BK Murli 31 March 2015 In Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    Brahma Kumaris  Murli 31 March 2015 

    31.03.2015    காலை முரளி  ஓம் சாந்தி   பாப்தாதா, மதுபன்




    இனிமையான குழந்தைகளே ! நீங்கள் உங்களது யோக பலத்தின் மூலம் முழு படைப்பினையும் (சிருஷ்டி) பாவனமாக ஆக்க வேண்டும். நீங்கள் யோக பலத்தினால் தான் மாயை மீது வெற்றி அடைந்து உலகத்தை வென்றவராக ஆக முடியும்.



    கேள்வி:

    தந்தையின் பார்ட் (பாகம்) என்ன? அந்த பாகத்தை குழந்தைகளாகிய நீங்கள் எந்த ஆதாரத்தில் அறிந்துள்ளீர்கள்?



    பதில்:

    தந்தையினுடைய பாகமாவது - எல்லோருடைய துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பது, இராவணனினுடைய சங்கிலிகளிலிருந்து விடுவிப்பது. தந்தை வரும் பொழுது பக்தியின் இரவு முடிவடைகிறது. சுயம் தந்தை உங்களுக்கு தன்னைப் பற்றியும் தனது ஆஸ்தியைப் பற்றியும் அறிமுகம் அளிக்கிறார். நீங்கள் ஒரு தந்தையை அறிந்து கொள்வதாலேயே எல்லாவற்றையும் அறிந்து கொண்டு விடுகிறீர்கள்.



    பாடல்:

    தந்தையும் நீயே தாயும் நீயே.. .. ..



    ஓம் சாந்தி.

