BK Murli 24 June 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 24 June 2017 Tamil

    24.06.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    மாதேஸ்வரி அவர்களுடைய நினைவு தினத்தன்று படிப்பதற்காக விசேஷமான மகாவாக்கியம்

    இந்த துக்கம் நிறைந்த உலகத்தில் எந்தவித ஆசையும் வைக்க வேண்டாம், சுகமான உலகத்திற்குச் செல்வதற்காக தன்னுடைய சமஸ்காரத்தை தெய்வீகமானதாக ஆக்க வேண்டும்.

    பாடல்:

    ஒருவர் நம்மை தன்னுடையவர் ஆக்கி சிரிப்பதற்கு, கற்பித்து விட்டார்.....



    ஒன்று மகிழ்ச்சி நிறைந்த உலகம் மற்றும் இன்னொன்று அழுகை நிறைந்த உலகம் இப்பொழுது எங்கே அமர்ந்திருக்கிறீர்கள்? அழுகை நிறைந்த உலகத்தின் முடிவு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த உலகம் அதாவது சுகம் நிறைந்த உலகத்திற்கான நாற்று இப்பொழுது நடப்பட்டுக் கொண்டு இருக்கிறது. நாம் சங்கமயுகத்தில் இருக்கிறோம். ஆனால் இப்பொழுது அந்த சுகம் நிறைந்த உலகத்திற்காக முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். எனவே, தன்னுடைய முழு கவனமும் அதன் மீது உள்ளது. இப்பொழுது இந்த அழுகை நிறைந்த உலகம் அதாவது துக்கம் நிறைந்த உலகத்தில் எந்தவித செல்வத்தின், சொத்தின், பதவியின், புகழ், மரியாதை போன்ற எந்த விசயத்தின் ஆசையும் வைக்க வேண்டாம். ஏனெனில், இப்பொழுதோ அனைத்திலும், செல்வம், சொத்து பத்துக்களில் கூட அழுகையே உள்ளது அதாவது துக்கமே உள்ளது. இந்த உலகத்தின் எந்த ஒரு பிராப்தி, எதை பிராப்தி என்று கருதப்படுகிறதோ, அதில் இப்பொழுது எந்த சுகமும் இல்லை. ஆகையினால் நான் எந்த மகிழ்ச்சி நிறைந்த அதாவது சதா சுகம் நிறைந்த உலகத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றேனோ, அந்த உலகத்திற்குச் செல்வதற்காக தன்னுடைய சம்ஸ்காரத்தைக் கூட அதற்கேற்றார் போல் உருவாக்குங்கள் என்று தந்தை கூறுகின்றார். பாருங்கள், சித்திரம் வரைபவர்கள்; கூட தேவதைகளுடைய முகத்தை மிகவும் நல்ல மலர்ந்த முகமுடையதாக உருவாக்குகின்றனர். அவர்களுடைய முகத்தில் தூய்மை, தெய்வீகத் தன்மை போன்றவற்றை காண்பிக்கின்றனர். இப்பொழுது நாம் அதே சமஸ்காரத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றோம் அதாவது தாரணை செய்து கொண்டு இருக்கின்றோம். அங்கே துக்கத்தின் எந்த ஒரு அடையாளம் கூட இருக்காது. அங்கே ஒருபொழுதும் அழுகை இருக்காது. ஆகையினால் இப்பொழுது மிகவும் அழுதுவிட்டீர்கள், மிகுந்த துக்கத்தை அடைந்து விட்டீர்கள் அதாவது துக்கம் நிறைந்த உலகத்தின் அனேக பிறவிகளை அனுபவித்து விட்டீர்கள், இப்பொழுது அந்த இரவு முடிவடைந்து பகலும் வரும் அல்லவா என்று தந்தை கூறுகின்றார். எனவே, இந்த இரவு அதாவது துக்கத்தின் சந்ததி இப்பொழுது முடிவடைகிறது, இப்பொழுது சுகத்தின் சந்ததி ஆரம்பமாகிறது. எனவே, அந்த சுகம் நிறைந்த உலகத்திற்கான அஸ்திவாரத்தை இங்கே போட வேண்டும். ஆகையினால் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இப்பொழுது அஸ்திவாரம் போட்டால் போட்டது தான், போடவில்லை என்றால் பிறகு, சதா காலத்திற்காக அந்த சுகத்தை பிராப்தியாக அடைவதிliருந்து வஞ்சிக்கப்பட்டவர்களாக ஆகி விடுவீர்கள். மனிதப்பிறவி மிகவும் அரிதானது என்று பாடப்பட்டு இருக்கிறது. அது எந்தப் பிறவிக்காக பாடப்பட்டு இருக்கிறது? இந்தப் பிறவிக்காக. ஏனெனில், நம்முடைய பிறவிகள் அநேகம் உள்ளன, ஆனால் அனைத்தையும் விட மகத்துவம் இந்தப் பிறவிக்கே உள்ளது. ஏனெனில், இப்பொழுது நாம் நம்முடைய உயர்ந்த சாந்தியின் அஸ்திவாரத்தைப் போட்டுக் கொண்டு இருக்கின்றோம்.



