BK Murli 9 July 2017 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 9 July 2017 Tamil

    09.07.2017    காலை முரளி            ஓம் சாந்தி         ''அவ்யக்த பாப்தாதா''
    ரிவைஸ்           18.04.1982           மதுபன்

    '' உயர்ந்ததிலும் உயர்ந்த பிராமண குலத்திற்கு மரியாதை வையுங்கள் ''




    இன்று பாப்தாதா அனைத்து அன்பான மற்றும் சந்திக்க வேண்டும் என்ற பாவனை உள்ள சிரேஷ்ட ஆத்மாக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகளின் சந்திக்க வேண்டும் என்ற பாவனைக்கான பிரத்யக்ஷ பலனையும் பாப்தாதாவிற்குக் கூட இந்த நேரம் தான் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. பக்தியின் பாவனைக்கான பலன் நேரடியாக எதிரில் சந்திப்பது கிடைக்காது. ஆனால் ஒரு தடவை அறிமுகம் அதாவது ஞானத்தின் ஆதாரத்தினால் தந்தை மற்றும் குழந்தைகளின் உறவு இணைந்தது என்றால் அந்த மாதிரி ஞான சொரூப குழந்தைகளுக்கு அதிகாரத்தின் ஆதாரத்தினால் சுபபாவனை, ஞான சொரூப பாவனை, சம்மந்தத்தின் ஆதாரத்தில் சந்திக்க வேண்டும் என்ற பாவனையின் பலன் நேரெதிரில் தந்தைக்குக் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. அப்படி இன்று அந்த மாதிரி ஞானம் நிறைந்த சந்திக்க வேண்டும் என்ற பாவனை சொரூபமான ஆத்மாக்களோடு சந்திப்பதற்காக பாப்தாதா குழந்தைகளின் நடுவே வந்திருக்கிறார். அனேக பிராமண ஆத்மாக்கள் சக்தி சொரூபம் ஆகி, மகாவீர் ஆகி எப்பொழுதும் வெற்றியடையும் ஆத்மா ஆவதிலும், அந்த அளவு தைரியம் வைப்பதிலும் தன்னை பலஹீனமானவர் என்று தெரிந்திருந்தும், ஒரு விசேஷத்தின் காரணமாக விசேஷ ஆத்மாக்களின் பட்டியலில் வந்து விட்டார்கள். அது என்ன விசேஷம்? தந்தை மிகவும் பிடித்திருக்கிறார், சிரேஷ்ட வாழ்க்கை மிகவும் பிடித்திருக்கிறது. பிராமண பரிவாரத்தின் சங்கடன் (குழு), சுயநலமற்ற அன்பு மனதைக் கவர்ந்திழுக்கிறது. அப்படி பாபா (தந்தை) கிடைத்தார், ஈஸ்வரிய குடும்பம் கிடைத்தது, தூய்மையான புகலிடம் கிடைத்தது, வாழ்க்கையை சிரேஷ்டமாக ஆக்குவதற்காக சகஜமான ஆதாரம் கிடைத்து விட்டது. இதே ஆதாரத்தில் சந்திக்க வேண்டும் என்ற பாவனையோடு அன்பின் ஆதாரத்தில் சென்று கொண்டே இருக்கிறார்கள்.ஆனால் இருந்தும் சம்மந்தத்தை இணைத்ததின் காரணமாக சம்மந்தத்தின் ஆதாரத்தில் சொர்க்கத்தின் அதிகாரத்தை ஆஸ்தியில் அடைந்தே விடுகிறார்கள், ஏனென்றால் பிராமணனராக இருப்பவர் தான் தேவதை ஆகிறார். இந்த விதிக்கு ஏற்றபடி தேவதை பதவியின் பிராப்தியின் அதிகாரத்தை அடைந்தே விடுகிறார்கள். சத்யுகத்தை தேவதைகளின் யுகம் என்று தான் கூறப்படுகிறது. இராஜாவாக இருந்தாலும், அல்லது பிரஜையாக இருந்தாலும் தேவதை தர்மம் தான் இருக்கிறது. ஏனென்றால் எப்பொழுது உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை தனது குழந்தையாக ஆக்கினார் என்றால், உயர்ந்த தந்தையின் ஒவ்வொரு குழந்தைக்கும் சொர்க்கத்தின் ஆஸ்தியின் அதிகாரம் இருக்கிறது, தேவதை ஆவதற்கான அதிகாரம் பிறப்புரிமையின் அதிகாரத்தில் கிடைத்தேவிடுகிறது. பிரம்மா குமார் மற்றும் பிரம்மா குமாரி ஆவது என்றால், சொர்க்கத்தின் ஆஸ்தியின் அதிகாரத்தில் அழியாத முத்திரை இடப்பட்டது. முழு உலகத்திலிருந்து அந்த மாதிரி அதிகாரத்தை அடைபவர்கள் அனைத்து ஆத்மாக்களிருந்தும் வெகு சில ஆத்மாக்கள் தான் உருவாகிறார்கள். எனவே பிரம்மா குமார், பிரம்மா குமாரி ஆவது சாதாரண விஷயம் என்று நினைக்காதீர்கள். பிரம்மா குமார், பிரம்மா குமாரி ஆவது விசேஷமே. மேலும் இதே விசேஷத்தின் காரணமாக விசேஷ ஆத்மாக்களின் பட்டியலில் வந்து விடுகிறீர்கள். எனவே பிரம்மாகுமார், பிரம்மாகுமாரி ஆவது என்றால், பிராமண உலகத்தின், பிராமண