BK Murli 10 July 2016 Tamil
10.07.2016 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா'' ரிவைஸ் 17.01.1981 மதுபன்
'' அனைத்து சூழ்நிலைகளுக்கான சமாதானம் -பறக்கும் பறவை ஆகுங்கள் ''
பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் கண்களின் மொழி மூலமாக இந்த உலகத்திலிருந்து விலகி அவ்யக்த வதனவாசி ஆவதற்காக சமிக்ஞை கொடுக்கிறார். எப்படி பாப்தாதா அவ்யக்த வதனவாசியாக இருக்கிறாரோ அது போலவே நீங்களும் அந்த மாதிரி ஆகுக! என்ற வரதானம் கொடுக்கிறார். பரிஷ்தாக்களின் உலகத்தில் இருந்து கொண்டே இந்த பௌதீக உலகத்தில் காரியம் செய்வதற்காக வாருங்கள். காரியம் செய்தீர்கள், கர்மயோகி ஆனீர்கள் பிறகு பரிஷ்தா ஆகிவிடுங்கள். இந்தப் பயிற்சியைத் தான் எப்பொழுதும் செய்து கொண்டே இருங்கள். நான் பரிஷ்தாக்களின் உலகத்தில் இருப்பவன், அவ்யக்த பரிஷ்தா சொரூபத்தில் இருக்கிறேன் என்ற இந்த நினைவு எப்பொழுதுமே இருக்கட்டும். தரையில் வசிப்பவன் அல்ல, ஆகாயத்தில் வசிப்பவன். பரிஷ்தா என்றால் இந்த விகார உலகம், விகாரம் நிறைந்த பார்வை, உள்உணர்விலிருந்து விலகியிருப்பவர். இந்த அனைத்து விஷயங்களிலிருந்து விடுபட்டு இருப்பவர். அவர் எப்பொழுதும் தந்தையின் பிரியமானவர் மற்றும் தந்தை அவருடைய பிரியமானவர். இருவர்களும் ஒருவர் இன்னொருவரின் அன்பில் மூழ்கியிருப்பவர்கள். அந்த மாதிரி பரிஷ்தாவாக ஆகியிருக்கிறீர்களா? எப்படி தந்தை விலகியிருப்பவராக இருந்த போதிலும் (உடலில்) பிரவேசம் செய்து காரியம் செய்வதற்காக வருகிறார், அதே போல் பரிஷ்தா ஆத்மாக்களும் கர்ம பந்தனத்தின் காரணமாக இன்றி ஆனால் சேவையின் பந்தனத்திற்காக உடலில் பிரவேசம் செய்து காரியம் செய்து கொண்டே மேலும் எப்பொழுது விரும்புகிறார்களோ அப்பொழுது விடுபட்டு சென்று விடுகிறார்கள். அந்த மாதிரி கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்டு இருக்க வேண்டும் - இதைத் தான் பரிஷ்தா என்ற கூறுவது.
