BK Murli 18 May 2018 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:







    BK Murli 18 May 2018 Tamil


    18.05.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! ஒருபோதும் சாகார சரீரத்தை நினைவு செய்யக் கூடாது. அவர்களை கண்களால் பார்த்தாலும், மேலான ஆசிரியர் (சூப்ரீம் டீச்சர்) சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும்.



     கேள்வி:-

    குழந்தைகளாகிய நீங்கள் எந்த ஒரு விதியை அறிந்த காரணத்தால் மாலை, பூக்களை சுவீகாரம் செய்து கொள்ள முடியாது?



    பதில்:-

    யாருடைய ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் தூய்மையாக இருக்கின்றதோ, அவர்கள் தான் மாலை, மற்றும் பூக்களைப் பெறுவதற்குத் தகுதியுடையோர் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த விதி முறைப்படி நீங்கள் பூக்கள் மற்றும் மாலையை சுவீகாரம் செய்ய முடியாது. பாபா கூறுகின்றார்: நான் கூட பூக்கள் மற்றும் மாலைகளை சுவீகாரம் செய்து கொள்வதில்லை, ஏனென்றால் நான் பூஜைக்குரியவனாகவும், பூஜாரியாகவும் ஆவதில்லை. நானோ உங்களுடைய கீழ்படிந்த தந்தை மற்றும் ஆசிரியராக இருக்கின்றேன்.



    பாடல்:

    ஆகாய சிம்மாசனத்தை விட்டு விட்டு வாருங்கள்......



    ஓம் சாந்தி!

