BK Murli 31 May 2015 In Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    Brahma Kumaris Murli 31 May 2015 In Tamil

    31.05.2015  காலை முரளி  ஓம் சாந்தி               “அவ்யக்த பாப்தாதா”


    ரிவைஸ் 10.12.1979 மதுபன்



    “புண்ணிய ஆத்மாக்களின் லட்சணம்”



    இன்று பாப்தாதா தன்னுடைய மிக உயர்ந்த மகான் புண்ணிய ஆத்மாக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.



    1) புண்ணிய ஆத்மா என்றால் ஒவ்வொரு எண்ணம் மற்றும் ஒவ்வொரு விநாடி தனக்காக மற்றும் மற்ற ஆத்மாக்களுக்காக புண்ணியத்தின் கணக்கை சேமிப்பவர் மற்றும் சேமிப்பு செய்விப்பவர்.



    2) புண்ணிய ஆத்மா என்றால் எப்பொழுதும் ஏதாவது பொக்கிஷத்தை மகாதானம் செய்து புண்ணியத்தை சம்பாதிப்பவர்.



    3) புண்ணிய ஆத்மா என்றால் எப்பொழுதும் அவருடைய கண்களில் பாப்தாதாவின் ரூபம் மற்றும் முகத்தில் பாப்தாதாவின் காரியங்கள், நினைவில் தந்தைக்குச் சமமாக சக்திசாலியான நிலை, வாயில் எப்பொழுதும் ஞான இரத்தினம் அதாவது விலைமதிக்கமுடியாத வார்த்தைகள், ஒவ்வொரு காரியத்தில் தந்தைக்குச் சமமான சரித்திரம், எப்பொழுதும் தந்தைக்குச் சமமான உலக நன்மை செய்யும் உள்உணர்வு, ஒவ்வொரு விநாடி ஒவ்வொரு எண்ணத்தினால் நன்மை செய்பவர், இரக்க மனமுடைய கிரணங்கள் மூலமாக நாலாபுறங்களிலும் உள்ள துக்கம் அசாந்தியின் இருளை நீக்குபவர்.



    4) புண்ணிய ஆத்மா தன்னுடைய புண்ணியத்தின் முதல் மூலமாக அனேக ஏழைகளை செல்வந்தர்கள் ஆக்குபவர், ஞான சொரூப புண்ணிய ஆத்மாவின் ஒரு புண்ணியத்தில் கூட மிகுந்த சக்தி இருக்கிறது. ஏனென்றால் நேரடியாக பரமாத்மா சக்தியின் ஆதாரத்தில் புண்ணிய ஆத்மாவாக ஆகி இருக்கிறார்.



