BK Murli 18 May 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 18 May 2017 Tamil

    18.05.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

    இனிமையான குழந்தைகளே! வெற்றி மாலையில் வரவேண்டும் என்றால் நிச்சயபுத்தி உடையவராக ஆகுங்கள், நிராகார தந்தை நமக்கு கற்பிக்கிறார், அவர் தன்னுடன் அழைத்துச் செல்வார் என்ற இந்த நிச்சயத்தில் ஒரு போதும் சந்தேகம் வரக்கூடாது.



    கேள்வி:

    வெற்றி இரத்தினமாக ஆகக் கூடியவர்களின் முக்கியமான அடையாளம் என்னவாக இருக்கும்?



    பதில்:

    அவர்களுக்கு ஒரு போதும் எந்த விஷயத்திலும் சந்தேகம் வராது. அவர்கள் நிச்சய புத்தியுடையவர்களாக இருப்பார்கள். இது சங்கமயுகத்தின் சமயம் பிறகு இந்த துக்கதாமம் முடிந்து சுகதாமம் வர வேண்டும் என்ற நிச்சயம் அவர்களுக்கு இருக்கும். 2. தந்தைதான் இராஜயோகம் கற்பிக்கிறார், அவர் நம்மை ஆத்ம அபிமானி உணர்வுள்ளவர்களாக்கி உடன் அழைத்துச் செல்வார். அவர் இப்போது ஆத்மாக்களாகிய நம்முடன் பேசுகிறார். நாம் அவர் முன்னால் அமர்ந்திருக்கிறோம். 3. பரமாத்மா நம்முடைய தந்தையாகவும் இருக்கிறார், இராஜயோகத்தை கற்றுத் தருகிறார் என்பதால் ஆசிரியருமாகிறார் மற்றும் சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்வார் என்பதால் சத்குருவாகவும் இருக்கிறார். இப்படிப்பட்ட நிச்சயபுத்தி உள்ளவர்கள் அனைத்து விஷயங்களிலும் வெற்றியாளர்களாக இருப்பார்கள்.



    பாடல்:

    உன்னை அடைந்து நான் உலகை அடைந்தேன். . .



    ஓம் சாந்தி.

