BK Murli 24 January 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 24 January 2017 Tamil

    24.01.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

    இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு இப்பொழுது புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. பழைய வாழ்க்கை மாறி விட்டுள்ளது. ஏனெனில் நீங்கள் இப்பொழுது ஈசுவரிய குழந்தைகளாகி உள்ளீர்கள். உங்களுடைய அன்பு ஒரு தந்தையிடம் உள்ளது.



    கேள்வி:

    தேவதையாக ஆகக் கூடிய பிராமணர்களின் முக்கிய அடையாளம் என்னவாக இருக்கும்?



    பதில்:

    அந்த பிரம்மாவின் முகவம்சாவளி பிராமணர்கள் அனைவரும் ஒரு வழியினராக இருப்பார்கள். அவர்களுக்குள் ஒரு பொழுதும் கருத்து வேற்றுமை ஏற்பட முடியாது. தங்களுக்குள் பிளவுகள் ஏற்பட முடியாது. லௌகீகத்தில் பிராமணர்கள் என்று அழைத்து கொள்பவர்களுக்கிடையே அநேக வழிகள் இருக்கும். ஒரு சிலர் தங்களை புஷ்கரனி வகையினர் என்று கூறிக் கொள்கிறார்கள். ஒரு சிலர் சாரசித்த என்பார்கள். பிராமணர் களாகிய நீங்கள் ஒரு தந்தையின் வழியினால் தேவதை ஆகிறீர்கள். தேவதைகளுக்குள் ஒரு பொழுதும் பிளவு ஏற்படுவதில்லை.



    பாடல்:

    எந்த நாள் முதற் கொண்டு நாங்களும் நீங்களும் சந்தித்தோமோ....



    ஓம் சாந்தி.

