BK Murli 22 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 22 July 2017 Tamil

    22.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! நீங்கள் மாஸ்டர் அன்புக் கடல் ஆக வேண்டும். ஒருபொழுதும் யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. ஒருவருக்கு ஒருவர் மிகுந்த அன்போடு இருக்க வேண்டும்.



    கேள்வி:-

    முன்னேறிச் செல்லச் செல்ல மாயை எந்தக் குழந்தைகளுடைய கழுத்தை நெரித்துவிடுகிறது?



    பதில்:-

    யார் சிறிதேனும் எந்த விசயத்திலாவது சந்தேகத்தை எழுப்புகிறார்களோ, காமம் அல்லது கோபத்தின் கிரஹச்சாரம் யாருக்குப் பிடிக்கிறதோ, அவர்களுடைய கழுத்தை மாயை நெரித்து விடுகிறது. அவர்கள் படிப்பையே விட்டுவிடும் அளவிற்கு அவர்கள் மீது கிரஹச்சாரம் பிடித்துக் கொள்கிறது. நாம் என்ன கற்றோம் மற்றும் கற்பித்தோமோ, அவை அனைத்தும் எவ்வாறு மறந்துபோனது என்பது கூட புரியாது. புத்திக்குப் பூட்டு போடப்பட்டுவிடுகிறது.



    பாடல்:-

    நீங்கள் அன்புக் கடலானவர்....



    ஓம்சாந்தி.

