BK Murli 25 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 25 July 2017 Tamil

    25.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்



    இனிமையான குழந்தைகளே!பாபா உங்களை சௌபாக்கியசாலியாக ஆக்குவதற்கு வந்துள்ளார். சௌபாக்கியசாலி என்றால் சொர்க்கத்தின் அதிபதி. அனைவரையும் தங்களுக்குச் சமமாக ஆக்குவது உங்களுடைய கடமையும் ஆகும்.



    கேள்வி:

    எல்லாவற்றையும் விட முதல் நம்பர் மாநாடு எது மற்றும் எப்பொழுது ஆகிறது? அதனால் பிராப்தி என்ன?



    பதில்:

    சங்கமத்தில் ஆத்மா மற்றும் பரமாத்மாவின் சந்திப்பு தான் முதல் நம்பர் மாநாடு ஆகும். இந்த மாநாடு ஆகும் பொழுது ஆத்மாக்களுக்கு பரமாத்மாவிடமிருந்து முக்தி அல்லது ஜீவன் முக்தியின் ஆஸ்தி கிடைக்கிறது. இதற்கு தான் உண்மையிலும் உண்மையான கும்பம் என்று கூட கூறப்படுகிறது. இந்த கும்பமேளா முதல் தரமான மாநாடு ஆகும். இதற்குப் பிறகு எந்தவொரு மாநாடு யக்ஞம் தவம் ஆகியவை இருப்பதில்லை. எல்லாமே முடிந்து போய் விடுகிறது.



    பாடல்:

    மாதா ஓ மாதா .. .. ..



    ஓம் சாந்தி.