    மனிதப்பிறவி 84 லட்சப் பிறவிகளுக்குப் பிறகு கிடைக்கிறது என்று சிலர் புரிந்திருக்கின்றனர் ஆகையினால், இந்த மனிதப்பிறவி மிகவும் அரிதானது, இந்த 84 லட்சப் பிறவிகளுக்குப் பிறகு தான் ஒரு சுகமான பிறவி கிடைக்கின்றது என்று நினைக்கின்றனர். ஆனால், அவ்வாறு இருந்ததென்றால் அனைத்து மனிதர்களும் சுகம் நிறைந்தவர்களாக இருந்திட வேண்டும். பிறகு, இவ்வளவு துக்கத்தை ஏன் அனுபவிக்கின்றனர்? மனிதர்கள் மனிதப் பிறவிகளில் மட்டும் பிறவிகளை எடுத்து துக்கம், சுகம் மற்றும் கர்மங்களின் கணக்கை அனுபவிக்க வேண்டும். மற்றபடி, மனிதர்கள் எந்த மிருகம், பறவை, விலங்கு அல்லது மரம் போன்றவையாக பிறக்கின்றார்கள் என்பது கிடையாது. மனிதர்கள் தங்களது கர்மத்தின் கணக்கை மனிதப் பிறவியின் மூலமே வேண்டும் என்ற இந்த அனைத்து விசயங்களும் இப்பொழுது புத்தியில் உள்ளன. மேலும், மனிதர்கள் அதிகத்திலும் அதிகமாக 84 பிறவிகள் எடுக்கின்றனர் என்பதையும் அறிந்திருக்கிறீர்கள். மற்றபடி, எவ்வளவுக் கெவ்வளவு பின்னால் வருகின்றனரோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களுடைய பிறவிகள் கூட குறைவாக இருக்கும். இந்த அனைத்து கணக்குகளும் இப்பொழுது புத்தியில் உள்ளன. அந்த கணக்கின் அனுசாரம் இப்பொழுது இது நம்முடைய கடைசி பிறவி யாகும், இதில் இப்பொழுது நாம் புதிய சந்ததி அதாவது சுகம் நிறைந்த அநேக பிறவிகளின் பிராப்தியை உருவாக்க முடியும் என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். ஆகையினால், இந்தப் பிறவி அனைத்தையும் விட மேலானது என்ற மகிமை இந்தப் பிறவிக்கு உள்ளது. ஏனெனில், இதில் நாம் உத்தமமானவர் ஆக முடியும். எனவே, இந்தப் பிறவி, மிகவும் பாதுகாப்பதற்கான மற்றும் கவனம் கொடுப்பதற்கான பிறவியாகும்.



