BK Murli 23 April 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 23 April 2017 Tamil

    23.04.2017    காலை முரளி      ஓம் சாந்தி   அவ்யக்தபாப்தாதா,      மதுபன்


    இராஜ்ய சக்தி மற்றும் தர்ம சக்தியின் அதிகாரி குழந்தைகளுடன் பாப்தாதாவின் சந்திப்பு


    பாப்தாதா தன்னுடைய அனைத்து அதிகாரி குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சிரேஷ்ட ஆத்மாக்கள் உங்களுக்காகத்தான் இராஜ்ய சக்தி மற்றும் தர்ம சக்தி, இரண்டு சக்திகளும் ஒரு கையில் இருக்கிறது என்ற மஹிமை இருக்கிறது. இது உங்களுடைய எதிர்கால பிராப்தியின் ரூபத்தின் மகிமையாகப் பாடப்பட்டு இருக்கிறது. ஆனால் எதிர்கால பிராப்திக்கான ஆதாரம் தற்சமயத்து சிரேஷ்ட வாழ்க்கை இராஜ்ய சக்தி மற்றும் தர்ம சக்தி இரண்டையும் எந்தளவு பிராப்தியாக அடைந்திருக்கிறார்கள் என்று நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளை பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கிறார். அனைத்து சம்ஸ்காரமும் இந்த நேரம் தான் ஆத்மாவில் பதிவாகிறது. இப்பொழுதைய இராஜா தான் எதிர்காலத்தில் இராஜ்ய அதிகாரியாக ஆக முடியும். இந்த நேரத்தின் தாரணை சொரூப ஆத்மா தான் தர்ம சக்தியை பிராப்தி செய்ய முடியும். இரண்டு சக்திகளையும் ஒவ்வொருவரும் தனக்குள் எந்த அளவு தாரணை செய்திருக்கிறீர்கள்?



