BK Murli 4 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 4 July 2017 Tamil

    04.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே ! இந்த சரீர உணர்வை மறந்து கொண்டே செல்லுங்கள். அசரீரி ஆவதற்கான முயற்சி செய்யுங்கள். ஏனெனில் இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.



    கேள்வி:

    ஆஸ்திகக் குழந்தைகளாகிய நீங்கள் தான் எந்த ஒரு வார்த்தையைக் கூற முடியும்?



    பதில்:

    பகவான் நமது தந்தை ஆவார் என்பதை ஆஸ்திகர்களாக இருக்கும் குழந்தைகள் மட்டுமே கூற முடியும். ஏனெனில், அவர்களுக்குத் தான் தந்தையின் அறிமுகம் உள்ளது. நாஸ்திகர்களோ அறியாமலே இருக்கிறார்கள். ஆஸ்திகராக இருக்கும் குழந்தைகள் தான் என்னுடையவரோ ஒரே ஒரு பாபா அவரைத் தவிர வேறு யாருமில்லை என்று கூறுவார்கள்.



    கேள்வி:

    தீவிர முயற்சியாளர்களாக ஆவதற்கு எந்த ஒரு நிலை (ஸ்திதி) வேண்டும்?



    பதில்:

    (சாட்சி ஸ்திதி) பார்வையாளரின் நிலை. பார்வையாளராக இருந்து ஒவ்வொருவருடைய பாகத்தையும் பார்த்தபடியே புருஷார்த்தம் (முயற்சி) செய்து கொண்டே இருங்கள்.



    பாடல்:

    இறந்தாலும் உன்னிடமே .. .. .. ..



    ஓம் சாந்தி.

