BK Murli 15 January 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 15 January 2017 Tamil

    15.01.2016    காலை முரளி          ஓம் சாந்தி          ''அவ்யக்த பாப்தாதா''
    ரிவைஸ்  18.01.2017    மதுபன்

    '' 18 ஜனவரி பொறுப்பு கிரீடத்தின் முடிசூட்டு விழாவின் தினம் ''


    இன்று உலகின் கண்ணொளி தன்னுடைய கண்ணின் மணிகளோடு சந்திப்பதற்காக வந்திருக்கிறார். மீண்டும் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் தந்தையின் கண் மணிகள். எப்படி உடலில் கண்களில் ஒளி அதாவது பார்வை இல்லை என்றால் உலகமே இல்லை. அதே போல் உலகில் ஆன்மீக கண் மணிகள் நீங்கள் இல்லை என்றால் உலகில் பிரகாசம் இல்லை, இருளாகி விடும். அப்படி நீங்கள் அனைவரும் பாப்தாதாவின் கண்ணின் மணிகள் அதாவது உலகின் ஜோதி. இன்றைய விசேஷ நினைவு தினத்தன்று அனைவரின் அன்பு நிறைந்த பாடல் வதனத்தில் பாப்தாதாவால் அமிர்தவேளையில் இருந்தே கேட்க முடிந்தது. ஒவ்வொரு குழந்தையின் பாடல் ஒருவர் மற்றவர்களினுடையதை விட அதிகப் பிரியமானதாக இருந்தது. இனிமையான ஆன்மீக உரையாடலையும் அதிகம் கேட்டோம். குழந்தைகளின் அன்பின் முத்துக்களின் மாலை பாப்தாதாவின் கழுத்தில் வந்து விழுந்தன. அந்த மாதிரி முத்துக்களின் மாலைகள் பாப்தாதாவின் கழுத்திலும் முழுக் கல்பத்தில் இப்பொழுது தான் விழுகிறது. பிறகு இந்த விலைமதிக்க முடியாத அன்பின் முத்துக்களின் மாலை கழுத்தில் விழ முடியாது. இந்த ஒவ்வொரு முத்துக்குள்ளும் என்ன நிரம்பியிருந்தது. ஒவ்வொரு முத்துவினுள்ளும் 'என்னுடைய பாபா', 'ஆஹா பாபா' என்பது தான் நிரம்பியிருந்தது. எத்தனை மாலைகள் இருக்கும் என்று கூறுங்கள். மேலும் இதே மாலைகளினால் பாப்தாதா எந்த அளவு ஆன்மீகமாக அலங்கரிக்கப்பட்டிருந்திருப்பார்? எப்படி ஸ்தூலத்தில் அன்பின் அடையாளமாக மாலைகளினால் அலங்கரித்தீர்கள். அப்படி இங்கே ஸ்தூல அலங்காரத்தினால் அலங்கரித்தீர்கள். ஆனால் வதனத்தில் அமிர்தவேளையில் தொடங்கி பாப்தாதாவை அலங்காரம் செய்யத் தொடங்கினீர்கள். ஒன்றின் மேல் ஒன்றாக பாப்தாதாவிற்கு நல்ல ஒரு அலங்காரமாக ஆகிவிட்டது. நீங்கள் அனைவரும் அந்த சித்திரத்தை பார்க்கிறீர்கள் தான் இல்லையா?



    இன்றைய விசேஷ தினம் அனைத்துக் குழந்தைகளுக்கும் முடிசூட்டு விழாவின் தினம். இன்றைய தினம் ஆதிதேவ் பிரம்மா பாபா அவரே இந்த உலகியல் பொறுப்புக்கள் அதாவது ஸ்தூல ரூபத்தில் சேவையின் கிரீடத்தை கண்களின் பார்வை மூலமாக கையோடு கை சேர்த்து நெருக்கமான குழந்தையிடம் அர்ப்பணம் செய்தார். அப்படி இன்றைய தினம் பிரம்மா பாபாவின் ஸ்தூல ரூபத்தின் பொறுப்புகளின் கிரீடத்தை குழந்தை களுக்குக் கொடுத்ததின் முடிசூட்டு விழா தினம் (பிரகாஷ்மணி தாதியிடம்). இன்றைய தினம் நினைவிருக்கிறது தான் இல்லையா? இன்றைய தினம் பிரம்மா பாபா குழந்தைகளுக்கு 'தந்தைக்குச் சமமாக ஆகுக' என்ற வரம் கொடுக்கும் தினம்.



