BK Murli 8 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 8 July 2017 Tamil

    08.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! இப்பொழுது நீங்கள் தந்தையினுடைய பார்வையினாலே திருப்தி அடைகிறீர்கள். திருப்தி அடைவது என்றால் சொர்க்கத்தின் எஜமானர் ஆவது ஆகும்.



    கேள்வி:

    மற்ற தொடர்பை துண்டித்து ஒருவருடன் தொடர்பை இணைத்துக் கொள்ள வேண்டும் இந்த அறிவுரையை யாரால் அமலில் கொண்டு வர (நடைமுறைப்படுத்த) இயலும்?



    பதில்:

    யாருடைய புத்தியில் இலட்சியம் தெளிவாக உள்ளதோ, அவர்களால் இந்த அறிவுரையை அமலில் கொண்டு வர முடியும். முக்திதாமம் செல்வதே உங்களுடைய இலட்சியம் ஆகும். அதற்காக சரீரத்திலிருந்து கூட புத்தியின் தொடர்பை நீக்க வேண்டும். பேச்சு, செயல்களிருந்தும் கூட கடந்து அமைதியாக இருப்பதற்கான பயிற்சி செய்யுங்கள். ஏனெனில், நீங்கள் அமைதி அதாவது நிர்வாணத்திற்குச் செல்ல வேண்டும்.



    பாடல்:

    விட்டில் பூச்சி ஏன் எரிந்து போகக்கூடாது.....



    ஓம்சாந்தி!