    பரமாத்மா வந்து நம்மை உயர்ந்தவர்களாக ஆக்குவதற்கான சக்தியை நமக்குக் கொடுக்கும் நேரம் இதுவே ஆகும். எனவே, அவரிடமிருந்து இப்பொழுது சக்தி கிடைத்துக் கொண்டு இருக்கிறது எனில், பெற்று தான் ஆக வேண்டும். இந்தப் பிறவியில் நாம் தானாகவே உயர்ந்தவர்கள் ஆகிவிடுவோம் என்பது கிடையாது. இல்லை. ஆக்கக்கூடியவர் எப்பொழுது வந்திருக்கின்றாரோ அப்பொழுது அவர் மூலம் நாம் உருவாக வேண்டும். எவ்வாறு ஆக வேண்டும்? அவருடைய கட்டளை அதாவது அவருடைய ஆக்ஞை மற்றும் வழி என்ன கிடைத்துக் கொண்டு இருக்கின்றதோ அதைப் பெற்று நாம் உருவாக வேண்டும். இப்பொழுது அவருடைய வழி மற்றும் டைரக்ஷன் என்ன என்பது நல்ல முறையில் புத்தியில் உள்ளது அல்லவா? தூய்மையாக இருங்கள் மற்றும் யோகியாக இருங்கள். என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் தூய்மையாக இருங்கள். எனவே, இந்த விசயத்தை தன்னுடைய புத்தியில் நல்ல முறையில் வைத்து, அவரது கட்டளைப்படி தன்னை நடத்த வேண்டும். அப்பொழுதே தன்னுடைய சௌபாக்கியத்தை உயர்ந்ததாக ஆக்க முடியும் அதாவது அந்த சதா சுகம் நிறைந்த உலகத்தின் சுகத்தை அடைய முடியும். இவை அனைத்தும் கற்பனைகள் என்று நீங்கள் புரிந்து கொள்ளவில்லை அல்லவா! அத்தகைய எண்ணம் வருவதில்லை தானே! ஏன் கற்பனை என்று புரிந்துகொள்ள வேண்டும்? இது துக்கம் நிறைந்த உலகம் என்பதை நாம் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். இது கற்பனை அல்ல, இது நடை முறையில் (பிராக்டிகல்) உள்ளது. எனவே, அவசியம் சுகம் நிறைந்த உலகம் கூட நடைமுறையில் இருந்திட வேண்டும். அது இப்பொழுது இல்லை ஆனால், இருந்தாக வேண்டும் அல்லவா. இந்த உலகம் சதா துக்கம் நிறைந்தது மட்டும் தானா? என்பது கிடையாது. இதில் சுகம் மற்றும் துக்கம் ஆகிய இரண்டுமே உள்ளன. ஆனால், சுகத்திற்கான நேரம் கூட உள்ளது. இப்பொழுது என்ன சுகம் உள்ளதோ அதுவே சுகம், அதுவே சொர்க்கம் என்று கூற முடியாது. அவ்வாறே சுகமும் துக்கமும் உள்ளது என்பதும் கிடையாது. இப்பொழுது உள்ள சுகத்தை சுகம் என்று கூற முடியாது. அந்த சுகம் என்ன இருந்ததோ, அதில் நாம் சதா சுகம் நிறைந்தவர்களாக இருந்தோம், அந்த சுகமே தனிப்பட்டது. ஆகையினால், சுகம் என்று அதையே கூறுவார்கள். இன்று கற்பனை என்று ஏன் புரிந்திருக்கின்றனர்? ஏனெனில், இன்று அது இல்லவே இல்லை. ஆனால், துக்கம் நிறைந்த உலகம் இருக்கிறது என்றால் அவசியம் சுகம் நிறைந்த உலகமும் இருந்தாக வேண்டும் என்பதை தன்னுடைய விவேகம் மற்றும் இந்த ஞானத்தின் சக்தி மூலம் புரிந்திருக்கிறோம். துக்கம் வந்தாலும் நீங்கள் நான் சுகமாக இருக்கிறேன் என்று புரிந்து கொள்ளுங்கள் என்று சிலர் வழி சொல்கின்றனர் ஆகையினால், சுகத்திற்கான ஆசை அல்லது விருப்பம் வைக்க வேண்டாம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆசையென்றாலே என்னவென்று அறியாதவர்; ஆக வேண்டும். அதனுடைய ஆசை என்ன வைப்பது? என்ன நடை பெறுகிறதோ அதில் தான் சுகம் இருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள். பிறகு, நோய் வந்தாலும், அகால மரணம் ஏற்பட்டாலும், எந்த ஒரு அத்தகைய விசயம் வந்தாலும் நீங்கள் தன்னை நான் சுகமாக இருக்கிறேன் என்று புரிந்துகொள்ளுங்கள். இது தன்னால் கற்பனை செய்யப்பட்ட சுகம் ஆகிவிட்டது, இதை பிராக்டிகல் (நடைமுறை) என்று கூறமுடியாது. எவ்வாறு துக்கம் பிராக்டிகலாக உள்ளது, சில துக்கத்தின் விசயங்கள் பிராக்டிகல் வருகின்றன. அவ்வாறே சுகமும் கூட பிராக்டிகல் இருந்திட வேண்டும். எனவே, தற்போதைய சமயத்தில் அந்த சுகத்தின் உலகம் வரவேண்டும். ஆனால் அதற்கான அஸ்திவாரம் இப்பொழுது போடப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதற்காக நாம் இப்பொழுது தன்னுடைய கர்மங்களை சிரேஷ்டம் (உயர்ந்ததாக) ஆக்க வேண்டும். ஏனெனில், இது கர்மக்ஷேத்திரம் ஆகும், கர்ம பூமி ஆகும். இதில் என்ன விதைப்போமோ அதற்கான பலனையே அடைவோம். இது கூட இதன் நியமம் ஆகும். இந்த சட்டத்தை நான் கூட உடைக்க முடியாது என்ற தந்தை கூறுகின்றார். நான் உலகத்தின் சர்வ சக்திவானாக இருக்கின்றேன், ஆனால், இதன் அர்த்தம், நான் விரும்பினால் ஆகாயத்தை கீழே வரச்செய்வேன், பூமியை மேலே போகச்செய்வேன் என்பது கிடையாது. பகவான் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும், அவர் பிணத்தைக் கூட உயிர்ப்பிக்க முடியும் என்று அவர்கள் புரிந்திருக்கின்றனர். ஆனால், பகவான் அல்லது சக்தி என்பதன் அர்த்தம் அவர் பிணத்தை உயிர்ப்பிக்க முடியும் என்பது கிடையாது. ஆத்மா சரீரத்தை விட்டு தான் ஆக வேண்டும், அதற்கான விசயமே கிடையாது. ஒருவேளை ஒருவரை உயிர்ப்பித்தேன் என்றால் பிறகு, மரணம் அடையமாட்டாரா என்ன? மீண்டும் பிணம் ஆகிவிடுவார்;. எனவே, ஒவ்வொரு பொருளினுடைய நியமம் என்ன உள்ளதோ, அதன்படியே நடைபெறும், ஆகையினால், இதில் எந்த சக்தியையும் காண்பிப்பதற்கான விசயம் கிடையாது.



