BK Murli 5 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 5 July 2017 Tamil

    05.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! அனைத்து தொடர்புகளையும் விட்டுவிட்டு ஒரு பரமாத்மாவாகிய என்னிடம் யோகம் (புத்தியின் தொடர்பு) வைப்பீர்களானால் நீங்கள் எனது வசிப்பிடத்திற்கு (சாந்திதாமம்) வந்து விடுவீர்கள். அந்த் மதி ஸோ கதி ஆகி விடும்.



    கேள்வி:

    யார் அமைதியான நிலைக்குச் செல்ல விரும்புகின்றனரோ, அவர்களுக்கு எது பிடிக்காது?



    பதில்:

    அவர்களுக்கு கடிகார ஒலியும் கூடப் பிடிக்காது. ஏனென்றால் சுயதேசத்தில் (நிராகாரி உலகம்) எந்த ஒரு சப்தமும் இருக்காது. அதனால் நீங்கள் சப்தத்திற்கு அப்பாற்பட்டுச் செல்வதற்கான புருஷார்த்தம் செய்கிறீர்கள். நீங்கள் அசரீரி ஆகி தங்களின் சுயதர்மத்தில் நிலைத்திருக்க வேண்டும். பாபாவின் தேசத்தை பாபாவையும் சேர்த்து நினைவு செய்ய வேண்டும்.



    பாடல்:

    பக்தர்களின் புகாரைக் கேளுங்கள்.....



    ஓம் சாந்தி.

    பகவான் சொல்கிறார், இது யோக ஆசிரமம். நீங்கள் இங்கே யோக நிலையின் மூலம் மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காக அமர்ந்திருக்கிறீர்கள் - இந்த பரமாத்மா, ஆத்மாக்களாகிய உங்களோடு இந்த (பிரம்மபாபாவின்) உறுப்புகள் மூலமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். ஆத்மாக்கள் நீங்கள் இப்போது யாருடைய நினைவில் அமர்ந்திருக்கிறீர்கள்? ஆத்மா சொல்கிறது, அகம் ஆத்மா தத் (அதுவே) த்வம் (நீ), ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் அந்தப் பரமபிதா பரமாத்மாவின் நினைவில் அமர்ந்திருக்கிறோம். இந்த யோகத்தை யார் கற்பித்தார்? பகவான் சொல்கிறார், நான் அனைத்து ஆத்மாக்களின் தந்தை அல்லது ஃபாதர். நான் இந்த சரீரத்தின் மூலம் உங்களுக்கு யோகம் (நினைவு யாத்திரை) கற்பிப்பதற்காக ஆசிரியர் ஆகியிருக்கிறேன். இதை சுலபமாகப் புரிய வைக்கிறார், சொல்கிறார், எப்போதெல்லாம் அதிகமாக தர்மத்திற்கு இழிவு ஏற்படுகிறதோ, அப்போது நான் வருகிறேன். இது முந்தைய கல்பத்தின் போது கூறப்பட்ட அதே மகாவாக்கியம் - மிக சாதாரண சரீரத்தின் மூலமாக ரிப்பீட் ஆகிக் கொண்டிருக்கிறது. சொல்கிறார், கல்பத்திற்கு முன்பும் கூட இதே மகாவாக்கியத்தைச் சொல்லியிருக்கிறேன். அதுவே கீதையாக உருவாகியுள்ளது. ஆக, எப்போது தர்மத்திற்கு இழிவு ஏற்படுகிறதோ, அல்லது அநேக தர்மங்கள் வந்து இருந்து விடுகின்றனவோ, மேலும் தேவதா தர்மத்தின் பெயர் முற்றிலுமாக இல்லாமல் அழிந்து விடுகின்றதோ, அப்போது தேவதா தர்மத்தினர் தங்களை இந்து எனச் சொல்லிக்கொள்கின்றனர். தேவதைகளுக்குப் பூஜை செய்கின்றனர், ஆனால் தங்களை இந்து எனச் சொல்க்