    குழந்தைகள் மகிமையின் பாட்டுக் கேட்டீர்கள். பக்தி மார்க்கத்தில் மகிமை தான் ஆகிக் கொண்டு வந்துள்ளது என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். எது நடந்து முடிந்து விட்டதோ அதற்கு பிறகு மகிமை ஆகிறது. நீ தான் பாக்கிய விதாதா என்று ஜகதம்பாவிற்கு மகிமை பாடுகிறார்கள். இப்பொழுது இது பக்தி மற்றும் மகிமை ஆகியது. நீங்கள் பக்தியோ மகிமையோ செய்ய முடியாது. சௌபாக்கிய விதாதா ஒரே ஒரு தந்தை ஆவார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பாக்கிய விதாதா அல்லது சௌபாக்கிய விதாதா ஒரே ஒருவர் ஆவார். மற்றவர் யாருமே கிடையாது. இதை இந்த நேரத்தில் தான் நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர்கள் பக்தி மட்டுமே செய்கிறார்கள். மகிமை பாடுகிறார்கள். இப்பொழுது நாம் பக்தர்களோ கிடையாது. நாம் பகவானின் குழந்தைகள் ஆகி விட்டோம். எப்படி பாக்கியம் அல்லது சௌபாக்கியம் அமைக்கிறார்கள். எப்படி தங்களை பாக்கியசாலி அல்லது சௌபாக்கியசாலியாக ஸ்ரீமத்படி அமைக்கிறார்கள் என்பது ஒவ்வொருவருடைய முயற்சியை பொருத்துள்ளது. இச்சமயம் நீங்கள் தந்தையிடம் ஆஸ்தி பெறுவதற்கான முயற்சியாளர் ஆவீர்கள். எல்லா குழந்தைகளும் ஒரு தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டி உள்ளது என்பதை அறிந்துள்ளீர்கள். பாக்கியசாலி அல்லது சௌபாக்கியசாலி அல்லது சௌபாக்கிய விதாதா நீங்கள் ஆவீர்கள். ஏனெனில் தாய் தந்தையின் குழந்தைகள் நீங்கள். ஒவ்வொரு மனிதரையும் பாக்கியசாலி, சௌபாக்கியசாலி ஆக்குவது உங்களுடைய கடைமையுமாகும். சௌபாக்கியசாலி அதாவது சொர்க்கத்தின் அதிபதி ஆக வேண்டும். யார் 100 சதவிகிதம் சௌபாக்கியசாலி ஆவார்களோ  அவர்கள் சொர்க்கத்தின் அதிபதி ஆகிறார்கள். அதில் கூட பிறகு வரிசைக்கிரமமாக உள்ளார்கள். சூரிய வம்சத்தினருக்குத் தான் சௌபாக்கியசாலி என்று கூறுவார்கள். திரேதாவில் இரண்டு கலை குறைந்து விடும் பொழுது அதனை சொர்க்கம் என்று கூற மாட்டார்கள். அவர்களுக்கு சூரிய வம்சத்தினர் என்று கூற மாட்டார்கள். நாமோ 100 சதவிகிதம் சௌபாக்கியசாலி ஆக வேண்டும் என்பதை குழந்தைகளோ அறிந்துள்ளார்கள். சூரிய வம்சத்தில் இளவரசன் இளவரசியாக வேண்டும். இது ஈசுவரிய கல்லூரி ஆகும் அல்லவா? இறைவன் உலகத்தின் படைப்புக்கர்த்தா ஆவார். இது இருப்பதே உலகிற்கு அதிபதி ஆவதற்கான கல்லூரி. இறைவன் கற்பிக்கிறார். நான் உங்களுக்கு கற்பிக்கிறேன். மகாராஜாக்களுக்கு மகாராஜா ஆக்குகிறேன் என்று கூறுகிறார். இது உங்களுடைய படிப்பை பொருத்தது. யார் எந்த அளவிற்கு படிக்கிறார்களோ அவர்கள் மற்றவர்களுக்கும் அவ்வாறே கற்பிப்பார்கள். அவ்வாறே சௌபாக்கியசாலியாக ஆக்குவார்கள். குழந்தைகளாகிய உங்களுடைய தொழிலே இது தான். சிவபாபா கற்பிப்பவர் ஆவார். மற்றபடி எல்லோருமே கற்றுக் கொண்டிருக்கிறார்கள். நாம் மீண்டும் அதே தேவதை ஆகப்போகிறோம் என்பதை பிராமணர் பிராமணிகள் அறிந்துள்ளார்கள். இச்சமயத்தில் பாரதத்தின் தர்மம் எதுவும் கிடையாது. தேவதா தர்மத்தை யாருமே அறியாமல் உள்ளார்கள். தர்மத்தை அறியாமல் இருப்பது என்றால் அதர்மத்தினர் என்று பொருள். தர்மத்தில் சக்தி இருக்கிறது. தேவி தேவதா தர்மத்தினர் சத்யுகத்தில் இருக்கும் பொழுது ஏராளமான சுகம் இருந்தது. இப்பொழுதோ இருப்பது கலியுகம். முயற்சி செய்து சத்யுகத்தில் வர வேண்டும். ஜீவன் முக்தராக ஆக வேண்டும். ஜீவன் பந்தனத்தை தியாகம் என்று கூறினாலும் சரி, யோகம் என்று கூறினாலும் சரி, விசயம் ஒன்றே தான். யோகத்திற்குத் தான் செய்ய வேண்டும். சொர்க்கத்தை நினைவு செய்யவேண்டும். நினைவு - இணைப்பு என்று கூறப்படுகிறது. உங்களுடைய யோகம் ஒரு சிவபாபாவிடம் தான் இருக்கிறது. ஒரு சிவபாபாவைத் தவிர மற்றவர்களுடன் தொடர்பே கிடையாது. எனவே அவரைத் தான் நினைவு செய்யுங்கள். பாபா நீங்கள் எவ்வளவு இனிமையாக இருக்கிறீர்கள். மனதிலும் உள்ளத்திலும் நினைத்து கூட பார்க்கவே இல்லை. நீங்களோ எவ்வளவு அற்புதம் செய்துள்ளீர்கள். எங்களுக்கு சொர்க்கத்தின் அரசாட்சி அளிக்கிறீர்கள். எப்பேர்ப்பட்ட நிலைமையிலும் தந்தையை நினைவு செய்ய வேண்டும் அல்லது தொடர்பு கொள்ள வேண்டும். பாபாவை நினைவு செய்கிறார்கள். பாபாவிடம் பேசுகிறார்கள். அவருடன் அனைவருக்கும் தொடர்பு இருக்கிறது. ஆபத்துக்கள் வரும் பொழுது ஹே பகவான் ! இவருடைய ஆயுளை நீண்டதாக்குங்கள். விண்ணப்பம் எங்களுடையது. விருப்பம் பாபா உங்களுடையது. எனவே இது தொடர்பு ஆகியது அல்லவா? இந்த நினைவு யாத்திரை தந்தை வந்து கற்பிக்கும் பொழுது ஒரே ஒரு முறை ஆகிறது. மற்ற எல்லா தொடர்பு கொள்ளுதலும் மனிதர்கள் மனிதர்களுக்குக் கற்பிக்கிறார்கள். குருவிடம் செல்வார்கள். கிருபை செய்யுங்கள், மன்னியுங்கள், இந்த ஆபத்தை நீக்குங்கள். இப்பொழுது நீங்கள் பாபாவிற்கு அருகில் அமர்ந்துள்ளீர்கள். பாபாவை நினைவு செய்து இவ்வாறு கூறலாம். பாபா இந்த நிலைமையில் நாம் என்ன செய்யலாம். குழந்தைகளே, இது நாடகப்படி துக்கம் சுகம் ஆகிறது என்று பாபா புரிய வைக்கிறார். தந்தையிடம் தான் உங்களுடைய தொடர்பு (கம்யூனியன்) உள்ளது.