    ஜீவ ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மா அல்லது குழந்தைகள் மற்றும் தந்தை சந்திக்கும் பொழுது புதிய அன்பு ஏற்பட்டு விடுகிறது. ஏனெனில் மற்ற தொடர்பினுடைய அன்பு அறுபட்டு விடுகிறது. எப்படி ஒரு கன்னிகைக்கு முதலில் பிறந்த வீட்டின் மீது அன்பு இருக்கும். நிச்சயதார்த்தம் ஆன உடனே புதிய அன்பு இணைகிறது. அவரைப் பொறுத்தவரை முழு புகுந்த வீடே புதியதாக ஆகிறது. புதிய உலகத்தில் புதிய அன்பு இணையும் பொழுது புதிய முழு பரிவாரத்துடன் அன்பு இணைந்து விடுகிறது. இப்பொழுது ஆத்மாக்கள் பரமாத்மாவிடமிருந்து வெகுகாலமாக பிரிந்திருந்தார்கள்.. என்ற பாடலும் உள்ளது. இந்த அழகான மேளா புதியதாகும். இந்த வீடு புதியது. இந்த சம்பந்தம் புதியது. நாம் பிரம்மாகுமார் மற்றும் பிரம்மாகுமாரிகள் ஆவோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது சூத்திரகுமார் மற்றும் குமாரிகள் கிடையாது. பிரம்மா மற்றும் பிரம்மாகுமார் குமாரிகளுக்கிடையே எவ்வளவு அன்பு இருக்கிறது. ஏனெனில், இவர்கள் ஈசுவரிய குழந்தைகள் ஆகிறார்கள். இறைவன் நிராகாரமானவர் ஆவார். அவருடன் அன்பு சாகாரத்தில் வேண்டும் அல்லவா? நிராகாரமானவரை எவ்வாறு அன்பு செய்வீர்கள். ஆத்மா சரீரத்திலிருந்து பிரிந்து விட்டது என்றால் அன்பு இருப்பதில்லை. ஆத்மா மற்றும் பரமாத்மா சாகாரத்தில் சந்திக்கும் பொழுது தான் அன்பு ஏற்படுகிறது. நிராகார ரூபத்தில் தாயும் நீயே தந்தையும் நீயே... என்று பாடிக் கொண்டு இருக்கிறார்கள் தான்.. நீங்கள் வாருங்கள், உங்களுடைய கிருபையினாலே எங்களுக்கு அளவற்ற சுகம் கிடைக்கட்டும். பதீதபாவனரே வாருங்கள்.. பாடுகிறார்கள் அல்லவா? உண்மையில் பாரதம் மகான் ஆக இருக்கும் பொழுது ஏராளமான சுகம் இருந்தது. அதன் பெயரே சுகதாமம் என்று இருந்தது. இது துக்கதாமம் ஆகும். மேலும் ஆத்மாக்கள் இருக்குமிடம் சாந்தி தாமம் ஆகும். அங்கு ஆத்மாக்கள் தூய்மையாகவே இருப்பார்கள். தூய்மையற்ற ஆத்மா யாருமே இருக்க முடியாது. உங்களுக்கு இப்பொழுது தந்தை கிடைத்துள்ளார். எனவே புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. பழைய வாழ்க்கையை மாற்றி இப்பொழுது புது வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தங்களது தந்தையிடமிருந்து எல்லையில்லாத சுகத்தின் ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அளவற்ற சுகம் பாரதத்தில் தான் சொர்க்கத்தில் இருக்கும். மேலும் அளவற்ற அமைதி நிர்வாண தாமத்தில் இருக்கும். அது என்னுடைய மற்றும் உங்களுடைய வீடாகும். எனவே ஆத்மாக்களாகிய நாம் சாந்திதாமத்தில் இருப்பவர்கள் ஆவோம் என்பதைப் புரிய வைக்க வேண்டும். தந்தை கூட அங்கு வசிப்பவர் ஆவார். அவர் நம்மைப் போல பிறப்பு இறப்பு சக்கரத்தில் வருவதில்லை. அவரும் ஆத்மா தான்! ஆனால் பரம ஆத்மா ஆவார். பரந்தாமத்தில் இருப்பவர் ஆவார். ஆத்மாக்களாகிய நாம் கூட பரந்தாமத்தில் இருக்கக் கூடிய பரமபிதா பரமாத்மாவின் குழந்தைகளாக இருந்தோம். வீடோ நம் அனைவருக்கும் அதுவே ஆகும். வீடு கூட அனைவருக்கும் நினைவிருக்கிறது. யாராவது இறந்து விட்டார் என்றால், இன்னார் கடந்து நிர்வாணம் சென்றார் என்று கூறுகிறார்கள். அது சப்தத்திற்கு அப்பாற்பட்ட இடமாகும். சூரியன் சந்திரனினுடைய ஒளி அங்கு இல்லை. நாம் அங்கு வசிப்பவர்கள் ஆவோம். இப்பொழுது பாபாவை நினைவு செய்துக் கொண்டே இருக்கிறார்கள். தந்தை வரும் பொழுது பிறகு புதிய