BK Murli 20 March 2018 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:







    BK Murli 20 March 2018 Tamil


    20.03.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்



    இனிமையான குழந்தைகளே ! சகவாசதோஷம் சந்தேக புத்தி உடையவர்களாக ஆக்குகிறது. எனவே சகவாச தோஷத்தில் வந்து ஒரு பொழுதும் படிப்பை விடாதீர்கள். நல்ல சேர்க்கை உயர்த்தும், தீய சேர்க்கை வீழ்த்தும் என்று கூறப்படுகிறது.



    கேள்வி:

    தந்தையின் எந்தவொரு ஸ்ரீமத் உங்களை சோழியிலிருந்து வைரம் போல ஆக்குகிறது?



    பதில்:

    குழந்தைகளே இல்லற விவகாரங்களில் இருக்கையிலும் தாமரை மலர் போல இருங்கள் என்பது தந்தையின் ஸ்ரீமத் ஆகும். எப்படி தாமரை மலரை சேறு மற்றும் தண்ணீர் தீண்டுவதில்லையோ, அதே போல விகாரி உலகத்தில் இருக்கையிலும் விகாரங்கள் தீண்டாமல் இருக்கட்டும். இது உங்களுடைய கடைசி பிறவி ஆகும். நிர்விகாரி உலகிற்குச் செல்ல வேண்டும். எனவே தூய்மையாக ஆகுங்கள். இந்த ஒரு ஸ்ரீமத் மூலமாக நீங்கள் சோழியிலிருந்து வைரம் போல ஆகி விடுவீர்கள். சொர்க்கத்தின் அதிபதியாகி விடுவீர்கள்.



    பாடல்:

    எனக்கு ஆதாரம் அளிப்பவரே .. .. .. ..



    ஓம் சாந்தி.

