BK Murli 19 March 2018 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:







    BK Murli 19 March 2018 Tamil


    19.03.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! உங்களுடைய நினைவு அசாதாரணமானது, எதை நீங்கள் இந்த கண்களினால் பார்ப்பதில்லையோ அதை நினைக்கிறீர்கள். மேலும் அந்த நினைவினால் உங்களுடைய விகர்மங்கள் அழிகின்றன.



    கேள்வி :

    எந்த ஒரு பழக்கத்தை தியாகம் செய்தால் அனைத்து குணங்களும் தானாக வந்து கொண்டேயிருக்கும்?



    பதில் :

    அரைக்கல்பமாக தேக உணர்வில் வரக்கூடிய பழக்கம் உறுதியாகிவிட்டது. இப்போது இந்த பழக்கத்தை தியாகம் செய்யுங்கள். சிவபாபா மிகவும் அன்பானவர். அவரை நினையுங்கள். எந்த ஒரு தேக தாரியின் நினைவும் வரவில்லை என்றால் அனைத்து தகுதிகளும் வந்துவிடும். குறைகள் விலகிப் போய்விடும். ஆத்மா தூய்மையின் கடலாகி விடும். குஷியின் அளவு அதிகமாகிக் கொண்டேயிருக்கும். அனைத்து குணங்களும் தானாக வந்துவிடும்.



    பாடல் :

    ஓம் நமோசிவாய.....



    ஓம் சாந்தி.

    குழந்தைகள் தன்னுடைய எல்லையற்ற தந்தையின் மகிமையை செய்தீர்கள். மேலும் அந்த எல்லையற்ற தந்தை குழந்தைகளுக்கு முன்பு அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு குழந்தையின் புத்தியிலும் நாம் யாருக்கு இவ்வளவு மகிமைகள் செய்தோமோ அந்த சிவபாபாவின் முன்பு இருக்கின்றோம், அவரிடமிருந்து நாம் 21 பிறவிகளுக்கு சதா சுகத்தின் ஆஸ்தியை அடைந்து கொண்டு இருக்கின்றோம் என்பது புத்தியில் இருக்க வேண்டும். இது நினைவிற்கு வருவதால் தான் குஷியின் அளவு அதிகரிக்க வேண்டும். எந்த நேரத்தில் எதிரில் கேட்கிறீர்களோ அச்சமயம் நினைவிருக்கும். பிறகு மறந்து போய் விடக் கூடாது. நாம் மீண்டும் நமது இராஜ்ய பாக்கியத்தை அடைந்து கொண்டு இருக்கின்றோம் என்பது குழந்தைகளுக்குத் தெரியும். ஆகவே அந்த நிராகார தந்தையிடம் புத்தி போகிறது. அவரை புத்தியினால் அறிய வேண்டும். இரவும் பகலும் நாம் அந்த எல்லையற்ற தந்தையிடமிருந்து எதிர்காலத்திற்கு 21 பிறவிகளுக்கு ஆஸ்தியை அடைந்து கொண்டு இருக்கின்றோம் என்பது புத்தியில் இருக்க வேண்டும். நிச்சயம் உறுதியாகிக் கொண்டு இருக்கிறது. லௌகீக தாய் தந்தையின் மீது நிச்சயம் ஏற்ப்பட்ட பிறகு சந்தேகம் வராது. ஆனால் இது புது விசயம் ஆகும். புத்தியினால் தந்தையை அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு நாம் சிவபாபாவினுடையவராகியிருக்கின்றோம், அவரிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும் என தெரியும். நாம் கல்பகல்பமாக அந்த தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறோம். புத்தியில் நினைவிற்கு வருகிறது. பாபா உங்கள் மூலமாக எங்களுக்கு மீண்டும் ஆஸ்தி கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. நாங்கள் உரிமையாளர்கள். உரிமை இருக்கிறது எனும் போது நிச்சயமாக தந்தையை நினைக்க வேண்டும். லௌகீக தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைகிறார்கள். அது என்னவோ மிகவும் நினைவிற்கு வருகிறது. இது அசாதாரணமான விசயம், என்னவென்றால் அந்த தந்தையை நினைப்பதால் நம்முடைய பாவம் எரிந்து போகும். ஆகவே தந்தையை நினைக்க வேண்டியிருக்கிறது. லௌகீக தந்தையின் நினைவு தானாகவே இருக்கிறது. இந்த கண்களினால் பார்க்கிறார்கள். குழந்தை பிறக்கிறது, பிறகு அப்பா அம்மா என்று கூறிக் கொண்டேயிருக்கிறது. இந்த தந்தை இந்த கண்களுக்குத் தெரிவதில்லை. புத்தியால் நினைக்க வேண்டும். நாம் பிரம்மா மூலமாக சிவபாபாவின் வாரிசாகியிருக்கிறோம். மேலும் 21 பிறவி களுக்கு ஆஸ்தி பெறுவதற்கு ஸ்ரீமத்படி முயற்சி செய்து கொண்டு இருக்கின்றோம். இதில் முக்கியமாக எவ்வளவு நினைக்கின்றீர்களோ புத்தி தூய்மையாகிக் கொண்டே போகும். நாம் குழந்தைகள் தானே என்று இருக்கக்கூடாது. பாபாவை நினைவு செய்ய வில்லை என்றால், விகர்மங்கள் அழியாது. நிறைய குழந்தைகள் நாம் குழந்தைகள் தானே என்று நினைக்கிறார்கள். பாபாவை நினைப்பதில்லை. வாயில் ராம் ராம் என கூறுங்கள் என கூறுகிறார்கள் அல்லவா! ஆனால் இந்த இராமரின் (சிவபாபா) சித்திரம் (மனித உருவம்) இல்லை. ஆகையால் மனிதர்களின் புத்தியோகம் அந்த இராமரின் பக்கம் சென்று விடுகின்றது. சத்கதி தாதாவை அனைவரும் மறந்துவிட்டு இருக்கின்றார்கள்.



