BK Murli 31 January 2016 In Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 31 January 2016 In Tamil

    31.01.2016  காலை முரளி         ஓம் சாந்தி       ''அவ்யக்த பாப்தாதா''
    ரிவைஸ் 17.03.1981  மதுபன்


    '' இந்த சகஜ மார்க்கத்தில் கஷ்டம் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் நிவாரணம் ''



    இன்று விசேஷமாக இரட்டை வெளிநாட்டு குழந்தைகளை சந்திப்பதற்காக வந்திருக்கிறோம். இரட்டை வெளிநாட்டினர் இரட்டை பாக்கியசாலிகள். ஏன்? ஒன்று பாப்தாதாவை தெரிந்து கொண்டார்கள் மற்றும் ஆஸ்தியின் அதிகாரி ஆகியிருக்கிறார்கள். இரண்டாவது, இறுதியில் வந்தும் மிக வேகமாக முன்னேறி முதலில் வருவதற்கான மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள். இறுதியில் வந்திருப்பவர்கள் சில காரணங்களினால் பாக்கியசாலிகள் தான், ஏனென்றால் அனைத்தும் தயாராகி இருக்கும் நிலையில் வந்திருக்கிறார்கள். முதலில் வந்திருந்த குழந்தைகளோ சிந்தனை செய்தார்கள், கடுமையாக உழைத்தார்கள், வெண்ணை திரட்டினார்கள். மேலும் நீங்கள் அனைவரும் வெண்ணையை உண்பதற்கு சரியான நேரத்தில் வந்திருக்கிறீர்கள். உங்களை பொறுத்தளவில் மிக மிக சுலபமாகும். ஏனென்றால் முதலில் வந்த குழந்தைகள் மார்க்கத்தை தயார் செய்து அனுபவி ஆகிவிட்டார்கள். மேலும் நீங்கள் அனைவரும் அந்த அனுபவிகளின் சகயோகத்தினால் சுலபமாகவே லட்சியத்தை வந்தடைந்து விட்டீர்கள். அப்படி இரட்டை பாக்கியம் நிறைந்தவர்கள் தான் இல்லையா. இரட்டை பாக்கியமோ நாடகத்தின் அனுசாரம் கிடைத்தே இருக்கிறது. இப்பொழுது இன்னும் என்ன செய்ய வேண்டும்?