விஷயங்களைக் கூறுகிறார். மனிதர்கள் இந்த நாடகத்தை அறிந்து கொண்டு விட்டார்கள் என்றால், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் விநாடிக்கு விநாடி புதியதாகும் என்று கூறுவார்கள். எல்லையில்லாத நாடகம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. எனவே தந்தை வந்து புதிய விஷயங்களைக் கூறுகிறார். குழந்தைகளாகிய உங்களை திரிகாலதரிசி திரிநேத்திரியாக ஆக்கிக் கொண்டிருக்கிறேன். தந்தை பிரம்மாண்டத்திற்கு அதிபதி ஆவார். பின் மூன்று உலகங் களுக்கும் கூட எஜமானர் ஆவார் அல்லவா? ஏனெனில், மூன்று உலகங்களின் ஞானத்தைக் கூட அளிக்கிறார். நீங்கள் மூன்று உலகங்களின் அதிபதியாக ஆவது இல்லை. நீங்கள் உலகத்தின் அதிபதி மகாராஜா மகாராணி ஆகிறீர்கள். திரிலோகி என்றால் மூன்று உலகங்களும் அறியப்படுகிறது. அதிபதியாக ஒரு உலகமான சொர்க்கத்திற்கு ஆகிறீர்கள். எனவே இவை யெல்லாம் புதுப் புது விஷயங்களாகும். பாபாவின் குழந்தைகள் ஆவதே ஆஸ்தியைப் பெறுவதற்காகத்தான் எவரொருவருக்கும் இதைப் புரிய வைப்பது மிகவும் சுலபமாகும். பகவானுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது என்று கேளுங்கள். பகவான் சொர்க்கத்தின் படைப்புக்கர்த்தா ஆவார். தாயும் தந்தையும் ஆவார். பகவானை ஒரு பொழுதும் நரகம் அல்லது துக்கதாமத்தின் படைப்புக்கர்த்தா என்று கூறமாட்டார்கள். பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலமாக சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்கிறார். அவசியம் புது உலகமான சொர்க்கத்தைத் தான் படைப்பார். பரமாத்மா பிரம்மா மூலமாக முதலில் பிராமண தர்மத்தைப்படைக்கிறார். அவர்களுக்கு இராஜ யோகத்தைக் கற்பிக்கிறார். அதற்குப் பின் அவர்கள் பிராமணரிலிருந்து தேவதையாகிறார்கள். எனவே பிரம்மா மூலமாக பிராமண தர்மம் பிறகு விஷ்ணு மூலமாக தெய்வீக தர்மமாகும். இச்சமயம் நீங்கள் பிராமணராகி பிறகு க்ஷத்திரியர் கூட ஆகிறீர்கள். விஷ்ணு தர்மத்தில் செல்கிறீர்கள். இப்பொழுது ஈசுவரிய தர்மம் அல்லது பிராமண தர்மத்தில் வந்துள்ளீர்கள். பிறகு வருங்கால தெய்வீக தர்மத்தில் செல்வீர்கள். பிராமண தர்மம் கூட வேண்டும் அல்லவா? பிரஜாபிதா பிரம்மா மூலமாக முக வம்சாவளி பிராமணர்களைப் படைத்தார். அவர்கள் குழந்தைகள் ஆகிறார்கள். சந்நியாசிகள் கூட வாயால் படைக்கிறார்கள். ஆனால் அவர்கள் குழந்தைகளை படைப்பதில்லை. அவர்கள் சீடர்களை உருவாக்குகிறார்கள். அவர்களுடையது வம்சம் என்று கூறப்படுவதில்லை. நீங்கள் எங்களுடைய சிஷ்யர்கள் ஆவீர்கள் என்று வாயால் கூறுகிறார்கள். வம்சத்திற்கு ஆஸ்தி கிடைக்க வேண்டியுள்ளது. இது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். நாளுக்கு நாள் பிரம்மா முக வம்சாவளியின் விருத்தி ஆகிக் கொண்டே போகும். நிறைய பேர் பி.கே. ஆகிக் கொண்டே செல்வார்கள். எத்தனை பேர் தேவதைகளாக ஆக வேண்டி இருக்குமோ அத்தனை பிராமணர்கள் அவசியம் ஆகி விடுவார்கள். பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலமாக மனிதர்களை பிராமணர்கள் மற்றும் தேவதையாக ஆக்குகிறார். எனவே அவசியம் சொர்க்கத்திற்கு அதிபதி ஆகி விடுவார்கள். அவர்களுக்காகத் தான் மனிதனிலிருந்து தேவதை... என்ற பாடல் உள்ளது. எனவே இந்த பாபா வந்து புதுப் புது விஷயங்களைக் கூறுகிறார். புதிய உலகத்திற்காக புது விஷயங்களான காரணத்தால் சாஸ்திரங்களில் எங்குமே இந்த விஷயங்கள் இல்லை. எனவே மனிதர்கள் குழம்புகிறார்கள்.



