BK Murli 25 February 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 25 February 2017 Tamil

    25.02.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

    இனிமையான குழந்தைகளே! துக்கமானவர்கள் அனைவரையும் சுகம் நிறைந்தவர்கள் ஆக்க வேண்டும், இது ஒரு தந்தையினுடைய கடமை ஆகும், அவரே அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளல் ஆவார்.



    கேள்வி:

    தந்தை தனது குழந்தைகளுக்கு ஏறும் கலையில் செல்வதற்கான என்ன வழியைக் (யுக்தி) கூறுகின்றார்?



    பதில்:

    இனிமையான குழந்தைகளே, நான் என்ன கூறுகின்றேனோ, அதை மட்டும் நீங்கள் கேளுங்கள். மற்றபடி, இதுவரை கேட்டவற்றை மறந்துவிடுங்கள், ஏனெனில், அதன் மூலம் நீங்கள் கீழே இறங்கியே வந்திருக்கிறீர்கள் என்று பாபா கூறுகின்றார்.



    கேள்வி:

    அனைத்து வேத, சாஸ்திரங்களின் சாரம் அடங்கியுள்ள எந்த ஒரு ஆழ்ந்த இரகசியத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள்?



    பதில்:

    பிரம்மாவிலிருந்து விஷ்ணு மற்றும் விஷ்ணுவிலிருந்து பிரம்மா எவ்வாறு ஆகின்றார்? எவ்வாறு இருவரும் ஒருவர் மற்றவருடைய நாபியிலிருந்து வெளிப்படுகின்றனர் என்ற இந்த ஆழ்ந்த இரகசியத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். இது அனைத்து வேத, சாஸ்திரங்களின் சாரம் ஆகும்.



    பாடல்:

    கண் இழந்தவர்களுக்கு வழி காட்டுங்கள்.....



    ஓம்சாந்தி.