    எப்படி அனுபவம் நிறைந்த மகாரதிகள் பொறுப்பிலிருக்கும் ஆத்மாக்கள் உங்கள் அனைவரின் அனுபவங்கள் மூலமாக சேவை செய்திருக்கிறார்கள். அதே போல் நீங்கள் அனைவரும் தங்களது அனுபவங்களின் ஆதாரத்தினால் அனேகர்களை அனுபவி ஆக்க வேண்டும். அனுபவத்தைக் கூறுவது அனைத்தையும் விட சுலபமானது. என்னென்ன ஞானத்தின் துளிகள் இருக்கின்றனவோ அவை துளிகள் இல்லை. ஆனால் ஒவ்வொரு துளியின் அனுபவம் இருக்கிறது. அப்படி ஒவ்வொரு ஞானத்துளியின் அனுபவத்தைக் கூறுவது எவ்வளவு சுலபம். அந்த அளவு சுலபமாக அனுபவம் செய்கிறீர்களா? அல்லது கடினமாக இருக்கிறதா? ஒன்று அனுபவத்தின் ஆதாரத்தின் காரணமாக சுலபமாக இருக்கிறது, இன்னொரு விஷயம் - தொடக்கத்தில் இருந்து இறுதி வரைக்குமான ஞானத்தை பாப்தாதா ஒரு கதையின் ரூபத்தில் கூறுகிறார். அப்படி கதை கூறுவது மற்றும் கேட்பது மிக சுலபமாக இருக்கும். மூன்றாவது விஷயம் - தந்தை இப்பொழுது என்ன கூறிக்கொண்டிருக்கிறாரோ அதை நீங்கள் அனைத்து ஆத்மாக்களும் முதல் தடவை கேட்கவில்லை. ஆனால் அனேக தடவைகள் கேட்டிருக்கிறீர்கள். மேலும் இப்பொழுது அதை திருப்பிச் செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்படி எந்தவொரு விஷயத்தையும் அதே போல் மீண்டும் செய்வது, கேட்பது அல்லது சொல்வது மிக சுலபமாக இருக்கும். புதிய விஷயம் கடினமாக இருக்கும். ஆனால் அனேக தடவைகள் கேட்டிருக்கும் விஷயங்களை மீண்டும் அப்படியே செய்வது மிக சுலபமானதாக இருக்கும். நினைவை பாருங்கள் - எவ்வளவு அன்பானது மற்றும் நெருக்கமான சம்மந்தத்தின் நினைவாக இருக்கிறது. நெருக்கமான சம்மந்தத்தை நினைவு செய்வது கடினமாக இருக்காது, விரும்பாவிட்டாலும் கூட அவருடைய நினைவு வந்து கொண்டே இருக்கும். மேலும் பிராப்தியை பாருங்கள், பிராப்தியின் ஆதாரத்தினால் கூட நினைவு செய்வது மிக சுலபமாகும். ஞானமும் மிக சுலபம் மற்றும் நினைவும் மிக சுலபம். மேலும் இப்பொழுதோ ஞானம் மற்றும் யோகா காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் உங்களுக்காக ஞான மழை 7 நாட்களிலேயே முடிவடைந்து விடுகிறது. மேலும் யோகா முகாம் 3 நாட்களிலேயே முடிவடைந்து விடுகிறது. அப்படி கடலை ஒரு சிறிய தண்ணீர் பாத்திரத்தில் நிரப்பி விட்டீர்கள். கடலைத் தூக்குவது கடினம் ஆகும். சிறிய தண்ணீர் பாத்திரத்தைத் தூக்குவது கடினம் இல்லை. உங்களுக்கோ கடலை தண்ணீர் பாத்திரத்தில் நிரப்பி, சிறிய பாத்திரத்தை மட்டும் கொடுத்திருக்கிறோம், அவ்வளவு தான் ! 'நீங்கள் மற்றும் தந்தை' என்ற இரண்டு வார்த்தைகளில் ஞானம் மற்றும் யோகா வந்து விடுகிறது. அப்படி நினைவும் வந்து விட்டது மற்றும் ஞானமும் வந்து விட்டது. அப்படி இரண்டு வார்த்தைகளை தாரணை செய்வது எவ்வளவு சுலபம். எனவே தான் உங்களுடைய பட்டமே சகஜ இராஜயோகி ஆகும். எப்படி பெயரோ அப்படியே அனுபவம் செய்கிறீர்களா? இதை விட வேறு ஏதாவது சகஜமாக இருக்க முடியுமா என்ன? பொதுவாகவே ஏன் கடினமாக ஆகிறது. அதற்கான காரணம் தன்னுடைய பலஹீனமே ஆகும். ஏதாவது பழைய சம்ஸ்காரம் சுலபமான மார்க்கத்தின் இடையில் பந்தனமாக உருவாகி தடை ஏற்படுத்துகிறது, மேலும் சக்தி இல்லாத காரணத்தினால் கல்லை உடைக்கத் தொடங்குகிறார்கள். மேலும் உடைத்து உடைத்து மனமுடைந்துப் சோர்ந்து போகிறார்கள். ஆனால் சுலபமான வழி எது? கல்லை உடைக்க கூடாது, ஆனால் அதைத் தாண்டி கடந்து சென்று விட வேண்டும். இது ஏன் நடந்தது? இது நடக்கக்கூடாது. இறுதியில் இது எதுவரையிலும் இருக்கும்? இதுவோ மிகக் கடினம் அப்படி ஏன் நடக்கிறது? இந்த வீணான எண்ணம் கல்லை உடைப்பதாகும். ஆனால் ஒரே ஒரு வார்த்தை 'நாடகம்' நினைவு வந்து விட்டது என்றால் ஒரு டிராமா என்ற வார்த்தையின் ஆதாரத்தினால் உயரம் தாண்டுதல் செய்து விடுகிறார்கள். அதில் எத்தனை நாட்கள் மற்றும் மாதங்கள் ஆனதோ..... ஆனால் இதிலோ ஒரு விநாடி தான் எடுக்கிறது. அப்படி ஞானத்தில் பலஹீனம் தன்னுடையதாக இருந்தது இல்லையா ?



