BK Murli 31 January 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 31 January 2017 Tamil

    31.01.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! சிறந்தவர்களாக ஆக வேண்டுமென்றால், ஸ்ரீமத்படி முழுமையாக நடந்து செல்லுங்கள். ஸ்ரீமத்படி நடக்காமல் இருப்பது தான் எல்லாவற்றையும் விட பெரிய குறையாகும்.



    கேள்வி:

    எந்த குழந்தைகளின் தொண்டை கட்டிப் போய் விடுகிறது? புத்தியிலிருந்து ஞானம் வெளியேறி விடுகிறது?

     பதில்:

    யார் போகப்போக அபவித்திரமாக ஆகி விடுகிறார்களோ, படிப்பை விட்டு விட்டு தந்தையை கை விட்டு விடுகிறார்களோ அவர்களுடைய புத்தியிலிருந்து ஞானம் வெளியேறி விடுகிறது. நிர்விகாரி ஆகாத வரை அவினாஷி ஞானம் புத்தியில் பதிய முடியாது. புத்தியின் பூட்டு திறக்க முடியாது. பதீதமாக (தூய்மையற்ற வராக) ஆகுபவர்களின் உணவுப் பழக்கம் கூட அசுத்தமானதாக ஆகி விடுகிறது. அவர்கள் மாயாவி மனிதர்களுடன் போய் சேர்ந்து விடுகிறார்கள். பிறகு தொண்டை கட்டி விடுகிறது. யாருக்குமே அவர்களால் ஞானம் கூற முடியாது.



    பாடல்:

    உன்னை அடைந்து நான்.. .. ..



    ஓம் சாந்தி.

    இந்த பாடலை யார் பாடிக் கொண்டிருக்கிறார்கள்? யார் தந்தையிடமிருந்து மூன்று உலகங்களின் அரசாட்சியை எடுத்துள்ளார்களோ அவர்கள் பாடுகிறார்கள். உங்களிடமிருந்து என்ன கிடைக்கிறதோ அவற்றை யாரும் அகற்ற முடியாது. நம்மை யாரும் அகற்ற முடியாது. அதாவது காலன் உயிரைக் குடிக்க முடியாது. மேலும் நமது இராஜ்யத்தைக் கூட யாருமே கவர்ந்து கொள்ள முடியாது. நாம் எந்த எஜமானரிடமிருந்து ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். தந்தைக்கு மாலிக் (எஜமானன்) என்று கூட கூறுகிறார்கள். ஆனால் அந்த எஜமானனிடமிருந்து என்ன கிடைக்கும் என்பது எதுவும் தெரியாது. எஜமானரை நாம் எப்படி நினைவு செய்ய வேண்டும்? அவரது பெயர் ரூபம் என்ன? எதுவுமே தெரியாது. எஜமானர் சிருஷ்டிக்கு அதிபதி ஆகிறார் அல்லவா? அவர் படைப்பவர் ஆகிறார். நாம் படைப்பு ஆவோம். பாபா வாரிசு அல்லது குழந்தைகளைப் படைக்கிறார். பிறகு அவர்களை தனக்கு