    இனிமையிலும், இனிமையான செல்லமான குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். இந்த பாடல் மூலமாக சர்வ வியாபி என்பது தவறாகி விடுகின்றது. பாரதம் மிகவும் துக்கமாக உள்ளதால் நினைவு செய்கின்றீர்கள். இந்த பாடல்கள் அனைத்தும் நாடகத்தின் படி உருவாக்கப்பட்டுள்ளது. உலகத்தினருக்குத் தெரியாது. பாபா வருவதே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கும், துக்கமானவர்களைத் துக்கத்திலிருந்து விடுதலை செய்வதற்கும் தான். அவர் துக்கத்தினை நீக்கி  சுகத்தினைத் தருகின்றார். அதே பாபா வந்துவிட்டார் என்பதைக் குழந்தைகளாகிய நாம் அறிந்து கொண்டோம். குழந்தைகளுக்கு அறிமுகம் கிடைத்துவிட்டது. சுயம் பகவான் வந்து கூறுகின்றார்: சாதாரண உடலில் பிரவேசமாகி உலகத்தின் ஆரம்பம், இடை மற்றும் இறுதியை பற்றிய இரகசியங்களைக் கூறுகின்றேன். உலகம் என்பது ஒன்று தான், அதுவே புதியதாகவும், பழையதாகவும் மாறுகின்றது. எவ்வாறு உடல் குழந்தைப் பருவத்தில் புதியதாக இருக்கின்றது, பிறகு பழையதாக ஆகிவிடுகின்றது. புதிய உடல், பழைய உடல் என்ற இரண்டு என்று கூறமாட்டோம். இருப்பது ஒன்று தான் புதியதிலிருந்து பழையதாக மட்டும் ஆகிறது. அது பழையதாக ஆகிவிடுகின்றது. அதேபோல் உலகமும் ஒன்று தான் புதியது; பிறகு பழையதாக ஆகிவிடுகின்றது. எப்போது புதியதாக இருந்தது, என்பதை வேறு யாரும் கூறமுடியாது. பாபா வந்து புரிய வைக்கின்றார். குழந்தைகளே! எப்போது புதிய உலகமாக இருந்ததோ அப்போது பாரதம் புதியதாக இருந்தது. சத்தியயுகம் என்று சொல்லப்படுகிறது. அதே பாரதம் தற்போது பழையதாக ஆகிவிட்டது. இதனைப் பழைய உலகம் என்று சொல்லப்படுகின்றது. புதிய உலகம் பின்னர் பழையதாக ஆகிவிடுகின்றது. பின்னர் நிச்சயமாக புதியதாக ஆகிவிடும். குழந்தைகள் புதிய உலகத்தின் சாட்சாத்காரம் பார்த்தார்கள். நல்லது. அந்த புதிய உலகத்தின் எஜமானர்கள் யாராக இருந்தார்கள்? இந்த இலட்சுமி-நாராயணர் இருந்தார்கள். ஆதி சனாதன தேவி, தேவதைகள் எஜமானர்களாக இருந்தார்கள். குழந்தைகளுக்கு பாபா புரிய வைக்கின்றார். இப்போது பாபா கூறுகின்றார். நிரந்தரமாக என்னை நினைவு செய்யுங்கள். பாபா பரந்தாமத்திலிருந்து பாடம் கற்றுக் கொடுக்க இராஜயோகம் சொல்லிக் கொடுக்க வந்திருக்கின்றார். அனைத்து மகிமையும் ஒருவருக்குத் தான். இவருக்கு (பிரம்மா) எந்த மகிமையும் கிடையாது. அனைவரும் இப்போது கீழான புத்தியுள்ளவர்களாக ஆகிவிட்டனர். சிறிதும் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். ஆதலால் நான் வந்திருக்கின்றேன். மேலும் இந்தப் பாடலும் பாடப்பட்டுள்ளது. சர்வ வியாபி என்ற ஞானம் தவறாகிவிடுகின்றது. ஒவ்வொருவருவரின் பாகமும் தனித்தனியானது. பாபா அடிக்கடி கூறுகின்றார்: தேக அபிமானத்தை நீக்கிவிட்டு, ஆத்மா அபிமானியாக ஆகுங்கள் மற்றும் சிவபாபாவை நினைவு செய்யுங்கள். அனைத்தும் சிவபாபா தான் செய்கின்றார் என்று புரிந்து கொள்ளுங்கள். பிரம்மா அல்ல. இவருடைய உருவம் கண்களில் தெரிந்தாலும் உங்களின் புத்தி சிவபாபாவிடம் தான் செல்ல வேண்டும். சிவபாபா இல்லை என்றால் இவருடைய ஆத்மா மற்றும் சரீரம் எதற்குமே பயனில்லை. சிவபாபா தான் பாடம் கற்றுத் தருகின்றார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு பிரம்மா டீச்சர் அல்ல. சூப்ரீம் டீச்சர் சிவபாபா. அவரைத்தான் நினைவு செய்ய வேண்டும். ஒருபோதும் இந்த தேகத்தினை நினைவு செய்யக்கூடாது. பாபாவிடம் தான் புத்தியோகம் வைக்க வேண்டும். சர்வவியாபி என்ற ஞானம் உண்மையல்ல. குழந்தைகள் நினைவு செய்கின்றார்கள்: மீண்டும் ஞானம், யோகம் கற்றுக் கொடுங்கள். பரமபிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் இராஜயோகம் கற்றுத் தரமுடியாது. குழந்தைகளுக்கு இந்த பாடலின் பொருளை சுயம் பாபாவே கூறுகின்றார். இந்த ஞானம் பின்பு மறைந்துவிடும். அங்கு ஞானம் தேவையில்லை. இராஜாங்கம் ஸ்தாபனை ஆகிய பின்னர் சத்கதி ஆகிவிடும். துர்கதியில் உள்ளவர்கள் சத்கதி அடைவதற்கு ஞானம் கொடுக்க வேண்டும். அனைத்து விஷயங்களும் பக்திமார்க்கத்தினுடையது. மனிதர்கள் செய்கின்ற தானம், புண்ணியம் அனைத்துமே பக்திமார்க்கத்தினுடையது. இதன் மூலமாக யாருமே என்னைஅடைய முடியாது. ஆத்மாவின் இறக்கைகள் துண்டிக்கப்பட்டுவிட்டது. கல்போல் ஆகிவிட்டது. கல்லை மீண்டும் தங்கமாக மாற்றுவதற்கு நான் வரவேண்டியுள்ளது.