    கொள்கின்றனர். எப்படி தேவதா தர்மத்திற்கு பதில் இந்து தர்மம் என்று ஆகி விடுகிறது, இது தர்மத்தின் இழிவு (நிந்தனை) எனச் சொல்லப்படுகின்றது. எப்போது அந்த ஒரு தெய்வீக தர்மத்தின் பெயர் அடையாளம் மறைந்து விடுகிறதோ, அப்போது அதற்கு பதிலாக அநேக தர்மங்கள், மடங்கள் வெளிப்படுகின்றன. இது அதே கல்பத்திற்கு முந்தைய கீதை ரிப்பீட் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த பகவான் வாக்கை வேறு யாரும் சொல்ல முடியாது. அவரே வந்து மீண்டும் அதே கீதையின் மகாவாக்கியத்தை ரிப்பீட் செய்து கொண்டிருக்கிறார். இந்த மகாவாக்கியங்கள் வேறு எந்த சாஸ்திரத்திலும் கிடையாது. கீதையில் பகவான் வாக்கு என்பது உள்ளது. பகவான் தாமே புரிய வைக்கிறார். அவர் சொல்கிறார், எப்போது அநேக தர்மங்கள் உருவாகி விடுகின்றனவோ, கலியுகத்தின் கடைசியும் வந்து சேர்கிறதோ, அப்போது கல்பத்தின் சங்கம யுகத்தில் நான் வருகிறேன். ஏனென்றால் கலியுகம் தமோபிரதானம், சத்யுகம் சதோபிரதானம் எனச் சொல்லப்படுகின்றது. அங்கே பரமபிதா பரமாத்மாவின் காட் காடெஸ் இராஜ்யம் அதாவது தேவி தேவதாக்களின் இராஜ்யம் நடைபெறுகின்றது. அதுவும் இதே (உலக) மேடையில் நடைபெறுகின்றது. வைகுண்டம் என்பது ஏதோ வேறோர் இடத்தில் இருக்கும் என்பதில்லை. இதே பாரதத்தில் தேவி- தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. அது இப்போது மறைந்து விட்டுள்ளது. பராமத்மா பற்றிச் சொல்கின்றனர், கடவுள் ஞானம் நிறைந்தவர், அவர் மட்டுமே ஞானக்கடலாக, ஆனந்த கடலாக, சுகத்தின் கடலாக இருப்பவர், அவரைத் தவிர வேறு யாரிடமும் இறைஞானம் கிடையாது என்று. அப்படியானால் மற்ற யாரையாவது ஞானி என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர் சொல்கிறார், இந்த ஞானத்தைக் கொடுப்பதற்காக நானே வரவேண்டி உள்ளது. எது வரை அவர் தாமே வந்து ஞானத்தைக் கொடுக்கவில்லையோ, அது வரை எவரும் ஞானம் நிறைந்தவராக ஆக முடியாது. அந்த இறைஞானம் தான் தத்துவம் (ஃபிலாஸஃபி) எனச் சொல்லப்படுகின்றது. அதன் மூலம் ஆத்மாவைத் தூய்மைப் படுத்துகிறார்.