    இதை யார் கூறினார்கள்? முன்னால் அமர்ந்திருக்கும் ஜீவ ஆத்மாக்கள் கூறினார்கள். இங்கு ஆத்மா அமர்ந்துள்ளது என்று கூற முடியாது. இல்லை. ஜீவ ஆத்மாக்கள் அமர்ந்திருக்கிறார்கள். ஆத்மா தான் சரீரம் மூலமாக ஒவ்வொரு செயலையும் செய்கிறது என்பதை தந்தை புரிய வைத்துள்ளார். இதற்கு தேஹீ அபிமானி - ஆத்ம உணர்வு என்று கூறப்படுகிறது. தேகத்தில் இருப்பவர்கள் தங்களது பரம பிரிய பரமாத்மாவிடம் ஆத்மாக்களாகிய நாம் இப்பொழுது உங்களது கழுத்தின் மாலை ஆகிடுவோம் என்று கூறுகிறார்கள். அதாவது நாம் இந்த சரீரத்தை விடுத்து உங்களிடம் வந்து விடுவோம். எப்படி மனிதர்களுடைய வம்சாவளி மரம் உள்ளது. பிரம்மா சரஸ்வதி, ஆதாம் ஏவாள் ஆகியோரின் பரம்பரை அமைகிறது. அப்படியே மூலவதனத்தில் கூட பரம்பரை உள்ளது என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். முதன் முதலில் இருப்பவர் சிவன். ஆத்மாக்களாகிய நீங்கள் எனது கழுத்தின் மாலையாக எப்படி ஆவீர்கள்? என்னை நினைவு செய்வதால் எந்த அளவிற்கு யார் என்னை நினைவு செய்கிறார்களோ அந்த அளவிற்கு வேகமாக முன்னேறிச் செல்வார்கள். என்னிடம் மிகுந்த அன்பு உள்ளது. என்னிடம் வராமல் இருக்க முடியாது. ஏனெனில் ஆத்மாவிற்கு இந்த சரீரத்துடன் சுகம் இல்லை. துக்கம் தான் இருக்கிறது. இப்பொழுது பகவானோ நிராகாரமானவர். நிராகாரமான ஆத்மாக்களுக்குத் தான் கூறுகிறார். அந்த பரமபிதா பரமாத்மா தான் படைப்பின் முதல் இடை கடையை அறிந்துள்ளார். திரிகாலதரிசி ஆவார். வேறு எந்த மனிதர்கள் கூட எவ்வளவு தான் பெரிய பண்டிதர்களாக இருக்கட்டும், வேத சாஸ்திரம் படித்தவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு இந்த படைப்பினுடைய முதல் இடை கடை பற்றிய ஞானம் இல்லை. நாஸ்திகராக இருக்கும் காரணத்தால் திரிகாலதரிசி ஆக முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஆஸ்திகர்களாக ஆகியிருக்கிறீர்கள். தந்தை தான் உங்களுக்கு அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். எனவே நீங்கள் பாபா என்று கூறுவதற்கு உரிமையுடையோர் ஆவீர்கள். அவர்களோ பரமாத்மா எங்கும் நிறைந்தவர் (சர்வ வியாபி) என்று கூறி விடுகிறார்கள். பிறகு இதனால் என்ன கிடைத்தது. எதுவும் இல்லை. தந்தையோ ஞானக் கடல் ஆவார். அவர் ஒன்றும் நான் சர்வவியாபி ஆவேன் என்று கூறுவதில்லை. பிறகோ எல்லோரும் தந்தையாகி விடுவார்களே ! ஃபாதர் ஹுட் - தந்தை தன்மை என்று கூறப்படுகிறதா என்ன? ஒரு தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். அவரை பிரபு, இறைவன் என்றும் கூறுகிறார்கள். அவரே பிரம்மா, விஷ்ணு, சங்கரனைப் படைப்பவர் ஆவார். திரிமூர்த்தி பிரம்மா என்று கூறுவது தவறாகும். பிரம்மா, விஷ்ணு, சங்கரனுக்கு கூட தந்தை அவர் சிவன் ஆவார். அவர் பிரம்மாவை தத்து எடுத்துள்ளார். பிரம்மாவின் வாய் வழியாக பரமபிதா பரமாத்மா சிவன் மூலமாக நாம் திரிகாலதரிசி அல்லது சுயதரிசன சக்கரதாரி ஆகிக் கொண்டிருக்கிறோம். சுயம் அதாவது ஆத்மாவின் ஞானம். ஆத்மாவிற்குத் தான் சுயராஜ்யம் கிடைக்கிறது. ஆத்மா