    எப்படி துவாபர்யுகத்தின் மறைமுகமாக தானம், புண்ணியம் செய்யக்கூடிய விகாரி அற்ப காலத்து இராஜாக்களைப் பார்த்தும், கேட்டும் இருப்பீர்கள், அந்த இராஜாக்களிலும் இராஜ்ய அதிகாரத்தின் முழு சக்தி இருந்தது. எந்த ஆணையிட்டாலும் அதை யாரும் மாற்ற முடியாது. யாரை என்னவாக வேண்டுமானாலும் ஆக்க முடியும். யாரையாவது அனைத்தையும் நிறைந்தவராக ஆக்க முடியும், யாரையாவது தூக்கில் தொங்க விடவும் முடியும், இரண்டு அதிகாரங்களும் இருந்தன. இது மறைமுகமான தானம், புண்ணியம் செய்ததின் சக்தி யார் துவாபர்யுகத்தின் தொடக்கத்தில் இதை யதார்த்த ரூபத்தில் உபயோகம் செய்தார்களோ அவர்களிடம் இருந்தது. பிற்காலத்தில் மெதுமெதுவாக அதே இராஜ்ய பலம் யதார்த்தமற்ற ரூபமாக ஆகிவிட்டது. இந்தக் காரணத்தினால் இறுதியில் முடிவு காலத்தில் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிட்டது. ஆனால் எப்படி மறைமுகமான இராஜ்ய அதிகாரத்திலும் இவ்வளவு சக்தி இருந்தது, அவர்கள் தன்னுடைய பிரஜையை குடும்பத்தை அற்ப காலத்திற்காக சுகம் நிறைந்தவர்களாகவும், அமைதி நிறைந்தவர்களாகவும் ஆக்கிவிட்டார்கள். அதே போலவே புண்ணிய ஆத்மாக்கள் மற்றும் மகாதானிகள் உங்களுக்கும் நேரடியாக தந்தை மூலமாக இயற்கையை வெல்வதற்கும், மாயாவை வெல்வதற்கும் விசேஷ பலம் கிடைத்திருக்கிறது. அப்படி நீங்கள் அனைத்து சக்திகள் நிறைந்த அதிகாரம் உள்ளவர்கள். தன்னுடைய ஆல்மைட்டி அதிகாரத்தின் ஆதாரத்தில் அதாவது புண்ணியத்தின் முதலீட்டின் ஆதாரத்தில், சுத்த எண்ணத்தின் ஆதாரத்தினால், எந்த ஆத்மாக்களை என்ன விரும்புகிறீர்களோ அந்த மாதிரி அவர்களை ஆக்க முடியும். உங்களுடைய ஒரு எண்ணத்தில் அந்த அளவு சக்தி இருக்கிறது. தந்தையோடு சம்மந்தத்தை இணைக்க வைத்து ஒருவரை அனைத்தும் நிறைந்தவராக ஆக்க முடியும். அவர்களுடையது கட்டளை மற்றும் உங்களுடையது எண்ணம். அவர்கள் தன்னுடைய கட்டளையின் ஆதாரத்தினால் என்ன விரும்பினார்களோ அதைச் செய்ய முடிந்தது - அதே போல் நீங்கள் ஒரு எண்ணத்தின் ஆதாரத்தினால் ஆத்மாக்களை எவ்வளவு விரும்புகிறீர்களோ அவ்வளவு உயர்வாகத் தூக்கி விட முடியும். ஏனென்றால் நேரடியாக பரமாத்ம அதிகாரம் பிராப்தி ஆகியிருக்கிறது. அந்த மாதிரி சிரேஷ்ட ஆத்மாக்களாக இருக்கிறீர்களா? ஆனால் இப்பொழுது நடைமுறையில் ஏன் நடப்பதில்லை. அதிகாரம் இருக்கிறது, அனைத்து சக்திகளின் பலமும் இருக்கிறது, இருந்தும் அதை ஏன் உபயோகப்படுத்த முடிவதில்லை? என்ன காரணம்? இந்த உயர்ந்த சேவை இதுவரை ஏன் தொடங்கவில்லை?



    எண்ண சக்தியை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள், உபயோகியுங்கள் –



    முழு சரித்திரத்தில் யாராவது ஒருவேளை தன்னுடைய அதிகாரத்தை சரியாக உபயோகிக்கவில்லை என்றால் அவசியம் தவறாக உபயோகித்திருக்கிறார். இராஜாக்கள் இராஜ்யத்தை இழந்தார்கள், தலைவர்கள் தன்னுடைய பதவியை இழந்தார்கள், சர்வாதிகாரிகள் தன்னுடைய அதிகாரத்தை இழந்தார்கள். இவற்றிற்கு என்ன காரணம்? தன்னுடைய உண்மையான காரியத்தை விட்டு விட்டு அந்த மாதிரி கேளிக்கைகளிலேயே வாழ்க்கையை கழித்தார்கள். ஏதாவது ஒரு விஷயத்தின் பக்கம் அவர்கள் அடிமையாக இருந்தார்கள். எனவே அதிகாரம் விடுபட்டு விட்டது. (பலஹீனத்தின்) வசமானவர்களாக இருந்தார்கள். எனவே தன்னுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார்கள். அதே போல் தந்தை மூலமாக புண்ணிய ஆத்மாக்கள் உங்களுக்கு ஒவ்வொரு விநாடி மற்றும் ஒவ்வொரு எண்ணத்தில் என்ன பலம் கிடைத்திருக்கிறதோ, அதிகாரம் கிடைத்திருக்கிறதோ அவற்றை யதார்த்த முறையில் பலத்தின் மதிப்பை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல் உபயோகிப்பதில்லை. சின்ன சின்ன விஷயங்களில் தன்னுடைய அலட்சியத்தின் பொறுப்பின்மையில் அல்லது வீணாக நினைப்பது மற்றும் பேசுவதில் தவறாக உபயோகம் செய்வதினால் சேமிப்பாகியிருக்கும் புண்ணியத்தின் முதலீடு மற்றும் பிராப்தியாகிருக்கும் ஈஸ்வரிய சக்தியை எப்படி உபயோகிக்க வேண்டுமோ அப்படி செய்ய முடிவதில்லை. இல்லை என்றால் உங்களுடைய ஒரு எண்ணம் கூட மிகவும் சக்திசாலியானது. உயர்ந்த பிராமணர்களின் எண்ணம், ஆத்மாவின் அதிர்ஷ்டத்தின் ரேகையை கிழிப்பதற்கான சாதனம் ஆகும். உங்களுடைய ஒரு எண்ணம் ஒரு சுவிட்ச் ஆகும். அதை ஆன் செய்து ஒரு நொடியில் இருளை அகற்ற முடியும்.



