BK Murli 7 October 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 7 October 2016 Tamil

    07.10.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

    இனிமையான குழந்தைகளே! தனது புத்தியை ஞானச் சிந்தனையில் பிசியாக வைத்துக் கொண்டால் அனைத்து கவலைகளிலிருந்தும் தூர விலகி விடுவீர்கள், எப்போதுமே குஷியுடன் இருப்பீர்கள்.



    கேள்வி:

    யார் தன்னை சிவபாபாவின் யக்ஞ சேவாதாரி என்று நினைக்கிறார்களோ அவர்களது அடையாளம் கூறுங்கள்?



    b
    சிவபாபா இந்த பிரம்மாவின் வாய் மூலம் என்ன கூறினாலும் அதை உடனேயே ஏற்றுக் கொள்வார்கள். என்ன கூறினாலும் அதை ஏற்றுக் கொள்வது தான் ஸ்ரீமத் என்று கூறப்படுகிறது. ஸ்ரீ ஸ்ரீ சிவபாபாவின் வழிப் படி நடப்பதன் மூலம் தான் நீங்கள் சிரேஷ்டமானவர்களாக ஆகிறீர்கள். சிரேஷ்டம் ஆவது என்றால் வெற்றிமாலையில் வருவதாகும்.



    பாட்டு:

    ஓம் நமச் சிவாய ..........



    ஓம்சாந்தி.