    தந்தை குழந்தைகளுக்கு ஓம் சாந்தியின் அர்த்தத்தைப் புரிய வைத்திருக்கிறார். அனைத்து விஷயங்களுமே ஒரு வினாடியில் புரிந்து கொள்ளக் கூடியவை ஆகும். ஓம் சாந்தி அதாவது அஹம் – நான் ஆத்மா, ம - இது எனது சரீரம் என குழந்தைகளும் சொல்கின்றனர். அதுபோல தந்தையும் சொல்கிறார் - பரமதாமத்தில் வசிக்கக் கூடிய நான் ஆத்மா. எனவே அவர் பரமாத்மா ஆகிவிடுகிறார். ஓம். . . இதனை தந்தையும் சொல்லலாம், குழந்தைகளும் சொல்லலாம். அஹம் ஆத்மா மற்றும் பரமாத்மா இருவரின் சுயதர்மம் அமைதி ஆகும். ஆத்மா சாந்திதாமத்தில் வசிப்பதாகும் என நீங்கள் அறிவீர்கள். அங்கிருந்து இந்த கர்ம க்ஷேத்திரத்தில் (கர்மபூமியில்) நடிப்பை நடிப்பதற்காக வந்துள்ளது. ஆத்மாக்களாகிய நம்முடைய ரூபம் என்ன மற்றும் தந்தையின் ரூபம் என்ன என்பதையும் அறிவீர்கள். இதனை மனித சிருஷ்டியில் உள்ள யாருக்கும் தெரியாது. தந்தைதான் வந்து புரிய வைக்கிறார். நம்முடைய தந்தை பரமபிதா பரமாத்மா ஆவார், அவர் ஆசிரியராகவும் இருக்கிறார், நம்முடைய சுப்ரீம் (உயர்வான) குருவாகவும் இருக்கிறார் என குழந்தைகளும் புரிய வைக்கின்றனர். பலரும் குருவை பின்பற்றுகின்றனர். பரமபிதா பரமாத்மா தந்தையாகவும் இருக்கிறார், சகஜ இராஜயோகம் மற்றும் ஞானத்தின் படிப்பையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார், மேலும் பிறகு உடன் அழைத்தும் செல்கிறார் என இப்போது குழந்தைகள் நிச்சயப்படுத்திக் கொள்கின்றனர். இந்த நிச்சயத்தில்தான் குழந்தைகளின் வெற்றி இருக்கிறது. வெற்றி மாலையில் உருட்டப் படுவீர்கள். ருத்ர மாலை மற்றும் விஷ்ணுவின் மாலை. பகவானுடைய மகா வாக்கியம் - நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன் எனும்போது ஆசிரியராகவும் ஆகி விட்டேன். வழி (அறிவுரை) கிடைக்க வேண்டும் அல்லவா. தந்தையின் வழி தனிப்பட்டது, ஆசிரியருடையது தனி வழி, குருவினுடையது தனியாகும். வித விதமான வழிகள் கிடைக்கின்றன. இவர் அனைவருக்கும் ஒருவரே ஆவார், இதில் சந்தேகம் முதலான விஷயம் எதுவும் கிடையாது. நாம் ஈஸ்வரனின் குடும்பம் அல்லது வம்சாவளியினர் ஆவோம் என அறிந்துள்ளீர்கள். இறைத்தந்தை படைப்பவர் ஆவார். நீயே தாயும் தந்தையும், நாங்கள் உங்களின் பாலகர்கள் என பாடவும் செய்கின்றனர். ஆக கண்டிப்பாக குடும்பம் என ஆகி விட்டது. பாரதத்தில்தான் பாடுகின்றனர். அது கடந்த காலத்தின் விஷயம் ஆகும். இப்போது நிகழ்காலத்தில் நீங்கள் அவருடைய குழந்தைகளாக ஆகியுள்ளீர்கள். அதற்காகத்தான் படிப்பை படிக்கிறீர்கள். பாபா உங்களின் உயர்ந்த வழிப்படி நாங்கள் நடக்கிறோம் எனும்போது இருக்கும் பாவங்கள் யோகபலத்தின் மூலம் நீங்கி விடும். தந்தையைத்தான் பதித பாவனர் (தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர்), சர்வ சக்திவான் என சொல்கின்றனர். தந்தை ஒருவர்தான் ஆவார். மம்மா பாபா எனவும் சொல்கின்றனர், அவர்களிடமிருந்து இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அரைக் கல்ப காலம் அங்கே துக்கத்தின் பெயரும் கூட இருக்காது, நீங்கள் அப்படிப்பட்ட ஆஸ்தியை அடைகிறீர்கள். அது சுகதாமம் ஆகும். துக்கதாமத்தின் முடிவு ஏற்படும்போது தந்தை வருவார் அல்லவா. அதுவும் சங்கமத்தின் சமயமாக ஆகிவிட்டது. பாபா நமக்கு இராஜயோகமும் கற்பிக்கிறார் என நீங்கள் அறிவீர்கள். ஆத்ம அபிமானியாக ஆக்கி உடன் அழைத்தும் செல்கிறார். உங்களுக்கு மனிதர்கள் யாரும் கற்பிக்கவில்லை. இந்த நிராகார தந்தை தான் கற்பிக்கிறார். ஆத்மாக்களாகிய உங்களுடன் உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது. இதில் சந்தேகமோ அல்லது குழப்பமோ அடையக்கூடிய விஷயம் ஏதும் இல்லை. முன்னால் அமர்ந்திருக்கிறார். நாம்தான் தேவதை களாக இருந்தோம், அப்போது தூய்மையான இல்லற மார்க்கத்தினராக இருந்தோம் என்பதையும் அறிவீர்கள். 84 பிறவிகளின் நடிப்பு முடித்திருக்கிறோம். நீங்கள் 84 பிறவிகள் எடுத்திருக்கிறீர்கள். ஆத்மாக்களும் பரமாத்மாவும் வெகு காலம் பிரிந்திருந்தனர் என பாடவும் செய்கின்றனர். சத்யுகத்தின் தொடக்கத்தில் முதன் முதலில் தேவி தேவதைகள்தான் இருப்பார்கள், அவர்கள் பிறகு கலியுகத்தின் இறுதியில் தூய்மையற்றவர்களாக ஆகின்றனர். 84 பிறவிகளை எடுக்கின்றனர். தந்தை கணக்கும் கூட சொல்கிறார். சன்னியாசிகளின் தர்மமே தனியானது. மரத்தில் (படைப்பில்) பலவிதமான தர்மங்கள் உள்ளன. முதன் முதலில் இருக்கும் அடித்தளம் தேவி தேவதா தர்மம் ஆகும். மனிதர்கள் யாரும் அந்த தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்ய முடியாது. தேவி தேவதா தர்மம் மறைந்து விட்டுள்ளது, மீண்டும் இப்போது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. பிறகு சத்யுகத்தில் நீங்கள் தனது பலனை அனுபவிப்பீர்கள். மிகவும் உயர்ந்த வருமானம் ஆகும்.