தந்தையின் குழந்தை ஆனீர்கள் என்றால், பழைய உடல் மற்றும் உடலின் உலகத்தின் சம்மந்தம் முடிவடைந்தது, எனவே இதை மர்ஜீவா ஜீவன் அதாவது உடலில் இருந்து கொண்டே இறந்து மறுவாழ்வு வாழ்வது என்று கூறுகிறீர்கள். அப்படியானால் பழைய கர்மங்களின் கணக்கு முடிவடைந்தது, புதிய பிராமண வாழ்க்கைக்கான கணக்கு தொடங்கியது. உடலில் இருந்து கொண்டே இறந்து வாழ்பவனாக ஆகியிருக்கிறேன் என்ற இதை அனைவரும் தெரிந்திருக்கிறீர்கள் மற்றும் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? ஆகியிருக்கிறீர்களா அல்லது ஆகிக்கொண்டிருக்கிறீர்களா? என்ன கூறலாம்? ஆகியிருக்கிறீர்களா அல்லது ஆகிக்கொண்டிருக்கிறீர்களா? இறந்து கொண்டிருக்கிறீர்களா அல்லது இறந்து விட்டீர்களா? எப்பொழுது இறந்து விட்டீர்களோ அப்பொழுது பழைய கணக்கு முடிவடைந்தது. பிராமண வாழ்க்கை கர்ம பந்தனத்தின் வாழ்க்கையாக இருப்பதில்லை. கர்மயோகி வாழ்க்கையின் வாழ்க்கையாக இருக்கும். எஜமானன் ஆகி காரியம் செய்கிறீர்கள் என்றால் கர்ம பந்தனமாக ஆகவில்லை, ஆனால் கர்மேந்திரியங்களின் எஜமானன் ஆகி என்ன விரும்புகிறீர்களோ, எப்படிப்பட்ட காரியத்தை விரும்புகிறீர்களோ, எவ்வளவு நேரம் காரியம் செய்ய விரும்புகிறீர்களோ அந்த மாதிரி கர்மேந்திரியங்கள் மூலம் செய்விப்பவராக இருப்பவர். அப்படி பிராமணன் என்றால் பரிஷ்தா. கர்ம பந்தனம் உள்ள ஆத்மா அல்ல, ஆனால் சேவையின் சுத்த பந்தனம் உள்ளவர். இந்த உடல் சேவைக்காக கிடைத்திருக்கிறது. உங்களுடைய கர்ம பந்தனத்தின் கணக்கு வழக்கு உள்ள வாழ்க்கையின் கணக்கு முடிவடைந்தது. இது புதிய வாழ்க்கை இதையோ அனைவரும் புரிந்து கொள்கிறீர்கள் இல்லையா. பழைய கணக்கு இதுவரையிலும் இருந்து விடவில்லையே? மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? டீச்சர்கள் என்ன நினைக்கிறீர்கள்? கணக்கு வழக்கை முடிப்பதில் திறமை நிறைந்தவர்களா அல்லது மந்தமானவர்களா? முடிக்கத் தெரியும் தான் இல்லையா? பரிஷ்தா ஆகிவிட்டீர்கள் என்றால் கடின உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். நடந்து செல்பவர், ஓடுபவர், உயரம் தாண்டிச் செல்பவர், இவர்கள் அனைவரையும் விட உயரே பறந்து செல்பவர்களாக ஆகிவிட்டீர்கள் என்றால் கடின உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள் இல்லையா? அனாதி ரூபத்திலோ பறப்பவர்களாகத் தான் இருக்கிறீர்கள். ஆத்மா பறக்கும் பறவை, நடந்து செல்லும் பறவை அல்ல. அப்படி அனாதி சம்ஸ்காரமாக என்ன இருந்ததோ அதை சுமையின் காரணமாக மறந்து விட்டீர்கள், பரிஷ்தாவிற்குப் பதிலாக கர்ம பந்தனம் உள்ள, பறக்கும் பறவைக்குப் பதிலாக கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஆகிவிட்டீர்கள். இப்பொழுது