குடும்பத்தினராக ஆவது. பிரம்மாகுமார், குமாரி ஆன பிறகு ஒருவேளை யாராவது சாதாரணமாக மற்றும் பழைய மாதிரியே நடக்கிறார் என்றால், அவர் தனியாக தனக்கு மட்டும் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை, ஏனென்றால் நீங்கள் தனியான பிரம்மாகுமார், குமாரி இல்லை, பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள். தனக்கு நஷ்டத்தையோ ஏற்படுத்திக் கொள்கிறார்கள், ஆனால் குலத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதின் சுமையும் அந்த ஆத்மாக்களின் மீது ஏறுகிறது. பிராமணர்களின் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும், இதுவும் ஒவ்வொரு பிராமணனின் கடமை ஆகும். எப்படி வெளியுலக குல மரியாதையின் மேல் எவ்வளவு கவனம் வைக்கிறார்கள். வெளியுலக குல மரியாதையில் கூட பதமாபதம்பதி ஆவதிலிருந்தும் சிலர் வஞ்சிக்கப்பட்டு விடுகிறார்கள். நீங்களே அனுபவம் செய்கிறீர்கள், மேலும் கூறவும் செய்கிறீர்கள். விரும்புவதோ அதிகமாக செய்ய வேண்டும் என்றோ நினைக்கிறோம். ஆனால் சமுதாயம் குடும்ப கௌரவத்தையும் கடைபிடித்து நடக்க வேண்டியது இருக்கிறது என்று கூறுகிறீர்கள் இல்லையா? அப்படி எந்த உலகம் அனேக ஜென்மங்களின் பிராப்தியிலிருந்து வஞ்சிக்கக்கூடியதோ, தற்சமயத்து வைரத்திற்கு சமமான ஜென்மத்தை சோளிக்குச் சமமாக வீணானதாக ஆக்கக்கூடியதோ இதையோ நீங்கள் மிகவும் நன்றாக தெரிந்தும் இருக்கிறீர்கள். இருந்தும் வெளியுலக குடும்ப, சமுதாய மரியாதைப்படி நடந்து கொள்வதில் மிக நல்ல முறையில் கவனமும் கொடுக்கிறீர்கள், நேரமும் கொடுக்கிறீர்கள், சக்தியையும் ஈடுபடுத்து கிறீர்கள். அப்படியானால் இந்த பிராமண குல மரியாதைக்கு எந்த விசேஷமும் இல்லையா? அந்த உலக மரியாதைக்குப் பின்னால் தன்னுடைய தர்மம் அதாவது தாரணைகள் மேலும் நினைவு செய்ய வேண்டும் என்ற சிரேஷ்ட காரியம் இரண்டையுமே தர்மத்தையும் கர்மத்தையும் விட்டு விடுகிறீர்கள். சில நேரம் உள்உணர்வின் பத்தியத்தைக் கடைபிடிப்பதில் அதாவது தர்மத்தை விட்டு விடுகிறீர்கள், சில நேரம் சுத்தமான பார்வையின் தர்மத்தை விட்டு விடுகிறீர்கள். சில நேரம் சுத்த அன்னத்தின் தர்மத்தை விட்டு விடுகிறீர்கள். பிறகு தன்னைத் தானே உயர்ந்தவர் என்று நிரூபிப்பதற்காக பல விஷயங்களை கூறுகிறீர்கள் மற்றும் பேசுகிறீர்கள். என்ன கூறுகிறீர்கள்? செய்யத் தான் வேண்டியதிருக்கிறது என்று கூறுகிறீர்கள். சிறிதளவு பலஹீனம் நிரந்தரமாக தர்மம் மற்றும் கர்மத்தை உங்களிடமிருந்து விடுவித்து விடுகிறது. யார் தர்மம் மற்றும் கர்மத்தை விட்டு விடுகிறார்களோ அவருக்கு உலகின் குலத்தில் கூட என்ன புரிய வைக்கப்படுகிறது? தெரிந்திருக்கிறீர்கள் தான் இல்லையா? இது எந்த சாதாரண குலத்தின் தர்மம் மற்றும் கர்மம் அல்ல. பிராமண குலம் உயர்ந்ததிலும் உயர்ந்த உச்சம் குடுமிக்கு சமமான குலம். எனவே எந்த உலகத்தின் மற்றும் எந்த குலத்தின் மரியாதை வைக்க வேண்டும். மேலும் பலர், எனக்கு விருப்பம் இல்லை, ஆனால் மற்றவர்களைக் குஷிப் படுத்துவதற்காக செய்தேன் என்று பல நல்ல நல்ல விஷயங்களைக் கூறுகிறார்கள். அஞ்ஞானி ஆத்மாக்கள் எப்பொழுதாவது நிரந்தரமாக குஷியாக இருக்க முடியுமா என்ன? அந்த மாதிரி இந்த நேரம் குஷியாக, அடுத்த நேரம் கோபமாக இருக்கும் ஆத்மாக்களின் காரணமாக தன்னுடைய சிரேஷ்ட தர்மம் மற்றும் கர்மத்தை விட்டு விடுகிறீர்கள். யார் தர்மத்தில் இல்லையோ அவர் பிராமண உலகத்தில் இல்லை. அற்பமான ஆத்மாக்களைக் குஷிப்படுத்தி விட்டீர்கள். ஆனால் அனைத்தையும் தரும் தந்தையின் கட்டளையைப் புறக்கணித்தீர்கள். அப்படியானால் என்ன அடைந்தீர்கள், என்ன இழந்தீர்கள்? எந்த உலகம் விரைவிலேயே அழியப்போகிறது, நாலாபுறங்களிலும் நெருப்பு