நிறைந்தவரின் அடையாளம். செய்த பிறகு ஒருவேளை யோசித்தீர்கள் என்றால் பாதியை இழந்தீர்கள், பாதியை அடைந்தீர்கள். செய்வதற்கு முன்பு யோசித்தீர்கள் என்றால், எப்பொழுதுமே அடைந்தீர்கள். ஞானம் நிறைந்த ஆத்மா அதாவது விவேகமானவர் இரவு மற்றும் காலையில் மட்டும் சோதனை செய்வதில்லை, ஆனால் ஒவ்வொரு நேரமும் முதலில் சோதனை செய்வார் பிறகு செய்வார். எப்படி பெரிய மனிதர்கள் முதலில் உணவை சோதனை செய்விப்பார்கள், பிறகு அருந்துவார்கள். அப்படி இந்த எண்ணமும் புத்திக்கான உணவாகும். எனவே குழந்தைள் நீங்கள் எண்ணத்திற்கும் சோதனை செய்து பிறகு ஏற்றுக் கொள்ள வேண்டும் அதாவது காரியத்தில் கொண்டு வர வேண்டும். எண்ணமே சோதனை ஆகிவிட்டது என்றால் வார்த்தைகள் மற்றும் கர்மம் இயல்பாகவே சோதனை செய்ததாக ஆகிவிடும். விதையே எண்ணம் தான் இல்லையா? உங்களை மாதிரி பெரியவர்கள் கல்பத்திலேயே வேறு யாரும் இருந்ததே இல்லை.



    டீச்சர்களுடன் சந்திப்பு -

    சேவாதாரியின் விசேஷமே தியாகம் மற்றும் தபஸ்யா. எங்கு தியாகம் மற்றும் தபஸ்யா இருக்கிறதோ அங்கு சேவாதாரியின் வெற்றி எப்பொழுதுமே இருக்கும். சேவாதாரி என்றால், யாருக்கு ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் இல்லையோ அவர் தான். ஒரு தந்தை தான் முழு உலகம். எப்பொழுது உலகமே தந்தையாகி விட்டார் என்றால், வேறு என்ன வேண்டும்? தந்தையைத் தவிர வேறு எதுவும் தென்பட வேண்டாம். அனைத்துக் காரியங்களைச் செய்து கொண்டே சென்றாலும், வந்தாலும் மற்றும் உணவு அருந்தினாலும் ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை. இந்த எண்ணத்தை மட்டுமே வைப்பது என்றால், வெற்றி அடைபவர் ஆவது. வெற்றி குறைவாக இருக்கிறது என்றால் அவசியம் பாப்தாதாவுடன் வேறு யாரோ இடையில் வந்து விட்டார்கள். இதை சோதனை செய்யுங்கள். வெற்றி அடைபவரின் அடையாளம் ஒரு தந்தையில் முழு உலகமும் இருக்கிறது.



    குமாரிகளுடன் சந்திப்பு -

    குமாரிகளைப் பார்த்து பாப்தாதா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். ஏன்? ஏனென்றால், ஒவ்வொரு குமாரியும் அனேகர்களை விழித்தெழச் செய்வதற்குப் பொறுப்பாளர் ஆவார். அப்படி குமாரிகளின் எதிர்காலத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம். ஒவ்வொரு குமாரியும் உலகிற்கு நன்மை செய்பவராக ஆவார். குடும்பத்திற்கு மட்டும் நன்மை செய்பவராக இன்றி, உலகிற்கு நன்மை செய்பவராக ஆவார். ஒருவேளை குமாரி குடும்பஸ்தர் ஆகிவிட்டார் என்றால் குடும்பத்திற்கு மட்டும் நன்மை செய்பவர் ஆகிவிட்டார். ஆனால் பிரம்மாகுமாரி ஆகிவிட்டார் என்றால், உலகிற்கே நன்மை செய்பவர் ஆகிவிடுகிறார். நீங்கள் அனைவரும் என்னவாக ஆகிறவர்கள்? பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால், குமாரிகளுக்கு பக்தி காலத்தின் இறுதியில் கூட பூஜை நடக்கிறது அப்படி இறுதி வரையிலும் அந்த அளவு பூஜை நடக்கிறது. குமாரிகளின் வாழ்க்கைக்கு மிகுந்த மகத்துவம் உண்டு. குமாரிகளுக்கு பிராமண வாழ்க்கையில் லிஃப்ட்டும் இருக்கிறது. குமாரிகள் எவ்வளவு விரைவில் சேவை நிலையத்தின் பொறுப்பாளர் ஆகிவிடுகிறார். குமாரர்களுக்கு காலம் தாழ்த்தி வாய்ப்பு கிடைக்கிறது. குமாரி ஒருவேளை பந்தயத்தில் முன்னேறிச் சென்றார் என்றால், தன்னை மிக அதிகமாக முன்னேறச் செய்ய முடியும். ஒரு குமாரி அனேக சேவை நிலையங்களைக் கவனிக்க முடியும். டிராமா அனுசாரம் இந்த லிஃப்ட் கிஃப்ட்டின் ரூபத்தில் கிடைத்திருக்கிறது. கடும் உழைப்புக்குப் பிறகு அல்ல! குமாரிகளின் விசேஷம் என்ன? குமாரி வாழ்க்கை என்றால் சம்பூர்ண தூய்மை. ஒருவேளை குமாரி வாழ்க்கையில் இந்த விசேஷம் இல்லை என்றால், அவருக்கு எந்த மகத்துவமும் இல்லை. பிரம்மாகுமாரி என்றால் மனதளவில் கூட தூய்மையின்மையின் எண்ணம் இருக்க வேண்டாம். அப்பொழுது தான் பூஜைக்குரியவர். இல்லையென்றால் உடைந்து விடுகிறது. மேலும் உடைந்ததற்கு பூஜை இருக்காது. அப்படி இந்த விசேஷத்தைத் தெரிந்திருக்கிறீர்களா?