அவினாஷி ஆகும். சரீரம் அழியக் கூடியது ஆகும். ஆத்மா தான் நல்லது அல்லது கெட்டது போன்ற அனைத்து சம்ஸ்காரங்களையும் தாரணை செய்கிறது. ஆத்மாக்களாகிய நாம் இப்பொழுது தமோபிரதானமாக உள்ளோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பதீத ஆத்மா அல்லது பாவன ஆத்மா என்றும் கூறப்படுகிறது. சரீரத்தின் பெயர் கூறப்படுவதில்லை. புண்ணிய ஆத்மா, மகான் ஆத்மா. ஆத்மாவிற்குத் தான் மகிமை செய்யப்படுகிறது. ஆத்மா பரமபிதா பரமாத்மா தந்தையிடம் அமர்ந்து கேட்கிறார். தந்தை இது போல அமர்ந்து குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார் என்பது உலகத்தில் யாருக்குமே தெரியாது. நாம் தந்தையினுடையவராக ஆகி உள்ளோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். தந்தையிடமிருந்து நாம் ஆஸ்தி பெற வேண்டும். மற்றவர்களிடம் நமக்கு எந்த வேலையும் இல்லை. என்னுடையவரோ ஒரு சிவபாபா வேறு யாருமில்லை என்று ஆத்மா கூறுகிறார். என்னுடையவரோ ஒரு ஆசிரியர்..... என்று மாணவர்கள் புரிந்திருப்பார்கள். உங்களுடையவர் ஒரே ஒரு தந்தை தான் ஆசிரியரும் ஆவார். அவர் பதீத பாவன தந்தை ஆவார். அனைத்து ஆத்மாக்களின் தொடர்பு அந்த தந்தை, ஆசிரியரிடம் தான் இருக்கிறது. யாராவது பிராமணி கற்பிக்கிறார் என்றாலும் அவர் கூட தந்தையாகிய என்னிடமிருந்து தான் கற்றிருக்கிறார். நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள், பிராமணியை அல்ல என்று தந்தை கூறுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையாகிய என்னைத் தெரிந்து கொண்டு விட்டுள்ளீர்கள். அடையாளம் கண்டு கொண்டுள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் ஆஸ்திகர் ஆகி உள்ளீர்கள். யார் அறியாமல் இருக்கிறார்களோ அவர்கள் நாஸ்திகர்கள், அநாதைகள் ஆவார்கள். தந்தையின் பெயர், ரூபம், தேசம், காலம் எது என்பது எதுவுமே அறியாமல் உள்ளார்கள். அவருக்கு எந்த ஒரு பெயர், ரூபம் கூட இல்லை என்று கூறி விடுகிறார்கள். அவசியம் அவருடைய பெயர் சிவன் என்பதாகும் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர் தனக்கென்று உடலைத் தரிப்பதில்லை. எனவே அவருடைய பெயர் ஒரு பொழுதும் மாற முடியாது. நம்முடைய 84 பிறவிகளின் பெயர், ரூபம் மாறிக் கொண்டே போகிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவருடைய பெயர் சிவன் என்பதே ஆகும். எப்படி ஆத்மாவின் ரூபமோ அதே போல பரமாத்மாவின் ரூபம் கூட ஆகும். அப்படியின்றி பரமாத்மா ஏதோ அகண்ட ஜோதி, மிகப் பெரிய உருவம் என்பதல்ல. எப்படி ஆத்மா நட்சத்திரத்தைப் போன்று இருக்கிறதோ, அதே போல நான் கூட இருக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். ஆனால் என்னிடம் ஞானம் இருப்பதால் எனக்கு மகிமை உள்ளது. சத்-சித்-ஆனந்த சொரூபம், ஞானக் கடல் ஆவேன். உயிரூட்ட தன்மை உள்ளது. அதனால் தான் ஞானத்தைக் கூறுகிறார். அவர் சைதன்ய (உயிரூட்டமுடைய) விதை ரூபம் ஆவார். அந்த ஜட விதையோ எதையும் கூற முடியாது. மனிதர்கள் தான் அறிந்திருப்பார்கள். எப்படி