    குழந்தைகளாகிய நீங்கள் இப்போது உண்மையான வருமானத்தை ஈட்டுகிறீர்கள். அதன் மூலம் நீங்கள் உண்மையான கண்டத்தில் எப்போதும் சுகம் மிக்கவர்களாக ஆகிறீர்கள். ஆக கவனம் கொடுக்க வேண்டும். தந்தை வீடு வாசலை விடுங்கள் என சொல்வதில்லை. அந்த சன்னியாசிகளுக்கு வைராக்கியம் ஏற்படுகிறது. அது தவறு என தந்தை சொல்கிறார், இதன் மூலம் சிருஷ்டிக்கு எந்த நன்மையும் ஏற்படுவதில்லை. என்றாலும் பாரதத்தில் இந்த சன்னியாசிகளின் தர்மம் நல்லதே ஆகும். பாரதத்தை நிறுத்துவதற்காக சன்னியாச தர்மம் ஸ்தாபனை ஆகிறது, ஏனென்றால் தேவதைகள் வாம மார்க்கத்தில் சென்று விடுகின்றனர். பாதி காலம் முடிந்து விட்டால் வீட்டில் சிறிது பழுது பார்க்கப்படுகிறது. ஒன்றிரண்டு வருடங்களில் விரிசல் முதலானவை ஏற்படுகின்றன. இலட்சுமியை அழைக்கலாம் என சிலர் நினைக்கின்றனர், ஆனால் சுத்தமாக இருக்கும்போதுதான் அவர் வருவார். பக்தி மார்க்கத்தில் இலட்சுமிக்கு பூஜை செய்கின்றனர் - அவரிடமிருந்து பணத்தை பெறுவதற்காக. ஜகதம்பாவிடம் ஒரு போதும் பணத்தை வேண்ட மாட்டார்கள். பணத்திற்காக இலட்சுமியிடம் செல்கின்றனர். தீபாவளியின் போது வியாபாரிகள் கூட பூஜையில் பணத்தை வைக்கின்றனர். விருத்தி (வளர்ச்சி) அடையும், மன விருப்பங்கள் நிறைவேறும் என புரிந்து கொள்கின்றனர். ஜகதம்பாவுக்கு விழா மட்டும் நடக்கிறது. விழா என்பது நடக்கவே செய்கிறது - இந்த ஜகத்பிதா, ஜகதம்பாவை சந்திக்கக் கூடிய விழா. இது உண்மையான விழா, இதன் மூலம் லாபம் ஏற்படுகிறது. அந்த விழாக்களிலும் நிறைய பேர் அலைந்து திரிகின்றனர். சில இடங்களில் படகு மூழ்கி விடுகிறது. சில இடங்களில் பேருந்து விபத்துக்குள்ளாகிறது. நிறைய அடி வாங்க வேண்டியிருக்கிறது. பக்தியின் விழாக்களில் மிகவும் ஆர்வம் உண்டாகிறது, ஏனென்றால் அவர்கள் கேட்டிருக்கிறார்கள் அல்லவா - ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் சந்திப்பின் விழா நடக்கிறது. இந்த விழா புகழ் வாய்ந்ததாகும். இதனை பிறகு பக்தி மார்க்கத்தில் கொண்டாடுகின்றனர். இராமன் மற்றும் இராவணனுக் கிடையில் போட்டி நடக்கிறது. ஆக தந்தை நல்ல விதமாக புரிய வைக்கிறார் - மூர்ச்சையடைந்து விடக் கூடாது. இராமன் மற்றும் இராவணன் இருவருமே சர்வசக்திவான்கள். நீங்கள் யுத்த மைதானத்தில் இருக்கிறீர்கள். சிலரோ மாயையிடம் அடிக்கடி தோற்றுப் போகின்றனர். பலசாலியான என்னை நீங்கள் நினைவு செய்தீர்கள் என்றால் ஒருபோதும் தோற்றுப் போக மாட்டீர்கள் என தந்தை சொல்கிறார். தந்தையின் நினைவின் மூலமே வெற்றி அடைந்தபடி இருப்பீர்கள். ஞானம் ஒரு வினாடிக்கானதேயாகும். இந்த சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது என தந்தை விஸ்தாரமாக விவரிக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் விதை மற்றும் மரத்தைப் பற்றி சுருக்கமாக தெரிந்திருக்கிறீர்கள். இதனுடைய பெயர் கல்ப விருட்சமாகும். இதனுடைய ஆயுள் இலட்சக்கணக்கான வருடங்கள் இருக்க முடியாது. இது பல விதமான தர்மங்களின் மரமாகும். ஒரு தர்மத்தினரின் முகம் இன்னொரு தர்மத்தவரைப் போல இருக்காது. முற்றிலும் வித்தியாசமானதாகும். இஸ்லாமியர் முதலானவர்கள் எவ்வளவு கருப்பாக இருக்கின்றனர், அங்கும் கூட நிறைய செல்வம் இருக்கிறது. அனைவருமே பணத்திற்குப் பின்னால் அலைகின்றனர். பாரதவாசிகளின் முகத் தோற்றம் முற்றிலும் தனித் தனியானது. பல விதமான தர்மங்களின் மரம் ஆகும். எப்படி வளர்ச்சி ஏற்படுகிறது என நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். இது ஆலமரத்துடன் ஒப்பிடப்படுகிறது. இதனுடைய வேர் அழிந்து விட்டது என இப்போது நடைமுறையில் நீங்கள் பார்க்கிறீர்கள். மற்ற தர்மங்கள் நிலையாக இருக்கின்றன. தேவி தேவதா தர்மம் என எதுவும் இல்லை. கல்கத்தாவில் முழு மரமும் பச்சைப் பசேலென்று நின்றிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். வேர் இல்லை. இதனுடைய (தேவதா தர்மத்தின்) வேரும் இல்லை, அது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது.