    இராஜ்ய சக்தி என்றால் அதிகாரி, அதிகாரம் நிறைந்த சொரூபம். இராஜ சக்தி நிறைந்த ஆத்மா தன்னுடைய அதிகாரம் மூலமாக எப்பொழுது விரும்புகிறாரோ, எப்படி விரும்புகிறாரோ அப்படி தன்னுடைய ஸ்தூல மற்றும் சூட்சும சக்திகளைக் கையாள முடியும். இந்த அதிகாரம் இராஜ்ய சக்தியின் அடையாளம். இன்னொரு அடையாளம் இராஜ்ய சக்தியுள்ளவர் ஒவ்வொரு காரியத்தையும் சட்டம் மற்றும் ஒழுங்கு மூலமாக செய்விக்க முடியும். இராஜ்ய சக்தி என்றால் பாலனை செய்வதற்கான சக்தி படைத்தவர். இராஜ்ய சக்தி என்றால் சுயம் தானும் எப்பொழுதும் அனைத்திலும் சம்பன்னமானவர், மேலும் மற்றவர்களையும் சம்பன்ன நிலையில் வைத்திருப்பவர். இராஜ்ய சக்தி என்றால் விசேஷமாக அனைத்து பிராப்திகளும் இருக்கும். சுகம், சாந்தி ஆனந்தம், அன்பு அனைத்து குணங்களின் பொக்கிஷத்தினால் நிரம்பிய நிலை, சுயம் அவரும் மேலும் அனைவரும் பொக்கிஷத்தினால் நிரம்பி இருப்பார்கள். இராஜ்ய சக்தி உள்ளவர்களாக அதாவது அதிகாரி ஆத்மாக்களாக ஆகியிருக்கிறீர்களா? தாய் தந்தைக்குக் சமமாக பாலனையின் விஷேத்தை அனுபவம் செய்கிறீர்களா? எந்த ஆத்மாக்கள் உறவு மற்றும் தொடர்பில் வருகிறார்களோ, அவர்கள், சிரேஷ்ட ஆத்மாக்கள் இவர்கள் தான் நம்முடைய மூதாதையர் என்று அனுபவம் செய்ய வேண்டும். இந்த ஆத்மாக்கள் மூலமாகத்தான் வாழ்க்கையின் உண்மையான அன்பு மற்றும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான வழி பிராப்தி ஆக முடியும். ஏனென்றால், பாலனை மூலமாகத்தான் அன்பு மற்றும் வாழ்க்கையின் முன்னேற்றம் பிராப்தி ஆகிறது. பாலனை மூலமாக ஆத்மா தகுதியானவர் ஆகிவிடுகிறது. சின்னக் குழந்தை கூட பாலனை மூலமாக தன்னுடைய வாழ்க்கையின் இலட்சியத்தை அடைவதற்கு தைரியமுள்ளவர் ஆகி விடுகிறார். அந்த மாதிரி ஆன்மீக பாலனை மூலமாக ஆத்மா பலமற்ற நிலையிலிருந்து சக்தி சொரூபம் ஆகி விடுகிறது. அந்த மாதிரி ஆன்மீக பாலனை மூலமாக தன்னுடைய வாழ்க்கையின் இலட்சியத்தை அடைவதற்கு தைரியமுள்ளவர் ஆகி விடுகிறார். அந்த மாதிரி ஆன்மீக பாலனை மூலமாக ஆத்மா பலமற்ற நிலையிலிருந்து சக்தி சொரூபம் ஆகிவிடுகிறது. தன்னுடைய இலட்சியத்தை இன்னும் அதிவேகத்தில் சென்றடைவதற்கு தைரியமுள்ளவர் ஆகிவிடுகிறார். பாலனையில் அவர் எப்பொழுதும் அன்புக் கடல் தந்தை மூலமாக உண்மையான அளவற்ற அன்பை அனுபவம் செய்கிறார், அந்த மாதிரி இராஜ்ய சக்தியின் அடையாளங்களை தன்னில் அனுபவம் செய்கிறீர்களா? அடிமைத்தனத்தின் சம்ஸ்காரம் பரிவர்த்தனை ஆகி, அதிகாரத் தன்மையின் சம்ஸ்காரத்தை அனுபவம் செய்கிறீர்களா? இராஜ்ய சக்தியின் சம்ஸ்காரம் நிரம்பி விட்டதா? அடையாளங்கள் இங்கே தென்படுமா? அல்லது எதிர்காலத்திலா? இராஜ்ய சக்தியின் இன்னொரு விசேஷமும் இருக்கிறது. அதைத் தெரிந்திருக்கிறீர்களா? எப்பொழுதும் உறுதியான நிலையான துண்டுபடாத இராஜ்யம் தன்னுடைய இராஜ்யத்தை இந்த மகிமை செய்கிறீர்கள் இல்லையா? இராஜ்ய சக்தியின் என்ன என்ன அடையாளங்கள் இருக்கின்றனவோ அவை உறுதியானதாக துண்டுபடாததாக இருக்கிறதா என்ற இதையும் சோதனை செய்யுங்கள். ஆளுமை சக்தி துண்டிக்கப்படவில்லையே? இந்த நேரம் அதிகாரி, அடுத்த நேரம் அடிமைத்தனம் இருக்கிறது என்றால் அதை துண்டிக்கப்படாதது