BK Murli 5 February 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 5 February 2017 Tamil

    05.02.2017    காலை முரளி            ஓம் சாந்தி        அவ்யக்தபாப்தாதா,
    ரிவைஸ் 22.01.1982 மதுபன்

    '' வாழ்த்துக்கள் வழங்குவதோடு, விடை கொடுத்தலையும் செய்யுங்கள் ''


    இன்று உலகிற்கு நன்மை செய்யும் பாப்தாதா உலகில் நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளை நேரெதிரில் பார்த்துக் கொண்டிருக்கிறார். அனைத்து குழந்தைகளும் தங்களுடைய நினைவின் சக்தி மூலம் ஒளி வடிவ உடல் ரூபத்தில் மதுபனிற்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் பாபாவை சந்திக்க வேண்டும் என்ற நல் எண்ணம் இருக்கிறது. பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார். ஏனென்றால், பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் விசேஷத்தை தெரிந்திருக்கிறார். அதே விசேஷத்தின் ஆதாரத்தில் ஒவ்வொருவரும் அவரவர்களின் விசேஷ பங்கை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பிராமண ஆத்மா கூட விஷேசமின்றி சாதாரணமாக இல்லை என்பது தான் பிராமண ஆத்மாக்களின் மற்றும் பிராமண பரிவாரத்தின் புதுமை ஆகும். அனைத்து பிராமணர்களும் ஆன்மீக ஜென்மம் எடுத்தவர்கள், ஆன்மீகத்தன்மை இருக்கிறது. எனவே அனைவரும் ஆன்மீகமானவர்கள் அதாவது ஏதாவது விஷேசத்தின் காரணமாக விஷேச ஆத்மா. விஷேசத்தின் ஆன்மீகத்தன்மை இருக்கிறது, எனவே அனைவரும் விஷேச ஆத்மாக்கள் என்று பாப்தாதாவிற்கு குழந்தைகள் மேல் பெருமிதம் இருக்கிறது. அதே போலவே இந்த ஆன்மீக ஜென்மத்தின், ஆன்மீக நிலையின், மாஸ்டர் சர்வ சக்திவானின் போதை தனக்குள் இருப்பதாக நினைக்கிறீர்களா? இந்த போதை அனைத்து விதமான பலஹீனங்களையும் அகற்றக்கூடியது. எனவே நிரந்தரமாக அனைத்து பலஹீனங்களுக்கு விடை கொடுப்பதற்கான முக்கியமான வழி, எப்பொழுதும் தனக்கும் மற்றும் அனைத்து சங்கமயுகத்தின் விஷேச ஆத்மாக்களின் விஷேச பங்கிற்காக வாழ்த்துக்கள் கொடுங்கள். ஏதாவது முக்கியமான நாள், ஏதாவது முக்கியமான காரியங்கள் செய்கிறீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்? அதற்கான வாழ்த்துக்கள் தெரிவிக்கிறீர்கள் தான் இல்லையா, ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். அப்படி முழுக் கல்பத்தில் சங்கமயுகத்தின் ஒவ்வொரு நாளும் விஷேச நாளாகும். மேலும் விஷேச யுகத்தின் விஷேச பங்கினை செய்பவர்கள் நீங்கள்! எனவே விஷேச ஆத்மாக்கள் உங்களின் ஒவ்வொரு காரியமும் ஆன்மீகமானது. அதாவது விஷேசமானது. எனவே எப்பொழுதும் உங்களுக்குள்ளும் வாழ்த்துக்களைத் சொல்லுங்கள். மேலும் தனக்கும் வாழ்த்துக்களைக் கூறுங்கள். எங்கு வாழ்த்துக்கள் இருக்குமோ அங்கு விடை பெறுவதும் நடக்கும். எனவே இந்த வெளிநாட்டினரின் சீசனின் சாரமாக 'எப்பொழுதும் வாழ்த்துக்கள் மூலமாக விடை கொடுத்து விடுங்கள்' என்ற இதை நினைவில் வையுங்கள். நீங்கள் இங்கே வந்திருப்பதே விடை கொடுத்து வாழ்த்துக்களைப் பெறுவதற்காகத் தான் என்றால் 'விடை கொடுப்பது மற்றும் வாழ்த்துக்கள்' என்ற இந்த இரண்டு வார்த்தைகளை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். விடை கொடுக்க வேண்டும் என்றில்லாமல், விடை கொடுத்து விட்டோம் என்றிருக்க வேண்டும். வரதான பூமியில் வருவது என்றால், நிரந்தரமாக பலஹீனங்களுக்கு விடை கொடுப்பது! இராவணனையோ எரித்து விடுகிறீர்கள். ஆனால் இராவணனின் வம்சம் தன்னுடைய பலத்தை காண்பிக்கும். எப்படி உங்களுடைய பூலோகத்தில் ஏதாவது பெரிய செல்வந்தர் உடலை விடுகிறார் என்றால், அவருடைய தூரத்து உறவினர்கள் மறந்து போனவர்கள் எல்லாம் வந்து சேர்ந்துவிடுகிறார்கள். அப்படி, இராவணனையோ கொன்று விடுகிறீர்கள் ஆனால் அவருடைய வம்சம் யார் தன்னுடைய உரிமையை பெறுவதற்காக எதிர்க்கிறார்கள், அந்த வம்சத்தை அழிப்பதில் சில நேரம் பலஹீனமாக ஆகிவிடுகிறீர்கள். எப்படி காமம், கோபம், பேராசை, பற்றுதல் மற்றும் அகங்காரம் இவற்றின் வம்சம் அதாவது,, அம்சம் மிகப்பெரிய ராயல் ரூபத்தில் தன்னுடையவராக ஆக்கிவிடுகிறது. எப்படி பேராசையின் அம்சம் தேவை அவசியம். பேராசையில்லை ஆனால் அனைத்தும் தேவையாக இருக்கின்றன. அவசியத்திற்கும் எல்லை இருக்கிறது. ஒருவேளை தேவைகள் எல்லைக்கப்பாற்பட்டு சென்று விடுகின்றன என்றால், அதுவே பேராசையின் அம்சம் ஆகிவிடுகிறது.



