BK Murli 24 July 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 24 July 2016 Tamil

    24.07.2016  காலை முரளி  ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா''  ரிவைஸ் 22.10.1981  மதுபன்

    ''வள்ளலின் குழந்தைகள் நிரந்தர வள்ளல் ஆகுங்கள் ''

    இன்று இரக்கத்தின் கடல் தன்னுடைய மாஸ்டர் இரக்கக் கடல் குழந்தைகளை சந்திப்பதற்காக வந்திருக்கிறார். பக்தர்கள் பாப்தாதா மற்றும் மிக உயர்ந்த ஆத்மாக்கள் உங்களை இரக்கம் காட்டுபவரே – கிருபை செய்பவரே என்ற பெயரால் மகிமை செய்கிறார்கள். அனைத்து மதங்களின் ஆத்மாக்கள் பாப்தாதாவிடமிருந்து மற்றும் மிக உயர்ந்த ஆத்மாக்கள் உங்களிடமிருந்து முக்கியமான ஒன்றை அவசியம் விரும்புகிறார்கள். ஞானம் மற்றும் யோகாவின் விஷயங்கள் ஒவ்வொரு மதத்திலும் வேறு வேறாக இருக்கிறது, அதைத் தான் அவர்களின் நம்பிக்கை என்று கூறுவது. ஆனால் ஒரு விஷயம் அனைத்து மதங்களிலும் ஒன்றாகவே இருக்கிறது. அனைத்து ஆத்மாக்களும் இரக்கம் மற்றும் கிருபையை அவர்களுடைய மொழியில் ஆசீர்வாதம் என்று கூறுகிறார்கள், அதை அனைவரும் விரும்புகிறார்கள். அனைத்து ஆத்மாக்கள் உங்களிடமிருந்து இந்த இறுதி ஜென்மத்திலும் கொஞ்சம் கிருபை நிறைந்த பார்வையை எம்மீது செலுத்துங்கள் என்ற இதைத் தான் பக்தர்கள் விரும்புகிறார்கள். கொஞ்சம் எங்கள் மேலேயும் இரக்கம் காட்டுங்கள். அனைத்து மதங்களின் முக்கிய அடையாளமாக 'இரக்கத்தை' ஏற்றுக் கொள்கிறார்கள். ஒருவேளை ஏதாவது ஒரு தர்ம ஆத்மா இரக்கம் உடையவராக இல்லை, இரக்க பார்வையுடையவராக இல்லை என்றால், அவரை தர்மத் தலைவர் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தர்மம் என்றால் தயை. அப்படி இன்று பாப்தாதா தயாளு (இரக்கம் நிறைந்தவர்) மற்றும் கிருபாளு (கிருபை நிறைந்தவர்) ஆக எந்த அளவு ஆகியிருக்கிறீர்கள் என்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.