    பிரம்மா பாபாவின் இறுதி எண்ணத்தின் வார்த்தைகளை மற்றும் கண்களின் பாஷையை கேட்டிருக்கிறீர்களா? என்னவாக இருந்தது? கண்களின் சமிக்ஞையின் வார்த்தைகள் இவையாகத் தான் இருந்தன 'குழந்தைகளே எப்பொழுதும் தந்தையின் சகயோகத்தின் விதி மூலமாக வளர்ச்சியை அடைந்து கொண்டே இருப்பீர்கள்'.இதே இறுதி வார்த்தை வரதானி வார்த்தைகள் பிரத்யக்ஷ பலனின் ரூபத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பிரம்மா பாபாவின் இறுதி வரதானத்தின் சாகார சொரூபம் நீங்கள் அனைவரும் வரதானம் என்ற விதை மூலம் உருவான வகை வகையான பழங்கள். இன்று சிவ பாபா பிரம்மா பாபாவிற்கு வரதானம் என்ற விதையிலிருந்து உருவான மிக அழகான நன்றாகப் பரந்து விரிந்திருக்கும் மரத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தார். அறிவியல் சாதனங்கள் மூலமாகவும் ஒரு மரத்தில் வகை வகையான பழங்கள் வெளிவர வேண்டும் என்று மிகுந்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரம்மா பாபாவின் வரதானத்தின் மரம், சகஜயோகாவின் பாலனை மூலம் வளர்ந்திருக்கும் மரம் எவ்வளவு விசித்திரமானது. மனதிற்கு குஷி அளிக்கும் மரமாகும். ஒரே மரத்தில் விதவிதமான பழங்கள் இருக்கின்றன. வேறு வேறு மரங்கள் இல்லை. மரம் ஒன்று தான், பழம் அனேக விதமாக இருக்கின்றன. அந்த மாதிரி மரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? ஒவ்வொருவரும் தன்னை இந்த மரத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படி இன்று வதனத்தில் அந்த மாதிரி விசித்திரமான மரமும் வெளிப்பட்டது. அந்த மாதிரியான மரம் சத்யுகத்திலும் இருக்காது. ஆம், அறிவியலைச் சேர்ந்தவர்கள் என்ன முயற்சி செய்து கொண்டிருக்கிறார்களோ அதனுடைய பலன் உங்களுக்கு சிறிதளவு கிடைத்து விடும். ஒரே பழத்திலிருந்து இரண்டு அல்லது நான்கு பழங்களின் சுவை அனுபவம் ஆகும். இவர்கள் கடுமையாக உழைப்பார்கள். மேலும் நீங்கள் அருந்துவீர்கள். இப்பொழுதிலிருந்தே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா என்ன?



    இன்றைய தினம் என்ன என்று கேட்டீர்களா? இன்றைய தினம் எப்படி தொடக்கத்தில் பிரம்மா பாபா ஸ்தூல செல்வத்தை குழந்தைகளுக்காக உயில் எழுதி கொடுத்தார். அதே போல் தன்னுடைய ஆன்மீக சொத்துக்களை குழந்தைகளுக்கு உயில் எழுதினார். அப்படி இன்றைய தினம் குழந்தைகளுக்கு உயில் எழுதிக் கொடுத்த தினம். இந்த ஆன்மீக சொத்தின் உயிலின் ஆதாரத்தில் காரியத்தில் முன்னேறிச் செல்வதற்கான மனோபலம் வெளிப்படையாகத் தென்படுகிறது. குழந்தைகளைப் பொறுப்பாளர்களாக ஆக்கி மனோபலத்தின் உயிலை எழுதினார். இன்றைய தினம் விசேஷமாக தந்தைக்குச் சமமாக வரதானி ஆவதற்கான தினம். இன்றைய தினம் அன்பு மற்றும் சக்தி இரண்டும் இணைந்த வரதானி தினம். இரண்டையும் நடைமுறையில் அனுபவம் செய்தீர்கள் தான் இல்லையா? அதிக அன்பு மற்றும் அதிக சக்தி. (தாதியிடம்) அனுபவம் நினைவு இருக்கிறது தான் இல்லையா? முடிசூட்டு விழா நடந்தது தான் இல்லையா? நல்லது - இன்றைய தினத்தின் மகத்துவத்தை தெரிந்து கொண்டீர்களா? நல்லது.