தந்தையின் புத்தியில் முழு மனித சிருஷ்டியின் விருட்சம் இருக்கிறதோ, அதே போல உங்களது புத்தியில் உள்ளது. எவ்வளவு வகையாக இருக்கிறார்கள். ஒருவரது தோற்றத்தைப் போல மற்றவரது இருப்பதில்லை. ஒவ்வொருவருடைய தோற்றம் கூட தனித் தனி ஆகும். ஒவ்வொருவருக்கும் அவரவருக்கென்று பாகம் உள்ளது. எவ்வளவு பெரிய எல்லையில்லாத நாடகம் ஆகும் இது என்பதை தந்தை புரிய வைக்கிறார். எவ்வளவு வகையான தோற்றங்கள் உள்ளன. எல்லோரும் இந்த நாடகத்தில் நடிகர்கள் ஆவார்கள். இந்த நாடகம் (அவினாஷி) அழியாதது என்று இருக்கும் பொழுது எந்த ஒரு நடிகர் கூட மாறிப் போக முடியாது. நமக்கு 84 பிறவிகளில் 84 பெயர்கள் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரிய வந்துள்ளது. இப்பொழுது பெயர்களும் முடிந்து விட்டன. வர்ணங்களும் முடிந்து விட்டன. இப்பொழுது மீண்டும் திரும்ப நடைபெறும். அதாவது கீதையின் சரித்திரம் திரும்ப நடந்து கொண்டிருக்கிறது. முதன் முதலில் பகவானின் ஸ்ரீமத் பாடப்பட்டுள்ளது. ஆனால் பகவானை மறந்து விட்டுள்ளார்கள். சிவபாபாவின் ஜெயந்தி ஆன பிறகே தான் கிருஷ்ணரின் ஜெயந்தி ஆக முடியும். அப்படியின்றி தந்தையின் ஜெயந்தியே மறைந்து போய்விட்டது. குழந்தையின் ஜெயந்தி மட்டும் ஆகி விட முடியுமா என்ன? இலட்சுமி நாராயணர் உலகத்திற்கு அதிபதியாக இருந்தார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. அவர்கள் இந்த ஆஸ்தியை எப்படி பெற்றார்கள்? பரமபிதா பரமாத்மாவிடமிருந்து. பரமபிதா பரமாத்மா தான் இராஜயோகம் கற்பிக்கிறார். எப்பொழுது? நான் கல்ப கல்பமாக கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். அப்பொழுது அசுர இராஜ்யத்தின் அழிவு, தெய்வீக இராஜ்யத்தின் ஸ்தாபனை ஆகிறது. யார் ஆஸ்திகர்களாக ஆகி இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. நாஸ்திகர்களுக்கு ஆஸ்தி கிடைக்க முடியாது. தந்தை வந்து அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவிக்கிறார். இப்பொழுது இவர்கள் சுகதாமத்திற்கு செல்கிறார்கள். அப்பொழுது மற்ற ஆத்மாக்கள் கணக்கு வழக்கு முடிந்து திரும்பிச் சென்று விடுகிறார்கள். நிராகார தந்தை அனைத்து ஆத்மாக்களையும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார். அழைத்துச் செல்பவருக்கு மகா காலன், காலன்களுக்கெல்லாம் காலன் என்று கூறப்படுகிறது. காலன்களுக்கெல்லாம் காலன் மகா காலனுக்கு கூட கோவில் உள்ளது. மகா காலன் சிவன் ஆவார் அல்லது சோமநாத், ருத்ர என்றும் கூறலாம். நான் இந்த அனைத்து ஆத்மாக்களுக்கும் (கைடு) வழிகாட்டி ஆவேன். அனைவரையும் கூட அழைத்துச் செல்வேன். உங்களை இந்த இராவணனின் இராஜ்யத்திலிருந்து விடுவிக்கிறேன் (லிபரேட்) என்று தந்தை கூறுகிறார். இது இராவண இராஜ்யம் ஆகும். இப்பொழுது இராவண இராஜ்யம் ஒழிந்து இராம இராஜ்யம் வாழ்க ! என்று ஆகப் போகிறது. எல்லோரும் இராம இராஜ்யத்தையே விரும்புகிறார்கள் அல்லவா? எனவே நிச்சயம் இராவண இராஜ்யத்தின் அழிவு ஆக வேண்டி உள்ளது.