எஜமானராக ஆக்கி விடுகிறார். குழந்தைகள் பிறகு தந்தைக்கு எஜமானராக ஆகி விடுகிறார்கள். என்னுடைய தந்தையின் சொத்துக்கு நான் எஜமானன் ஆவேன் என்று குழந்தைகள் கூறுகிறார்கள். குழந்தைகளின் சொத்துக்கு நான் அதிபதி ஆவேன் என்று தந்தை கூறமாட்டார். இவை மிகவுமே புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். அறிவுள்ள குழந்தைகள் தான் புரிந்து கொள்ள முடியும். புத்தி சுத்தமாக இல்லையென்றால், அதில் இரத்தினங்கள் நிலைத்திருக்க முடியாது. ஆத்ம உணர்வுடையவராக (தேஹீ அபிமானி) ஆகும் பொழுது தான் ஞான இரத்தினங்கள் புத்தியில் நிலைத்திருக்க முடியும். தேஹீ அபிமானியாகி இருக்க வேண்டும். மேலும் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். அந்த தந்தையை நினைவு செய்ய வேண்டும். எப்படி லௌகீக தந்தை குழந்தைகளைப் படைக்கிறார் என்றால், அந்த குழந்தைகள் எஜமானர் ஆகி விடுகிறார்கள். என்னுடைய தந்தை என்று குழந்தைகள் கூறுவார்கள். என்னுடைய குழந்தைகள் என்று தந்தை கூறுவார். ஆனால் குழந்தைகளிடம் ஒன்றும் கிடையாது. அவர்களுக்கு தந்தையின் சொத்து கிடைக்கிறது. குழந்தைகளின் சொத்து என்னுடையது என்று தந்தை ஒரு பொழுதும் கூற மாட்டார். குழந்தைகள் என்னுடைய சொத்துக்கு எஜமானர் ஆவார்கள் என்று தந்தை புரிந்திருப்பார். இவை மிகவுமே தாரணையுடன் கூடிய விஷயங்களாகும். தாரணை ஆவதில்லை. ஏனென்றால், குறைபாடுகள் உள்ளன. எனக்குள் நிறைய குறைகள் உள்ளன என்று உணர்ந்திருக்க வேண்டும். ஸ்ரீமத்படி நடக்காமல் இருப்பது முதல் நம்பர் குறைபாடு ஆகும். ஸ்ரீமத் மூலமாகத் தான் சிரேஷ்ட மானவர் (சிறந்தவர்) ஆக வேண்டும். இராஜயோகம் ஸ்ரீமத்தைக் கற்பிக்கிறது. ஸ்ரீ என்றால் நிராகார பகவான் கூறுகிறார். எனவே ஞானக்கடல் பதீதபாவன பரமபிதா பரமாத்மா உடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது என்று நாம் கேள்வி கேட்கிறோம். இதை மிகப் பெரிய போர்டுகளில் எழுதி விட வேண்டும். பரமாத்மா சொர்க்கத்தின் படைப்புகர்த்தா ஆவார். எனவே யாருக்கு பரமாத்மாவுடன் சம்பந்தம் இருக்குமோ அவர்கள் கூட அவசியம் சொர்க்கத்தின் அதிபதி ஆகியே தீருவார்கள்.