    பகவான் ஒரே ஒருவர் ஆவார். அவர் பகவதியைப் படைத்தார் என்று தந்தை புரிய வைத்துள்ளார். மிகச் சரியாக பகவானுவாச் - பகவான் கூறுகிறார். எப்படி வழக்கறிஞர் வாச் (கூறுகிறார்) சர்ஜன் வாச் (மருத்துவர் கூறுகிறார்).. .. .. இது பிறகு பகவானுவாச - (பகவான் கூறுகிறார்). நான் உங்களை சொர்க்கத்திற்கு அதிபதி, ராஜாக்களுக்கெல்லாம் ராஜா ஆக்குகிறேன். இது தான் கீதை ஆகும். ஆனால் கீதையின் பகவான் யாராக இருந்தார் என்பதை மனிதர்கள் மறந்து விட்டுள்ளார்கள். கிருஷ்ணரோ சொர்க்கத்தின் முதல் நம்பர் இளவரசராக இருந்தார். இவ்வளவு உயர்ந்த பிராப்தியை அவருக்கு யார் அளித்தார்? இராதை கிருஷ்ணர் அல்லது இலட்சுமி நாராயணருடையது உயர்ந்ததிலும் உயர்ந்த பிராப்தி ஆகும். இந்த விஷயங்களை யாருமே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். இராதை கிருஷ்ணர் சுயம்வரத்திற்குப் பிறகு இலட்சுமி நாராயணர் ஆகிறார்கள். அவர்களுக்கு இந்த உயர்ந்த பதவியை யார் கொடுத்தார்கள். கிருஷ்ணர் யாராக இருந்தார், நாராயணர் யாராக இருந்தார்? இந்த விஷயங்கள் உங்களுக்குத் தான் தெரியும். கிருஷ்ணரை நிறைய பேரோ அன்பு செய்கிறார்கள். ஜெயந்தியும் கொண்டாடுகிறார்கள். பின் கிருஷ்ணருக்கு யாருடன் சுயம்வரம் ஆகியதோ அவருக்கும் தானே மகிமை இருக்க கூடும். இராதை கிருஷ்ணரையோ ஒன்று சேர்த்தே காண்பிக்கிறார்கள். அவர்களை அது போல ஆக்கியது யார்? படைப்பவர் என்று ஒரே ஒரு நிராகாரமானவருக்குத் தான் கூறப்படுகிறது. சாகாரத்தில் இருப்பவரை ஒரு பொழுதும் கிரியேட்டர் - படைப்பவர் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்கார்ப்போரியல் காட் ஃபாதர் - நிராகார இறை தந்தை என்று கூறுகிறார்கள். இலட்சுமி நாராயணர் சத்யுக ஆரம்பத்தில் இருந்தார்கள். இப்பொழுதோ இருப்பது கலியுகம் ஆகும். இங்கு மனிதர்கள் துக்கமுடையவர்களாக, ஏழைகளாக இருக்கிறார்கள். ராஜா ராணியோ இல்லவே இல்லை. சொர்க்கத்திற்கோ நிறைய மகிமை உள்ளது. யாராவது இறந்து விட்டார் என்றால் இன்னார் சொர்க்கவாசி ஆகி விட்டார் என்று கூறுகிறார்கள். சொர்க்கம் நினைவிற்கு வருகிறது என்றால், அவசியம் சொர்க்கம் ஏதோ நல்ல உலகாக இருந்திருக்க வேண்டும். நரகத்தில் யார் இறக்கிறார்களோ அவர்கள் புனர்ஜென்மம் அவசியம் நரகத்தில் தான் எடுக்க வேண்டி இருக்கும். எப்படி கர்மம் செய்கிறார்களோ, அதற்கேற்ப இங்கு பிறவி எடுக்க வேண்டி வரும். இப்பொழுது பகவான் நிராகாரமானவர், ஞானக் கடல் ஆவார், அவரை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அவருடைய நினைவார்த்த கோவில் கூட சிவனுடையது ஆகும். பிரம்மா, விஷ்ணு, சங்கரனின் படத்தை கொடுத்தீர்கள் என்றால் இது பிரம்மா ஆவார், இது விஷ்ணு ஆவார் என்று கூறுவார்கள். பகவான் பிரம்மா அல்லது பகவான் விஷ்ணு என்று கூற மாட்டார்கள். பகவான் என்று ஒரு நிராகாரமானவருக்குத் தான் கூறுவார்கள். அவர் சிவன் தான் ஆவார்.



    நாம் மீண்டும் இலட்சுமி நாராயணர், பகவான் பகவதி ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். யார் மூலமாக? பகவான் மூலமாக. (கிரியேட்டர்) படைப்பவர் தந்தை ஆவார். அவர் சொர்க்கத்தின் படைப்புக்கர்த்தா ஆவார். அவசியம் அவர் இவர்கள் சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆகக் கூடிய பிராப்தியை அளித்திருக்கிறார். படங்களோ குழந்தைகளாகிய உங்களிடம் உள்ளது. இலட்சுமி நாராயணர் சத்யுகத்தின் அதிபதியாக இருந்தார்கள் என்பதையும் மனிதர்கள் புரிந்துள்ளார்கள். ஆனால் இலட்சுமி நாராயணர் சிறு வயதில் இராதை கிருஷ்ணராக இருந்தார்கள் என்பதை மட்டும் மறந்து விட்டுள்ளார்கள். சத்யுகத்தில் மகாராஜா மகாராணி இருந்தார்கள் என்றால் அவசியம் அவர்களுடைய குழந்தைப் பருவம் கூட இருக்கக் கூடும். அவர்களுக்கு இந்த பிராப்தியை அவசியம் சொர்க்கத்தின் படைப்புகர்த்தா தான் வழங்கியிருக்க கூடும். அவர் எப்பொழுது வந்தார் - இது யாருக்குமே தெரியாது. சிவனின் லிங்கமோ