    அதே போல் காம விகாரம் இல்லை, நிரந்தர பிரம்மச்சாரியாக இருக்கிறார் ஆனால் எவரேனும் குறிப்பிட்ட ஆத்மாவிற்கு விஷேச அடிபணிதல் அல்லது வளைந்து கொடுப்பது இருக்கிறது என்றால், அதற்கான ராயல் ரூபம் அன்பு. அப்படியென்றால் அதிகப்படியான அன்பு காமத்தின் அம்சமாகும். அன்பாக இருப்பது சரி தான். ஆனால் 'அதிகப்படியான அன்பு' அம்சமாகிவிடுகிறது.



    அதே போன்று கோபத்தையும் வென்று விட்டீர்கள் ஆனால் ஏதாவது ஆத்மாவின் ஏதாவது சம்ஸ்காரத்தைப் பார்த்து, நீங்கள் மனதிற்குள் ஞான சொரூப நிலையிலிருந்து கீழே வந்து விடுகிறீர்கள். மேலும் அதே ஆத்மாவிடமிருந்து விலகிச் செல்வதற்கான முயற்சி செய்கிறீர்கள். ஏனென்றால், அவரைப் பார்த்து அவருடைய தொடர்பில் இருக்கும்போது மனநிலை மேலே கீழே செல்கிறது. எனவே சுபாவத்தைப் பார்த்து ஒதுங்கி விடுவது என்பதும் வெறுப்பு அதாவது கோபத்தின் அம்சமே தான்! எப்படி அக்னி எரியும் போது தூரமாக விலகி இருக்கிறார்கள். அதே போன்று இந்த சூட்சும வெறுப்பும் கோப அக்னிக்கு சமமானது. ஒதுங்கி விட வைத்து விடுகிறது. இதற்கான இராயல் வார்த்தை - தன்னுடைய மனநிலையை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்? அதை விட விலகி இருப்பதே நல்லது என்று நினைக்கிறார்கள். விலகியிருப்பது வேறு, ஒதுங்கிவிடுவது வேறு. அன்பானவராகி விலகியிருப்பது வேறு, வராக ஆகிறீர்கள். அது சரி தான். ஆனால் சூட்சும வெறுப்புணர்வு 'இவர் அப்படித் தான், இவரோ மாறவே மாட்டார்'. அந்த மாதிரி நிரந்தரமாக அவருக்கு சூட்சுமத்தில் சாபம் கொடுக்கிறீர்கள். பாதுகாப்பாக இருங்கள், பரவாயில்லை. ஆனால் அவருக்கு முடிவான சான்றிதழைக் கொடுக்காதீர்கள். அது போலவே விசேஷத்தைப் பார்த்துக் கொண்டும், எப்பொழுதும் அனைவருக்காகவும் சிரேஷ்ட பாவனை மற்றும் சிரேஷ்ட விருப்பங்களை வைத்துக் கொண்டே இந்த அம்சத்திற்கும் விடை கொடுங்கள். தன்னுடைய சிரேஷ்ட பாவனை மற்றும் சிரேஷ்ட விருப்பங்களை விடாதீர்கள். தன்னை பாதுகாத்துக் கொண்டே மற்ற ஆத்மாக்களை, கீழே