    இப்போது பாபா கூறுகின்றார்: எவ்வளவு மனிதர்கள். கடுகு போன்று உலகம் முழுவதும் மனிதர்கள் நிரம்பியுள்ளார்கள். அனைத்துமே அழிந்து போய்விடவேண்டும். இத்தனை மனிதர்கள் சத்கதியில் இருக்க மாட்டார்கள். புதிய உலகத்தில் நிறைய பொருள்கள் இருக்கும். இங்கு மனிதர்கள் நிறைய இருப்பதால் உண்ணுவதற்கு உணவு கூட கிடைப்பதில்லை. பூமி கூட மிகவும் வரண்டுபோய்விட்டது. பின்னர் புதியதாக மாறிவிடும். அங்கு அனைத்தும் புதுமையானதாக இருக்கும். எவ்வளவு இனிமையான பெயர், சொர்க்கம், பூந்தோட்டம். தேவதைகளின் புதிய உலகம். பழையதை இடித்து விட்டு புதிய வீட்டில் அமருவதற்கு இதயம் விரும்புகின்றது. இப்போது புதிய உலகம் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். இந்த பழைய உலகத்திற்கு எந்த மதிப்பும் இல்லை. சிவபாபாவிற்கு சரீரமே கிடையாது. குழந்தைகள் மாலை அணிவிக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். இவருக்கு மாலை அணிவித்தால் புத்தியோகம் இவரிடம் தான் செல்லும். சிவபாபா கூறுகின்றார்: எனக்கு மாலை அணிய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் பூஜைக்குரியவர்கள் மற்றும் பூஜாரி ஆகின்றீர்கள். நீங்கள் தான் பூஜைக்குரியவர்கள் மற்றும் பூஜாரிகள். உங்களுடைய சித்திரங்களையே (உருவங்களையே) பூஜை செய்தீர்கள். நான் பூஜைக்குரியவன் ஆகுவதில்லை, பூக்கள் தேவையில்லை. நான் ஏன் அணிந்து கொள்ள வேண்டும்? ஆதலால் ஒருபோதும் மலர்களைப் பெற்றுக் கொள்வதில்லை. நீங்கள் பூஜைக்குரியவர் ஆகிய பின் எவ்வளவு மலர்கள் தேவையோ அணிந்து கொள்ளுங்கள். நானோ குழந்தைகளுக்கு மிகவும் கீழ்படிந்த தந்தை, ஆசிரியர், சேவகனாக இருக்கின்றேன். இராயல் மனிதர்கள் மிக மிக உயர்ந்தவர்கள், கீழே கையெழுத்து இடும்போது - மின்னேடாகர்ஜின்.... என்று எழுதுவார்கள். தன்னைத் தான் லார்டு என்று ஒருபோதும் எழுத மாட்டார்கள். இங்கோ எழுதுகின்றார்கள்.... ஸ்ரீ லெட்சுமி, ஸ்ரீ நாராயணன், இன்னார்ஸ்ரீ என்ற எழுத்தை எழுதி விடுகின்றனர். பாபா வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். குழந்தைகளே! இந்த உடலை நினைவு செய்யாதீர்கள். தன்னைத்தான் ஆத்மா என்று நிச்சயம் செய்யுங்கள். மேலும் பாபாவை நினைவு செய்யுங்கள். இந்த பழைய உலகில் ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே பதீத்தமாக உள்ளது. தங்கம் 9 கேரட் ஆக இருந்தால் ஆபரணமும் 9 கேரட் ஆகத்தான் இருக்கும். தங்கத்தில் தான் செம்பு சேர்க்கப்படுகின்றது. ஆத்மாவில் எதுவுமே ஒட்டாது என்று எண்ணாதீர்கள். இந்த ஞானம் உங்களிடம் உள்ளது. சத்திய யுகத்தில் 21 பிறவிக்கான பலனைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். அதனால் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்? ஆனால் குழந்தைகள் அடிக்கடி மறந்து விடுகின்றார்கள். சிவபாபா பிரம்மா மூலமாக நமக்கு அறிவுரை அளிக்கின்றார். பிரம்மாவின் ஆத்மா கூட சிவபாபாவை நினைவு செய்கின்றது. பிரம்மா, விஷ்ணு, சங்கர் சூட்சுமவதனவாசிகள். பாபா முதலில் சூட்சும உடலைப் படைக்கின்றார். இந்த பிரம்மா, விஷ்ணு, சங்கர் கூட தங்களின் பாகத்தை நடித்து முடித்துவிட்டு திரும்பிச் சென்று விடுவார்கள். நிர்வாண் தாம் மிக மிக உயர்ந்தது. ஒரே ஒரு பகவானைத்தான் பக்தர்கள் அனைவரும் நினைவு செய்கின்றார்கள். ஒரு பகவானை அனைத்து பக்தர்களும் நினைவு செய்கின்றனர். ஆனால் தமோபிரதான் ஆகிவிட்டார்கள். பாபாவை மறந்து கல், முள் அனைத்தையும் பூஜை செய்கின்றார்கள். நமக்குத் தெரியும் எதுவெல்லாம் நடைபெறுகின்றதோ அனைத்தும் நாடகத்தில் பதிவாகியுள்ளது. நாடகத்தில் ஒரு முறை பதிவாகி விட்டால் அதுவே நடக்கும். உதாரணமாக சூட்டிங் செய்யும்போது இடையே பறவை பறந்தால் அதேபோல் தான் மீண்டும் மீண்டும் தெரியும். பட்டம் பறக்கும்போது சூட்டிங் செய்தால் அதுவே திரும்பத் தெரியும். இந்த நாடகம் கூட ஒவ்வொரு வினாடியும் திரும்ப நடைபெறுகின்றது. சூட்டிங் ஆகிக்கொண்டேயிருக்கின்றது. இந்த நாடகம் ஏற்கனவே உருவாக்கப்பட்டது. நீங்கள் அனைவருமே நடிகர்கள். முழு நாடகத்தையும் சாட்சியாக இருந்து பாருங்கள். ஒவ்வொரு வினாடியும் நாடகத்தின் படித்தான் நடக்கின்றது. இலைகள் அசைவது கூட டிராமா தான். பகவான் வந்து ஒவ்வொரு இலையையும் அசைக்கின்றார் என்பது கிடையாது. இவை நாடகத்தில் பதிவாகியுள்ளது. இதனை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். பாபா தான் வந்து இராஜயோகத்தினைக் கற்றுத் தருகின்றார். மேலும் டிராமாவைப் பற்றிய ஞானம் தருகின்றார். எவ்வளவு அழகாக சித்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.