    இது தந்தையின் மகிமை ஆகும். மேலும், பக்தர்கள் இவ்வாறு பாடல் பாடுகின்றனர் என்பதை குழந்தைகள் அறிந்திருக்கிறீர்கள். தந்தை எவ்வளவு அன்புக் கடலாக இருக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். பதீதமானவர்கள் அனைவரையும் பாவனம் ஆக்குகின்றார். அனைத்து குழந்தைகளுக்கும் சுகதாமத்தின் ஆஸ்தி கொடுக்கின்றார். நாம் ஆஸ்தி அடைந்து கொண்டு இருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். அரைக் கல்பமாக மாயையின் இராஜ்யம் நடைபெறும் பொழுது இத்தகைய அன்பான தந்தை கிடையாது. எல்லையற்ற தந்தை அன்புக் கடலாக இருக்கின்றார். அன்புக் கடலாக, சாந்திக் கடலாக, சுகக் கடலாக எவ்வாறு இருக்கின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிறீர்கள். நடைமுறையில் குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தும் கிடைத்துக் கொண்டு இருக்கிறது.பக்தி மார்க்கத்தினருக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் பாடல் மட்டும் பாடுகின்றனர், நினைவு செய்கின்றனர். இப்பொழுது அந்த நினைவு முடிவடைகிறது. குழந்தைகள் எதிரில் அமர்ந்து இருக்கிறீர்கள். எல்லையற்ற தந்தையே மகிமை செய்யப்படுகின்றார் என்று புரிந்திருக்கிறீர்கள். அவசியம் அந்தத் தந்தை அன்புபை வழங்கிக் கொண்டு இருக்கின்றார். சத்யுகத்தில் கூட ஒவ்வொருவரும், ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பு செலுத்துவார்கள். விலங்குகளிடம் கூட ஒன்றின் மீது மற்றொன்றிற்கு அன்பு இருக்கும். இங்கேயோ அப்படி இல்லை. தங்களுக்குள் அன்பு செலுத்தாத எந்த விலங்கும் அங்கே கிடையாது. இங்கே அன்பின் மாஸ்டர் கடல் ஆனீர்கள் என்றால், உங்களுடைய அந்த சமஸ்காரம் அழிவற்றது ஆகிவிடும் என்று குழந்தைகளுக்குக் கூட கற்றுத் தரப்படுகிறது. இங்கே அனைவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரியாக உள்ளனர், ஏனெனில், இராவண இராஜ்யம் நடைபெறுகிறது. முந்தைய கல்பம் போலவே உங்களை இப்பொழுது மிகுந்த அன்பானவர் ஆக்குகின்றேன் என்று தந்தை கூறுகின்றார். இன்னார் கோபப்படுகிறார் என்று எப்பொழுதாவது யாரைப் பற்றியாவது கேள்வியுற்றார் என்றால், குழந்தைகளே! கோபப்படுவது சரியல்ல, இதன் மூலம் நீங்களும் துக்கம் அடைவீர்கள், பிறருக்கும் கூட துக்கம் கொடுப்பீர்கள் என்று தந்தை அறிவுரை வழங்குவார். எவ்வாறு லௌகீக தந்தை கூட குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவார் அல்லவா. அவர் எல்லைக்குட்பட்ட சுகம் கொடுக்கக் கூடியவர் ஆவார். இந்தத் தந்தை எல்லையற்றவர் ஆவார் மற்றும் சதா காலத்திற்கும் சுகம் கொடுக்கக் கூடியவர் ஆவார். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் ஒருவருக்கு ஒருவர் துக்கம் கொடுக்கக் கூடாது. அரைக் கல்பமாக மிகுந்த துக்கத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இராவணன் மிகவும் கெடுத்து விட்டான். ஒருவர் யார் மீது படையெடுத்துச் செல்கிறாரோ, அவருடையதை கொள்ளையடித்துவிடுகிறார். இப்பொழுது உங்களுக்கு (ஒளி) வெளிச்சம் கிடைக்கிறது. இந்த நாடகச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. ஒருவேளை நீங்கள் ஞானத்தின் விஸ்தாரத்தைப் புரிந்து கொள்ள இயலவில்லை என்றால் இரண்டு வார்த்தைகளை மட்டும் நினைவு செய்யுங்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து நமக்கு இந்த ஆஸ்தி கிடைக்கிறது. ஒருவர் எந்தளவிற்கு தந்தையை நினைவு செய்து தாமரை மலருக்குச் சமமாக தூய்மையாக இருப்பார்களோ அதாவது விகாரங்கள் மீது வெற்றி பெறுவார்களோ, அந்தளவு ஆஸ்திக்கு அதிகாரி ஆவார்கள். விகாரம் கூட அனேக விதங்கள் உள்ளன. ஸ்ரீமத்படி நடக்காமல் இருப்பது என்பது கூட விகாரம் ஆகும். ஸ்ரீமத் படி நடப்பதன் மூலம் நீங்கள் நிர்விகாரி ஆகிறீர்கள். என் ஒருவரை மட்டும் நினைவு செய்ய வேண்டும். வேறு எவரையும் நினைவு செய்யக்கூடாது. ஹே! குழந்தைகளே நான் அனைவரையும் அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றேன் என்று தந்தை இவர் மூலம் கூறுகின்றார். ஒவ்வொரு மதத்திலும் வரிசைக்கிரமம் உள்ளது. போப்பிற்கு எவ்வளவு புகழ் உள்ளது! இந்த சமயத்தில் அனைவரும் மூட நம்பிக்கையில் இருக்கின்றனர். நீங்கள் ஒரு தந்தையைத் தவிர வேறு எவருக்கும் புகழ் பாட முடியாது. அனைத்தும் செயற்கையானவையே. இந்த சமயம் அனைவரும் மறுபிறவி எடுத்து எடுத்து பதீதம் ஆகின்றனர். மனிதர்கள் அனைவரும் இறுதியில் முழுவதுமாக பதீதம் ஆகத்தான் வேண்டும். பதீத பாவனர் என்ற பெயரைக் கூறுகின்றனர். ஆனால், அதைப் பற்றி விரிவாகப் புரிந்து கொள்ளவில்லை. இது பதீதமானவர்களின் உலகம் ஆகும். இதற்கு என்ன மகிமை இருக்கும்? போப் ஆண்டவர் ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசையாக கீழிறங்கியே வந்திருக்கின்றனர். அவர்களை வரிசைக்கிரமமாகக் காண்பிக்கின்றனர். ஆனாலும், அவர்கள் வரிசைக்கிரமமாகவே தனது பதவியை அடைவார்கள். இந்தச் சக்கரத்தை இப்பொழுது நீங்கள் நல்ல முறையில் அறிந்திருக்கிறீர்கள். இங்கே வருவதே எல்லையற்ற தந்தையிடம் தான், அவரிடமிருந்து ஆஸ்தியைப் பெற வேண்டும். சாகாரமானவர் இல்லாமல் ஆஸ்தி கிடைக்காது.