    சாலிகிராம் ஆத்மாக்களுக்காக சிவ பகவானின் மகாவாக்கியம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். இங்கு நாம் ஆத்மா என்று உணர்ந்து அமர வேண்டும் என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டீர்கள். முழு உலகிலும் தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டவர்கள் ஒருவர் கூட கிடையாது. ஆத்மா என்றால் என்ன என்பதையே அறிந்து கொள்ளவில்லை யெனில் பிறகு பரமாத்மாவை எப்படி அறிந்து கொள்வர்? தந்தையின் மூலம் தான் உங்களுக்கு மூல (அடிப்படையான) விசயம் எது? என்ற ஆத்மா ஞானம் கிடைக்கிறது. எதையும் அறியாத காரணத்தினால் மனிதர்கள் எவ்வளவு துக்கத்துடன் இருக்கின்றனர்! இந்த நாடகம் அதாவது மனித சிருஷ்டிக்கான கல்ப விருட்சத்தின் ஆயுள் 5 ஆயிரம் ஆண்டுகள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உதாரணமாக மா மரத்தின் விதையை எடுத்துக் கொள்ளுங்கள், ஒருவேளை அது சைத்தன்யமாக இருந்தால் நான் விதையாக இருக்கிறேன், என் மூலமாகத் தான் இந்த மரம் இவ்வாறு உருவாகியிருக்கிறது என்பதை புரிய வைத்திருக்கும். ஆனால் அது ஜடமாக இருக்கிறது. சைத்தன்யமான மரம் ஒன்றே ஒன்று தான். இந்த மரத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்குமான ஞானம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. வரிசைக்கிரமமான முயற்சியின் படி புரிந்து கொள்ள முடியும். நான் இந்த மனித சிருஷ்டியின் விதையானவன், சத், சித், ஆனந்த சொரூபமானவன். நான் ஞானக் கடல் என்று அழைக்கப்படுகிறேன். இது நிராகாரத்திற்கான (பரமாத்மாவின்) மகிமை ஆகும். தந்தையின் இந்த மகிமை அனைத்தையும் விட தனிப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தையின் மகிமையை மனிதர்கள் முற்றிலும் அறியவில்லை. இந்த லெட்சுமி, நாராயணன் போன்ற தேவதைகளும் உள்ளனர். அவர்களிடத்திலும் இந்த ஞானம் கிடையாது. இந்த நாடகத்தின் ஞானம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த சிருஷ்டிச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது? இதை நீங்கள் அறிவீர்கள். தேவதை ஆன பின்பு இந்த ஞானம் இருக்காது. ஆச்சரியம் அல்லவா! நீங்கள் இந்த நாடகத்தின் நடிகர்கள் அல்லவா! உங்களிடம் படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடையின் ஞானம் இருக்கிறது. மற்றபடி சூத்திரர்களிடமோ அல்லது தேவதைகளிடமோ இந்த ஞானம் கிடையாது. இந்த ஞானம் பரம்பரையாக வந்து கொண்டிருக்கிறது என்பது கிடையாது. திருவிழா பற்றி கூறும் போது பரம்பரையாக நடைபெற்று வருகிறது என்று கூறுகின்றனர். சத்யுகத்தில் இப்படிப்பட்ட திருவிழாக்களைப் பற்றி யாருக்கும் தெரியாது என்பதை நீங்கள் இப்போது அறிவீர்கள். அங்கு எதுவும் நினைவில் இருக்காது. அங்கு இராஜ்யம் செய்வர். உங்கள் ஒவ்வொவருவரின் புத்தி பூட்டு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. முக்கிய படைப்பாளர், டைரக்டர், முக்கிய நடிகர்களை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு எவ்வளவு நல்ல ஞானம் கிடைக்கிறது, இந்த ஞானத்தை யார் அறியவில்லையோ அவர்கள் புத்தியற்றவர்கள் ஆவர். நீங்களும் புத்தியற்றவர்களாக இருந்தீர்கள். இப்போது தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஞானம் யாருடைய புத்தியில் ஓடிக் கொண்டிருக்குமோ அவர்களுக்கு அளவற்ற குஷியிருக்கும். உங்களைத் தவிர வேறு யாரும் இந்த ஞானத்தை புரிந்து கொள்ள முடியாது. பரம்பிதா தான் உலகிலேயே சர்வ சக்தி வாய்ந்தவர் என்றும் ஞானம் நிறைந்தவர் என்றும் கூறப்படுகின்றார். எந்த ஞானம் உடையவர்? அனைத்து வேத சாஸ்திரம், சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம் அவரிடத்தில் உள்ளன. சாஸ்திரங்களிலும் படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானம் கிடையாது. அதனால் ரிஷி, முனிவர்கள் போன்றவர்கள் நாங்கள் படைப்பவர் மற்றும் படைப்புகளைப் பற்றி அறியவில்லை என்று கூறி வந்தனர். புரிய வைப்பவர் ஒரே ஒருவர் தான் எனும் போது மற்றவர்கள் எப்படி அறிந்து கொள்ள முடியும்! இந்த ஞானம் குழந்தைகளாகிய உங்களுக்கு