    அனைத்து பிராமண ஆத்மாக்களும் தன்னை ஆதி சனாதன பழைமையான தர்மத்தின் சிரேஷ்ட ஆத்மாக்கள் அதாவது தர்ம ஆத்மாக்கள் என்று நம்பத்தான் செய்கிறார்கள். ஹே தர்ம ஆத்மாக்களே, உங்கள் அனைவரின் முதல் தர்மம் அதாவது தாரணையே, தனக்காகவும், பிராமண குடும்பத்திற்காகவும், உலகின் அனைத்து ஆத்மாக்களுக்காகவும் இரக்க மனமுடையவர் மற்றும் கிருபை திருஷ்டி உள்ளவராக இருப்பது. எனவே எப்பொழுதும் இரக்கத்தின் பாவனை மற்றும் கிருபை திருஷ்டி அனைவருக்காகவும் இருக்கிறதா அல்லது வரிசைக்கிரமமாக இருக்கிறதா என்று உங்களை நீங்களே கேளுங்கள். இரக்க உணர்வு மற்றும் கிருபை திருஷ்டி யார் மேல் வைக்க வேண்டியதாக இருக்கிறது. யார் பலஹீனமான ஆத்மாவோ, பிராப்தி இல்லாத ஆத்மாவோ, ஏதாவது விஷயத்தின் வசமான ஆத்மாவோ, அந்த மாதிரி ஆத்மாக்கள், தயை மற்றும் கிருபையின் ஆசை வைக்கிறார்கள். மேலும் அவர்களுடைய ஆசை இல்லாவிட்டாலும் கூட நீங்கள் வள்ளலின் குழந்தைகள் அந்த ஆத்மாக்களுக்கு நல்ல விருப்பத்தோடு கொடுப்பவர்கள். முழு நாளின் எந்த ஆத்மாக்களின் தொடர்பில் வருகிறீர்களோ, ஞானியாக இருந்தாலும் அல்லது அஞ்ஞானியாக இருந்தாலும், அனைவருக்காகவும் எப்பொழுதும் இதே பார்வை இருக்கிறதா அல்லது வேறு வேறு பார்வையும் இருக்கிறதா? யார் எப்படிப்பட்ட சம்ஸ்காரம் உள்ளவராக இருந்தாலும் இந்த இரக்கம் மற்றும் கிருபையின் பாவனை மற்றும் திருஷ்டியானது, கல்லையும் கூட தண்ணீர் ஆக்க முடியும். எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவர்களுடைய நிலையில் நிலைத்துவிடுவர், சுபாவத்தின் மோதலில் வருபவர்கள் கூட நல்லோர் ஆகி விட முடியும். கோப அக்னி யோக அக்னியாக மாறிவிடும். அனேக ஜென்மங்களின் கடுமையான கணக்கு வழக்கு ஒரு நொடியில் முடிவடைந்து புதிய சம்மந்தம் ஏற்பட்டு விடும். எவ்வளவு தான் விரோதியாக இருந்தாலும் இந்த விதி மூலம் கட்டி அணைப்பவராக ஆகிவிடுவார். ஆனால் இவை அனைத்திற்குமான ஆதாரம் 'இரக்க உணர்வு'. இந்த மாதிரி சூழ்நிலை மற்றும் இந்த மாதிரி நேரத்தில் இரக்க உணர்வு அவசியம் தேவைப்படுகிறது. தேவையான நேரத்தில் செய்யவில்லை என்றால் மாஸ்டர் இரக்கக்கடல் என்று கூறுவோமா? யாரிடம் இரக்க உணர்வு இருக்குமோ அவர் எப்பொழுதும் நிராகாரி, நிர்விகாரி மற்றும் நிர்அகங்காரியாக இருப்பார். எண்ணத்தில் நிராகாரி, வார்த்தையில் நிர்விகாரி, காரியத்தில் நிர்அகங்காரி, இவரைத் தான் இரக்கம் காட்டும் மற்றும் கிருபையான ஆத்மா என்று கூறுவது. அப்படி ஹே, இரக்கத்தில் நிரம்பிய களஞ்சியமாக இருக்கும் ஆத்மாக்களே ! தேவையான நேரத்தில் எந்த ஆத்மாவிற்காகவும் இரக்க உணர்வின் அஞ்சலியும் கொடுக்க முடியாதா? நிரம்பிய களஞ்சியத்திலிருந்து அஞ்சலி கொடுத்து விட்டீர்கள் என்றால், முழு பிராமண பரிவாரத்தின் பிரச்சனைகளே முடிவடைந்து விடும். உங்கள் அனைவரின் அனாதி, ஆதி சம்ஸ்காரமே அழியாத வள்ளல் தன்மையினுடையது. தேவதை என்றால், கொடுப்பவர். சங்கம யுகத்தில் மாஸ்டர் வள்ளல் ஆவீர்கள். அரைக்கல்பம் தேவதை அதாவது கொடுப்பவர்களாக இருக்கிறீர்கள். துவாபர்யுகத்திலிருந்து கூட உங்களுடைய ஜட விக்கிரகங்கள் கொடுக்கக்கூடிய தேவதைகள் என்றே கூறப்படுகிறார்கள். அப்படி முழுக் கல்பத்தின் சம்ஸ்காரம் வள்ளல் தன்மையினுடையது. அந்த மாதிரி வள்ளல் தன்மையின் சம்ஸ்காரம் உள்ள நிரம்பிய ஆத்மாக்களே, தேவையான நேரத்தில் ஏன் வள்ளல் ஆவதில்லை? ஏதாவது பெற வேண்டும் என்ற பாவனையை வள்ளலின் குழந்தைகள் வைக்க முடியாது. அடுத்தவர் கொடுத்தார் என்றால் தான் நான் கொடுப்பேன் என்பவர் தேவதை அல்ல, யாசிப்பவராக ஆகிவிட்டார். அப்படியானால் நீங்கள் எந்த மாதிரி ஆத்மாக்கள்? தேவதையா அல்லது யாசிப்பவரா?