    இனிமையிலும் இனிமையான மிகவும் அன்பான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகள் பாட்டின் அர்த்தத்தைப் புரிந்திருக்கிறீர்கள். இவ்வாறே, முழு உலகில் உள்ள குழந்தைகளும் அவசியம் தந்தைக்கு அன்பானவர்களே ஆவார்கள். மனிதர்கள் யாரெல்லாம் இருக்கின்றனரோ, அவர்கள் பரமபிதா பரமாத்மாவின் குழந்தைகளே என்பதை குழந்தைகள் அறிந்துள்ளீர்கள். ஈஸ்வரிய குடும்பம் ஆகும். குடும்பத்தில், குழந்தைகளைப் படைக்கக்கூடிய தந்தை மீதே அனைவரையும் விட அதிக அன்பு ஏற்படுகிறது. அன்பான, இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளே, 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்து சந்திக்கிறீர்கள் என்று எல்லையற்ற தந்தை கூறுகின்றார். எப்பொழுது சந்திக்கிறீர்கள்? இந்த சங்கமயுகத்தில் (சந்திக்கிறீர்கள்). இச்சமயம் தான் தந்தை வந்து அனைத்துக் குழந்தைகளையும் அசாந்தியிலிருந்து சாந்திக்கு அழைத்துச் செல்கின்றார். சாந்திக்காக எத்தனை மாநாடுகள் முதலியவை நடத்துகின்றனர். உலகத்தில் சண்டை சச்சரவு நின்றுவிட வேண்டும் மற்றும் எவ்வாறு சாந்தியை நிலைநாட்டுவது என்று தங்களுக்குள் கலந்து ஆலோசிக்கின்றனர். இல்லையெனில், தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு வினாசம் செய்துவிடுவர். வினாசத்தைக் கண்டு பயம் கொள்கின்றனர். தந்தை தான் வந்து சுகதாமம் அதாவது சனாதன தேவி தேவதா தர்மத்தை மீண்டும் ஸ்தாபனை செய்கின்றார், அது இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிட்டனர். எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சுகத்தை அடைவதற்காக நீங்கள் அனைவரும் அமர்ந்திருக்கிறீர்கள். பரமபிதா பரமாத்மா வந்து பிறகு அசுர உலகை வினாசம் செய்விக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். வினாசம் அவசியம் நடைபெற வேண்டும் அல்லவா. ஏனெனில், இந்த சமயத்தில் அனைவரும் துக்கம் நிறைந்தவர்களாக உள்ளனர். யாரெல்லாம் துக்கம் நிறைந்தவர்களோ, அவர்கள் அனைவரையும் சுகம் நிறைந்தவர்களாக ஆக்கக்கூடிய கடமையானது கல்ப கல்பத்திற்கும் ஒரு தந்தையினுடையதே ஆகும். மற்றபடி, யார் தானே துக்கமானவர்களாக தூய்மை இல்லாமல் இருக்கின்றனரோ, அவர்கள் பிறகு பிறரை தூய்மையானவர்களாக, சுகமானவர்களாக எவ்வாறு ஆக்குவார்கள்? அதுவும் முழு உலகத்திற்கான விசயம் ஆகும். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒருவர் என்று பாடவும் செய்கின்றனர். ஹே! பரமபிதா பரமாத்மா, வந்து தூய்மையற்ற எங்களை தூய்மை ஆக்குங்கள். பாரதத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் நடந்தது, அந்த சமயம் நாம் இல்லை என்பதை அனைத்து தர்மத்தினரும் அறிவார்கள். பழமையான பாரதத்தினுடைய மகிமை அதிகமாக உள்ளது. பகவான் முதன் முதலில் சொர்க்கத்தைப் படைத்தார், அதனுடைய எஜமானராக எது இருந்தது? பாரதம். சொர்க்கத்தில் தங்கம் வைரத்தினுடைய மாளிகை இருந்தது. பாரதம் மிகுந்த செல்வச் செழிப்போடு இருந்தது. இப்பொழுது கலியுகத்தின் இறுதியில் அனேக தர்மங்கள் உள்ளன. மற்றபடி, ஒரு தேவதா தர்மம் மறைந்துவிட்டது. ஏழையாக, அதிக துக்கமானவர்களாக ஆகிவிட்டனர். இந்த பிரம்மா தாதாவோ இரத்தின வியாபாரியாக இருந்தார் என்று அந்த தந்தை கூறுகின்றார், இவர் கூறவில்லை. இந்த பிரம்மாவும் தனது பிறவிகளைப் பற்றி அறியவில்லை. பிரம்மாகுமார், பிரம்மா குமாரிகள் நீங்களும் கூட தனது பிறவிகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்று இந்த பிரம்மாவின் சரீரத்தின் மூலம் நிராகார தந்தை கூறுகின்றார். நான் இவருக்குள் பிரவேசம் செய்கின்றேன், இதுவும் கூட நாடகத்தில் பதிவாகி இருந்தது. எவ்வாறு பிரவேசம் செய்கின்றார், இந்தக் கேள்விக்கு இடமில்லை. தந்தை கூறுகின்றார், எனக்கென்று சரீரம் கிடையாது. நான் சாதாரண வயோதிக உடலில் வந்து பிரவேசம் செய்கின்றேன். வருவதும் கூட பாரதத்தில் தான். இவர் தனது பிறவிகளைப் பற்றி அறியவில்லை, நான் வந்து இவருக்குப் புரிய வைக்கின்றேன். இவை அனைத்தும் உருவான உருவாக்கப்பட்ட எல்லையற்ற பெரிய நாடகம் ஆகும். எந்த விநாடி கடக்கிறதோ அது பிறகு மறுபடியும் வரும். இந்த எல்லையற்ற நாடகத்தின் இரகசியத்தை தந்தை தான் புரிய வைக்கின்றார்.