பிடித்து எரியும் மரங்கள் மிக வேகவேகமாக ஒன்றாகச் சேர்க்கப்படுகின்றன. மரங்கள் என்றால், ஏற்பாடுகள். இந்த மரங்களை தனித்தனியாக்கி நெருப்பு பிடித்து எரிய வைக்கும் ஏற்பாடுகளை முடிக்க வேண்டும் என்று எவ்வளவு நினைக்கிறார்களோ அந்த அளவே மரங்களின் குவியல் மிக உயரமாக ஆகிக் கொண்டே இருக்கிறது. எப்படி ஹோக்காவை எரிக்கிறார்கள் என்றால், பெரியவர்களின் கூடவே சிறு சிறு குழந்தைகளும் விறகு குச்சிகளை ஒன்றாக்கி கொண்டு வருவார்கள். கிடைக்கவில்லை என்றால் வீட்டிலிருந்தே மரங்களை எடுத்து வருவார்கள். ஆர்வம் இருக்கும். இன்றைய நாட்களில் கூட பாருங்கள் சிறு சிறு நகரங்களில் கூட மிக ஆர்வத்துடன் சகயோகிகள் உருவாகிறார்கள். அப்படி அந்த மாதிரி சமூக மரியாதைக்காக தன்னுடைய அழியாத பிராமணனாக இருப்பவர்கள் நீங்கள், தேவதை ஆகும் அந்த குலத்தின் மரியாதையை மறந்து விடுகிறீர்கள். அதிசயம் செய்கிறீர்கள். இதைக் கடைபிடிக்க வேண்டுமா அல்லது இழக்க வேண்டுமா? எனவே பிராமண குலத்தின் மரியாதையையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சில குழந்தைகள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். தன்னுடைய பழைய குல மரியாதையையும் வைக்க விரும்புகிறார்கள். மேலும் பிராமண குலத்திலும் சிரேஷ்டமாக ஆக விரும்புகிறார்கள். உலகியல் குல மரியாதையை நன்றாகப் கடைப்பிடியுங்கள். அதற்கு தடை இல்லை. ஆனால் தர்மத்தையும் கர்மத்தையும் விட்டு விட்டு குல மரியாதை வைப்பது தவறு என்று பாப்தாதா கூறுகிறார். வேறு புத்திசாலித்தனமாக எண்ணிக் கொண்டு என்ன காரியங்கள் செய்கிறார்கள்? யாருக்கு என்ன தெரியும் என்று நினைக்கிறார்கள். பாபாவும் நானும் அனைவரின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்தவன் இல்லை என்று கூறுகிறார். பொறுப்பில் இருக்கும் ஆத்மாக்களுக்கும் என்ன தெரியப் போகிறது. அந்த மாதிரி நடக்கிறது. அந்த மாதிரி நடந்து கொண்டு மதுபன்னிலும் வந்து சேர்ந்து விடுகிறார்கள். சேவை நிலையங்களிலும் தன்னைத் தானே மறைத்து வைத்து சேவையில் பெயர், புகழ் பெற்றவர்களாக ஆகியும் விடுகிறார்கள். கொஞ்சம் சகயோகம் கொடுத்து சகயோகத்தின் ஆதாரத்தில் மிக நல்ல சேவாதாரி என்ற பட்டத்தையும் விலைக்கு வாங்கி விடுகிறார்கள். ஆனால் பல ஜென்மங்களுக்கான சிரேஷ்ட பட்டமான சர்வ குண சம்பன்னம், 16 கலைகள் சம்பூர்ணம், சம்பூர்ண நிர்விகாரி . . . என்ற இந்த அழியாத பட்டத்தை இழந்து விடுகிறார்கள். ஆக, இது சகயோகம் கொடுக்கவில்லை ஆனால் 'உள்ளே ஒன்று வெளியில் இன்னொன்று' என்ற இந்த ஏமாற்றுதல் மூலமாக சுமையை தூக்கிக் கொள்கிறார்கள். சகயோகி ஆத்மாவிற்குப் பதிலாக சுமை தூக்குபவர்கள் ஆகிவிட்டார்கள். எவ்வளவு தான் புத்திசாலித்தனத்தோடு தன்னை நடத்திக் கொண்டாலும். ஆனால் இந்த புத்திசாலித்தனத்தோடு நடத்துவிப்பது, நடத்துவிப்பது அல்ல ஆனால் கதறுவது! இந்த சேவை நிலையங்கள் ஏதோ பொறுப்பில் இருக்கும் ஆத்மாக்களின் ஸ்தானம் மட்டுமே என்று நினைக்கா தீர்கள். ஆத்மாக்களை எப்படியோ சாதுர்யமாக கையாண்டுவிடுகிறீர்கள். ஆனால் பரமாத்மாவிற்கு எதிரே ஒன்றிற்கு லட்சம் மடங்கான கணக்கு ஒவ்வொரு ஆத்மாவின் கர்ம கணக்கில் சேமிப்பாகியே விடுகிறது. அந்தக் கணக்கை சாதுர்யத்தினால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே அந்த மாதிரி புத்திசாலி குழந்தைகளைப் பார்த்து பாப்தாதாவிற்கும் இரக்கம் வருகிறது. இருந்தாலும் ஒரு தடவை பாபா என்று கூறினார் என்றால், தந்தையும் குழந்தைகளின் நன்மைக்காக எப்பொழுதும் அறிவுரை கொடுத்துக் கொண்டே இருப்பார். எனவே அந்த மாதிரி புத்திசாலியாக ஆகாதீர்கள். எப்பொழுதும் பிராமண குல மரியாதையை வையுங்கள்.