    தேகதாரியை நினைவு செய்யாதீர்கள் என்று தந்தை கூறுகின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்த ஒரு தந்தையை மட்டும் நினைவு செய்ய வேண்டும். குழந்தைகளே! என் ஒருவரை மட்டும் நினைவு செய்யுங்கள் என்பது எவ்வளவு பெரிய கட்டளை ஆகும்! தேகதாரியை நினைவு செய்தால், அவருடைய நினைவினால் பிறகு மறுபிறவி எடுக்க வேண்டியது இருக்கும். உங்களுடைய நினைவு யாத்திரை நின்றுவிடும். விகர்மம் வினாசம் ஆகாது. மிகுந்த நஷ்டம் ஏற்படும். தொழிலில் இலாபமும் ஏற்படுகிறது, நஷ்டமும் ஏற்படுகிறது. நிராகாரமான தந்தையை மந்திரவாதி, வியாபாரி என்று கூறுகின்றார்கள். திவ்ய திருஷ்டியின் சாவி தந்தையின் கையில் உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நல்லது, ஏதாவது காட்சி பார்ப்பதனால், கிருஷ்ணரது காட்சியைப் பார்ப்பதனால் இலாபம் என்ன இருக்கிறது? எதுவும் இல்லை. நாடகச் சக்கரத்தை அறிந்து கொள்வது என்பது படிப்பு அல்லவா? எந்தளவு தந்தையை நினைவு செய்வீர்களோ, சக்கரத்தைச் சுழற்றுவீர்களோ அந்தளவு உயர்ந்த பதவியை அடைவீர்கள். இப்பொழுது நீங்கள் எனது குழந்தைகள் ஆகி இருக்கிறீர்கள். நாங்கள் உங்களுடையவர்களாக இருந்தோம் என்பது நினைவிற்கு வருகிறது அல்லவா? ஆத்மாக்களாகிய நாம் பரந்தாமத்தில் இருந்தோம். அங்கே சொல்வதற்கான விசயம் எதுவும் இருக்காது. நாடகம் தானாகவே நடந்து கொண்டு இருக்கிறது. எவ்வாறு ஒரு மீன்களின் பொம்மையைக் காண்பிக்கின்றனர் அல்லவா? அதில் கம்பியில் மீன்கள் கோர்க்கப்பட்டிருக்கும். கம்பியைத் தலைகீழாகத் திருப்பினால் மெதுவாகக் கீழே இறங்கி வரும். அவ்வாறு ஆத்மாக்கள் அனைவரும் நாடகம் என்ற கம்பியில் கட்டுண்டு இருக்கின்றனர். சக்கரத்தில் சுற்றிக் கொண்டே வருகின்றனர். இப்பொழுது ஏறுகின்றனர். பிறகு, இறங்க ஆரம்பித்து விடுகின்றனர். இப்பொழுது நம்முடையது ஏறும் கலை ஆகும் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஞானக் கடலான தந்தை வந்திருக்கின்றார். ஏறும் கலை பின்னர் இறங்கும் கலை என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள். எவ்வளவு எளிதானது! இறங்கும் கலைக்கு எவ்வளவு சமயம் ஆகிறது? பிறகு, எவ்வாறு ஏறும் கலை ஏற்படுகிறது? தந்தை வந்து மாற்றிவிடுகின்றார். முதன் முதலில் ஆதிசனாதன தேவி தேவதை தர்மம் இருக்கிறது. பிறகு, மற்ற தர்மங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. நம்முடையது ஏறும் கலையாகும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்து கொண்டீர்கள். இறங்கும் கலை முடிவடைந்து விட்டது. தமோபிரதான உலகத்தில் மிகுந்த துக்கம் உள்ளது. இந்தப் புயல் போன்றவை ஒன்றுமே இல்லை. பெரிய பெரிய மாளிகை கீழே விழும்படியாக புயல் அடிக்கும். மிகுந்த துக்கமான சமயம் வரப் போகிறது. இது வினாசத்திற்கான நேரமாகும். ஐயோ!, ஐயோ! காப்பாற்றுங்கள்!, காப்பாற்றுங்கள்! என்று கதறுவார்கள். அனைவருடைய வாயிருந்தும் ஐயோ! இராமா என்பது தான் வெளிப்படும். பகவானைத் தான் நினைவு செய்வார்கள். தூக்கில் போடும்பொழுது கூட, இறைத் தந்தையை நினைவு செய்யுங்கள் என்று பாதிரியார் கூறுவார். ஆனால், அவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை. தனது ஆத்மாவைப் பற்றிக் கூட சரியான முறையில் புரிந்திருக்கவில்லை. நான் ஆத்மா என்னவாக இருக்கிறேன்? என்ன நடிப்பு நடிக்கிறேன்? எதையும் அறியவில்லை. ஆத்மா எவ்வளவு சிறியதாக உள்ளது! நட்சத்திரம் போல் சிறியது என்று கூறுகின்றார்கள். அனேகருக்கு ஆத்மாவின் காட்சி கிடைக்கிறது. மிகச் சிறிய ஒளியாக உள்ளது. புள்ளி போன்ற வெண்ணிறமான ஒளி ஆகும். அதை திவ்ய திருஷ்டி இல்லாமல் எவரும் பார்க்க இயலாது. ஒருவேளை பார்த்தாலும் கூட