    நாம் யாருடைய பார்வைக்கு எதிரில் அமர்ந்திருக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் தன்னுடைய பரலௌகீக பரமபிதா பரமாத்மாவின் பார்வைக்கு எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள். இந்த பாபாவினுடைய பார்வைக்கு எதிரில் வருவதன் மூலம் நாம் 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின் ஆஸ்தியை அடைகிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எப்பொழுதாவது யாராவது சாது சன்னியாசிகளிடம் செல்லும் பொழுது, இவர் பார்வையாலேயே விடுதலை அடையச் செய்வார் என்று கூறுகின்றனர். இப்பொழுது, பார்வையாலேயே விடுதலை அடைவது என்பதனுடைய அர்த்தத்தை பிராமணர்களாகிய உங்களைத்தவிர வேறு எவரும் புரிந்து கொள்ள முடியாது. பார்வைக்கு எதிரில் இப்பொழுது நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். தந்தையின் கண்களில் குழந்தைகள் இருக்கின்றனர், குழந்தைகளின் கண்களில் தந்தை இருக்கின்றார். குழந்தைகள், தந்தையினுடைய பார்வையிலேயே விடுதலை அடைகின்றனர். தந்தையிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கிறது. நீங்கள் எல்லையற்ற குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் பார்வைக்கு எதிரில் அமா;ந்திருக்கிறீர்கள். இரண்டு வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். என்னை நிரந்தரமாக நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் விடுதலை அடைந்துவிடுவீர்கள், அதாவது, சொர்க்கத்தின் எஜமானர் ஆகிவிடுவீர்கள். ஒரு வினாடியில் பார்வையாலேயே விடுவித்து முக்தி மற்றும் ஜீவன் முக்தியைக் கொடுத்துவிடுகின்றார். அவர் நிராகாரமான பரமபிதா பரமாத்மா ஆவார். இவர்கள், எமது குழந்தைகள் ஆகி இருக்கின்றனர் என்பதை அறிந்திருக்கின்றார். நாம் பரமபிதா பரமாத்மாவின் குழந்தைகள் என்ற உறுதியான நம்பிக்கை யாருக்கு இருக்கின்றதோ, அவர்கள் அவசியம் சொர்க்கத்தின் எஜமானர் ஆகிவிடுவார்கள். பார்வையிலேயே விடுதலையாகவும் வேண்டும் மற்றும் சொர்க்கத்தின் எஜமானராகவும் ஆக வேண்டும். சொர்க்கத்தில் அரசாட்சி நடைபெறுகிறது. இங்கே, அனைவரும் நரகத்தின் எஜமானர்களாக உள்ளனர். அதாவது, நரகத்தின் நிவாசிகளாக உள்ளனர். அதில் கூட வரிசைக்கிரமமான பதவிகள் உள்ளன. இப்பொழுது இராஜ்யம் கிடையாது. ஆனாலும், நாம் ஜெய்ப்பூரின் எஜமானராக இருந்தோம் என்று அவர்கள் உள்ளத்தில் புரிந்திருக்கின்றனர் அல்லவா. ஜெய்ப்பூரின் மகாராஜா, பட்டியாலாவின் மகாராஜா என்று எழுதவும் செய்கின்றனர், சொல்லவும் முடிகிறதல்லவா. அவர்கள் தானும் உயிருடன் வாழ்கிறார்கள், அவர்களுடைய வம்சமும் வாழ்கிறது. இப்பொழுது, அவர்களும் கூட பிரஜைகளில் ஒருவராக ஆகிவிட்டனர். நாம் ஸ்ரீமத்படி மீண்டும் தெய்வீக சுயராஜ்யத்தை ஸ்தாபனை செய்துகொண்டு இருக்கின்றோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இதே பாரதம் பாவனமாக (தூய்மை) இருந்தது, இப்பொழுது தூய்மையற்றதாக ஆகிவிட்டது என்று தந்தை புரிய வைத்திருக்கின்றார். உங்களுக்கு இப்பொழுது, மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது. இப்பொழுது நாம் ஒரு பரமபிதா பரமாத்மாவை நினைவு செய்கின்றோம், மேலும், அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது என்பதை ஆத்மா அறிந்திருக்கிறது. பகவானுடைய மகாவாக்கியமும் கூட - என்னை நினைவு செய்யுங்கள், மற்ற தொடர்பை துண்டித்துவிடுங்கள், தன்னுடைய சரிரத்திலிருந்தும் கூட துண்டித்துவிடுங்கள், அசரீரி ஆகுங்கள் என்று உள்ளது. முதலில், நீங்கள் அசரீரியாக வந்தீர்கள். ஆத்மாக்கள் அனைத்தும் அசரீரியாக இருக்கின்றன. மூலவதனத்தில் அசரீரியாக இருக்கும் காரணத்தினால் சப்தம் இருப்பதில்லை. ஆகையினால், அதை நிர்வாணதாமம் என்று கூறப்படுகிறது. சூட்சுமவதனத்தில், சைகை பாஷை உள்ளது. பேச்சு, சைகை மற்றும் அமைதி. முற்காலத்தில் சைகை நாடகம் கூட இருந்தது. இப்பொழுது, பேசும் படம் ஆகிவிட்டது. குழந்தைகளாகிய உங்களுக்கு அமைதியில் இருப்பதற்குக் கற்றுத்தரப்படுகிறது. நீங்கள் தன்னுடைய சுயதர்மத்தில் நிலைத்துவிடுங்கள். வீட்டை நினைவு செய்யுங்கள். பேசுவதை விட்டுவிடவேண்டும். முணுமுணுக்கவும் கூட கூடாது. உள்ளத்தில், ராம் ராம் என்று கூறுகின்றனர். குழந்தைகளே, இதைக் கூட விட்டுவிடுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகின்றார். நீங்கள் சப்தங்களைக் கடந்து செல்ல வேண்டும். இங்கே இருந்துகொண்டே பேச்சு மற்றும் சைகையைக் கடந்து செல்ல வேண்டும். நாம் முக்திதாமம் செல்ல வேண்டும் என்ற இந்த இலட்சியம் புத்தியில் தெளிவாக உள்ளது. பாபா முக்தி, ஜீவன்முக்தி கொடுக்கின்றர். முதலில் ஆத்மாக்கள் அனைத்தும் அமைதி உலகத்திற்குச் செல்கின்றன. பிறகு, ஒவ்வொருவரும் அவரவர் நடிப்பை நடிப்பதற்காக வர வேண்டும். தேவி-தேவதை தர்மத்தினருடைய நடிப்பு, தனிப்பட்டது, இஸ்லாமிய, புத்த தர்மத்தினருடைய நடிப்பு தனிப்பட்டது. இந்த அனைத்து விசயங்களும் குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளன. தந்தையிடம் இந்த முழு ஞானம் இருப்பதால் உங்களுக்கு முழு ஞானத்தையும் கூறுகின்றார், தனக்குச் சமமாக ஆக்குகின்றார். பிறகு, நீங்கள் பிறரையும் தனக்குச் சமமாக ஆக்குங்கள். ஞானி மற்றும் யோகி ஆகுங்கள். என்ன ஞானம் என்னிடம் உள்ளதோ, அதையே உங்களுக்குக் கொடுக்கின்றேன். ஆத்மா தான் கிரகிக்கின்றது. வரிசைக்கிரமமான முயற்சியின் அனுசாரம் ஞானம் நிறைந்தவர்கள் ஆகின்றார்கள். சிலரோ முழுமையாக ஞானம் நிறைந்தவர்கள் ஆகின்றார்கள். சிலர் குறைவான முயற்சி செய்வதால் அந்தளவிற்கு ஞானம் நிறைந்தவர்கள் ஆவதில்லை. இந்த இலட்சுமி, நாராயணர் பதவி தான் நமது இலட்சியம் ஆகும். இப்பொழுது நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள் ஆகின்றீர்கள். நாம் எங்கிருந்து வந்தோம்? இப்பொழுது எங்கு செல்ல வேண்டும்? இந்த சக்கரம் எவ்வாறு சுழல்கிறது? என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இதில் அனைத்தும் வந்துவிடுகிறது. இவ்வாறு விதையிலிருந்து மரம் வெளிப்படுகிறது, இதனுடைய ஆயுள் எவ்வளவு அதிகமாக உள்ளது! பிறகு, இதை இற்றுப் போன நிலை அடைகிறது என்று கூறப்படுகிறது. நம்மிடம் கூட மரம் இருந்தது. அது முற்றிலுமாக, முழுவதுமாக இற்றுப்போனவுடன் வெட்ட வேண்டியதாகிவிட்டது. ஆலமரத்தின் உதாரணம் கூட உள்ளது. இது கூட வெவ்வேறு தர்மங்களுடைய மரமாக காண்பிக்கப்பட்டுள்ளது. கடைசி வரை கொஞ்சம் கொஞ்சம் பேர் வந்துகொண்டே இருக்கின்றனர். முதலில் வரும் இலைகள் அழகாக இருக்கின்றன, ஏனெனில், சதோபிரதானமாக இருக்கின்றன. பிறகு, ரஜோ, தமோ நிலையை அடைந்துவிடுகின்றன. அரைக் கல்பம் நீங்கள் இராஜ்யம் செய்கிறீர்கள். பிறகு, மெதுவாக கீழே வருகிறீர்கள். இறங்கும் கலை மற்றும் ஏறும் கலை ஏற்படுகின்றது. உடனடியாக ஏறிவிடுகின்றீர்கள். முழு இராஜ்யம் ஸ்தாபனை ஆவதற்கு கொஞ்சம் சமயம் ஆகின்றது.