    இப்போது கேள்வி எழுகிறது - நீங்கள் இங்கே எதற்காக வருகிறீர்கள்? நீங்கள் கல்பத்திற்கு முன் போலவே மீண்டும் இறைவனிடம் இருந்து இறை ஞானம் பெற்றுப் தூய்மையாவதற்காக வந்திருக்கிறீர்கள். இந்த ஞானத்தைப் பெறுவதற்காக இந்த இறைப்பள்ளியில் சேர வேண்டும். வேறு யாரும் இறை ஞானத்தைக் கொடுக்க முடியாது. அவர்கள் சொல்கின்றனர், நம் அனைவரிடமும் இறை ஞானம் உள்ளது என்று. எந்த ஞானம்? ஈஸ்வரன் சர்வவியாபி எனச் சொல்லிவிடுகின்றனர். ஆனால் பரமாத்மா சொல்கிறார், இது பொய்யான ஞானம். நானோ சர்வவியாபி அல்ல. நானோ யாராக இருக்கிறேன், எப்படி இருக்கிறேன் என்று குழந்தைகளாகிய உங்கள் முன்னிலையில் வெளிப் படுத்தியுள்ளேன். எது வரை நான் எனது ஞானத்தை நானே வந்து சொல்லவில்லையோ, அது வரை யாராலும் என்னை அறிந்து கொள்ளவும் முடியாது, யாரும் என்னிடம் வந்து சேரவும் முடியாது. அதனால் நான் வர வேண்டி உள்ளது. மேலும் நான் வருவது கல்பத்தின் சங்கம யுகத்தில், அவ்வளவு தான். மேலும் நான் எப்போது வருகிறேனோ, அப்போது இந்த ஞானம் தரும் தத்துவஞானிகள் (டாக்டர் ஆஃப் ஃபிலாஸஃபி) சாது மகாத்மாக்கள் அநேகர் உள்ளனர். அவர்களும் இதே தவறான ஞானத்தைத் தருகின்றனர், அதாவது நாம் அனைவரும் பரமாத்மா தான். இப்போது ஒரு புறம் சொல்கின்றனர், பரமாத்மா ஒருவர் என்பதாக. இன்னொரு புறம் அவர்களின் அநேக வழிமுறைகள். இப்போது யாரை ஏற்றுக் கொள்ள வேண்டும்? அவர்களுக்கு இறைவனோ வழிமுறை சொல்லவில்லை இல்லையா? ஒரு பக்கம் கடவுளின் ஒரே வழிமுறை, இன்னொரு பக்கம் இவ்வளவு அநேக வழிமுறைகள். அப்போது பரமாத்மா சொல்கிறார், இவ்வளவு அநேக வழிமுறைகளுக்கு முடிவுகட்டி விட்டு ஒரு வழியை மட்டுமே ஸ்தாபனை செய்வதற்காக நான் வரவேண்டி உள்ளது. கல்ப-கல்பத்தின் இந்த எனது திட்டம் ஆரம்பமும் முடிவு இல்லாததாக விதிக்கப்பட்டுள்ளது. பிரம்மாவின் குப்தமான வேஷத்தில், பிரம்மாவின் சரீரத்தில் வந்து சொல்கிறார், நான் அதே கிருஷ்ணபுரியை ஸ்தாபனை செய்கிறேன் - அங்கே புனிதமான காட் காடெஸ் (பகவான் பகவதி) ராஜா ராணி மற்றும் பிரஜைகள் இருப்பார்கள். ஆக, அதை ஸ்தாபனை செய்த பிறகு (இங்கே பிரம்மாவாக இருப்பவர்) கிருஷ்ணரின் ரூபத்தில் அங்கே ஜென்மம் எடுக்கிறார். இதை மிகத் தெளிவாகச் சொல்கிறார், அதாவது குழந்தைகளே, இப்போது அதே கீதையின் எப்பிஸோட் ரிப்பீட் ஆகிக் கொண்டிருக்கிறது. மரணம் முன்னால் உள்ளது. அதனால் அனைத்து தொடர்புகளையும் விட்டுவிட்டு ஒரு பரமாத்மாவாகிய என்னிடம் மட்டுமே யோகம் வைப்பீர்களானால் அந்த் மதி ஸோ கதி ஆகிவிடும். நீங்கள் எனது புரிக்கு (பரந்தாமம்) வந்து விடுவீர்கள். பரமாத்மா இந்த சரீரத்தில் அமர்ந்து தம்முடைய குழந்தைகளாகிய ஆத்மாக்களுக்குச் சொல்கிறார், இனிமையான குழந்தைகளே, நான் எனது துவக்கம் மற்றும் முடிவேயில்லாத திட்டத்தின்படி வந்திருக்கிறேன். இப்போது விநாசம் முன்னால் உள்ளது. அதனால் தந்தையாகிய என்னிடம் யோகம் வையுங்கள் மற்றும் அனைத்து