    தந்தை வந்து குழந்தைகளுக்கு சலாம் வந்தனம் செய்கிறார். சலாம் மாலேகம் ! எஜமான குழந்தைகளுக்கு வந்தனம் என்கிறார். குழந்தைகள் மாலேகம் சலாம் ! எஜமானருக்கு வந்தனம் என்று கூறுகிறார்கள். நான் பிரம்மாண்டத்திற்கு மட்டும் அதிபதி ஆவேன். நீங்கள் பிரம்மாண்டம் மற்றும் உலகம் இரண்டிற்கும் அதிபதி ஆகிறீர்கள். எனவே பாபா குழந்தைகளுக்கு டபுள் சலாம் செய்கிறார். ஒரே ஒரு எல்லையில்லாத தந்தை உங்களுக்கு எவ்வளவு சுயநலமற்ற சேவை செய்கிறார். லௌகீக தந்தை பலன் எதிர்பாராதவராக இருப்பதில்லை. நாம் வானபிரஸ்த நிலையில் செல்லும் பொழுது குழந்தைகள் நமக்கு சேவை செய்வார்கள் என்று அவர்களுக்கு விருப்பம் இருக்கும். உண்மையில் இந்த நியமம் இருந்தது, குழந்தைகள் தந்தையின் சேவை செய்து கொண்டிருந்தார்கள். இந்தக் காலத்தில் பணத்தை செலவழித்து விடுகிறார்கள். நமக்கு இப்பேர்ப்பட்ட அரசாட்சி தந்தையிடமிருந்து கிடைக்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இலட்சுமி நாராயணருக்காகவும் எழுதுங்கள்: இவர்களைத் தெரியுமா? இவர்களுக்கு இந்த சொர்க்கத்தின் அரசாட்சியை யார் கொடுத்தார்கள்? அவசியம் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர் தான் கொடுப்பார். பழைய உலகமாக ஆகும் பொழுது தானே புது உலகத்தை ஸ்தாபனை செய்வார். எனவே இலட்சுமி நாராயணர் இந்த ஆஸ்தியை ஸ்ரீமத்படி நடந்ததால் பெற்றார்கள். ஸ்ரீமத் என்பது இராஜயோகம் மற்றும் எளிய ஞானத்தைக் கற்பிக்கிறது. யாருக்கு புரிய வைக்கிறார்களோ அவர்கள் இராஜாவாகி விடுகிறார்கள். முதல் நம்பரில் இருப்பவர் ஸ்ரீகிருஷ்ணர் ஆவார். அவர் அப்பேர்ப்பட்ட என்ன கர்மம் செய்தது காரணமாக தனது தாய் தந்தையரை விடவும் மகிமை அதிகமான பதவியை அடைந்தார். அவர்களிடம் ஸ்ரீகிருஷ்ணர் பிறப்பதற்கு அந்த மகாராஜா மகாராணி எங்கிருந்தார்கள்? நிர்விகாரியாக இல்லாதவரைக்கும் அவினாஷி ஞானம் புத்தியில் பதிய முடியாது. தூய்மையாக ஆகி இருக்கும் பொழுது தான் புத்தியின் பூட்டு திறக்கிறது. அபவித்திரமாக ஆகும்  பொழுது எல்லாமே புத்தியிலிருந்து வெளியேறிவிடும். நிறைய குழந்தைகள் பாபாவின் கை விட்டு விட்டு போய் விடுகிறார்கள். படிப்பையே விட்டு விடுகிறார்கள். அவர்களால் பிறகு ஒரு பொழுதும் யாருக்குமே ஞானம் கூற முடியாது. பதீதமாக (தூய்மையற்றவராக) ஆகி விடுகிறார்கள். உணவுப் பொருட்களும் அசுத்தமானவற்றை உட்கொள்கிறார்கள். மாயாவி மனிதர்களுடன் போய் சேர்ந்து விடுகிறார்கள். அவர்களுடைய குரல் கட்டி போய் விடுகிறது. இந்த விஷயங்கள் கூட சாஸ்திரங்களில் உள்ளது. பிருந்தாவனத்தில் நடனம் ஆகியவை நடந்து கொண்டிருந்தது. தடை விதித்துக் கொண்டிருந்தார்கள் யாருக்காவது கூறினீர்கள் என்றால் குரல் அடைத்து விடும். உண்மையில் இது ஞானத்தினுடைய விஷயமாகும். ஒருவேளை கை விட்டு விட்டு சென்றார்கள், வெளியே போய் நிந்தனை செய்கிறார்கள் என்றால், தொண்டை அடைத்துக் கொண்டு விடும். கூறுகிறார்கள் அல்லவா, சத்குருவை நிந்திப்பவர்கள் பதவி அடைய முடியாது. சிருஷ்டி பதீதமாக, பழைமையாக ஆகிவிடும் பொழுது நான் வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். மனிதர்கள் தமோபிரதானமாக ஆக வேண்டி உள்ளது. ஏனெனில், என்ன காரியங்கள் செய்வார்களோ அவற்றை தவறாகத் தான் செய்வார்கள். ஏனெனில் தவறான வழி கிடைத்து கொண்டிருக்கிறது. ஸ்ரீமத் இல்லை. தவறான வழி பதீதமாக தாழ்ந்தவர்களாக (ப்ரஷ்டாசாரி) ஆக்கி விடுகிறது. இதற்கு முன்பு ப்ரஷ்டாசாரி என்ற வார்த்தையே இருக்கவில்லை. சந்நியாசிகள் பாவனமாக ஆவதற்கு விகாரங்களை சந்நியாசம் செய்கிறார்கள்.