    ஹே, ஆசை என்றால் என்னவென்று அறியாத ஆத்மாக்களே ! அற்ப காலத்தின் ஆசையின் காரணமாக தேவதைக்குப் பதிலாக யாசிப்பவராக ஆகாதீர்கள். கொடுத்துக் கொண்டே இருங்கள், கொடுத்துக் கொண்டே எத்தனை என்று எண்ணாதீர்கள். நான் எவ்வளவு செய்தேன், இவர் செய்யவில்லை, என்ற இந்த எண்ணிக்கை பார்ப்பது வள்ளல் தன்மையின் சம்ஸ்காரம் இல்லை. பரந்த மனமுடைய தந்தையின் குழந்தைகள் இந்த விஷயங்களில் எண்ணிக்கை செய்வதில்லை. களஞ்சியம் நிரம்பி இருக்கிறது ஏன் எண்ணிக்கை செய்கிறீர்கள்? சத்யுகத்தில் கூட எந்தவொரு கணக்கு வழக்கையும் எண்ணிக்கை செய்வதில்லை. இராஜ குடும்பம், இராஜ வம்சத்தினர் மாஸ்டர் வள்ளலாக இருப்பார்கள். அங்கே இந்த இவ்வளவு கொடுத்தேன், இவ்வளவு செய்தேன் என்ற வியாபார முறை இருக்காது. யார் எவ்வளவு பெற்றுக் கொள்வாரோ அந்த அளவு நிரம்பிவிடுவார். இராஜ வம்சம் என்றால் வள்ளலின் வீடு. இந்த சம்ஸ்காரத்தை நிரப்ப வேண்டும். எங்கே நிரப்ப வேண்டும், சத்யுகத்திலா? இப்பொழுதிலிருந்தே நிரப்ப வேண்டும் இல்லையா. இங்கேயும் கூட தந்தையுடன் வியாபார கணக்கை செய்கிறார்கள். தந்தை என்னிடம் கேட்கவில்லை, தந்தை என் மூலம் செய்யவில்லை. மேலும் உங்களுக்குள்ளோ இதை மிக அதிகமாக செய்கிறீர்கள். மகாராஜா ஆகுங்கள், வள்ளலின் குழந்தை வள்ளல் ஆகுங்கள். இவர் செய்தார் அதனால் நானும் இதைச் செய்தேன், இவர் இரண்டு கூறினார்: பதிலுக்கு அப்பொழுது நானும் நான்கு கூறினேன். இவர் இரண்டு தடவை சொன்னார் அல்லது செய்தார், நான் ஒரு தடவை செய்தேன். இந்த மாதிரி கணக்கை வள்ளலின் குழந்தைகள் செய்ய முடியாது. யாராவது உங்களுக்கு கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி, ஆனால் நீங்கள் கொடுத்துக் கொண்டே இருங்கள். இதைத் தான் இரக்க உணர்வு மற்றும் கிருபை நிறைந்த பார்வை என்று கூறுவது. எனவே ஹே இரக்கமுடைய, கிருபை உடைய ஆத்மாக்களே ! கொடுப்பவர்களாக ஆகுங்கள். புரிந்ததா?