என்று கூறமுடியுமா? இதன் மூலமாகவே என்னுடைய பிராப்தி என்ன நான் இராஜ்ய அதிகாரியா அல்லது இராஜ்யத்தில் இருப்பவனா என்று உங்களை நீங்களே தெரிந்து கொள்ள முடியும். இதே முறையில் தர்ம சக்தி அதாவது ஒவ்வொரு தாரணையின் சக்தியை தன்னில் அனுபவம் செய்யும் ஆத்மா. எப்படி தூய்மையின் தாரணை சக்தியை அனுபவம் செய்பவர், தூய்மையின் சக்தி மூலம் எப்பொழுதும் உயர்ந்த பூஜைக்குரியவர் ஆகிவிடுகிறார். தூய்மையின் சக்தி விகாரங்களின் அக்னியில் எரிந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களை சீதளம் ஆக்க விடுகிறது. தூய்மையின் சக்தி ஆத்மாவை அனேக ஜென்மங்களின் பாவங்களின் பந்தனத்திலிருந்து விடுவித்து விடுகிறது. தூய்மையின் சக்தி கண்ணில்லாதவர்களுக்கு மூன்றாவது கண்ணைக் கொடுத்து விடுகிறது. தூய்மையின் சக்தியினால் இந்த முழு உலகம் என்ற வீட்டை கீழே விழுவதிலிருந்து நிறுத்தி வைக்க முடியும். தூய்மையின் தூண்கள் அதன் ஆதாரத்தில் துவாபர் யுகத்திலிருந்து ஏதாவது ஒன்றில் சரிந்திருக்கிறது. தூய்மை ஒளி கிரீடம். அந்த மாதிரி தூய்மையைக் கடைப்பிடிப்பது என்பது தர்ம சக்தி. இதே விதமாக ஒவ்வொரு குணத்தின் விசேஷம் ஆத்மாவில் நிரம்பி இருக்க வேண்டும். இதைத் தான் தர்ம சக்தி என்று கூறுவது. தர்ம சக்தி என்றால் தாரணையின் சக்தி. அந்த மாதிரி தர்ம சக்தி உள்ள ஆத்மாவாக ஆகியிருக்கிறீர்களா? தர்மத்தில் இரண்டு விசேஷங்கள் இருக்கின்றன. தர்ம சக்தி தன்னையும் மற்றும் அனைவரையும் சுலபமாகப் பரிவர்த்தனை செய்து விடுகிறது. பரிவர்த்தனை சக்தி தெளிவாக இருக்கும். முழுச் சக்கரத்தில் பாருங்கள், எந்தெந்த தர்ம சக்தி ஆத்மாக்கள் வந்திருக்கிறார்களோ அவர்களுடைய விசேஷமான காரியம் மனித ஆத்மாக்களை பரிவர்த்தனை செய்வது என்பதாகத் தான் இருந்தது. சாதாரண மனிதனிலிருந்து பரிவர்த்தனை (மாறி) ஆகி சிலர் பௌத்த மதத்தினராக, சிலர் கிறிஸ்தவர்களாக சிலர் மடம், ஆஸ்ரமவாசிகளாக ஆனார்கள். ஆனால் பரிவர்த்தனையோ ஆனது இல்லையா? ஆக, தர்ம சக்தி என்றால், பரிவர்த்தனை (மாற்றம்) செய்யும் சக்தி. முதலில் தன்னை பிறகு மற்றவர்களை பரிவர்த்தனை செய்வது. தர்ம சக்தியின் இன்னொரு விசேஷம் பரிபக்குவ நிலை, ஆடும் நிலை இல்லை. பரிபக்குவத்தின் சக்தி மூலமாகத் தான் பரிவர்த்தனை செய்ய முடியும். அநீதி, அடக்கு முறையாக இருந்தாலும், நிந்தனை செய்யப்பட்டாலும், எதிர்ப்பு இருந்தாலும் தன்னுடைய தாரணையில் பரிபக்குவமாக இருக்க வேண்டும். இது தான் தர்ம சக்தியின் விசேஷங்கள். தர்ம சக்தி உள்ளவர் ஒவ்வொரு காரியத்திலும் பணிவாக இருப்பார், எவ்வளவு குணங்களின் தாரணையில் நிரம்பி இருப்பாரோ அதாவது குணங்கள் என்ற பழ சொரூபமாக இருப்பார்களோ அந்த அளவு பழம் நிரம்பி இருந்த போதிலும் பணிவாக இருப்பார்கள். தன்னுடைய பணிவு நிறைந்த நிலை மூலமாகத்தான் ஒவ்வொரு குணத்தையும் பிரத்யக்க்ஷம் (வெளிப்படுத்த) செய்ய முடியும். பிராமண குலத்தின் என்ன என்ன தாரணைகள் இருக்கின்றனவோ, அந்த அனைத்து தாரணைகளின் சக்தி இருப்பது என்றால், தர்ம சக்தியுடையவர் ஆவது. இராஜ்ய சக்தி மற்றும் தர்ம சக்தி, இரண்டு சம்ஸ்காரங்களும் ஒவ்வொரு ஆத்மாவிலும் நிரம்பிவிட்டதா? இரண்டின் சமநிலை இருக்கிறதா?