    உள்ளது. இது சிவனினுடைய பெரிய ரூபம் செய்து வைத்துள்ளார்கள். உண்மையில் இவ்வளவு பெரியதாக ஒன்றும் இல்லை அல்லவா? அவரோ நட்சத்திரம் போன்று ஆவார். அவருடைய படத்தையோ யாரும் புரிந்து கொள்ள முடியாது. இது பூஜைக்காக மட்டுமே பெரிய படத்தை அமைத்துள்ளார்கள். ஆக இந்த தேவி தேவதா தர்மத்தை யார் ஸ்தாபனை செய்தார்? பெயர் வேண்டும். கிறித்தவர்கள், பௌத்தர்கள் ஆகிய அனைவருக்குமே நம்முடைய தர்மத்தை இன்னார் ஸ்தாபனை செய்தார் என்பது தெரியும். இது அவர்களது தர்ம சாஸ்திரம் என்பது தெரியும். முதன் முதலான முக்கியமான விஷயமே இது தான். எனவே பாபா படங்கள் தயார் செய்விக்கிறார். புரிய வைப்பதற்காகவே தான் தயார் செய்விக்கிறார். முன்பிருந்த படங்களில் எழுதப்படிருந்ததா என்ன? சொர்க்கத்தின் படைப்புக்கர்த்தா பரமபிதா பரமாத்மா ஆவார் என்பதோ புரிய வைக்கப்பட்டுள்ளது. சொர்க்கத்தில் இருப்பது சதா சுகம். இத்தனை எல்லா மனிதர்களும் அங்கு இருப்பார்களா என்ன? விருட்சம் முதலில் சிறியதாக இருந்தது. பிறகு வளர்ந்து கொண்டே போகிறது. சொர்க்கத்தில் மிகவும் குறைவானோர் இருப்பார்கள். நரகத்தில் நிறைய பேர் இருப்பார்கள். சொர்க்கத்தில் தேவி தேவதைகளின் இராஜதானி (ஆட்சி) மட்டுமே இருந்தது. அது வேறு யாருக்கும் தெரியாது. இந்த சிருஷ்டியின் சக்கரம் எப்படி சுற்றுகிறது என்று கேட்க வேண்டும். 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மிகச் சரியாக இங்கு இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. அதற்கு சொர்க்கம் என்று கூறப்பட்டது. அது கடந்து போய் விட்டது. புதிய உலகமாக இருந்தது. இப்பொழுது பழைய நரகமாக ஆகி விட்டுள்ளது. நல்லது. பிறகு என்ன ஆகும்? மீண்டும் சொர்க்கம் வரப்போகிறது. சொர்க்கம் அல்லது முக்தி தாமத்தை பக்தர்கள் நினைவு செய்கிறார்கள். ஏன் நினைவு செய்கிறார்கள்? ஏனெனில் இங்கு துக்கமாக இருக்கிறார்கள். சொர்க்கத்திலோ எப்பொழுதும் சுகமே இருக்கும். தந்தை குழந்தைகளைப் படைத்து துக்கமுடையவர்களாக ஆக்குவாரா என்ன? இவ்வாறு ஆக முடியாது. சத்யுகத்திலிருந்து திரேதா, துவாபரம், கலியுகம் ஆக வேண்டி உள்ளது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சத்யுக முடிவு திரேதாவின் ஆதியின் சங்கமம் ஒன்றும் (கல்யாணகாரி) மங்களகரமானது அல்ல. ஏனெனில் சத்யுகத்தில் 16 கலை சம்பூர்ணமாக இருந்த அதே தேவி தேவதைகள் பிறகு 14 கலையினராக ஆகி விடுகிறார்கள். எனவே அது கல்யாணகாரி யுகமாக ஆக முடியுமா என்ன? பிறகு திரேதாவின் கடைசி துவாபர யுகத்தின் ஆரம்பம் கூட சங்கமம் ஆகிறது. ஆனால் அப்பொழுதும் கலைகள் குறைந்து போகிறது. சதோபிரதான நிலையிலிருந்து சதோ, ரஜோ,தமோவில் விழுகிறார்கள். தமோபிரதானமாக ஆகவே வேண்டி உள்ளது. எனவே இச்சமயத்தில் முழு உலகமும்