    பாப்தாதாவோ கர்மம் மற்றும் பலன் இரண்டிலிருந்தும் விடுபட்டவர். இந்த நேரம் பிரம்மா பாபாவும் இதே நிலையில் இருக்கிறார். பிறகோ கணக்கு வழக்கில் வந்து தான் ஆக வேண்டும். ஆனால் இந்த நேரம் தந்தைக்குச் சமமாக இருக்கிறார். எனவே யார் செய்வாரோ, எப்படி செய்வாரோ அதை தனக்காகத் தான் செய்கிறார். தந்தையோ வள்ளல். எப்பொழுது தானே செய்கிறார் மற்றும் தானே பலனை அடைகிறார் என்றால், என்ன செய்ய வேண்டும்? பாப்தாதா சூட்சும வதனத்தில் குழந்தைகளின் விதவிதமான விளையாட்டுகளைப் பார்த்து புன்முறுவலிட்டுக் கொண்டே இருக்கிறார். நல்லது.



    அந்த மாதிரி பிராமண குல தீபங்களுக்கு, எப்பொழுதும் உண்மையான ஆர்வத்துடன் அன்பான மற்றும் சகயோகி ஆகுபவர்களுக்கு, நிரந்தரமாக சிரேஷ்ட பலனை அடையக்கூடிய, எப்பொழுதும் உண்மையான தந்தையின் உண்மையான அன்பில் அற்ப கால பிராப்திகளை தியாகம் செய்யக்கூடிய அன்பான ஆத்மாக்களுக்கு, சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.