    5) புண்ணிய ஆத்மாக்களின் எண்ணம் ஒரு ஆன்மீக காந்தம் ஆகும், அது ஆத்மாவை ஆன்மீகத்தின் பக்கம் கவரக்கூடியது.



    6) புண்ணிய ஆத்மாவின் எண்ணம் ஒரு (லைட் ஹவுஸ்) கலங்கரை விளக்கம் ஆகும். அது அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு சரியான இலக்கை காண்பிக்கக் கூடியது.



    7) புண்ணிய ஆத்மாவின் எண்ணம் மிக சீதள (குளிர்ந்த) சொரூபமானது அது விகாரங்களின் அக்னியில் எரிந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களை குளிரச் செய்யக்கூடியது.



    8) புண்ணிய ஆத்மாவின் எண்ணம் அந்த மாதிரி உயர்ந்த ஆயுதம் ஆகும். அது அனேக பந்தனங்கள் உள்ள மற்றவர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் ஆத்மாவை சுதந்திரமாக ஆக்கக்கூடியது.



    9) புண்ணிய ஆத்மாவின் எண்ணத்தில் அந்த மாதிரி விசேஷ சக்தி இருக்கிறது, எப்படி மந்திர தந்திரம் மூலமாக நடக்க முடியாத விஷயத்தையும் நடக்க வைத்து விடுகிறார்கள். அதே போல் எண்ணத்தின் சக்தி மூலமாக அசம்பவத்தையும் சம்பவமாக ஆக்க முடியும். வசீகரமான மகாமந்திரம் மூலமாக அனேகத்தின் வசமாகியிருக்கும் ஆத்மாக்களை மின்மினிப் பூச்சிக்குச் சமமாக பறக்க வைக்க முடியும்.



    10) எப்படி இன்றைய நாட்களின் இயந்திரங்களின் மூலமாக பாலைவனத்தையும் பசுமையான சோலைவனமாக ஆக்கிவிடுகிறார்கள், மலைகளிலும் மலர்களை விளைய வைக்கிறார்கள். புண்ணிய ஆத்மாக்கள் உங்களுடைய எண்ணம் மூலமாக நம்பிக்கை இழந்தவர்களையும் நம்பிக்கை வைத்திருப்பவராக ஆக்க முடியாதா என்ன?