    உங்களுடையது இது ஈசுவரிய சம்பிரதாயமாகும். ஆனால் யார் ஈசுவரிய குழந்தைகளாக ஆன பிறகு இறைவனைக் கைவிட்டு விடுகிறார்களோ அவர்கள் பிறகு அசுர சம்பிரதாயத்தினராக ஆகி விடுகிறார்கள். ஒரு முறை மம்மா, பாபா என்று கூறினார்கள், ஞானம் கேட்டார்கள் என்றாலும், அவர்களுக்கு ஆஸ்தி அவசியம் கிடைக்கும். மம்மா, பாபா என்று கூறிக் கொண்டே இருப்பார்கள். பிதாஸ்ரீ மாதேஷ்வரி என்று எழுதவும் செய்கிறார்கள். பிரஜாபிதா பிரம்மா பிரசித்தமானவர் அல்லவா? சிவபாபா கூட பெயர் புகழ் பெற்றவர் ஆவார். காட்ஃபாதர் என்று ஆத்மா கூறுகிறார். நான் முதன் முதலில் பிரஜாபிதா பிரம்மாவை தத்து எடுக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். இந்த பிரம்மாவினால் தத்து எடுக்கப்பட்டவர்கள் அனைவரும் பிராமணர்கள் ஆவார்கள். எனவே புதிய படைப்பு ஆகிறது அல்லவா? அவசியம் நிறைய பேர் இருப்பார்கள். இத்தனை பேர் எல்லோரும் விகாரத்தினால் பிறந்திருக்க முடியுமா என்ன? பிரஜாபிதா பிரம்மா மற்றும் ஜகதம்பா என்று பாடவும் படுகிறது. பிரம்மா கூட ஒருவர், விஷ்ணு கூட ஒருவர், இலட்சுமி நாராயணர் கூட ஒருவர், ஜகதம்பா கூட ஒருவர் ஆகிறார். இதே தோற்றம் உடையவர்களை பிறகு ஒரு பொழுதும் பார்க்க மாட்டீர்கள். ஒவ்வொரு மனிதரையும் பிறகு கல்பத்திற்குப் பின்னரே அதே தோற்றத்தில் பார்க்க முடியும். இங்கு ஒருவரையே அநேக தோற்றங்களில் அமைத்து விடுகிறார்கள். இங்கு நிறைய பேருக்கு இராதை கிருஷ்ணர் என்ற பெயர் உள்ளது. ஆனால் புரிந்திருக்கிறார்களா என்ன? இராதை கிருஷ்ணர் என்பது சொர்க்கத்தின் முதல் இளவரசர் இளவரசியின் பெயர் ஆகும். நாங்கள் பதீதமாக (தூய்மையற்று) இருக்கிறோம். நாம் எப்படி இந்த பெயர் வைக்க முடியும்? எனவே சிவபாபா இந்த புதுப் புது விஷயங்களைக் கூறுகிறார். புதிய உலகத்திற்காக இவை புதிய விஷயங்கள், புதிய ஞானமாகும். நான் தான் முந்தைய கல்பத்திலும் புதிய விஷயங்களைக் கூறி இருந்தேன் என்று தந்தை கூறுகிறார். இப்பொழுது மீண்டும் கூறிக் கொண்டிருக்கிறார். நீங்கள் இப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தேவி தேவதையாகி விடும் பொழுது தான் இந்த ஞானம் முடிந்து போய் விடும். எவ்வளவு உயர்ந்த ஏற்றமாகும். இதுவும் பாடப்பட்டுள்ளது. ஆச்சரியப்படும் வகையில் தங்களுடைய தந்தையினுடையவர் ஆனார்கள், ஞானம் கேட்டார்கள் மற்றவர்களுக்கு கூறினார்கள். பிறகும் அந்தோ, மாயை! ஓடிப் போய் விடுகிறார்கள். பிறகு பி.கே.