    அந்த மாதிரி எப்பொழுதும் தந்தையின் வரதானங்களினால் வளர்ச்சியை அடையக்கூடிய, எப்பொழுதும் ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற இதே நினைவு சொரூபத்தில் இருக்கும், எப்பொழுதும் பிரம்மா பாபாவிற்கு சமமாக ஃபரிஷ்தா ஆகுக என்ற வரம் பெற்றவர்களுக்கு, அந்த மாதிரி சமமான மற்றும் அருகாமையில் இருக்கும் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் சக்திசாலியான தினத்தன்று அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    தாதி - தீதியுடன் சந்திப்பு :

    சாகார பாபாவின் வரதானங்களின் உரிமையுள்ள விசேஷ ஆத்மாக்கள் தான் நீங்கள் இல்லையா? சாகார பாபா குழந்தைகள் உங்களுக்கு என்ன வரதானம் கொடுத்தார்? எப்படி பிரம்மாவிற்கு தொடக்கத்தில் (தத்தத்துவம்) அவ்வாறே நீயும் அந்த மாதிரி ஆகுக என்ற வரம் கிடைத்தது. அதே போலவே பிரம்மா பாபா குழந்தைகளுக்கு விசேஷமாக தத்தத்துவம் என்ற வரதானம் கொடுத்தார். அப்படி நீங்கள் விசேஷமாக தத்தத்துவம் என்ற வரதானத்தின் உரிமையுள்ள வாரிசு ஆத்மாக்கள். இதே வரதானத்தை எப்பொழுதும் நினைவில் வைக்க வேண்டும். அதாவது சக்திசாலியான ஆத்மா ஆக வேண்டும். இந்த வரதானத்தின் நினைவு மூலம் எப்படி பிரம்மா பாபா ஒவ்வொரு காரியத்திலும் தந்தையை பிரத்யக்ஷமாக அனுபவம் செய்தார், அதே போல் உங்களுடைய ஒவ்வொரு காரியத்திலும் பிரம்மா பாபா பிரத்யக்ஷம் ஆவார். பிரம்மா பாபாவை பிரத்யக்ஷம் செய்யக்கூடிய ஆதி இரத்தினங்கள் எவ்வளவு குறைவானவர்கள் பொறுப்பாளர்கள் ஆகியிருக்கிறார்கள். விசேஷ ஆத்மாக்கள் உங்களுடைய முகம் மூலமாக பிரம்மா பாபாவின் ரூபம் அனுபவம் ஆக வேண்டும், மேலும் அனுபவம் செய்யவும் செய்கிறார்கள். பிரம்மா குமாரி இல்லை. பிரம்மா பாபாவிற்குச் சமமாக பிரம்மா பாபாவின் அனுபவம் இருக்க வேண்டும். அந்த மாதிரி நீங்கள் சேவைக்கு பொறுப்பாளரான வரதானி விசேஷ ஆத்மாக்கள். அனைவரும் என்ன கூறுகிறார்கள்? பாபாவைப் பார்த்தீர்களா, பாபாவை அடைந்தீர்களா அப்படியானால் அனுபவம் செய்விப்பவர், பிரத்யக்ஷம் செய்பவர் யார்? கிரீடம் அணிந்த விசேஷ ஆத்மாக்கள் நீங்கள் இப்பொழுது விரைவிலேயே மீண்டும் பிரம்மா பாபா மற்றும் பிரம்மாவின் குழந்தைகள் சக்திகளின் ரூபத்தில், சக்தியில் சிவன் உள்ளடங்கியிருக்கிறார். சிவசக்தி மற்றும் கூடவே பிரம்மா பாபா அந்த மாதிரியான காட்சிகள் நாலாபுறங்களிலும் தொடங்கி விடும். பிரம்மா குமாரிக்குப் பதிலாக பிரம்மா பாபா தென்படுவார். சாதாரண சொரூபத்திற்குப் பதிலாக சிவசக்தி சொரூபம் தென்படும். எப்படி தொடக்கத்தில் சாகாரத்தில் லீலைகள் பல பார்த்தீர்கள். அதே போலவே இறுதியிலும் நடக்கும். இப்பொழுது அதிகப்படியாக சிவசக்தி சொரூபத்தின் காட்சியும் ஏற்படும். இருந்தாலும் சாகார தந்தையோ பிரம்மா தான் இல்லையா. அப்படி சாகார ரூபத்தில் வந்திருக்கும் குழந்தைகள் தந்தையைப் பார்ப்பார்கள் மற்றும் அவசியம் அனுபவம் செய்வார்கள். பிரம்மா பாபாவின் உதவியின் செய்தியையும் கேட்பீர்கள். அவர் உடல் பந்தனத்திலிருந்து மட்டும் விடுபட்டிருக்கிறார். மேலும் அதிவேகமான ரூபத்தில் சகயோகி ஆகியிருக்கிறார். ஏனென்றால், நாடகத்தின் அனுசாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது நிரந்தரமாக அடங்கியிருக்கிறது.