    குழந்தைகளே இது உங்களுடைய கர்ம கணக்கு ஆகும் என்று பாபா கூறுகிறார். இப்பொழுது நான் உங்களுடைய கர்மாதீத நிலையை அமைக்க வந்துள்ளேன். கர்ம கணக்கையோ அனுபவித்தே ஆக வேண்டும். இப்பொழுது நான் உங்களுக்கு அப்பேர்ப்பட்ட உயர்ந்த தர்மத்தைக் கற்பிக்கிறேன். இந்த தொடர்பு கொள்ளுதல் ஆத்மாக்களினுடையது பரமாத்மாவுடன் தான் ஆகிறது. பரமாத்மா அமர்ந்து ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்கிறார். வேறு எங்குமே பரமாத்மா ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்ளுதலோ அல்லது ஆத்மாக்கள் பரமாத்மாவுடன் தொடர்பு கொள்வதோ ஆக முடியாது. அவர்களோ தங்களை ஆத்மா என்றும் அறியாமல் உள்ளார்கள், பரமாத்மாவைக் கூட அறியாமல் உள்ளார்கள். பொய்யைத் தான் கூறிக் கொண்டே இருக்கிறார்கள்.



    பரமாத்மா நட்சத்திரமாக இருக்கிறார். அவருக்குள் முழு அவினாஷி பாகம் பொருந்தி உள்ளது என்பதை எப்பொழுதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? எப்பொழுதாவது இந்த வார்த்தைகளைக் கேட்டிருக்கிறீர்களா? அவர்களுடைய தொடர்பு கொள்ளுதல் ஒரு பொழுதும் ஆவதில்லை. உரையாடல் நிகழ்வதில்லை. அவர்களோ பிரம்மத்தை மட்டும் நினைவு செய்கிறார்கள். பிரம்மத்திடமோ எந்தவொரு உரையாடல் கூட ஆக முடியாது. உரையாடலோ ஆத்மாக்களிடம் தான் நிகழ்கிறது. ஆகாயத்திடம் என்ன உரையாடல் நிகழ்த்துவீர்கள்? மகதத்துவத்தில் இருக்கக் கூடிய ஆத்மாக்கள் இங்கு பாகம் ஏற்று நடிப்பதற்காக வருகிறார்கள்.மற்றபடி நிர்வாண தாமத்தில் என்ன தொடர்பு கொள்வீர்கள். அதுவோ தத்துவம் ஆகும் அல்லவா?... பரமாத்மாவுடன் உரையாடல் நிகழ்கிறது. ஆத்மா தான் பேசுகிறது. இந்த உறுப்புக்கள் மூலமாக கேட்கிறது. ஆத்மா இல்லை என்றால், சரீரம் எந்த வேலையும் செய்ய முடியாது. இந்த ஆத்மாக்களுடன் பரமாத்மாவுடன் தொடர்பு கொள்ளுதல் ஒரு முறை தான் நிகழ்கிறது. அதற்குத் தான் ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மா வெகுகாலமாக பிரிந்திருந்தார்கள் என்ற மகிமை உள்ளது. இப்பொழுது (கம்யூனியன்) தொடர்பு கொள்ளுதல் நிகழ்கிறது. அவ்வளவு தான். பிறகு ஒரு பொழுதும் நிகழ்வதே இல்லை. தேவதைகளினுடையது தொடர்பு கொள்ளுதல் ஆகிறதா என்ன? அவர்களோ ஒரு பொழுதும் நினைவு கூடசெய்வதில்லை. இப்பொழுது ஆத்மாக்களாகிய நம்முடைய சம்பந்தமே ஒரு தந்தையிடம் உள்ளது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். தந்தையைத் தான் ஹே, பதீத பாவனரே ! வாருங்கள் என்று எல்லோரும் நினைவு செய்கிறார்கள். பரமபிதா பரமாத்மாவிடம் ஆத்மா அவ்வாறு கூறுகிறது. அவர் இச்சமயம் இந்த உடலில் பிரவேசமாகி உள்ளார். அவருக்கு சாந்தி அளிக்கும் வள்ளல் என்று கூறுகிறார்கள். நாம் மீண்டும் சாந்தி தாமத்திற்கு எப்படி வருவது? குழந்தைகளே சுகம் சாந்தியின் ஆஸ்தி அளிப்பதற்கு கல்ப கல்பமாக நான் வர வேண்டி உள்ளது என்று தந்தை கூறுகிறார். பதீத பாவனரே வாருங்கள் என்று நினைவும் செய்கிறார்கள். எனவே குழந்தைகளே, இப்பொழுது என்னிடம் வரவேண்டி உள்ளது என்று தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். ஆத்மாவின் மீது பாவங்களின் சுமை நிறைய உள்ளது. ஆத்மா தான் அனுபவிக்க வேண்டி இருக்கிறது. சரீரத்தை தரிக்கச் செய்து தண்டனை கொடுக்கிறார்கள். அப்பொழுது தானே ஆத்மாவிற்கு உணர்வு ஏற்படும்.