மீண்டும் பறக்கும் பறவையின் அனாதி சம்ஸ்காரத்தை வெளிப்படுத்துங்கள். அதாவது பரிஷ்தா ரூபத்தில் நிலைத்திருங்கள். பாப்தாதா போலவே நீங்களும் ஆகுங்கள் என்ற வரம் பெற்றவராக ஆகுங்கள். இதைத் தான் சுலபமான முயற்சி என்று கூறுவது. விதவிதமான சூழ்நிலைகளில் என்ன செய்வது, எப்படிச் செய்வது என்ற கடின உழைப்பு செய்கிறீர்கள் இல்லையா? இதன் மூலம் சூழ்நிலை பெரியதாகவும் மற்றும் நீங்கள் சிறியவர்களாகவும் ஆகிவிடுகிறீர்கள். சூழ்நிலை சக்திசாலியானதாக மற்றும் நீங்கள் பலஹீனமானவர்களாக ஆகிவிடுகிறீர்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அது இயற்கையின் ஆதாரத்தினால் ஏற்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், தன்னுடைய உடலின் சம்மந்தம் மூலமாக உருவான சூழ்நிலையாக இருந்தாலும், உலகியல் குடும்பம், ஆன்மீக குடும்பத்தின் சம்மந்தத்தின் ஆதாரத்தில் எந்த சூழ்நிலையாக இருந்தாலும், தன்னுடைய மற்றும் மற்றவர்களின் சம்ஸ்காரத்தின் ஆதாரத்தில் ஏதாவது (எதிர்மறையான) சூழ்நிலையாக இருந்தாலும், அனைத்து சூழ்நிலைகளிலும் என்ன? மற்றும் ஏன் என்ற கேள்விக்கான ஒரே பதில் - 'பறக்கும் பறவை ஆகிவிடுங்கள்'. சூழ்நிலை கீழேயும் மேலும் நீங்கள் மேலே சென்று விடுவீர்கள். மேலே இருந்து பார்க்கும் பொழுது கீழே இருக்கும் பொருள் எவ்வளவு தான் பெரியதாக இருந்தாலும் ஆனால் சிறியதாக அனுபவம் ஆகும், எனவே அனைத்து சூழ்நிலைகளையும் சுலபமாக கடந்து செல்வதற்கான சுலபமான வழி - 'பரிஷ்தா ஆகுங்கள், பறக்கும் பறவை ஆகுங்கள்'. சுலபமான முயற்சி என்ன என்று புரிந்து கொண்டீர்களா? என்னுடைய இந்த சுபாவம், சம்ஸ்காரம், பந்தனம் இருக்கிறது என்ற இந்த என்னுடைய என்பதின் பந்தனத்தை உடலில் இருந்து கொண்டே இறந்து மறுபிறவி எடுத்த பிறகும் முடிக்கவில்லையா? பரிஷ்தா நிலையின் மொழி என்னுடையது, என்னுடையது என்பதல்ல. பரிஷ்தா என்றால் என்னுடையதாக என்ன இருந்ததோ அது உன்னுடையதாக ஆகிவிட்டது. இந்த என்னுடையது, என்னுடையது என்பது தான் தரையில் வாழ்பவராக ஆக்குகிறது. மேலும் உன்னுடையது, உன்னுடையது தான் ஆசனதாரியாக ஆக்குகிறது. அப்படி பரிஷ்தா ஆவது என்றால் என்னுடைய - என்னுடைய என்ற பந்தனத்திலிருந்து விடுபட்டவர் ஆவது. ஆன்மீக வாழ்க்கையில் கூட என்னுடையவர் ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை. அந்த மாதிரி பரிஷ்தாவாக ஆகியிருக்கிறீர்களா? மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்னவாக ஆவீர்கள்? பரிஷ்தா ஆகத் தெரியும் தான் இல்லையா? அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு சமாதானத்தை நினைவில் வையுங்கள் – பறக்கும் பறவை ஆவது மற்றும் ஆக்குவது. புரிந்ததா? நல்லது.