    கலியுகத்தின் இறுதி, சத்தியயுகத்தின் ஆரம்பம், சங்கமயுகத்தில் முள் காட்டப்பட்டுள்ளது. இப்போது பழைய உலகத்தில் அநேக தர்மங்கள் உள்ளன. பின்னர் புதிய உலகத்தில் இருக்காது. நமக்கு பாபா பாடம் கற்றுத் தருகின்றார் என்று சதா நினைக்க வேண்டும். நாம் தெய்வீக மாணவர்கள். நான் உங்களை இராஜா விற்கெல்லாம் இராஜாவாக மாற்றுகின்றேன் என்று பகவான் கூறுகின்றார். இந்த இலட்சுமி நாராயணரை இராஜாக்கள் கூட பூஜை செய்கின்றார்கள். நான் தான் அவர்களை பூஜைக்குரியவராக மாற்றுகின்றேன். பூஜைக்குரியவர்களாக இருந்தவர்களே பூஜாரியாகி விட்டனர். நாம் பூஜைக்குரியவர்களாக இருந்தோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். நாம் மீண்டும் பூஜாரியாக ஆகிவிட்டோம். பாபா அவ்வாறு ஆகுவதில்லை. நீங்கள் பூக்களை சுவீகாரம் செய்ய முடியாது. யாருடைய ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் தூய்மையாக உள்ளதோ அவர்கள் தான் பூக்களை சுவீகாரம் செய்ய முடியும். அங்கு சொர்க்கத்தில் நறுமணம் நிறைந்த மலர்கள் தான் இருக்கும். மலர் என்றாலே நறுமணம் பெறுவதற்கு. மாலையை அணிந்து கொள்ள மலர்களை பயன்படுத்துகின்றார்கள். இப்போது பாபா கூறுகின்றார்: குழந்தைகளே! விஷ்ணுவின் கழுத்து மாலையாக ஆகின்றீர்கள். நீங்கள் வரிசைப்படியாக சிம்மாசனத்தில் அமர வேண்டும். யார் எந்தளவு கல்பத்திற்கு முன்பு முயற்சி செய்தார்களோ, அவர்கள் தான் செய்வார்கள். வரிசைப்பிரகாரமாக உள்ளார்கள். இன்னார் நன்றாக சேவை செய்கின்றார் என்று புத்தியும் கூறுகின்றது. எவ்வாறு கடையில் முதலாளி, பங்குதாரர், மேலாளர் இருப்பார்களோ. அம்மாதிரி தான் இங்கும் கூட.