    இப்போது நாடகம் முடிவடைகிறது என குழந்தைகள் புரிந்திருக்கிறீர்கள். இப்போது பாபாவிடம் திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் என்னிடம் வந்து விடுவீர்கள் என தந்தை சொல்கிறார். பாரதத்தைத் தவிர வேறு எந்த கண்டமும் சொர்க்கமாக ஆக முடியாது என்பதும் தெரியும். ஆனால் கீதையில் கிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டனர். ஸ்ரீகிருஷ்ணரை யாரும் பதித பாவனர் (தூய்மையற்றவரை தூய்மையாக்குபவர்) என சொல்ல மாட்டார்கள், நிராகாரரை ஒப்புக் கொள்வார்கள். கிருஷ்ணர் சத்யுகத்தின் இளவரசர் ஆவார். அந்த பெயர், உருவம், தேசத்தில் மீண்டும் கிருஷ்ணர் சொர்க்கத்தில்தான் வருவார். பிறகு அதே அங்க லட்சணங்கள் மீண்டும் இருக்க முடியாது. ஒவ்வொருவரின் தோற்றங்களும் வேறு வேறாக இருக்கும். கர்மங்களும் ஒவ்வொருவருடையதும் தனித் தனியானதாகும். இந்த நாடகம் துவக்கமும், முடிவும் இன்றி உருவாகியுள்ளது. ஒவ்வொரு ஆத்மாவுக்கும் நடிப்பு கிடைத்திருக்கிறது. ஆத்மா அழிவற்றதாகும். மற்றபடி இந்த சரீரம் அழியக்கூடியது. ஆத்மாவாகிய நான் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறேன் என்ற இந்த ஆத்மாவின் ஞானம் கூட யாரிடமும் இல்லை. தந்தை வந்து புதிய விஷயங்களை சொல்கிறார், என்னுடைய காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளே! குழந்தைகளும் சொல்கின்றனர் - பாபா உங்களை சந்தித்து 5 ஆயிரம் வருடங்கள் ஆகி விட்டன. யோகபலத்தின் மூலம் நீங்கள் முழு உலகின் எஜமான் ஆகி விடுகிறீர்கள். முதல் வன்முறை ஒருவர் மீது ஒருவர் காமக் கோடரியை வீசுவதுதான் ஆகும். இதுவும் புரிய வைக்கப்பட்டிருக்கிறது - தோள் வலிமையின் சண்டையின் மூலம் யாரும் உலகின் எஜமானாக ஆக முடியாது. யோக பலத்தின் மூலம் எஜமானராகக்கூடியவர்கள் ஆவர். ஆனால் சாஸ்திரங்களில் பிறகு தேவதைகளுக்கும் அசுரர்களுக்கும் சண்டை நடந்ததாக காட்டியுள்ளனர். அந்த விஷயமே கிடையாது. இங்கே நீங்கள் தந்தையின் மூலம் யோகபலத்தால் வெற்றியடைகிறீர்கள். தந்தைதான் உலகைப் படைப்பவர், கண்டிப்பாக அதுவும் புதிய உலகத்தைத்தான் படைப்பார். லட்சுமி நாராயணர் புதிய உலகமாகிய சொர்க்கத்தின் எஜமான்களாக இருந்தனர். நாம்தான் சொர்க்கத்தின் எஜமானாக இருந்தோம், பிறகு 84 பிறவிகள் எடுத்து தூய்மையற்றவர்களாக பைசாவுக்குப் பெறுமானமற்றவர்களாக ஆகிக் கிடக்கிறோம். இப்போது நீங்கள்தான் தூய்மையடைய வேண்டும். பக்தர்கள் நிறைய உள்ளனர். ஆனால் அதிக பக்தி யார் செய்துள்ளனர்? யார் வந்து பிராமணர்களாக ஆகியுள்ளனரோ அவர்கள்தான் ஆரம்பத்திலிருந்து பக்தி செய்துள்ளனர். அவர்கள்தான் வந்து பிராமணர்களாக ஆவார்கள். பிரஜாபிதா சூட்சும வதனத்தில் இல்லை. பிரம்மா இங்கே தேவைப்படுகிறார் அல்லவா. அவருக்குள் பரமாத்மா பிரவேசம் செய்கிறார். எந்த பாபா மம்மா இங்கே உள்ளனரோ அவர்கள் அங்கே உள்ளனர் என நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். இந்த விஷயங்கள் மிகவும் புரிந்து கொள்ள வேண்டியவை ஆகும். இப்படி இப்படியெல்லாம் சேவை செய்யுங்கள் என பாபா வழிமுறைகள் கொடுத்தபடி