BK Murli 1 September 2015 In Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 1 September 2015 In Tamil

    01.09.2015    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்பொழுது உண்மையிலும் உண்மையான பாடசாலையில் அமர்ந்துள்ளீர்கள். இது சத்சங்கமும் ஆகும். இங்கு உங்களுக்கு சத்தியமான தந்தையின் (சங்) தொடர்பு கிடைத்துள்ளது. அவர் கரையேற்றி விடுகிறார்.

     

    கேள்வி:

    கணக்கு வழக்கு பற்றிய விளையாட்டில் மனிதர்களின் அறிவிற்கும் உங்களுடைய அறிவிற்குமிடையே என்ன வித்தியாசம் உள்ளது?

     

    பதில்:

    இங்கு நடக்கும் துக்கம் மற்றும் சுகத்தின் விளையாட்டில் துக்கம் மற்றும் சுகம் எல்லாமே பரமாத்மா தான் தருகிறார் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். மேலும், இது ஒவ்வொருவரின் கர்மங்களின் கணக்கினுடைய விளையாட்டு என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். தந்தை யாருக்குமே துக்கம் கொடுப்பதில்லை. அவரோ வருவதே சுகத்தின் வழியைக் கூறுவதற்காக. குழந்தைகளே, நான் யாரையுமே துக்கப்படுத்தவில்லை என்று பாபா கூறுகிறார். இது உங்களுடைய கர்மங்களின் பலனே ஆகும்.

     

    பாடல்:

    இந்த பாவங்களின் உலகத்திலிருந்து .. .. .. ..

     

    ஓம் சாந்தி.

    இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். யாரைக் கூப்பிடுகிறார்கள்? தந்தையை. பாபா வந்து இந்த பாவங்களின் கலியுக உலகத்திலிருந்து சத்யுகத்தின் புண்ணிய உலகத்திற்குக் கூட்டிச் செல்லுங்கள். இப்பொழுது ஜீவ ஆத்மாக்கள் அனைவருமே கலியுகத்தினர் ஆவார்கள். அவர்களுடைய புத்தி மேலே செல்கிறது. நான் யாராக இருக்கிறேன், எப்படி இருக்கிறேன் என்பதை யாருமே அறியாமல் இருக்கிறார்கள். ரிஷி முனிவர்கள் ஆகியோர் கூட நாங்கள் படைப்பவரான எஜமானர் அதாவது எல்லையில்லாத தந்தை மற்றும் அவரது எல்லையில்லாத படைப்பின் முதல் இடை கடையை அறியவில்லை என்று கூறுகிறார்கள். ஆத்மாக்கள் இருக்கும் இடம் பிரம்ம மகதத்துவம் ஆகும். அங்கு சூரியன் சந்திரன் இருப்பதில்லை. மூலவதனத்திலும் இருப்பதில்லை. சூட்சுமவதனத்திலும் இருப்பதில்லை. மற்றபடி இந்த மேடையிலோ மின்சார விளக்குகள் ஆகியவை எல்லாமே வேண்டும் அல்லவா? எனவே இந்த மேடைக்கு ஒளி கிடைக்கிறது - இரவில் சந்திரன் மற்றும் நாட்சத்திரங்கள். பகலில் சூரியன். இவை விளக்குகள் ஆகும். இந்த விளக்குகள் இருக்கும் பொழுது கூட இருள் என்று கூறப்படுகிறது. இரவில் பிறகும் விளக்கு ஏற்ற வேண்டி வருகிறது. சத்யுகம் திரேதாவிற்கு பகல் என்று கூறப்படுகிறது. மேலும் பக்தி மார்க்கத்திற்கு இரவு என்று கூறப்படுகிறது. இது கூட புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். புதிய உலகமே பிறகு பழையதாக நிச்சயம் ஆகி விடும். பிறகு புதியதாக ஆகி விடும் பொழுது பழைய உலகம் விநாசம் ஏற்படும். இது எல்லையில்லாத உலகம் ஆகும். ராஜாக்கள் ஆகியோருடைய வீடுகள் கூட ஒரு சிலது மிகவும் பெரிய பெரியதாக இருக்கும். இது எல்லையில்லாத வீடு. மேடை அல்லது ஸ்டேஜ் - இதற்கு கர்ம க்ஷேத்திரம் என்றும் கூறப்படுகிறது. கர்மமோ அவசியம் செய்ய வேண்டி உள்ளது. எல்லா மனிதர்களுக்காகவும் இந்த கர்மக்ஷேத்திரம் உள்ளது. எல்லோரும் கர்மங்கள் செய்தே ஆக வேண்டும். பாகத்தை நடித்தே ஆக வேண்டும். பாகம் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் முன் கூட்டியே கிடைத்துள்ளது. உங்களிலும் கூட ஒரு சிலர் இந்த விஷயங்களை நல்ல முறையில் புரிந்துக் கொள்ள கூடியவர்களாக இருக்கிறார்கள். உண்மையில் இது கீதா பாடசாலை ஆகும். பாடசாலையில் எப்பொழுதாவது முதியவர்கள் படிக்கிறார்களா என்ன? இங்கோ முதியவர்கள், இளைஞர்கள் ஆகியோர் எல்லோருமே படிக்கிறார்கள். வேதங்களின் பாடசாலை என்று கூறமாட்டார்கள். அங்கு எந்த ஒரு (ஏம் ஆப்ஜெக்ட்) லட்சியம் நோக்கமும் இருப்பதில்லை. இப்பொழுதோ அவற்றை சத்சங்கம் என்று கூறுவதற்கு வெட்கம் ஏற்படுகிறது. சத்தியமானவரோ ஒரு தந்தை மட்டுமே ஆவார். அவருக்காகத் தான் நல்ல சகவாசம் உயர்த்தும் தீய தொடர்பு வீழ்த்தும்.. என்று கூறப்படுகிறது. கலியுக மனிதர்களினுடையது தீய தொடர்பு ஆகும். சத்தியத்தின் தொடர்போ ஒன்று தான் ஆகும். இப்பொழுது உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. எப்படி தந்தை வந்து முழு