    பார்ட்டிகளுடன் சந்திப்பு

    1.கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்ட நிலையின் அனுபவம் செய்வதற்காக கர்மயோகி ஆகுங்கள் –



    எப்பொழுதும் ஒவ்வொரு காரியத்தை செய்து கொண்டே, கர்மத்தின் பந்தனங்களிலிருந்து விடுபட்ட மேலும் தந்தையின் அன்பான - அந்த மாதிரி தன்னை விலகிய மற்றும் அன்பான ஆத்மாவாக அனுபவம் செய்கிறீர்களா? கர்மயோகி ஆகி காரியம் செய்பவர் ஒருபொழுதும் செய்யும் காரியத்தின் பந்தனத்தில் வருவதில்லை. அவர் எப்பொழுதும் பந்தனத்திலிருந்து விடுபட்ட யோக சொரூபமானவராக இருப்பார். கர்மயோகி ஒருபொழுதும் நல்லது மற்றும் தீய காரியம் செய்பவர்களின் பிரபாவத்தில் வருவதில்லை. யாராவது நல்ல காரியம் செய்பவரின் தொடர்பில் வந்து அதன் குஷியில் வந்து விடுகிறீர்கள். மேலும் யாராவது நல்ல காரியம் செய்யாதவர் சம்மந்தத்தில் வந்தால். கோபத்தில் வந்து விடுகிறீர்கள் அல்லது அவர் மீது வெறுப்பு அல்லது பொறாமை வந்து விடுகிறது என்று அந்த மாதிரி இருக்கக்கூடாது. இதுவும் கர்ம பந்தனம். கர்மயோகியின் எதிரில் யார் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவர் எப்பொழுதும் விலகியிருப்பவராக மற்றும் அன்பானவராக இருப்பார். ஞானத்தின் மூலமாக இவருக்கு இந்த நேரம் இந்த பங்கு நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வார். வெறுப்படைபவர்கள் மீது தானும் வெறுப்பு கொள்வது என்பது கர்மத்தின் பந்தனம். அந்த மாதிரி கர்மத்தின் பந்தனத்தில் வருபவர்கள் ஒரே சீராக இருக்க முடியாது. சில நேரம் ஒரு மனநிலையிலும் வேறு நேரம் வேறு மனநிலையிலும் இருப்பார்கள். எனவே நல்லவரை நல்லவர் என்று புரிந்து சாட்சியாகிப் பாருங்கள், மேலும் தீயவரை இரக்க மனமுடையவராகி இரக்கப் பார்வையுடன், பரிவர்த்தனை செய்வதின் சுபபாவனையோடு சாட்சியாகிப் பாருங்கள். இதைத் தான் கர்ம பந்தனத்திலிருந்து விலகிய நிலை என்று கூறுவது. ஏனென்றால் ஞானத்தின் அர்த்தமே அறிவு / விவேகம். எந்த விஷயத்தின் அறிவு? கர்மத்தின் பந்தனங்களிலிருந்து விடுபடுவதற்கான அறிவைத் தான் ஞானம் என்று கூறுவது. ஞானி ஒருபொழுதும் பந்தனங்களில் வசமாக மாட்டார். எப்பொழுதும் விலகியிருப்பவராக இருப்பார். சில நேரம் விலகியிருப்பவராக ஆகிறீர்கள், மேலும் சில நேரம் கொஞ்சம் ஆட்டம் கண்டீர்கள் என்று அப்படியும் இருக்கலாகாது. எப்பொழுதும் பாவங்களை வென்றவராக ஆக வேண்டும் என்ற லட்சியத்தை வையுங்கள். கர்ம பந்தனத்தை வென்றவர் ஆக வேண்டும். இந்த நீண்ட காலத்து பயிற்சி நீண்ட காலத்தின் பலன் பெறுவதற்கான காரணம் ஆகி விடும். மேலும் இப்பொழுது கூட மிக விசித்திரமான அனுபவம் செய்வீர்கள். எனவே நிரந்தரமான விலகியிருப்பவராகவும், நிரந்தரமான அன்பானவராகவும் ஆகுங்கள். இது தான் தந்தைக்குச் சமமான கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்ட நிலை.