    குழந்தைகள் ஓம் சாந்தி என்பதன் பொருளைப் புரிந்துள்ளார்கள். நாம் ஆத்மாக்கள். இந்த சிருஷ்டி நாடகத்தில் நமக்கு முக்கிய பாகம் உள்ளது என்பû தந்தை புரிய வைத்துள்ளார். யாருடைய பாகம் உள்ளது? ஆத்மா சரீரத்தை தாரணை செய்து பாகத்தை நடிக்கிறது. எனவே குழந்தைகளை இப்பொழுது (ஆத்ம அபிமானி) ஆத்ம உணர்வுடையவராக ஆக்கிக் கொண்டிருக்கிறார். இவ்வளவு காலம் (தேக அபிமானி) தேக உணர்வுடையவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். நமது பாபா நாடகத் திட்டப்படி வந்துள்ளார். தந்தை வருவதே இரவில் ஆகும். எப்பொழுது வருகிறார் - அதற்கான நாள் தேதி ஒன்றும் கிடையாது. யார் லௌகீக பிறவி எடுக்கிறார்களோ அவர்களுக்குத் தான் நாள் தேதி இருக்கும். இவரோ பரலோக தந்தை ஆவார். இவருக்கு லௌகீக பிறவி கிடையாது. கிருஷ்ணருக்கு நாள் தேதி காலம் எல்லாமே கொடுக்கிறார்கள். இவருடையதோ தெய்வீக பிறப்பு என்று கூறப்படுகிறது. தந்தை இவருக்குள் பிரவேசம் செய்து இது எல்லையில்லாத நாடகம் ஆகும்" என்று கூறுகிறார். அதில் அரைகல்பம் இரவு ஆகும். இரவு அதாவது கோரமான இருள் ஏற்படும் பொழுது நான் வருகிறேன். நாள் தேதி ஒன்றும் இல்லை. இச்சமயத்தில் பக்தியும் தமோபிரதானமாக உள்ளது. அரைகல்பம் எல்லையில்லாத பகல் ஆகும். நான் இவருக்குள் பிரவேசம் செய்துள்ளேன் என்று சுயம் தந்தை கூறுகிறார். கீதையில் பகவானுவாச (பகவான் கூறுகிறார்) என்றுள்ளது. ஆனால் பகவான் மனிதனாக இருக்க முடியாது. கிருஷ்ணர் கூட தெய்வீக குணங்கள் உடையவர் ஆவார். இது மனித உலகம் ஆகும். இது தேவலோகம் கிடையாது. பிரம்மா தேவதாய நம.. .. .. என்றும் பாடுகிறார்கள். அவர் சூட்சுமவதனவாசி ஆவார். அங்கு எலும்பு சதை இருப்பது இல்லை என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். அது சூட்சும வெண்மையான நிழல் ஆகும். மூல வதனத்தில் இருக்கும் பொழுது ஆத்மாவிற்கு நிழல் போன்ற சூட்சும சரீரமும் இல்லை. எலும்பு சதையின் உடலும் இல்லை. இந்த விஷயங்களை எந்த ஒரு மனிதரும் அறியாமல் உள்ளார்கள். தந்தை தான் வந்து கூறுகிறார். பிராமணர்கள் தான் கேட்கிறார்கள். வேறு யாரும் கேட்பதில்லை. பிராமண வர்ணம் இருப்பதே பாரதத்தில். அதுவும் பரமபிதா பரமாத்மா பிரஜாபிதா பிரம்மா மூலமாக பிராமண தர்மத்தை ஸ்தாபனை செய்யும் பொழுது தான் ஆகிறது. இப்பொழுது இவரைப் படைப்பவர் என்று கூட கூற மாட்டார்கள். புதிய படைப்பு ஒன்றும் படைப்பது இல்லை. மீண்டும் புதுப்பித்து (ரிஜுவெனேட்) விடுகிறார் அவ்வளவே ! "ஹே பாபா, பதீத உலகத்தில் வந்து எங்களை பாவனமாக ஆக்குங்கள் என்று அழைக்கவும் செய்கிறார்கள்". இப்பொழுது உங்களை பாவனமாக ஆக்கி கொண்டிருக்கிறார். நீங்கள் மீண்டும் யோக பலத்தினாலே இந்த