சிருஷ்டியினுடைய (படைப்பு) முதல் இடை கடை பற்றிய ஞானத்தை அளிக்கிறார். உங்களுக்கோ குஷி இருக்க வேண்டும். நீங்கள் உண்மையிலும் உண்மையான பாடசாலையில் அமர்ந்துள்ளீர்கள். மற்றது அனைத்துமே பொய்யான பாடசாலைகள்! அந்த சத்சங்கங்கள் ஆகியவற்றில் எதுவுமே அடைந்து வெளி வருவதில்லை. பள்ளிக் கூடங்கள் மற்றும் கல்லூரிகள் ஆகிய இடங்களிலிருந்தோ ஏதாவது பட்டம் பெற்று வருகிறார்கள். ஏனென்றால் படிக்கிறார்கள். மற்றது எங்குமே படிப்பு கிடையாது. சத்சங்கத்தை படிப்பு என்று கூற மாட்டார்கள். சாஸ்திரங்கள் ஆகியவற்றைப் படித்து விட்டு பிறகும் கடைகளைத் திறந்து உட்கார்ந்து கொள்கிறார்கள். பணம் சம்பாதிக்கிறார்கள். சிறிது கிரந்தத்தைக் கற்றுக் கொண்டு குருதுவாரா திறந்து அமர்ந்து விடுகிறார்கள். குரு துவாராக்களும் எவ்வளவு திறக்கிறார்கள். குருவினுடைய துவாரம் அதாவது வீடு என்று கூறுவார்கள் அல்லவா? கதவு திறக்கிறது. அங்கு போய் சாஸ்திரங்கள் ஆகியவை படிக்கிறார்கள். உங்களுடைய குரு துவாரா முக்தி மற்றும் ஜீவன் முத்தி தாமம், சத்குரு துவாரா ஆகும். சத்குருவினுடைய பெயர் என்ன? அகால மூரத். சத்குருவிற்கு அகால மூரத் என்று கூறுகிறார்கள். அவர் வந்து முக்தி ஜீவன் முக்திக்கான வாசலைத் திறக்கிறார். அகால மூர்த்தி ஆவார் அல்லவா? அவரை காலன் கூட சாப்பிட முடியாது (எமன் உயிரை குடிக்க முடியாது). ஆத்மா இருப்பதே (பிந்து) புள்ளியாக. அதை எப்படி காலன் சாப்பிட முடியும்? அந்த ஆத்மாவோ சரீரத்தை விட்டு விட்டு ஓடி விடுகிறது. ஆத்மா ஒரு பழைய சரீரத்தை விட்டுப் போய் மற்றொன்றை எடுக்கிறது என்பதை மனிதர்கள் புரிந்து கொள்கிறார்களா என்ன? பிறகு இதில் அழ வேண்டிய அவசியம் என்ன? நாடகம் அனாதியாக அமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஒவ்வொருவரும் அவரவர் பாகத்தை நடிக்கவே வேண்டி உள்ளது. சத்யுகத்தில் (நஷ்டோ மோகா) மோகத்தை நீக்கியவர்களாக இருப்பார்கள் என்பதை தந்தை புரிய வைத்துள்ளார். மோகஜீத் மோகத்தை வென்றவருடைய கதை கூட உள்ளது அல்லவா? பண்டிதர்கள் கூறுகிறார்கள். தாய்மார்கள் கூட கேட்டு கேட்டு கிரந்தத்தை வைத்து கூறுவதற்காக அமர்ந்து விடுகிறார்கள். நிறைய மனிதர்கள் போய் கேட்கிறார்கள். அது காதிற்கு இனிமை என்று கூறப்படுகிறது. நாடக திட்டப்படி மனிதர்களோ எங்களுடைய தோஷம் என்ன என்று கூறுவார்கள். துக்கத்தின் உலகத்திலிருந்து கூட்டிச் செல்லுங்கள் என்று நீங்கள் என்னை அழைக்கிறீர்கள் என்று தந்தை கூறுகிறார். இப்பொழுது நான் வந்திருக்கிறேன் என்றால் நான் கூறுவதைக் கேட்க வேண்டும் அல்லவா? தந்தை குழந்தைகளுக்கு வந்து புரிய வைக்கிறார். நல்ல வழி கிடைக்கிறது என்றால் அதைப் பெற வேண்டும் அல்லவா? உங்களுடையதும் எந்த தோஷமும் (குற்றம்) கிடையாது. இதுவும் நாடகத்தில் இருந்தது. இராமராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யத்தின் விளையாட்டு அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் யாராவது தோற்றுவிடுகிறார்கள் என்றால் அவர்களுடைய