    அந்த மாதிரி ஒவ்வொரு விநாடியும் புண்ணியத்தின் கணக்கை சேமிப்பு செய்யுங்கள். ஒவ்வொரு விநாடி, ஒவ்வொரு எண்ணத்தின் மதிப்பை தெரிந்து, எண்ணம் மற்றும் விநாடியை உபயோகப்படுத்துங்கள். எந்தக் காரியத்தை இன்றைய அனேக பல கோடி மடங்கு செல்வந்தர்களாலும் செய்ய முடியாதோ அதை உங்களுடைய ஒரு எண்ணம் ஆத்மாவை பல கோடி மடங்கு செல்வந்தனாக ஆக்க முடியும். அப்படியானால் உங்களுடைய எண்ணத்தின் சக்தி எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறது. சேமிப்பு செய்தாலும் மற்றும் செய்வித்தாலும் சரி, வீணாக இழந்தாலும் சரி, அது உங்கள் கையில் இருக்கிறது. இழப்பவர்களுக்கு வேதனை அடைய வேண்டியதாக இருக்கும். சேமிப்பு செய்பவர்கள் அனைத்து பிராப்திகள் என்ற ஊஞ்சலில் ஆடுவார்கள். சில நேரம் சுகத்தின் ஊஞ்சலில், சில நேரம் அமைதியின் ஊஞ்சலில், சில நேரம் ஆனந்தத்தின் ஊஞ்சலில் ஆடுவார்கள். மேலும் இழப்பவர்கள் ஊஞ்சலில் ஆடுபவர்களைப் பார்த்து தன்னுடைய பையை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் அனைவருமே ஊஞ்சலில் ஆடுபவர்கள் தான் இல்லையா.



    இராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கிறார்கள். இராஜஸ்தானை சேர்ந்தவர்களோ இராஜ்ய சக்தி அதாவது அதிகாரத்தின் சக்தி, ஈஸ்வரிய சக்தி மூலமாக எப்பொழுதும் தங்களுடைய இராஜஸ்தானை பாலைவனத்திலிருந்து காய்கறி மற்றும் மலர்கள் விளைவதாக ஆக்குவதில், காட்டை மலர்தோட்டமாக ஆக்குவதில் திறமைசாலிகள். இராஜஸ்தானில் முக்கிய ஸ்தானம் முக்கிய கேந்திரம் (சென்டர்) அப்படி எங்கு முக்கிய கேந்திரம் இருக்கிறதோ அவர்கள் அனைத்திலும் முக்கியமானவர்கள் இல்லையா? இராஜஸ்தானுக்கோ பெருமிதம் இருக்க வேண்டும், போதை இருக்க வேண்டும். இராஜஸ்தானிலிருந்து புதுப்புது சேவைக்கான திட்டங்கள் உருவாக வேண்டும். இராஜஸ்தானிற்கு ஏதாவது புதிய கண்டுபிடிப்பு செய்ய வேண்டும். இப்பொழுதினுடையது அல்ல இராஜஸ்தானின் நிலத்தை பரிவர்த்தனை செய்ய வேண்டும். அதற்காக அடிக்கடி கடும் உழைப்பு என்ற தண்ணீர் விட வேண்டும். இடைவிடாது உரம் போட வேண்டும். இப்பொழுது லேசாக உரம் போடப்பட்டிருக்கிறது. நல்லது. இன்னும் ஒரு நாள் பின்பு உத்திரபிரதேசத்தின் உயர்ந்த நிலையை கூறுவோம். வெளிநாட்டினரோ இப்பொழுதும் உடனே செய்யக்கூடியவர்கள். நினைத்தார்கள் உடனே செய்யவும் செய்தார்கள். உத்திரபிரதேசத்தின் மகான்தன்மையின் மாலையையும் வர்ணனை செய்வோம். இப்பொழுது தயார் செய்யுங்கள், பிறகு இன்னொரு நாள் மாலை அணிவிப்போம்.



    அந்த மாதிரி உயர்ந்த எண்ணத்தின் விதி மூலமாக ஆத்மாக்களை சத்கதி பெறச் செய்யக்கூடிய, ஈஸ்வரிய சக்தி மூலமாக ஆத்மாக்களை ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் விடுவிக்கக்கூடிய, எப்பொழுதும் புண்ணியத்தின் முதலை சேமிப்பு செய்யக்கூடிய மற்றும் செய்விக்கக்கூடிய, எப்பொழுதும் உலக நன்மைக்கான திட எண்ணத்தை வைத்திருக்கக்கூடிய அந்த மாதிரி மிக உயர்ந்த புண்ணிய ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்



    டீச்சர்களுடன்:

    டீச்சர்களோ எப்பொழுதும் முன்னேறும் கலையின் அனுபவம் செய்து கொண்டிருக்கிறீர்கள் தான் இல்லையா? டீச்சர்களின் விசேஷம் - அனுபவியாக ஆவது. டீச்சர் என்றால் சொல்பவர்கள் அல்ல! ஆனால் டீச்சர் என்றால் சொல்வதின் கூடவே அனுபவம் செய்விப்பவர். அப்படி சொல்வது மற்றும் சொரூபத்தில் அனுபவம் செய்விப்பது என்ற இது தான் டீச்சர்களின் விசேஷம் ஆகும். சொல்பவர்கள் அல்லது சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள் வகுப்புக்கள் நடத்துபவர்களோ துவாபர்யுகத்திலிருந்து பெரிய பெரிய பெயர் பெற்றவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இங்கு ஞான மார்க்கத்தில் பெயர் பெற்றவராக யார் ஆகிறார்? சொற்பொழிவு நிகழத்துபவர்களா? யார் சொல்வதின் கூடவே அனுபவமும் செய்விக்கிறாரோ அவர் தான் ஆகிறார். டீச்சர்களின் விசேஷ கவனத்தில் நான் எப்பொழுதும் எங்கிருந்தாலும் அங்குள்ள மற்றும் அதன் கூடவே எல்லைக்கப்பாற்பட்ட வாயுமண்டலம் மற்றும் வைப்ரேஷன்களை (அதிர்வலைகள்) எப்பொழுதும் சுத்தமாக ஆக்க வேண்டும். எப்படி ஏதாவது எல்லைக்குட்பட்ட நறுமணம் சூழ்நிலையை எவ்வளவு மாற்றி விடுகிறது, அதே போல் டீச்சர்களின் குணங்களின் தாரணையின் நறுமணம், சக்தியின் நறுமணம் வாயுமண்டலம் மற்றும் வைப்ரேஷனை எப்பொழுதும் சக்திசாலியாக ஆக்கி விடட்டும். டீச்சர் ஒருபொழுதும் வாயுமண்டலம் அப்படி இருக்கிறது, இவர்களின் வைப்ரேஷன்கள் காரணமாக என்னுடைய முயற்சியும் அப்படி ஆகிவிட்டது என்று ஒருபொழுதும் கூற முடியாது. டீச்சர்கள் என்றால் பரிவர்த்தனை செய்பவர்களேயன்றி சுயம் தானே பரிவர்த்தனை ஆகுபவர்கள் அல்ல. யார் பரிவர்த்தனை செய்பவர்களாக இருப்பார்களோ அவர் ஒருபொழுதும் யாருடைய பிரபாவத்தில் அவரே மாறுபவராக ஆவதில்லை. அப்படி டீச்சர்களின் விசேஷம் வாயுமண்டலத்தை சக்திசாலியாக ஆக்குவது, அவரே சக்திசாலியாகி பலஹீனமானவர்களுக்கு சக்தியின் சகயோகம் கொடுப்பது ஆகும். மனமுடைந்தவர்களின் ஊக்கம் உற்சாகத்தை அதிகரிப்பது. அப்படி நீங்கள் அந்த மாதிரியான டீச்சர்கள் தான் இல்லையா? இது தான் டீச்சர்களின் கடமை அல்லது ட்யூட்டி ஆகும். மற்றவர்களையும் சம்பன்னம் ஆக்க முடியும் அளவிற்கு தானும் சம்பன்னம் ஆகிவிட வேண்டும். ஒருவேளை ஏதாவது சக்தியின் குறை இருக்கிறது என்றால் மற்றவர்களும் அதே விஷயத்தில் பலஹீனமாக இருப்பார்கள். ஏனென்றால் பொறுப்பில் இருப்பவர்கள் இல்லையா?. டீச்சர்கள் மிக கவனமுடையவராகவும் எவரெடியாகவும் இருக்க வேண்டும். ஸ்தூல மற்றும் சூட்சும சோம்பலின் பெயர் அடையாளம் கூட இருக்க வேண்டாம். முயற்சி செய்வதற்கும் சோம்பல் இருக்கும், ஸ்தூல காரியம் செய்வதிலும் சோம்பல் இருக்கும். முயற்சி செய்வதில் மனமுடைந்து போகிறார்கள் என்றால் சோம்பல் வந்து விடுகிறது. என்ன செய்வது, இவ்வளவு தான் செய்ய முடியும், இதை விட அதிகமாக செய்ய முடியாது. தைரியம் இல்லை, செய்து கொண்டு தானே இருக்கிறோம், இந்த வாழ்க்கையில் இருந்து கொண்டு தானே இருக்கிறோம். இந்த மாதிரி மனமுடைந்து போகிறார்கள். முயற்சி செய்வதில் ஏற்படும் களைப்பு கூட சோம்பலின் அடையாளம் ஆகும். சோம்பல் உள்ளவர்கள் விரைவில் களைப்படைகிறார்கள், ஊக்கம் உள்ளவர்கள் களைப்பற்றவர்களாக இருப்பார்கள். அப்படி டீச்சர்கள் என்றால் தன்னுடைய முயற்சி செய்வதிலும் களைப்படைபவர் அல்ல, மேலும் மற்றவர்களையும் செய்யும் முயற்சியில் களைப்படைய விடுவதில்லை. அப்படி ஆல்ரவுண்டராகவும் இருங்கள். விழிப்புடனும் இருங்கள்.