உறவு மற்றும் தொடர்புகளையும் மறந்து விடுங்கள். அதாவது அனைத்து தீபங்களையும் அணைத்து விட்டு ஒரு தீபத்தை ஏற்றி வையுங்கள். அப்போது நான் உங்களைப் பாவங்களில் இருந்து விடுவித்து என்னிடம் அமர்த்தி வைப்பேன். இந்த சரீரத்தின் மூலம் சுயம் பரமாத்மா பேசிக் கொண்டிருக்கிறார். எவ்வளவு சுலபமாகப் புரிய வைக்கிறார்! அவர் சொல்கிறார், வீட்டில் போய் வேண்டுமானால் யோகம் (நினைவின் யாத்திரை) செய்யுங்கள். அனைவருமே திரும்பிச் சென்று தான் ஆக வேண்டும். வயதானவர்கள் மட்டும் செல்வார்கள், குழந்தைகள் இருந்து விடுவார்கள் என்பதில்லை. ஜப்பானில் வெடிகுண்டு போட்ட போது சிறியவர், பெரியவர் அனைவரும், மிருகங்கள், பறவைகள் அனைத்தும் இறந்து போயின. அல்லது முதியவர்கள் மட்டும் இறந்தார்களா? அதுவோ சிறிய ஒத்திகையாக இருந்தது. இப்போதோ அழிவுக்கான ஏற்பாட்டில் அதிக முன்னேற்றம் அடைந்துக் கொண்டிருக்கிறது. பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? வெடிகுண்டுகள் தயாராக உள்ளன. சரித்திரம் அவசியம் ரிப்பீட் ஆகும். ஆகவே நீங்கள் பரமாத்மாவாகிய என்னை நினைவு செய்யுங்கள். அவர் ஒருவரைத் தவிர வேறு யாருடைய நினைவும் வேண்டாம். எப்படி மீராவுக்கு ஒரு கிரிதரன் நினைவு மட்டும் இருந்தது, மற்ற அனைத்து உலக, குல வழக்கங்களையும் விட்டு விட்டார், அதே போல் நீங்கள் பரமாத்மாவாகிய என்னை நினைவு செய்யுங்கள். மற்ற மாமா, சித்தப்பா முதலிய யாருடைய நினைவெல்லாம் வருகிறதோ, அவர்களை சந்நியாசம் செய்யுங்கள். இவை அனைத்தும் கலியுக பந்தனங்கள். நீங்கள் என்னிடம் யோகம் வைப்பதன் மூலம் தான் என்னோடு சந்திக்க முடியும். எப்போது தன்னைக் குழந்தை எனப் புரிந்து கொள்கிறீர்களோ, பாபாவிடம் யோகம் வைக்கிறீர்களோ, அப்போது அந்தக் குஷி வரும். ஆனால் தலை கீழான (ஒழுக்கமற்ற முறையில்) யோகம் வைக்கிறீர்கள் என்றால் அந்தக் குஷி வராது. இங்கே அநேகர் வருகின்றனர். அவர்கள் சொல்கின்றனர், எங்களுக்கு மனம் வசப்படுவதில்லை, அந்த ஆனந்தம் வருவதில்லை. இப்போது ஆனந்தக் கடலாக இருப்பவரோ பரமாத்மா. அவரிடம் யோகம் வைக்கவில்லை என்றால் ஆனந்தம் எப்படி வரும்? கடந்த காலத்தின் கர்மங்களின் அனுசாரம் அனைவருக்கும் அவரவர் புத்தி கிடைத்துள்ளது. இதில் பரமாத்மா என்ன செய்வார்? பரமாத்மாவோ அனைவர்க்கும் ஒன்றாகப் படிப்பு சொல்லித் தருகிறார். சிலரோ இங்கேயே படித்துப் பிறகு மற்றவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கி விடுகின்றனர். சிலரோ முதல் பாடத்திலேயே குழம்பிப் போய் உள்ளனர். ஆக, இதுவும் புத்தியின் வியக்கத் தக்க செயல்பாடாகும். வகுப்பிலும் சிலர் முதலில் நம்பரில் வருகின்றனர், சிலர் ஃபெயிலாகி விடுகின்றனர். ஏன்? ஏனென்றால் புத்தியில் தான் அனைத்து ஆதாரமும் உள்ளது. இதில் பரமாத்மா என்ன செய்வார்? அனைவருக்கும் புத்தியைக் கூர்மையானதாக ஆக்கி விட்டால் அனைவரும் முதல் நம்பரில் வந்து விடுவார்கள்.