    நான் தான் சங்கமயுகத்தில் வந்து தெய்வீக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றேன் என்று தந்தை புரியவைக்கின்றார். சூரிய வம்சம் மற்றும் சந்திர வம்சம் இப்பொழுது தான் ஸ்தாபனை ஆகின்றது. இவர்கள் பிறகு புது உலகமான அமரலோகத்தில் வந்து தன்னுடைய அரசாட்சி செய்கின்றனர். இதைத் தான் சங்கமயுகம் என்று கூறப்படுகிறது. வேறு எவரும் சங்கம யுகத்தில் வருவதில்லை, ஒரு தந்தை மட்டும் தான் வருகின்றார். நான் மீண்டும் எப்பொழுது வருகின்றேன் என்ற விசயம் எந்த சாஸ்திரங்களிலும் கிடையாது. இது எவருக்கும் தெரிந்திருக்க முடியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டும் தான் தெரிந்திருக்கிறது. கல்ப கல்பமாக இந்த நடிப்பு நடைபெறுகின்றது. முழு மரமும் பழையதாகிவிடுகிறது. பிறகு, சங்கமயுகத்தில் இதனுடைய அஸ்திவாரம் போடப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இது பதீத உலகம் ஆகும். சத்யுகம் பாவன உலகம் ஆகும். பதீதமானவர்களாகிய எங்களை பாவனமாக்குவதற்காக வாருங்கள் என்று பாடவும் செய்கின்றனர். இப்பொழுது அனைவரும் பாவனமாகிக் கொண்டு இருக்கின்றனர். பிறகு, எப்பொழுது வருவார்களோ, அப்பொழுது பாவனமாகவே இருப்பார்கள். ஆனால், அனைவரும் ஒன்றாக சேர்ந்து வரமாட்டார்கள். தந்தை எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கின்றார்! இப்பொழுது இந்த பிரின்சிபால் (முதல்வர்) இருக்கின்றார், எனில் ஏன் இந்த ஞானத்தை அனைவருக்கும் கொடுக்கக்கூடாது? அப்பொழுது அனைவரும் உலகத்தின் வரலாறு, பூகோளம் என்ன? இது எவ்வாறு திரும்ப நடக்கிறது? என்பதை அறிந்து கொள்வார்கள். கடவுள் ஒருவர் என்பது யாருக்கும் தெரியாது. படைப்பாளர் வேறு எவரும் கிடையாது. மேலே எந்த உலகமும் கிடையாது, கீழே எந்த உலகமும் கிடையாது. ஆகாயம், பாதாளம் என்று என்ன கூறுகிறார்களோ, அவை அனைத்தும் பொய்யே ஆகும். நட்சத்திரங்களுக்கு மேலே கூட உலகம் இருக்கிறது என்று நினைக்கின்றனர். ஆனால், அங்கே யாருடைய இராஜ்யமும் கிடையாது. யார் நல்ல மாணவர்களாக இருக்கிறீர்களோ, அவர்கள் இந்த வரலாறு, பூகோளத்தைப் புரிய வைத்திடுங்கள் என்று பாபா பிரின்சிபால் குழந்தைகளுக்குக் கூறுகின்றார். அரசாங்கத்தையும் கூட அணுகுங்கள். பெரிய பெரிய அதிகாரிகளுக்குப் புரிய வைத்திடுங்கள். ஆனால், சத்யுகத்தில் ஆதி சனாதன தேவி தேவதை தர்மத்தின் இராஜ்யம் நடைபெற்றது, அவர்கள் இந்த இராஜ்யத்தை எவ்வாறு பிராப்தியாக (ஆஸ்தியாக) அடைந்தார்கள் என்பதை மிகுந்த யுக்தியோடு புரிய வைக்க வேண்டும். தேவதைகள் மற்றும் அசுரர்களுடைய யுத்தம் நடைபெற்றது, பிறகு, தேவதைகள் வெற்றி பெற்றனர் என்று சாஸ்திரங்களில் காண்பிக்கப்பட்டுள்ளது. மகாபாரத யுத்தம் என்பது ஒன்று மட்டும் தான் நடைபெறுகிறது. அதற்குப் பிறகு எந்த யுத்தமும் நடைபெறவே இல்லை. பள்ளிகளில் குழந்தைகளுக்கு இந்த ஞானத்தைக் கொடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். ஏதாவது புதிய கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டால் முதலில் இராஜாவிற்குக் காண்பிக்கின்றார்கள். பிறகு, அவர் மூலம் வளர்ச்சி அடைகிறது. ஆத்மாவிற்கு சிருஷ்டிச் சக்கரத்தின் ஆதி, மத்திமம், அந்திமத்தின் ஞானம் கிடைக்கின்றது. இதன் மூலம் 21 பிறவிகளுக்குச் சக்கரவர்த்தி இராஜா ஆகின்றனர். உங்களில் கூட எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் அதிகம் இருக்கின்றனர். பாபா கூறுகின்றார் - மிகவும் நல்லது.



    எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கூட அதிகமானவர்கள் இருந்தனர். ஆனால், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. இங்கே ஒரு வினாடிக்கான விசயம் ஆகும். சத்யுகத்தில் இலட்சுமி, நாராயணருடைய இராஜ்யம் நடைபெற்றது. திரேதாயுகத்தில் இராமர், சீதையின் இராஜ்யம் ஆரம்பமாகிறது. அரைக் கல்பத்திற்குப் பிறகு பக்தி மார்க்கம் ஆரம்பமாகிறது, ஏமாற்றத்தை அடைய வேண்டியதாக உள்ளது. ஓ! இறை தந்தையே! என்று அழைக்கவும் செய்கின்றனர். எனில், அவசியம் அவரிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைத்திட வேண்டும். மனிதர்கள் இறந்த பிறகு அவர்கள் எங்கே சென்றுவிட்டார்கள் என்று கேட்கப்படுகிறது? சொர்க்கம் சென்றுவிட்டார்கள் என்று கூறுகின்றனர். ஆகாயத்தில் சொர்க்கம் இருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர். எவ்வளவு புத்தியற்றவர்களாக ஆகிவிட்டனர்! இது முட்களின் காடு ஆகும். பாரதம் மட்டும் மலர்களின் தோட்டமாக ஆகிறது. இப்பொழுது நீங்கள் மலர் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.