தள்ளிவிட்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளாதீர்கள். இந்த வெறுப்புணர்வு என்றால், விழத்தட்டுவது. மற்றவர்களை கீழே தள்ளி தன்னை பாதுகாத்துக் கொள்வது என்பது பிராமணர்களின் விசேஷம் இல்லை. தன்னைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள், கூடவே மற்றவர்களையும் காப்பாற்றுங்கள். இதைத் தான் விசேஷமானவர்களாவது மற்றும் விஷேசத்தைப் பார்ப்பது! இந்த சின்ன சின்ன விஷயங்கள் (அம்சங்கள்) நடைமுறையில் இரண்டு சொரூபங்களைக் கொண்டு வந்து விடுகிறது. மனமுடைந்து போவது, இன்னொன்று அலட்சியம். எனவே இப்பொழுது இராவணனின் அம்சத்தை நிரந்தரமாக விடை கொடுப்பதற்காக இந்த இரண்டு ஸ்திதிகளுக்கும் விடை கொடுங்கள். மேலும் எப்பொழுதும் தனக்குள் தந்தை மூலமாக கிடைத்திருக்கும் விசேஷத்தைப் பாருங்கள். என்னுடைய விஷேசம் இல்லை, தந்தையிடமிருந்து கிடைத்திருக்கும் விஷேசம். என்னுடைய விஷேசம் என்று நினைத்தீர்கள் என்றால், பின்பு அகங்காரத்தின் அம்சம் வந்து விடும். என்னுடைய விஷேசம் மூலம் ஏன் சேவை செய்விப்பதில்லை, என்னுடைய விஷேசத்தை இவர்கள் உணரவே இல்லை. 'என்னுடையது' எங்கிருந்து வந்தது? விசேஷமான ஜென்மத்தின் பரிசு விசேஷத்தை அடைவது. அப்படி, ஜென்மத்தை கொடுத்தவர், பரிசையும் கொடுத்திருக்கிறார். எனவே 'என்னுடையது' எங்கிருந்து வந்தது? என்னுடைய விஷேசம், என்னுடைய இயல்பு, என்னுடைய மனம் இதைக் கூறுகிறது மற்றும் நான் நினைக்கிறேன்.... என்ற இவை என்னுடையவை (மேரி) அல்ல ஆனால் கவலைகள் (வொரி) நீங்கள் கூறுகிறீர்கள் இல்லையா? வொரி (கவலை), ஹரி மற்றும் கரி என்று. புரிந்ததா? இந்த அம்சத்திற்கு முடிவு கட்டுங்கள். மேலும் தந்தை மூலமாக கிடைத்திருக்கும் தன்னுடைய விசேஷத்தை மற்றும் மற்றவர்களின் விசேஷத்தை எப்பொழுதும் பாருங்கள். அதாவது எப்பொழுதும் தனக்கும் பிறருக்கும் வாழ்த்துக்களைக் கொடுங்கள். அனைத்து அம்சத்தையும் புரிந்து கொண்டீர்கள் இல்லையா? இப்பொழுது மோகத்தின் அம்சம் எது? மோகத்தை வென்றவராக ஆகவில்லையா என்ன?