    இப்பொழுது இந்த பழைய உலகமே முடியப் போகிறது என்று தந்தை புரிய வைக்கிறார். ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை முற்றிலுமே மறந்து விட்டுள்ளார்கள். இது அதே கீதை சரித்திரம் நடந்துக் கொண்டிருக்கிறது. யாதவர்கள், கௌரவர்கள் கூட உண்மையில் இருக்கிறார்கள். யாதவர்கள் அதே ஐரோப்பியர்கள் ஆவார்கள். ஆயுதங்களைக் கண்டுபிடிப்பவர்கள் ஆவார்கள். உலகப் போரில் எல்லாமே அழிந்து போய் விடும் என்று கூட எழுதப்பட்டுள்ளது. யாருமே தங்களது ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை அறியாமல் உள்ளார்கள். தர்மத்தில் சக்தி உள்ளது என்று கூட பாடப்படுகிறது. பக்திமான்கள் நல்லவர்கள் என்று கருதப்படுகிறார்கள். பக்தி செய்யாதவர்கள் தீயவர்கள் என்று கருதப்படுகிறார்கள். பாரதம் பக்தி நிறைந்ததாக இருந்தது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. இப்பொழுது பாரதம் பக்தியற்றதாகி விட்டது. தங்களது தர்மத்தை விட்டு விட்டார்கள். இது நாடகப்படி அவ்வாறு விட வேண்டியே உள்ளது. அங்கோ மகாராஜா மகாராணியின் இராஜ்யம் நடக்கிறது. மந்திரிகள் ஆகியோர் அங்கு இருக்கவே மாட்டார்கள். சட்டம் கிடையாது. (தூய்மையற்றவராக) பதீதமாக ஆகும் பொழுது அப்பொழுது மந்திரிகள் ஆகியோரின் அவசியம் இருக்கும். இப்பொழுதோ ஒவ்வொரு அரசாங்கத்திலும் எத்தனை மந்திரிகள் உள்ளார்கள். ஒருவரது ஆலோசனை மாதிரி இன்னொருவருடையது இருப்பதில்லை. எவ்வளவு கருத்து வேற்றுமையில் வந்து கொண்டே இருக்கிறார்கள். இப்பொழுது பாபா நமக்கு மனிதனிலிருந்து தேவதையாக ஆக்குவதற்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். அனைவரும் தங்களை ஆத்மா என்று உணருங்கள் என்று தந்தை கூறுகிறார். தேகத்தின் இந்த அனைத்து சம்பந்தங்களையும் மறந்து விடுங்கள். முற்றிலும் ஏழை ஆகி விட்டார். எல்லாமே கொடுத்து விட்டார். சரீரத்தைக் கூட கொடுத்து விட்டார். மீதி என்ன இருக்கும்? எதுவும் கிடையாது. நான் ஆத்மாக்களிடம் உரையாடுகிறேன் என்று பரமபிதா பரமாத்மா கூறுகிறார். ஆத்மாக்களைக் கூட்டிச் செல்ல வேண்டி உள்ளது. இந்த சரீர உணர்வை மறந்து கொண்டே செல்லுங்கள். இதில் தான் உழைப்பு உள்ளது.