புரிந்து கொள்ள முடியாது. ஞானம் இல்லாமல் எதையும் புரிந்து கொள்ள இயலாது. நிறைய காட்சிகள் கிடைக்கின்றன. இது ஒன்றும் பெரிய விசயம் அல்ல. இங்கேயோ புத்தி மூலம் புரிந்து கொள்ள முடியும். பாபா சரியான முறையில் தான் புரிய வைக்கின்றார். நம்முடைய ஆத்மாவில் 84 பிறவிகளின் நடிப்பு பதிவாகி உள்ளது என்ற இந்த விசயம் வேறு எவருடைய புத்தியிலும் இல்லை. யார் பிராமணக் குழந்தைகள் ஆகின்றார்களோ அவர்களுக்குத் தான் தந்தை புரிய வைக்கின்றார். மேலும் அவர்கள் தான் 84 பிறவிகள் எடுக்கின்றனர். வேறு எவருடைய புத்தியிலும் இது தங்குவதில்லை. இது 84 பிறவிகளின் சக்கரம் என்பதை நீங்கள் மிகச் சரியாகப் புரிந்திருக்கிறீர்கள். முதலில் பிராமணர்களுக்கே மகிமை உள்ளது, நீங்கள் வாய்வழி வம்சத்தினராகிய பிராமணர்கள் அல்லவா. வேறு எவரும் இதை அறியவில்லை. பிரம்மா குமார், பிரம்மா குமாரிகள் என்பது சாதாரண விசயம் ஆகி விட்டது. இது என்ன சபை? இதற்கு ஏன் இந்த பெயர் வந்தது? என்பதை எவருமே புரிந்து கொள்ளவில்லை. பிரஜாபிதா பிரம்மா என்ற பெயரைப் போடுவதால் ஏன் என்ற கேள்வி நீங்கி விடும். /சிவபாபாவினுடைய குழந்தைகளாகிய நாம் அனைவரும் சகோதர, சகோதரர்கள் ஆவோம் என்று நீங்கள் கூற முடியும். பிறகு, பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் சகோதரர்கள், சகோதரிகள் ஆவோம். இதைப் புரிந்துகொண்டால் கேள்வி வராது. புதிய உலகம் ஸ்தாபனை ஆகிறது என்று புரிந்துகொள்வார்கள். பிரம்மா மூலம் நீங்கள் பதீதத்திலிருந்து பாவனம் ஆகிக்கொண்டு இருக்கிறீர்கள். இந்த ரக்ஷா பந்தன் போன்ற பண்டிகைகள் பழமையான வழக்கமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இப்பொழுது நீங்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டீர்கள். நினைவுச் சின்னங்கள் என்னவெல்லாம் உள்ளனவோ, அவற்றைப் பற்றிய ஞானம் இந்த சமயத்தில் உங்களுக்குக் கிடைக்கின்றது. சத்யுகத்தில் இராம நவமி கொண்டாட மாட்டார்கள். அங்கே கொண்டாடுவதற்கான விசயமே இருக்காது. அங்கே ஞானம் என்பதே இல்லை. நாம் இறங்கும் கலையில் இருக்கிறோம் என்பது கூட தெரியாது. சுகத்தில் பிறவி எடுத்துக்கொண்டே இருப்பீர்கள். அங்கே யோக பலத்தின் மூலமே பிறப்பு கிடைக்கிறது. விகாரத்தின் பெயரே இருக்காது. ஏனெனில், இராவணனுடைய இராஜ்யமே இருக்காது. அங்கேயோ சம்பூரண நிர்விகாரிகளாக இருப்பார்கள். முதலேயே காட்சி கிடைக்கிறது. இல்லையெனில், ஒரு பழைய சரீரத்தை விடுத்து மற்றொரு புதிய சரீரத்தை எடுக்கிறார்கள் என்பது எவ்வாறு நிரூபணம் ஆகும்? இங்கிருந்து முதலில் நீங்கள் சாந்திதாமம் செல்வீர்கள். அது நம்முடைய வீடு ஆகும், அதையே சாந்திதாமம் என்று கூறுகிறார்கள் என்று குழந்தைகள் புரிந்திருக்கிறீர்கள். அது நம்முடைய மற்றும் எந்த தந்தையை நினைவு செய்கிறோமோ அந்த தந்தையினுடைய வீடாகும். தந்தையிடமிருந்து பிரிந்து இருக்கிறோம், ஆகையால் நினைவு செய்கிறோம். சுகத்திலோ தந்தை கூட நினைவிற்கு வருவதில்லை. அதுவே சுகமான உலகம் ஆகும். பாபா தன்னுடைய தாமத்தில் (இருப்பிடத்தில்) இருக்கின்றார் அதாவது வானப்பிரஸ்தத்திற்குச் சென்றுவிடுகின்றார். பொதுவாக உலகத்தில் எப்பொழுது வயோதிக நிலை அடைகின்றனரோ அப்பொழுது வானப்பிரஸ்தத்தை மேற்கொள்கின்றனர். ஆனால், பரமபிதா பரமாத்மாவை வயோதிகர் என்று கூற முடியாது. வயோதிக நிலையோ அல்லது இளமைப் பருவமோ சரீரத்திற்குத்தான் ஏற்படுகிறது. ஆத்மா அதுவே தான் இருக்கிறது. ஆத்மாவில் மாயையின் நிழல் விழுகிறது. நீங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டீர்கள், இதற்கு முன்னர் அறியாமல் இருந்தீர்கள். படைப்பாளர், படைப்பின் இரகசியத்தை தந்தை புரிய வைத்திருக்கின்றார்.