சிருஷ்டியை (படைப்பு) பாவனமாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். மாயை மீது நீங்கள் வெற்றி அடைந்து உலகத்தை வென்றவராக ஆகிறீர்கள். யோக பலத்திற்கு சையன்ஸ் பலம் (விஞ்ஞான பலம்) என்றும் கூறப்படுகிறது. ரிஷி முனிவர்கள் எல்லோருமே சாந்தியை விரும்புகிறார்கள். ஆனால் சாந்தியின் பொருளை அறியாமல் உள்ளார்கள். இங்கோ அவசியம் பாகத்தை ஏற்று நடிக்க வேண்டி உள்ளது அல்லவா? சாந்தி தாமம் என்பது (ஸ்வீட் சைலன்ஸ் ஹோம்) இனிமையான அமைதியான இல்லம் ஆகும். நமது வீடு சாந்திதாமம் ஆகும் என்பது ஆத்மாக்களாகிய உங்களுக்கு இப்பொழுது தெரிய வந்துள்ளது. இங்கு நாம் பாகத்தை ஏற்று நடிக்க வந்துள்ளோம். ஹே பதீத பாவனரே, துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவரே (துக்க ஹர்த்தா சுக கர்த்தா) வாருங்கள் எங்களை இந்த இராவணனின் சங்கிலிகளிலிருந்து விடுவியுங்கள் என்று தந்தையையும் அழைக்கிறார்கள். பக்தி என்பது இரவு, ஞானம் என்பது பகல். இரவு ஒழிந்து விடுகிறது. பிறகு ஞானம் வாழ்ந்து விடுகிறது. இது சுகம் மற்றும் துக்கத்தின் விளையாட்டு ஆகும். முதலில் நாம் சொர்க்கத்தில் இருந்தோம். பிறகு இறங்கி இறங்கி வந்து கீழே (ஹெல்) நரகத்தில் விழுந்துள்ளோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். கலியுகம் எப்பொழுது முடியும் பிறகு சத்யுகம் எப்பொழுது வரும் என்பது யாருக்குமே தெரியாது. நீங்கள் தந்தையை அறிந்து கொண்டு விடுவதால் தந்தை மூலமாக அனைத்தையும் அறிந்துள்ளீர்கள். மனிதர்கள் பகவானைத் தேடுவதற்காக எவ்வளவு அடி வாங்குகிறார்கள். தந்தையை அறியாமலே உள்ளார்கள். தந்தை வந்து தனது மற்றும் ஆஸ்தியின் அறிமுகத்தை அளிக்கும் பொழுது தான் அறிந்து கொள்ள முடியும். ஆஸ்தி தந்தையிடமிருந்து தான் கிடைக்கிறது. தாயிடமிருந்து அல்ல. இவரை மம்மா (தாய்) என்றும் கூறுகிறார்கள். ஆனால் இவரிடமிருந்து ஆஸ்தி கிடைப்பதில்லை. இவரை நினைவும் செய்ய வேண்டியதில்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரன் கூட சிவனின் குழந்தைகள் ஆவார்கள். இதுவும் யாருக்குமே தெரியாது. எல்லையில்லாத முழு உலகத்தின் படைப்புகர்த்தா ஒரே ஒரு தந்தை ஆவார். மற்ற எல்லாமே அவருடைய படைப்பு அல்லது எல்லைக்குட்பட்ட படைப்புகர்த்தாக்கள். என்னை நினைவு செய்தால் உங்களுடைய விகர்மங்கள் (பாவங்கள்) அழிந்து (விநாசம்) போகும் என்று இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை கூறுகிறார். மனிதர்கள் தந்தையை அறியாமல் உள்ளார்கள். எனவே யாரை நினைவு செய்வார்கள்? ஆக எவ்வளவு அநாதையாக ஆகி விட்டுள்ளார்கள் என்று தந்தை கூறுகிறார். இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது.