    இந்த 5 தத்துவங்கள் என்ன உள்ளனவோ, அவற்றில் ஒவ்வொரு தத்துவத்திற்கும் அதனதன் நியமம் உள்ளது. அவை கூட தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் இரும்பு யுகத்தின் அனுசாரம் தன்னுடைய நிலைகளை அடைகின்றன. பூகம்பம் ஏற்படுகிறது, வெள்ளம் ஏற்படுகிறது, புயல் வருகிறது, இவை அனைத்தும் ஏற்படுகிறது, இவை கூட இப்பொழுது சீர்கெட்டு தமோபிரதானம் ஆகிவிட்டன. ஒவ்வொரு பொருளிலும் இப்பொழுது தமோபிரதானதன்மை உள்ளது. இப்பொழுது ஒவ்வொரு பொருளும் கெட்டுப்போய் கிடக்கிறது, இப்பொழுது நான் வந்திருக்கின்றேன், ஒவ்வொரு பொருளையும் மாற்றுகின்றேன், அதற்காக நான் முதலில் மனித ஆத்மாக்களை சீர்திருத்துகின்றேன், அதன் மூலம் அனைத்துப் பொருட்களும் மாறிவிடுகின்றன என்ற இந்த அனைத்து இரகசியங்களையும் தந்தை தான் புரியவைக்கின்றார். பிறகு, உலகம் எப்பொழுது சீர்திருந்தியிருக்கிறதோ, அப்பொழுது அதில் சதா சுகம் இருக்கும். பிறகு, எந்த பொருளும் ஒன்றுக்கொன்று துக்கம் கொடுக்காது. இப்பொழுது அனைத்துப் பொருட்களின் மூலம் துக்கம் கிடைக்கிறது. எனவே, இந்த அனைத்து விசயங்களையும் புரிந்து கொள்வது மற்றும் எவ்விதத்தில் சிருஷ்டியினுடைய அதாவது இந்த உலகத்தினுடைய சக்கரம் சுழல்கிறது என்பதை அறிந்து கொள்வது - இதன் பெயரே ஞானம் ஆகும். இதனுடைய ஞானக்கடலாக நான் இருக்கின்றேன், என்னிடம் இதனுடைய முழு ஞானம் உள்ளது. இந்த கர்மங்களின் கணக்கு எவ்வாறு செயல்படுகிறது, எவ்வாறு வரிசைக்கிரமமாக வருகின்றனர் இந்த அனைத்து விசயங்களையும் நான் அறிந்திருக்கின்றேன். ஆகையினால் ஞானத்தை எந்த மனிதரும் சரியான முறையில் புரிந்து கொள்ள முடியாது என்று கூறுகின்றனர் ஏனெனில், மனிதர்கள் அனைவரும் இந்த சக்கரத்தில் வரக்கூடியவர்கள் இல்லையா? எனவே, யார்; சக்கரத்தில் வருபவர்களோ, அவர்கள் இந்த விசயங்களை அறிந்துகொள்ள முடியாது, யார் சக்கரத்திலிருந்து வெளியில் இருக்கின்றாரோ, அவரிடம் இந்த அனைத்து ஞானமும் உள்ளது. எனவே, தந்தை கூறுகின்றார் – நானே வந்து எடுத்துக் கூறுகின்றேன், ஏனெனில், அந்த ஞானம் என்னிடம் தான் உள்ளது. மற்ற அனைவரும் மறந்து விடுகின்றனர். எனவே, அனைவருக்கும் சக்தி கொடுப்பவர் கூட நான் ஆவேன், என்னிடம் தான் அந்த சக்தி உள்ளது. மற்ற அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்தில் வந்து தன்னுடைய சக்திகளை இழந்து விடுகின்றனர். எனவே, தன்னுடைய சக்தியைக் கொடுப்பதற்காக நான் வருகின்றேன். இவை வெளிப்படையான விசயங்கள் ஆகும், இதில் குழப்பத்திற்கான விசயமே இல்லை. ஆகையினால் என்னை பரம ஆத்மா, சர்வ சக்திவான், அனைத்தும் அறிந்தவர், ஞானக்கடல், என்று மகிமை செய்கின்றனர். இந்த என்னுடைய மகிமை பெயரளவில் ஒன்றும் பாடப்படவில்லை, நான் காரியம் செய்திருக்கின்றேன் மற்றும் என்னுடைய கடமைகள் சில உள்ளன, நான் மிக உயர்ந்த காரியம் இங்கே செய்திருக்கின்றேன், ஆகையினாலேயே மகிமை உள்ளது. மனிதர்களுக்குக் கூட ஏன் மகிமை கிடைக்கின்றது? காந்திஜியைப் பற்றி, அவர் மிக நல்ல