    குழந்தைகளாகிய நீங்கள் தாய் தந்தையர் மீது வெற்றி கொள்ள வேண்டும். எவ்வாறு தாய் தந்தையை விட முன்னே செல்ல முடியும் என்று ஆச்சரியப்படுகின்றார்கள். பாபா முயற்சி செய்து குழந்தைகளை சிம்மாசனதாரியாக ஆக்குகின்றார். ஆதலால் கூறுகின்றார்: சிம்மாசனத்தின் மீது வெற்றி அடையுங்கள். ஒருவர் மற்றவர் மீது வெற்றி அடையுமளவு முயற்சி செய்யுங்கள். மனிதர்களிலிருந்து தேவதையாகுங்கள். குறிக்கோள் மிகவும் முக்கியம். இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கின்றது. அவற்றில் பல்வேறு பதவிகள் இருக்கின்றன. மாயை வெற்றியடைய முழுமையாக முயற்சி செய்யுங்கள். குழந்தைகளிடம் அன்புடன் இருங்கள். ஆனால் டிரஸ்டியாக இருக்க வேண்டும். பக்தியில் கூட கூறினார்கள், அனைத்துமே பிரபு கொடுத்தது, தாங்கள் கொடுத்தது. அடகுப் பொருள்; தாங்கள் பெற்றுக் கொண்டால் அழவேண்டிய விஷயமேயில்லை. இந்த உலகமே அழுகின்றது. மோகத்தினை வென்ற இராஜாவின் கதையைப் பற்றிக் கூட கூறுகின்றார்கள். அங்கு துக்கத்தின் உணர்வுகள் இருக்காது. ஒரு உடலை விட்ட பின் மற்றொரு உடலை எடுக்கின்றார்கள். அங்கு ஒருபோதும் யாருக்குமே வியாதி இருக்காது. ஆரோக்கியமான, நோயற்ற உடல் இருக்கும். எவ்வாறு திருமணம் நடக்கும், எவ்வாறு ஆடைகளை அணிந்து கொள்வார்கள் அங்குள்ள பழக்க, வழக்கங்கள் அனைத்தையும் குழந்தைகள் சாட்சாத் காரமாய்ப் பார்த்தார்கள். அந்த பாகம் முடிந்து விட்டது. அச்சமயம் ஞானம் அதிகமாக கிடையாது. குழந்தைகளுக்கு நாளுக்கு நாள் அதிகமாக சக்தி கிடைக்கின்றது. இவை அனைத்தும் நாடகத்தில் பதிவாகியுள்ளது. பரமாத்மாவிற்குள் கூட மிகவும் உயர்ந்த பாகம் உள்ளது. ஆச்சரியமாக உள்ளது. தானே வந்து புரிய வைக்கின்றார்; பிரம்மாண்டத்தில் மேலே அமர்ந்து கொண்டு எவ்வளவு காரியங்களைச் செய்கின்றார். ஒரு முறை கல்பத்தில் கீழே வருகின்றேன். நிராகாரருக்கு அதிகமாக பூஜை நடைபெறுகின்றது. ஆனால் நிராகார் பரமபிதா பரமாத்மா எவ்வாறு வந்து பாடத்தினைக் கற்றுத் தருகின்றார் என்பதை மறந்து விட்டார்கள். கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் பெயரினைப் போட்டு விட்டார்கள். ஆதலால் நிராகார் மீது அன்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. பரமாத்மா தான் சகஜமான இராஜயோகம் கற்றுக் கொடுத்தார்; மேலும் உலகத்தினருக்குக் கூறினார்: உலகம் மாறிக் கொண்டே யிருக்கும், யுகம் மாறிக் கொண்டேயிருக்கும். இந்த நாடக சக்கரத்தினைப் புரிந்து கொண்டீர்கள். மனிதர்களுக்கு எதுவுமே தெரியாது. சத்யுகத்தில் உள்ள தேவி, தேவதைகளைப் பற்றியும் தெரியாது. தேவதைகளின் அடையாளம் மட்டும் உள்ளது.