யிடம் செல்லுங்கள் என்று யாருக்கும் கூறவும் முடியாது. இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது. எதுவும் புதிதல்ல. நிறைய பேர் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருப்பார்கள். பட்டியில் அமர்ந்திருக்கும் பொழுது கூட மாயையிடம் தோற்று ஓடிப் போனவர்களாக ஆகி விட்டார்கள். சொர்க்கத்தில் வருவார்கள். எப்படி முயற்சி செய்தார்களோ அப்படி பதவி அடைவார்கள். தங்களுக்காக அல்லது தங்களது சம்பந்தியினர் ஆகியோருக்காக கேட்டார்கள் என்றால், கூற முடியும். இந்த நிலைமையில் என்ன பதவி ஆகும் என்பதை சுயம் தாங்கள் கூட புரிந்து கொள்ள முடியும். தந்தை வந்து புரிய வைக்கிறார்: டில்லியில் எல்லா தர்மங்களின் மாநாடு நடக்கிறது. இப்பொழுது சிருஷ்டியில் அமைதியை எப்படி நிலைநாட்டுவது அல்லது தங்களுக்குள் ஒன்று சேர்ந்து எப்படி ஒற்றுமையாக ஆகி விடுவது என்பதற்காக மாநாடுகள் நடத்துகிறார்கள். எல்லோரும் ஒன்றாக ஆகி விட முடியாது. மதத் தலைவர்களின் மாநாடு ஆகும். ஆனால் தர்மங்கள் வரிசைக்கிரமமாக எப்படி உள்ளது என்பது அவர்களுக்குத் தெரியாது. முதல் நம்பர் தர்மம் எது? மதத் தலைவர்கள் என்றால் யார் யாரெல்லாம் தர்மத்தை நிலை நாட்டியிருக்கிறார்களோ அந்த தலைவர்கள் வர வேண்டும். எப்படி முதலமைச்சர்களின் மாநாடு நடக்கிறது என்றால், அதில் கலெக்டர் அல்லது நீதிபதி ஆகியோர் வர முடியாது. கவர்னர்களின் மாநாடு தங்களுக்குள் நடக்கிறது என்றால், கவர்னர்கள் தான் வருவார்கள். ஆம் வேண்டுமானால் கவர்னர் தனது பிரைவேட் செக்ரட்டரியை கூட அழைத்து வருவார். இந்த எல்லா தர்மங்களும் எப்படி வரிசைக்கிரமமாக ஸ்தாபனை ஆகிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் விட பெரிய தர்மம் எது? ஆதி சனாதனம் என்பது தேவி தேவதா தர்மமே ஆகும். அந்த தர்மத்தின் தலைவர் எங்கே? அந்த தர்மத்தை யார் ஸ்தாபனை செய்தார்? கிருஷ்ணர் இப்பொழுது இல்லை. இல்லையென்றால் பிறகு கிருஷ்ணரை ஏற்றுக் கொள்பவராக இருக்க வேண்டும். அவர்கள் வல்லபாச்சாரி ஆவார்கள். எனவே அவசியம் நம்முடைய தேவி தேவதா தர்மம் இருந்தது. அவர்கள் பிறகு இந்து தர்மம் (மதம்) என்று கூறி விடுகிறார்கள். ஆனால் இந்து என்ற தர்மம் கிடையாது. தேவதா தர்மத்தினர் இப்பொழுது யாரும் இல்லை. எனவே தர்மத் தலைவர்கள் வர வேண்டும். கூடவே தாராளமாக செக்ரட்டரி ஆகியோரை வேண்டுமானால் அழைத்து வரட்டும். முக்கியமான தர்மங்களே 4 ஆகும். அந்த தர்மங்களின் தலைவர்கள் வேண்டும். தேவி தேவதா தர்மத்தின் தலைவர் யார்? காட்டெஸ் ஆஃப் நாலேஜ் சரஸ்வதி, பிரஜாபிதா பிரம்மா என்றெல்லாம் பாடுகிறார்கள் தான். எனவே அவசியம் அவர்கள் தான் பெரியவர்களாக இருப்பார்கள். பிரம்மா மூலமாக பிராமண தர்மம் உருவானது என்று அவர்களும் புரிந்திருப்பார்கள். ஆனால் இவர் பிராமணர்களுக்கு எப்படி கற்பித்து தேவதையாக ஆக்குகிறார் என்பது தெரியாது. அந்த பிராமணர்கள் கூட நாங்கள் பிரம்மாவின் சந்ததியினர் என்பார்கள். ஆனால் எப்படிப் பிறந்தார்கள் என்பது தெரியாது. பிறகு பிராமணர்களில் கூட ஒரு