    நல்லது. மோகத்தின் ராயல் ரூபம் என்பது ஏதாவது ஒரு பொருள் அல்லது நபர் பிடித்தமாக இருக்கிறது, இந்த இந்த பொருட்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், மோகம் இல்லை, ஆனால் பிடிக்கும். ஒருவேளை ஏதாவது ஒரு நபர் அல்லது பொருள் பிடித்திருக்கிறது என்றால், அனைவரும், அனைத்தும் பிடித்திருக்க வேண்டும்.. மிக முரடான துணியும் நன்றாக இருக்கிறது, நல்ல துணியும் பிடித்திருக்க வேண்டும். 36 உணவும் பிடித்திருக்கிறது என்றால், காய்ந்த சப்பாத்தி மற்றும் வெல்லமும் பிடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பொருளும் பிடித்திருக்க வேண்டும், ஒவ்வொரு நபரும் பிடித்திருக்க வேண்டும். இது அதிகமாக பிடித்திருக்கிறது. இவர் எனக்கு அதிகம் பிடிக்கும் என்று அப்படி நினைத்துக் கொண்டு காரிய விவகாரத்தில் வராதீர்கள். மருந்து இருக்கிறது, மருந்து என்று நினைத்து நன்றாக சாப்பிடுங்கள். ஆனால் பிடித்திருக்கிறது எனவே சாப்பிடுகிறேன் என்று அப்படி வேண்டாம். பிடித்திருக்கிறது என்றால் ஈர்ப்பு செல்லும். இது தான் மோகத்தின் அம்சம். சாப்பிடுங்கள், குடியுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள். ஆனால் அம்சத்திற்கு விடை கொடுத்து விட்டு விலகி இருப்பவராகி பிரயோகம் செய்வதில் அன்பானவர் ஆகுங்கள். புரிந்ததா?



    பாப்தாதாவின் பண்டாராவிலிருந்து (சமையலறையிலிருந்து) இயல்பாகவே நியமப்படி அனைத்தும் கிடைப்பதற்கான வழி செய்யப்பட்டுள்ளது. எனவே எவ்வளவு வேண்டுமோ சாப்பிடுங்கள். ஆனால் தனியாக சாப்பிடாமல் தந்தையுடன் சேர்ந்து சாப்பிடுங்கள். தந்தையுடன் சேர்ந்து சாப்பிடுகிறீர்கள், தந்தையுடன் சேர்ந்து மனமகிழ்ச்சிக்கான காரியங்கள் செய்கிறீர்கள் என்றால், இயல்பாகவே எப்பொழுதும் கோட்டிற்கு உள்ளே அசோக வனத்தில் (சோகமில்லாத வனம்) இருப்பீர்கள். அங்கு இராவணனின் அம்சம் கூட வர முடியாது. எனவே சாப்பிடுங்கள், குடியுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள். ஆனால் தந்தையுடனும் கோட்டிற்கு உள்ளேயும் இருக்க வேண்டும். பிறகு எந்த விஷயமும் கடினமாக அனுபவம் ஆகாது. ஒவ்வொரு விஷயமும் மனமகிழ்ச்சி கொடுப்பதாக அனுபவம் ஆகும். புரிந்ததா என்ன செய்ய வேண்டும் என்று. எப்பொழுதும் மனமகிழ்ச்சிக்கான காரியங்கள் செய்யுங்கள்.