    சிவபாபா வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிகிறீர்கள். முதலில் நிச்சயமாக படைக்கக்கூடியவர் சிவபாபா வந்திருப்பார். அப்போது தான் சொர்க்கத்தின் படைப்பைப் படைத்திருப்பார். அவருக்குப் பிறகு இராம இராஜ்ஜியம் நடக்கிறது. இப்போது நீங்கள் சத்யுகம் திரேதாவில் இராஜ்ஜியம் செய்வதற்காக பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைந்து கொண்டு இருக்கிறீர்கள். இது புத்தியில் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். பரம்பிதா பரமாத்மா சிவன் ஒரு முறை தான் வருகிறார். ராமர்,சீதா, லட்சுமி, நாராயணன் கூட ஒரு முறை தான் வருகிறார்கள். மறுபிறவி எடுக்கலாம். ஆனால் பெயர், ரூபம், தேசம், காலம் அனைத்தும் மாறி விடுகிறது. இராமர் சீதை கூட பிராப்தியை அடைவதற்காக மறு பிறவி எடுக்கிறார்கள் . இந்த ஞானம் அனைத்தும் புத்தியில் ஓடிக்கொண்டேயிருந்தால் குஷியிருக்கும். யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைப்பது மிகவும் எளிதாகும். சொர்க்கத்தில் படைக்கக்கூடியவர் பாபாவிடமிருந்து உங்களுக்கு இச்சமயம் ஆஸ்தி கிடைக்கும். எல்லையற்ற தந்தையை அனைவரும் நினைக்கிறார்கள். பாபா புதிய சிருஷ்டியைப் படைக்கிறார் என்றால், அனைவரும் சுகமாக இருக்கிறார்கள். இச்சமயம் அனைவரும் துக்கத்தில் இருக்கிறார்கள். இந்த நாடகமே சுக துக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சுகத்தில் யார் இராஜ்யம் செய்கிறார்கள். லட்சுமி நாராயணன், பிறகு திரேதாவில் இராமர் சீதா...... இத்தனை வருடங்கள் இந்த குலத்தின் இராஜ்யம் நடக்கிறது என்பதை நீங்கள் அறிகிறீர்கள். கிறிஸ்தவர்கள் நம்முடைய கிறிஸ்து இராஜ்யத்தைப் படைத்தார் என நினைக்கிறார்கள். பிறகு முதலாம் எட்வர்ட், இரண்டாம் எட்வர்ட் இராஜ்ஜியம் செய்து கொண்டு வந்துள்ளனர். முடிந்து கொண்டே போகிறதல்லவா? பாரதவாசிகளுக்கு எதுவும் தெரியவில்லை. சத்யுகத்தில் லட்சுமி நாராயணருடைய இராஜ்ஜியம் இருந்தது. அதற்கு சொர்க்கம் என்று கூறப்படுகிறது. அதை பாபா தான் உருவாக்குகிறார் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். பதீத உலகத்தில் வந்திருக்கிறார். அப்போது தான் தூய்மையாக மாற்றியிருக்கிறார். இந்த நினைவு இருக்க வேண்டும். உண்மையில் சிவபாபா போன கல்பத்திலும் வந்திருந்தார். அதனுடைய நினைவுச்சின்னம் கூட இருக்கிறது. இப்போது மீண்டும் அவர் வந்திருக்கிறார். முதலில் நிராகார் சிவபாபா வந்திருக்கிறார். அவர் வந்து உங்களை தேவி தேவதையாக