இருக்கிறார். குழந்தைகள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துகின்றனர். எந்த ஒரு விஷயத்தையும் யார் கண்டுபிடித்தாலும் சொல்வோம் – கல்பத்திற்கு முன்பும் கூட கண்டுபிடிப்புகள் வெளிப்பட்டன. பிறகு அவை இன்னும் நன்றாக செய்யப்படுகின்றன. சொர்க்கம் மற்றும் நரகத்தின் சக்கரம் மிகவும் நன்றாக இருக்கிறது. கிருஷ்ணர் அனைவருக்கும் பிடித்தமானவராக இருக்கிறார். ஆனால் அவர்தான் நாராயணராக ஆகிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது. இப்போது இதனை யுக்தியுடன் புரிய வைக்க வேண்டும். உங்களின் இந்த சக்கரம் மிகப் பெரியதாக இருக்க வேண்டும். ஒரேயடியாக கூரையைத் தொடும் அளவு பெரியதாக இருக்க வேண்டும். அதில் நாராயணரின் படம் இருக்க வேண்டும், கிருஷ்ணருடையதும் இருக்க வேண்டும். பெரிய பொருளை மனிதர்கள் நன்றாகப் பார்க்க முடியும். பாண்டவர்களின் பெரிய பெரிய படங்கள் உருவாகியிருக்கின்றன. பாண்டவர்கள் நீங்கள்தான் அல்லவா. இங்கே பெரியவர்கள் யாரும் கிடையாது. மனிதர்கள் 6 அடி உள்ளவர்களாக இருக்கின்றனர், அதே போல்தான் இருப்பார்கள். சத்யுகத்தில் நீண்ட ஆயுள் இருப்பதால் உயரமான சரீரத்துடன் இருப்பார்கள் என புரிந்து கொள்ள வேண்டாம். அதிக உயரமான மனிதர்கள் பார்க்க நன்றாக இருக்க மாட்டார்கள். ஆக புரிய வைப்பதற்காக பெரிய பெரிய படங்கள் தேவை. சத்யுகத்தின் படங்களும் கூட முதல் தரமானதாக உருவாக்க வேண்டும். இதில் இலட்சுமி - நாராயணருடையதையும், கீழே இராதா கிருஷ்ணருடையதையும் இருக்குமாறு வரைய வேண்டும். இவர்கள் இளவரசன் - இளவரசி ஆவர். இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும். பிரம்மா சரஸ்வதி பிறகு இலட்சுமி நாராயணராக ஆகின்றனர். பிராமணர்களாகிய நாம் மீண்டும் தேவதைகளாக ஆகிறோம். இவர்கள் இப்போது தெரிந்து கொள்கின்றனர் - நாமே இலட்சுமி - நாராயணராக ஆகிறோம். பிறகு நாமே ராமன் - சீதையாக ஆகப் போகிறோம். இப்படி இராஜ்யம் செய்யப் போகிறோம். குழந்தைகள் இப்படி படங்களை வைத்து யாருக்காவது புரிய வைத்தால் மிகவும் மகிழ்ச்சி ஏற்படும். இது மிகவும் முதல் தரமான ஞானமாகும் என சொல்வார்கள். ஹடயோகிகள் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. சத்யுகத்தில் தூய்மையான இல்லற மார்க்கம் இருந்தது. இப்போது தூய்மையற்றதாக இருக்கிறது. தந்தையைத் தவிர எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியை யாரும் கொடுக்க முடியாது. பாபா நம்மை உலகின் எஜமானாக ஆக்கக் கூடிய படிப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என தெரிந்திருக்கிறீர்கள். அதனை நல்ல விதமாக தாரணை செய்ய வேண்டும். படிப்பின் மூலம் மனிதர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக ஆகி விடுகின்றனர். நீங்களும் கூட இப்போது அகலிகைகளாக, கூனிகளாக இருக்கிறீர்கள். தந்தை அமர்ந்து படிப்பிக்கிறார், அந்தப் படிப்பின் மூலம் நீங்கள் உலகின் எஜமானாக ஆகிறீர்கள். அவர் ஞானக் கடலாகவும் இருக்கிறார். தன்னை அசரீரி என புரிந்து கொள்ளுங்கள் என இப்போது தந்தை சொல்கிறார். ஆடையின்றி வந்தோம், பிறகு ஆடையின்றி (சரீரமின்றி) திரும்பிச் செல்ல வேண்டும்.