    குழந்தைகளாகிய நீங்கள் எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள். அவருக்கு அதிக மகிமை உள்ளது. ஜனாதிபதி ஜனாதிபதி தான். பிரதமர் பிரதமர் தான். அனைவருக்கும் தனித்தனியாக நடிப்பு கிடைத்திருக்கிறது. தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்தவர் என்று மகிமை செய்யப்படுகின்றார். எனவே, அவசியம் நமக்கு உயர்ந்ததிலும் உயர்ந்த ஆஸ்தி கிடைத்திட வேண்டும் அல்லவா? இது எவ்வளவு புரிந்து கொள்வதற்கான விசயம்! எவ்வாறு தந்தை புரிய வைக்கின்றாரோ, அவ்வாறே குழந்தைகளும் புரிய வைக்க வேண்டும். முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். ஆஸ்தி கூட தந்தையிடமிருந்து தான் கிடைக்கிறது. உங்களுடையது இல்லற மார்க்கம் ஆகும். எனவே, புத்தியில் சக்கரத்தைச் சுழற்ற வேண்டும். அவசியம் சேவை செய்ய வேண்டும். நாளுக்கு நாள் மிகவும் சகஜமாகி விடும். பின்னர், பிரஜைகள் விருத்தி அடைவார்கள் அல்லவா. சகஜமாகக் கிடைப்பதால் சகஜமாக நம்பிக்கை ஏற்பட்டுவிடும். புதியவர்கள் நன்றாக மகிழ்ச்சியில் திளைக்கின்றனர், முழு நம்பிக்கை வந்துவிடுகிறது. வரிசைக்கிரமமான முயற்சியின் அனுசாரம் அனைவருடைய நடிப்பும் நடந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் உண்மையான வருமானம் செய்வதற்கான முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர். உண்மையான மற்றும் பொய்யான வருமானத்தில் வித்தியாசம் இருக்கிறது அல்லவா. உண்மையான இரத்தினங்கள் தூரத்திலிருந்தே ஜொலிக்கின்றன. தற்காலத்தில் பணத்தை வைத்துக் கொள்வதற்கு மனிதர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக உள்ளது! எங்கே மறைப்பது? எங்கே வைப்பது? பணம் இருந்தாலும் அதைக் கொண்டு எதுவுமே செய்ய முடியாத அளவிற்கு காலம் வரப்போகிறது. குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியின் பூட்டு கூட வரிசைக்கிரமமாகத் திறக்கிறது. எங்கேயாவது கிரஹச்சாரம் பிடித்து விட்டால் ஏதாவது ஏதாவது சந்தேகம் வந்து விடுகிறது. படிப்பையே விட்டுவிடுகின்றனர், அறிவுக்கு எட்டுவதே இல்லை. நாம் கற்றோம், கற்பித்தோம், இப்பொழுது என்னவாகி விட்டது? கொஞ்சம் சந்தேகம் வந்தவுடனேயே தொண்டை அடைத்துக் கொள்கிறது. பாபா மீது சந்தேகம் வந்தது, விகாரத்தில் சென்று விட்டனர் என்றால் முற்றிலும் கீழே விழுந்துவிடுகின்றனர் என்று அர்த்தம். காமம் மற்றும் கோபம் அனைத்தையும்விட பெரிய எதிரிகள் ஆகும். மோகம் கூட ஒன்றும் குறைந்தது அல்ல. சந்நியாசிகளுக்குத் தனது வாழ்க்கையின் நினைவு இருக்காது என்பது கிடையாது. அனைத்தும் நினைவு இருக்கும். எந்தக் குழந்தைகள் ஞான சொரூப ஆத்மாக்களாக இருக்கின்றனரோ, அவர்கள் சமிக்ஞையிலேயே (சைகை) புரிந்து கொள்கின்றனர். எவ்வாறு பிரசாதம் படைக்கின்றனர்? யார் வருகின்றார்கள்? என்ன நடக்கிறது? வினாடிக்கு வினாடி நாடகம் நடந்து கொண்டு இருக்கிறது. முக்கியமானது தந்தையின் நினைவு ஆகும், இதன் மூலமே விகர்மங்கள் வினாசம் ஆகும். எந்தளவு தந்தையின் நினைவில் ஈடுபட்டு இருக்கிறீர்களோ, அந்தளவு விகர்மங்கள் வினாசம் ஆகிக் கொண்டே இருக்கும். இல்லையென்றால், தந்தை தர்மராஜா; ரூபத்தில் காட்சி காண்பிப்பார். முன்னேறிச் சென்று கொண்டிருக்கும்பொழுதே, அனேக தவறுகள் செய்பவர்கள், இப்பொழுது கூட அதிகமாக உள்ளனர்..ஆனால், உண்மையைச் சொல்வதில்லை. பெயர் மிகவும் நல்ல நல்ல பெயர் உள்ளது, ஆனால், எவ்வளவு தாழ்ந்த பதவி கிடைக்கும் என்பதை தந்தை அறிவார். எவ்வளவு கிரஹச்சாரம் பிடித்திருக்கிறது! தலைகீழான விகர்மம் (பாவ காரியம்) செய்துவிட்டு தந்தையிடம் மறைத்துக் கொண்டே இருக்கின்றனர். சத்தியமானவருக்கு முன்னர் எந்த விசயமும் மறைந்து இருக்க முடியாது. உங்களுடைய அனைத்தும் மேலே பதிவாகிறது. அனைத்தும் அறிந்த (அந்தர்யாமி) பாபா, அவர் அல்லவா. நாம் விகர்மங்களை மறைத்துச் செய்கிறோம் என்றால் மிகுந்த தண்டனையை அடைய வேண்டியது இருக்கும் என்று புரிந்துகொள்ள வேண்டும். பிராமணா;களாகிய நாம் பாதுகாத்து பராமரிப்பதற்கு நிமித்தம் ஆகி இருக்கிறோம். நம்மிடத்திலேயே இந்தப் பழக்கம் இருப்பது சரியல்ல. பள்ளியில் ஆசிரியர் புகார் செய்தார் என்றால் முதல்வர் (பிரின்ஸிபால்) பெரிய சபையின் நடுவில் புகார் செய்யப்பட்டவரை வெளியேற்றிவிடுவார். எனவே, மிகுந்த பயம் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். என் ஒருவரை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். நீங்கள் தந்தையிடம் செல்ல வேண்டும். அவரை நினைவு செய்ய வேண்டும் மற்றும் சுயதரிசன சக்கரத்தைச் சுழற்ற வேண்டும். வேறு எவரையும் நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய ஆன்மிக யாத்திரை நின்றுவிடும். நல்லது.