சிலர் புஷ்கரணி, ஒரு சிலர் சார சித்தர், ஒரு சிலர் வேறு ஏதோவாக இருப்பார்கள். இங்கு பிரம்மாவின் குழந்தைகள் பிராமணர்களே பிராமணர்கள் ஆவார்கள். வேறு எந்த பிரிவுகளும் இதில் ஏற்படுவது இல்லை. மற்ற பிராமணர் களுக்கிடையே பிளவுகள் ஏற்படுகின்றன. இவர்களுக்குள் இல்லை. தேவதைகளுக் கிடையில் கூட ஒரு பொழுதும் பிளவு ஏற்படுவது இல்லை. சூரிய வம்சத்தினர் என்றால் எல்லோருமே சூரிய வம்சத்தினர். கருத்து வேற்றுமையின் விஷயம் இல்லை. பிளவுகளில் எவ்வளவு தீமை ஏற்பட்டு விடுகிறது. எனவே தந்தையிடமிருந்து நீங்கள் இந்த புதுப் புது விஷயங்களைக் கேட்கிறீர்கள் அல்லவா? எந்த ஒரு பாடல் ஒன்றும் பாடுவதில்லை. புதிய விதமான ஞானம் தருகிறார். முழு சிருஷ்டி சக்கரத்தினுடைய ஞானம் அளிக்கிறார். அதை தாரணை செய்ய வேண்டும். இப்பேர்ப்பட்ட தந்தை ஆசிரியர் குருவாக இருப்பவரை கை விட்டு விட்டு படிப்பை விட்டு விடலாமா என்ன? படிப்பை விட்டார்கள் என்றால் தந்தையை விட்டு விட்டார்கள். மாணவர்கள் இல்லையென்றால், குழந்தைகளும் இல்லை. தந்தையை விட்டு விட்டார்கள் என்றால் ஆஸ்தியை இழந்தார்கள். பதீத பாவனர் ஒரே ஒரு தந்தை ஆவார். இப்பொழுது தீர்ப்பிற்கான நேரமாகும். கணக்கு வழக்கை முடித்து விட்டு எல்லோரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று தந்தை கூறுகிறார். தங்கத்தை நெருப்பிட்டு காய்ச்சும் பொழுது சுத்தமாகி விடுகிறது. இப்பொழுது நெருப்பு முழு உலகிற்குப் பிடிக்கப் போகிறது. ஆனால் இந்த நெருப்பினால் தூய்மையாக ஆக முடியாது. இது யோக பலத்தின் விஷய மாகும். அல்லது பின் தண்டனைகள் அடைந்து சரீரத்தை விடுவார்கள். கணக்கு வழக்கு முடிந்து போகும். பாவத்தின் கணக்கு வழக்குகளைத் தீர்த்து விட்டு, பிறகு பாவனமாக ஆகி திரும்பிச் செல்ல வேண்டும். திரும்பிச் செல்வதற்கான நேரம் கூட இது தான். மகாபாரத போர் கூட உள்ளது. ஹோகூட கொண்டாடுகிறார்கள். இராவண இராஜ்யம் முடியப் போகிறது. பிறகு இராம இராஜ்யத்தில் மிகவும் குறைவானோர் இருப்பார்கள். இப்பொழுது இராவண இராஜ்யத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். இத்தனை எல்லா ஆத்மாக்களும் எங்கே செல்வார்கள்? அவசியம் லிபரேட்டர் (விடுவிப்பவர்) கூட வேண்டும். நான் அனைவரையும் கூட்டிச் செல்வேன். அனைவருடைய ஜோதியையும் ஏற்றி கூட்டிச் செல்வேன் என்று தந்தை கூறுகிறார். பிறகு அவர்கள் அவரவர் பாகத்தை ஏற்று நடிக்க வேண்டும். நாம் தேவி தேவதா தர்மத்தில் வருவோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். முக்தி தாமத்திற்குச் சென்று பிறகு திரும்பி வருவார்கள். 