    இன்று பாப்தாதா எந்த அளவு தர்ம சக்தி மற்றும் இராஜ்ய சக்தி அதிகாரிகளாக ஆகியிருக்கிறார்கள் என்று ஒவ்வொரு குழந்தையின் சார்ட்டையும் பார்த்துக் கொண்டிருந்தனர். வரிசைக்கிரமமாக இருப்பார்களா அல்லது அனைவரும் ஒரே மாதிரி இருப்பார்களா? என்னுடைய வரிசை எண் எது என்ற இதை தெரிந்து கொள்ள முடியுமா? இங்கே அனைவரும் இராஜாக்கள் அமர்ந்திருக்கிறீர்கள் இல்லையா! பிரஜைகளை உருவாக்குபவர்கள் தான் இல்லையா? சுயம் நீங்களே பிரஜையாக இல்லை தான் இல்லையா? எனவே அனைவரும் தன்னை அந்த மாதிரி இராஜ்ய சக்தி மற்றும் தர்ம சக்தி அதிகாரியாக ஆக்குங்கள். இராஜ வம்சத்தின் அடையாளங்கள் என்ன என்று புரிந்து கொண்டீர்களா? 



    டில்லி மற்றும் மகாராஷ்டிரா மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் அமர்ந்திருக்கிறீர்கள் இல்லையா? தலை நகரைச் சேர்ந்தவர்களும் இராஜ்ய அதிகாரியாக ஆவீர்கள் தான் இல்லையா? மேலும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் மகான் ஆவீர்கள். மகான் என்றால் இராஜ்ய அதிகாரி. அப்படி இரண்டு இடங்களின் மகான் சிரேஷ்ட ஆத்மாக்கள் வந்திருக்கிறார்கள். மேலும் வெளி நாட்டினர் என்னவாக ஆவீர்கள்? இராஜ்யம் செய்பவர்களாகவா? அல்லது இராஜ்யத்தைப் பார்ப்பவர்களாக ஆவீர்களா? அனைவரையும் விட முன்னுக்குச் செல்வீர்கள் இல்லையா? நல்லது.



    அந்த மாதிரி இராஜ்ய சக்தி மற்றும் தர்ம சக்தி அதிகாரிகளுக்கு, எப்பொழுதும் சம்பன்னமாகி மற்றவர்களை சம்பன்னமாக்கக் கூடிய, பரிவர்த்தனை சக்தி மூலமாக சுய பரிவர்த்தனை மற்றும் உலக பரிவர்த்தனை செய்யும் சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, முழுக் கல்பமும் மகிமை மற்றும் பூஜை நடக்கும் தூய்மையான ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் தன்னுடைய தூய்மையின் குணம் மூலமாக அனைவரையும் குணம் நிறைந்தவர்களாக ஆக்கும் குண மூர்த்தி ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    பார்ட்டிகளுடன் சந்திப்பு :

