BK Murli 31 May 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 31 May 2017 Tamil

    31.05.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! ஸ்ரீமத் படி தூய்மையாக ஆவீர்களானால் தர்மராஜரின் தண்டனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வைரம் போல் ஆக வேண்டுமானால் ஞான அமிர்தத்தை அருந்துங்கள். விஷத்தை விட்டு விடுங்கள்.



    கேள்வி :

    சத்யுக பதவிக்கான முழு ஆதாரமும் எந்த விஷயத்தின் மீது உள்ளது?



    பதில் :

    தூய்மையின் மீது. நீங்கள் நினைவில் இருந்து அவசியம் தூய்மையாக ஆக வேண்டும். தூய்மையாக ஆவதன் மூலம் தான் சத்கதி கிடைக்கும். யார் தூய்மையாகவில்லையோ, அவர்கள் தண்டனை பெற்று தங்களின் தர்மத்தில் சென்று விடுவார்கள். நீங்கள் வீட்டில் இருங்கள், ஆனால் எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யாதீர்கள். தூய்மையாக இருப்பீர்களானால் உயர்ந்த பதவி கிடைத்து விடும்.



    பாடல் :

    உங்களை அடைந்து நாங்கள் உலகத்தை அடைந்தோம்.....



    ஓம் சாந்தி.