    பக்தி மற்றும் ஞானம் இரண்டிலுமே எல்லாவற்றையும் விட சிரேஷ்டமான (சிறந்த) செயல் தானம் செய்வது ஆகும். பக்தி மார்க்கத்தில் இறைவன் பெயரில் தானம் செய்கிறார்கள். எதற்காக? ஏதாவது விருப்பமோ அவசியம் இருக்கும்.எப்படி கர்மம் செய்வோமோ அப்படியே பலன் அடுத்த பிறவியில் அடைவோம் என்று புரிந்துள்ளார்கள். இந்த பிறவியில் என்ன செய்வார்களோ அதனுடைய பலன் அடுத்த பிறவியில் அடைவார்கள். ஜன்ம ஜன்மாந்திரமாக அடைய மாட்டார்கள். ஒரு பிறவிக்கான பலன் கிடைக்கிறது. எல்லாவற்றையும் விட நல்லதிலும் நல்ல கர்மம் தானம் செய்வதாகும். தானம் செய்பவருக்கு புண்ணிய ஆத்மா என்று கூறப்படுகிறது. பாரதத்திற்கு மகாதானி என்று கூறப்படுகிறது. பாரதத்தில் எவ்வளவு தானம் ஆகிறதோ அவ்வளவு வேறு எந்த கண்டத்திலும் ஆவதில்லை. தந்தையும் வந்து குழந்தைகளுக்கு தானம் செய்கிறார். குழந்தைகள் பிறகு தந்தைக்கு தானம் செய்கிறார்கள். கூறுகிறார்கள் - பாபா, நீங்கள் வந்தீர்கள் என்றால் எங்களுடைய உடல், மனம், பொருள் அனைத்தையும் உங்களுக்கு ஒப்படைத்து விடுவோம். உங்களைத் தவிர எங்களுக்கு யாரும் இல்லை. தந்தையும் கூறுகிறார் – எனக்காக இருப்பவர்கள் குழந்தைகளாகிய நீங்கள் தான் ! என்னை அழைப்பதே ஹெவென்- காட் ஃபாதர் அதாவது சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர். நான் வந்து உங்களுக்கு சொர்க்கத்தின் அரசாட்சியை அளிக்கிறேன். பாபா அனைத்தும் உங்களுடையது என்று என் பொருட்டு குழந்தைகள் எல்லாமே கொடுத்து விடுகிறார்கள். பக்தி மார்க்கத்தில் கூட "பாபா இவை அனைத்தும் உங்களால் கொடுக்கப்பட்டது என்று கூறி கொண்டிருந்தார்கள். பிறகு அவை போய் விட்டது என்றால் துக்கமுடையவர்களாக ஆகி விடுகிறார்கள். அது பக்தி மார்க்கத்தின் குறுகிய கால சுகம் ஆகும். பக்தி மார்க்கத்தில் நீங்கள் எனக்கு (இன்டைரக்ட்) மறைமுகமாக தானம் புண்ணியம் செய்கிறீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். அதனுடைய பலனோ உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது இந்த நேரத்தில் நான் உங்களுக்கு கர்மம், அகர்மம், விகர்மத்தின் ரகசியத்தை வந்து புரிய வைக்கிறேன். பக்தி மார்க்கத்தில் நீங்கள் எப்படி கர்மம் செய்கிறீர்களோ அதற்கான குறுகிய கால சுகம் கூட என் மூலமாக உங்களுக்குக் கிடைக்கிறது. இந்த விஷயங்கள் பற்றி உலகத்தில் யாருக்குமே தெரியாது. தந்தை தான் வந்து கர்மங்களின் கதி பற்றி புரிய வைக்கிறார். சத்யுகத்தில் ஒரு பொழுதும் யாரும் தீய செயல் செய்வதே இல்லை. எப்பொழுதும் சுகமே சுகமாக இருக்கும். சுகதாமம் சொர்க்கத்தையும் நினைவு செய்கிறார்கள். இப்பொழுது இருப்பது நரகத்தில். பிறகும் இன்னார் சொர்க்கம் போய் சேர்ந்து விட்டார் என்று கூறி விடுகிறார்கள். ஆத்மாவிற்கு சொர்க்கம் எவ்வளவு நல்லதாகப் படுகிறது. இன்னார் சொர்க்கம் போய் சேர்ந்தார் என்று ஆத்மா தான் கூறுகிறது அல்லவா? ஆனால் தமோபிரதானமாக ஆகி இருக்கும் காரணத்தால் சொர்க்கம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன? என்பது எதுவுமே அவர்களுக்குத் தெரிய வருவதில்லை. நீங்கள் எல்லோரும் எவ்வளவு தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளீர்கள் என்று எல்லையில்லாத தந்தை கூறுகிறார். டிராமாவையோ அறியாமல் உள்ளார்கள். சிருஷ்டி சக்கரம் சுற்றுகிறது என்று புரிந்தும் உள்ளார்கள். எனவே அவசியம் மிகச் சரியாக அவ்வாறே (ரிபீட்) திரும்ப நடைபெறும் அல்லவா? அவர்கள் கூறும் அளவிற்கு மட்டும் கூறி விடுகிறார்கள். இப்பொழுது இது சங்கமயுகம் ஆகும். இந்த ஒரே ஒரு சங்கமயுகத்திற்கு பாடல் உள்ளது. அரை கல்பம் தேவதைகளின் ராஜ்யம் நடக்கிறது. பிறகு அந்த இராஜ்யம் எங்கே சென்று விடுகிறது? யார் வென்று விடுகிறார்கள்? இதுவும் யாருக்குமே தெரியாது. இராவணன் வென்று விடுகிறான் என்று தந்தை கூறுகிறார். அவர்கள் பின் வந்து தேவதைகள் மற்றும் அசுரர்களின் சண்டையை காண்பித்துள்ளார்கள்.