மனிதராக இருந்தார், உயர்ந்தவராக இருந்தார் என்று கூறுகின்றனர். உயர்ந்தவர் என்றால் பெரியதிலும் பெரியதாக இருந்தார் என்று அர்த்தம் கிடையாது. அப்படி பெரியவர் என்பது கிடையாது அல்லவா? பெரியவர் என்றால் தன்னுடைய செயல்களில் பெரியவராக (உயா;ந்தவர்) இருந்தார். அவர் நல்ல செயல்களைச் செய்தார். ஆகையினால், அவரை அனைவரும் நினைவு செய்கின்றனர் அவருடைய மகிமையை அனைவரும் பாடுகின்றனர். மனிதருடைய வரலாற்றிலும் கூட, இன்னார் இந்த நல்ல காரியம் செய்தார் போன்ற விசயங்கள் என்ன வருகின்றனவோ அதன் அனுசாரம் பிறகு அவர்களுக்கு மகிமை பாடப்படுகின்றது. பரமாத்மாவிற்கும் கூட இவ்வளவு மகிமை உள்ளது என்றால், அவரும் கூட நமக்காக ஏதாவது காரியம் செய்திருப்பார் அல்லவா. மற்றபடி, அவர் உயர்ந்த இடத்தில் இருக்கின்றார், அவருடைய சக்தி இயங்கிக் கொண்டு இருக்கின்றது அல்லது அவருடைய இந்த அனைத்து காரியங்களும் நடந்து கொண்டு இருக்கின்றன என்பது கிடையாது. அவர் வந்து ஏதோ செய்திருக்கின்றார். மனிதர்களை அவ்வளவு உயர்த்தி இருக்கின்றார் மற்றும் இந்த வழியில் உயர்த்தி இருக்கின்றார், ஆகையினால், அவருக்கு மகிமை உள்ளது. எனவே, இப்பொழுது பரமாத்மாவின் மகிமை மற்றும் பரமாத்மாவின் காரியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வாறு தர்ம பிதாக்கள் கூட யாரெல்லாம் வந்திருக்கின்றனரோ, அவர்களுடைய மகிமையும் பாடப்பட்டிருக்கிறது. குருநானக் தேவ், கிறிஸ்து, புத்தர் போன்றவர்கள் கூட அவரை மேலே நோக்கி சமிக்ஞை (கடவுளுக்காக) காண்பித்திருக்கின்றனர் அல்லவா! இவை அனைத்தும் தெளிவான விசயங்கள் ஆகும். இவற்றைப் புரிந்து கொண்டு முயற்சி செய்ய வேண்டும். மேலும், என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் தனது கர்மங்களை நல்லதாக, தூய்மையானதாக ஆக்குங்கள், அப்பொழுது அதன் மூலம் உங்களுடைய சொர்க்கத்தின் அதிகாரம் உங்களுக்குப் பிராப்தியாகக் கிடைக்கும் என்று தந்தை கட்டளை கொடுக்கின்றார். நீங்கள் கூட கர்மம் செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய அந்த கர்மங்கள் தவறானதாக ஆகிவிடுகின்றன. அதன் மூலம் உங்களுடைய துக்கம் அதிகரிக்கின்றது. ஆகையினால், இப்பொழுது புரிந்து கொண்டு செய்யுங்கள், நான் என்ன ஞானம் கொடுக்கின்றேனோ, அதைக் கொண்டு நல்ல முறையில் செய்யுங்கள், என்னுடைய வழிகாட்டுதலின்படி நடங்கள் என்று தந்தை கூறுகின்றார்;. என்னுடைய வழிப்படி நடந்தீர்கள் என்றால் உங்களுடைய செயல்கள் சரியானதாக இருக்கும் மற்றும் அதன் ஆதாரத்தினால் நீங்கள் சுகம் நிறைந்தவா;களாக இருப்பீர்கள். தன்னுடைய செயல்கள் மூலமாகவே நல்ல நிலையும், கீழான நிலையும் ஏற்படுகின்றது. அவற்றை நாம் என்னவாக ஆக்குவது, எப்படி ஆக்குவது என்பதைப் பற்றிய அறிவு நமக்கு இருக்க வேண்டும். அல்லவா! இப்பொழுது ஞானம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார், அதன்படி நடக்க வேண்டும். இந்த விசயங்களைப் புரிந்து கொண்டு தன்னுடைய முயற்சியை செய்ய வேண்டும். நல்லது.