    இந்த நம்முடைய 84 பிறவிகளின் சக்கரம் இப்போது முடிவடைகிறது என நீங்கள் அறிவீர்கள். இது மிகவும் அதிசயமானதாகும். இவ்வளவு சிறிய ஆத்மாவில் எவ்வளவு பெரிய நடிப்பு அடங்கியுள்ளது, அது ஒரு போதும் நீங்கிப் போகாது. இதற்கு தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. எவ்வளவு அதிசயமான விஷயங்கள். ஆத்மாக்களாகிய நாம் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றுகிறோம், இதற்கு ஒருபோதும் முடிவு கிடையாது. இப்போது நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அதில் முழு ஞானமும் உள்ளது. நட்சத்திரத்திற்கு (ஆத்மாவிற்கு) த்தான் மதிப்பு உள்ளது. நட்சத்திரம் எவ்வளவு பிரகாசிக்கிறதோ (புத்திசாலியாகிறதோ) அவ்வளவு விலை மதிப்பு அதிகமாக இருக்கும். இப்போது இந்த ஒரு நட்சத்திரத்தில் (புள்ளியில்) எவ்வளவு முழுமையான ஞானம் நிரம்பியுள்ளது. புருவ மத்தியில் ஜொலிக்கிறது பிரகாசமான நட்சத்திரம் என பாடவும் செய்கின்றனர். இந்த அதிசயத்தை நீங்கள் அறிவீர்கள். தந்தை சொல்கிறார் - நானும் நட்சத்திரமாக இருக்கிறேன், என்னுடைய காட்சியும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவர் மிகவும் பிரகாசமானவர், அகண்ட (அணையாத) ஜோதியாக இருக்கிறார், சூரியன் போல இருக்கிறார். என கேட்டிருக்கிறீர்கள் அல்லவா. ஆக பாபா ஒருவேளை நட்சத்திர ரூபத்தைக் காட்டினால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். பலரும் தியானத்தில் செல்லும்போது தேஜோமயமானவர் (மிக பிரகாசமானவர்) என சொல்வது காட்சியில் தெரிந்திருக்கும். பரமாத்மா நட்சத்திரத்தைப் போன்றவர் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நல்லது!