    சிவபகவான் சொல்கிறார், வேறு யாரையுமே பகவான் எனச் சொல்லப் படுவதில்லை. ஒரு நிராகார் பரமபிதா பரமாத்மா மட்டுமே சிவபாபா எனச் சொல்லப் படுகிறார். அவர் தான் அனைத்து ஆத்மாக்களின் தந்தை. முதன்-முதலில் இந்த நிச்சயம் இருக்க வேண்டும் - நாம் சிவபாபாவின் குழந்தைகள் தான். துக்கத்தின் சமயத்தில் சொல்கின்றனர் - பரமாத்மா, உதவி செய்யுங்கள், இரக்கம் வையுங்கள் என்று. நாம் ஆத்மா பரமாத்மாவை நினைவு செய்கிறோம் என்பதை அறியவில்லை நான் ஆத்மா என்னுடைய தந்தை அவர். இச்சமயம் முழு உலகமுமே தூய்மையில்லாத ஆத்மாக்களினுடையதாக உள்ளது. நாங்கள் பாவி, நீசர்கள், தாங்கள் சம்பூர்ண நிர்விகாரி எனப் பாடுகின்றனர். ஆனால் பிறகும் கூட தங்களைப் பற்றிப் புரிந்து கொள்வதில்லை. பாபா புரிய வைக்கிறார், நீங்கள் சொல்கிறீர்கள், பகவான் தந்தை ஒருவர் என்று அப்படியானால் நீங்கள் அனைவரும் உங்களுக்குள் சகோதர-சகோதரர் ஆகிறீர்கள். பிறகு சரீரத்தின் ரீதியில் அனைவரும் சகோதர- சகோதரிகள் ஆகின்றனர். சிவபாபாவின் குழந்தைகள் பிறகு பிரஜாபிதா பிரம்மாவுக்கும் குழந்தைகள் ஆகின்றனர். இவர் உங்களுடைய எல்லையற்ற தந்தை, ஆசிரியர் மற்றும் குரு. இவர் சொல்கிறார், நான் உங்களை தூய்மை இழக்க வைப்பதில்லை. நானோ உங்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவே வருகிறேன் - எனது அறிவுரைப்படி நடப்பீர்களானால். இங்கோ மனிதர்கள் அனைவரும் இராவணனின் வழிப்படி நடப்பவர்கள். அனைவரிடமும் 5 விகாரங்கள் உள்ளன. பாபா சொல்கிறார், ஹே குழந்தைகளே, இப்போது நிர்விகாரி ஆகுங்கள். ஸ்ரீமத் படி நடந்து செல்லுங்கள். ஆனால் விகாரங்களை விடுவதே இல்லை. இதனால் சொர்க்கத்தின் எஜமானர் ஆவதே இல்லை. அனைவரும் அஜாமில் போன்ற பாவிகளாக ஆகி விட்டுள்ளனர். இராவண சம்பிரதாயம், இது சோகவாட்டிக்கா (சோகவனம்) - எவ்வளவு துக்கத்தில் உள்ளனர்! பாபா வந்து பிறகு இராமராஜ்யத்தை உருவாக்குகிறார். ஆக, குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், இது உண்மையிலும் உண்மையான யுத்த மைதானம். கீதையில் பகவான் சொல்கிறார், காமம் மகாசத்ரு, அதன் மீது வெற்றி கொள்ளுங்கள். அதையும் வெற்றி கொள்வதில்லை. இப்போது பாபா வந்து புரிய வைக்கிறார். ஆத்மா நீங்கள் உங்கள் உடல் உறுப்புகள் மூலம் கேட்கிறீர்கள், பிறகு மற்றவர்களுக்கும் சொல்கிறீர்கள், நடிப்பை ஆத்மா செய்கிறது. நாம் ஆத்மா சரீரத்தை தாரணை செய்து பார்ட்டை நடிக்கின்றோம். ஆனால் மனிதர்கள் ஆத்ம அபிமானி ஆவதற்கு பதிலாக தேக அபிமானி ஆகி விட்டுள்ளனர். இப்போது பாபா சொல்கிறார், தேகி (ஆத்ம) அபிமானி ஆகுங்கள். சத்யுகத்தில் ஆத்ம அபிமானிகள் உள்ளனர். பரமாத்மா பற்றி அவர்களுக்குத் தெரியாது. இங்கே நீங்கள் தேக அபிமானியாக இருக்கிறீர்கள். மேலும் பரமாத்மாவைப் பற்றியும் அறியாதிருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு இதுபோல் துர்கதி (தாழ்வான நிலை) ஏற்பட்டுள்ளது. துர்கதியைப் பற்றியும் புரிந்து கொள்ளவில்லை. யாரிடம் செல்வம் நிறைய உள்ளதோ, அவர்கள் தாங்கள் சொர்க்கத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டுள்ளனர். பாபா சொல்கிறார், இவர்கள் அனைவரும் ஏழையாகி விடுவார்கள். ஏனென்றால் விநாசம் ஏற்படப் போகிறது. விநாசம் நடப்பதோ நல்லது தான் இல்லையா? நாம் பிறகு முக்திதாமத்திற்குச் சென்று விடுவோம். இதற்காக குஷி அடைய வேண்டும். நீங்கள் இறந்து விடுவதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களோ இறப்பதற்கு பயப்படுகின்றனர். பாபா உங்களை வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காகத் தகுதி உள்ளவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். தூய்மை இல்லாதவர்கள் தூய்மை இல்லாத உலகத்தில் தான் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கின்றனர். சொர்க்கவாசி இங்கே யாரும் கிடையாது. முக்கியமான விஷயம் பாபா சொல்கிறார், தூய்மையாகுங்கள். தூய்மையாகாமல் தூய்மையான உலகத்திற்குச் செல்ல முடியாது. தூய்மையின் காரணத்துக்காகத் தான் அபலைகள் மீது அடி விழுகிறது. விஷத்தை அமிர்தம் என நினைக்கின்றனர். பாபா சொல்கிறார், ஞான அமிர்தத்தினால் உங்களை வைரம் போல் ஆக்குகிறேன். பிறகு நீங்கள் விஷத்தை அருந்தி சோழி போல் ஏன் ஆகிறீர்கள்? அரைக்கல்பமாக நீங்கள் விஷத்தை அருந்தினீர்கள். இப்போது எனது ஆணையை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் தர்மராஜரின் தண்டனையை அடைய நேரிடும். லௌகிக் தந்தையும் சொல்கிறார், குழந்தைகளே, குலத்தின் பெயரைக் கெடுக்கிற மாதிரி எந்த ஒரு காரியமும் செய்து விடாதீர்கள். எல்லையற்ற தந்தை சொல்கிறார், ஸ்ரீமத் படி நடந்து செல்லுங்கள். தூய்மையாகுங்கள். காமசிதையில் அமர்ந்ததினால் உங்கள் முகம் கருப்பாகவே உள்ளது, இன்னும் கருப்பாக ஆகிவிடும். அதனால் இப்போது உங்களை ஞான சிதையில் அமர்த்தி வைத்து வெள்ளையாக (தூய்மையாக) ஆக்குகிறேன். காமசிதையில் அமர்வதால் சொர்க்கத்தின் முகத்தையும் (வாயிலை) பார்க்க முடியாது. அதனால் பாபா சொல்கிறார், இப்போது ஸ்ரீமத் படி நடந்து செல்லுங்கள். பாபாவோ குழந்தைகளோடு தான் உரையாடுவார் இல்லையா? குழந்தைகள் தான் அறிவார்கள் - பாபா நமக்கு சொர்க்கத்தின் ஆஸ்தியைத் தருவதற்காக வந்துள்ளார். கலியுகம் இப்போது முடியப் போகிறது. யார் பாபாவின் ஸ்ரீமத் படி நடக்கின்றனரோ, அவர்களுக்குத் தான் சத்கதி கிடைக்கும். தூய்மையாகவில்லை என்றால் தண்டனை பெற்று தங்களின் தர்மத்தில் சென்று விடுவார்கள். பாரதவாசிகள் தான் சொர்க்கவாசிகளாக இருந்தனர். இப்போது தூய்மை இழந்தவர்களாகி விட்டுள்ளனர். சொர்க்கத்தைப் பற்றியே தெரியாது. அதனால் பாபா சொல்கிறார், நீங்கள் எனது ஸ்ரீமத் படி நடக்காமல் மற்றவர்களின் வழிப்படி நடந்து விகாரத்தில் சென்று விட்டீர்களானால் இறந்து விட்டீர்கள். பிறகு கடைசியில் வேண்டுமானால் சொர்க்கத்தில் வரலாம். ஆனால் மிக லேசான பதவி பெறுவீர்கள். இப்போது யார் பணக்காரர்களாக உள்ளனரோ, அவர்கள் ஏழையாகி விடுவார்கள். யார் இங்கே ஏழையாக உள்ளனரோ, அவர்கள் பணக்காரர்களாக ஆகி விடுவார்கள். பாபா ஏழைப்பங்காளர் ஆவார். அனைத்தும் தூய்மையின் ஆதாரத்தில் தான் உள்ளது. பாபாவிடம் யோகம் (புத்தியின் தொடர்பை) வைப்பதன் மூலம் நீங்கள் தூய்மையாவீர்கள். பாபா குழந்தைகளுக்கப் புரிய வைக்கிறார், நான் உங்களுக்கு இராஜயோகம் கற்றுத் தருகிறேன். நான் வீடு-வாசலை விட்டுவிடுமாறு செய்வதில்லை. வீட்டிலேயே இருங்கள். ஆனால் விகாரத்தில் செல்லாதீர்கள். மேலும் எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யாதீர்கள். இச்சமயம் அனைவரும் தூய்மையின்றி உள்ளனர். சத்யுகத்தில் தூய்மையான தேவதைகளாக இருந்தனர். இச்சமயம் அவர்களும் தூய்மை இல்லாதவர்களாகி விட்டுள்ளனர். புனர்ஜென்மம் எடுத்து-எடுத்து இப்போது கடைசி ஜென்மம் ஆகி விட்டது.