குற்றமா என்ன? வெற்றி மற்றும் தோல்வி ஏற்படுகிறது. இதில் சண்டையின் விஷயம் கிடையாது. உங்களுக்கு அரசாட்சி இருந்தது. இது கூட இதற்கு முன்னால் உங்களுக்குத் தெரியாமல் இருந்தது. இப்பொழுது யாரெல்லாம் சேவை செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்களோ, யாருடைய பெயர் பிரசித்தமாக உள்ளதோ அவர்கள் புரிந்திருப்பார்கள். டில்லியில் எல்லோரையும் விட பிரசித்தமானவர் புரிய வைப்பவர் யார் என்று கேட்டால் உடனே ஜகதீஷ் சகோதரரின் பெயர் கூறுவார்கள். உங்களுக்காக பத்திரிக்கைகள் கூட வெளியிடுகிறார்கள். அதில் எல்லாமே வந்து விடுகிறது. அநேகவிதமான குறிப்புக்கள் எழுதுகிறார்கள். ப்ரிஜ்மோகன் கூட எழுதுகிறார். எழுதுவது என்பது அவ்வளவு (சித்தி வீடு போல) சுலபமா என்ன? அவசியம் சிந்தனைக் கடலைக் கடைகிறார்கள். நன்றாக சேவை செய்கிறார்கள். எவ்வளவு பேர் படித்து குஷி அடைகிறார்கள். குழந்தைகளுக்குக் கூட புத்துணர்வு (ரிஃப்ரெஷ்மெண்ட்) கிடைக்கிறது. ஒரு சிலர் கண்காட்சியில் நிறைய உழைக்கிறார்கள். ஒரு சிலர் கர்மபந்தனத்தில் சிக்கி இருக்கிறார்கள். எனவே அந்த அளவு எடுக்க முடியாமல் இருக்கிறார்கள். இதையும் டிராமா என்றே கூற வேண்டும். அபலைகள் மீதும் கொடுமை ஏற்படுவதற்கான பாகம் நாடகத்தில் உள்ளது. இப்பேர்ப்பட்ட பாகத்தை ஏன் நடித்தார்கள் என்ற கேள்வியே எழுவதில்லை. இதுவோ அனாதி? ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள நாடகம் ஆகும். அதை ஏதாவது செய்ய முடியுமா என்ன? நாம் என்ன குற்றம் செய்தோம் என்பதற்காக இப்பேர்ப்பட்ட பாகம் வைத்திருக்கிறார் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். இப்பொழுது குற்றம் என்ற விஷயமே கிடையாது. இதுவோ பார்ட் (பாகம்) ஆகும். அபலைகள் யாராவது கொடுமைப்படுத்தப் படுவதற்கு நிமித்தமாக (கருவி) ஆகிறார்கள் தான். அப்படியானல் பிறகு எங்களுக்கு இந்த பாகம் ஏன் என்று எல்லோருமே கூறுவார்களே? இல்லை. இது அமைந்த, அமைந்துள்ள நாடகம் ஆகும். ஆண்கள் மீது கூட கொடுமை நடக்கிறது. இந்த விஷயங்களில் எவ்வளவு சகிப்புத் தன்மை கொள்ள வேண்டி இருக்கிறது. மிகவுமே சகிப்புத்தன்மை வேண்டும். மாயையின் தடைகளோ நிறைய ஏற்படும். உலக அரசாட்சி பெறுகிறீர்கள் என்றால் சிறிதளவாவது உழைப்பு செய்ய வேண்டி இருக்கும். நாடகத்தில் ஆபத்துக்கள், பூசல்கள் ஆகியவை எவ்வளவு இருக்கிறது. அபலைகள் மீது கொடுமை எழுதப்பட்டுள்ளது. ரத்த ஆறுகள் கூட ஓடும். எங்குமே பாதுகாப்பு இருக்காது. இப்பொழுதோ சென்டர்களில் காலையில் வகுப்பு ஆகியவைகளுக்குச் செல்கிறீர்கள். நீங்கள் வெளியில் போகவே முடியாமல் போய் விடும் வகையில் அந்த நேரம் கூட வரும். நாளுக்கு நாள் காலம் கெட்டுக் கொண்டே போகிறது. மேலும் கெடப் போகிறது. துக்கத்தின் நாட்கள் மிகவுமே பலமாக வரும். நோய்கள் வந்து துக்கம் ஏற்படும் பொழுது பின்னர் பகவானை நினைவு செய்கிறார்கள் மற்றும் அழைக்கிறார்கள். இப்பொழுது இன்னும் கொஞ்சம் நாட்கள் தான் மீதம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். பிறகு