வேறு யாரும் கொடுக்க முடியாது. உங்களுக்கு கொடுக்கக் கூடியவர் தந்தை ஆவார். அவர் எவ்வளவு ஞானம் நிறைந்தவராக இருக்கிறார்! நீங்கள் எவ்வளவு உயர்ந்த பதவி அடைகிறீர்கள்! எவ்வளவு குஷி ஏற்பட வேண்டும்! நாம் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள். ஞானத்தினால் புத்தி நிறைந்திருக்க வேண்டும். நீங்கள் அறியாத எந்த விசயமும் கிடையாது. இப்போது நீங்கள் மாஸ்டர் ஞானம் நிறைந்தவராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். எந்த ஆத்மா தமோ பிரதானமாக ஆகியிருக்கிறதோ அது தந்தையை நினைவு செய்து செய்து சதோ பிரதானமாக ஆகிவிடும். வரிசைக்கிரமம் ஏற்படுகிறது அல்லவா! சிலருக்கு தமோவிலிருந்து ரஜோ புத்தி ஆகி யிருக்கும், சிலருக்கு ரஜோவிலிருந்து சதோ ஆகியிருக்கும். இப்போது சதோ பிரதான புத்தி யாருக்கும் கிடையாது. சதோ பிரதானம் ஆகிவிடும் போது உங்களது நிலை கர்மாதீத நிலையாக ஆகிவிடும். பிறகு இராஜ்யம் செய்வதற்கு புது உலகம் தேவை. இந்த யக்ஞம் எப்போது முடிவடையுமோ அப்போது இதில் முழு பழைய உலகமும் அர்ப்பணம் ஆகிவிடும். பிறகு வரிசைக்கிரமமாக படிப்பு முடிவடைந்து விடும். நான் இந்த தேர்வில் வெற்றி பெற்று அந்த வகுப்பிற்கு மாற்றல் ஆகிவிடுவேன் என்று அந்த பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்வர் அல்லவா! நீங்களும் கர்மாதீத நிலை அடையும் போது இந்த மரணலோகத்திலிருந்து மாற்றல் ஆகி அமரபுரிக்கு சென்று விடுவீர்கள். இப்போது இங்கிருந்து மாற்றல் ஆகப்போகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தூய்மையாகி அமரலோகத்திற்கு சென்று விடுவோம். உண்மையில் நாம் சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்களாக இருந்தோம், பிறகு நடிப்பு நடித்து நடித்து அமரலோகத்திலிருந்து மரணலோகத்திற்கு வந்தடைந்து விட்டோம். ஆக இந்த முழு ஞானமும் புத்தியில் இருந்தால் குஷி இருக்கும். ஞானம் தவிர வேறு எதுவும் நினைவில் இருக்காது. இப்போது நாம் படித்து புது உலகிற்கு எஜமானர்களாக ஆவோம், இதையும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது தேவதைகள் யாரும் கிடையாது. மனிதனிலிருந்து தேவதைகளாக யார் ஆக்குவது? தந்தை தான் ஆக்க முடியும். உண்மையில் சொர்க்கம் இருந்தது, அதில் லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்தது என்பதை நீங்கள் புரிய வைக்க முடியும். அதை யார் ஸ்தாபனை செய்தது? பரம்பிதா தான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்திருக்கின்றார். அங்கு தேவி தேவதைகள் இராஜ்யம் செய்வார்கள், வேறு எந்த தர்மமும் இருக்காது. இது மிகப் பெரிய எல்லையற்ற நாடகமாகும். நீங்கள் சைத்தன்யமானவர்கள் அல்லவா! இந்த மரத்தின் விதை மேலே இருக்கிறது என்பதை அறிவீர்கள். தந்தையும் அழிவற்றவராக இருக்கின்றார். நீங்களும் அழிவற்றவர்கள். இப்போது முழு மரமும் இற்றுப் போன நிலைக்கு வந்து விட்டது. இந்த நேரத்தில் அனைத்து மனிதர்களும் முள் போன்று ஆகிவிட்டனர். முட்கள் நிறைந்த காடு அல்லவா! அனைவரும் ஒருவருக்கொருவர் துக்கம் கொடுக்கக் கூடியவர்கள். தந்தை தான் தோட்டக்காரனாக இருக்கின்றார், படகோட்டி என்றும் கூறுகிறோம். நீங்களும் படகு ஓட்டுவதற்கு கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொருவரின் படகையும் எப்படி கரை சேர்ப்பது? என்பதை உங்களுக்கு அமர்ந்து புரிய வைக்கின்றார். படகு என்பது சரீரம் கிடையாது. படகு என்பது ஆத்மா மற்றும் சரீரம் இரண்டினால் உருவாக்கப்பட்டது ஆகும். எனது படகை கரை சேருங்கள் என்றும் பாடுகின்றனர். இப்போது ஆத்மாவும் தூய்மை இழந்து இருக்கிறது எனில் சரீரமும் தூய்மையின்றி இருக்கிறது. கரை சேர்வது எப்படி? எங்கு செல்வது? இப்போது நீங்கள் மூலவதனம், சூட்சுமவதனம் ........ சத்யுகத்திலிருந்து கலியுகம் வரையுமான அனைத்து இரகசியங்களையும் அறிந்து கொண்டீர்கள். இருப்பினும் இது புத்தியில் ஏன் இருப்பது கிடையாது? நீங்கள் ஏன் மறந்து விடுகிறீர்கள்? சதா புத்தியில் இது இருக்கும் போது நீங்கள் குஷியுடன் இருப்பீர்கள். கவலைகளை கடந்து விடுவீர்கள்.