    பொதுவாக ஏதாவது ஒரு இடத்தில் வெளிச்சத்தை பரப்ப வேண்டும் என்றால் என்ன செய்கிறார்கள்? உயர்வான இடத்திலிருந்து வெளிச்சம் வரும் மாதிரி செய்வார்கள் தான் இல்லையா? சூரியனும் உலகில் எப்பொழுதும் வெளிச்சம் கொடுக்க முடியும் என்றால் அது எப்பொழுது உயர்வாகவே இருக்கிறதோ, அதே மாதிரி இந்த ஸ்தூல உலகத்திற்கு சக்தி கொடுப்பதற்காக பிரம்மா பாபாவிற்கும் உயர்ந்த ஸ்தானத்தின் நிவாசியாக ஆகத் தான் வேண்டியதிருந்தது. இப்பொழுதோ ஒரு நொடியில் எங்கே விரும்புகிறாரோ அங்கே தன்னுடைய காரியத்தை செய்ய முடியும். மேலும் செய்விக்க முடியும். வாய் மூலமாகவோ மற்றும் கடிதங்கள் மூலமாகவோ இவ்வளவு காரியம் எப்படி செய்ய முடியும்? எனவே தீவிர விதி மூலமாக குழந்தைகளின் சகயோகி ஆகி

    காரியம் செய்து கொண்டிருக்கிறார். அனைத்தையும் விட அதிவேகமா சேவைக்கான சாதனம் எண்ணத்தின் சக்தி. அப்படி பிரம்மா பாபா உயர்ந்த எண்ணத்தின் விதி மூலமாக வளர்ச்சி அடைவதில் எப்பொழுதுமே சகயோகியாக இருக்கிறார். அப்படி வளர்ச்சி அடைவதின் வேகமும் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது தான் இல்லையா? விதி தீவிரமானது என்றால், விருத்தியும் (வளர்ச்சியும்) தீவிரம். தோட்டத்தைப் பார்ப்பதில்

    மகிழ்ச்சி ஏற்படும் தான் இல்லையா. நல்லது.