நாம் நம்முடைய சாந்திதாமம், சுகதாமத்திற்கு அவசியம் செல்வோம். உலகத்திற்கோ இது கூட தெரியாது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் அல்லவா? இப்பொழுது தந்தையை முழுமையான வகையில் அறிந்துள்ளீர்கள். அவர்கள் அனைவருமோ பரமாத்மா -ங்கம் ஆகும் என்று நினைக்கிறார்கள். சிவலிங்கத்திற்கு பூஜையும் செய்கிறார்கள். நீங்கள் சிவனின் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தீர்கள். சிவலிங்கம் என்பது என்ன பொருள் என்று எப்பொழுதாவது சிந்தனை செய்தீர்களா? அவசியம் இது ஜடமானது என்றால் உயிரூட்டமுடையது (சைதன்யமானது) கூட இருக்கும் தானே! அப்படியானால் இது என்ன? பகவானோ படைப்புகர்த்தா மேலே இருப்பவர். பூஜைக்காக மட்டுமே அவருடைய அடையாளம் இருக்கிறது. பூஜைக்குரியவர்களாக ஆகிவிடும் பொழுது பிறகு இந்த பொருட்கள் இருக்காது. சிவகாசியின் கோவிலுக்கு செல்கிறார்கள். பகவான் நிராகாரமானவர் ஆவார் என்பது யாருக்காவது தெரியுமா என்ன? நாம் கூட அவரது குழந்தைகள் ஆவோம். தந்தையின் குழந்தைகளாக ஆன பிறகு நாம் ஏன் துக்கமுற்று இருக்கிறோம்? சிந்திக்க வேண்டிய விஷயம் ஆகும் அல்லவா? நாம் பரமாத்மாவின் குழந்தைகள் ஆவோம் என்று ஆத்மா கூறுகிறது. பிறகு நாம் ஏன் துக்கமுற்று இருக்கிறோம். தந்தையோ சுகம் அளிப்பவராகவே இருக்கிறார். ஹே பகவான், எங்களுடைய துக்கத்தை நீக்குங்கள் என்று அழைக்கவும் செய்கிறார்கள். அவர் எப்படி நீக்குவார்? துக்கம், சுகம் இதுவோ தங்களுடைய கர்மங்களின் கணக்கு ஆகும். மனிதர்கள் சுகத்திற்குப் பதிலாக சுகம், துக்கத்திற்குப் பதிலாக துக்கம் பரமாத்மா தான் கொடுக்கிறார் என்று நினைக்கிறார்கள். அவர் மீது சுமத்தி விடுகிறார்கள். நான் ஒரு பொழுதும் துக்கம் கொடுப்பதில்லை என்று தந்தை கூறுகிறார். நானோ அரைகல்பத்திற்கு சுகம் அளித்து விட்டுச் செல்கிறேன். இது பிறகு சுகம் மற்றும் துக்கத்தின் விளையாட்டாகும். சுகத்தின் விளையாட்டு மட்டுமே இருந்திருந்தால் பிறகு இந்த பக்தி ஆகியவை எதுவுமே இருக்காது. பகவானை அடைவதற்காகத் தானே இந்த பக்தி ஆகியவை எல்லாமே செய்கிறார்கள் இல்லையா? இப்பொழுது தந்தை வந்து முழு செய்தியைக் கூறுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என்று தந்தை கூறுகிறார். அந்த ரிஷி முனிவர்கள் ஆகியோருக்கு எவ்வளவு பெயர் இருக்கிறது. நீங்கள் ராஜரிஷி ஆவீர்கள்.அவர்கள் ஹடயோக ரிஷி ஆவார்கள். ரிஷி என்றால் தூய்மையானவர்கள். நீங்கள் சொர்க்கத்தின் ராஜா ஆகிறீர்கள் என்றால் அவசியம் தூய்மை ஆக வேண்டி இருக்கும். சத்யுக திரேதாவில் யாருடைய ராஜ்யம் இருந்ததோ அவர்களுடையதே மீண்டும் ஏற்படும். மற்றவர்கள் எல்லோரும் பின்னால் வருவார்கள். நாங்கள் ஸ்ரீமத்படி நமது ராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் இப்பொழுது கூறுகிறீர்கள். பழைய உலகத்தின் அழிவு ஏற்படுவதில் கூட நேரமோ பிடிக்கும் அல்லவா? சத்யுகம் வர வேண்டி உள்ளது. கலியுகம் போக வேண்டி உள்ளது.