    நம்மை அழைத்துச் செல்ல பாபா வந்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எந்த ஞானம் தந்தையிடம் இருக்கிறதோ அதை நமக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார். இது முற்றிலும் புதிய விசயமாகும், இதை தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. நிராகார தந்தை சாகாரத்தின் மூலம் கூறுகின்றார். நீங்களும் இந்த சரீரத்தின் மூலம் கேட்கிறீர்கள். ஆக தந்தை குழந்தைகளாகிய உங்களையும் தனக்குச் சமமாக ஆக்குகின்றார். தந்தையின் மகிமை எதுவோ அது உங்களிடத்திலும் இருக்க வேண்டும். எந்த வித்தியாசமும் இருக்கக் கூடாது. நான் பிறப்பு இறப்பில் வருவது கிடையாது, நீங்கள் பிறப்பு, இறப்பில் வருகிறீர்கள் என்று தந்தை கூறுகின்றார். ஞானக் கடல், சுகக்கடல்....... என்று நீங்கள் என்னைக் கூறுகிறீர்கள் எனில் கண்டிப்பாக நான் உங்களுக்கு ஞானம் கொடுப்பேன், கல்ப கல்பத்திற்கும் கொடுக்கிறேன். 84 பிறவிகள் எடுத்து இப்போது நாம் கடைசியில் இருக்கிறோம் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். மீண்டும் தந்தை நம்மை முதல் நம்பருக்கு அழைத்துச் செல்கிறார். இது ஞானம் அல்லவா! ஞானம் தான் வருமானத்திற்கு ஆதாரமாகும். யார் எந்த அளவிற்கு படிக்கிறார்களோ, அவர்களுக்கு அந்த அளவிற்கு வருமானம் இருக்கும். இது ஞானமாகவும் இருக்கிறது, தொழிலாகவும் இருக்கிறது. நீங்கள் பாபாவிற்கு அசுத்தமான குப்பைகளை கொடுக்கிறீர்கள். யாராவது இறந்து விட்டால் தோட்டிக்கு கொடுக்கின்றனர் அல்லவா! இங்கு நீங்கள் உயிருடன் இருந்து கொண்டே கொடுக்க வேண்டும். உண்மையான விசயம் இப்போதையது ஆகும். தந்தை கூறுகின்றார் – உங்களிடத்தில் என்னவெல்லாம் இருக்கிறதோ இறப்பதற்கு முன்பாகவே கொடுத்து விடுங்கள். நீங்கள் டிரஸ்டியாக ஆகிவிடுங்கள். இல்லையெனில் உங்களிடத்தில் என்ன இருக்கிறதோ அது கடைசியில் நினைவிற்கு வரும். செல்வந்தர்கள் ஞானம் அடையமாட்டார்கள். அவர்களது செல்வந்த நிலை ஒரே ஒரு பிறவிக்கு மட்டும் அல்லவா! சரீரத்தை விட்டு விடுவார்கள், கர்மத்தின் பலனாக எங்கு சென்று பிறப்பு எடுப்பார்கள் என்பது தெரியாது. நாம் இப்போது எந்த அளவிற்கு முயற்சி செய்வோமோ அந்த அளவிற்கு பிராப்தி (பலன்) அடைவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நேரத்தில் அனைவரும் பௌதீக (சரீரங்களுக்கான) சேவை செய்யக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆன்மீக சேவையை யாரும் அறியவேயில்லை. ஆன்மீகத் தந்தை வந்து உங்களுக்கு ஞானம் புரிய வைக்கின்றார். அவர் சுகக் கடலாவார், துக்கத்தை நீக்கி சுகம் கொடுப்பவர். அவருக்கு சிவஜெயந்தியும் கொண்டாடுகின்றனர், ஆனால் புத்தியில் வருவது கிடையாது. பாபா மீண்டும் 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு வந்து கூறுவார் என்ற ஞானம் இப்போது உங்களது புத்தியில் இருக்கிறது. சத்யுகத்தில் இந்த ஞானம் இல்லை யெனும் போது பிறகு கலியுகத்தில் எங்கிருந்து வரும்? லெட்சுமி நாராயணன் கோயில் நாம் ஏன் கட்டுகிறோம்? என்பது உலகில் யாருக்கும் தெரியாது. இவர்கள் யார்? இவர்களுக்கு இராஜ்யம் கொடுத்தது யார்? இது கர்மத்தின் பலன் அல்லவா! தந்தை இப்போது அமர்ந்து உங்களுக்கு கர்மம், அகர்மம், விகர்மங்களைப் பற்றி புரிய வைக்கின்றார். பகவானின் மகாவாக்கியம் அல்லவா! கீதையின் மூலம் தான் ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் ஸ்தாபனை ஆகிறது. அங்கு குறைந்த மனிதர்கள் இருப்பர். மற்ற அனைவரும் அவசியம் முக்தி அடைந்திருப்பர். மகாபாரத யுத்தம் என்றும் எழுதப்பட்டிருக்கிறது, பல ஆபத்துக்கள் வரும். இயற்கையின் சீற்றங்கள் வரும். பழைய உலகம் அழிந்து விடும். இது அதே அணுகுண்டு, ஏவுகணைகள், இது அதே விநாசத்திற்கான நேரமாகும், இந்த நேரத்தில் தான் பகவான் வந்து ருத்ர ஞான யக்ஞத்தை படைத்திருந்தார், இதன் மூலம் விநாச நெருப்பு உருவானது. சுகம், சாந்திக்காக பகவான் யக்ஞத்தை படைக்கிறார். மற்றபடி துக்கம், அசாந்தி அவசியம் விநாசம் ஆகிவிட வேண்டும். இந்த ஈஸ்வரிய ஞான யக்ஞத்தில் முழு உலகமும் அர்ப்பணம் ஆகிவிடும். இந்த விசயங்கள் உங்களது புத்தியில் இருக்கிறது.