    இனிமையான குழந்தைகளே ! முழு கல்பம் நீங்கள் தேக உணர்வுடையவராக இருந்தீர்கள் என்று தந்தை கூறுகிறார். லௌகீக தந்தையைத் தான் நினைவு செய்தீர்கள். இப்பொழுது ஆத்ம உணர்வுடையவராக ஆகி என்னை நினைவு செய்யுங்கள், என்னுடைய நினைவினால் தான் பலம் கிடைக்கும். ஹே குழந்தைகளே, ஹே ஆத்மாக்களே, என் ஒருவனையே நினைவு செய்யுங்கள். வேறு யாரையும் அல்ல. தப்பித் தவறி கூட வேறு யாரையும் நினைவு செய்யக் கூடாது. நீங்கள் இந்த உறுதி எடுக்கிறீர்கள். பாபா எனக்கோ நீங்கள் ஒரே ஒருவர் தான். நாம் ஆத்மாக்கள் ஆவோம். நீங்கள் பரமாத்மா ஆவீர்கள். நீங்கள் கூறி இருக்கிறீர்கள். ஆத்மா எனது குழந்தை ஆவீர்கள். இப்பொழுது இராவணனின் துக்கத்திலிருந்து உங்களை விடுவித்து திரும்ப கூட்டிச் செல்ல வந்துள்ளேன். இப்பொழுது குழந்தைகள் பொறுமையாக இருக்க வேண்டும். இராஜதானி ஸ்தாபனை ஆகிவிட்டது என்றால் பின்னர் இந்த மகாபாரமான மகாபாரதப் போர் நிகழும். அப்பொழுது தான் கலியுகம் மாறி சத்யுகம் வர முடியும். எனவே நான் காலன்களுக்கெல்லாம் காலன் ஆகிறேன் அல்லவா? நான் தந்தையும் ஆவேன். பின் ஆசிரியரும் ஆவேன். பதீத பாவனரும் ஆவேன். பின் நான் மகா காலன் கூட ஆவேன். எங்கு கூட்டிச் செல்வேன்? இனிமையான குழந்தைகளே முக்தி தாமத்திற்குக் அழைத்துச் செல்வேன். இங்கிருந்து முக்தி பெற்று பின் சொர்க்கத்தில் வருவீர்கள் - நீங்கள் வருங்காலத்தில் தேவி தேவதை ஆவதற்காக படிக்கிறீர்கள். இப்பொழுது பிராமணர்களாகிய நீங்கள் ஈசுவரிய குழந்தைகள் ஆவீர்கள். பிரம்மாவின் குழந்தைகள் சகோதர சகோதரி ஆவீர்கள். விகாரத்தில் போக முடியாது. ஈசுவரிய பேரன் பேத்திகள் ஆவீர்கள். அவரிடமிருந்து நாம் ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். எந்த அளவிற்கு யார் முயற்சி செய்வார்களோ அந்த அளவிற்கு பதவியை அடைவார்கள். கல்ப கல்பமாக முயற்சி செய்திருந்தீர்கள் என்றால், இப்பொழுது நீங்கள் முயற்சி செய்ய முற்படுவீர்கள். இதில் சாட்சியாக ஆகி (பார்வையாளர்) இருப்பதற்கான அப்பியாசம் வேண்டும். ஒவ்வொருவரும் எவ்வளவு முயற்சி செய்கிறார்கள். எதுவரை பின்பற்றுகிறார்கள் என்பதை சாட்சியாக இருந்து பாருங்கள். யாருடைய பெயர் ரூபத்திலும் சிக்கிக் கொள்ளக் கூடாது. தந்தையைத் தவிர வேறு யாரும் நினைவிற்கு வரக் கூடாது. குழந்தைகளே, நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பித்து பாவனமாக ஆக்கிக் கூட அழைத்து செல்வேன் என்று பாபா கூறுகிறார். கல்ப கல்பமாக நமக்கு தந்தையிடமிருந்து நாடகப்படி மிகச் சரியாக கல்வி கிடைக்கிறது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். நீங்கள் திரௌபதிகள் ஆவீர்கள். இது ஒன்றும் சுகத்தின் இராஜ்யம் கிடையாது. இது பற்றி கதை கூட கூறப்பட்டுள்ளது. இப்பொழுது தந்தையோ உண்மையான விஷயங்களைப் புரிய வைக்கிறார். நீங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அனைவரையும் சேற்றிலிருந்து வெளியேற்றுகிறீர்கள். எல்லோரும் காமச் சிதையில் அமர்ந்து எரிந்து இறந்து விட்டுள்ளார்கள். உங்களது தலை மீதோ ஞான மழை பொழியப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த என்னுடைய குழந்தைகள் எரிந்து சாம்பலாகி விட்டுள்ளார்கள் என்று தந்தை கூறுகிறார். நான் வந்துள்ளேன். அனைவரையும் விடுவித்து கூடவே அழைத்துச் செல்வேன். மனிதர்களுக்கு இது தெரியாது. இப்பொழுது நீங்கள் கோரமான இருளிலிருந்து வெளியேறி வந்துள்ளீர்கள். இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள், வீட்டை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் வீட்டை மறந்து விட்டுள்ளீர்கள். மூல வதனம், சூட்சும வதனம் என்றும் பாடுகிறார்கள். மூலவதனத்தில் எல்லா ஆத்மாக்களும் இருக்கிறார்கள். ஆத்மா என்றால் என்ன? பரமாத்மா என்றால் என்ன? மூல வதனம் என்பது என்ன...... ஒன்றுமே அறியாமல் உள்ளார்கள். அவர்களோ ஆத்மாவே பரமாத்மா என்று கூறி எல்லா விளையாட்டையுமே முடித்து விடுகிறார்கள். இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது என்று பாபா கூறுகிறார். இச்சமயத்தில் என்னவெல்லாம் நடக்கிறதோ எந்த விநாடி கழிந்து விட்டதோ அது நாடகம். மீண்டும் (ரிபீட் ஆகும்) திரும்ப நடைபெறும். தந்தை வந்து கற்பிக்கிறார். இந்த திரும்ப நடைபெறுதல் பற்றிய இரகசியம் கூட தந்தை புரிய வைத்துள்ளார். அப்படியின்றி நாடகத்தில் என்ன எனது பாக்கியத்தில் இருக்குமோ அது கிடைக்கும் என்பதல்ல. நாடகப்படி செயல்கள் நடக்கின்றன. எனவே நாம் முயற்சி (புருஷார்த்தம்) என்ன செய்வது? இப்படி நினைக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல. முயற்சியோ செய்ய வேண்டும் அல்லவா? தந்தை வந்திருப்பதே புருஷார்த்தம் செய்விக்க ! குழந்தைகளாகிய நீங்கள் முழுமையாக புருஷார்த்தம் செய்ய வேண்டும். சாட்சியாகி (பார்வையாளர்) பார்க்கவும் வேண்டும். யார் தீவிர முயற்சி செய்கிறார்கள்? யார் நல்ல பதவி அடைய முடியும்? தந்தை மூலமாக யார் முழுமையாக ஆஸ்தி பெறுகிறார்கள். சாட்சியாகி புருஷார்த்தம் செய்ய வேண்டும் மற்றும் செய்விக்க வேண்டும். மேலும் இவர்கள் எவ்வளவு சேவை செய்கிறார்கள் என்பதை சாட்சியாகிப் பார்க்க வேண்டும். எத்தனை பேரை தனக்குச் சமானமாக ஆக்குகிறார்கள். தந்தையின் அறிமுகம் கொடுக்கிறார்கள். மற்றவர்களுடைய புருஷார்த்தத்தைப் பார்த்து சுயம் தாங்களும் தீவிர புருஷார்த்தம் செய்ய வேண்டும். நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. தேகம் மற்றும் தேக சம்பந்தங்களை மறந்து முழுமையாக ஏழை ஆக வேண்டும். எனது என்று எதுவும் கிடையாது. ஆத்ம உணர்வில் இருப்பதற்கான உழைப்பு செய்ய வேண்டும். யாருடைய பெயர் ரூபத்திலும் சிக்கிக் கொள்ளக் கூடாது.