    சாகார பாபாவின் லௌகீக பரிவாரத்தினருடன் சந்திப்பு –

    (நாராயணன் தாதா மற்றும் அவருடைய மனைவி) –



    அனைத்து காரியமும் சரியாக நடந்து கொண்டிருக்கிறதா? இப்பொழுது எங்கேயாவது தாண்டி வருகிறீர்களா? இவ்வளவு வளர்ச்சியை பார்த்து சகஜ விதியின் அனுபவம் ஆகவில்லையா? என்ன நினைக்கிறீர்கள்? எண்ணத்தின் விஷயம் தான் இல்லையா? வேறு ஏதாவது செய்ய வேண்டுமா என்ன? எண்ணத்தை உருவாக்கினீர்கள் மற்றும் நடந்தது. இவர்கள் (வெளிநாட்டினர்) இவ்வளவு தூர தேசத்திலிருந்து வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்றால் எதன் ஆதாரத்தில் வந்து சேர்ந்திருக்கிறார்கள்? கண்டிப்பாக போக வேண்டும், கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வைத்தார்கள், மேலும் வந்து சேர்ந்து விட்டார்கள். அப்படி தூரத்திலிருந்தே உறுதியான எண்ணத்தின் ஆதாரத்தில் உரிமையுள்ளவர் ஆகிவிட்டார்கள். நீங்களோ குழந்தை பருவத்தின் உரிமையுள்ளவர்கள். குழந்தை பருவம் நினைவிருக்கிறதா? அப்படியானால் என்னவாக ஆவீர்கள்? பார்க்கலாம் என்றா அல்லது பறக்கும் கலையில் சென்று தந்தைக்குச் சமமான ஃபரிஷ்தா ஆவீர்களா? பார்த்துக் கொண்டோ இருக்கவே இருக்கிறீர்கள். எதுவரை பார்த்துக் கொண்டிருப்பீர்கள்? யோசித்தீர்கள் என்றாலும் எதுவரை யோசிக்க வேண்டும்? பாப்தாதா அதே அன்பின் இறக்கைகள் மூலம் குழந்தைகளைப் பறக்க வைக்க விரும்புகிறார். இறக்கைகளில் அமர்வதற்காகவும் என்ன செய்ய வேண்டியதாக இருக்கும்? டபுள் லைட்டாகவோ ஆக வேண்டும் இல்லையா? அனைத்து காரியங்களையும் செய்து கொண்டே, டபுள் லைட் ஆக முடியும். கற்பனையின் விளையாட்டு மட்டும் தான் இருக்கிறது. ஒரு விநாடிக்கான விளையாட்டு. ஒரு விநாடிக்கான விளையாட்டை விளையாடத் தெரியாதா? தந்தை என்ன செய்தார்? ஒரு நொடியில் விளையாட்டை செய்தார் இல்லையா? எப்பொழுது இருவரும் ஒருவர் மற்றொருவருக்கு சகயோகியாக இருப்பீர்களோ அப்பொழுது செய்ய முடியும். ஒரு சக்கரத்தினால் செல்ல முடியாது. இரண்டு சக்கரங்களும் வேண்டும். இருந்தும் பாப்தாதாவின் வீட்டிற்கு வருகிறீர்கள். பாப்தாதாவோ எப்பொழுதும் குழந்தைகளை உயர்வாகத் தான் பார்க்கிறார். உயர்ந்த தந்தை குழந்தைகளையும் உயர்வாகவே பார்க்க விரும்புகிறார். இது நியமம் தான் இல்லையா. இப்பொழுது குழந்தைகள் நீங்கள் எங்கே இடத்தை பிடிப்பீர்கள் என்பது உங்களுடைய கையில் இருக்கிறது. வேண்டும் என்றால் நல்ல முறையில் யோசித்து கொள்ளுங்கள். ஆனால் ஒரு நொடிக்கான விஷயம். ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றால் ஒரு நொடிக்கான விஷயம். நல்லது.