    நாம் பிராமணர்கள். சிவபாபாவின் இந்த யக்ஞத்தில் பிராமணர்களாகிய நாம் சேவாதாரிகளாக இருக்கிறோம். நாம் உண்மையில் உண்மையான வாய்வழி பிராமணர்கள் ஆவோம். தந்தை வாயின் மூலம் என்ன கூறினாலும் குழந்தைகளாகிய நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஸ்ரீமத் படியே நாம் நடக்க வேண்டும். ஸ்ரீ ஸ்ரீ சிவபாபாவின் வழிப்படி நாம் சிரேஷ்டமாகி மாலையில் மணியாக ஆவோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். மாலையின் மணி தான் வம்சம் என்று கூறப்படுகிறது. வம்சம் இருக்கிறது அல்லவா! பிறகு அது அதிகரித்துக் கொண்டே செல்லும். பாபா சுயம் வம்சத்தை உருவாக்கினார், இதுவும் வம்சம் ஆகும். மேலே சிவபாபா இருக்கின்றார், பிறகு ஆத்மாக்கள் இருக்கின்றனர். நிராகார வம்சம் பிறகு சாகாரமாக ஆகிறது. முதல் நம்பரில் இருப்பது பிரஜாபிதா, அவர் சரீரம் உள்ளவர், இவர் ஆன்மீகமானவர். ஆன்மீக தந்தை வந்து பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் படைக்கின்றார். வந்து தூய்மை இல்லாத உலகை தூய்மை ஆக்குங்கள் என்று கூறவும் செய்கின்றனர். உலக சரித்திர, பூகோளம் திரும்பவும் நடைபெறுகிறது. பழைய உலகம் மீண்டும் புதிதாக ஆகிறது. புது உலகிற்காக இப்போது நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த எல்லையற்ற ஞானத்தை எல்லையற்ற தந்தை தான் கொடுக்கின்றார். எல்லைக்குட்பட்ட ஆஸ்தி இருந்தும் எல்லையற்ற தந்தையை நினைவு செய்கின்றனர். ஹே பகவான் என்று கூறுகின்றனர் அல்லவா! யாராவது இறக்கின்றனர் எனில் பரமபிதாவை நினைவு செய்கின்றனர் எனில் இரண்டும் தந்தைகள் என்று நிரூபணம் ஆகிறது அல்லவா! அனைத்து ஆத்மாக்களும் சகோதரர்கள் ஆவர். ஹே துக்கத்தை நீக்கி சுகம் கொடுப்பவரே, ஹே விடுவிக்கக் கூடியவரே வாருங்கள், வீட்டிற்குச் செல்ல எமக்கு வழி காட்டுங்கள் என்று ஆத்மா தான் அழைக்கிறது. நமக்கு வீட்டின் நினைவு இருக்கிறது, ஆனால் செல்ல முடியாது, ஏனெனில் மாயை இறக்கைகளை துண்டித்து விட்டது. யாரும் வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாது. இப்போது நீங்கள் உங்களது தீபத்தை நீங்களே ஏற்ற வேண்டும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நெய் ஊற்றப்பட்டு விடுகிறது. தீபம் ஒரேயடியாக அணைந்து விடுவது கிடையாது. யாராவது இறந்து விட்டார் எனில் தீபத்தை ஏற்றுகின்றனர். குறிப்பாக அங்கு ஒரு தீபம் வைத்து விட்டு அதில் நெய் ஊற்றிக் கொண்டே இருப்பர், இல்லையெனில் இருளாகி விடும். இப்போது நீங்கள் யோக பலத்தின் மூலம் நெய் ஊற்றும் போது இருளிலிருந்து வெளிச்சம், தீபாவளி ஏற்பட்டு விடும். தீபாவளி சத்யுகத்தில் இருக்கும். இங்கு கிடையாது. எந்த