    பாப்தாதாவிடம் அனைத்து குழந்தைகளின் கணக்கு இருக்கிறது. முழு நாளில் எவ்வளவு நேரம் இரக்கமுடையவர் மற்றும் கிருபை உடையவர் ஆகிறார்கள்? மேலும் எவ்வளவு நேரம் கொடுப்பதற்கான பாவனைக்குப் பதிலாக பெறுவதற்கான எண்ணம் வைக்கிறார்கள் என்ற இந்த முழு நாளின் லீலையை பாப்தாதா பார்க்கிறார்கள். எப்படி நீங்கள் இந்த வீடியோ செட்டை இணைத்திருக்கிறீர்கள் என்றால் பார்க்கவும் செய்கிறீர்கள், மேலும் கேட்கவும் செய்கிறீர்கள். அப்படி பாப்தாதாவிடமோ ஒவ்வொருவருக்காகவும், டி.வி செட் இருக்கிறது. எப்பொழுது விரும்புகிறாரோ அப்பொழுது பொத்தானை அழுத்த முடியும்.



    இது சேவைக்கான சாதனம் மற்றும் அது தந்தை குழந்தைகளின் நிலைமையை தெரிந்து கொள்ளும் சாதனம். இந்த அனைத்து சாதனங்களுமே இறுதி நேரத்தில் அழிந்து விடும். இந்த வீடியோ காரியத்திற்கு உதவாது. ஆனால் வில் பவரின் (மனோபலம்) செட் உபயோகத்தில் வரும். ஆனால் அறிவியலைச் சேர்ந்த குழந்தைகள் யார் இந்த அளவு நேரம், சக்தி, பணத்தை செலவு செய்து சாதனத்தை உருவாக்கியிருக்கிறார்களோ, அப்படி குழந்தைகளின் உழைப்பு தந்தையின் சேவையில் ஈடுபடுத்தப்படுகிறது எனவே தந்தையும் குழந்தைகளின் கடும் உழைப்பைப் பார்த்து, இவர்கள் சேவைக்கான சாதனம் மிக நன்றாக உருவாக்கியிருக்கிறார்கள் என்று குஷி அடைகிறார். இருந்தாலும் அவர்களும் குழந்தைகள் தான் இல்லையா? தந்தை, குழந்தைகளின் கண்டு பிடிப்பைப் பார்த்து குஷி அடைவார் இல்லையா? எந்தக் காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறார்களோ, அதே காரியத்தில் வெற்றி அடைந்து கொண்டிருக்கிறார்கள். அது அற்ப காலத்திற்கானதாக இருந்த போதிலும் வெற்றியோ இருக்கிறது இல்லையா? எனவே பாப்தாதா வீடியோ செட்டைப் பார்ப்பதில்லை. ஆனால் அந்தக் குழந்தைகளை பார்க்கிறார். நல்லது.