    இனிமையிலும் இனிமையான வெகு காலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிக குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்காக முக்கியமான சாரம்:-

    1. மாயையின் கிரஹச்சாரத்திலிருந்து தப்பிப்பதற்காக சத்தியமான தந்தையிடம் எப்பொழுதும் சத்தியமாக இருக்க வேண்டும். எந்தவொரு தவறும் செய்துவிட்டு மறைக்கக் கூடாது. தலைகீழான (தவறான) கர்மங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.



    2. ஸ்ரீமத் படி நடக்காமல் இருப்பது கூட விகாரம் ஆகும். ஆகையால், ஒருபொழுதும் ஸ்ரீமத்தை மீறக்கூடாது. சம்பூரண நிர்விகாரி ஆகவேண்டும்.



    வரதானம்:

    சாதனம் மற்றும் சௌகரியங்கள் (சால்வேசன்) பிரபாவத்தில் வருவதற்குப் பதில், இயற்கையை அடிமை ஆக்கக்கூடிய வெற்றியாளர் ஆகுக.



    யோகிகள் மற்றும் மேன்மை பொருந்திய (புருஷோத்தமர்) ஆத்மாக்கள் ஒருபொழுதும் இயற்கையின் பிரபாவத்தில் வரமுடியாது. பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் மேன்மை பொருந்தியவர்கள் மற்றும் யோகி ஆத்மாக்கள் ஆவீர்கள், இயற்கை எஜமானர்களாகிய உங்களுடைய அடிமைகள். ஆகையால், இயற்கையினுடைய எந்தவொரு சாதனம் மற்றும் சௌகரியங்கள் உங்களை தன்னுடைய பிரபாவத்தில் கொண்டு வரமுடியாது. சாதனம், தவத்திற்கு ஆதாரமாக இருக்கக்கூடாது. ஆனால், தவம், சாதனங்களை ஆதாரமாக ஆக்க வேண்டும். அப்பொழுதே இயற்கையை வென்றவர், வெற்றி பெற்ற ஆத்மா என்று கூறமுடியும்.



    சுலோகன்:

    யார் ஒவ்வொரு வினாடியையும் இறுதி வினாடி என்று புரிந்து நடக்கிறார்களோ, அவர்களே எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பவர்கள் (எவர்ரெடி) ஆவார்கள்.


    ***OM SHANTI***