அந்த மாதிரி தந்தைக்குச் சமமான அவ்யக்த ரூபமுடைய பரிஷ்தா சொரூபமானவர்களுக்கு, எனக்கு ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை என்று அந்த மாதிரி விலகிய மற்றும் அன்பான நிலையில் இருப்பவர்களுக்கு, எப்பொழுதும் கர்மேந்திரியங்களை வென்று, கர்மயோகி மற்றும் கர்மாதீத் நிலை என்ற இந்தப் பயிற்சியில் இருக்கக்கூடிய, எப்பொழுதும் பந்தனத்திலிருந்து விடுபட்ட மற்றும் சேவையின் சம்மந்தத்தில் இருக்கக்கூடிய, அந்த மாதிரி தந்தைக்குச் சமமாக நீங்களும் அந்த மாதிரி ஆகுக என்ற வரம் பெற்ற குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
பார்ட்டிகளுடன் அவ்யக்த சந்திப்பு -
1) எப்பொழுதும் தன்னை இந்த உலக நாடகத்திற்குள் கதாநாயக பாத்திரம் ஏற்று நடிபவர் என்று புரிந்து நடந்து கொள்கிறீர்களா? யார் கதாநாயக பாத்திரம் செய்பவராக இருப்பாரோ அவருக்கு ஒவ்வொரு அடியிலும் தன் மேல் கவனம் இருக்கும், அவர் ஒவ்வொரு அடியையும் அந்த மாதிரி எடுத்து வைப்பார் அதைப் பார்த்து அனைவரும் ஆஹா! ஆஹா! என்று பாராட்டி இன்னும் ஒரு தடவை என்று கூறுவார்கள். ஒருவேளை கதாநாயக பாத்திரத்தைச் செய்பவர்களின் ஏதாவது ஒரு அடி மேலே கீழே சென்று விட்டது என்றால், அவரை கதாநாயகன் என்று சொல்ல முடியாது. நீங்கள் அனைவரும் இரட்டை கதாநாயகர்கள். கதாநாயக விசேஷ பாத்திரம் ஏற்று செய்பவர்களாகவும் இருக்கிறீர்கள். மேலும் வைரம் மாதிரியான வாழ்க்கையை உருவாக்குபவர்களாகவும் இருக்கிறீர்கள். அந்த மாதிரி தன்னுடைய சுயகௌரவத்தை அனுபவம் செய்கிறீர்களா? ஒன்று தெரிந்து கொள்வது, இன்னொன்று தெரிந்து அதன் படி நடப்பது! அப்படி தெரிந்திருக்கிறீர்களா மற்றும் தெரிந்து நடந்து கொள்கிறீர்களா? எப்பொழுதும் தன்னுடைய கதாநாயக பாத்திரத்தைப் பார்த்து மகிழ்ச்சியோடு இருங்கள், ஆஹா! நாடகமே ஆஹா! மேலும் ஆஹா என்னுடைய பாத்திரமே ஆஹா! ஒருவேளை சிறிது சாதாரண காரியம் நடந்து விட்டது என்றாலும் கதாநாயகன் என்று கூற முடியாது. எப்படி தந்தை கதாநாயக பாத்திரம் ஏற்று செய்பவராக இருக்கிறார் என்றால், அவருடைய ஒவ்வொரு காரியமும் மகிமை பாடப்படுகிறது மற்றும் பூஜை செய்யப்படுகிறது. அந்த மாதிரி தந்தையுடன் எந்த சகயோகி ஆத்மாக்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கும் கதாநாயக பாத்திரம் இருக்கும் காரணத்தினால் அவருடைய ஒவ்வொரு காரியமும் மகிமைக்கும் மற்றும் பூஜைக்கும் உரியதாக ஆகிவிடுகிறது. சொரூபம் ஆன பிறகு ஒருபொழுதும் மறக்க முடியாது.
2) வாழ்க்கையை உயர்ந்ததாக ஆக்குவதற்கான சுலபமான வழி எது? எப்பொழுது தன்னை டிரஸ்டி என்று புரிந்து கொண்டு நடக்கிறீர்களோ அப்பொழுது உயர்ந்த வாழ்க்கை உருவாகிறது. டிரஸ்டி என்றால், விலகியிருப்பவர் மற்றும் அன்பானவர். அப்படி அனைவரையும் தந்தை டிரஸ்டி ஆக்கிவிட்டார். நீங்கள் டிரஸ்டி தான் இல்லையா? டிரஸ்டி ஆகி இருப்பதினால் குடும்பஸ்தனின் உணர்வு இயல்பாகவே அகன்று விடுகிறது. குடும்பஸ்தனின் நிலை தான் உயர்ந்த வாழ்க்கையிலிருந்து கீழே கொண்டு வருகிறது. டிரஸ்டிக்கு என்னுடையது என்று எதுவும் இருப்பதில்லை. எங்கு என்னுடையது என்பது இருப்பதில்லையோ அங்கு பற்றுதலை வென்ற நிலை இயல்பாக வந்துவிடுகிறது. எப்பொழுதும் பற்றுதலை வென்றவர் என்றால் எப்பொழுதும் சிரேஷ்ட மற்றும் சுகமானவர். பற்றுதலில் துக்கம் இருக்கும். எனவே பற்றுதலை வென்றவர் ஆகுங்கள்.