    இதே சாதனம் மூலமாக பாரதம் மற்றும் வெளிநாட்டில் நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகள் பார்க்கிறார்கள் மற்றும் கேட்கிறார்கள் என்றால், பாப்தாதாவும் நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கு, யார் இன்று மதுபன்னில் என்ன நடக்கும் என்ற இந்த ஆர்வத்திலேயே அமர்ந்திருக்கிறார்கள், உடலால் பாரதம் மற்றும் வெளிநாட்டில் இருக்கிறார்கள், ஆனால் சூட்சும ரூபம் மூலமாக மதுபன்நிவாசியாக இருக்கிறார்கள். பாப்தாதா அந்த அனைத்து ஒளி வடிவ உடலிலிருக்கும் நினைவு சொரூப ஆத்மாக்களுக்கு, விசேஷ அன்பு நினைவுகளைக் கொடுக்கிறார். பாப்தாதா ஒரு சபையைப் பார்ப்பதில்லை, இரண்டு சபைகளைப் பார்க்கிறார். ஒன்று நேரெதிரில் ஸ்தூலமாக இருக்கும் சபை மற்றும் இன்னொன்று, சூட்சும சபை. அனைவரின் நினைவு வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது. நல்லது. அனைத்து கடிதங்களுக்கும் ஒரே ஒரு பதில், அவர்கள் தந்தையை நினைவு செய்கிறார்கள், தந்தை பல மடங்கு அந்த குழந்தைகளை நினைவு செய்கிறார். எப்படி அவர்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அதே போல் தந்தை ஒவ்வொரு குழந்தைகளின் குணங்களின் மாலையை எப்பொழுதும் நினைவு செய்கிறார். அனைத்து குழந்தைகளுக்கும் சந்திப்பதின் ஒரே ஒரு எண்ணம் தான் இருக்கிறது. மேலும் பாப்தாதாவும் அந்த மாதிரி சந்திப்பைச் செய்யக்கூடிய, எண்ணத்தை வைக்கும் ஆத்மாக்களுக்கு விசேஷமாக அமிர்தவேளையின் சந்திப்பில், அதற்கான பலனைக் கொடுக்கிறார். மேலும் அனைவருக்கும் சேவைக்கான விசேஷ எண்ணத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். நல்லது.



    அந்த மாதிரி எப்பொழுதும் இரக்க உணர்வு மற்றும் கிருபை திருஷ்டி வைத்திருக்கக்கூடிய, எப்பொழுதும் கொடுக்கக்கூடிய, பெறுவதற்கான விருப்பம் வைக்காத, ஆசை என்றால் என்னவென்று அறியாத நிலையில் இருக்கக்கூடிய ஆத்மாக்களுக்கு, அந்த மாதிரி இராஜ வம்ச சம்ஸ்காரம் உள்ள சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    டீச்சர்களுடன் சந்திப்பு –

    நீங்கள் அனைவரும் பாப்தாதாவின் விசேஷ சகயோகி ஆத்மாக்கள். யார் அன்பானவராக இருக்கிறாரோ அவர் தான் சகயோகி ஆக முடியும். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு சகயோகம் கொடுக்காமல் இருக்க முடியாது. அப்படி சேவாதாரி என்றால் அன்பானவர் மற்றும் சகயோகி. உடன் இருப்பவர்கள், ஒத்துழைப்பு கொடுப்பவர்கள் மற்றும் இறுதியில் உடன் செல்பவர்கள். அப்படி மூன்றிலும் எவரெடியாக இருப்பவர்கள். உடன் இருப்பது மற்றும் ஒத்துழைப்பு கொடுப்பது தற்போது உள்ளது. அடுத்து செல்வது பிற்காலத்தில். எப்பொழுது இரண்டு விஷயங்களுமே சரியாகி விடுகின்றன என்றால், மூன்றாவதின் தேதியும் வந்து விடும். நீங்கள் அனைவரும் பொறுப்பில் இருக்கும் ஆத்மாக்கள் தான் இல்லையா? எந்த அளவு நீங்கள் ஒத்துழைப்பு கொடுப்பீர்களோ, உடன் இருப்பீர்களோ அந்த அளவு உங்களைப் பார்த்து மற்றவர் களுக்கும் ஊக்கம் உற்சாகம் இயல்பாகவே அதிகரிக்கும். ஒருவர் நீங்கள் அனேகர்களுக்கு பொறுப்பாளராக இருக்கிறீர்கள். நான் இல்லை, ஆனால் தந்தை என்னை பொறுப்பாளர் அதாவது கருவியாக்கி இருக்கிறார். நான் என்ற உணர்வு முடிந்து விட்டது தான் இல்லையா? நான் என்பதற்குப் பதிலாக என்னுடைய பாபா, நான் செய்தேன், நான் சொன்னேன் என்பதற்குப் பதிலாக தந்தை செய்வித்தார், தந்தை செய்தார் என்றிருக்க வேண்டும், பிறகு பாருங்கள் வெற்றி சுலபமாக கிடைத்துவிடும். உங்களுடைய வாயிலிருந்து எந்த அளவு பாபா பாபா என்பது வெளியாகுமோ அந்த அளவு அனேகர்களை பாபாவின் குழந்தையாக ஆக்க முடியும். அனைவரது வாயிலிருந்தும் இவருடைய கௌரவத்தில் மற்றும் விஷயத்தில் பாபாவே பாபா தான் என்ற வார்த்தை வெளியாகும். அப்பொழுது தான் மற்றவர்களுக்கும் அந்த கௌரவம் வந்து விடும். எந்த விஷயம் முழு ஈடுபாட்டில் இருக்குமோ அதுவே விஷயமாகவும் ஆகிவிடும். பாப்தாதா சின்னஞ்சிறு குமாரிகளின் தைரியம் மற்றும் தியாகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். பெரியவர்களோ அனுபவித்து விட்ட பிறகு என்ன தியாகம் செய்திருக்கிறார்கள், அதுவொன்றும் பெரிய விஷயம் இல்லை. அனுபவித்துப் பார்த்தார்கள் பிறகு அதை விட்டார்கள். ஆனால் இவர்களோ விவேகத்தின் காரியத்தை செய்து விட்டார்கள். எந்த அளவு சிறியவர்களோ அந்த அளவு பெரிய புத்திசாலிகள்.