    யார் மீதாவது கிரகச்சாரம் பிடித்துள்ளதென்றால் எவ்வளவு தான் மருந்து கொடுத்தாலும் பலன் இருக்காது. எப்போது இறங்குவதற்கான நேரம் வருகிறதோ, அப்போது மண்ணாலும் கூட நோய் சரியாகி விடும். சமயம் வரும்போது இந்த பாயின்ட்டுகள் புத்தியில் டச் ஆகும், இப்போது யாரும் கேட்பதில்லை, இன்னும் சில நாட்கள் போனால் கேட்கத் தொடங்குவார்கள். இதில் நாம் பொறுமையாக இருக்க வேண்டி உள்ளது. பரமாத்மாவின் வருவது, போவது மற்றும் ஞானம் சொல்கின்ற முறையே தனிப்பட்டதாகும்.



    இரண்டாவது முரளி –

    ஓம் சாந்தி.

     கடிகாரத்தின் சப்தம் கூட வேண்டாம். ஏனென்றால் இப்போது நமக்கு வானப்ரஸ்தம், அதாவது சப்தத்திற்கு அப்பாற்பட்ட நிலை. நாம் சப்தத்தைக் கடந்து, ஆத்மாக்கள் வசிக்கும் நிராகாரி உலகத்திற்குச் செல்கிறோம். அங்கே சப்தம் கிடையாது, மிக மேலான அமைதி நிலவுகிறது என்றால் இந்த அமைதி நிலைக்கு அவஸ்தாவில் சென்றடைவதற்கான முயற்சி செய்கிறோம். அதனால் சப்தத்தை விருப்பமில்லை. அந்த சுயதேசத்தில் சப்தம் இருப்பதில்லை. அதனால் வானப்ரஸ்தம், அதாவது சப்தத்தைக் கடந்து செல்ல நாம் முயல்சி செய்கிறோம். வானப்ரஸ்தம் என்பதன் அர்த்தமே சப்தம் இல்லாத அசரீரி தேசத்திற்குச் செல்வது. அங்கே தான் நானும் நீங்களும் மற்றும் முழு உலகத்தின் ஆத்மாக்களும் வாசம் செய்கிறோம். இந்த சாகாரி உலகமோ பாகத்தை நடிப்பதற்கான மேடையாக உள்ளது. மற்றவர்கள் நடிப்பதற்கான பாகம் இல்லாமல் இனிய அமைதியான வீட்டில் போய் வாசம் செய்கின்றனர். இங்கே (சாகார்) மனித சரீரத்தினர் விளையாட்டு நடைபெறுகின்றது. மற்றபடி ஆகாச தத்துவத்தில் ஆத்மாக்களாகிய நமது தேசம் மகதத்துவத்தில் உள்ளது. அது வெகுதூரத்தில் உள்ள தேசம். ஆக, யார் அந்த அமைதி உலகத்துடன் புத்தியின் தொடர்பை வைத்து அமர்கின்றனரோ, அவர்களுக்குக் கடிகாரத்தின் சப்தம் கூடப் பிடிக்காது. இதற்குத் தான் தங்களின் அசல் தர்மத்தில் நிலைப்பது அல்லது அசரீரி ஆகி இருப்பது எனச் சொல்வது. அதாவது தங்களின் பாபாவின் தேசத்தை பாபாவையும் சேர்த்து நினைவு செய்வது. ஏனென்றால் நம்முடைய பாபா அந்த தூர தேசத்தில் வசிப்பவர். அங்கிருந்து வருகிறார், இந்த அன்னிய தேசத்திற்கு அன்னிய தேசத்திற்கு ஏன் வருகிறார்? தன்னுடைய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதற்காக மற்றும் குப்த வேடத்தில் வருகிறார். அவருடைய பார்ட் மறைமுகமானது. எப்படி உங்களுக்கு இந்தப் பழைய சரீரம் உள்ளது, பரமபிதா பரமாத்மா சொல்கிறார், நானும் கூட பழைய சரீரத்தில் இந்தப் பழைய சிருஷ்டியை விநாசம் செய்து புதிய தெய்விக சிருஷ்டியை ஸ்தாபனை செய்வதற்காக வர வேண்டி உள்ளது. எனவே பழைய வீட்டில் யார் வருகிறாரோ, நிச்சயமாக சரீரமும் பழையதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கும் இல்லையா? இங்கே புதிய தெய்விக சரீரம் எங்கிருந்து வரும்? அதனால் அதுவும் கூட இவருடைய (பிரம்மாவின்) பழைய சரீரம். அந்த