உற்சவங்கள் கொண்டாடப்பட்டாலும் அதன் இரகசியங்களை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். அவர்கள் எதையும் புரிந்து கொள்வது கிடையாது. இருந்தாலும் இந்த ராக்கி தூய்மையாக இருப்பதற்காக என்று புரிய வைக்கப்படுகிறது. மனிதர்களுக்கு ஞான ஊசி அந்த அளவிற்கு யுக்தியுடன் போட வேண்டும், அதாவது நாம் தாழ்வான நிலையில் உள்ளவர்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். மேன்மையானவர்களாக (மகான்) தந்தை தான் ஆக்குகின்றார். தந்தை கூறுகின்றார் - மன்மனாபவ. நீங்கள் தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக ஆகிவிடுவீர்கள். யுக்தியுடன் அம்பு எய்ய வேண்டும். பேசுவதற்கான தைரியம் தேவை. இப்போது நீங்கள் சர்வசக்திவான் தந்தையிடமிருந்து சக்தி அடைந்து மாயை மீது வெற்றி அடைகிறீர்கள். பிறகு நீங்கள் இராஜ்ய பாக்கியத்தை அடைவீர்கள், தந்தையைத் தவிர வேறு யாரும் வெற்றியடையச் செய்ய முடியாது. குழந்தைகளே! பாருங்கள்! எப்படி இருந்த உங்களை எப்படி ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகின்றார். ஆக இப்படிப்பட்ட தந்தையை நிரந்தரமாக நினைவு செய்யும் போது விகர்மங்கள் விநாசம் ஆகிவிடும். தந்தை கூறுகின்றார் - என் ஒருவனை நினைவு செய்தால் கடைசி நிலை நல்ல நிலையாக ஆகிவிடும். என்ன நினைக்கிறீர்களோ அவ்வாறு ஆகிவிடுவீர்கள், ஆக என்னை நினைவு செய்து செய்து நீங்களும் நல்ல நிலையில் ஆகிவிடுவீர்கள் என்று தந்தை கூறுகின்றார். நினைவின் மூலம் விகர்மங்களும் விநாசம் ஆகும் மற்றும் தனது வீட்டிற்கு திரும்பிச் சென்று விடுவீர்கள். இந்த ஞானம் வருமானத்திற்கு ஆதாரமாகும். ஆரோக்கியம், செல்வம் இருக்கிறது எனில் மகிழ்ச்சியும் இருக்கும். அங்கு நீண்ட ஆயுளுடன் இருப்பீர்கள். யோகேஸ்வரன் என்று கிருஷ்ணரை கூற முடியாது. நீங்கள் தான் யோகேஸ்வரர் கள். ஈஸ்வரன் உங்களுக்கு யோகா கற்பித்துக் கொண்டிருக்கின்றார். இது இராஜயோகம் ஆகும். யோகா செய்து நீங்கள் இராஜ்ய பாக்கியத்தை அடைகிறீர்கள். ஈஸ்வரன் உங்களுக்கு யோகா கற்பித்து இராஜ்ய ஆஸ்தியை கொடுக்கின்றார். உங்களுக்கு இராஜ்யம் கொடுத்தது யார்? தந்தை. தந்தை கூறுகின்றார் - என் ஒருவனை நினைவு செய்யுங்கள். தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்தால் பாவங்கள் அழிந்து விடும். இது மிகவும் எளிதாகும். உங்களது புத்தியில் எவ்வளவு ஞானம் இருக்கிறது! பகவானின் குழந்தைகள் மாஸ்டர் கடவுள் (பகவான்) என்று அழைக்கப்படுகிறீர்கள். தந்தையிடத்திலேயே அமர்ந்து விடக் கூடாது. நாம் நடிப்பு நடக்க வேண்டும், இதில் ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். நல்லது.



    இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1) தந்தை என்ன ஞானம் கொடுக்கிறாரோ அதை மட்டுமே சதா சிந்தனை செய்ய வேண்டும். யுக்தியுடன் பேச வேண்டும். மிக அன்பாகப் புரிய வைக்க வேண்டும்.



    2) தன்னிடத்தில் என்னவெல்லாம் இருக்கிறதோ அதை உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே தந்தையிடம் கொடுத்து விட்டு டிரஸ்டியாக இருந்து அந்த ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும்.



    வரதானம்:

    நாடகத்தின் ஞானக் கருத்துகளின் அனுபவத்தின் மூலம் சதா சாட்சி நிலையில் இருக்கக் கூடிய ஆடாது, அசையாதவர்களாக ஆகுக.



    நாடகம் என்ற கருத்தில் யார் அனுபவிகளாக இருக்கிறார்களோ அவர்கள் சதா சாட்சி என்ற நிலையில் நிலைத்திருந்து ஏக்ரஸ், ஆடாது, அசையாத நிலையை அனுபவம் செய்வார்கள். நாடகம் என்ற கருத்தில் அனுபவியாக இருக்கும் ஆத்மா ஒருபோதும் தீயதில் தீயவைகளை பார்க்காமல் நல்லதையே பார்ப்பார்கள். அதாவது சுய நன்மைக்கான வழி தென்படும். தீமைக்கான வழி அழிந்து விடும். கல்யாணகாரி தந்தையின் குழந்தைகளாக இருக்கிறீர்கள், கல்யாணகாரி யுகமாகும் - இந்த ஞானம் மற்றும் அனுபவத்தின் அதாரிட்டி மூலம் ஆடாது, அசையாதவர்களாக ஆகுங்கள்.



    சுலோகன்:

    யார் நேரத்தை விலை மதிக்க முடியாதது என்று புரிந்து கொண்டு வெற்றியுடையதாக ஆக்குகிறார்களோ அவர்கள் எந்த சமயத்திலும் ஏமாற்றமடைய மாட்டார்கள்.



    ***OM SHANTI***