3) எப்பொழுதும் கர்மயோகி ஆகி ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறீர்களா? செய்யும் கர்மம் அதாவது காரியம் மற்றும் யோகா இரண்டும் இணைந்திருக்கிறதா? எப்படி உடல் மற்றும் ஆத்மா இணைந்திருந்து காரியம் செய்கிறதோ, அதே போன்று கர்மம் மற்றும் யோகா இரண்டும் இணைந்திருக்கிறதா? காரியம் செய்து கொண்டே நினைவு மறக்க வேண்டாம், மேலும் நினைவில் இருந்து கொண்டே காரியம் மறந்து விட வேண்டாம். சிலர் அந்த மாதிரியும் செய்கிறார்கள், எப்பொழுது கர்ம சேத்திரத்தில் செல்கிறார்கள் என்றால் நினைவு மறந்து விடுகிறது. இதன் மூலம் காரியம் மற்றும் நினைவு பிரிந்து விட்டது என்று நிரூபணம் ஆகிறது. ஆனால் இவை இரண்டும் இணைந்திருக்கின்றன. உங்களுடைய பட்டமே கர்மயோகியாகும். காரியம் செய்து கொண்டே நினைவிலிருப்பவர் எப்பொழுதும் விலகியிருப்பவராகவும், அன்பானவராகவும் இருப்பார், லேசானவராக இருப்பார், எந்தவொரு காரியத்தின் சுமை அனுபவம் செய்ய மாட்டார். கர்மயோகியைத் தான் வேறு வார்த்தைகளில் தாமரை மலர் என்று கூறுவது. அப்படியானால் தாமரை மலருக்குச் சமமாக இருக்கிறீர்களா? ஒருபொழுதும் ஏதாவது சேறு அதாவது மாயாவின் வைப்ரேஷன் தொடுவல்லையே? எப்பொழுதாவது மாயா வருகிறதா அல்லது விடைபெற்று சென்று விட்டதா? மாயாவை தன்னுடன் அமர வைத்தோ விடுவதில்லையே. மாயாவை அமர வைப்பது என்றால் தந்தையிடமிருந்து விலகுவது, எனவே மாயாவின் ஞானம் நிறைந்தவராகி தூரத்திலிருந்தே விரட்டி விடுங்கள். ஞானம் நிறைந்தவர் அனுபவத்தின் ஆதாரத்தில் மாயா எப்பொழுது மற்றும் எப்படி உருவாகிறது என்று தெரிந்திருக்கிறார். பலஹீனத்தினால் மாயாவின் ஜென்மம் ஏற்படுகிறது. எந்தவிதமான பலஹீனம் இருந்தால் மாயா வரும். எப்படி பலஹீனம் மூலம் அனேக நோய்களின் கிருமிகள் உருவாகி விடுகின்றன. அதே போல் ஆத்மாவின் பலஹீனத்தினால் மாயாவிற்கு ஜென்மம் கிடைத்துவிடுகிறது. காரணம் தன்னுடைய பலஹீனம் மேலும் அதற்கான நிவாரணம் - தினசரி முரளி. முரளி தான் சூடான உணவு, சக்தி நிறைந்த உணவு. என்னென்ன சக்திகள் வேண்டுமோ, அந்த அனைத்தும் நிரம்பிய தினசரி உணவு கிடைக்கிறது. யார் தினசரி சக்தி நிறைந்த உணவை அருந்துகிறாரோ அவர் பலஹீனமானவராக ஆக முடியாது. தினசரி இந்த உணவை அருந்துகிறீர்கள் தான் இல்லையா? இந்த உணவிற்கு விரதம் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தினசரி அந்த மாதிரி சக்தி நிறைந்த உணவு கிடைப்பதினால் மாஸ்டர் சர்வ சக்திவானாக இருப்பீர்கள். உணவின் கூடவே உணவை ஜீரணம் செய்வதற்கான சக்தியும் வேண்டும். ஒருவேளை கேட்பதற்கு மட்டுமான சக்தி இருக்கிறது, சிந்திப்பதற்கான சக்தி இல்லை என்றாலும் சக்திசாலியாக ஆக முடியாது. கேட்பதற்கான சக்தி என்றால், உணவு அருந்தினீர்கள் மற்றும் சிந்தனை சக்தி அதாவது உணவை ஜீரணம் செய்தீர்கள். இரண்டு சக்தி உள்ளவர் பலஹீனம் ஆக முடியாது.