    5 விகாரங்கள் என்ற இராவணனிடம் தோற்று விடுகிறார்கள். பின் இராவணன் மீது வெற்றியும் அடைகிறார்கள் என்று இப்பொழுது தந்தை புரிய வைக்கிறார். நீங்களோ பூஜிக்கத் தக்கவர்களாக இருந்தீர்கள். பின் பூசாரி பதீதர்களாக (தூய்மையற்றவர்களாக) ஆகிறீர்கள் என்றால் இராவணனிடம் தோற்று விட்டீர்கள் அல்லவா? இவன் உங்களது எதிரியாக ஆன காரணத்தால் நீங்கள் எப்பொழுதும் எரித்துக் கொண்டே வந்துள்ளீர்கள். ஆனால் உங்களுக்குத் தெரியாது. இராவணனின் காரணமாக நீங்கள் பதீதமாக (தூய்மையற்றவராக) ஆகியுள்ளீர்கள் என்று. இப்பொழுது தந்தை புரிய வைக்கிறார். இந்த விகாரங்களுக்கு தான் மாயை என்று கூறப்படுகிறது. மாயையை வென்றவர்கள் உலகத்தை வெல்வார்கள் (மாயாஜீத் ஜகத் ஜீத்). இந்த இராவணன் எல்லோரையும் விட பழைய எதிரி ஆவான். இப்பொழுது ஸ்ரீமத்படி நீங்கள் இந்த 5 விகாரங்கள் மீது வெற்றி அடைகிறீர்கள். வெற்றி அடையுமாறு செய்விக்க தந்தை வந்துள்ளார். இது விளையாட்டு (நாடகம்) ஆகும் அல்லவா? மாயையிடம் தோற்கும் பொழுது தோல்வி, மாயையை வெல்லும் பொழுது வெற்றி. தந்தை தான் வெற்றி அடையுமாறு செய்விக்கிறார். எனவே அவருக்கு சர்வ சக்திவான் என்று கூறப்படுகிறது. இராவணன் கூட குறைந்த சக்திவான் ஒன்றும் அல்ல. ஆனால் அவன் துக்கம் கொடுக்கிறான். எனவே பாடல் இல்லை. இராவணன் மிகவுமே கொடூரமானவன். உங்களுடைய இராஜ்யத்தையே பறித்து விடுகிறான். நாம் எப்படி தோற்று விடுகிறோம். பிறகு எப்படி வெற்றி அடைகிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து விட்டுள்ளீர்கள். நமக்கு அமைதி வேண்டும் என்று ஆத்மா விரும்பவும் செய்கிறது. நாம் நமது வீட்டிற்குப் போகலாம். பக்தர்கள் பகவானை நினைவு செய்கிறார்கள். ஆனால் கல்புத்தி ஆக இருக்கும் காரணத்தால் புரிந்து கொள்வது இல்லை. பகவான் பாபா ஆவார். எனவே தந்தையிடமிருந்து அவசியம் ஆஸ்தி கிடைத்திருக்கக் கூடும். அவசியம் கிடைக்கிறது தான். ஆனால் எப்பொழுது கிடைக்கிறது. பின் எப்படி இருக்கிறோம் என்பதை அறியாமல் உள்ளார்கள். தந்தை கூறுகிறார் - நான் இந்த பிரம்மா உடலின் மூலமாக உங்களுக்கு வந்து புரிய வைக்கிறேன். எனக்கும் உறுப்புக்கள் வேண்டும் அல்லவா? எனக்கு என்னுடைய கர்மேந்திரியங்களோ இல்லை. சூட்சும வதனத்தில் கூட கர்மேந்திரியங்கள் இருக்கும். நடந்தாலும் சென்றாலும் எப்படி மூவி (திரைப்படம் - ஊமைப்படம்) இருக்கிறது. இந்த (மூவி, டாக்கி பயஸ்கோப்) ஊமைப்படம், பேசும் திரைப்படம் ஆகியவை வெளிப்பட்டுள்ளது. எனவே தந்தைக்கும் புரிய வைப்பதில் எளிதாகிறது. அவர்களுடையது புஜபலம், உங்களுடையது யோக பலம். அவர்கள் இரண்டு சகோதரர்கள் (அமெரிக்கா, ரஷியா) கூட