மாற்றுகின்றார். சத்யுகத்தில் லட்சுமி நாராயணன் நடைமுறையில் ஆட்சி செய்கிறார்கள். பிறகு பக்திமார்க்கத்தில் பூஜாரியாகி சித்திரங்களை உருவாக்குகிறார்கள். இச்சமயம் லட்சுமி நாராயணரின் துல்லியமான சித்திரம் எதுவும் இல்லை. பிறகு நேரடியாக வருவார்கள். இப்போது சிவபாபா உங்களுக்கு பிரம்மா மூலமாக நேரடியாக கற்பித்துக் கொண்டு இருக்கிறார். எவ்வளவு நேரடியான விஷயம். வேறு எந்த பள்ளிக் கூடத்திலும் உங்களுடைய ஆத்மா படிக்கின்றது, டீச்சருடைய ஆத்மா நம்மை படிக்க வைத்துக் கொண்டு இருக்கின்றது என்று கூறமாட்டார்கள். அங்கெல்லாம் மனிதர்கள் மனிதர்களைப் படிக்க வைக்கிறார்கள். உண்மையில் ஆத்மா படிக்க வைக்கின்றது. ஆத்மா தான் உடல் மூலமாகப் படிக்கிறது. நான் இப்போது வக்கீலாகிவிட்டேன் என்று ஆத்மா கூறுகின்றது. படிப்பினால் வக்கீலாகிறது. இங்கே அதிசயமான விஷயமாக இருக்கிறது. நிராகார் சிவபாபா நிராகார் ஆத்மாக்களிடம் பேசிக்கொண்டு இருக்கின்றார். ஆத்மாவில் சம்ஸ்காரம் இருக்கின்றது. மனிதர்கள் இதனை மறந்து விடுகிறார்கள். நிராகார் பாபா இவர் மூலமாக புரிய வைக்கின்றார். அவருடைய ஒரே பெயர் சிவனாகும். நீங்களும் சிவபாபா என்கிறீர்கள். புத்தி மேலே சென்று விடுகின்றது. லௌகீக அப்பாவை நினைவு செய்தால் உடல் நினைவிற்கு வரும். சிவபாபாவிற்கு சரீரம் இல்லை. பரமாத்மாவின் கோவிலே நிராகார ரூபத்தினுடையதாகும். ஆகார தேவதைகள் இருக்கிறார்கள். சாகார மனிதர்கள் இருக்கிறார்கள். அவரே நிராகார் சிவன் ஆவார். உங்களுடைய ஆத்மா இப்போது ஞானம் நிறைந்ததாக மாறிக் கொண்டு இருக்கின்றது. நான் நிராகார் என பாபா கூறுகின்றார். எனக்குள் சிருஷ்டியின் முதல் இடை கடையின் ஞானம் இருக்கின்றது. நான் இந்த வாய் மூலமாக உங்களைப் படிக்க வைக்கின்றேன். நீங்களும் எனக்குச் சமமாக ஞானம் நிறைந்தவராகுங்கள். இந்த ஞானத்தை நிராகார் பாபாவைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது. நிராகார் பரமாத்மாவிற்குத்தான் நாலேட்ஜ்புல், பிஸ்புல், பதீதபாவனர் என கூறப்படுகிறது. பழைய உலகத்தை புதிய உலகமாக நான் தான் மாற்றுகின்றேன் என கூறப்படுகிறது. நிராகாரராகிய எனக்குள் முழு மரத்தின் ஞானம் இருப்பதைப் போலவே ஆத்மாக்களாகிய உங்களையும் மாற்றுகின்றேன். உங்களுடைய ஆத்மாவும் இவ்வாறு நாலேட்ஜ்ஃபுல்லாக மாறுகிறது. உங்களை எனக்குச் சமமாக மாற்றுகிறேன். இந்த சிருஷ்டியினுடைய முதல் இடை கடையினுடைய ஞானத்தைக் கேட்பதால் நீங்கள் சக்ரவர்த்தி ராஜா ஆகிறீர்கள். மனிதர்கள் மனிதர்களை தேவதையாக மாற்ற முடியாது.