    இவ்வளவு அனைத்து குமாரிகளும் சேவாதாரி ஆகிவிட்டார்கள் என்றால், எவ்வளவு சென்டர்கள் திறக்கப்பட்டு விடும். பாப்தாதா யாருக்கும் குடும்ப சேவையை விடுவதற்கும் சொல்வதில்லை. ஆனால் சமநிலை இருக்க வேண்டும். எந்த அளவு இந்த சேவையில் பிஸியாக ஆகிக்கொண்டே போனால் அது தானாகவே விடுபட்டு விடும். வேலையை விடுங்கள் என்று யாருக்கும் கூறாதீர்கள். இல்லையென்றால் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். எப்படி அஞ்ஞானியிடம் பீடி குடிப்பதை விடுங்கள், சிகரெட் குடிப்பதை விடுங்கள் என்றால், விடுபடுவதில்லை, அனுபவத்தின் மூலம் விட்டு விடுகிறார்கள். அதே போலவே நீங்களும் எப்பொழுது இந்த சேவையில் பிஸியாகி விடுவீர்களோ, அப்பொழுது அது விடுபட்டு விடும். இதுவரையிலும் குஜராத்திற்கு சீர்வரிசையில் சென்டர் கிடைக்கவில்லை, மும்பைக்கு கிடைத்திருக்கிறது. குஜராத் என்ன விரும்புகிறதோ அதைச் செய்ய முடியும். குறை ஒன்றும் இல்லை, எண்ணம் மற்றும் சிஸ்டத்தை மட்டும் இன்னும் தொடங்கவில்லை. அனைத்து குமாரிகளும் பாப்தாதாவின் குலவிளக்கு தான் இல்லையா? தன்னுடைய பாக்கியத்தைப் பார்த்து எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருந்தீர்கள் என்றால், இந்த வாழ்க்கையில் தந்தையினுடையவராக ஆகிவிட்டீர்கள். இதே வாழ்க்கை உங்களை முன்னேற்றவும் செய்யும் மேலும் கீழே தள்ளவும் செய்யும். அப்படி அனைவரும் ஏறும் கலையின் பாதையில் வந்து சேர்ந்து விட்டீர்கள் தான் இல்லையா. நல்லது.



    வரதானம்:

    ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கை வைத்துக் கொண்டே பலமடங்கு வருமானத்தை சேமிக்கக்கூடிய பதம்பதி (பலமடங்கு செல்வந்தர்) ஆகுக!



    தந்தை குழந்தைகளுக்கு மிக உயர்ந்த நிலையில் இருப்பதற்கான எச்சரிக்கை கொடுக்கிறார். எனவே இப்பொழுது கொஞ்சம் கூட கவனக்குறைவாக இருப்பதற்கான நேரம் இல்லை, இப்பொழுதோ ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கை வைத்துக் கொண்டே, ஒவ்வொரு அடியிலும் பல மடங்கு வருமானம் செய்து, பதம்பதி (பல மடங்கு செல்வந்தர்) ஆகுங்கள். எப்படி பதமாபதம் பாக்கியசாலி என்று பெயர் இருக்கிறதோ அதே போல் காரியமும் இருக்க வேண்டும். ஒரு அடி கூட பல மடங்கு வருமானம் இன்றி இருக்க வேண்டாம். எனவே மிக யோசித்து புரிந்து ஒவ்வொரு அடியையும் ஸ்ரீமத்படி எடுத்து வையுங்கள். ஸ்ரீமத்தில் மனம் சொல்லும்

    வழியை கலக்காதீர்கள்.



    சுலோகன்:

    மனதை கட்டளைக்கு ஏற்றபடி நடத்துவித்தீர்கள் என்றால், மன்மனாபவத்தின் நிலை இயல்பாகவே இருக்கும்.



    ***OM SHANTI***