    எனவே பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது என்ற இந்த விஷயத்தை முதன் முதலில் புரிய வைக்க வேண்டும். எல்லோரும் பகவானை நினைவு செய்கிறார்கள். எனக்கு எல்லா பக்தர்களும் பிரியமானவர்கள் என்று பகவான் கூறுகிறார். ஏனெனில், அவர்கள் அனைவருக்கும் நான் தான் கதி சத்கதி அளிக்க வேண்டி உள்ளது. பகவான் வந்து பக்தர்களுக்கு பக்தியின் பலனை அளிக்கிறார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே பக்தர்கள் பகவானுக்குப் பிரியமானவர்கள் ஆவார்கள். நீங்கள் துர்க்கதியை அடைந்துள்ளீர்கள். இப்பொழுது நான் சத்கதி அளிக்க வந்துள்ளேன். பக்திக்குப் பிறகு பகவான் அவசியம் வர வேண்டி உள்ளது. நான் உங்களுக்குத் தான் முதலில் பக்தியின் பலனை கொடுக்க வேண்டி உள்ளது. மற்றவர்கள் ஆரம்ப முதற் கொண்டு என் பக்தர்களாக இல்லை. அவர்கள் அநேகரை பக்தி செய்து வணங்குகிறார்கள். நீங்கள் எனது பிரியமான குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் அதிபதியாக இருந்தீர்கள். பிறகு மாயை என்ற இராவணன் உங்கள் மீது வெற்றி அடைந்து விட்டது, பிறகு பக்தி ஆரம்பமாகி விட்டது. இதுவும் நாடகம் ஆகும். நான் அனைவருக்கும் சத்கதி செய்கிறேன். இப்பொழுது நீங்கள் என் வழிப் படி நடக்கிறீர்கள் அல்லவா? வழியைக் கூறுவதற்கு அவசியம் நான் வர வேண்டியுள்ளது. இல்லையென்றால் எப்படி சத்கதிக்கான வழியை கூறுவேன். நான் இந்த முதல் நம்பர் பக்தரின் உடலில் வருகிறேன். இவர் நந்தி வாகனம் ஆவார். சிவனின் கோயில் முன்னால் நந்தி வாகனம் வைக்கிறார்கள். இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள் – பரமபிதா பரமாத்மா எருதுவின் உடலில் ஒன்றும் வரமாட்டார். இராஜயோகத்தை எருது மூலமாக எப்படி கற்பிப்பேன்? ஞானக் கடல் எருதுக்குள் பிரவேசம் செய்வாரா என்ன? இப்பொழுது நீங்கள் ஞானவான் ஆகிறீர்கள். ஸ்ரீமத்படி நடந்து இலட்சுமி நாராயணர் சூரிய வம்ச இராஜா இராணி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த அரசாட்சியை யாருமே நம்மிடமிருந்து பறிக்க முடியாது. எந்த ஒரு புயலும் ஏற்பட முடியாது. நாம் அமரபுரிக்கு அதிபதி ஆகிறோம். இது மரண உலகமாகும். அமரநாத் பாபா தான் காலன் மீது வெற்றி அடையுமாறு செய்விப்பவர் ஆவார். அவருடைய பாகம் தனி. நீங்கள் அனைவரும் பார்வதிகள் ஆவீர்கள். நான் அமரநாத் ஆவேன். நான் ஒரு பொழுதும் ஜன்ம மரணத்தில் வருவதில்லை. அமரபுரி சொர்க்கத்திற்கு உங்களை அதிபதியாக ஆக்குகிறேன். பாரதவாசிகளுக்கு வைகுண்டம் மிகவும் பிரியமானதாகப்படுகிறது. இன்னார் வைகுண்டவாசி ஆனார் என்பார்கள். மிகவுமே வாய் இனிக்க செய்து விட்டார்கள். இப்பொழுது உண்மையில் வைகுண்டம் சத்யுகத்தில் இருக்கும். சத்யுகமாக இருக்கும் பொழுது மறுபிறவியும் சத்யுகத்தில் எடுக்கிறார்கள். பிறகு திரேதாவில் வரும் பொழுது மறு பிறவியும் திரேதாவில் எடுக்கிறார்கள். பிறகு துவாபரத்தில் வரும் பொழுது மறு பிறவியும் துவாபரத்தில் எடுக்கிறார்கள். ஆனால் இறப்பது கலியுகத்தில். பின் சத்யுகத்தில் மறுபிறவி எடுப்பார்கள் என்று ஆக