84 பிறவிகள் அனுபவிப்பார்கள். சூரியவம்சத்தினர், சந்திர வம்சத்தினர்.. ஆவார்கள். முழு சக்கரம் புத்தியில் வந்து விட்டுள்ளது. வாருங்கள் நாங்கள் உங்களுக்கு சிவபாபாவின் தொழில் பற்றி கூறுவோம் என்று ஆத்மாவினால் கூற முடியும். குழந்தைகளைத் தவிர வேறு யாரும் கூற முடியாது. அவர்கள் பரமாத்மாவோ நிராகாரமானவர். அவருடைய தொழில் என்று என்ன கூறுவீர்கள் என்பார்கள். அடே அவர் பதீத பாவனர் ஆவார். எனவே அவசியம் பாவனமாக ஆக்குவதற்கு அவர் வர வேண்டி உள்ளது அல்லவா? எப்படி இராஜயோகம் கற்பிக்கிறார். பிரம்மா மூலமாக எப்படி தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகிறது என்பதை எங்களால் கூற முடியும். எனவே பாபா வந்து எல்லா விஷயங்களையும் புரிய வைக்கிறார். குழந்தைகளுக்கு தான் புரிய வைப்பார். முந்தைய கல்பத்தில் யார் படித்தார்களோ அவர்கள் படிக்கிறார்கள். படிக்க முடியவில்லை என்றால் ஓடிப் போய் விடுபவர்களாகிறார்கள். புதிய விஷயம் கிடையாது. பிறகும் பாபாவிற்கு எப்பொழுதும் குழந்தைகள் மீது அன்பு இருக்கும். பாவம் பிறகும் வந்து தந்தையிடமிருந்து முழு ஆஸ்தி எடுத்துக் கொள்ளட்டுமே ! ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் என்ன செய்ய முடியும்? தந்தைக்கு அன்பு இருக்கிறது அல்லவா? ஏனெனில் பக்தி மார்க்கத்தில் கூட தந்தையை நிறைய நினைவு செய்கிறார்கள். யாரெல்லாம் தேவி தேவதா தர்மத்தினராக இருப்பார்களோ அவர்கள் அவசியம் நினைவு செய்து கொண்டிருக்க கூடும். அரை கல்பம் நிறைய நினைவு செய்கிறார்கள். ஆத்மா சுகத்தைப் பெற்றிருக்கிறது. எனவே துக்கத்தில் தந்தையை நினைவு செய்கிறது. அவர்கள் அதிகமாக பக்தி செய்து பூசாரியிலிருந்து பூஜைக்குரியவர் ஆகிறார்கள். யார் தேவி தேவதைகளாக இருந்தார்களோ அவர்களுடையது தான் நாற்று நடப்பட்டு கொண்டிருக்கிறது. எனவே எங்கெல்லாம் மாநாடுகள் ஆகியவை நடக்கின்றனவோ அங்கு முக்கிய தர்மத்தினரை அழைக்க வேண்டும். பி.கே.க்களை அழைத்தார்கள் என்றால் அவர்கள் முழுமையான ஆலோசனை அளிப்பார்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் பிரம்மா குமார் குமாரிகள் தான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய முழு ஆலோசனை அளிக்க முடியும். நீங்கள் அமைதியை விரும்புகிறீர்கள். ஆனால் அமைதி நிர்வாண தாமத்தில் தான் இருக்கும். இப்பொழுது துக்க தாமம் ஆகும். அநேக தர்மங்கள் உள்ளன. ஒரு தர்மம் இருக்கும் பொழுது சுகம் சாந்தி எல்லாமே இருந்தது. இப்பொழுது இந்த விநாசம் அவசியம் நடக்கும். இதில் குஷி ஏற்பட வேண்டும். சொர்க்கத்தின் வாசல் திறந்து கொண்டிருக்கிறது. இது போல பெண் குழந்தைகள் புரிய வைக்க வேண்டும். புரிந்ததா? நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. ஒரு பொழுதும் தந்தை மற்றும் படிப்பை விட்டு விட்டு ஆஸ்தியை இழந்து விடக் கூடாது. ஒற்றுமையாக ஒரு வழியில் இருக்க வேண்டும்.