    பாருங்கள், எவ்வளவு எளிமையான, சகஜமான விசயம் ஆகும்! இதற்காக மனிதர்கள் எவ்வளவு வேதங்கள், சாஸ்திரங்கள், கிரந்தம், புராணங்கள் மற்றும் எவ்வளவு ஹடயோகம், பிரணாயாமம் போன்றவற்றை செய்கின்றனர். இந்த அனைத்து விசயங்களையும் தெளிவாக்கி தந்தை புரிய வைக்கின்றார். கர்மம் செய்து கொண்டு தான் இருக்க வேண்டும், ஆனால், கர்மத்தை மட்டும் சீர்திருத்திக் கொண்டே செல்லுங்கள். அதை எவ்வாறு சீர்திருத்துவது? அதைப் புரியவைக்கின்றார். அதற்காக நீங்கள் வித்வான், பண்டிதர் அல்லது ஆச்சாரியர் ஆவதற்கான விசயமே கிடையாது. நீங்கள் தன்னுடைய கர்மத்தைத் தூய்மையானதாக ஆக்க வேண்டும். தூய்மை என்றால் என்ன? நீங்கள் என்னுடைய நினைவு இல்லாமல் தூய்மை ஆகவே முடியாது என்று அவர் தெளிவாகப் புரிய வைக்கின்றார். நீங்கள் எந்த தேவதையையும் கூட நினைவு செய்யுங்கள், எவருடைய நினைவின் மூலமும் நீங்கள் தூய்மை ஆகமாட்டீர்கள். பாவங்களை எரிப்பதற்கான சக்தி என்னிடம் உள்ளது. ஆகையினால் எதுவரை என்னுடன் தொடர்பு இல்லையோ, அதுவரை தூய்மை ஆகமுடியாது என்று தந்தை கூறுகின்றார். எவ்வாறு மின்விளக்குகளின் தொடர்பு மெயின் பவர் ஹவுஸோடு உள்ளது அல்லவா? ஒருவேளை, அங்கிருந்து தொடர்பு இல்லை என்றால் விளக்கில் ஒளி வராது. அந்த சக்தி வராது. இவ்விதமாக உங்களுடைய தொடர்பு என்னுடன் இருக்க வேண்டும், நான் மெயின் பவர் ஹவுஸாக இருக்கின்றேன். அவருடன் தொடர்பு இருக்க வேண்டும் அல்லவா? ஒருவேளை, அவருடன் தொடர்பு இல்லை என்றால், உங்களுக்கு சக்தி கிடைக்காது மற்றும் சக்தி கிடைக்கவில்லை என்றால் பாவம் எரிந்து போகாது. பாவம் எரிந்து போகவில்லை என்றால் நீங்கள் முன்னேற முடியாது. ஆகையினால், என் ஒருவருடன் தொடர்பை இணைத்துக் கொள்ளுங்கள், நான்; இல்லாமல் கதி, சத்கதி ஏற்பட முடியாது என்று கூறுகின்றார்;. நல்லது.



    இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஓம் சாந்தி.



    வரதானம்:

    தன்னுடைய முகம் மற்றும் நடத்தை மூலம் சத்தியத்தினுடைய பண்பாட்டை அனுபவம் செய்விக்கக் கூடிய மகான் ஆத்மா ஆவீர்களாக.



    யாரிடம் சத்தியத்தின் சக்தி உள்ளதோ அவர்களே மகான் ஆத்மாக்கள் ஆவார்கள். ஆனால், சத்தியத்தின் கூடவே பண்பாடும் அவசியம் இருக்க வேண்டும். அத்தகைய சத்தியம் என்ற பண்பாடுடைய மகான் ஆத்மாக்களின் பேச்சு, பார்வை, நடத்தை, உண்பது, குடிப்பது, எழுவது, அமர்வது போன்ற ஒவ்வொரு கர்மத்திலும் பண்பாடு தானாகவே தென்படும். ஒருவேளை, பண்பாடு இல்லை என்றால் சத்தியம் என்பதும் இல்லை. சத்தியம் ஒருபொழுதும் நிரூபணம் செய்வதால் நிரூபணம் ஆவதில்லை. அதற்கு வெற்றி கிடைப்பதற்கான சித்தி பிராப்தியாகக் கிடைத்துள்ளது. சத்தியம் என்ற சூரியனை எதுவும் மறைக்க இயலாது.



    சுலோகன்:

    பணிவை தனது கவசம் ஆக்கிக் கொண்டீர்கள் என்றால், சதா பாதுகாப்பாக இருப்பீர்கள்.



    ***OM SHANTI***