    ஒவ்வொரு காரியத்திலும் சம்பன்னமாக இருக்க வேண்டும். சில நேரம் வகுப்பு எடுப்பது, உள்ளே உள்ள காரியங்களைச் செய்வது எங்களுடைய வேலை, உடலால் செய்யும் ஸ்தூல சேவை அது மற்றவர்களுடைய வேலை என்று டீச்சர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. ஸ்தூல காரியமும் உள்ளே செய்யும் காரியத்தின் பாடத்திற்குள் வருகிறது. இதுவும் படிப்பின் ஒரு பாடம் ஆகும். இதை லேசான விஷயம் என்று நினைக்காதீர்கள். ஒருவேளை உடலால் செய்யும் சேவையில் மதிப்பெண்கள் குறைந்தது என்றாலும் மதிப்புடன் தேர்ச்சி பெறுபவர் ஆக முடியாது. சமநிலை இருக்க வேண்டும். இதை சேவை என்று நினைக்காததும் தவறு ஆகும். உள்ளே செய்யும் சேவையில் இதுவும் ஒரு பாகம் ஆகும். ஒருவேளை மிக அன்போடு யோக சொரூபமானவராகி உணவை தயாரிக்கவில்லை என்றால், மனதின் மேல் அன்னத்தின் பிரபாவம் எப்படி ஏற்படும். ஸ்தூல காரியம் செய்யவில்லை என்றால் கர்மனா சேவையின் மதிப்பெண்கள் எப்படி சேமிப்பு ஆகும். அப்படி டீச்சர்கள் என்றால் பேச்சாளர் மட்டும் அல்ல, வகுப்பு எடுப்பவர் மட்டுமல்ல, 7 நாள் பாடம் எடுப்பவர் மட்டுமல்ல, எப்படி நேரமோ, எப்படி பாடமோ, அதில் அதே ஆர்வம் நிறைந்து சேவையில் வெற்றி அடைய வேண்டும். இதைத் தான் ஆல்ரவுண்டர் என்று கூறுவது. உள்ளே உள்ள காரியம் செய்பவர் இன்னொருவர், வெளியில் உள்ள காரியம் செய்பவர் இன்னொருவர் என்று அப்படி இருக்கக்கூடாது. இரண்டிற்குமே ஒன்றிற்கு ஒன்று சம்மந்தம் இருக்கிறது.