    அபுவில் நடக்கவிருக்கும் மகாநாட்டிற்காக ஏதாவது விசேஷ திட்டம் -

    அபுவில் நடக்கப் போகும் மகாநாட்டிற்கு வி.ஐ.பி-க்களாக மட்டுமின்றி, அன்புடையவர்களாகவும் ஆக்கி, அழைத்து வாருங்கள். நீங்கள் அன்பானவர்களாக ஆக்கி அழைத்து வாருங்கள். இங்கே சம்மந்தம் இணைந்து விடும் (அன்பானவராக ஆக்குவதற்கான வழி என்ன?) எந்த அளவு தந்தையின் மகிமையை உள்ளப்பூர்வமாக மகிமை செய்வீர்களோ, பிறகு நீங்கள் மகிமை செய்வீர்கள், மேலும் அவர்கள் பற்றுதல் வந்தவர்களாக ஆகிக் கொண்டே செல்வார்கள். நீங்கள் பாபா, பாபா என்று கூறிக் கொண்டே செல்வீர்கள், மகான் தன்மையை கூறிக் கொண்டே செல்வீர்கள், மேலும் அவர்கள் (பாபாவின் மீது) அன்பானவர்களாக ஆகிக் கொண்டே இருப்பார்கள். எங்கு மகான் தன்மை அனுபவம் ஆகிறதோ அங்கு அவர்களாகவே தலை வணங்குவார்கள். எப்படி பக்தர்கள் ஜட விக்கிரகங்களின் மேல் மகான் தன்மையின் பாவனை வைக்கிறார்கள் என்றால் பின்பு தலைகுணிந்து விடுகிறது. அந்த ஜடம் எங்கே மேலும் இங்கே சைத்தன்யம் எங்கே, இருந்தும் தலைவணங்கிவிடுகிறது. இங்கேயும் பாருங்கள், ஏதாவது பிரதம மந்திரி அல்லது ஜனாதிபதி இருக்கிறார் என்றால் அவர்களுடைய மகான் நிலையின் எதிரில் இயல்பாகவே தலைவணங்குவார்கள் இல்லையா. அதே போல் நீங்களும் தந்தையின் மகான் தன்மையை கூறிக்கொண்டே சென்றீர்கள் என்றால் அவர்களுடைய தலை வணங்கிக்கொண்டே இருக்கும். நீங்களோ மிகவும் புத்திசாலிகள் தான் இல்லையா. உங்களிடம் அறிவியலின் ஞானமும் இருக்கிறது, அமைதியின் ஞானமும் இருக்கிறது. தேசத்தின் ஞானமும் இருக்கிறது என்றால் வெளிநாட்டின் ஞானமும் இருக்கிறது. அனுபவமும் ஒரு சக்தி, அனுபவம் தான் மிகப்பெரிய சக்தி. அனுபவத்தை கூறிக்கொண்டே இருந்தீர்கள் என்றால், அனைவரும் குஷி அடைவார்கள் இல்லையா. அனுபவம் செய்பவர் அவரே சக்திசாலி ஆகி விடுகிறார். இதுவும் ஒரு பெரிய ஆயுதமாகும். பொதுவாக பேசுபவர்களோ அனேகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனுபவத்தின் சக்தி யாரிடமும் இல்லை. இங்கே உள்ள விசேஷமே அனுபவத்தினுடையது தான். பேசுபவர்களுக்கு முன்னால் அனுபவம் நிறைந்தவர்களுக்குத் தான் மகத்துவம் இருக்கிறது. மெது மெதுவாக அறிவியலைச் சேர்ந்தவர்களும், சாஸ்திரவாதிகளும் கூட இருவர்களுமே நாம் மேலோட்டமாக இருக்கிறோம். நமக்கு அஸ்திவாரம் இல்லை என்று புரிந்து கொள்வார்கள். மேலும் இவர்களுக்கு (பி.கு) அனுபவத்தின் அஸ்திவாரம் இருக்கிறது. சந்திரன் வரை சென்றடைந்திருந்தாலும் கூட தன்னுடைய அனுபவம் தனக்கே இல்லை. சந்திரன் வரை சென்றிருந்தாலும் கூட என்ன ஆனது? எனவே இதை உணருவார்கள். ஆனால் இறுதியில் உணருவார்கள். ஏனென்றால் வாரிசாகவோ ஆக வேண்டியதில்லை. எனவே இறுதியில் அறிவியல் அதாவது ஆயுதம் தரித்தவர்கள் மற்றும் சாஸ்திரவாதிகள் இரு சாராருமே நாம் என்னவாக இருக்கிறோம், மேலும் இவர்கள் (பி.கு) என்னவாக இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்வார்கள். நல்லது.



    அனைவரும் குஷியாக இருக்கிறீர்கள் தான் இல்லையா? கடினம் எதுவும் இல்லை தான் இல்லையா. நீங்கள் சகஜயோகியா? நீங்கள் சகஜ சேவாதாரியா?