முடியுமா? சொர்க்கத்தின் பிறவி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் இது படிப்பைப் பொருத்தது ஆகும். நான் உங்களை சிருஷ்டிக்கு அதிபதியாக ஆக்குகிறேன். நான் பலன் எதிர்பாராதவன், என்று தந்தை கூறுகிறார். நான் உலகிற்கு அதிபதி ஆவதில்லை. நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்கிறீர்கள். பின் நான் ஓய்வெடுப்பவனாக ஆகி விடுகிறேன். நான் சக்கரத்தில் வருவதில்லை. இந்த ஈசுவரிய பிறவிக்குப் பின்னால் நீங்கள் தெய்வீக மடியில் பிறவி எடுப்பீர்கள். இப்பொழுது நீங்கள் பிறவிதோறும் அசுர மடியில் பிறவி எடுக்கிறீர்கள். ப்ரஷ்டாச்சாரி நிலையில் தாழ்ந்தவராகிவிட்டீர்கள். சத்யுகத்தில் எல்லோருமே சிரேஷ்டாச்சாரி- சிறந்தவர்களாக இருப்பார்கள். இப்பொழுது நீங்கள் ஸ்ரீமத் மூலமாக சிரேஷ்டாச்சாரியாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். அங்கு விஷம் இருப்பதில்லை. இங்கு சந்நியாசிகள் இருக்கிறார்கள் என்றாலும் கூட பிறவியோ விஷத்தினால் எடுக்கிறார்கள் அல்லவா? சத்யுகத்தில் விஷத்தினால் ஜன்மம் ஆவதில்லை. இல்லையென்றால் அவர்களை சம்பூர்ண நிர்விகாரி என்று கூறமுடியாது. அங்கு மாயை இருப்பதில்லை. ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் அனைவரது புத்தியிலும் பதிந்தால் தானே! இப்பொழுது குழந்தைகளே நீங்கள் வீடு செல்ல வேண்டும். பின்னர் சொர்க்கத்தில் வந்து ஆட்சி புரிய வேண்டி உள்ளது என்று பாபா கூறுகிறார். ஆத்மாக்கள் தத்தம் பாகத்தை ஏற்று நடிக்க பரந்தாமத்திலிருந்து வருகிறார்கள். பிறகு பதீத பாவனர் வந்து (பரேட்) விடுவிக்காதவரை ஒருவர் கூட போக முடியாது. இன்னார் நிர்வாண நிலையை அடைந்தார் என்று பொய் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். தந்தை வந்து எல்லா விஷயங்களையும் நல்ல முறையில் புரிய வைக்கிறார். முதன் முதலில் பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது என்பதைப் புரிய வையுங்கள். மற்ற எவருக்குமே இப்படி கூட கேள்வி கேட்க வரவே வராது. நீங்கள் கல்ப கல்பமாக கல் புத்தியிலிருந்து தங்க புத்தியாக மேலும் தங்க புத்தியிலிருந்து கல்புத்தியாக ஆகிக் கொண்டே வந்துள்ளீர்கள். இது நல்லமுறையில் புரிய வைக்கப்படுகிறது. ஆனால் நிச்சயம் ஏற்பட்டால் தானே, உண்மையில் நாம் சிவபாபாவின் குழந்தைகள் ஆவோம். நான் இப்பொழுது உங்களை சுகதாமத்திற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளேன். போகலாமா? என்று தந்தை கூறுகிறார். ஆனால் அங்கு இந்த விஷம் கிடைக்காது. முக்கியமான விஷயமே தூய்மையினுடையது ஆகும். யார் முந்தைய கல்பத்தில் தூய்மையாக இருந்திருந்தார்களோ அவர்களால் தான் இப்பொழுதும் இருக்க முடியும். பாபா எப்பொழுது பந்தனம் அறுபடுமோ தெரியவில்லையே என்று நிறைய பெண் குழந்தைகள் எழுதுகிறார்கள். யுக்தி (வழிமுறை) கூறுங்கள். பாபா கூறுகிறார் குழந்தைகளே பந்தனம் அந்த நேரம் வரும் பொழுது தான் அறுபடும். பாபா என்ன செய்வார்? ஒரு பந்தனம் வேண்டுமானால் விடுபடலாம். பின் குழந்தைகள் ஆகியோர் மீது மோகம் ஏற்பட்டு விடுகிறது. இவை எல்லாவற்றிலிருந்தும் புத்தியை