     

    எவ்வளவு பெரிய உலகம் இது. ஒவ்வொரு நகரமும் மனிதர்களால் எவ்வளவு நிரம்பி உள்ளது. பணக்கார மனிதர்கள் உலகத்தைச் சுற்றி வருகிறார்கள். ஆனால் இங்கு முழு உலகத்தை யாராலும் பார்க்க முடியாது. ஆம். சத்யுகத்தை பார்க்க முடியும். ஏனெனில் சத்யுகத்தில் இருப்பதே ஒரு ராஜ்யம். இத்தனை ராஜாக்கள் இருப்பார்களா என்ன? இங்கோ பாருங்கள், எவ்வளவு பெரிய உலகம்! இவ்வளவு பெரிய உலகத்தை யார் சுற்றி வருவார்கள்?அங்கு நீங்கள் சமுத்திரத்தில் செல்ல வேண்டி இருக்காது. அங்கு சிலோன், பர்மா ஆகியவை இருக்குமா? இல்லை. எதுவுமே இருக்காது. இந்த கராச்சி இருக்காது. நீங்கள் எல்லோரும் இனிமையான நதிகளின் கரையில் இருப்பீர்கள். பயிர்த் தொழில் விவசாயம் ஆகியவை எல்லாமே இருக்கும். சிருஷ்டியோ பெரியது! மனிதர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள். பிறகு பின்னால் விருத்தி ஆகிறது. பிறகு அங்கு போய் தங்களது ராஜ்யத்தை ஸ்தாபனை செய்தார்கள். மெல்ல மெல்ல கைப்பற்றி கொண்டே சென்றார்கள். தங்களுடைய ராஜ்யத்தை ஸ்தாபனை செய்து விட்டார்கள். இப்பொழுதோ எல்லாவற்றையும் விட வேண்டி இருக்கிறது. ஒரே ஒரு பாரதம் மட்டும் தான் யாருடைய ராஜ்யத்தையும் பறிக்கவே இல்லை. ஏனெனில் பாரதம் உண்மையில் அஹிம்சகர் ஆகும் அல்லவா? பாரதம் தான் முழு உலகத்திற்கு அதிபதியாக இருந்தது. மற்ற எல்லோரும் பின்னால் வந்துள்ளார்கள். பிறகு துண்டு துண்டாக ஆக்கி எடுத்து சென்றுள்ளார்கள். நீங்கள் யாருடையதையுமே கைப்பற்றவில்லை. ஆங்கிலேயர்கள் கைப்பற்றி இருக்கிறார்கள். பாரதவாசிகளாகிய உங்களையோ தந்தை உலகிற்கு அதிபதி ஆக்குகிறார். நீங்கள் எங்காவது சென்றிருக்கிறீர்களா என்ன? குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இந்த எல்லா விஷயங்களும் இருக்கின்றது. முதிய தாய்மார்களோ இந்த அளவிற்கு எல்லாமே புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் எதுவுமே படிக்கவில்லை, நல்லது என்று தந்தை கூறுகிறார். ஏற்கனவே படித்திருக்கும் அனைத்தையும் புத்தியிலிருந்து நீக்க வேண்டி உள்ளது. இனிமையான குழந்தைகளே! தந்தையை நினைவு செய்யுங்கள் என்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே தாரணை செய்ய வேண்டும். பாபா நீங்கள் வந்தீர்கள் என்றால் நாங்கள் சமர்ப்பணம் ஆகிடுவோம், பலி ஆகிடுவோம் என்று நீங்கள் கூறிக் கொண்டும் இருந்தீர்கள். நீங்கள் பிறகு எங்கள் மீது சமர்ப்பணம் ஆக வேண்டும். கொடுக்கல் வாங்கல் ஆகிறது அல்லவா? திருமணத்தின் பொழுது ஆண் பெண் இருவரும் ஒருவர் மற்றவர் கையில் உப்பு கொடுக்கிறார்கள். தந்தையிடம் கூட கூறுகிறார்கள், நாங்கள் பழையது அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கிறோம். சாகவோ வேண்டியுள்ளது. இவை எல்லாமே அழியப் போகிறது. நீங்கள் எங்களுக்கு பிறகு புதிய உலகத்தில் கொடுங்கள். தந்தை