தங்களுக்குள் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்றால் அவர்களால் உலகத்தின் மீது ஆட்சி புரிய முடியும். ஆனால் இப்பொழுதோ பிளவுகள் ஏற்பட்டு உள்ளன. குழந்தைகளாகிய உங்களுக்கு தூய கர்வம் இருக்க வேண்டும். நீங்கள் மன்மனாபவ என்பதன் ஆதாரத்தில் சைலன்ஸ் மூலமாக (ஜகத் ஜீத்) உலகத்தை வென்றவர்களாக ஆகி விடுகிறீர்கள். அவர்கள் சைன்ஸ்-விஞ்ஞானத்தின் கர்வம் உள்ளவர்கள். நீங்கள் சைலன்ஸ்-ன் (கர்வம்) பெருமை கொண்டவர்கள். தங்களை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்கிறீர்கள். நினைவினால் நீங்கள் சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். மிகவும் சுலபமான வழி கூறுகிறார். சிவபாபா குழந்தைகளாகிய நமக்கு மீண்டும் சொர்க்கத்தின் ஆஸ்தியை அளிக்க வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். உங்களுடைய கலியுக கர்மபந்தனங்கள் அனைத்தையும் மறந்து விடுங்கள் என்று தந்தை கூறுகிறார். 5 விகாரங்களையும் எனக்கு தானமாகக் கொடுத்து விடுங்கள். நீங்கள் எதையெல்லாம் எனது எனது என்றபடியே வந்துள்ளீர்களோ – எனது கணவன், எனது இன்னார்.. இவை அனைத்தையும் மறந்து கொண்டே செல்லுங்கள். எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்தாலும் அவற்றிலிருந்து பற்றை நீக்கி விடுங்கள். இந்த விஷயங்களை குழந்தைகளுக்குத் தான் புரிய வைக்கிறார். யார் தந்தையை அறியாமலே இருக்கிறார்களோ அவர்களால் இந்த பாஷையைக் கூட புரிந்து கொள்ள முடியாது. தந்தை வந்து மனிதனிலிருந்து தேவதையாக ஆக்குகிறார். தேவதைகள் இருப்பதே சத்யுகத்தில். கலியுகத்தில் இருப்பவர்கள் மனிதர்கள். இதுவரைக்கும் அவர்களுடைய அடையாளங்கள் உள்ளன. அதாவது படங்கள் உள்ளன. என்னைக் கூறுவதே பதீதபாவனர் என்று. நானோ தாழ்ந்த நிலையை அடைவதில்லை. நாங்கள் பாவனமாக இருந்தோம். பிறகு தாழ்ந்த நிலையை அடைந்து பதீதமாகி (தூய்மையற்றவராக) ஆகி விட்டுள்ளோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். "இப்பொழுது நீங்கள் வந்து பாவனமாக ஆக்குங்கள்.அப்பொழுது நாம் நமது வீட்டிற்குச் செல்வோம். இது ஸ்பிரிச்சுவல் நாலேஜ் (ஆன்மீக ஞானம்) ஆகும். அவினாஷி (அழியாத) ஞானரத்தினங்கள் ஆகும் அல்லவா? இது புதிய ஞானம் (நாலேஜ்) ஆகும். இப்பொழுது உங்களுக்கு இந்த (நாலேஜ்) ஞானத்தை கற்பிக்கிறேன். படைப்பவர் மற்றும் படைப்பின் முதல் இடை கடை பற்றிய ரகசியத்தைக் கூறுகிறேன். இப்பொழுது இதுவோ பழைய உலகம் ஆகும். இதில் தேகத்துடன் சேர்த்து உங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் அனைவர் மீதும் உள்ள பற்றை நீக்கி விடுங்கள்.



    இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தங்களுடைய அனைத்தையும் தந்தையிடம் ஒப்படைத்து விடுகிறீர்கள். தந்தை பிறகு 21 பிறவிகளுக்கு ராஜ்ய பாக்கியத்தை அளிக்கிறார். 21 பிறவிகள், 21 தலைமுறைகள் என்று பாடப்படுகிறது அல்லவா?அதாவது 21 பிறவிகள் முழுமையான ஆயுள் இருக்கும். இடையில் ஒரு பொழுதும் சரீரம் விடுபட முடியாது. அகால மரணம் ஆவதில்லை. நீங்கள் அமரராக ஆகி பின் அமரபுரிக்கு அதிபதி ஆகிறீர்கள். உங்களை ஒரு பொழுதும் "காலன் சாப்பிட முடியாது (எமன் உயிரைக் குடிக்க முடியாது). இப்பொழுது நீங்கள் இறப்பதற்காக புருஷார்த்தம் (முயற்சி) செய்து கொண்டிருக்கிறீர்கள். தேகத்துடன் சேர்த்து தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் மறந்து ஒரு தந்தையிடம் சம்பந்தம் (தொடர்பு) வைக்க வேண்டும் என்று தந்தை கூறுகிறார். எல்லோருமே சுகத்தின் சம்பந்தத்தில் செல்லவே வேண்டி உள்ளது. துக்கத்தின் பந்தனங்களை மறந்து கொண்டே செல்வீர்கள். இல்லற விவகாரங்களில் இருந்தபடியே தூய்மையாக ஆக வேண்டும். என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். கூடவே தெய்வீக குணங்களையும் தாரணை செய்யுங்கள். இந்த தேவதைகளைப் போல ஆக வேண்டும். இது லட்சியம் நோக்கம் (ஏம் ஆப்ஜெக்ட்) ஆகும். இந்த லட்சுமி, நாராயணர் சொர்க்கத்தின் அதிபதி ஆவார்கள். இவர்கள் எப்படி ராஜ்யத்தை அடைந்தார்கள். பிறகு எங்கே சென்றார்கள், இது யாருக்குமே தெரியாது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. தந்தை இருப்பதே துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவராக (துக்கஹர்த்தா சுககர்த்தா). எனவே நீங்கள் கூட சுகத்தின் வழியை அனைவருக்கும் கூற வேண்டும். அதாவது குருடர்களுக்கு கைத்தடி ஆக வேண்டும். இப்பொழுது தந்தை உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் அளித்துள்ளார். தந்தை எப்படி பாகத்தை ஏற்று நடிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது தந்தை உங்களுக்கு என்ன கற்ப்பிக்கிறாரோ அந்த படிப்பு மறைந்து போய் விடும். தேவதைகளிடம் இந்த நாலேஜ் (ஞானம்) இருப்பதில்லை. பிரம்மா முகவம்சாவளி பிராமணர்களாகிய நீங்கள் தான் படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானத்தை அறிந்து கொள்கிறீர்கள். வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாது. இந்த லட்சுமி நாராயணர் ஆகியோரிடமும் ஒரு வேளை இந்த ஞானம் இருந்திருந்தது என்றால் பரம்பரையாக வந்திருக்கும். அங்கு ஞானத்தின் அவசியமே இருப்பதில்லை. ஏனெனில் அங்கு இருப்பதே சத்கதி. இப்பொழுது நீங்கள் அனைத்தையும் தந்தைக்கு தானமாக அளிக்கிறீர்கள். பிறகு தந்தை உங்களுக்கு 21 பிறவிகளுக்கு அனைத்தையும் அளித்து விடுகிறார். இப்பேர்ப்பட்ட தானம் ஒரு பொழுதும் ஆவதில்லை. பாபா இவை அனைத்தும் உங்களுடையது". நீங்கள் தான் எங்களுக்கு எல்லாமே என்று நாம் (சர்வம்ஷ்") அனைத்தையும் அளிக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். த்வமேவ மாதாஸ்ச பிதா.. .. (தந்தையும் தாயும் நீயே). பாகத்தை ஏற்று நடிக்கிறார் அல்லவா? குழந்தைகளை (அடாப்ட்) தத்து எடுக்கவும் செய்கிறார். பிறகு சுயம் அவரே கற்பிக்கிறார். பின்னர் சுயம் அவரே குரு ஆகி அனைவரையும் அழைத்துச் செல்கிறார். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் பாவனம் ஆகி விடுவீர்கள், பின் உங்களைக் கூடவே அழைத்துச் செல்வேன் என்று கூறுகிறார். இது யக்ஞம் இயற்றப்பட்டுள்ளது.இது சிவஞான யக்ஞம் ஆகும். இதில் நீங்கள் உடல் மனம் பொருள் அனைத்தையும் ஸ்வாஹா (அர்ப்பணம்) செய்து விடுகிறீர்கள். குஷியுடன் எல்லாமே அர்ப்பணம் ஆகி விடுகிறது. மீதி ஆத்மா இருந்து விடுகிறது. பாபா, அவ்வளவு தான், இப்பொழுது நாங்கள் உங்கள் ஸ்ரீமத்படி தான் நடப்போம். இல்லறத்தில் இருக்கையிலும் தூய்மை ஆக வேண்டும் என்று தந்தை கூறுகிறார். 60வது வருடத்தின் ஆயுள் ஆகும் பொழுது வானப் பிரஸ்த நிலையில் செல்வதற்கான ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் அவர்கள் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்கிறார்களா என்ன? இப்பொழுது நீங்கள் மன்மனாபவ என்ற சத்குருவின் மந்திரத்தை பெறுகிறீர்கள். பகவான் கூறுகிறார் - நீங்கள் என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய விகர்மங்கள் விநாசம் ஆகும். உங்கள் அனைவருக்கும் வானப்பிரஸ்த நிலை ஆகும் என்று அனைவருக்கும் கூறுங்கள். சிவபாபாவை நினைவு செய்யுங்கள்". இப்பொழுது நமது வீட்டிற்குச் செல்ல வேண்டி உள்ளது. நல்லது.