    நல்லது, இரட்டை வெளிநாட்டினர் நிரந்தரமாக மனமகிழ்ச்சியோடு இருப்பதற்கான விதியை புரிந்து கொண்டீர்களா? கடினமாக இல்லையே? தந்தையுடன் அமர்ந்து விட்டீர்கள் என்றால், எதுவுமே கடினமாக இருக்காது, ஒவ்வொரு நேரமும் மனமகிழ்ச்சியை அனுபவம் செய்வீர்கள். ஒவ்வொரு விநாடியும் தனக்காகவும் மற்றும் பிறருக்காகவும் வாழ்த்துக்களின் வார்த்தைகள் வெளியாகிக் கொண்டே இருக்கும். எனவே நீங்கள் அனைவரும் விடைகொடுத்து செல்ல வேண்டும் இல்லையா? உங்கள் கூடவே எடுத்துச் செல்ல மாட்டீர்கள் இல்லையா? இந்த அனைத்து அம்சங்களுக்கும் விடை கொடுத்து விட்டு, வாழ்த்துக்கள் பாராட்டுக்களையும் தெரிவித்து விட்டு செல்லுங்கள். அனைத்து வெளிநாட்டு குழந்தைகளும் தயாராக இருக்கிறீர்கள் தான் இல்லையா? நல்லது. அந்த மாதிரி நிரந்தரமாக விடை கொடுப்பவர்களுக்கு பாப்தாதா வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். விடை கொடுத்ததற்கான பல மடங்கு வாழ்த்துக்கள்! நல்லது.



    அந்த மாதிரி எப்பொழுதும் மன்மனாபவ அதாவது எப்பொழுதும் மனமகிழ்ச்சியோடு இருக்கும், எப்பொழுதும் ஒரு தந்தையில் முழு உலகையும் அனுபவம் செய்யக்கூடிய, அந்த மாதிரி விசேஷங்களைப் பார்க்கும் விசேஷ ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    சேவாதாரிகளுடன் சந்திப்பு:

    சேவாதாரிகளுக்கு மதுபனிருந்து என்ன பரிசு கிடைத்தது? பிரத்யக்ஷ பலனும் கிடைத்தது. மேலும் எதிர்காலத்து பிராப்தியும் சேமிப்பானது. அப்படி இரட்டை பரிசு கிடைத்தாகிவிட்டது. குஷி கிடைத்தது. நிரந்தர யோகாவின் பயிற்சி உடையவர் ஆனீர்கள் என்ற இந்த பிரத்யக்ஷ பலன் கிடைத்தது. ஆனால் இதன் கூடவே எதிர்காலத்து பிராப்தியும் சேமிப்பானது. அப்படி இரட்டை வாய்ப்பு கிடைத்தது. இங்கே இருக்கும் போது சகஜயோகி, கர்மயோகி, நிரந்தர யோகியின் பயிற்சி கிடைத்து விட்டது. இதே சம்ஸ்காரத்தை அந்த அளவு உறுதியாக்கிச் செல்லுங்கள். அதன் காரணமாக அங்கே சென்ற பிறகும் இதே சம்ஸ்காரம் இருக்க வேண்டும். எப்படி பழைய சம்ஸ்காரங்கள் விரும்பாவிட்டாலும் கூட காரியத்தில் வந்து விடுகின்றன. அப்படி இந்த சம்ஸ்காரத்தையும் உறுதியாக்குங்கள். அப்படி சம்ஸ்காரத்தின் காரணமாக இந்தப் பயிற்சி நடந்து கொண்டே இருக்க வேண்டும். பிறகு மாயா தடை போடாது. ஏனென்றால் சம்ஸ்காரம் உருவாகி விட்டது. எனவே எப்பொழுதும் இந்த சம்ஸ்காரங்களுக்கு கவனம் என்ற அடிக்கோடிட்டுக் கொண்டே இருங்கள். புதுப்பித்து கொண்டே இருங்கள். இங்கே இருக்கும் போது தடையற்றவர்களாக இருந்தீர்கள். எந்த தடையும் வரவில்லை தான்? ஏதாவது மனதால் கூட உங்களுக்குள் மோதல்கள் ஆகியவை நடக்கவில்லை இல்லையா? கூட்டத்தில் விதவிதமானவர்கள் இருந்த போதிலும் 'தந்தையைப் பாருங்கள்' என்றிருந்தீர்களா அல்லது 'சகோதரன் சகோதரியைப் பாருங்கள்' என்பதும் இருந்ததா? யார் எப்பொழுதும் தந்தையைப் பார்ப்பவராக இருப்பாரோ அவர் தான் பாப்தாதாவின் நெருக்கமான குழந்தை. மேலும் யார் தந்தையை பார்ப்பதின் கூடவே சகோதரனை பார்ப்பது, சகோதரியை பார்ப்பது என்பதையும் செய்து விடுகிறார்கள் என்றால் அவர் நெருக்கமான குழந்தை இல்லை. தூரத்திருப்பவர். அப்படியானால் நீங்கள் அனைவரும் யார்? நெருக்கமாக இருப்பவர்கள் தான் இல்லையா? எனவே எப்பொழுதும் இதே நினைவில் இருந்து கொண்டே இருங்கள். வெளியில் இருந்து கொண்டும் 'தந்தையைப் பாருங்கள் அல்லது தந்தையைப் பின்பற்றுங்கள்' என்ற இந்த பாடத்தை உறுதியாக்கிக் கொண்டே இருங்கள். தந்தையைப் பின்பற்றி நடப்பவர்கள் ஒருபொழுதும் சூழ்நிலைகள் பிரச்சனைகளில் ஆட மாட்டார்கள். ஏனென்றால் தந்தை ஒருபொழுதும் மேலே கீழே ஆடவில்லை தான் இல்லையா. அப்படி தந்தையை பார்ப்பவர்கள் ஆடாத அசையாத ஒரே சீராக இருப்பார்கள். நல்லது. அனைத்து ஆசைகளும் நிறைவேறி விட்டனவா? நீங்கள் அனைவரும் அவரவர்களின் சேவையில் நல்ல பங்கை செய்தீர்கள். நல்ல பங்கை செய்ததற்கான அடையாளம் ஒவ்வொரு வருடமும் தானாகவே அழைப்பு வரும். இது தான் நடைமுறையில் நினைவுச்சின்னத்தை உருவாக்குவது. அந்த நினைவுச்சின்னமோ உருவாகும் தான். ஆனால் இப்பொழுது கூட உருவாகி விடுகிறது. யாராவது நல்ல சேவை செய்கிறீர்கள் என்றால், அனைவரது வாயிலிருந்து அவரையே அழையுங்கள் என்பது தான் வெளியாகும். எனவே அந்த மாதிரி நிரூபிக்க வேண்டும். அதன் காரணமாக சேவாதாரியிலிருந்து நிரந்தர சேவாதாரி ஆகிவிடுங்கள். இவரை இங்கேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று அனைவரும் கூற வேண்டும். நல்லது.



    மதுபன் வாசிகளோடு சந்திப்பு :