    பழைய மூத்த சகோதரிகளைப் பார்த்து பாப்தாதா கூறினார் –



    இந்த குரூப்பை எந்த குரூப் என்று கூறலாம்? முதலில் தொடக்கத்திலோ அவரவர்களுக்கென்று பெயர் இருந்தது - இப்பொழுது எந்த பெயர் கொடுக்கலாம்? எப்பொழுதும் தந்தையின் தொடர்பில் இருக்கக்கூடிய, எப்பொழுதும் தந்தையின் வலதுகரம். நீங்கள் அந்த மாதிரியான குரூப் தான் இல்லையா? பாப்தாதாவும் புஜங்கள் இன்றி இவ்வளவு பெரிய ஸ்தாபனையின் காரியத்தை எப்படிச் செய்ய முடியும். எனவே நீங்கள் ஸ்தாபனை காரியத்திற்கான விசேஷ புஜங்கள். வலதுகரம் தான் விசேஷ புஜமாக இருக்கும். ஆதி இரத்தினங்களை எப்பொழுதும் பாப்தாதா ரியல் கோல்ட் (உண்மையான தங்கம்) என்று கூறுகிறார். அனைத்து ஆதி இரத்தினங்களும் உலக மேடையில் விசேஷ பங்கை செய்து கொண்டிருக்கிறீர்கள். பாப்தாதாவும் ஒவ்வொரு விசேஷ ஆத்மாவின் விசேஷ பங்கைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். அனைவரின் கதாபாத்திரமோ விதவிதமாக இருக்கும் இல்லையா? ஒரே மாதிரியாகவோ இருக்க முடியாது. ஆனால் ஆதி இரத்தினங்களுக்கு விசேஷமாக நாடகத்தின் அனுசாரம் விசேஷ பங்கு இருக்கிறது என்பதோ உண்மை. ஒவ்வொரு இரத்தினத்திமாகிய நீங்கள் குறிப்பாக, விசேஷத்தின் ஆதாரத்தில் தான் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார்கள். மேலும் முன்னேறிச் சென்று கொண்டே இருப்பீர்கள். அது என்ன விசேஷம்? அவைகளை நீங்களும் தெரிந்திருக்கிறீர்கள். மேலும் மற்றவர்களும் தெரிந்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் விசேஷம் நிரம்பிய விசேஷ ஆத்மாக்கள்!