    தேவையான நேரத்தில் அந்த ஞானத்துளி புத்தியில் வருவதில்லை. அதே போல் அனேக துளிகள் புத்தியிலும் நோட்டு புத்தகங்களிலும் நிறைந்திருக்கின்றன. ஆனால் நேரம் என்ற நோட்டுப் புத்தகத்தில் அந்த நேரம், அந்த ஞானத்துளி தென்படுவதில்லை. இதற்காக எப்பொழுதும் ஞானத்தின் முக்கியமான துளிகளை தினசரி மீண்டும் மீண்டும் படித்து நினைவு செய்யுங்கள். அனுபவத்தில் கொண்டு வந்து கொண்டே இருங்கள், சோதனை செய்து கொண்டே இருங்கள். மேலும் தன்னை சோதனை செய்து மாற்றம் செய்து கொண்டே இருங்கள். பிறகு ஒரு பொழுதும் நேரம் வீணாகச் செல்லாது. ன்னும் வரும் நாட்களிலேயே மிகுந்த அனுபவம் செய்வீர்கள். எப்பொழுதுமே தன்னை மாஸ்டர் சர்வ சக்திவான் என்று அனுபவம் செய்வீர்கள் புரிந்ததா? இப்பொழுது ஒருபொழுதும் வீணான எண்ணங்கள் என்ற சுத்தியலினால் பிரச்சனைகள் என்ற கல்லை உடைப்பதில் ஈடுபடாதீர்கள். இப்பொழுது இந்த கூலி வேலை செய்வதை விடுங்கள், மகாராஜா ஆகுங்கள். கவலையில்லா ஊரின் மகாராஜா ஆவீர்கள், எனவே பிரச்சனை என்ற வார்த்தை இருக்காது, மேலும் அடிக்கடி எச்சரிக்கை செய்வதில் நேரம் செல்லாது. இதே பழைய சம்ஸ்காரம் உங்களுடைய தாசன் ஆகிவிடும், உங்களைத் தாக்காது. எனவே மகாராஜா ஆகுங்கள். சிம்மாசனதாரி ஆகுங்கள், கிரீடம் அணிந்திருப்பவராக ஆகுங்கள். திலகமிட்டிருப்பவராக ஆகுங்கள்.