நீக்குவதில் மிகுந்த உழைப்பு ஏற்படுகிறது. ஒரு சிலர் இன்னுமே அதிகமான மோகத்தில் வந்து விடுகிறார்கள். நிறைய மோகத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். பாபா கூறுகிறார்: மோகம் ஒருவரிடம் கொள்ள வேண்டும். அப்பொழுது தானே தாரணை ஆகும். ஒரு சிலரால் ஞானத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் ஓடிப் போகிறவர்களாக ஆகி விடுகிறார்கள். பிறகு அவப் பெயர் ஏற்பட்டு விடுகிறது. நாடகத்தில் முந்தைய கல்பத்திலும் இவ்வாறு ஆகி இருந்தது. எந்த நொடி கடந்து சென்றதோ அது நாடகமாகும். அம்மா இறந்தாலும் கூட அல்வா சாப்பிடுங்கள். மனைவி இறந்தாலும் கூட அல்வா சாப்பிடுங்கள்.. பக்குவமற்றவர்களுக்கு கொஞ்சம் உதறல் எடுத்து விடும். நிறைய சந்நியாசிகள் கூட இப்படி இருக்கிறார்கள். அவர்களால் இருக்க முடியவில்லை என்றால் இல்லறத்தில் சென்று விடுகிறார்கள். நடத்தையே அவ்வாறு இருக்கிறது. இங்கு ஒரே ஒரு முக்கியமான விஷயமாகும்.நாங்கள் கூட அந்த தந்தையிடமிருந்து ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் கூட அவரை தந்தை என்று புரிந்துள்ளீர்கள். எனவே வந்து சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஒரே விஷயம் தான் ஒரு நொடியில் ஜீவன் முக்தி. பின்னால் கொஞ்சம் புரிய வைத்த உடனேயே மனிதர்கள் உடனே புரிந்து கொண்டு விடுவார்கள். அநேக வழிகள் உள்ளன. அது காரணமாக பாரதம் இழிந்ததாக ஆகி விட்டுள்ளது. பிறகு ஒருவரின் வழியினால் அரைகல்பத்திற்கு பாரதம் சிறந்ததாக (சிரேஷ்டாச்சாரி) ஆகி விடுகிறது. சிறந்தவர்களாக தந்தை தான் ஆக்குவார். அனைவரையும் கரையேற்றி விடுபவர் ஒரே ஒரு தந்தை ஆவார். ஆக மூழ்கடிப்பவரும் யாராவது நிச்சயமாக இருக்கக்கூடும். தந்தையோ அனைவருக்கும் கூறுகிறார் - நீங்கள் விகாரங்களை சந்நியாசம் செய்ய வேண்டியே இருக்கும். அப்பொழுது தான் நீங்கள் தூய்மையான உலகிற்கு அதிபதியாக ஆக முடியும். பாபா ஆஸ்தியை அளித்துக் கொண்டிருக்கிறார். ஏராளமான பிரம்மாகுமாரிகள் இருக்கிறார்கள். நீங்கள் கூட பி.கே. ஆவீர்கள். ஆஸ்தி ஆன்மீகத் தந்தையிடமிருந்து கிடைக்கிறது. எவ்வளவு சுலபமானதாகும். ஆனால் ஒரு சிலருடையது கூறும் அளவில் மட்டுமே உள்ளது. செய்வது இல்லை. பின் யாருக்கும் அம்பு போல தைப்பது இல்லை. கூறுவதால் வேண்டுமானால், மற்ற வேறு யாருக்காவது நன்மை ஏற்பட்டு விடும். ஆனால் சுயம் தாங்கள் செய்வது இல்லை என்றால், விழுந்து விடுவார்கள். யாருக்கு ஞானம் கொடுத்தார்களோ அவர்கள் முன்னேறி விடுவார்கள். சுயம் விழுந்து விடுவார். இப்படி கூட நிறைய பேர் இருக்கிறார்கள். பாபா குழந்தைகளுக்கு முழுமையாக ஆஸ்தி (உயிலாக) அளித்து விடுகிறார். இப்பொழுது நீங்கள் தகுதி உடையவராக ஆகி சொர்க்கத்தின் அதிபதி ஆகுங்கள். நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. சிறந்தவர்களாக (சிரேஷ்டாச்சாரி) ஆக வேண்டும் என்றால் தங்களுடைய எல்லா குறைகளையும் நீக்கி எப்பொழுதும் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். புத்தியில் ஞானரத்தினங்களின் தாரணையை ஆத்ம உணர்வுடையவராகி செய்ய வேண்டும்.