    (வெளிநாட்டைச் சேர்ந்த சகோதரிகள் வெளிநாட்டுச் சேவைக்காக தீதி மற்றும் தாதியை வெளிநாட்டிற்கு வருவதற்காக அழைப்பு கொடுக்கிறார்கள்). தற்சமயம் அதாவது 1983 தொடக்கத்திலேயே இங்கு அனைவரையும் அழைத்து வர வேண்டும், மேலும் அனைவருக்கும் இங்கே கண்டிப்பாக வந்து தான் ஆக வேண்டும் என்றால் இங்கே உள்ள சேவையின் மேல் விசேஷ கவனம் கொடுப்பதற்கான அவசியம் இருக்கிறது. மேலும்  அங்கிருந்தும் ஒருவேளை ஐ.நா சபை ஆகியவற்றிலிருந்து விசேஷ அழைப்பிதழ் கிடைத்திருக்கிறது என்றால், அங்கேயும் அவசியம் செல்ல வேண்டும். மற்றபடி என்னென்ன நம்முடைய மகாநாடுகள் ஆகியவற்றை செய்கிறீர்களோ அதற்கு இவ்வளவு அவசியம் இல்லை. ஏனென்றால் அவர்களைத் தான் இங்கு அழைத்து வர வேண்டும். எனவே அனைத்து விஷயங்களையும் பார்க்கும் போது இப்பொழுது அந்த அளவு அவசியம் தென்படவில்லை. மற்றபடி வெளிநாட்டில் இந்த நேரம் இங்கே மற்றும் அடுத்த நேரம் அங்கே, என்று அப்படி இருக்கிறது. அந்த மாதிரி ஏதாவது காரியம் நடந்தது என்றால் வந்து சேர்ந்து விடுவார்கள்.



    ஐ.நா சபையின் தொடர்பை அதிகப் படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இந்த தொடர்பை அதிகப்படுத்துவது தான் சேவை. இன்னும் எவ்வளவு முடியுமோ அவர்களை குடும்ப தொடர்பில் கொண்டு வாருங்கள். எப்படி ஐ.நா சபையிலிருந்து வந்திருக்கும் இந்த கருத்துக்களும் அன்பு, தொடர்பின் காரணமாக ஈர்க்கப்பட்டது தான் இல்லையா? அன்பு நிறைந்த பாலனை கிடைத்தது. ஏனென்றால் பெரிய பெரிய அதிகாரிகள் எங்கு இருக்கிறார்களோ அவர்கள் அங்கே அதே பதவியில் இருக்கும் காரணத்தினால் பதவிக்குத் தகுந்தாற்போல் இருப்பார்கள். அவர்களுக்கு, அன்பு பாலனை கிடைப்பதில்லை. இங்கேயோ உறவின் ரசனை கிடைக்கிறது. இது தான் இங்கே இருக்கும் விசேஷம். யாரெல்லாம் தொடர்பு உறவில் வருகிறார்களோ அவர்களுக்கு பரிவாரத்தின் உணர்வு வர வேண்டும். ஏதோ மிக நெருக்கமான ஆத்மா காணாமல் போனது கிடைத்து விட்டது என்று அனுபவம் செய்ய வேண்டும். தொடர்பை அதிகரிப்பது இந்த சேவை சரி தான். எவ்வளவுக்கு எவ்வளவு அருகாமையில் வந்து கொண்டே இருப்பார்களோ அந்த அளவு இவர்களிடம் என்ன தேவையோ அது தான் இருக்கிறது என்று அனுபவம் செய்வார்கள்.