    பாபா புரிய வைக்கின்றார், நான் சிவபாபாவுடையவன் என்று சதா புரிந்து கொள்ளுங்கள். நமக்கு சிவபாபா படிப்பு கற்றுத் தருகின்றார். சிவபாபா பிரம்மாவின் உடல் மூலமாக பாடம் கற்றுத் தருகின்றார். சிவபாபாவை நினைவு செய்யும்போது மிகவும் மகிழ்ச்சி கிடைக்கும். இப்படிப்பட்ட இறை தந்தை என்று யாரைக் கூறமுடியும்? தந்தையாகவும் உள்ளார், டீச்சராகவும் உள்ளார். அந்த தந்தை (உலகீய) குருவாகவும் உள்ளார் என்று கூற முடியாது. ஆசிரியர் ஆக இருக்கலாம். தந்தையே குருவாக உள்ளார் என்று ஒருபோதும் கூறமுடியாது. இவருடைய (பிரம்மா) தந்தையும் ஆசிரியராக இருந்தார், படிப்பு கற்றுக் கொடுத்தார். நாமும் படித்துக் கொண்டிருந்தோம். அவர் எல்லைக்குட்பட்ட தந்தை மற்றும் ஆசிரியர். இவர் எல்லைக்கு அப்பாற்பட்ட தந்தை, ஆசிரியர். நீங்கள் உங்களை இறை மாணவர்கள் என்று புரிந்து கொண்டீர்கள் என்றால், ஆஹா சௌபாக்கியம்! இறை தந்தை பாடம் கற்றுத் தருகின்றார். எவ்வளவு தெளிவாக உள்ளது. பாபா மிகவும் இனிமையானவர். இனிமையான பொருளை நினைவு செய்கின்றோம். பிரியதரிசன் - பிரியதரிசினி எவ்வாறு அன்புடன் இருப்பார்கள். அவர்களிடம் விகாரம் இருக்காது. ஆனால் ஒருவர் மற்றவரை பார்த்துக் கொண்டே யிருப்பார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் பரமாத்மாவிடம் அன்பு வைத்துள்ளீர்கள். ஆத்மா கூறுகின்றது பாபா ஞானக்கடல், அன்புக் கடலாக இருக்கின்றார். இந்த பதீத்தமான உடலில் வந்து நம்மை உயர்வாக ஆக்குகின்றார். மனிதர்களைத் தேவதைகளாக ஆக்கினார் என்ற மகிமையும் உள்ளது. வினாடியில் வைகுண்டத்திற்குச் சென்று விடுகின்றார்கள். வினாடியில் மனிதர்கள் தேவதையாக ஆகிவிடுகின்றார்கள். இது கூட குறிக்கோள். இதற்காக படிப்பு படிக்க வேண்டும். குருநானக் கூட கூறியுள்ளார்: அழுக்கான ஆடைகளை (ஆத்மாக்கள்) துவைப்பீர்கள். இலட்சியம் என்ற சோப் உள்ளது அல்லவா! பாபா கூறுகின்றார்: நான் மிகவும் உயர்ந்த வண்ணானாக இருக்கின்றேன். உங்களின் ஆடையை (ஆத்மா மற்றும் உடல்) எவ்வளவு சுத்தமாக ஆக்குகின்றேன். இப்படிப்பட்ட வண்ணானைப் பார்த்துள்ளீர்களா? ஆத்மா முற்றிலும் கறுப்பாக ஆகிவிட்டது. அதனை யோக பலத்தால் மிகவும் சுத்தம் செய்கின்றேன். இவரை (தாதா) ஒருபோதும் நினைவு செய்யாதீர்கள். இந்த காரியம் முழுவதுமே சிவபாபாவுடையது. அவரைத்தான் நினைவு செய்ய வேண்டும். இந்த பிரம்மாவை விட அவர் மிகவும் இனிமையானவர். இந்த கண்களால் பார்க்கும்போது பிரம்மாவின் ரதம் (உடல்) தான் தெரிகின்றது என்று ஆத்மாக்களுக்கு கூறுகின்றேன். ஆனால் சிவபாபாவைத் தான் நினைவு செய்ய வேண்டும். சிவபாபா உங்களை சோழியிலிருந்து வைரமாக ஆக்குகின்றார். நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் பின் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தையான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. நான் இறை மாணவன், பகவான் ஆசிரியராக வந்து பாடம் கற்றுத் தருகின்றார் என்ற இந்த நினைவு இருக்க வேண்டும். குடும்பத்தில் இருந்தாலும் முழுமையாக டிரஸ்டியாக ஆக வேண்டும்.