    துக்கம் நிறைந்ததாக உள்ளது. இதற்கு அநாதைகளின் உலகம் என்று கூறப்படுகிறது. யாருமே தலைவர், பெரியவர் இல்லை. வீட்டில் தாய் தந்தை இல்லை என்றால் அனைவரும் தங்களுக்குள் சண்டையிட முற்பட்டு விடுகிறார்கள். அப்பொழுது நீங்களோ அநாதைகள் என்று கூறப்படுகிறது. அது எல்லைக்குட்பட்ட விஷயம் ஆகும். இப்பொழுது இது எல்லையில்லாத விஷயம் ஆகும். முழு உலகத்திற்கு யாருமே தலைவர் பெரியவர் கிடையாது. மனிதர்கள் மனிதர்களுடன் சண்டையிடுகிறார்கள். மிருகங்களும் சண்டையிடுகின்றன. யாருமே தலைவர் பெரியவர் இல்லை. தலைவர் தந்தையான படைப்பவர் ஆவார். அவர் வந்த பிறகு தான் அனைத்து குழந்தைகளும் தலைவனுடையவர்களாக ஆகி விடுகிறார்கள். தந்தை குழந்தைகளை சாந்திதாமம் மற்றும் பிறகு சுகதாமம் அழைத்துச் செல்கிறார். முதலில் சதோபிரதானம் பிறகு சதோ, ரஜோ, தமோ. ஒவ்வொரு பொருளும் அப்படியே ஆகிறது. சிறிய குழந்தைகள் கூட சதோபிரதானமாக இருக்கிறார்கள். எனவே பிரியமானவர் களாக இருக்கிறார்கள். அதே குழந்தைகளுக்கு அறிவுரை கிடைக்கவில்லை என்றால் தாய் தந்தையரை தொல்லைப்படுத்த முற்பட்டு விடுகிறார்கள். தொல்லைப்பட்டு கொண்டு விடுகிறார்கள் அல்லவா? சண்டை சச்சரவு செய்து கொண்டு, நோய்வாய்ப் பட்டு விடுகிறார்கள். யாருக்காவது நஷ்டம் ஏற்பட்டு விட்டால், இவ்வாறு கூட துக்கம் ஏற்படுகிறது அல்லவா? சத்யுகத்தில் யாருமே துக்கமுடையவர்களாக ஆவதில்லை. அது இருப்பதே சுகதாமமாக. தந்தை குழந்தைகளுக்காக சொர்க்கத்தைப் படைக்கிறார். அங்கு எப்பொழுதுமே சுகம் இருக்கும். இந்த எல்லையில்லாத உலகம் புதியதாக இருந்தது. இப்பொழுது பழையதாகி விட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பழைய டில்லி மற்றும் புதிய டில்லி உள்ளது அல்லவா? பழையது தனி ஆகும் மற்றும் புதியது தனி ! புது டில்லி பார்ப்பதற்கு எவ்வளவு நன்றாக இருக்கிறது. அதற்காக பழையதை யாராவது இல்லாமல் செய்து விடுவார்கள் என்பதல்ல. பிறகு எங்கு இருப்பார்கள்? இங்கு புதியது பழையது இரண்டுமே உள்ளது. பிறகு இந்த பழையது இடிந்து போய் புதியது அமையும். அதற்குத் தான் சொர்க்கம் என்று கூறப்படுகிறது. டில்லிக்குத் தான் பரிஸ்தான் என்று கூறுகிறார்கள். இச்சமயத்தில் இருப்பது கபர்ஸ்தான் -சுடுகாடு. சத்யுகத்தில் இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. டில்லி பரிஸ்தான் ஆக இருந்தது. அதாவது, சொர்க்கமாக இருந்தது. இப்பொழுது நரகம் ஆகும். சுயம் தந்தை சொர்க்கத்திற்கு அதிபதி ஆவதில்லை. குழந்தைகளைத்தான் ஆக்குகிறார். பாபா நம்மை மீண்டும் சொர்க்கத்தின் அதிபதியாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இத்தனை பேர் எல்லாரும் நிச்சயபுத்தியுடனிருக்கிறார்கள். எனவே பார்த்து, நிச்சய புத்தி உடையவராக ஆக வேண்டும். யாராவது ஒருவர் லண்டனைப் பார்த்து வந்து விட்டு வர்ணனை செய்கிறார் என்றால் நாங்களும் பார்த்த பின் தான் ஏற்றுக் கொள்வோம் என்று கூறுவார்களா என்ன? இங்கோ இத்தனை எல்லா குழந்தைகளும் எங்களுக்கு பகவான் கற்பிக்கிறார் என்று கூறுகிறார்கள் என்றால், பொய் கூறுவதில்லை. ஆனால் பாக்கியத்தில் இல்லையென்றால் புத்தியில் பதியாது.