    யாருக்கும் துக்கம் கொடுக்கக்கூடாது என்று தந்தை புரியவைக்கின்றார். துக்கம் கொடுத்தால் துக்கம் அடைந்து இறந்துபோவார்கள், உயர்ந்த பதவியை அடைய முடியாது. சதா சுகத்தின் ஆஸ்தியை அடைவதற்காக நாம் பாபாவிடம் வந்திருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் பிராமணர்கள் ஆகியிருக்கிறீர்கள். பிராமணர்கள் அனைவரையும் விட உயர்ந்தவர்கள் என்று புகழப்படுகின்றனர். பிராமணர்களுடைய அடையாளம் உச்சிக் குடுமி ஆகும். நல்லது, பிராமணர்களின் தந்தை யார்? அவர் நிராகாரமான சிவன் ஆவார். சிவன் பாபா ஆவார் மற்றும் பிரஜாபிதா பிரம்மாவோ சாகாரமானவர் (சரீரமுள்ளவர்) ஆவார். இப்பொழுது சிவபாபாவின் அடையாளமாக என்ன வைப்பது? பரமபிதா பரமாத்மா நட்சத்திரம் போல் இருக்கின்றார். ஆனால், இதை அறியாத காரணத்தினால் பெரிய லிங்கமாக உருவாக்கிவிடுகின்றனர். புள்ளிக்கு எவ்வாறு பூஜை செய்வது? ருத்ர பூஜை கூட நடைபெறுகிறது. ருத்ரன் சிவனை பெரியதாக உருவாக்குகின்றனர் மற்றும் சாலிகிராமங்களை சின்னச்சின்னதாக உருவாக்குகின்றனர். இரு புருவங்களுக்கும் மத்தியில் நட்சத்திரம் போன்று உள்ளது என்றும் கூறுகின்றனர். ஆத்மாவின் காட்சி கிடைக்கின்றது. எப்பொழுது ஆகாயத்தில் நட்சத்திரம் பல துண்டுகளாக உடைகிறதோ, அப்பொழுது அனைத்தும் வெண்மை ஆகிவிடுகிறது. அவ்வாறே ஆத்மாவும் புள்ளியாக இருக்கிறது. ஆத்மா வந்து இவ்வளவு பெரிய சரிரத்தில் பிரவேசம் செய்கிறது. பிறகு, எவ்வளவு வேலை செய்கிறது! இவ்வளவு சிறிய ஆத்மா எப்பொழுது சரிரத்திலிருந்து வெளியேறிவிடுகிறதோ, அப்பொழுது இந்த சரிரத்தால் எந்த வேலையும் செய்ய இயலாது, அவர் இறந்து விட்டார் என்று கூறிவிடுவார்கள். ஒரு சரிரத்தை விடுத்து மற்றொரு சரிரத்தை எடுத்து நடிப்பு நடிக்கின்றார்கள். பிறகு, இதில் அழுவதற்கு எந்த அவசியமும் இல்லை. ஆனால், எப்பொழுது நாடகத்தை அறிந்து கொள்வார்களோ, அப்பொழுதே அவ்வாறு கூறுவார்கள். நாம் இந்த பழைய சரிரத்தை விடுத்து நம்முடைய நிர்வாண தாமத்திற்குச் சென்றுவிடுவோம் என்ற ஞானம் உங்களுக்கு உள்ளது. இந்த ஞானம் கூட உங்களுக்கு இங்கே தான் உள்ளது. பிறகு, பெரிய பெரிய பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பெரியவர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுங்கள். பாரதத்தில் சூரிய வம்சம், சந்திரவம்சத்தினரின் இராஜ்யம் இருந்தது, அது இப்பொழுது இல்லை. பிறகு, அவசியம் வரும். இது அனாதியான உலக நாடகமாகும். இதனுடைய ஞானம் குழந்தைகளிடம் அவசியம் இருக்க வேண்டும். இந்த ஞானம் இருக்கும் காரணத்தினால் பாரதம் சொர்க்கம் ஆகிறது. இப்பொழுது ஞானம் இல்லை, அதனால் பாரதம் ஏழ்மையாக உள்ளது. பிறகு, இந்த ஞானத்தின் மூலம் பாரதத்தை சொர்க்கம் ஆக்குகின்றார். குழந்தைகள் கூட இந்த ஞானத்தைப் பெற்று சொர்க்கத்திற்குத் தகுதியானவர்களாக ஏன் ஆகக் கூடாது? நீங்களும் ஆகுங்கள். எவரையும் விட்டுவிடக் கூடாது. சேவைக்கான அனேக யுக்திகளை பாபா கூறுகின்றார். அதைச் செய்ய வேண்டியதோ குழந்தைகள் தான். தந்தை வெளியில் செல்லமாட்டார். நல்லது.