    2. நாடகத்தில் இருந்தது என்றால் புருஷார்த்தம் செய்து கொண்டு விடுவோம் - இது போல யோசித்து முயற்சி செய்யாதவர்களாக ஆகக் கூடாது. பார்வையாளராக இருந்து மற்றவர்களுடைய முயற்சியைப் பார்த்தபடியே தீவிர முயற்சியாளர் ஆக வேண்டும்.



    வரதானம்:

    விநாசத்திற்கு முன்னதாக எவரெடியாக இருக்கக் கூடிய சமானமானவர் மற்றும் (சம்பன்னம்) முழுமையானவர் ஆவீர்களாக.



    விநாசத்திற்கு முன்னதாக எவரெடி ஆவது தான் பாதுகாப்பிற்கான சாதனமாகும். நேரம் கிடைக்கிறது என்றால், சங்கமயுகத்தின் ஆனந்தத்தைக் கொண்டாடுங்கள். ஆனால் எவரெடியாக இருங்கள். ஏனெனில், கடைசி விநாசத்தின் தேதி ஒரு பொழுதும் முன்கூட்டியே தெரிய வராது. திடீரென்று ஆகப் போகிறது. எவரெடியாக இருக்கவில்லை என்றால் ஏமாற்றம் ஏற்பட்டுவிடும். எனவே சதா எவரெடியாக இருங்கள். நான் மற்றும் தந்தை எப்பொழுதும் கூடவே இருக்கிறோம் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். எப்படி தந்தை சம்பன்னமாக இருக்கிறாரோ அதே போல கூட இருப்பவரும் சமானமாக மற்றும் சம்பன்னமாக ஆகி விடுவார்கள். சமானமாக ஆகுபவர்களே கூட செல்வார்கள்.



    சுலோகன்:

    யாருடைய சுபாவம் நிர்மலமானதாக (தூய்மையானதாக) இருக்கிறதோ அவர்களுடைய ஒவ்வொரு அடியிலும் வெற்றி அடங்கி உள்ளது.


    ***OM SHANTI***