    இதில் விட வேண்டியது எதுவும் இல்லை என்று தந்தை கூறுகிறார். இது கடைசி பிறவி ஆகும். இல்லற விவகாரங்களில் இருந்தபடியே தாமரை மலர் போல் தூய்மையாக இருக்க வேண்டும். இது மரண உலகம் ஆகும். அது அமர உலகம் ஆகும். சம்பூர்ண நிர்விகாரி உலகம் என்று பாடப்படுகிறது. அங்கு விகாரம் இருப்பதில்லை. எனவே ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா? சர்வகுணங்களில் நிறைந்தவர்கள் .. .. .. என்று மிகச் சரியாக தேவதைகளுக்கு மகிமையும் செய்கிறார்கள். அது நிர்விகாரி உலகமாகவே இருந்தது. நல்லது, குழந்தைகளோ பிறந்து கொண்டு இருக்க கூடும். அவசியம் ஏதாவது (யுக்தி) வழிமுறை இருக்கும். விகாரத்தினால் அல்ல. அங்கு இந்த விஷம் (விகாரம்) இருப்பதில்லை. இங்கு இருப்பவர்கள் சம்பூர்ண விகாரி. அங்கு இருப்பவர்கள் சம்பூர்ண பாவனம் (தூய்மை). ராஜா ராணி எப்படியோ அப்படியே பிரஜைகள். இதில் உங்களுக்கு ஏன் சந்தேகம் எழுகிறது. அங்கு என்ன பழக்க வழக்கம் இருக்குமோ அதற்கேற்ப குழந்தைகள் பிறப்பார்கள். அங்கு விகாரம் இருப்பது இல்லை. இந்த நேச்சர் - வழக்கம், இது மரண உலகத்தினுடையது ஆகும். அங்கோ யாரும் துக்கம் கொடுப்பது இல்லை. மிருகங்கள் கூட ஒன்றுக்கொன்று துக்கம் கொடுப்பது இல்லை. அவைகளும் கூட இவ்வாறே பிறக்கும். இப்பொழுது உங்களுக்கு வேண்டியது என்ன? அமைதி வேண்டும் என்றால், தன்னை ஆத்மா என்று புரிந்து தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால், என்னிடம் வந்து விடுவீர்கள். யார் சொர்க்கத்தில் வரக் கூடியவர்களாக இருப்பார்களோ அவர்கள் நாங்கள் அவசியம் ஞானம் எடுப்போம், சுகம் எடுப்போம் என்று கூறுவார்கள். தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெற வேண்டும். நாம் எல்லையில்லாத தந்தையிடமிருந்து எல்லையில்லாத ஆஸ்தி பெற்று கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தந்தையின் ஸ்ரீமத்படி நடந்து கொண்டிருக்கிறோம். போகப் போக பின் எங்காவது தப்பும் தவறுமான புயல்கள் வந்தது என்றால், நிச்சயம் குறைந்து விடுகிறது. மாயையிடம் தோற்று விடுகிறார்கள். முந்தைய கல்பத்தில் கூட இவ்வாறே ஆஸ்தி எடுத்து எடுத்து தோல்வி அடைந்திருந்தார்கள் என்று தந்தை கூறுகிறார். விகாரத்தில் மாட்டி இருந்தார்கள். நல்ல சேர்க்கை உயர்த்தும், தீய சேர்க்கை வீழ்த்தும் என்றும் பாடப்பட்டுள்ளது. இது சத்தியமானவரின் சேர்க்கை, சத்சங்கம் ஆகும். அவரது ஸ்ரீமத்படி நடப்பதால் நாம் புது உலகத்தில் வந்து விடுவோம். நிச்சயத்தில் சந்தேகம் வந்து விடுகிறது என்றால், ஆஸ்தி கிடைக்காது. இது போல நிறைய பேர் நிச்சயம் ஏற்பட்டு, பிறகு சந்தேக புத்தி உடையவர்களாக ஆகி விடுகிறார்கள். நீங்கள் தாய் தந்தை என்று கூறுகிறீர்கள். பிறகு அவர்களை விட்டு விடுகிறீர்கள். இது கூட நாடகத்தில் பொருந்தி உள்ளது. சிவபாபாவினுடையவர்கள் ஆகிறார்கள். பிறகு அப்பேர்ப்பட்ட தந்தையை கைவிட்டு விடுபவர்களாக