    குழந்தைகளே, நீங்கள் என்னவெல்லாம் தானம், புண்ணியம் செய்து வந்திருக்கிறீர்களோ, அவை அனைத்தும் பக்திமார்க்கம் ஆகும், இதன் மூலம் எந்தப் பிராப்தியும் இல்லை. ஏனெனில், பக்தியில் இப்பொழுது எந்த சாரமும் இல்லை என்று தந்தை கூறுகின்றார். இந்த அனைத்து சித்திரங்கள் போன்ற என்னவெல்லாம் உருவாக்கப்பட்டுள்ளனவோ, அவற்றை பொம்மைகளின் பூஜை என்று சொல்லப்படுகிறது. சித்திரம் உருவாக்கப்பட்டது, உணவு படைக்கப்பட்டது, குடிக்கக் கொடுக்கப்பட்டது, மூழ்கடிக்கப்பட்டது - இவை அனைத்தும் அறிவற்ற செயல் அல்லவா. எப்பொழுது யக்ஞம் (யாகம்) படைக்கின்றனரோ, அப்பொழுது மண்ணாலான ஒரு பெரிய சிவலிங்கம் மற்றும் சின்னச் சின்ன சாலிகிராம்களை உருவாக்குகின்றனர். இது யாருடைய பூஜை செய்கிறோம் என்பதைக் கூட புரிந்திருக்கவில்லை. தந்தை மற்றும் குழந்தைகள் சேவை செய்திருக்கின்றனர். ஆகையினாலேயே, அவர்களுடைய பூஜை நடைபெறுகிறது. சிவனுடைய லிங்கம் உருவாக்குகின்றனர். குழந்தைகளாகிய உங்களுடைய சாலிகிராமும் உருவாக்குகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பாரதத்தை தூய்மை ஆக்கக்கூடிய சேவை செய்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் இறைவனுக்கு உதவியாளர்கள். தந்தை மீது உங்களுக்கு அன்பு உள்ளது. தந்தையின் உயர்வான வழி முறைப்படி நடக்கின்றீர்கள். அதுவே ஸ்ரீமத் பகவத் கீதை என பாடப்பட்டுள்ளது. பகவான் எந்த சாஸ்திரத்தையும் படிக்கமாட்டார். எந்த தர்ம ஸ்தாபகரும் ஒருபொழுதும் சாஸ்திரத்தை எடுப்பதில்லை. அவர்கள் தர்மத்தை ஸ்தாபிக்க வருகின்றனர். அவர்களிடம் என்ன ஞானம் உள்ளதோ, அதையே சொல்வார்கள். கிறிஸ்து வந்து பைபிள் படித்தார் என்பது கிடையாது. அவர் தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்கே வந்தார். தந்தை வந்து ஸ்ரீமத் கொடுக்கின்றார். ஸ்ரீ என்றால் சிரேஷ்டமான (உயர்ந்த) வழி. உயர்ந்ததிலும் உயர்ந்த வழி பகவானுடையதே ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்படி நடக்கிறீர்கள். குழந்தைகளே! என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இரண்டே வார்த்தைகள் அவ்வளவு தான். மிகுந்த அன்புடன் குழந்தைகளே என்று கூறுகின்றார். எனவே, அவர் தந்தை ஆவார் மற்றும் நாம் அனைவரும் ஈஸ்வரிய குடும்பத்தின் அங்கத்தினர் ஆவோம். இந்த விசயம் எவருடைய புத்தியிலும் இருக்காது, இவருடைய புத்தியிலும் இல்லாமல் இருந்தது. இந்த அனைத்து மனித ஆத்மாக்களையும் நான் தூய்மை ஆக்கி திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும், நான் நாடகத்தின் அனுசாரம், உங்களை திரும்ப அழைத்துச் செல்வதற்காக மீண்டும் வந்திருக்கின்றேன் என்று இப்பொழுது தந்தை இவர் மூலம் புரிய வைக்கின்றார். தந்தை ஆத்மாக்களுடன் உரையாடுகின்றார். இவருடைய ஆத்மாவும் கேட்கிறது. பாபா நமக்கு ஞானம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். இவருக்கு