    நேரத்திற்கு ஏற்றபடி பரிவர்த்தனை செய்யுங்கள். இப்பொழுது நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறுவதின் வேகம் தீவிரமானதாக வேண்டும். நேரம் தீவிர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் மாற்றம் செய்பவர் தீவிர வேகத்தில் இல்லையென்றால், நேரம் மாற்றம் அடைந்து விடும் ஆனால் நீங்களோ குறை உள்ளவர்களாகவே இருந்து விடுவீர்கள். குறை உள்ள ஆத்மாக்களின் அடையாளமாக என்ன காண்பித்திருக்கிறார்கள்? வில் அம்பு. அப்படியானால் வில்லேந்தியவர் ஆக வேண்டுமா அல்லது இராஜ குடையின் கீழ் அமர்ந்திருப்பவர் ஆக வேண்டுமா? சூரிய வம்சியாக ஆக வேண்டும் இல்லையா? சூரியன் எப்பொழுதும் பிரகாசமாக இருக்கும். மேலும் தீவிர வேகத்தில் காரியம் செய்யும். சூரியனை ஒப்பிடும் பொழுது சந்திரன் குளுமையானது என்று கூறப்படுகிறது. அப்படி முயற்சி செய்வதில் சீதளமாக ஆகக் கூடாது. முயற்சி செய்வதில் சீதளமானீர்கள் என்றால் சந்திரவம்சி ஆகிவிடுவீர்கள். சூரியவம்சியின் அடையாளம் தீவிர முயற்சி செய்வது நினைத்தீர்கள் உடனே செய்தீர்கள் ஒரு ஒருவருடம் முன்பு நினைத்தீர்கள், ஆனால் அடுத்த வருடம் தான் செய்தீர்கள் என்று அப்படி இருக்கக் கூடாது. தீவிர முயற்சி என்றால், பறக்கும் கலை உள்ளவர். இப்பொழுது ஏறும் கலை உள்ளவர்களின் காலமும் சென்று விட்டது. இப்பொழுதோ முன்னேறிச் செல்வதற்காக மிக சுலபமான வழி கிடைத்திருக்கிறது. ஓரு வார்த்தைக்கான பரிசு தான் அது எது? மேரா பாபா (என்னுடைய பாபா) இந்த ஒரு வார்த்தை தான் ஒரு வினாடியில் கீழே இருந்து மேலே செல்ல முடியும். இந்த லிப்ட்டை உபயோகிக்கும் காலம் பிறகு ஏன் படிகளில் ஏறுகிறீர்கள் லிப்ட்டில் எந்த களைப்பும் இருக்காது. நினைத்தீர்கள் மற்றும் சென்றடைந்தீர்கள். அப்படியானால் நீங்கள் யார்? ஒரே ஒரு வார்த்தையின் லிப்ட் அதிகம் யோசிப்பதற்கு அவசியம் இல்லை. ஒரு வார்த்தை ஒன்றாம் எண்ணில் கொண்டு சேர்த்து விடும். எப்பொழுது என்னுடைய பாபா என்றானது என்றால் நான் அதில் அடங்கி விட்டது. இந்தளவு சுலபமான லிப்ட்டை உபயோகியுங்கள். உபயோகிப்பவர்கள் சென்றடைந்து விடுகிறார்கள் மேலும் பார்த்துக் கொண்டிருப்பவர்கள், யோசிப்பவர்கள் தங்கிப் போய் விடுகிறார்கள். எனவே இப்பொழுது ஒரு வார்த்தையின் நினைவு சொரூபமாகி எப்பொழுதும் சக்திசாலியான ஆத்மா ஆகி விடுங்கள்.



    எப்பொழுதும் ஒவ்வொரு அடியிலும் முன்னேறிச் சென்று கொண்டே மற்றவர்களையும் முன்னேற்றிக் கொண்டே இருங்கள். எந்தளவு நீங்களே சம்பன்னமாக இருப்பீர்களோ அந்தளவு மற்றவர்களையும் சம்பன்னமாக ஆக்க முடியும்.



    அவ்யக்த முரளியிலிருந்து கேள்வி - பதில்

    கேள்வி:

    எந்த ஒரு முயற்சியிலும் வெற்றிக்கான ஆதாரம் என்ன?



    பதில் :

    யதார்த்த விதி. எந்த எண்ணத்தை நீங்கள் வைக்கிறீர்களோ அது ஒருவேளை யதார்த்த விதிப் பூர்வமாக இருக்கிறது என்றால், வெற்றி அவசியம் கிடைக்கும். ஒரு வேளை விதி சரியாக இல்லை என்றால், வெற்றியும் இல்லை என்று புரிந்து கொள்ளுங்கள். எனவே பக்தி மார்க்கத்திலும் ஏதாவது காரியம் செய்கிறார்கள் அல்லது செய்விக்கிறார்கள் என்றால் ,அதனுடைய விதியின் மேல் தான் மதிப்பு இருக்கிறது.