    ஜெர்மனி பார்ட்டியுடன் –

    சகஜ ஞானம் மற்றும் யோகாவின் அனுபவிகளாக இருக்கிறீர்களா? பாப்தாதா ஒவ்வொரு உயர்ந்த ஆத்மாவின் எதிர்காலத்தைப் பார்க்கிறார்கள். எப்படி தந்தை ஒவ்வொருவரின் நெற்றியில் பிரகாசமாக மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரத்தைப் பார்க்கிறார், அதே போல் நீங்களும் தன்னுடைய நெற்றியில் எப்பொழுதும் பிரகாசமாக மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரத்தைப் பார்க்கிறீர்களா? நட்சத்திரம் பிரகாசமாக மின்னிக் கொண்டிருக்கிறதா? மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரத்தை மாயா ஒருபொழுதும் மறைத்து விடுவதில்லையே? மாயா வருகிறதா? மாயாவை வென்று உலகத்தை வென்றவராக எப்பொழுது ஆவீர்கள்? இன்று மற்றும் இப்பொழுது என்ற உறுதியான எண்ணம் வைத்தீர்கள் என்றால் மாஸ்டர் சர்வ சக்திவான் ஆகி, மாயாவை வென்றவர்-உலகை வென்றவராகவே ஆகிவிடுவீர்கள். தைரியம் இருக்கிறது தான் இல்லையா? ஒருவேளை தைரியம் வைத்தீர்கள் என்றால் பாப்தாதாவும் அவசியமாகவே உதவி செய்வார். ஒரு அடியை நீங்கள் எடுத்து வையுங்கள், ஆயிரம் அடிகள் தந்தை உதவி செய்வார். ஒரு அடி எடுத்து வைப்பதோ சுலபம் தான் இல்லையா? அப்படி இன்றிலிருந்து அனைவரும் சகஜ யோகி என்ற பட்டத்தை மதுபன் வரதான பூமியிலிருந்து வரதான ரூபத்தில் பெற்றுச் செல்லுங்கள். இந்த குரூப் ஜெர்மனி குரூப் அல்ல, ஆனால் சகஜயோகி குரூப். எந்தவொரு விஷயம் உங்கள் எதிரில் வந்தாலும் அதை தந்தை மேல் மட்டும் விட்டு விடுங்கள். உணர்வோடு உரிமையோடு 'பாபா' என்று கூறுங்கள். பிறகு விஷயம் முடிவடைந்து விடும். இந்த பாபா என்ற வார்த்தையை உள்ளப்பூர்வமாகச் சொல்வது தான் மந்திர சக்தியாகும். அந்த அளவு உயர்ந்த மந்திர சக்தி நிறைந்த வார்த்தை உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மாயா எந்த நேரம் வருகிறதோ அந்த நேரம் இதை மறக்க மட்டும் வைத்து விடுகிறது. மாயா செய்யும் முதல் வேலையே தந்தையை மறக்க வைப்பது தான். எனவே இந்த கவனம் வைக்க வேண்டும். எப்பொழுது இந்த கவனம் வைப்பீர்களோ அப்பொழுது நிரந்தரமாக தாமரை மலருக்குச் சமமாக தன்னை அனுபவம் செய்வீர்கள். மாயாவின் பிரச்சனைகளின் சேறு எவ்வளவு இருந்த போதிலும், நீங்கள் நினைவின் ஆதாரத்தினால் சேற்றிலிருந்து எப்பொழுதுமே விலகி இருப்பீர்கள். தாமரை மலர் உங்களுடைய படம் தான் இல்லையா? எனவே பாருங்கள் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய கண்காட்சி கூடத்தில் தாமரை மலரை உருவாக்கியிருக்கிறார்கள் இல்லையா? பிரம்மா பாபா மட்டும் தாமரை மலரில் அமர்ந்திருக்கிறாரா அல்லது நீங்களும் அமர்ந்திருக்கிறீர்களா? தாமரை மலரின் நிலை உங்களுடைய ஆசனம். ஆசனத்தை ஒருபொழுதும் மறக்காமல் இருந்தீர்கள் என்றால் எப்பொழுதும் மலர்ந்த முகத்தோடு இருப்பீர்கள். ஒருபொழுதும் எந்த விஷயத்திலும் குழப்பத்தில் வர மாட்டீர்கள். எப்பொழுதுமே மகிழ்ச்சியினால் முகமலர்ந்திருக்கும் மனநிலை தான் இருக்கும். உங்களை அனைவரும் பார்த்து இவர் எப்பொழுதுமே சகஜயோகி மற்றும் எப்பொழுதும் முகம் மலர்ந்திருப்பவர் என்று மகிமை செய்வார்கள். எப்பொழுதும் தந்தை என்ற வார்த்தையின் மந்திரத்தை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். இந்த மூன்று விஷயங்களை நினைவில் வையுங்கள். ஜெர்மனியைச் சேர்ந்தவர்களிடம் மதுபன்னிற்கு மிகவும் ஈர்க்கப்பட்டு மிக அன்புடன் ஓடி வரும் விசேஷம் இருக்கிறது. மதுபன் மேல் அன்பு என்றால் தந்தை மேல் அன்பு. பாப்தாதாவிற்கும் குழந்தைகள் மேல் இந்த அளவே அன்பு இருக்கிறது. தந்தையின் அன்பு அதிகமா அல்லது குழந்தைகளின் அன்பு அதிகமா? (தந்தையின்). உங்களுடையதும் தந்தையை விட பல மடங்கு அதிகமானது. தந்தையோ எப்பொழுதும் குழந்தைகளை முன்னுக்கு வைப்பார் இல்லையா? குழந்தைகள் தந்தைக்கும் எஜமானர்கள். பாருங்கள் நீங்கள் உலகின் அதிபதி ஆவீர்கள், தந்தை அதிபதியாக ஆக்குவார், ஆனால் அவர் ஆக மாட்டார். அப்படி நீங்கள் முன்னுக்கு இருக்கிறீர்கள் இல்லையா? இந்த அளவு அன்பு தந்தைக்கு குழந்தைகள் மேல் இருக்கிறது. ஒரு ஜென்மத்தின் அதிர்ஷ்டம் இல்லை 21 ஜென்மங்களுக்கான அதிர்ஷ்டம் மற்றும் அழியாத அதிர்ஷ்டம், இது உறுதியானது.