    2. தற்போது பூக்களை, மாலைகளை சுவீகாரம் செய்து கொள்ளக்கூடாது. விஷ்ணுவின் கழுத்து மாலையில் வருவதற்கு மாயா மீது வெற்றி அடைய முழுமையாக முயற்சி செய்ய வேண்டும்.



    வரதானம் :

    அலௌகீக வாழ்க்கையின் நினைவு மூலமாக ஸ்மிருதி (நினைவு) மற்றும் பார்வையை மாற்றம் செய்யக் கூடிய மர்ஜீவா ஆகுக !



    பிராமண வாழ்க்கையை அலௌகீக வாழ்க்கை என்று கூறுகிறோம். அலௌகீகம் என்பதன் பொருள், இந்த உலகத்தைப் போன்று அல்ல என்பதாகும். பார்வை, ஸ்மிருதி மற்றும் விருத்தி (உள்ளுணர்வு) அனைத்திலும் மாற்றம் வேண்டும். சதா ஆத்மா சகோதர, சகோதரன் என்ற விருத்தி மற்றும் சகோதர- சகோதரி என்ற விருத்தி இருக்க வேண்டும். நாம் அனைவரும் நமக்குள் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற விருத்தி இருக்க வேண்டும். மேலும் பார்வையால் கூட ஆத்மாவைப் பாருங்கள், சரீரத்தை அல்ல. அப்போது தான் மர்ஜீவா என்று சொல்வோம். அம்மாதிரி உயர்ந்த வாழ்க்கை கிடைத்துள்ளது. அதனால் பழைய வாழ்க்கை நினைவிற்கு வர முடியாது.



    சுலோகன் :

    சதா சுத்தமான உணர்வில் (ஃபீலிங்) இருந்தீர்கள் என்றால் அசுத்த உணர்வு என்ற ஃப்ளு (காய்ச்சல்) அருகில் கூட வர முடியாது.




    ***OM SHANTI***


    No comments

    Say Om Shanti to all BKs