ஆகிறார்கள். நீங்கள் இறைவனினுடையவராக ஆக வேண்டுமா? இல்லை இராவணனினுடையவராக ஆக வேண்டுமா? சண்டை உள்ளது அல்லவா? ஒரு சிலர் மாயை மீது வெற்றி அடைந்து பாபாவிடமிருந்து ஆஸ்தி அவசியம் பெற வேண்டும் என்று உணர்ந்திருப்பார்கள். ஸ்ரீமத்படி நடந்து கொண்டே இருக்கிறோம். ஆல்பம் கூட உங்களிடம் உள்ளது. நாங்கள் இல்லறத்தில் இருந்தபடியே தூய்மையாக இருப்போம் என்ற வாக்குறுதி கொடுத்த அனைத்து குழந்தைகளின் படங்கள் உள்ளன. தாமரை மலரை தண்ணீர் தீண்டுவதில்லை. நீங்கள் விகாரி உலகத்தில் இருந்தபடியே விகாரத்தில் போகக் கூடாது. இது உங்களுடைய கடைசி பிறவி ஆகும். தங்களை நிர்விகாரியாக ஆக்குவதால் நீங்கள் நிர்விகாரி உலகத்திற்குச் சென்று விடுவீர்கள். தூய்மையாக ஆவது மிகவும் நல்லது ஆகும். என் மூலமாக நீங்கள் தூய்மை ஆனீர்கள் என்றால் சொர்க்கமான, தூய்மையான உலகிற்கு அதிபதி ஆவீர்கள் என்று தந்தை கூறுகிறார். பதீதமான (தூய்மையற்ற) உலகம் இப்பொழுது அழியப் போகிறது. எவ்வளவு எளிதாக புரிய வைக்கிறார். பிரம்மா மூலமாக சொர்க்கத்தின் ஸ்தாபனை! - ஆக இது நடந்து கொண்டிருக்கிறது. மற்றவர்கள் அனைவரும் கணக்கு வழக்குகளை முடித்து முக்திதாமம் சென்று விடுவார்கள். சத்யுகத்தில் உங்களுக்கு உண்மையான சுகம் கிடைக்கிறது. வைகுண்டம் என்ற பெயரோ பிரசித்தமானது ஆகும். மிகச் சரியாக இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. மனிதர்களுக்கோ எதுவுமே தெரியாது. சந்நியாசிகள் சுயம் நிர்விகாரி ஆகும் பொழுது விகார ஜனங்கள் அவர்களுக்கு பூஜை செய்கிறார்கள். விகாரி ஆவது ஆத்மா ஆகும், பரமாத்மா அல்ல. நாங்கள் நிர்விகாரி ஆகி பரமாத்மா ஆகி, விடுகிறோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அப்படியும் இரண்டு பொருட்களோ உள்ளன அல்லவா? ஆத்மா மற்றும் பரமாத்மா? விகாரிகளுக்கு பரமாத்மா என்று கூறப்படுவதில்லை. நாங்கள் நிர்விகாரி ஆகி, பரமாத்மா ஆகி விடுவோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவ்வாறு ஆக முடியாது என்று தந்தை கூறுகிறார். யாருமே அடைய முடியாது. நான் வந்து அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்வேன். மகாபாரத போர் என்ற அடையாளம் கூட உள்ளது. குழந்தைகளுக்கு இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறேன். மகாபாரத போர் நடக்கிறது என்றால், அவசியம் பகவான் கூட இருக்க வேண்டும். அவர் அனைத்து சிக்கல்களையும் அகற்றி அனைவரது சண்டைகளையும் முடித்து விடுவார். சர்வசக்திவானோ தந்தை ஆவார் அல்லவா? எனது வழிப் படி நடந்தீர்கள் என்றால், நான் உங்களை செர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்கி விடுவேன் என்று கூறுகிறார். கல்ப கல்பமாக நீங்கள் எனது ஸ்ரீமத்படி இது போல சிறந்தவர்களாக ஆகிறீர்கள். அரைகல்பத்திற்குப் பிறகு எனது வழி முடிவடைந்த பின் அசுரவழி ஆரம்பமாகிறது. ஆக நீங்கள் ஏழையாக சோழி போல ஆகி விடுவீர்கள். இப்பொழுது மீண்டும் உங்களை சோழியிருந்து