தனக்கென்று சரீரம் கிடையாது. ஸ்ரீகிருஷ்ணருடையதை சாதாரண ரூபம் என்று சொல்ல முடியாது. அவரோ சொர்க்கத்தின் முதல் இளவரசராக இருந்தார். பின்னர், இவர்கள் அனைவரும் ஸ்ரீகிருஷ்ண பகவானின் வாக்கியம் என்று கூறிவிட்டனர். இது இருக்கவே முடியாது. எவ்வளவு வித்தியாசம் உள்ளது. சங்கமயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இருக்க முடியாது. செயற்கையான கிருஷ்ணரோ அதிகமாக உள்ளனர். மற்றபடி நடைமுறையில் சத்யுகத்தில் இருப்பார். கிருஷ்ணருடைய பெயரோடு வேறு எவரும் இருக்க முடியாது. அனேகர் தனக்கு பெயர் வைத்துக் கொள்கின்றனர். குழந்தைகளே! இந்த கடைசிப் பிறவியில் தூய்மை ஆனீர்கள் என்றால் தூய்மையான உலகின் ஸ்தாபனையில் உதவிகரமாக இருக்கும் என்று தந்தை கூறுகின்றார். தூய்மை நல்லது தானே! அனேகக் குழந்தைகள் (பெண்கள்) அடி வாங்குகிறார்கள். அபலைகள் மீது கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. பாபா, என்ன செய்வது? எங்களை இந்த பந்தனத்திலிருந்து விடுவியுங்கள் என்று எழுதுகின்றனர். திரௌபதிக்கு சேலை கொடுத்ததாக நாடகத்தில் காண்பிக்கின்றனர். இதை ஒரு கதையாக உருவாக்கிவிட்டனர். குழந்தைகளே! இப்பொழுது தூய்மை ஆவதனால் 21 பிறவிகளுக்கு நீங்கள் ஒருபொழுதும் தூய்மையை இழக்கமாட்டீர்கள் என்று பாபா கூறுகின்றார். அங்கே நடப்பதே இராம இராஜ்யம் ஆகும். அசுத்த அகங்காரம், தேக அபிமானம் ஆகிய இவையே முக்கிய விகாரங்கள் ஆகும். தேகத்தின் மீது மோகம் உள்ளது. அங்கே ஆத்ம அபிமானியாக இருப்பார்கள். இந்தப் பழைய சரீரத்தை விடுத்து வேறொன்று எடுக்கப் போகிறேன் என்று புரிந்திருப்பார்கள். இதைத்தான் ஆத்ம அபிமானம் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் அனைவரும் ஆத்மாக்கள் ஆவீர்கள், சிவபாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள், ஏனெனில், இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். இது ஆத்மாக்களின் உண்மையிலும் உண்மையான ஆன்மிக யாத்திரை ஆகும். அனைவரும் பரம தந்தையிடம் செல்ல வேண்டும். தீர்த்த யாத்திரை செல்லும் வழியில் இராம் இராம் என்று கூறிக்கொண்டே செல்கின்றனர். நீங்கள் தந்தையை நினைவு செய்து கொண்டே செல்லுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இப்பொழுது முழு உலகமும் இராஜயோகத்தை கற்றுகொள்ளாது. கல்பத்திற்கு முன் வந்தவர்கள் தான் இங்கே வருவார்கள், இப்பொழுது நாற்று நடவேண்டும். தேவி தேவதை தர்மத்தின் இனிய மரம் என்ன இருந்ததோ, அது மறைந்துவிட்டது. மீதம் கிளைகள் மட்டுமே நிற்கின்றன. (ஆலமரத்தின் உதாரணம்) அவ்வாறே, இந்த தேவி தேவதை தர்மத்தின் அஸ்திவாரம் எதுவோ, அது இற்றுப் போய்விட்டது. மற்றபடி அடையாளங்கள் (சித்திரங்கள்) இருக்கின்றன. ஆனால், அவர்கள் யார்? என்பது எவருக்கும் தெரியாது. தன்னுடைய தர்மத்தைப் பற்றியும் தெரியாது, ஆகையினாலேயே ஹிந்து தர்மம் என்று கூறிவிடுகின்றனர்.