    கேள்வி :

    எந்த விதியோடு சேவை செய்வதன் மூலம் தான் வெற்றி கிடைக்கிறது?



    பதில் :

    மூன்று ரூபங்களினாலும் மேலும் முறையோடும் சேவை செய்தீர்கள் என்றால் வெற்றி கிடைக்கும். அந்த மூன்று ரூபம் 1) ஞானம் நிறைந்த 2) சக்தி நிறைந்த 3) அன்பு நிறைந்த நிலை அன்பில் சட்டமும் வந்து விடுகிறது. இதன் கூடவே மூன்று முறைகள் இருக்கின்றன. மனதால், சொல்லால் மற்றும் செயலால் எப்பொழுது வாய்மொழி மூலம் சேவை செய்கிறீர்களோ அப்பொழுது மனதின் எண்ணங்களும் சக்திசாலியாக இருக்கட்டும். சக்தி சாலியான நிலையினால் அவருடைய மன எண்ணங்களை மாற்றம் செய்து, பிறகு வாய் மொழி மூலமாக அவரை ஞானம் நிறைந்தவராக ஆக்கிவிடுங்கள். பிறகு காரியங்கள் மூலமாக அதாவது யாரெல்லாம் தொடர்பில் வருகிறார்களோ என்றால் அவர்களுடன் அந்த மாதிரி அன்பு நிறைந்த தொடர்பு இருக்கட்டும். அதன் மூலம் அவர் நான் ஏதோ இறை குடும்பத்திற்கே வந்து சேர்ந்து விட்டேன் என்று உணர வேண்டும். உங்களுடைய நடத்தை அந்த மாதிரி இருக்கட்டும் அதன் மூலம் அவர் வாஸ்தவமாக இது தான் என்னுடைய உண்மையான பரிவாரம் (குடும்பம்) என்று உணர வேண்டும்.



    கேள்வி :

    சக்திசாலியான நிலையின் அடையாளமாக என்ன இருக்கும் ?



    பதில் :

    எந்தக் குழந்தைகளுக்கு சக்திசாலியான நிலை இருக்குமோ அவர் ஒரு நொடியில் எந்த ஒரு வாயு மண்டலத்தையும், சூழ்நிலையையும், மாயாவின் எந்த ஒரு பிரச்சனையையும் அழித்து விடுவார். அவர் ஒரு பொழுதும் தோல்வி அடைய மாட்டார். எந்தெந்த ஆத்மாக்கள் பிரச்சனையின் ரூபமாகி வருகிறாரோ அவர், அவர் மீது பலியாகிவிடுவார். இதைத் தான் வேறு வார்த்தைகளில் இயற்கை தாசி என்று கூறுகிறோம்.



    கேள்வி :

    அனைத்து பாடங்களிலும் நாம் எந்த அளவு தேர்ச்சி அடைந்திருக்கிறோம் என்று எப்படி தெரிந்து கொள்வது?



    பதில் :

    யார் எந்தப் பாடத்தில் எந்தளவு தேர்ச்சி அடைவாரோ அந்தளவே அந்தப் பாடத்தின் ஆதாரத்தில் அவருக்கு லட்சியமும் மரியாதையும் கிடைக்கும். கூடவே பிராப்தியின் அனுபவமும் ஆகும். உதாரணமாக, ஞானத்தின் பாடம் இருக்கிறது என்றால், அதன் மூலம் லைட் மைட்டின் பிராப்தியின் அனுபவம் செய்வார். அந்த ஞானத்தின் பாடத்தின் ஆதாரத்தினால் தெய்வீக பரிவாரத்திலிருந்தும், மற்ற ஆத்மாக்களிடமிருந்தும் மரியாதையும் அந்த அளவே கிடைக்கும். அதே போலவே யோகப் பாடத்தின் லட்சியம் அவர் எந்த எண்ணத்தை வைத்தாலும் அது சக்திசாலியானதாக இருக்கும். ஏதாவது பிரச்சனை வரப்போகிறதாக இருந்தாலும், அவருக்கு முன்பாகவே தன்னுடைய யோக சக்தியினால் இது நடக்கப் போகிறது என்று அனுபவம் ஆகும். எனவே அவர் ஒருபொழுதும் தோல்வி அடைய மாட்டார். யோகத்தின் சக்தி மூலம் தன்னுடைய கடந்த கால சம்ஸ்காரங்களின சுமை அகன்று கொண்டே இருக்கும். எந்த ஒரு சம்ஸ்காரமும் தன்னுடைய முயற்சி செய்வதில் தடை ரூபம் ஆகாது.