சரீரத்திற்கு காயம் ஏற்படும் பொழுது ஆத்மாவிற்கு துக்கம் ஆகிறது அல்லவா? புண்ணிய ஆத்மா, பாவ ஆத்மா என்று கூறப்படுகிறது. ஆனால் நான் ஆத்மா ஆவேன் என்ற ஞானம் மனிதர்களிடம் இல்லை. தொடர்பு கொள்ளுதல் (கம்யூனியன்) எல்லாமே ஆத்மாக்களுக்கு, ஆத்மாக்களுடன் நிகழ்கிறது. ஆத்மா தான் முழு விளையாட்டை நிகழ்த்துகிறது. எனக்கு 7 குழந்தைகள் என்று ஆத்மா சரீரத்தில் இருந்து கூறுகிறது. பரமபிதா பரமாத்மா நிராகாரமானவர் ஆவார். நான் இந்த சரீரத்தில் வந்துள்ளேன். எனக்கு இத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூறுகிறார். எத்தனை குழந்தைகளுக்கு பாட்டனார் ஆகிறேன். கணக்கிட்டு பார்க்கலாம். பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலமாக மனித சிருஷ்டியைப் படைக்கிறார். நல்லது. பிரம்மா யாருடைய குழந்தை? சிவபாபாவினுடையவர். பரமபிதா பிரம்மா மூலமாக சிருஷ்டியைப் படைக்கிறார் என்பது புத்தியில் இருக்கிறது. பிரம்மா படைப்பவர் (கிரியேட்டர்) கிடையாது. படைப்பவர் என்று நிராகார சிவ பரமாத்மாவிற்குத் தான் கூறுவார்கள். அவர் வந்து பிரஜாபிதா பிரம்மா மூலமாக தத்து எடுக்கிறார். குழந்தைகளே! குழந்தைகளே! என்று கூறிக் கொண்டு இருக்கிறார். இப்பொழுது இந்த விஷயங்களை நீங்கள் புரிந்துள்ளீர்கள். அது கூட எல்லோருடைய புத்தியிலும் ஒரே சீராகப் பதிவதில்லை. தந்தை தான் ஆஸ்தியை கொடுப்பார். தகுதி உடையவராக ஆக்குவார். தந்தையை நினைவு செய்யுங்கள். இதற்குத் தான் பாரதத்தின் பழைமையான யோகம் என்று கூறப்படுகிறது. இதனால் தான் விகர்மங்கள் விநாசம் ஆகும். பிறகு அந்த் மதி சோ கதி - கடைசியில் புத்தி எவ்வாறோ அவ்வாறு கதி (நிலை) ஆகி விடும். நினைவினால் தான் நோயற்றவராக ஆவீர்கள். ஆயுள் நீண்டு கொண்டே போகும். முயற்சியினால் பிராலப்தம் கிடைத்துள்ளது. சத்யுகத்தின் அதிபதியாக அவர்கள் எவ்வாறு ஆனார்கள். இது யாருக்குமே தெரியாது. மகிமை பாடிக் கொண்டே இருக்கிறார்கள். பொருள் எதுவும் புரியாமல் இருக்கிறார்கள். எவ்வளவு பூஜை செய்கிறார்கள். யாத்திரைகள் மேற் கொள்கிறார்கள். இங்கோ முற்றிலும் அமைதி இருக்கிறது. தந்தை ஞானக் கடல் ஆவார் என்றாலும் கூட இதுவும் ஒரு நொடியின் விஷயமாகும். என்னை நினைவு மட்டும் செய்யுங்கள் பின் ஆஸ்தி உங்களுடையதாக இருக்கவே இருக்கும். மன்மனாபவ, மத்யாஜி பவ. மற்றது விஸ்தாரமான விளக்கமாகும். அது கூட எவ்வளவு காலமாக அளித்து கொண்டே இருக்கிறார். அந்த ஜனங்கள் எவ்வளவு மாநாடுகள் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். மதங்களின் மாநாட்டிற்கு அழைக்கிறார்கள். யோகத்தின் மாநாட்டிற்கு அழைக்கிறார்கள். எல்லாமே வீண் ஆகும். ஒரு நொடியில் ஜீவன் முக்தி அளிப்பவர் ஒரு தந்தை மட்டுமே ஆவார். ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் மாநாடு நிகழும் பொழுது தான் ஆத்மாக்களுக்கு பரமாத்மாவிடமிருந்து முக்தி கிடைக்கிறது. ஆத்மா பரமாத்மாவிடமிருந்து வெகுகாலமாக பிரிந்திருந்தார்கள். சத்குரு தரகர் ரூபத்தில் கிடைக்கும் பொழுது அழகான மேளா (திருவிழா) நிகழ்த்தி விட்டார் என்றும் பாடப்படுகிறது. தந்தை தான் வந்து புது உலகத்தை படைக்கிறார். தகுதி உடையவர்களாக ஆக்குகிறார். எல்லாவற்றையும் விட முதல் நம்பர் மாநாடு இது ஆகும். இதற்கு கும்ப மேளா என்று கூறுகிறார்கள். கும்பம் என்று சங்கமத்திற்குக் கூறப்படுகிறது. இந்த சங்கமத்தின் மேளா முதல் தரமான மாநாடு ஆகும். இதில் ஆத்மாக்கள் வந்து பரமாத்மாவை சந்திக்கிறார்கள். ஒரு நொடியில் ஜீவன் முக்தி கிடைக்கிறது. இதற்குப் பிறகு வேறு எந்தவொரு மாநாடு, யக்ஞம், தவம் ஆகிய எதுவுமே நடப்பதில்லை. எல்லாமே முடிந்து போய் விடுகிறது. ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் உங்களுடைய மாநாடு எப்படி முதல் நம்பராக உள்ளது. ஆத்மா உடலில் பிரவேசம் செய்வதால் ஜீவாத்மா ஆகிறது. நான் இவருக்குள் பிரவேசம் செய்யாவிட்டால் எப்படி என்னுடைய அறிமுகம் கொடுக்க முடியும். மேலும் திரிகாலதரிசி அல்லது சுயதரிசன சக்கரதாரியாக எப்படி ஆக்க முடியும் என்று கூறுகிறார். நாங்கள் சுயதரிசன சக்கரதாரி ஆகிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. விஷ்ணுவுடன் கூட கிருஷ்ணருக்கும் சக்கரம் கொடுத்து விடுகிறார்கள். கீதையில் கிருஷ்ணருடைய பெயர் கொடுத்து விட்டுள்ளார்கள். இல்லையென்றால் சக்கரத்தின் விஷயம் கிடையாது. உங்களுக்கு சிருஷ்டியினுடைய முதல் இடை கடை பற்றிய இரகசியத்தைப் புரிய வைக்கிறார். இந்த மாநாடு எவ்வளவு முதல்தரமானது ஆகும். வேறு எந்த மாநாடுகளெல்லாம் நடத்துகிறார்களோ அவை நேரத்தை வீணாக்குவது ஆகும். ஜீவ ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் இந்த மாநாடு எல்லாவற்றையும் விட நல்ல மாநாடு ஆகும். ஜீவ ஆத்மாக்கள் பரமாத்மாவை நினைவு செய்கிறார்கள். எனவே அவசியம் உடலில் வருவார் அல்லவா? இல்லையென்றால் எப்படிப் பேச முடியும்? இந்த மாநாடு எல்லாவற்றையும் விட நல்லது ஆகும். இதில் தான் பரமபிதா பரமாத்மா வந்து அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார். பதீத ஆத்மாக்களுடன் அவசியம் பதீத பாவனருடன் தான் மாநாடு நடக்கும். அப்பொழுது தானே பாவனமாக ஆக்குவார். எவ்வளவு சுலபமாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். ஆத்மாக்கள் பரமாத்மாவுடன் கொள்ளும் யோகமே உத்தமத்திலும் உத்தமமான யோகம் ஆகும். அது கூட சுயம் பரமாத்மா வந்து கற்பிக்கிறார். என் ஒருவனை நினைவு செய்யுங்கள். ஹே ஜீவ ஆத்மாக்களே ! உங்களது பரலோக தந்தையாகிய என்னுடன் யோகம் கொண்டீர்கள் என்றால், உங்களது அனைத்து விகர்மங்களும் விநாசம் ஆகும். அனைத்து ஆத்மாக்களும் பரமாத்மாவைச் சந்திக்கும் பொழுது அவசியம் பரமாத்மா வந்து ஆஸ்தி அளிப்பார். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல், ஜீவன் முக்தி அளிக்கும் வள்ளல் அந்த தந்தை ஆவார். இது போன்ற விஷயங்களை வேறு யாருமே கூறுவதே இல்லை. நீங்கள் கூறினீர்கள் என்றால் வேறு யாரிடமிருந்தும் இது போன்ற விஷயங்களைக் கேட்கவே இல்லை என்பார்கள். நீங்களோ மிகவும் நன்றாகப் புரிய வைக்கிறீர்கள். இந்த விஷயங்களோ சாஸ்திரங்களில் கூட இல்லை. ஆனால் சாஸ்திரங்களில் எங்கிருந்து வந்தது. ஒரு நொடியில் ஜீவன் முக்தி என்று தந்தை கூறுகிறார்.