    ஜெர்மனி குரூப்பினர் அதிசயம் செய்து காண்பிக்க வேண்டும். எப்படி இப்பொழுது உழைத்து கீதைக்குரிய பகவானின் படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். அதே போல் பெயர் பெற்ற நபரைக் கண்டுபிடியுங்கள், அவர் மூலம் ஆம் கீதை சொன்னது பகவான் சிவன் என்பது அனைவரிடமும் சென்றடைய வேண்டும். பாப்தாதா குழந்தைகளின் உழைப்பைப் பார்த்து மிகுந்த பாராட்டுக்கள் தெரிவிக்கிறார். மிக நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இதே தலைப்பை நிரூபித்து விட்டீர்கள் என்றால் முழு உலகிலும் வெற்றி முழக்கம் ஏற்பட்டு விடும். எப்படி இப்பொழுது உழைத்திருக்கிறீர்கள் அதே போல் இன்னும் உழைத்து செய்தியை நாலாபுறமும் பரப்ப வேண்டும். ஞான சிந்தனை நன்றாக செய்திருக்கிறீர்கள், மிக நல்ல படங்களை உருவாக்கியிருக்கிறீர்கள்.



    கேள்வி :

    பாப்தாதா ஒவ்வொரு இடத்தின் ரிசல்ட்டை எதன் ஆதாரத்தில் பார்க்கிறார்?



    பதில் –

    அந்த இடத்தின் வாயுமண்டலம் மற்றும் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்று அதன் ஆதாரத்தில் தான் பாப்தாதா ரிசல்ட்டைப் பார்க்கிறார். ஒருவேளை கரடுமுரடான வரண்ட கட்டாந்தரை நிலத்திலிருந்து இரண்டு மலர்கள் உருவாகிவிட்டால் கூட அது 100 -ஐயும் விட அதிகமானது. பாபா இரண்டை பார்ப்பதில்லை, ஆனால் இரண்டையும் நூறுக்குச் சமமாக பார்க்கிறார். எவ்வளவு தான் சிறிய சென்டராக இருந்தாலும், சிறியது என்று நினைக்காதீர்கள். சில இடங்களில் தரம் இருக்கிறது என்றால் சில இடங்களில் எண்ணிக்கை இருக்கிறது. எங்கே குழந்தைகள் செல்பவராக இருந்தாலும் அங்கே வெற்றி உங்களுடைய பிறப்புரிமை ஆகும்.



    கேள்வி :

    எந்த இரட்டை சொரூபத்திலிருந்து சேவை செய்தீர்கள் என்றால் வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்?



    பதில் –

    ரூப் மற்றும் பசன்ந்த் (ஞானம் மற்றும் யோகம்). இரண்டு சொரூபத்தினால் சேவை செய்யுங்கள், பார்வையாலேயும் சேவை மற்றும் வாய் மூலமாகவும் சேவை. ஒரே நேரத்தில் இரண்டு ரூபங்களின் சேவை மூலமாக இரட்டை ரிசல்ட் வெளியாகும்.