    பாபா தான் ஞானக்கடலாக, தூய்மையின் கடலாக இருக்கின்றார். குழந்தைகளை தனக்குச் சமமாக மாற்றுகிறார் என்றால் அனைத்து குணங்களும் வேண்டும். பிறகு நீங்கள் தேவதையாக மாறிவிடுவீர்கள் என்றால் தகுதியும் மாறிவிடும். பாபாவின் தகுதி தனியாகும். பாபா ஞானக்கடலாக இருக்கின்றார். நீங்களும் மாற வேண்டும். பாபா தூய்மையின் கடலாக இருக்கின்றார். நாம் அரைக் கல்பமாக பவித்திரமாக இருக்கின்றோம். நாடகத்தின் படி நீங்கள் அழுக்காகியிருக்கிறீர்கள். பிறகு நான் வந்து 21 பிறவிகளுக்கு தூய்மையாக மாற்றுகிறேன் என பாபா கூறுகின்றார். நீங்கள் ஸ்ரீமத் படி மட்டும் நடங்கள். என் ஒருவனை மட்டும் நினையுங்கள். வேறு யாரையும் நினைக்கக்கூடாது. நான் உங்களை சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றுகின்றேன். பாபாவின் நினைவைத் தவிர வேறு யாருடைய நினைவிலானது இருந்தால் குறைகள் உடையவராகி விடுவோம். சிவபாபா மிகவும் அன்பானவர் எல்லோரையும் விட அன்பான தந்தையாவார். வந்தே மாதரம் என உங்களுடைய பெயரும் பாடப்பட்டு உள்ளது. உங்களுடைய ஆத்மாவும் தூய்மையாகிக் கொண்டு இருக்கின்றது. நீங்களும் தூய்மையாகி பாரதத்தை சொர்க்கமாக மாற்றுகிறீர்கள். ஆகவே உங்களுடைய பெயர் சிவசக்தி பாண்டவ சேனை என்று பிரசித்தமாக இருக்கிறது. நீங்கள் பாண்டவர்கள். ஏனென்றால் பரந்தாமத்தின் யாத்திரையில் யுத்த மைதானத்தில் மாயையை வெற்றி அடைவதற்காக நிற்கிறீர்கள். நாம் பாபாவைப் போன்று மாஸ்டர் ஞானக்கடலாக, தூய்மையின் கடலாக மாற வேண்டும் என குழந்தைகள் அறிகிறார்கள். தேகத்தின் அகங்காரம் விடுபட வேண்டும். பல பிறவிகளாக தேகத்தை ஏற்று இருப்பதால் அந்த பழக்கம் உறுதியாகி உள்ளது. இப்போது இந்த பழக்கத்தின் தியாகம் வேண்டும். பாபா நிராகாரராக இருக்கிறார் என்றால் தேக உணர்வு எங்கிருந்து வந்தது. நீங்கள் கூட இந்த பழைய தேகத்தை விட்டு என்னிடம் வர வேண்டும். வினாசம் நடக்கிறது என்றால் ஏதாவது காரணம் இருக்கும் அல்லவா. ஒரு நயா பைசாவிற்கும் மதிப்பற்ற பொருள் தான் அழிகிறது. இப்போது நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்ல தகுதியடைய வைக்கிறீர்கள். அங்கே எப்பொழுதும் சுகமே சுகமாகும். சுகதாமம் மற்றும் சாந்திதாமம். இதுவே துக்க தாமம் ஆகும். இராவணன் அசாந்தியாக்கியிருக்கிறான். பிறகு பரம்பிதா பரமாத்மா சாந்தியைக் கொடுக்கக்கூடியவர் ஆவார். ஒரு சிலர் மன அமைதி வேண்டும் என்கிறார்கள். எப்படிப்பட்ட அமைதி வேண்டும் சொல்லுங்கள். இதுவோ துக்க தாமமாக இருக்கிறது. நீங்கள் சுகதாமத்திற்குச் செல்ல வேண்டும் அல்லவா. பாபாவை நினைத்தால் சுக தாமத்திற்குச் செல்லலாம். அசாந்தி அடையச் செய்பவன் இராவணன் மாயை ஆகும். அவன் இங்கே இருக்கிறான். முக்தி ஜீவன் முக்தி அடையச் செய்யும் இராவணன் இருப்பதில்லை. ஆகவே இப்போது தனது வீட்டிற்குச் செல்லுங்கள். ஒரு வேளை சத்யுகத்திற்குச் செல்ல விரும்பினால் செல்லுங்கள். ஒவ்வொரு ஆத்மாவும் ஜீவன் முக்தியை விரும்புகிறது. அனைவரும் சத்யுகத்திற்கு ஜீவன் முக்திக்குச் செல்ல முடியாது. அங்கே குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் தான் செல்கிறீர்கள். மற்றபடி மேலிருந்து வரக்கூடிய ஆத்மாக்கள் முதலில் ஜீவன் முக்தியில் இருக்கிறது. மாயாவின் நிழல் விழுவதில்லை. சதோபிரதானத்திலிருந்து பிறகு சதோ ரஜோ தமோவில் வருகிறார்கள். மாயை இருந்தாலும் ஆத்மா நிச்சயமாக சுகத்தை அனுபவிக்க வேண்டும். துக்கம் அடைய முடியாது. ஏனென்றால் தூய்மையாக இருக்கிறார்கள் அல்லவா? பிறகு அசுத்தமாவதால் துக்கத்தை அடைகிறார்கள். வரும் போதே துக்கத்தை அடைவது கிடையாது. இவ்வாறு சுக துக்கத்தின் விளையாட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.