    ஸ்டீவ் நாராயண் (கயானாவின் துணை ஜனாதிபதி) அவர்களின் பரிவாரத்திற்கு அன்பு நினைவுகள் கொடுத்துக் கொண்டே –



    அவர்களுக்கு மிகுந்த உள்ளப்பூர்வமான நினைவை கொடுங்கள். உடலால், மனதால், பணத்தால் மூன்று விதமாகவும் மிக நல்ல முழுமையான சகயோகி, நிச்சயபுத்தி உடைய, நம்பர் ஒன் குழந்தைகள். அந்த நாட்டின் பட்ஜெட்டின் காரணமாக வர முடியவில்லை. ஆனால் பாண்டவ அரசாங்கத்தின் பட்ஜெட்டில் புத்தி மூலம் இங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். மிகவும் பணிவு நிறைந்த குழந்தை முழு பரிவாரமே நாடகத்தின் அனுசாரம் மிகுந்த சேவை செய்பவர்கள். தைரியமும் மிக நன்றாக இருக்கிறது. முழு பரிவாரமுமே அன்பானவர்கள். மூட நம்பிக்கை இல்லை, ஞானத்தின் ஆதாரத்தில் அன்பு நிறைந்தவர்கள். இவருடைய தொடர்பின் காரணமாகத் தான் அமெரிக்கா சென்றடைந்தோம். இவர்கள் எல்லைக்கப்பாற்பட்ட சேவைக்கு, விசேஷ ஆத்மாக்களின் சேவைக்கு பொறுப்பாளர் ஆகியிருக்கிறார்கள். இதைத் தான் ஒருவரிடமிருக்கும் ஞானத்தினால் அனேகர்கள் மேல் பிரபாவம் என்று சொல்வது. இவர் மிகப்பெரிய மைக். இவரைப் பார்த்து அங்குள்ள அரசாங்கத்தின் மேலும் நல்ல பிரபாவம் ஏற்பட்டிருக்கிறது. ஞானத்தின், யோகாவின் மிக நல்ல பிரபாவம் ஏற்பட்டிருக்கிறது. இவர் நல்ல சேவாதாரி.



    வரதானம் :

    எல்லைக்குட்பட்ட இச்சைகளை தியாகம் செய்து அச்சா (நல்லவர்) ஆக ஆவதின் விதி மூலமாக அனைத்து பிராப்தி நிரம்பியவர் ஆகுக.



    யார் எல்லைக்குட்பட்ட இச்சைகள் வைக்கிறார்களோ அவர்களுடைய இச்சைகள் ஒருபொழுதும் நிறைவேறுவதில்லை. நன்றாக ஆகுபவரின் அனைத்து நல்விருப்பங்களும் இயல்பாகவே நிறைவேறிவிடுகிறது. வள்ளலின் குழந்தைகளிடமிருந்து எதையும் கேட்பதற்கான அவசியமே இருப்பதில்லை. கேட்பதினால் எதுவும் கிடைப்பதுமில்லை. கேட்பது என்றால் இச்சை. எல்லைக்கப்பாற்பட்ட சேவையின் எண்ணம் இன்றி எல்லைக்குட்பட்ட இச்சை என்னவாக இருக்குமோ அது அவசியம் நிறைவேறும். எனவே எல்லைக்குட்பட்ட இச்சைக்கு பதிலாக நல்லவராக ஆவதின் விதியைக் கடைபிடித்தீர்கள் என்றால் அனைத்து பிராப்திகளினால் நிரம்பியவர் ஆகிவிடுவீர்கள்.



    சுலோகன் :

    நினைவு மற்றும் சுயநலமற்ற சேவை மூலமாக மாயாவை வென்றவர் ஆவது தான் வெற்றி அடைபவர் ஆவது.



    தபஸ்வி மூர்த்தி ஆகுங்கள் :

    எப்படி சூரியனின் கிரணங்கள் பரவுகிறது, அதே போலவே தபஸ்வி மூர்த்தி ஆகி, மாஸ்டர் அனைத்து சக்திகளும் நிறைந்தவர் என்ற நிலையில் நிலைத்திருந்து அனைத்து சக்திகள் மற்றும் விசேஷங்கள் என்ற கிரணங்களை நாலாபுறங்களிலும் பரவி இருப்பதை அனுபவம் செய்யுங்கள். 'நான் மாஸ்டர் சர்வ சக்திவான், விக்ன விநாஷக் ஆத்மா' இந்த சுவமானத்தின் நினைவின் காரணமாக நினைவின் ஆசனத்தில் அமர்ந்து விடுவார்கள்.


    ***OM SHANTI***