    பார்ட்டிகளுடன் சந்திப்பு :

    குஜராத் -எப்பொழுதும் தன்னை மகாவீர் அதாவது மகான் ஆத்மா என்று புரிந்து நடந்து கொள்கிறீர்களா? யாருடைய குழந்தையாக ஆகியிருக்கிறேன் மற்றும் என்னவாக ஆகியிருக்கிறேன் என்ற இதை மட்டும் யோசித்தீர்கள் என்றால், ஒருபொழுதும் தேக உணர்வில் வர முடியாது. தேக உணர்வை விட்டு விலகி மேல் நிலையில் இருங்கள் அதாவது பரிஷ்தா ஆகி மேலே பறந்து கொண்டே இருங்கள். பரிஷ்தாக்கள் கீழே வருவதில்லை, பூமியில் கால் வைப்பதில்லை. இந்த தேக உணர்வு கூட தேகம் என்ற தரை ஆகும். எப்பொழுது பரிஷ்தா ஆகிவிட்டீர்களோ பிறகு தேகத்தின் பூமியில் எப்படி வர முடியும். பரிஷ்தா என்றால் மேலே பறப்பவர். நீங்கள் அனைவருமே பறக்கும் பறவைகளா, கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகளாக இல்லையே? அரைக்கல்பமோ கூண்டில் அடைக்கப்பட்டிருந்தீர்கள், இப்பொழுது பறக்கும் பறவை ஆகிவிட்டீர்கள். கீழே உள்ள ஈர்ப்பு உங்களை இழுக்க முடியாது. கீழே இருந்தீர்கள் என்றால், வேட்டைக்காரன் வேட்டையாடி விடுவான், மேலே பறந்து கொண்டே இருந்தீர்கள் என்றால் யாரும் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் அனைவரும் பறக்கும் பறவைகள் தான் இல்லையா? கூண்டு அழிந்து விட்டதா? எவ்வளவு தான் அழகான கூண்டாக இருந்தாலும் கூட அதுவும் பந்தனம் தான் இல்லையா? இந்த ஆன்மீக சம்மந்தமும் தங்கக் கூண்டாகும், இதிலேயும் மாட்டிக் கொள்ளக் கூடாது. சுதந்திரமாக இருப்பது என்றால், முழுமையான சுதந்திரம் ! எப்பொழுதும் பந்தனமற்ற நிலையில் இருப்பவர் தான் ஜீவன்முக்த் நிலையின் அனுபவம் செய்ய முடியும். நல்லது.