    மதுபன் நிவாசிகளோ அனைத்து பிராப்தி சொரூபமானவர்களே! ஏனென்றால், மதுபனின் மகிமை, மதுபனின் விசேஷ படிப்பு, மதுபனில் இருக்கும் விசேஷ தொடர்பு, மதுபனின் விசேஷ வாயுமண்டலம் ஆகிய இவை அனைத்தும் உங்களுக்கு பிராப்தி ஆகியிருக்கிறது. வெளியில் இருப்பவர்கள் தங்களுடைய அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுவதற்காக மதுபனிற்கு வருகிறார்கள். மேலும் நீங்களோ இங்கேயே அமர்ந்திருக்கிறீர்கள். உடலாலும் பாப்தாதா எப்பொழுதும் கூடவே இருக்கட்டும் ஏனென்றால் மதுபனில் அனைவரும் ஸ்தூல ரூபத்தில் துணையின் அனுபவம் செய்கிறார்கள். எனவே உடலாலும் துணை இருக்கட்டும் அதாவது ஸ்தூலமாகவும் துணை இருக்கட்டும் மேலும் ஆத்மாவோ தந்தையின் கூடவே தான் இருக்கிறது. அப்படி இரண்டு துணை ஆகிவிட்டது இல்லையா? அனைத்து விதமான பொக்கிஷங்களின் மேல் அமர்ந்திருக்கிறீர்கள். அப்படி அனைத்து சுரங்கங்களின் அதிபதிகள் ஆகிவிட்டீர்கள் இல்லையா? மதுபனில் இருப்பவர்களின் மனதிலிருந்து என்ன அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டோம், அடையாத ஒருபொருளும் இல்லை என்ற பாடல் தான் ஒவ்வொரு விநாடியும், ஒவ்வொரு மூச்சிலும் வெளியாக வேண்டும். மதுபன்னில் இருப்பவர்களோ எப்பொழுதும் புத்தம் புதுப் பொருட்களை அருந்துபவர்கள். அப்படி யார் எப்பொழுதுமே புத்தம் புது பொருளை அருந்துபவர்களாக இருப்பார்களோ அவர்கள் எவ்வளவு ஆரோக்கியமானவர்களாக இருப்பார்கள். நீங்கள் அனைவரும் வரம் பெற்ற ஆத்மாக்கள், எப்பொழுதும் பாப்தாதாவின் வளர்ப்பில் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள். வெளியில் இருப்பவர்களுக்கோ வேறு சூழ்நிலையில் செல்ல வேண்டியதாக இருக்கிறது. எனவே அவர்களுக்காக முக்கியமாக ஏதாவது வரதானம் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. நீங்களோ வரதான பூமியில் அமர்ந்திருக்கிறீர்கள். வெளியில் இருப்பவர்களுக்கோ ஒரு வருடத்திற்காக புத்துணர்வு தேவையாக இருக்கிறது. எனவே உங்களிடம், உங்கள் ஒவ்வொருவருக்கும் பாப்தாதா என்ன கூறுவது!. அவர்களுக்கோ லைட் ஹவுஸ் ஆகி இருங்கள், மைட் ஹவுஸ் ஆகி இருங்கள் என்று கூறுகிறோம். உங்களுக்கும் இதையே கூறலாமா என்ன? வெளியில் இருப்பவர்களுக்கு இந்த விஷயத்தின் அவசியம் இருக்கிறது. ஏனென்றால் இது தான் அவர்களுக்காக தாமரை மலர் ஆகிவிடுகிறது, அதன் மேல் விலகியிருப்பவராகவும், மேலும் அன்பானவராகவும் ஆகி இருக்கிறார்கள். பொதுவாகவே வீட்டிற்கு யாராவது வருகிறார்கள் என்றால், அவர்களை கவனிக்கத் தான் வேண்டியதாக இருக்கிறது. நீங்களோ எப்பொழுதுமே வீட்டில் இருக்கிறீர்கள். அவர்களுக்கு இரட்டை பங்கை செய்ய வேண்டியதாக இருக்கிறது. எனவே இரட்டை சக்தியை நிரப்ப வேண்டியதாக இருக்கிறது. அவர்களுக்காக இந்த ஒவ்வொரு வார்த்தையும் உலகம் என்ற கடலில் படகின் வேலை செய்கிறது. மேலும் நீங்களோ உலகம் என்ற கடலில் இருந்து வெளியாகி ஞானக் கடலின் மத்தியில் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுடைய உலகமே தந்தை தான்.



    கேள்வி :

    பாபாவில் தான் உலகமே இருக்கிறது என்ற இதன் அர்த்தம் என்ன?



    பதில்:

    பொதுவாகவே புத்தி செல்கிறது என்றால் உலகத்தில் தான் செல்லும் இல்லையா? உலகத்தில் இரண்டு பொருட்கள் இருக்கின்றன, ஒன்று நபர், இன்னொன்று பொருள். தந்தையே உலகம் என்றால் அனைத்து நபர்களிடமிருந்து என்ன பிராப்தி ஆகுமோ அது ஒரு தந்தையிடமிருந்து ஆகிறது. மேலும் அனைத்து பொருட்களிடமிருந்து என்னென்ன திருப்தி ஏற்படுகிறதோ அதுவும் தந்தையிடமிருந்து தான் கிடைக்கிறது. அப்படி உலகம் ஆகிவிட்டது இல்லையா. சம்மந்தமும் தந்தையோடு, தொடர்பும் தந்தையோடு. அமர்வது, எழுவதும் தந்தையோடு. அப்படி உலகமே தந்தை ஆகிவிட்டார் இல்லையா. நல்லது.