    உங்களுடைய பாரதம் எத்தகைய தலைக்கிரீடம் போன்று உயர்வாக இருந்தது என்று தந்தை கூறுகின்றார். தர்மமே சக்தி என்று தர்மத்திற்காகவே கூறப்படுகிறது. இப்பொழுதோ தேவதா தர்மம் இல்லை. பின்னர், அந்த தர்மம் எவ்வாறு ஸ்தாபனை ஆகும்? தந்தை சர்வசக்திவான் ஆவார், ஆஸ்தி அவரிடமிருந்து கிடைக்கிறது. சக்தியும் அவரிடமிருந்து கிடைக்கும். தந்தை சிருஷ்டியின் விதை ரூபம் ஆவார். நாம் அவருடைய குடும்பத்தினர் ஆகிவிட்டோம். தந்தை சத்தியமானவர், சைத்தன்யமானவர், ஞானக்கடல் ஆவார். அனைத்தும் ஆத்மாவில் உள்ளது. ஆத்மா தான் கேட்கிறது, படிக்கிறது. ஆத்மாவில் தான் நல்ல, கெட்ட சமஸ்காரங்கள் உள்ளன. இந்த சமயத்தில் அனைத்து ஆத்மாக்களும் தமோபிரதானம் ஆகிவிட்டனர். பாரதவாசிகள் தான் அனைவரையும் விட அதிக தமோபிரதான புத்தி உடையவர்கள் ஆகிவிட்டனர். உயர்ந்ததிலும் உயர்ந்த ஆத்மாக்களும் பாரதத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். அவர்களே சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தனர். இந்த நாடகம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் அவரவர் நடிப்பு கிடைத்துள்ளது. ஆத்மாக்கள் அனைத்தும் ஒன்று போல் உள்ளன, அதில் எந்த வித்தியாசமும் கிடையாது. நம்முடைய ஆத்மா சிறியது, பாபா உடையது பெரியது என்பது கிடையாது. ஆத்மா சிறியது பெரியதாக இருப்பதில்லை. ஆத்மா 84 பிறவிகளின் நடிப்பை மீண்டும் திரும்ப நடிக்கிறது. அதற்கு ஒருபோதும் முடிவு என்பது கிடையாது. ஒரு ஆத்மா எவ்வளவு சேவை செய்திருக்கும்? அந்த அழிவற்ற நடிப்பானது ஒருபொழுதும் அழியக்கூடியது அல்ல. இந்த விசயங்களை வித்வான், பண்டிதர், சாஸ்திரங்களின் நிபுணர்கள் முதலானோர் அறிந்திருப்பாரா என்ன? இவ்வளவு சிறிய ஆத்மாவில் எவ்வளவு பெரிய நடிப்பு உள்ளது! பரமபிதா பரமாத்மா கூட நாடகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றார். நடிப்பு நடிப்பதற்காகக் கட்டுப்பட்டு இருக்கின்றார், மிகச் சரியான நேரத்தில் தான் வருவார். அவரும் கூட தனது நடிப்பை தக்க சமயத்தில் நடித்தாக வேண்டும், அனைவரையும் சுகமானவர்களாக ஆக்க வேண்டும். ஆத்மா என்றால் என்ன?என்று சிந்தனை செய்யுங்கள். பாபாவின் ஆத்மாவும் இவ்வளவு சிறிய புள்ளி போல் உள்ளது. இவ்வளவு சிறிய பொருளுக்கு எவரும் பூஜை செய்ய இயலாது. பின்னர், பக்தி செய்வதற்காக, பூஜை செய்வதற்கு ஏற்ற மாதிரி பெரியதாக உருவாக்குகின்றனர். அவரை சிவன் மற்றும் ருத்ரன் என்றும் அழைக்கின்றனர். இருப்பதோ புள்ளி போல். திலகம் இடுகிறார்கள் அல்லவா. இந்த மிகவும் புரிந்து கொள்வதற்கான விசயங்களை வேறு எவருமே புரிய வைக்க முடியாது. இதை தந்தை தான் புரிய வைக்கின்றார், மிகவும் சூட்சுமமான விசயங்கள் ஆகும். குழந்தைகளே! ஆத்மாவைப் பாருங்கள் எவ்வளவு சிறியதாக உள்ளது? ஆத்மா வீற்றிருக்கின்ற சரீரத்தின் உறுப்புகளைப் பாருங்கள் எவ்வளவு பெரியதாக உள்ளன என்று தந்தை புரிய வைக்கின்றார். இந்த சமயத்தில் அனைவரது ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே தூய்மையின்றி உள்ளன, இப்பொழுது தூய்மை ஆகவேண்டும். நீங்கள் ஒருவருடையவராக மட்டும் ஆகுங்கள், ஒருவர் சொல்வதை மட்டும் கேளுங்கள். ஒருவரை மட்டும் நினைவு செய்யுங்கள். ஆஹா! பாபா நீங்கள் பெரிய அதிசயம் செய்கின்றீர்கள். எத்தகைய ஞானம் அளிக்கின்றீர்கள்! வேறு எவருக்கும் இந்த ஞானம் அளிப்பதற்கான சக்தி கிடையாது. எப்பொழுது தந்தை வந்து கற்பிக்கின்றாரோ, அப்பொழுதே நீங்கள் ஏறும்கலையில் செல்கிறீர்கள். இந்த சமயத்தில் அனைத்து மனிதர்களும் தூய்மை இல்லாமல் உள்ளனர். ஆகையினால், நான் அனைவரையும் சீர்திருத்துவதற்காக வருகின்றேன், இரவிலிருந்து பகலுக்கு செல்வதற்கான வழியைச் சொல்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். கண் இழந்தவர்களுக்கு... என்று பாடவும் செய்கின்றனர். நாங்கள் கண் இழந்திருக்கிறோம், எங்களுக்கு வழி சொல்லுங்கள் என்று அனைவரும் கூறுகின்றனர். எங்கு செல்வதற்கான வழி? தனது வீட்டிற்குச் செல்வதற்கான வழி. இங்கேயோ மிகுந்த துக்கம் உள்ளது. பாபா, கண் இழந்த எங்களுடைய ஊன்றுகோல் நீங்களே ஆவீர்கள். பாபா என்ற வார்த்தை மூலம் ஆஸ்தி நினைவுக்கு வருகிறது. பிரபு அல்லது ஈஸ்வரா என்று கூறுவதால் ஆஸ்தியின் போதை ஏற்படுவதில்லை. ஏனெனில், பகவான் என்று யாரை அழைக்கப்படுகிறது? தாயும் நீரே, தந்தையும் நீரே...... இது அவரது மகிமை ஆகும். இந்த வேதங்கள் அனாதியானவை என்று மனிதர்கள் கூறுகின்றனர். அப்படியானால், எப்பொழுதிலிருந்து படித்துக்கொண்டு வருகிறீர்கள்? சத்யுகத்திலிருந்தா என்ன?என்று கேளுங்கள். அங்கே சாஸ்திரங்கள் கிடையாது. இது பக்தி மார்க்கத்தினுடையது ஆகும்.எதையும் அறியவில்லை. இப்பொழுது நான் வந்து உங்களுக்கு அனைத்தினுடைய சாரத்தை பிரம்மா மூலம் புரிய வைக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். குழந்தை பிரம்மா என்னுடையவரா அல்லது விஷ்ணுவின் நாபியிலிருந்து வெளிப்பட்டரா? பிரம்மாவோ சிவனுடைய குழந்தை ஆவார். விஷ்ணுவின் குழந்தை கிடையாது. ஆம், பிரம்மாவே பின்னர் விஷ்ணு ஆகிறார். பின்னர், விஷ்ணு 84 பிறவிகளுக்குப் பிறகு பிரம்மா ஆகிறார். இந்த மிக ஆழமான இரகசியத்தை குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்திருக்கிறீர்கள். இப்பொழுது பிரம்மா வாய் மூலம் பிராமணக் குழந்தைகளாகிய உங்களுடைய பிறப்பு கிடைத்திருக்கிறது எனில், குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு போதை மற்றும் குஷி இருக்க வேண்டும். நல்லது.



    இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிக தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்காக முக்கிய சாரம்:

    1. முழுமையாக தூய்மை ஆவதற்காக ஒருவருடையவராக மட்டுமே ஆகவேண்டும். ஒரு தந்தை கூறுவதை மட்டும் கேட்க வேண்டும், ஒருவரை மட்டும் நினைவு செய்ய வேண்டும்.



    2. இறைவனின் உதவியாளர் ஆகி பாரதத்தை தூய்மை ஆக்கக்கூடிய சேவை செய்ய வேண்டும். ஒரு தந்தையிடம் அன்பான புத்தி இருக்க வேண்டும்.



    வரதானம்:

    உறுதியான எண்ணத்தின் மூலம் அசம்பவத்தை சம்பவம் ஆக்கி வெற்றியின் அனுபவத்தைச் செய்யக்கூடிய நிச்சயிக்கப்பட்ட வெற்றியாளர் ஆவீர்களாக.



    அசம்பவத்தை (நடைபெற முடியாததை)சம்பவம் (நடைபெறச் செய்யக்கூடிய)ஆக்கக்கூடிய விசேஷமான வரதானம் சங்கமயுகத்திற்கு உள்ளது. ஆகையால், இது எவ்வாறு நடைபெறும்?என்று ஒருபொழுதும் யோசிக்காதீர்கள். எவ்வாறு என்பதற்கு பதிலாக இவ்வாறு நடைபெறும் என்று எண்ணுங்கள். இது நடந்து முடிந்தே விட்டது, நடைமுறையில் செயல்படுத்த மட்டுமே வேண்டும், திரும்பவும் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை வைத்துச் செல்லுங்கள். உறுதியான எண்ணத்தை பயன்படுத்துங்கள். எண்ணத்தில் கூட என்ன, ஏன் என்பதன் கலக்கம் இருக்கக்கூடாது. அப்பொழுதே வெற்றி நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. உறுதியான எண்ணத்தை பயன்படுத்துவது என்றால் எளிதாக வெற்றியை பலனாக அடைவதாகும்.



    சுலோகன்:

    சதா செய்பவர் செய்விப்பவராகிய தந்தையின் நினைவு இருந்ததென்றால், நான் என்ற உணர்வு மற்றும் அகங்காரம் (கர்வம்) முடிந்துபோய்விடும்.


    ***OM SHANTI***