    இனிமையிலும் இனிமையான வெகு காலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிக குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்காக முக்கியமான சாரம்:

    1. தன்னுடைய சுயதர்மத்தில் நிலைத்திருந்து அமைதியின் அனுபவத்தைச் செய்ய வேண்டும். ஏனெனில், இப்பொழுது சப்தங்களைக் கடந்து நிர்வாணதாமத்திற்குச் செல்வதற்கான சமயம்.



    2. சுகத்தைக் கொடுக்கும் வள்ளலின் குழந்தைகள் நீங்கள். ஆகையால், அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. உண்மையான மலர் ஆக வேண்டும். முட்களை மலர்களாக்கக் கூடிய சேவை செய்ய வேண்டும்.



    வரதானம்:

    ஒவ்வொரு நாளும் முரளி என்ற சாதனத்தின் மூலமாக வீணானதை அழிக்கக் கூடிய மதிப்புடன் தேர்ச்சி பெறுபவர்கள் ஆவீர்களாக.



    ஒவ்வொரு நாளுக்குமான முரளியானது மனதை பிசியாக வைத்துக் கொள்வதற்கான சாதனமாகும். முரளியினுடைய ஏதாவது ஒரு கருத்தை (பாயிண்ட்டை) சிந்தனை செய்துகொண்டே இருந்தீர்கள் என்றால் மனம் பிசியாக இருக்கும் மற்றும் வீணானது தானாகவே அழிந்துவிடும். வீணான எண்ணங்கள் வரவே முடியாத அளவிற்கு மனதை எண்ணம், சொல் மற்றும் செயல் மூலம் செய்யும் சேவையில் பிசியாக வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதே இறுதித் தேர்வில் மதிப்புடன் தேர்ச்சி பெற முடியும். ஒருவேளை, வீணான எண்ணங்கள் எழும் பழக்கம் இருந்ததென்றால் தக்க சமயத்தில் ஏமாற்றத்தை அடைந்துவிடுவார்கள்.



    சுலோகன்:

    திட்டத்தை (பிளான்) நடைமுறையில் (பிராக்டிகல்) கொண்டுவருவதற்காக பாலகன் மற்றும் எஜமானன் என்பதில் சமநிலை இருக்க வேண்டும்.



    ***OM SHANTI***