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாராம்சம்:

    1. உண்மையான கண்டத்தின் எஜமான் ஆவதற்காக தந்தையிடமிருந்து உண்மையான வருமானத்தை ஈட்ட வேண்டும். பலவானாக இருக்கும் தந்தையின் நினவில் இருந்து மாயையை வென்றவர் ஆக வேண்டும்.



    2. தந்தையிடமிருந்து எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியை எடுப்பதற்காக தந்தையிடமிருந்து கிடைக்கும் படிப்பின் மீது முழுமையான கவனம் கொடுக்க வேண்டும். அந்த படிப்பினைகளை நல்ல விதமாக தாரணை செய்ய வேண்டும்.



    வரதானம்:

    தந்தையின் குடை நிழலின் கீழே பாதுகாப்பின் அனுபவம் செய்யக் கூடிய அனைத்து ஈர்ப்பிலிருந்தும் விடுபட்டவர் ஆகுக.



    எப்படி ஸ்தூலமான உலகில் வெயில் அல்லது மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக குடையை ஆதாரமாக்கிக் கொள்கிறோம், அது ஸ்தூலமான குடையின் நிழல், இது தந்தையின் குடை நிழல், அது ஆத்மாவை அனைத்து சமயங்களிலும் பாதுகாப்பாக வைக்கிறது. அவரை எந்த ஈர்ப்பும் தன் பக்கம் ஈர்க்க முடியாது. இதய பூர்வமாக பாபா என சொன்னால் போதும், பாதுகாப்பு கிடைத்து விடுகிறது. எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் குடை நிழலின் கீழே இருப்பவர்கள் பாதுகாப்பின் அனுபவம் செய்கின்றனர். மாயையின் தாக்கம் சிறிதளவும் வர முடியாது.



    சுலோகன்:

    அடிமைத்தனம் முடிந்து விடும் அளவு சுயராஜ்ய அதிகாரி ஆகுங்கள்.


    ***OM SHANTI***