    வைரம் போல ஆக்குகிறேன். எனவே ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் அல்லவா? பாபா எவ்வளவு சுலபமாகப் புரிய வைக்கிறார்! நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. எந்தவொரு புயலின் காரணமாக நிச்சயத்தில் குறைவு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக சகவாச தோஷத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும். ஸ்ரீமத்படி முழுமையாக நடக்க வேண்டும்.



    2. இந்த கடைசி பிறவியில் ஸ்ரீமத்படி சம்பூர்ண நிர்விகாரியாக அவசியம் ஆக வேண்டும். விகாரி உலகத்தில் இருந்தபடியே விகாரம் தீண்டக் கூடாது என்ற கவனம் கொள்ள வேண்டும்.



    வரதானம்:

    நான் என்ற தன்மையின் கதவை மூடி விட்டு மாயைக்கு விடை கொடுத்து விடக் கூடிய (நிமித்த) கருவி மற்றும் (நிர்மாண்) பணிவுடையவர் ஆவீர்களாக.



    சேவாதாரி சேவை செய்கையில் எப்பொழுதாவது நான் செய்தேன் என்ற எண்ணம் கூட வந்தது என்றால், செய்த காரியம் முழுவதும் தண்ணீரில் (பலனற்று) போய் விடுகிறது. சேவாதாரி என்றால் செய்விப்பவர். ஒரு பொழுதும் மறக்கக் கூடாது. அவர் செய்வித்து கொண்டிருக்கிறார். நாம் கருவியாக ஆகி, செய்து கொண்டிருக்கிறோம். எங்கு கருவி என்ற பாவம் (உள்ளுணர்வு) உள்ளதோ அங்கு பணிவினுடைய பாவம் இயல்பாக இருக்கும். நிமித்தம் (கருவி) ஆவேன். நிர்மான் (பணிவுள்ளவன்) ஆவேன் என்றால், மாயை வர முடியாது. நான் என்ற தன்மையின் கதவை மூடிவிட்டீர்கள் என்றால் மாயை விடை பெற்று கொண்டு விடும்.



    சுலோகன்:

    புனித அன்னங்களின் விசேஷ தன்மை தூய்மை ஆகும். பரிசுத்தமாக ஆகி அனைவரையும் பரிசுத்தப்படுத்துவது தான் அவர்களது சேவை ஆகும்.




    ***OM SHANTI***


    No comments

    Say Om Shanti to all BKs