    நீங்கள் அனைவரும் பார்வதிகள். உங்களுக்கு இப்போது அமர்நாத் பாபா அமரகதை சொல்லிக் கொண்டிருக்கிறார், அமரபுரியின் எஜமானர் ஆக்குவதற்காக. ஆக, இப்போது அமர்நாத் தந்தையை நினைவு செய்யுங்கள். நினைவினால் தான் உங்களுடைய விகர்மங்கள் விநாசமாகும். மற்றப்படி சிவன், சங்கர் அல்லது பார்வதி ஒன்றும் மலைகள் மீது அமர்ந்திருக்கவில்லை. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் ஏமாற்றம். அரைக்கல்பமாக நிறைய ஏமாற்றம், நஷ்டத்தை அடைந்துள்ளனர். இப்போது பாபா சொல்கிறார், நான் உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வேன். சத்யுகத்தில் சுகமே சுகமாக இருக்கும். அடி வாங்குவதும் இல்லை, கீழே விழுவதும் இல்லை. முக்கியமான விசயம், தூய்மையாக இருப்பதாகும். இங்கே அதிகமான கொடுமைகளை செய்வதால் பாவங்களின் குடம் நிரம்பி விடுகிறது. மேலும் விநாசம் நடைபெறுகின்றது. இப்போது இந்த ஒரு பிறவி தூய்மையாக இருப்பீர்களானால் தூய்மையான உலகத்தின் எஜமானர் ஆகி விடுவீர்கள். இப்போது யார் ஸ்ரீமத் படி நடக்கிறார்களோ உயர் பதவி அடைவர். கல்பத்திற்கு முன் ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால் இப்போதும் நடக்க மாட்டார்கள், பதவியும் பெற மாட்டார்கள். ஒரு தந்தையின் குழந்தைகள் நீங்கள். நீங்களோ தங்களுக்குள் சகோதர-சகோதரிகள். ஆனால் தந்தையுடையவர்களாக ஆகி விட்டுப் பிறகு விகாரத்தில் விழுந்தீர்கள் என்றால் இன்னும் கூட நரகத்தினுள் சென்று விடுவீர்கள். மேலும் பாவாத்மாக்களாக ஆகி விடுவீர்கள். இது ஈஸ்வரிய அரசாங்கம். எனது வழிப்படி தூய்மையாகவில்லை என்றால் தர்மராஜர் மூலமாக மிகக் கடுமையான தண்டனை அடைய நேரிடும். ஜென்ம-ஜென்மாந்தரமாகச் செய்துள்ள பாவங்களுக்குத் தண்டனை பெற்றுக் கணக்கு-வழக்கை முடிக்க வேண்டியதிருக்கும். இல்லையெனில் யோகபலத்தால் விகர்மங்களை பஸ்மம் செய்ய வேண்டியதிருக்கும். அதுவும் இல்லையெனில் கடுமையான தண்டனை அடைய நேரிடும். எவ்வளவு ஏராளமான பிரம்மாகுமார் குமாரிகள்! அனைவரும் தூய்மையாக உள்ளனர், பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகின்றனர். நீங்கள் சிவசக்தி பாண்டவ சேனை, கோப-கோபியர், இதில் இருவரும் வந்து விடுகின்றனர். பகவான் நமக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். லட்சுமி-நாராயணரை பகவான்-பகவதி எனச் சொல்கின்றனர். அவர்களுக்கு நிச்சயமாக பகவான் தான் ஆஸ்தி கொடுத்திருப்பார். பகவான் தான் வந்து உங்களை தேவதையாக