சாஸ்திரங்களிலிருந்து என்ன கற்றுக் கொள்வீர்கள்? பாபா காலன்களுக்கெல்லாம் காலன் ஆவார். குழந்தைகளை கூட்டி செல்கிறார். அவசியம் வருவார். அப்பொழுது தானே பாவனமாக ஆக்கி கூட்டி செல்வார். உங்களை பாவனமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். சத்யுகத்தில் எல்லோருமே பாவனமாக இருப்பார்கள். பாவனமாக ஆக்குவதற்கு அவசியம் சங்கமத்தில் வந்திருக்கக் கூடும். இது கல்பத்தினுடைய சங்கமம் ஆகும் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். தந்தை வந்திருக்கிறார். உங்களுடைய தொடர்பை (கம்யூனியன்) தன்னுடன் செய்விக்கிறார். நான் சாதாரண பிரம்மாவின் உடலில் வந்துள்ளேன் என்று கூறுகிறார். இந்த தாதா ஒன்றும் பிரம்மாவாக இருக்கவில்லை. உண்மையில் பிராமணராக இருந்தார் என்றாலும் கூட அந்த எல்லாவற்றையும் விட்டு விட்டார். இப்பொழுது பிரம்மா மூலமாக படைப்பை படைக்க வேண்டும். எனவே பிரம்மா வேண்டும். நான் பிரம்மாவின் உடலில் வருகிறேன் என்று சுயம் அவரே கூறுகிறார். முதல் நம்பர் பாவனமானவரே முதல் நம்பர் பதீதமாக ஆகி (தூய்மையற்றவராக) 84 பிறவிகள் முடித்து விட்டார். எனவே (பாவனம்) தூய்மையாக ஆவார் அல்லவா? பிறகு ஃபரிஷ்தா ஆகிறார். (தத்-த்வம்) நீங்களும் அவ்வாறே ஆகிறீர்கள். பிராமணர்கள் தான் தேவதை ஆவார்கள். யாருடைய முயற்சி அதிகமாக இருக்குமோ அவர்கள் உயர்ந்த பதவி அடைவார்கள். நீங்கள் அனைவரும் கல்யாணகாரி (நன்மை செய்பவர்கள்) ஆவீர்கள் அல்லவா? ஒரு பாபா மட்டும் செய்கிறாரா என்ன? இறை சேவகர்களோ நிறைய பேர் வேண்டும் அல்லவா? நீங்கள் ஆன் காட் ஃபாதர்சர்வீஸ் இறை சேவையில் இருக்கிறீர்கள். ஆங்கில வார்த்தைகள் மிகவும் நன்றாக உள்ளது. அவர்கள் (ஹெவென்) சொர்க்கத்தில் செல்வதில்லை தான். ஹெவென்காட்ஃபாதர் ஸ்தாபனை செய்கிறார் என்று பாடுகிறார்கள் அல்லவா? முகம்மதியர்கள் பஹிஷ்த் என்று கூறுகிறார்கள். சுயம் பஹிஷ்த்-ல் செல்கிறார்களா என்ன? இதுவோ புத்தியின் விஷயமாகும். பாரதம் சொர்க்கமாக இருந்தது. இப்பொழுது நரகமாக உள்ளது. ஹெவென் ஸ்தாபனை செய்பவர் தந்தையை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. ஹெல் - நரகத்திற்கு முடிவு வரும் பொழுதே தானே பின்னர் தந்தை வந்து ஹெவெனிற்கு அழைத்துச் செல்ல முடியும். ஹெல் - நரகத்தில் தான் (ஹெவென்) சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்குவதற்கு தந்தை வர வேண்டி உள்ளது. இப்பொழுது நீங்கள் தோஜக் (நரகம்) மற்றும் (பஹிஷ்த்) சொர்க்கத்திற்கு நடுவில் அமர்ந்துள்ளீர்கள். மற்றவர்கள் எல்லோரும் இருப்பதே தோஜக் -நரகத்தில். குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் தான் உங்களது (புருஷார்த்தம்) முயற்சி மூலமாக (பஹிஷ்த்) சொர்க்கத்திற்குச் செல்கிறீர்கள். எனவே உங்களுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. ஒரு தந்தையிடம் மட்டுமே உண்மையான யோகம் தொடர்பு கொள்ள வேண்டும். தந்தையிடம் தான் இதயப் பூர்வமான உரையாடல் நிகழ்த்த வேண்டும். தங்களது விஷயங்களை தந்தைக்கு முன்னால் தான் வைக்க வேண்டும். எந்த தேகதாரிக்கு முன்னாலும் அல்ல.