    டெல்லி -

    இப்பொழுது டெல்லியில் வியாபாரிகள் யாருமே உருவாகவில்லை. வியாபாரி ஒருவர் லட்சக்கணக்கானவர்களை முன்னேறச் செய்ய முடியும். ஏனென்றால் ஒரு வியாபாரி அனேகர்களின் தொடர்பில் வருவார். எத்தனை பேர்களின் தொடர்பில் வருகிறாரோ அவர்களில் பாதி பேர்கள் கூட செய்தியை கேட்பவர்களாக இருந்தார்கள் என்றால் எவ்வளவு பேர் உருவாகிவிடுவார்கள். இதுவும் வியாபாரம். வியாபாரிக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும். சேவைக்கான வாய்ப்பு வியாபாரிகளுக்கு மிக நன்றாக இருக்கிறது. இப்பொழுது வியாபாரிகளின் குரூப்பை தயார் செய்து வாருங்கள்.



    சேவாதாரிகளுடன் சந்திப்பு -

    எவ்வளவு உயர்ந்த மகத்துவம் யக்ஞத்திற்கு இருக்கிறதோ அந்த அளவு யக்ஞ சேவாதாரிகளுக்கும் மகத்துவம் இருக்கிறது. இந்த சேவையின் நினைவுச்சின்னம் இன்று வரையிலும் அனேக தர்ம ஸ்தானங்களில் இருக்கிறது. எந்த இடங்கள் எல்லாம் பிற்காலத்தில் தர்ம ஸ்தானமாக ஆகின்றனவோ, அதே ஸ்தானங்களில் சேவைக்காகவும் மகத்துவம் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். அப்படி சைத்தன்ய மஹாயக்ஞத்தின் சேவாதாரிகளுக்கு எவ்வளவு மகத்துவம் இருக்கிறது. நீங்கள் சேவை செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் பல மடங்கு பலன் என்ற வெண்ணையை அருந்திக் கொண்டிருக்கிறீர்கள். உலகில் கூட செல்வந்தர்களாக யார் இருக்கிறார்களோ அவர்களைப் பற்றி இவர் எப்பொழுதுமே வெண்ணை அருந்திக்கொண்டிருப்பவர் என்று கூறுவார்கள். ஏழையைப் பற்றி இவர் கஞ்சி குடிக்கிறார் என்று கூறுவார்கள் மற்றும் செல்வந்தர்களுக்காக இவர் வெண்ணை சாப்பிடுகிறார் என்று கூறுவார்கள். சேவாதாரி என்றால் வெண்ணை அருந்துபவர். அப்படி யானால் நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் ஆகிவிட்டீர்கள். ஒவ்வொரு அடியிலும் இரட்டை வருமானம். மனதின் மூலமாகவும் காரியங்கள் மூலமாகவும் வருமானம். மனம் மூலம் என்றால் நினைவில் இருந்து கொண்டு சேவை செய்கிறீர்கள் என்றால் இரட்டை வருமானம் ஆகிவிட்டது இல்லையா. யார் எந்த அளவு வருமானம் செய்கிறார்கள் என்பதை ஒவ்வொருவரும் அவர்களே தெரிந்து கொள்ள முடியும். சேவையின் களஞ்சியம் நிரம்பியிருக்கிறது. மஹா யக்ஞம் என்றால் சேவையின் களஞ்சியம். சேவையின் களஞ்சியம் நிரம்பியிருக்கிறது, யார் எவ்வளவு விரும்புகிறார்களோ அவ்வளவு செய்யலாம். வரையறையும் இல்லை. மேலும் எண்ணி எண்ணி கொடுப்பதும் இல்லை. இந்த வேலை முடிவடைந்து விட்டது, இப்பொழுது நான் என்ன செய்வது என்ற எல்லையும் இல்லை, களஞ்சியம் நிரம்பியிருக்கிறது. எல்லைக்கப்பாற்பட்ட களஞ்சியம், எனவே எவ்வளவு செய்ய விரும்புகிறீர்களோ அந்த அளவு செய்ய முடியும். இது அனைத்தும் நிறைந்தவராக ஆவதற்கான லாட்டரி. லாட்டரியோ கிடைத்திருக்கிறது, இப்பொழுது லாட்டரியில் நான் எந்த லாட்டரியைப் பெற்றிருக்கிறேன், பல கோடியா, லட்சங்களா, ஆயிரங்களா அல்லது நூறா, இது உங்கள் மேல் இருக்கிறது. இது மிகப்பெரிய லாட்டரி, பல கோடிகளையும் பெற முடியும்.