ஆக்குகிறார். சத்யுகத்தில் இராஜா-ராணி எப்படியோ, அப்படியே பிரஜைகளும் இருப்பார்கள். அனைவரும் உயர்ந்தவர்களாக (சிரேஷ்டாச்சாரி) இருந்தனர். இப்போது இராவண இராஜ்யம். இராமராஜ்யத்திற்குச் செல்ல வேண்டுமானால் தூய்மையாகுங்கள் மற்றும் இராமரின் அறிவுரைப்படி செல்லுங்கள். இராவணனின் வழிமுறையினாலோ உங்களுக்கு துர்கதி ஏற்படுகின்றது. பாடப் பட்டும் உள்ளது, சிலர் சேர்த்து வைத்தது மண்ணோடு மண்ணாகப் போய் விடும். தங்கம் முதலியவை நிலத்தில், சுவரில் மறைத்து வைக்கின்றனர். திடீரென இறந்து போவார்களானால் அனைத்தும் அங்கேயே இருந்து போகும். விநாசமோ நடைபெறத் தான் போகிறது. நிலநடுக்கம் முதலியவை நிகழும் போதோ திருடர்கள் கூட அதிகம் வெளிவருவார்கள். இப்போது பிரபுவாகிய தந்தை வந்துள்ளார், உங்களைத் தம்முடையவர்களாக ஆக்கி உலகத்தின் எஜமானர் ஆக்குவதற்காக. தற்சமயம் வானப்ரஸ்த அவஸ்தாவில் கூட விகாரம் இல்லாமல் இருக்க முடிவதில்லை. முற்றிலும் தமோப்ரமானமாக ஆகி விட்டுள்ளனர். தந்தையை அறிந்து கொள்ளவே இல்லை. பாபா சொல்கிறார், நான் தூய்மையானவர்களாக்குவதற்காக வந்துள்ளேன். விகாரத்தில் செல்வீர்களானால் மிகக் கடுமையான தண்டனை பெற நேரிடும். நான் தூய்மையாக்கி தூய உலகை ஸ்தாபனை செய்வதற்காக வந்துள்ளேன். நீங்கள் பிறகு தூய்மையில்லாமலாகி விக்னங்களை ஏற்படுத்துகிறீர்கள்! ஆகவே மிகக் கடும் தண்டனை அடைய வேண்டியதிருக்கும். நான் வந்துள்ளேன், உங்களை சொர்க்கவாசி ஆக்குவதற்காக. விகாரத்தை விடவில்லை என்றால் தர்மராஜர் மூலம் அதிகமாக தண்டனை அடைய வேண்டியதிருக்கும். மிக அதிகமாகக் கதற நேரிடும். இது இந்திர சபையாகும். கதை உள்ளது இல்லையா - அங்கே ஞானப்பரிகள் இருந்தனர். யாரோ தூய்மை இல்லாதவரைக் கொண்டு வந்தபோது அதன் அதிர்வலைகள் வந்தன. இங்கே சபையில் எந்த ஒரு தூய்மையற்றவரை அமர்த்தி வைக்கப்படுவதில்லை. தூய்மையின் உறுதிமொழி எடுத்துக்கொள்ளாமல் அமரச் செய்வதில்லை. இல்லையென்றால் பிறகு அழைத்து வருபவர் மீதும் குற்றம் ஆகி விடும். பாபாவோ அறிந்துள்ளார். பிறகும் கூட அழைத்து வருகின்றனர் என்றால் போதனை தரப்படுகிறது. சிவபாபாவை நினைவு செய்வதால் ஆத்மா சுத்தமாக ஆகி விடுகிறது. வாயுமண்டலத்தில் அமைதி வந்து விடும். பாபா தான் வந்து அறிமுகம் தருகிறார் - நான் உங்களுடைய தந்தை. 5000 ஆண்டுகளுக்கு முன்பு போலவே உங்களை மனிதரில் இருந்து தேவதை ஆக்குவதற்காக வந்துள்ளேன் என்று. எல்லையற்ற தந்தையிடம் எல்லையற்ற சுகத்தின் ஆஸ்தியை அடைய வேண்டும். நல்லது.



    இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!



    தாரணைக்கான முக்கிய சாரம் :

    1) யோகபலத்தின் மூலம் விகர்மங்களின் அனைத்துக் கணக்கு-வழக்குகளையும் முடித்து விட்டு ஆத்மாவை சுத்தமாகவும், வாயுமண்டலத்தை சாந்தமாகவும் ஆக்க வேண்டும்.



    2) பாபாவின் ஸ்ரீமத் படி சம்பூர்ண தூய்மை ஆவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். விகாரங்களின் வசமாகி சொர்க்கத்தின் படைப்பில் விக்ன ரூபம் ஆகக் கூடாது.



    வரதானம் :

    சிறப்பான (உயர்ந்த) சம்ஸ்காரங்களைத் தனது இயல்பானதாகவே ஆக்கி சாதாரணத் தன்மையை முடித்துவிடக் கூடிய மர்ஜீவா ( வாழ்ந்து கொண்டே மறுபிறவி எடுத்தவர்) ஆகுக.



    எப்படி யாருக்காவது ஏதேனும் இயல்பான சம்ஸ்காரம் இருக்குமானால் அது தானாகவே தனது வேலையைச் செய்யும். யோசிக்கவோ செய்யவோ தேவை இருக்காது. அது போல் சிறப்பான சம்ஸ்காரமும் இயல்பானதாகவே ஆகிவிட வேண்டும். மேலும் ஒவ்வொருவரின் வாயிலிருந்தும் மனதிலிருந்தும் இது தான் வெளிப்பட வேண்டும் -- இந்த விசேஷ ஆத்மாவின் இயல்பான சம்ஸ்காரம் தான் சிறப்பாக காரியம் செய்துள்ளது. சாதாரண கர்மங்கள் முடிந்துவிட வேண்டும். அப்போது தான் மர்ஜீவா எனச் சொல்வார்கள். சாதாரணத் தன்மையில் இருந்து இறந்து விட்டார், சிறந்த சம்ஸ்காரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சங்கல்பத்தில் கூட சாதாரணத் தன்மை இருக்கக் கூடாது.



    சுலோகன் :

    ஏதாவதொரு விதி (நியமத்தை கடைபிடிப்பதன்) மூலம் வீணானவற்றை முடித்து விடுபவர் தான் சக்திசாலி ஆத்மா ஆவார்.



    சாகார் முரளிகளில் கீதையின் பகவானை உறுதிப் படுத்துவதற்கான குறிப்புகள் (பாகம் 4)



    1. மன்மனாபவ, மத்யாஜீபவ இது கீதையின் சில சொற்கள் சரியானவை. ஏனென்றால் இப்போது பாபா உங்களுக்கு என்ன ஞானம் சொல்கிறாரோ, அது பிறகு மறைந்து போகும். கீதை ஞானத்தால் கிருஷ்ணர் இந்தப் பதவி பெற்றார் என்பது யாருக்குமே தெரியாது.



    2. சத்யுகத்தில் இவர்களுடைய (தேவதைகளின்) இராஜ்யம் இருந்த போது வேறு எந்த ஒரு தர்மமும் இல்லாமல் இருந்தது. அந்தச் சமயம் மக்கள் தொகையும் மிகக் குறைவாகவே இருந்தது. ஆக, நிச்சயமாக கீதா ஞானத்திற்குப் பிறகு விநாசமும் வர வேண்டும். அதனால் மகாபாரத யுத்தமும் கூடப் பாடப் பட்டுள்ளது. இதில் தான் அனைத்து மாற்றங்களும் ஏற்பட வேண்டும். கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வர வேண்டும்.



    3. இப்போது சொல்கின்றனர், மகாபாரதக் காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் அவசியம் பகவானும் கூட இங்கே இருக்க வேண்டும். கிருஷ்ணரோ இருக்க முடியாது. கீதை ஞானத்தினாலோ கிருஷ்ணரின் ஆத்மாவுக்கு இராஜ்யம் கிடைத்தது. அதனால் கீதை என்பது தாய். இதன் மூலம் நீங்கள் தேவதை ஆகிறீர்கள். ஆக, கிருஷ்ணரின் ஆத்மா கீதை ஞானத்தின் மூலம் இராஜயோகம் கற்றுக் கொண்டு அது போல் ஆகியுள்ளது.



    4. பதீத-பாவனர் என்று ஒரு பரமபிதா பரமாத்மா தாம் சொல்லப் படுகிறார். அவரைத் தான் அனைவரும் அழைக்கின்றனர். கிருஷ்ணரை ஒரு போதும் பதீத-பாவனர் எனப் புரிந்து கொண்டு நினைவு செய்ய மாட்டார்கள். இப்போது நீங்கள் அறிந்து கொண்டீர்கள், கிருஷ்ணரின் ஆத்மா சத்யுகத்தில் இருந்தது, அது தான் அநேக ரூபங்களை தாரணை செய்து-செய்து இப்போது தமோப்ரதானம் ஆகி விட்டுள்ளது. பிறகு அது தான் சதோப்ரதானமாக ஆகின்றது.