    மனிதர்களை பயமுறுத்துவதற்காக போர்டுகளை வைக்க வேண்டும் என்ற எண்ணம் பாபாவிற்கு வந்து கொண்டு இருக்கின்றது. வெறும் சித்திரங்களை மட்டும் பார்த்து மனிதர்கள் குழப்பமடைகிறார்கள். சிவபாபாவின் சித்திரத்தை வைக்கிறார்கள். கீழே தெய்வீக உலகத்தின் அதிகாரத்தை அடைவது உங்களுடைய இறை தந்தை அளிக்கும் பிறப்புரிமை என எழுதிவிடுகிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். மனிதர்கள் சித்திரத்தைப் பார்த்து இறைவன் இப்படி இருக்க முடியாது எனக் கூறுவார்கள். பகவானின் ரூபம் என்ன? இருப்பினும் சகோதரிகளே சகோதரர்களே வந்து எல்லையற்ற தந்தையிடம் 21 பிறவிகளுக்கு சதா சுகத்தை அடைவதற்காக முயற்சி செய்யுங்கள் என எழுதப்பட்டு இருக்கிறது. அதுவும் யாராவது நேரில் வந்து புரிய வைக்கும் பொழுது தான் புரிந்து கொள்வார்கள். ஒவ்வொரு நாளும் மிகவும் சுருக்கமாக்க வேண்டியிருக்கிறது. கடைசியில் சுருக்கமாகி விடும். மன்மனாபவ, பாபாவை நினையுங்கள் மற்றும் ஆஸ்தியை அடையுங்கள். சகோதரர்களே, சகோதரிகளே! வரக்கூடிய போருக்கு முன்பாக 21 பிறவிகளுக்கு சத்யுகத்தின் இராஜ்ய பதவியை தந்தையிடம் வந்து அடையுங்கள் என எழுதுங்கள். இந்த போரினால் தான் சொர்க்கத்தின் வாயில் திறக்கின்றது. இதை உலகத்தினர் யாரும் அறியவில்லை. இந்த போரினால் தான் பாரதம் சுகதாமமாக மாறும் என நீங்கள் அறிகிறீர்கள். அவர்கள் போர் நடக்கக் கூடாது என முயற்சி செய்கிறார்கள். இந்த மிகப்பெரிய மகாபாரதப் போரினால் தான் மகாவினாசம் நடக்கும் என நீங்கள் அறிகிறீர்கள். அனைத்து ஆத்மாக்களும் நிச்சயமாக திரும்பிப் போக வேண்டும். ஏனென்றால், விளையாட்டு முடிந்து விட்டது. மீண்டும் நடிப்பதற்காக வருகிறார்கள். எனவே யுக்தியோடு எழுத வேண்டும்.



    நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகள். அவர்கள் உலகீய தேகத்தினுடைய வழிகாட்டிகள். நீங்கள் தன்னை விதேகி ஆத்மா, தேகத்திலிருந்து தனிப்பட்டவன் என நினைக்கிறீர்கள். பாபா ஆத்மாக்களாகிய நம்மை அழைத்து போவார் என உங்களுக்குத் தெரியும். எல்லையற்ற தந்தையிடம் வந்து ஆஸ்தி அடையுங்கள் என நீங்கள் எழுத வேண்டியிருக்கிறது. நிராகார் என்ற வார்த்தையை நிச்சயம் எழுத வேண்டும். பாபா இந்த கர்ம சேத்திரத்தில் வந்திருக்கிறார் என உங்களுக்குத் தெரிகிறது. நாமும் அங்கிருந்து வருகின்றோம். அனைத்து ஆத்மாக்களும் நடிகர்கள். அழிக்க முடியாத, அழிவற்ற ஆத்மாக்கள். ஒருபோதும் இறப்பதில்லை. இதில் நன்கு நிச்சயம் இருக்க வேண்டும். நாம் சிவபாபாவிடமிருந்து பல முறை ஆஸ்தி அடைந்திருக்கிறோம் மீண்டும் அடைவோம். சிவபாபா நமக்கு சொர்க்கத்தின் ஆஸ்தியை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார் என்பதை முயற்சியினால் அறிகிறீர்கள். அப்படி என்றால் அவரிடமிருந்து ஏன் ஆஸ்தியை அடையக் கூடாது? தந்தை மற்றும் ஆஸ்தியை நினைத்தால் கடைசி நினைவிற்கு ஏற்ப நிலையை அடையலாம். வெறும் ராம் ராம் என்று மட்டும் கூறுவதால் முக்தியை அடைய முடியாது. இன்னார் சொர்க்கவாசி ஆகிவிட்டார் என செய்தித்தாளில் போடுகிறார்கள். அவர்களிடம் சொர்க்கம் என்று எதைக் கூறுகின்றீர்கள் எனக் கேளுங்கள். இது நரகம் ஆகும். எனவே நரகத்தில் தான் மறுபிறவி எடுப்பார்கள். சொர்க்கமாக இருந்தால் மறுபிறவியும் சொர்க்கத்தில் எடுப்பார்கள். ஒருவேளை யாராவது சரீரத்தை விட்டு நரகத்திலிருந்து சொர்க்கத்திற்கு போய்விட்டனர் என்றால், அங்கே அவர்களுக்கு நிறைய வைபவங்கள் (வஸ்துக்கள்) கிடைக்கும். பிறகு நரகத்தின் வைபவங்களைக் கொடுப்பதற்கு அவர்களை சொர்க்கத்தில் இருந்து நரகத்திற்கு ஏன் அழைக்கிறீர்கள்? அவர்களுக்கு நரகத்தின் போஜனத்தைக் கொடுத்தால் புத்தியும் இங்கு போல மாறிவிடும். உணவைப்போல மனம் மாறிவிடும். சொர்க்கத்திலோ பாலாறு நெய்யாறு ஓடுகின்றது. நீங்கள் அழுக்கான உணவை அவர்களுக்குக் கொடுப்பீர்களா? ஸ்ரீநாத் துவாரகாவில் நன்கு நெய்யினால் செய்யப்பட்ட பிரசாதத்தை வைக்கிறார்கள். ஏனென்றால் அங்கே இராதை கிருஷ்ணரின் சிலைகள் இருக்கிறது. எனவே அவர்களின் நினைவில் பிரசாதம் கூட மிகவும் நல்ல நல்ல பொருட்களை செய்து படைக்கிறார்கள். இதுபோன்று பிரசாதம் வேறு எங்கும் கிடைக்காது. ஜகத்நாதரின் கோவிலும் இருக்கின்றது. அங்கே சாதத்தை பிரசாதமாக வைக்கிறார்கள். அங்கே பொருள்களை வைப்பதில்லை. இப்போது நரகமாக இருக்கிறது என்றால் துக்கமும் இருக்கிறது. சொர்க்கத்திலோ சுகம் இருந்தது. பாபா மிகவும் நன்றாகப் புரிய வைக்கின்றார். ஆனால் வரிசைக்கிரமத்தில் தான் தாரணையாகிறது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தின் படி வேலைக்காரராகவும் ஆகிறார்கள். மூன்றாம் வகுப்பு டிக்கட் கூட யாராவது நிச்சயம் அடைவார்கள் அல்லவா? முதல் வகுப்பு சூரிய வம்சத்தின் இராஜ்ஜியம், இரண்டாம் வகுப்பு சந்திர வம்சத்தின் இராஜ்ஜியம், மூன்றாம் வகுப்பு பிரஜையாகும். அதிலும் வரிசைக்கிரமத்தில் இருக்கிறது. யாருக்கு என்ன டிக்கட் வேண்டுமோ அதை அடையலாம். நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம் :