    நைரோபி பார்ட்டி :

    எப்பொழுதும் கடைசியில் வந்தும் வேகமாகச் செல்லும் விசேஷம் நிறைந்த ஜோதியின் எதிரில் இருக்கும் விட்டில்பூச்சிகள், நிரந்தரமாக எரிந்து மறுபிறவி எடுத்து வாழ்பவர் ஆவதில் எப்பொழுதும் புத்திசாலிகளாக இருக்கிறீர்கள். நீங்கள் உறுதியான விட்டில்பூச்சிகள் தான் இல்லையா? விட்டில்பூச்சிகளைப் பார்த்து ஜோதியும் குஷி அடைகிறார். அந்த மாதிரி விட்டில்பூச்சிகள் மேல் ஜோதிக்கும் பெருமிதம் இருக்கிறது. அப்படி எப்பொழுதும் தந்தையின் நினைவு சொரூப குழந்தைகள் நீங்கள் ! எப்படி நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்களோ. அதே போல் தந்தையும் உங்களை நினைவு செய்கிறார். நீங்களோ தந்தைக்கு ஜட விக்கிரகங்கள் மூலமாக மாற்று வழியில் சைத்தன்யமானவருக்கு மாலைகள் அணிவிக்க முயற்சி செய்தீர்கள். மேலும் தந்தை எப்பொழுதும் குழந்தைகளின் குணங்களின் மாலையின் நினைவு செய்து உச்சரித்துக் கொண்டே இருக்கிறார். அப்படி நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள். தந்தையை ஆத்மாக்கள் நினைவு செய்கிறார்கள் மேலும் மகான் ஆத்மாக்கள் உங்களை தந்தை நினைவு செய்கிறார். அப்படி தந்தையையும் விட உயர்ந்தவர்கள் ஆகிவிட்டீர்கள். எனவே குழந்தைகளின் ஸ்தானம் தந்தையின் கிரீடத்தில் இருக்கிறது. நீங்கள் கிரீடத்திலும் மிக விலைமதிக்க முடியாத மணியாக இருக்கிறீர்கள். எது உண்மையான மணிகளாக அல்லது உண்மையான வைரங்களாக இருக்குமோ அது எவ்வளவு பிரகாசமாக இருக்கும். இன்றைய நாட்களிலோ உண்மையான முத்துக்கள் கூட போலிக்குச் சமமாக இருக்கிறது. சத்யுகத்திலோ ஒவ்வொன்றும் பல்பு மாதிரி ஒளி இருக்கும். மிகவும் ஒளி வீசுவதாக இருக்கும். எப்படி இங்கே ஏதாவது வண்ணத்தின் ஒளியாக ஆக்குவதற்காக பல்பு மேல் அந்த வண்ண காகிகதத்தை சுற்றுகிறீர்கள். பச்சை ஒளிக்காக பச்சை வண்ண காகிதம், சிகப்பு ஒளிக்காக சிகப்பு வண்ண காகிதம் சுற்றுகிறீர்கள் அதே போல் அங்கே எத்தனை வர்ணங்களின் வைரங்கள் இருக்குமோ அந்த அளவு இயற்கையான ஒளி விதவிதமான வர்ணங்களில் இருக்கும். கொஞ்சம் வெளிச்சம் வந்தாலும் மிகவும் பிரகாசமான அறை மாதிரி அனுபவம் ஆகும். அப்படி நீங்கள் அனைவரும் பாப்தாதாவின் தலையின் கிரீடத்தின் உண்மையான வைரங்கள். ஒரு வைரம் பிரகாசிப்பது மேலும் ஒரு வைரம் அனைத்தையும் விட உயர்ந்த முக்கிய பங்கேற்று செய்யும் கதாநாயகன் கதாநாயகி. அப்படி இரண்டு கிரீடங்கள் ஆகிவிட்டன. எனவே நான் இரட்டை கிரீடம் என்று எப்பொழுதும் இந்த போதையிலேயே இருங்கள்.