வருவதே அனைவரையும் அழைத்துச் செல்ல. காலன் ஆவார் அல்லவா? சிந்து தேசத்தில் கூறிக் கொண்டிருந்தார்கள் - அனைவரையும் விரட்டிக் கூட்டிச் செல்லும் இந்த எமன் யார்? குழந்தைகளாகிய நீங்கள் குஷி அடைகிறீர்கள். தந்தை வருவதே அழைத்து செல்ல. நாமோ குஷியுடன் நமது வீட்டிற்குச் செல்வோம். சகிக்க வேண்டியும் வருகிறது. நல்ல நல்ல பெரிய பெரிய வீடுகளில் இருக்கும் தாய்மார்கள் அடி வாங்குகிறார்கள். நீங்கள் உண்மையான சம்பாத்தியம் செய்கிறீர்கள். மனிதர்கள் அறிந்திருக்கிறார்களா என்ன? அவர்கள் இருப்பதே கலியுகத்தில் சூத்திர சம்பிரதாயத்தினராக. நீங்கள் சங்கமயுகத்தினர் ஆவீர்கள். புருஷோத்த மராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். முதல் நம்பரில் புருஷோத்தமர் இந்த லட்சுமி நாராயணர் ஆவார்கள் அல்லவா என்று அறிந்துள்ளீர்கள். பிறகு கலைகள் (டிகிரி) குறைந்து கொண்டே போகும். மேலிருந்து கீழே வந்து கொண்டே இருப்பார்கள். பிறகு மெது மெதுவாக விழுந்து கொண்டே இருப்பார்கள். இச்சமயத்தில் எல்லோருமே விழுந்து விட்டுள்ளார்கள். விருட்சம் பழையதாக ஆகி விட்டுள்ளது. அடிமரம் அழுகி விட்டுள்ளது. இப்பொழுது மீண்டும் ஸ்தாபனை ஆகிறது. (ஃபவுண்டேஷன்) அடிக்கல் இடப்படுகிறது அல்லவா? நாற்று எவ்வளவு சிறியதாக இருக்கிறது. பிறகு அதிலிருந்து எவ்வளவு பெரிய விருட்சம் வளர்ந்து விடுகிறது. இதுவும் விருட்சம் ஆகும். சத்யுகத்தில் மிகவும் சிறிய செடியாக இருக்கும். இப்பொழுது எவ்வளவு பெரிய மரமாக உள்ளது. மனித சிருஷ்டியின் விதவிதமான மலர்கள் எவ்வளவு உள்ளன? ஒரே ஒரு மரத்தில் எவ்வளவு விதங்கள் உள்ளன. அநேக தர்மங்களைச் சேர்ந்த மனிதர்களின் விருட்சமாகும். ஒருவரது தோற்றம் போல மற்றவரது இருக்காது. அமைந்த, அமைக்கப்பட்டுள்ள நாடகமாகும் அல்லவா? ஒன்று போல பார்ட் யாருக்குமே இருக்க முடியாது. இதற்கு இயற்கையான அமைந்த அமைக்கப்பட்ட எல்லையில்லாத நாடகம் என்று கூறப்படுகிறது. இதில் கூட செயற்கை நிறைய இருக்கிறது. எந்த பொருள் உண்மையானதாக இருக்கிறதோ அது முடிந்தும் போய் விடுகிறது. பிறகு 5 ஆயிரம் வருடங்களுக்கு பிறகு (ரியல்ட்டி) உண்மையில் வரும். படங்கள் ஆகியவை கூட உண்மையாக அமைக்கப்பட்டவையா என்ன? பிரம்மாவின் முகம் கூட 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு நீங்கள் பார்ப்பீர்கள். இந்த நாடகத்தின் ரகசியத்தைப் புரிந்து கொள்வதில் மிகவும் விசாலமான புத்தி வேண்டும். வேறு எதுவுமே புரியவில்லை என்றால், ஒரு சிவபாபா வேறு யாருமில்லை என்ற ஒரு விஷயத்தை மட்டும் புத்தியில் வையுங்கள். பாபா, நாங்கள் உங்களை மட்டும் நினைவு செய்வோம் என்று கூறியது ஆத்மா ஆகும். இது சுலபம் தானே? கைகளால் கர்மங்களைச் செய்து கொண்டே இருங்கள். மேலும் புத்தியினால் தந்தையை நினைவு செய்து கொண்டே இருங்கள். நல்லது.