    2. தங்களது சொல்லையும் செயலையும் ஒன்றாக இருக்குமாறு செய்ய வேண்டும். ஞானத்தின் தாரணைக்காக அனைத்திலிருந்தும் மோகத்தை நீக்கி ஒரு தந்தையிடம் மட்டுமே மோகம் கொள்ள வேண்டும்.



    வரதானம்:

    அனைத்து பொக்கிஷங்களிலும் நிரம்பியவராக ஆகி ஒவ்வொரு நேரமும் சேவையில் பிஸியாக இருக்கக் கூடிய விஷ்வ கல்யாணகாரி ஆவீர்களாக.



    உலக நன்மைக்குக் கருவியாக ஆகி இருக்கும் ஆத்மா முதலில் சுயம் அனைத்து பொக்கிஷங்களிலும் நிறைந்தவராக இருப்பார். ஞானத்தின் பொக்கிஷம் உள்ளது என்றால், முழு ஞானம் இருக்க வேண்டும். எந்த குறையும் இருக்கக் கூடாது. அப்பொழுது நிரம்பியவர் என்று கூறுவார்கள். ஒரு சிலரிடம் பொக்கிஷங்கள் நிறைந்து இருக்கும் பொழுது கூட தக்க நேரத்தில் காரியத்தில் ஈடுபடுத்த முடியாமல் இருப்பார்கள். காலம் கழிந்த பிறகு யோசிக்கிறார்கள். பின் அவர்களையும் நிரம்பியவர் என்று கூற முடியாது. விஷ்வ கல்யாணகாரி ஆத்மாக்கள் மனம், சொல், செயல், சம்பந்தம், தொடர்பு ஆகியவற்றில் ஒவ்வொரு நேரமும் பிஸியாக இருப்பார்கள்.



    சுலோகன்:

    ஞானம் மற்றும் யோகத்தை இயற்கையான சுபாவமாக ஆக்கி கொண்டீர்கள் என்றால், ஒவ்வொரு செயலும் நேச்சுரல் இயல்பாகவே சிறந்ததாகவும் யுக்திகளுடன் கூடியதாகவும் இருக்கும்.



    தபஸ்வி மூர்த்தி ஆகுங்கள் :

    ஞான மனனம் (சிந்தனை) செய்வதுடன் கூடவே சுபபாவனை, நல் விருப்பத்தின் சங்கல்பம், சகாஷ் (சக்தி) அளிப்பதற்கான அப்பியாசம் - இதை மனதின் மௌனம் அல்லது டிராஃபிக் கண்ட்ரோலின் பொழுது கடைப்பிடிக்க தீர்மானித்துவிடுங்கள். விசேஷமாக ஏகாந்தவாசி மற்றும் பொக்கிஷங்களின் (எகானமி) சிக்கனம் செய்யும் புரோகிராம் செய்யுங்கள். தங்கள் தபஸ்வி சொரூபத்தின் மூலமாக சேவை செய்யுங்கள். 

      

    ***OM SHANTI***