    நைரோபியின் நறுமணம் வதனம் வரை மிக நன்றாக வந்து கொண்டிருக்கிறது. தைரியமுள்ள குழந்தைகள். இவ்வளவு பெரிய குரூப் வந்திருக்கிறது என்றால், தைரியத்தின் நிரூபணம் தான் இல்லையா? இதிலிருந்து நைரோபியைச் சேர்ந்தவர்கள் தந்தைக்குச் சமமான சேவாதாரிகள் என்று நிரூபணம் ஆகிறது. அதனால் தானே அனைவருக்கும் சேவை செய்து இங்கு வரை கொண்டு வந்திருக்கிறார்கள் இல்லையா? இது சேவையின் வெளிப்படையான நிரூபணம் ஆகும். திட நிச்சயத்தின் பலன் கிடைத்திருக்கிறது இல்லையா? நிச்சயபுத்தி உடையவர்களாக ஆனீர்கள் மேலும் தந்தையின் உதவியின் மூலம் நடக்க முடியாதது கூட நடந்தேறிவிட்டது. சின்னஞ்சிறு குடிசையிலிருந்து மாளிகை கிடைத்து விட்டது (பாப்தாதா, தன்னுடைய மாளிகையை (சென்டரை) பார்த்திருக்கிறார்) பாப்தாதாவோ தன்னுடைய வேலையை விடுவதில்லை. தந்தை எப்பொழுதும் குழந்தைகளைப் பாதுகாக்கிறார். குடும்பத்தில் கூட பார்த்தீர்கள் என்றால் தாய் குழந்தைகளின் அக்கம் பக்கத்திலேயே அவசியம் சுற்றி வந்து கொண்டிருப்பார். ஏனென்றால் அன்பு இருக்கிறது. அப்படி பாப்தாதா மற்றும் தாய் தந்தையர் குழந்தைகளை எப்படி சுற்றி வராமல் இருப்பார்கள். எனவே தினசரி சுற்றி வருகிறார். பாப்தாதா இருவருமே பௌதீக உடல் இன்றி உடலற்றவர்களாக இருக்கிறார்கள். அவர் நிராகாரமானவர், இவர் அவ்யக்த உடலுள்ளவர். இருவர்களுக்கும் தூக்கத்தின் அவசியம் இருப்பதில்லை. எனவே எங்கே விரும்புகிறார்களோ அங்கே சென்றடைய முடியும்.



    இப்பொழுது ஆஃப்ரிக்காவில் எத்தனை சென்டர்கள் இருக்கின்றன? ஆஃப்ரிக்காவின் நிலப்பரப்போ மிகப்பெரியது, ஒவ்வொரு இடங்களுக்கும் செல்லுங்கள். மேலும் சேவையை இன்னும் வளர்ச்சியடையச் செய்யுங்கள். அதன் மூலம் உங்களை யாரும் புகார் கூற முடியாது. அந்த மாதிரியும் வேண்டாம், அங்கங்கே சேவை நிலையங்கள் திறங்கள், சேவை செய்தீர்கள், செய்தி கொடுத்தீர்கள் மற்றும் கீதா பாடசாலை திறந்து முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள்.



    டீச்சர்களுடன் –

    டீச்சர்கள் என்றாலே தந்தைக்குச் சமமாக தன்னுடைய எண்ணம், சொல் மற்றும் ஒவ்வொரு காரியம் மூலமாக அனேகர்களை மாற்றம் செய்யக்கூடியவர். வார்த்தைகள் மூலமாக மட்டும் சேவாதாரி இல்லை, காரியங்கள் மூலமாகவும் சேவாதாரி. யார் மூன்று சேவைகளிலும் வெற்றி அடைபவராக இருக்கிறாரோ அவர் தான் மதிப்புடன் தேர்ச்சி பெறுபவர் ஆகி விடுகிறார். மூன்றிலும் மதிப்பெண்கள் சமமாக இருக்க வேண்டும். அப்படி அந்த மாதிரியே மதிப்புடன் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் தான் நீங்கள் இல்லையா? தேர்ச்சி அடைபவர்களோ அதிகம் இருப்பார்கள். ஆனால் மதிப்புடன் தேர்ச்சி அடைபவர்கள் விசேஷமானவர்கள் தான் இருப்பார்கள். அப்படியானால் என்ன லட்சியம் வைத்திருக்கிறீர்கள்? தினசரி தன்னுடைய முழு நாள் நடவடிக்கையில் மூன்று சேவைகளின் சமநிலை இருந்ததா? என்று சோதனை செய்யுங்கள். சமநிலை வைப்பதினால் அனைத்து குணங்களின் அனுபவம் செய்து கொண்டே இருப்பீர்கள். நடைமுறையில் தனக்கு மற்றும் அனைவருக்கும் அனைத்து குணங்களின் அனுபவம் செய்விக்க முடியும். இவர் குணதானம் செய்கிறார் என்று அனைவரும் கூறுவார்கள். ஏனென்றால் தெய்வீக குணங்களின் அலங்காரம் தெளிவாகத் தென்படும். அப்பொழுது தான் இறுதியில் தேவியே, தேவியே என்று கூறி நமஸ்காரம் செய்வார்கள். மேலும் இதே இறுதியின் சம்ஸ்காரம் துவாபர்யுகத்திலிருந்து தேவியின் பூஜை ரூபத்தில் நடக்கும். நீங்கள் அந்த மாதிரி தான் இல்லையா? ஒருவர் இன்னொருவருக்கு தந்தையின் குணங்களின் மற்றும் தன்னுடைய தாரணையின் குணங்களின் சகயோகம் கொடுத்து கொண்டே குணமானவர் ஆக்குவது என்ற இது அனைத்தையும் விட மிகப் பெரிய சேவை. குணங்களின் தானமும் இருக்கிறது. எப்படி ஞானத்தின் தானம் இருக்கிறது அதே போல் குணங்களின் தானமும் இருக்கிறது.