     

    இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

     

    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1. சகிப்பு தன்மையின் குணத்தை தாரணை செய்து மாயையின் தடைகளை வெற்றியுடன் கடந்து செல்ல வேண்டும். அநேக ஆபத்துக்கள் வரும். கொடுமைகள் நடக்கும் - அப்பேர்ப்பட்ட நேரத்தில் சகித்துக் கொண்டு தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். உண்மையான சம்பாத்தியம் செய்ய வேண்டும்.

     

    2. (விசால) பரந்த புத்தி உடையவராக ஆகி ஏற்கனவே இந்த அமைந்த அமைக்கப்பட்டுள்ள நாடகத்தை நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாடகம் இயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே கேள்விகள் எழ முடியாது. தந்தை அளிக்கும் நல்ல வழிப்படி நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

     

    வரதானம்:

    விசேஷத் தன்மை என்ற சஞ்ஜீவினி மூலிகை மூலமாக மூர்ச்சை அடைந்தவர்களை உயிர்த்தெழச் செய்யக் கூடிய விசேஷ ஆத்மா ஆவீர்களாக.

     

    ஒவ்வொரு ஆத்மாவிற்கும் சிரேஷ்ட ஸ்மிருதியின் விசேஷத் தன்மைகளின் நினைவு (ஸ்மிருதி) என்ற சஞ்ஜீவினி மூலிகையை ஊட்டுங்கள். அப்பொழுது அவர்கள் மூர்ச்சையிலிருந்து மூர்ச்சை தெளிந்தவர்களாக ஆகி விடுவார்கள். விசேஷ தன்மைகளின் சொரூபம் என்ற கண்ணாடியை அவருக்கு முன்னால் வையுங்கள். மற்றவர்களுக்கு நினைவூட்டுவதால் நீங்கள் விசேஷ ஆத்மாவாக ஆகியே விடுவீர்கள். ஒரு வேளை நீங்கள் யாருக்காவது அவரது பலவீனத்தைப் பற்றிக் கூறினீர்கள் என்றால் அவர்கள் மறைப்பார்கள், தட்டிக் கழிப்பார்கள். நீங்கள் விசேஷத் தன்மைப் பற்றி கூறினீர்கள் என்றால் சுயம் தாங்களே தங்களது பலவீனத்தைத் தெளிவாக அனுபவம் செய்வார்கள். இதே சஞ்ஜீவினி மூலிகை மூலமாக மூர்ச்சை அடைந்தவர்களை உயிர்த்தெழச் செய்து பறந்து கொண்டே செல்லுங்கள் மற்றும் பறக்க வைத்துக் கொண்டே செல்லுங்கள்.

     

    சுலோகன்:

    பெயர், மதிப்பு, புகழ் மற்றும் சாதனங்களை எண்ணத்தளவிலும் செய்யும் தியாகமே மகா தியாகமாகும்.

     

    ***ஓம் சாந்தி***