    2. தண்டனைகளிலிருந்து விடுபடுவதற்காக யோக பலத்தினால் எல்லா கணக்கு வழக்குகளையும் தீர்க்க வேண்டும்.



    வரதானம்:

    நடத்தை மற்றும் முகத்தின் மூலமாக புருஷோத்தம ஸ்திதியின் சாட்சாத்காரம் செய்விக்கும் பிரம்மா தந்தைக்குச் சமமானமானவர் ஆவீர்களாக.



    எப்படி பிரம்மா தந்தை சாதாரண உடலில் இருந்த போதிலும் எப்பொழுதும் புருஷோத்தமராக அனுபவம் ஆகிக் கொண்டிருந்தார். சாதாரண நிலையில் புருஷோத்தமரின் பிரகாசத்தை பார்த்தீர்கள். இது போல தந்தையை பின்பற்றுங்கள் (ஃபாலோ ஃபாதர்). செயல்கள் சாதாரணமாக இருந்தாலும் கூட ஸ்திதி மகானாக இருக்கட்டும். முகத்தில் சிறந்த வாழ்க்கையின் தாக்கம் இருக்கட்டும். எப்படி லௌகீக ரீதியில் அநேக குழந்தைகளின் நடத்தை மற்றும் முகம் தந்தைக்கு சமானமாக இருக்கும். இங்கு முகத்தின் விஷயம் அல்ல. ஆனால் நடத்தையே சித்திரமாகும். ஒவ்வொரு நடத்தை மூலம் தந்தையின் அனுபவம் ஆக வேண்டும். பிரம்மா தந்தைக்குச் சமானமாக புருஷோத்தம ஸ்திதி இருக்க வேண்டும். அப்பொழுது தான் தந்தைக்கு சமானம் என்று கூறுவார்கள்.



    சுலோகன்:

    யார் ஒரே ரசனையின் ஸ்திதி என்ற சிறந்த ஆசனத்தில் நிலைத்து இருக்கிறார்களோ அவர்களே உண்மையான தபஸ்வி ஆவார்கள்.



    தபஸ்வி மூர்த்தி ஆகுங்கள்:

    தனது தபஸ்யா ரூபத்தின் மூலமாக, யோக அக்னி மூலமாக இந்த பழைய விருட்சத்தை சாம்பலாக்கும் அல்லது பரிவர்த்தனை செய்வதற்கான சங்கல்பம் எடுங்கள். இதற்காக கூட்டமைப்பின் ரூபத்தில் முழு பலத்துடன் யோக ஜ்வாலையை ப்ரஜ்வலிக்கச் செய்யுங்கள். ஒரே சீரான ஸ்திதி என்ற ஆசனத்தில் ஒருமுக நிலையுடன் அமருங்கள். அந்த ஒருவரின் நினைவில் ஒன்றி விடுங்கள். 


    ***OM SHANTI***