    2. இறை சேவகராக ஆகி அனைவருக்கும் சொர்க்கத்திற்குச் செல்வதற்கான வழி கூற வேண்டும். அனைவருக்கும் நன்மை செய்பவராக (கல்யாணகாரி) வேண்டும்.



    வரதானம்:

    சர்வ சக்திகளின் அனுபவம் செய்தபடியே தக்க நேரத்தில் சித்தியை (பலன்) அடைந்து விடக் கூடிய நிச்சயிக்கப்பட்ட வெற்றி உடையவர் ஆவீராக.



    அனைத்து சக்திகளிலும் நிறைந்திருக்கும் நிச்சய புத்தி குழந்தைகளின் வெற்றியோ நிச்சயிக்கப்பட்டதாக இருக்கவே இருக்கும். எப்படி எவரொருவரிடமும் செல்வத்தின், புத்தியின் அல்லது சம்பந்தம் தொடர்பின் சக்தி இருந்தது என்றால், இது என்ன பெரிய விஷயம் என்று அவர்களுக்கு நிச்சயம் இருக்கும். உங்களிடமோ எல்லா சக்திகளும் இருக்கின்றன. எல்லாவற்றையும் விட பெரிய செல்வம் அழியாத செல்வம் எப்பொழுதும் கூடவே உள்ளது. எனவே செல்வத்தின் சக்தி கூட இருக்கிறது. புத்தி மற்றும் பதவியின் சக்தி கூட இருக்கிறது. இவற்றைப் பயன்படுத்துங்கள்.அவ்வளவே! சுயத்திற்காக காரியத்தில் ஈடுபடுத்துங்கள். அப்பொழுது தக்க சமயத்தில் விதி மூலமாக சித்தி பிராப்தி ஆகும்.



    சுலோகன்:

    வீணானவற்றைப் பார்ப்பது மற்றும் கேட்பதற்கான சுமையை நீக்கி விடுவது தான் டபுள் லைட் ஆவது ஆகும்



    ***OM SHANTI***