    இப்பொழுது ஒவ்வொருவருக்கும் 8, 10 சென்டர்களை கவனிக்க வேண்டும் அப்பொழுது தான் சேவை நடந்தது என்று கூறுவோம். இப்பொழுது ஒவ்வொருவரும் 4, 5 சென்டர்களை கவனிக்கிறார்கள். பிறகு ஒவ்வொருவருக்கும் அனேகர்களை கவனிக்க வேண்டும். இப்பொழுது சேவையை இன்னும் அதிகப்படுத்துங்கள்.



    வரதானம்:

    நம்பர் ஒன் வியாபாரி ஆகி, ஒவ்வொரு விநாடி மற்றும் எண்ணத்தில் வருமானத்தை சேமிப்பு செய்யும் பல மடங்கு செல்வந்தர் ஆகுக.



    யார் தன்னை பிஸியாக வைப்பதின் முறையை தெரிந்திருக்கிறாரோ அவர் தான் நம்பர் ஒன் வியாபாரி. வியாபாரி என்றால் யாருடைய ஒரு எண்ணம் கூட வீணாக செல்லாமல், ஒவ்வொரு எண்ணத்திலும் வருமானம் இருக்க வேண்டும். எப்படி வெளியுலக வியாபாரி ஒவ்வொரு பைசாவையும் காரியத்தில் ஈடுபடுத்தி பல மடங்கு பணமாக ஆக்கிவிடுகிறார், அதே போல் நீங்களும் ஒவ்வொரு விநாடி மற்றும் எண்ணத்தில் வருமானம் செய்து காண்பியுங்கள். அப்பொழுது தான் பல மடங்கு செல்வம் நிறைந்தவர் ஆவீர்கள். இதன் மூலம் புத்தியின் அலைவது முடிவடைந்து விடும். மேலும் வீணான எண்ணங்களின் புகாரும் முடிவடைந்து விடும்.



    சுலோகன்:

    யார் யாசிப்பாரோ அவர் குஷியின் பொக்கிஷத்தினால் நிரம்பியவர் ஆக முடியாது.



    பிரம்மா பாபாவிற்கு சமமாக சம்பன்ன நிலையை அனுபவம் செய்யுங்கள்



    பிரம்மா பாபாவிற்குச் சமமாக நம்பர் ஒன்-ல் வர வேண்டும் என்றால் எப்பொழுதும் ஒரே சீராக மற்றும் நிரந்தர குஷியின் அனுபவம் செய்யுங்கள். எந்தவொரு பிரச்சனையிலும் செல்லாதீர்கள். பாப்தாதா மூலமாக என்ன அழியாத குறைவில்லாத மற்றும் எல்லையில்லா பொக்கிஷம் கிடைத்திருக்கிறது, எப்பொழுதும் அதே பொக்கிஷங்களின் பிராப்தியில் ஒரே சீரான மற்றும் நிரம்பிய நிலையில் இருங்கள்.



    ***OM SHANTI***