    1. பாபாவிற்கு சமமாக ஞானக்கடல், தூய்மையின் கடலாக வேண்டும். விதேகி ஆவதற்கான பயிற்சி செய்ய வேண்டும்.



    2. பாபாவின் நினைவினால் புத்தியை தூய்மையாக்க வேண்டும். சதா எல்லையற்ற தந்தையிடமிருந்து நாம் 21 பிறவிகளுக்கு ஆஸ்தி அடைந்து கொண்டு இருக்கின்றோம் என்ற போதையில் இருக்க வேண்டும்.



    வரதானம் :

    பிராப்திகளின் இச்சையிலிருந்து (விலகி) இச்சை என்றாலே தெரியாதவர் ஆகி, எப்போதும் நிறைந்திருக்கக்கூடிய, பலனை எதிர்பார்க்காத சேவாதாரி ஆகுக.



    யார் பலனை எதிர்பாராத சேவாதாரியாக இருக்கிறார்களோ அவர்களிடம் அனைத்து பிராப்திகளும் தானாகவே வருகிறது. ஆனால் பிராப்தி உங்களுக்கு முன்பாக வரட்டும். தாங்கள் பிராப்திகளை ஏற்காதீர்கள். ஒருவேளை ஆசை வைத்தால் அனைத்து பிராப்திகளும் இருந்தாலும் (திருப்தியற்று) குறையாகவே உணர வேண்டியிருக்கும். எப்போதும் தன்னை (ஆசைகளற்று) காலியாக இருக்கிறேன் என புரிந்து கொள்ளுங்கள். ஆகவே இச்சை என்றாலே தெரியாத நிலையுடையவராகி, அனைத்து பிராப்திகளினாலும் நிரம்பியவர் ஆகுக. சங்கமயுகத்தில் பாப்தாதா மூலமாக என்னென்ன அழிவற்ற பிராப்திகள் கிடைத்திருக்கின்றதோ அந்த பிராப்திகளின் ஊஞ்சலில் சதா ஊஞ்சலாடிக் கொண்டேயிருந்தால் எந்த தவறும் நடக்காது.



    சுலோகன் :

    தன்னுடைய அவ்யக்த ஸ்திதியினால் அவ்யக்த ஆனந்தம், அவ்யக்த அன்பு மற்றும் அவ்யக்த சக்தியை அடைய முடியும்.




    ***OM SHANTI***


    No comments

    Say Om Shanti to all BKs