    ஆஸ்திரேலியா பார்ட்டியுடன் சந்திப்பு :

    இன்று நீங்கள் அனைவரும் எந்த சங்கல்பம் (எண்ணம்) வைத்தீர்கள்? அனைவரும் மாயாவிற்கு விடை கொடுத்து விட்டீர்களா? யாருக்கெல்லாம் இப்பொழுது கூட யோசிக்க வேண்டியதாக இருக்கிறதோ அவர்கள் கையை உயர்த்துங்கள். ஒருவேளை இப்பொழுது யோசிக்கலாம் என்று கூறுகிறீர்கள் என்றால், இதுவும் பலஹீனமான அஸ்திவாரம் ஆகிவிட்டது. யோசிப்போம் என்றால் பலஹீனம். பிரம்மா குமார், குமாரிகளின் வேலையே மாயாவை வென்றவர் ஆவது மற்றும் ஆக்குவது. அப்படி எது தன்னுடைய உண்மையான வேலையாக இருக்கிறதோ அதற்காக யோசிக்க வேண்டுமா என்ன? நிச்சயம் நடக்கும் என்று கூறுங்கள். எப்படி சென்ற வருடம் அனேக இடங்களில் சேவை நிலையங்கள் திறப்போம் என்ற உறுதியான எண்ணத்தை வைத்து சென்றீர்கள். அதனால் அனேக கிளை நிலையங்கள் திறக்கப்பட்டு விட்டன இல்லையா? இப்பொழுது எத்தனை கிளை நிலையங்கள் இருக்கின்றன? 17, எப்படி நினைத்தீர்களோ அப்படி நிறைவேறியது. அதே போல் மாயாவை வென்றவர் ஆவதற்காகவும் எண்ணம் வையுங்கள். பாப்தாதாவோ குழந்தைகளின் தைரியத்தின் மேல் அடிக்கடி பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார். வரும் காலத்தில் இன்னும் சேவையில் வளர்ச்சியை செய்து கொண்டே இருங்கள். நீங்கள் அனைவரும் பாப்தாதாவின் மனதிற்கு பிடித்தமான குழந்தைகள்! பாப்தாதாவும் துணைவர்கள் நீங்கள் இன்றி எதுவும் செய்ய முடியாது. நீங்கள் மிக மிக மதிப்புள்ளவர்கள். நல்லது.



    வரதானம்:

    யதார்த்த நினைவு மூலம் அனைத்து சக்திகள் நிரம்பியவர் ஆகக்கூடிய எப்பொழுதும் ஆயுதம் தரித்த, கர்மயோகி ஆகுக.



    யதார்த்த நினைவின் அர்த்தம் அனைத்து சக்திகளினால் எப்பொழுதும் நிரம்பியிருப்பது. பிரச்னைகளின் சூழ்நிலை என்ற எதிரி வருகிறான். மேலும் ஆயுதங்கள் உபயோகத்தில் வரவில்லை என்றால் ஆயுதம் தரித்தவர் என்று கூற முடியாது. ஒவ்வொரு காரியத்திலும் நினைவு இருந்தால் தான் வெற்றி கிடைக்கும். எப்படி ஒரு விநாடி கூட காரியம் செய்யாமல் இருக்க முடியாது, அதே போல் எந்தவொரு காரியமும் யோகா இன்றி செய்ய முடியாது. எனவே கர்மயோகி, ஆயுதம் தரித்தவர் ஆகுங்கள். மேலும் தேவையான நேரத்தில் அனைத்து சக்திகளையும் கட்டளைப்படி உபயோகப்படுத்துங்கள். அப்பொழுது தான் யதார்த்த யோகி என்று கூறுவோம்.



    சுலோகன்:

    யாருடைய எண்ணம் மற்றும் காரியம் மகானாக இருக்கிறதோ அவர் தான் மாஸ்டர் சர்வ சக்திவான்.



    ***OM SHANTI***