    கேள்வி :

    எந்த ஒரு பாடத்தின் ஆப்ஜக்ட்டை (லட்சியத்தை) சோதனை செய்வதற்கான வழி என்ன?



    பதில் :

    ஆப்ஜக்ட்டை சோதனை செய்வதற்கான வழி ரெஸ்பக்ட் (மரியாதை) ஒருவேளை நான் ஞானம் நிறைந்தவனாக இருக்கிறேன் என்றால், அவர் இந்த ஞானத்திற்கு அந்த அளவு மரியாதை கொடுப்பார். ஞானத்திற்கு மரியாதை கொடுப்பது எப்பொழுது ஒவ்வொரு சப்ஜக்ட்டில் (பாடத்தில்) மற்றும் எண்ணத்தில் ஆப்ஜக்ட் மற்றும் ரெஸ்பக்ட்டின் பிராப்தி இருக்குமோ அவர் பெர்பக்ட் (குறையற்றவராக) ஆகிவிடுவார்.



    கேள்வி :

    யார் ஒவ்வொரு பாடத்திலும் பெர்பக்ட்டாக இருக்கிறாரோ அவருடைய அடையாளமாக என்ன இருக்கும் ?



    பதில்:

    யார் பெர்பக்ட் ஆக இருக்கிறாரோ அவர் எந்த எஃபக்ட்டிலிருந்து (பாதிப்பிலிருந்து) விலகி இருப்பார். உடலின், எண்ணங்களின், தொடர்பில் வரும் ஆத்மாக்களின் வைப்ரேஷ்ன் (எண்ண அலைகள்) அல்லது வாயு மண்டலத்தின் பிரபாவம் மற்றும் பாதிப்பிலிருந்து விலகி இருப்பார். நல்லது ஓம் சாந்தி.



    வரதானம்:

    மாஸ்டர் அன்புக் கடலாகி பெறுப்பு உணர்வை அகற்றக் கூடிய ஞானம் நிறைந்தவர் ஆகுக!



    ஞான சொரூப ஆத்மா, குழந்தைகள் ஒவ்வொருவருக்காகவும் மாஸ்டர் அன்புக் கடலாக இருப்பார். அவரிடம் அன்பைத் தவிர வேறு எதுவும் இருக்காது. இன்றைய நாட்களில் செல்வத்தையும் விட அதிகமாக அன்பில் தேவையாக இருக்கிறது. எனவே மாஸ்டர் அன்புக் கடலாகி அபகாரிகள் மேலும் உபகாரம் செய்யுங்கள். எப்படி தந்தை அனைத்து குழந்தைகளுக்காகவும் இரக்கம் மற்றும் நன்மை பயக்கும் பாவனை வைக்கிறார், அதே போல் தந்தைக்குச் சமமாக மன்னிக்கும் கடல் மற்றும் இரக்க மனக் குழந்தைகளிலும் யார் மீதும் வெறுப்புணர்வு இருக்க முடியாது.



    சுலோகன் :

    எல்லைக்குட்பட்டவைகளை முடிவு கட்டி எல்லைக்கப்பாற்பட்ட பார்வை மற்றும் உள்ளுணர்வைக் கடைப்பிடிப்பது தான் ஒற்றுமையின் ஆதாரமாகும்.



     ***OM SHANTI***