சரீரத்தின் மூலம் ஸ்ரீகிருஷ்ணரின் இராஜதானியை ஸ்தாபனை செய்கிறார். ஆகவே தான் இவரிடம் யார் வருகிறார்களோ, அவர்களுக்கு முதலில் சாட்சாத்காரமும் சொர்க்கத்தினுடையது தான் கிடைக்கிறது. சொர்க்கத்தின் பால லீலை, ராசலீலை பார்க்கின்றனர், அல்லது விஷ்ணுவின் சாட்சாத்காரம் பார்க்கின்றனர். ஏனென்றால் பரமாத்மாவின் சாட்சாத்காரம் செய்வித்தால், இது என்ன பொருள் என்று புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அந்தத் தந்தை பற்றியோ யாருக்கும் தெரியாது - இவர் தான் பரமாத்மா என்று. பூஜை செய்கின்றனர் என்றாலும் அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. அவர்களோ பரமாத்மா சர்வவியாபி எனச் சொல்கின்றனர் என்றால் அனைவரும் பரமாத்மா ஆகி விட்டனர்! மற்றப்படி சிவலிங்கத்தின் தொழில் பற்றியோ யாருக்கும் தெரியாது - இவர் நம்முடைய பரமாத்மா என்று. அவர் வந்து ஸ்தாபனை, விநாசம், பாலனை செய்வதற்காக மூன்று ரூபங்களை தாரணை செய்கிறார். அவரோ இப்போது வந்து தம்முடைய தொழில் பற்றிச் சொல்கிறார். மேலும் சொல்கிறார், யார் வைகுண்டத்தின் இராஜ பரம்பரையின் வாரிசாக ஆக வேண்டுமோ, இங்கே வந்து என்னுடைய குழந்தை ஆக வேண்டும். நான் அவர்களை சம்பூர்ண நிர்விகாரி ஆக்கி தங்களின் இராஜதானிக்கு அழைத்துச் செல்வேன். இவர் வருவதே அனைத்து அசுத்த ஆத்மாக்களையும் தூய்மைப் படுத்துவதற்காக, இதனால் இயற்கையும் கூட தூய்மையாகி விடுகின்றது. அங்கோ ஆத்மாக்களும் தூய்மையாக இருப்பார்கள் என்றால் ஐந்து தத்துவங்களும் கூட தூய்மையாக இருக்கும். அதுவே தெய்வீக உலகம் என்றால் பிறகு எப்படி இருக்கும்? இச்சமயம் அந்த தேவதா தர்மத்தின் தத்துவ ஞானம் மறைந்து விட்டுள்ளது. தெய்விக உலகமும் அங்கே இருந்தது என்பது யாருக்கும் தெரியாது. மேலே ஆகாயத்தில் எங்கோ தேவதைகள் வசிக்கின்றனர் என அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய சித்திரங்கள் இங்கே உள்ளன. சரித்திரம் இங்கே உள்ளது என்றால் நிச்சயமாக இங்கே இருந்து சென்றிருக்கின்றனர். இந்த உலகமோ சதா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரளயமோ ஒரு போதும் நடைபெறாது. எப்போது விநாசம் நடைபெறுகிறதோ, அப்போது அனைத்து ஆத்மாக்களும் சென்று விடுவார்கள். மற்றப்படி தெய்விக தர்மம் இங்கே ஸ்தாபனை ஆகி விடுகிறது. எப்படி தானியம் இருக்கிறதென்றால் அனைத்துமே உண்ணப் படுவதில்லை. அதில் பெரும் பகுதி உண்ணப்படுகிறது. விதைப்பதற்காகக் கொஞ்சம் சேமித்து வைக்கப் படுகிறது. இல்லையென்றால் விதை எங்கிருந்து வரும்? பிரளயம் ஆகி விட்டால் தானியங்களும் அழிந்து போகும். பிறகு விதைப்பதற்கு தானியம் எங்கிருந்து வரும் - இரண்டாவது உற்பத்தி ஆவதற்கு? ஆக, தானியமும் எப்படி அநாதியாகவே உள்ளதோ, அது போல் மனிதர்களும் உள்ளனர். ஆக, பரமாத்மா எப்படி கொஞ்சம் விதையை மிச்சம் வைத்து மற்ற அனைவரையும் அழைத்துச் செல்கிறாரோ, அவர்கள் மூலமாகப் பிறகு