    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. கலியுகத்தின் அனைத்து கர்ம பந்தனங்களை புத்தி மூலமாக மறந்து 5 விகாரங்களை தானம் செய்து ஆத்மாவை சதோபிரதானமாக ஆக்க வேண்டும். ஒரே ஒரு சைலன்ஸ்-ன் தூய்மையான பெருமையில் நிலைத்திருக்க வேண்டும்.



    2. இந்த ருத்ர யக்ஞத்தில் குஷியுடன் தங்களது உடல் மனம் பொருள் அனைத்தையும் அர்ப்பணம் செய்து பயனுள்ளதாக ஆக்க வேண்டும். இச்சமயம் அனைத்தையும் தந்தையிடம் ஒப்படைத்து 21 பிறவிகளுக்கு அரசாட்சியை தந்தையிடமிருந்து பெற வேண்டும்.



    வரதானம்:

    தங்களது சுப பாவனை மூலமாக பலவீனமான ஆத்மாக்களுக்குள் பலத்தை நிரப்பும் சதா சக்தி சொரூபமானவர் ஆவீர்களாக.



    சேவாதாரி குழந்தைகளுடைய விசேஷ சேவையாவது - சுயம் சக்தி சொரூபமாக இருப்பது மற்றும் அனைவரையும் சக்தி சொரூபமாக ஆக்குவது. அதாவது பலவீனமான ஆத்மாக்களுக்குள் பலத்தை நிரப்புவது. இதற்காக எப்பொழுதும் சுப பாவனை மற்றும் சிரேஷ்ட (சிறந்த) நல் விருப்பத்தின் சொரூபம் ஆகுங்கள்.சுப பாவனை என்பதன் பொருள், எவர் மீதாவது பாவனை வைத்து வைத்து அவர் மேலேயே பாவம் (பாவனை) உடையவராக ஆகி விடுவது என்பதல்ல. இந்த தவறைச் செய்யாதீர்கள். சுபபாவனை கூட எல்லைக்கப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். ஒருவரிடத்தில் விசேஷ பாவனை கொள்வது கூட தீமை பயப்பது ஆகும். எனவே எல்லைக்கப்பாற்பட்ட நிலையில் நிலைத்திருந்து பலவீனமான ஆத்மாக்களை தாங்கள் பிராப்தி செய்துள்ள சக்திகளின் ஆதாரத்தில் சக்தி சொரூபமாக ஆக்குங்கள்.



    சுலோகன்:

    அலங்காரம் பிராமண வாழ்க்கையின் சிருங்காரம் ஆகும். எனவே அலங்காரி ஆகுங்கள். தேக அகங்காரம் உடையவராக அல்ல.





    ******ஓம் சாந்தி*****

    No comments

    Say Om Shanti to all BKs