    பாப்தாதாவும் சேவாதாரி ஆகி வருகிறார். உலகத்தின் அனைத்து சக்திகள் நிறைந்த அதிகாரம் உள்ளவரின் முதல் சொரூபமே உலக சேவகன் தான் இல்லையா? எப்படி தந்தையோ அதே போல் குழந்தைகளும் என்ற வர்ணனையும் இருக்கிறது. நீங்கள் தடையற்ற சேவாதாரி தான் இல்லையா? சேவையின் இடையில் ஏதாவது தடை வருவதில்லையே? வாயுமண்டலத்தின், உடன் இருப்பவர்களின், சோம்பலின், விதவிதமான தடைகள் இருக்கின்றன. அப்படி எந்த விதமான தடை வந்தாலும் சேவை துண்டிக்கப்பட்டது இல்லையா? துண்டுபடாத, இடைவிடாத சேவை இருக்க வேண்டும். எந்த விதமான தடையிலும் ஒருபொழுதும் வராதீர்கள். தடையற்ற சேவை அதற்குத் தான் மகத்துவம் இருக்கிறது. எண்ண அளவில் கூட கொஞ்சம் கூட தடை வேண்டாம். அந்த மாதிரி இடைவிடாத சேவாதாரி ஒருபொழுதும் எந்தவொரு பாதிப்பிலும் வர மாட்டார். ஒருபொழுதும் ஏதாவது வீணானவற்றின் பாதிப்பில் வராதீர்கள். அப்பொழுது தான் சேவை வெற்றி பெறும். இல்லை என்றால், சேவையில் வெற்றி இருக்காது. நல்லது.



    வரதானம் :

    சந்தேகத்தின் எண்ணங்களை முடிவுகட்டி மாயாவை வென்றவர் ஆகக்கூடிய வெற்றி இரத்தினம் ஆகுக !



    ஒருபொழுதும் நான் தோல்வி அடைந்து விடுவேனோ என்னவென்று தெரியவில்லையே ! என்ற இந்த சந்தேகம் நிறைந்த எண்ணம் முன்பாகவே உருவாக வேண்டாம். சந்தேகபுத்தி உடையவராக இருப்பதினால் தான் தோல்வி ஏற்படுகிறது. எனவே நான் வெற்றியை அடைந்தே காண்பிப்பேன் என்ற இந்த எண்ணம் தான் எப்பொழுதும் இருக்க வேண்டும். வெற்றியோ என்னுடைய பிறப்புரிமை, அந்த மாதிரி உரிமை உடையவராகி காரியம் செய்வதினால் வெற்றியின் அதிகாரம் அவசியம் கிடைக்கிறது, இதன் மூலமாகத் தான் வெற்றி இரத்தினம் ஆகிவிடுவீர்கள். எனவே மாஸ்டர் ஞானம் நிறைந்தவரின் வாயிலிருந்து ஒருபொழுதும் தெரியவில்லை என்ற வார்த்தை வெளியாகக்கூடாது.



    சுலோகன் :

    இரக்க பாவனை சுலபமாகவே பொறுப்புணர்வை வெளிப்படுத்தி விடுகிறது !



    ***OM SHANTI***