    அந்த மாதிரி ஆதி இரத்தினங்களுக்கு பாப்தாதா பல லட்சம் மடங்கு பாராட்டுக்கள் வழங்குகிறார். ஏனென்றால், தொடக்கத்திலிருந்து சகித்துக் கொண்டு ஸ்தாபனையின் காரியத்தை சாகார சொரூபத்தில் விருத்தி அடையச் செய்வதற்காக பொறுப்பாளர் ஆகியிருக்கிறீர்கள். அப்படி யார் ஸ்தாபனையின் காரியத்தில் சகித்துக் கொண்டார்களோ அதை மற்றவர்கள் செய்யவில்லை. உங்களுடைய சகித்துக் கொள்ளும் சக்தியின் விதை இந்த பழத்தை உருவாக்கியது. அப்படி ஒவ்வொருவரும் என்னென்ன சகித்துக் கொண்டார்கள், எப்படி சக்தி ரூபத்தை காண்பித்தார்கள் என்று பாப்தாதாவும் முதல், இடை, கடையைப் பார்க்கிறார். மேலும் விளையாடுவது போலேயே சகித்துக் கொண்டார்கள். சகித்துக் கொள்ளும் ரூபத்தில் சகித்துக் கொள்ளவில்லை. விளையாடிக் கொண்டே சகித்துக் கொள்ளும் பங்கை செய்வதற்கு பொறுப்பாளர் ஆகி, தன்னுடைய விசேஷமான கதாநாயக பாத்திரத்தை பதிய வைத்து விட்டார்கள். எனவே ஆதி இரத்தினங்களின் இந்த பொறுப்பாளர் ஆகும் பங்கு எப்பொழுதும் பாப்தாதாவின் எதிரில் இருக்கிறது. மேலும் இதன் பலனாக நீங்கள் அனைத்து ஆத்மாக்களும் எப்பொழுதும் அமரராக இருங்கள். தன்னுடைய பங்கை புரிந்து கொண்டீர்களா? எவ்வளவு தான் யாராவது முன்னுக்குச் சென்று விட்டாலும் - ஆனால் இருந்தும்.... இருந்தும் என்று கூறுவோம். பாப்தாதாவிற்கு பழைய பொருளின் மதிப்பு தெரியும். புரிந்ததா! நல்லது.



    கேள்வி:

    சங்கமயுக பிராமண குழந்தைகள் எப்பொழுதும் எந்தக் காரியத்தில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும்?



    பதில்:

    சக்திசாலி ஆக வேண்டும். மேலும் மற்றவர்களையும் சக்திசாலி ஆக்க வேண்டும். இந்தக் காரியத்தில் எப்பொழுதும் முழுமையாக ஈடுபட்டிருங்கள். ஏனென்றால் வீணானதையோ அரைக் கல்பம் செய்தீர்கள். இப்பொழுது நடக்கும் நேரமோ சக்திசாலி ஆவதற்கும் மற்றும் ஆக்குவதற்குமானது. எனவே வீணான எண்ணம், வீணான வார்த்தை, வீணான காரியம் அனைத்திற்கும் முடிவு கட்டி, முற்றுப்புள்ளி இட வேண்டும். பழைய கணக்கு முடிந்தது. எப்பொழுதும் சக்திசாலியாக இருப்பது என்பது தான் சேமிப்பு செய்வதற்கான சாதனம். ஏனென்றால் வீணானவை மூலம் நேரம், சக்திகள் மற்றும் ஞானத்தின் நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது.



    வரதானம் :

    எந்தவொரு காரியம் செய்து கொண்டே எப்பொழுதும் இதய சிம்மாசனதாரியாக இருக்கும் கவலையற்ற மகாராஜா ஆகுக.



    யார் எப்பொழுதும் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் இருக்கிறார்களோ அவர்கள் கவலையற்ற மகாராஜா ஆகிவிடுகிறார்கள்.ஏனென்றால் இந்த ஆசனத்தின் விசேஷமே யார்இந்த ஆசனத்தில் அமர்ந்திருப்பவராக இருப்பாரோ அவர் அனைத்து விஷயங்களிலும் கவலையற்றவராக இருப்பார். எப்படி இன்றைய நாட்களிலும் ஏதாவது ஸ்தானத்திற்கு விசேஷமாக ஏதாவது புதுமை, சிறப்புத் தன்மை, விசேஷம் கிடைத்திருக்கிறது என்றால் இதய சிம்மாசனத்தின் விசேஷமே கவலை வர முடியாது. இந்த இதயசிம்மாசனத்திற்கு வரதானம் கிடைத்திருக்கிறது. எனவே எந்தவொரு காரியம் செய்து கொண்டும் எப்பொழுதும் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவராக இருங்கள்.



    சுலோகன்:

    வரிசை எண்ணில் முன்னுக்கு லர வேண்டும் என்றால், அன்பு மற்றும் சகயோகத்தின் கூடவே சக்தி ரூபத்தையும் தாரணை செய்யுங்கள்.


    ***OM SHANTI***