சிருஷ்டியின் வளர்ச்சி நடைபெறுகிறது. பரமாத்மாவும் சொல்கிறார், நான் அநேக தர்மங்களை விநாசம் செய்து ஒரு தர்மத்தை ஸ்தாபனை செய்கிறேன். அப்படி இல்லாமல் நான் பிரளயத்தை உருவாக்கி விடுகிறேன் என்று சொல்லவில்லை. இது அனைவருக்கும் கடைசி ஜென்மம். பிறகு மரண உலகத்தில் யாருக்கும் ஜென்மம் இருக்காது. அனைவரும் சென்று விடுவார்கள். அதில் கொஞ்சம் (விதைகள்) மனிதர்கள் மிஞ்சியிருப்பார்கள். அதிலிருந்து கொஞ்சம்-கொஞ்சமாக அதிகரித்து திரேதாவின் கடைசி வரை 33 கோடி தேவதைகள் இருப்பார்கள். பிறகு மற்ற தர்மங்கள் நம்பர்வார் வந்து செல்வார்கள். அவர்களிலும் அப்படியே மெது-மெதுவாக வளர்ச்சி அடைந்துக் கொண்டே போகும். இந்த டிராமாவின் இரகசியமும் உங்களுக்கு சர்வசக்திவான் பாபா தான் வந்து சொல்கிறார். அதனால் இது இறைஞானம் எனச் சொல்லப்படுகிறது. வேறு எங்குமே இந்த ஞானம் உங்களுக்குக் கிடைக்காது. எவ்வளவு தான் சுற்றி வந்தாலும் யாருக்கும் இந்த ஞானத்தைப் பற்றித் தெரியாது. அது இந்த ஒரு சமயத்தில் மட்டும் தான் உங்களுக்கு இங்கே கிடைக்கிறது. இங்கே பரமாத்மா தங்களின் தெய்விக வம்சாவளியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். பரமாத்மா சொல்கிறார், என்னுடைய ராயல் (மதிப்பு மிக்க தேவதை) குலத்தில் வர வேண்டுமானால் இந்த உடலை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். அப்போது நான் என்னைப் போலவே உங்களைத் தூய்மைப்படுத்தி வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்வேன். இதையோ அறிவீர்கள், பாபா இப்போது வந்துள்ளார், மீண்டும் கல்பத்திற்குப் பிறகு வருவார். அடிக்கடியோ வர மாட்டார். அவர் சொல்கிறார், குழந்தைகளே, உங்களைத் தூய்மையான, புனிதமானவர்களாக (ஹோ)லி ஆக்குவதற்காக நான் வந்திருக்கிறேன். விகாரமற்றவர்கள் தான் புனிதர்கள் எனச் சொல்லப் படுகிறார்கள். மற்றப்படி இந்த பீடி, மதுபானம் முதலியவற்றைக் குடிக்கிறவர்களைப் புனிதர் எனச் சொல்ல முடியாது. உங்களுக்கோ பாபா குரு ஆகிக் கற்பிக்கவும் செய்கிறார். ஆக, தந்தையாகிப் வளர்க்கவும் (பாலனை) செய்கிறார். உங்களுக்கு இவரிடமிருந்து இரட்டை ஆசிர்வாதம் கிடைக்கிறது -குருவினுடையது மற்றும் தந்தையினுடையது, இருவரின் ஆஸ்தியை நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அந்த சர்வசக்திவான் பாபா இந்த உடலின் மூலமாக உங்களுக்கு ஸ்தூலமாகவும் சூட்சுமமாகவும் பாலனை செய்து கொண்டிருக்கிறார். அதனால் சொல்கிறார், இதனை (சரீரத்தை) ஒப்படைத்து விடுங்கள். அப்போது ஞான அமிர்தத்தினால் தூய்மைப் படுத்தி அழைத்துச் செல்வார். இது உயிருடன் இருந்து கொண்டே இறந்து விடுவது (மர் ஜீவா) எனச் சொல்லப்படும். ஆனால் இதுவோ மிக இனிமையான மரணம் இதனால் நம்முடைய உண்மையான பாபாவின் மடியில் வந்து விடுகிறோம். எவ்வளவு நன்றாக ஒவ்வொன்றையும் புரிய வைக்கிறார்! பிறகும் மன்மனாபவ மத்யாஜீபவ என்று சொல்லி விடுகிறார். நல்லது.



    இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்காக முக்கிய சாரம்:

    1. வைகுண்ட இராஜ்யத்தின் வாரிசு ஆவதற்காக இங்கேயே குழந்தை ஆகி சம்பூர்ண நிர்விகாரி ஆக வேண்டும்.



    2. இராயல் (மதிப்புமிக்க தேவதைகள்) குலத்தில் வர வேண்டுமானால் இந்த சரீரத்தைப் பரமாத்மாவிடம் ஒப்படைத்து விட்டுத் தந்தைக்குச் சமமாகத் தூய்மையாக வேண்டும்.



    வரதான ம் :

    உண்மையான வைஷ்ணவர் ஆகி , தூய்மை தன்மையின் சிரேஷ்டமான நிலையை அனுபவம் செய்யக் கூடிய முழுமையான தூய்மையானவர் ஆகுக !



    சம்பூர்ண தூய்மையின் அர்த்தம் மிக உயர்வானதும் சகஜமானதும் ஆகும். சம்பூர்ண தூய்மையின் அர்த்தமாவது, கனவிலும் கூட அசுத்தமான எண்ணங்கள் மனம் மற்றும் புத்தியைத் தொடக் கூடாது -அப்படிப்பட்டவர் தான் உண்மையான வைஷ்ணவர் எனச் சொல்லப் படுவார். இப்போது நம்பர்வார் முயற்சியாளராக இருக்கலாம். ஆனால் முயற்சி செய்வதின் இலட்சியம் முழுமையான தூய்மை அடைவதாகும். மேலும் இது சகஜமானதும் கூட, ஏனென்றால் நடக்க முடியாததை நடக்கக் கூடியதாக ஆக்குபவராகிய சர்வசக்திவான் தந்தையின் துணை உள்ளது.



    சுலோகன்:

    வலுக்கட்டாயத்துடன் அல்லது கடின உழைப்புக்கு பதிலாக மன மகிழ்ச்சியோடு புருஷார்த்தம் செய்பவர் தான் சகஜயோகி ஆவார்கள்.



    ***OM SHANTI***