    5. சிவபகவான் வாக்கு, பகவான் என்று சொல்வதே சிவனைத் தான். கிருஷ்ணரோ குழந்தை. ஞானம் சொல்பவர் தந்தை. ஆக, தந்தைக்கு பதிலாகக் குழந்தையின் பெயரைப் போடுவது என்றால், இது எவ்வளவு பெரிய பிழை! பிறகு கிருஷ்ணரின் சரித்திரம் முதலியவற்றைத் தான் அமர்ந்து காண்பிக்கின்றனர். பாபா சொல்கிறார், லீலை என்பது கிருஷ்ணருடையது எதுவும் கிடையாது. பாடுகின்றனர், ஹே பிரபு, உங்களுடைய லீலை அளவற்றது. ஆக, லீலை ஒருவருடையது தான்.



    6. சிவபாபாவின் மகிமை மிகவும் தனிப்பட்டதாகும். அவர் சதா பாவனமாக இருப்பவர். ஆனால் அவர் பாவன சரீரத்தில் வர முடியாது. அவரை அழைப்பதே - பதீத் உலகத்தில் வந்து பாவனமாக்குங்கள் என்று தான். ஆக, பாபா சொல்கிறார், நான் பதீத் உலகத்தில் பதீத் சரீரத்தில் வர வேண்டி உள்ளது. இவருடைய (கிருஷ்ணரின்) அநேக ஜென்மங்களின் கடைசியில் வந்து பிரவேசமாகிறேன்.



    7. சாஸ்திரங்களில் ஸ்ரீகிருஷ்ணருக்கு சுயதரிசனச் சக்கரம் காண்பித்துள்ளனர் - அவர் சுயதரிசனச் சக்கரத்தினால் அகாசுரன், பகாசுரன் முதலானவர்களைக் கொன்றார் என்பதாக - பிறகு இராமருக்கு வில் அம்பு காண்பித்துள்ளனர். இரண்டு தேவதைகளையும் ஹிம்சையாளராக ஆக்கி விட்டுள்ளனர். அவர்களுடைய மகிமையாகப் பாடுகின்றனர் - தேவதைகள் இரட்டை அஹிம்சையாளர்கள். காமக் கட்டாரி செலுத்துவதும் இல்லை, கோபத்தின் ஹிம்சையும் செய்வதில்லை. அவர்களே நிர்விகாரி தேவி தேவதைகள். அதனால் கிருஷ்ணரை மயில்தோகைக் கிரீடதாரியாகக் காண்பித்துள்ளனர்.



    8. கிருஷ்ணரை ருத்ரன் எனச் சொல்ல மாட்டார்கள். விநாசமும் கிருஷ்ணர் ஒன்றும் செய்விப்பதில்லை. ஸ்தாபனை, விநாசம், மற்றும் பாலனை மூன்று காரியங்களும் பரமாத்மாவினுடையவை. ஆனால் அவர் தாமே எதையும் செய்வதில்லை. இல்லையென்றால் அவர் மீது குற்றம் வந்து விடும். அவர் செய்பவர், செய்விப்பவர்.



    9. கிருஷ்ணருக்காக பகவான் வாக்கு எனச் சொல்ல முடியாது. அவரோ தெய்விக குணமுள்ள மனிதர். தெய்விக தர்மம் எனச் சொல்லப் படுகிறது. இப்போது தேவி-தேவதா தர்மம் இல்லை. அதனுடைய ஸ்தாபனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது நீங்கள் பிராமணர், தேவி-தேவதா தர்மத்தினராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.



    10. மனிதர்கள் சொல்கின்றனர், தேவதைகளின் நிழல் இந்தப் பதீத் சிருஷ்டி மீது பட முடியாது. இதில் தேவதைகள் வர முடியாது. அவர்களுக்காகவோ புது உலகம் வேண்டும். லட்சுமியையும் ஆவாஹன் (வரவழைத்தல்) செய்கின்றனர். அப்போது வீட்டை எவ்வளவு சுத்தம் செய்கின்றனர்! இப்போது இந்த சிருஷ்டி எப்போது தூய்மையாகுமோ, அதாவது பழைய உலகம் எப்போது விநாசமாகுமோ, அப்போது தேவி-தேவதைகள் இந்த சிருஷ்டியில் வருவார்கள்.


    ***OM SHANTI***