    டீச்சர்களுக்கு தியாகம் மற்றும் தபஸ்யாவோ எப்பொழுதும் நினைவில் இருக்கிறது தான் இல்லையா? எந்தவொரு நபரின் அல்லது சாதனத்தின் ஈர்ப்பிலும் வர வேண்டாம். இல்லை என்றால் இதுவும் கர்மாதீத் ஆவதில் ஒரு பந்தனம் ஆகிவிடும். அப்படி டீச்சர்கள் தன்னுடைய முயற்சி செய்வதில் தானே திருப்தியாக இருக்கிறார்களா? முன்னேறும் கலையின் அனுபவப்பூர்வமான உணருதல் ஏற்படுகிறதா? அனைவர் மீதும் நீங்கள் அனைவரும் திருப்தியாக இருக்கிறீர்களா? தன்னுடைய முயற்சி செய்வதில், சேவையில் பிறகு உடன் இருப்பவர்கள் மேல் அனைவர் மீதும் திருப்தியாக இருக்கிறீர்களா? அனைவருடைய சான்றிதழ்களும் இருக்க வேண்டும் இல்லையா? அப்படி அனைத்து சான்றிதழ்களும் இருக்கின்றனவா? என்ன நினைக்கிறீர்கள்? ஒருவேளை நீங்கள் உண்மையாகவும் மேலும் தெளிவாகவும் திருப்தியாக இருக்கிறீர்கள் என்றால் தந்தையும் திருப்தியாக இருக்கிறார். ஒன்று நான் திருப்தியாக இருக்கிறேன் என்று அப்படியே சொல்லிவிடுவது, இன்னொன்று உண்மையாகவும் தெளிவாகவும் நான் திருப்தியாக இருக்கிறேன் என்று கூறுவது. எப்பொழுதும் திருப்தியாக இருக்கிறீர்கள். இங்கே வந்திருக்கிறீர்கள், தன்னைப் பற்றியும் அல்லது சேவையைப் பற்றியும் ஏதாவது குறை இருக்கிறது என்றால் இங்கே யார் பொறுப்பாளர்களாக இருக்கிறார்களோ அவர்களோடு உங்களுடைய விஷயங்களை பரிமாற்றம் செய்யுங்கள். இன்னும் வரும் காலத்திற்காக முன்னேறும் கலையை உருவாக்கி விட்டுச் செல்லுங்கள். குறையை நிரப்புவதற்காகவும் மேலும் தன்னை லேசானவராக ஆக்குவதற்காகத்தானே வருகிறீர்கள். எந்தவொரு சின்ன விஷயமாக இருந்தாலும் எது முயற்சி செய்வதின் வேகத்தில் தடை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கிறதோ அதை அழித்துவிட்டுச் செல்லுங்கள். நல்லது.



    வரதானம் :

    மனம் - புத்தியை மனம் சொல்லும் வழியிலிருந்து விடுவித்து சூட்சும வதனத்தின் அனுபவம் செய்யக்கூடிய டபுள் லைட் ஆகுக.



    எண்ணத்தின் சக்தியை மட்டும் அதாவது மனம் மற்றும் புத்தியை எப்பொழுதும் மனம் சொல்லும் வழியிலிருந்து காலியாக வைத்தீர்கள் என்றால் இங்கே இருந்த போதும் வதனத்தின் அனைத்துக் காட்சிகளும் அந்த மாதிரி தெளிவாக அனுபவம் செய்வீர்கள், எப்படி உலகத்தின் ஏதாவதொரு காட்சி தெளிவாக தென்படுகிறதோ அப்படி. இந்த அனுபவத்திற்காக எந்தவொரு சுமையையும் தன் மேல் வைக்காதீர்கள். அனைத்து சுமையையும் தந்தைக்குக் கொடுத்து டபுள் லைட் ஆகுங்கள். மனம் - புத்தியால் எப்பொழுதும் சுத்த எண்ணம் என்ற உணவை அருந்துங்கள். ஒருபொழுதும் வீணான எண்ணம் மற்றும் தீய எண்ணத்தின் அசுத்த உணவை அருந்தாதீர்கள். பிறகு சுமையிலிருந்து லேசாகி உயர்ந்த நிலையின் அனுபவம் செய்ய முடியும்.



    சுலோகன்:

    வீணானவற்றிற்கு ஃபுல் ஸ்டாப் (முற்றுப்புள்ளி) இடுங்கள், மேலும் சுபபாவனையின் ஸ்டாக்கை ஃபுல் (முழுமையாக) ஆக்குங்கள்.



    If you like this please comment below or just say Om Shanti in comments
    *** Om Shanti ***

    No comments

    Say Om Shanti to all BKs