இல்லறத்தில் இருப்பவர்களுடன் -
அனைவரும் இல்லறத்தில் இருந்து கொண்டே எப்பொழுதும் விலகியிருப்பவராகவும் மற்றும் அன்பான நிலையில் இருப்பவர்களாகவும் தான் இருக்கிறீர்கள் இல்லையா. குடும்பத்தின் எந்தவொரு உலகியல் சம்மந்தம் மற்றும் உலகியல் வாயுமண்டலம் மற்றும் வைப்ரேஷனிலோ வந்து விடவில்லையே? இந்த அனைத்து உலகியல் விஷயங்களிலிருந்தும் விலகி ஆன்மீக சம்மந்தத்தில், வாயுமண்டலத்தில், வைப்ரேஷனில் இருக்கிறீர்களா? குடும்பத்தன்மை இல்லை தான் இல்லையா? வீட்டின் சூழ்நிலையையே அதே மாதிரி ஆன்மீகமாக ஆக்கியிருக்கிறீர்களா? குடும்பத்தின் வீடாக அனுபவம் ஆகாமல் சேவை நிலையத்தின் வாயுமண்டலம் அனுபவம் ஆகிறதா? யார் வந்தாலும் இது குடும்பத்தினர் வாழும் இடம் இல்லை, ஆன்மீகமான இடம் என்று அனுபவம் செய்ய வேண்டும். எந்த விதமான குடும்பத்தின் உணர்வுகள் வர வேண்டாம். வருபவர்கள் இது ஒன்றும் சாதாரண வீடு அல்ல, ஆனால் கோயில் ஆகும் என்று அனுபவம் செய்ய வேண்டும். இது தான் தூய்மையான இல்லறத்தினரின் சேவையின் பிரத்யக்ஷ சொரூபம். ஸ்தானமும் சேவை செய்ய வேண்டும், வாயுமண்டலமும் சேவை செய்ய வேண்டும்.
எப்படி சேவை நிலையத்தில் ஒருவேளை யாராவது சுபாவம் சம்ஸ்காரத்தின் வசமாகி கொஞ்சம் ஒரு மாதிரியாக நடந்து கொள்கிறார் என்றால் அனைவரும் அந்த மாதிரி இருக்கக்கூடாது என்று சொல்வார்கள். அதே போலவே உங்களுடைய வீட்டிலும், இந்த இடத்தில் அந்த மாதிரி ஒரு காரியம் கூட நடக்கக்கூடாது என்று உணர்தல் இருக்க வேண்டும். இந்த மாதிரி காரியத்தை நான் செய்யக் கூடாது என்ற உணர்வு இதயத்தில் வர வேண்டும். எப்படி சேவை நிலையத்தில் ஏதாவது குறைகளைப் பார்க்கிறீர்கள் என்றால், சரி செய்து விடுகிறீர்கள், அதே போல் தனது குடும்பத்தின் இடத்தையும் மற்றும் நிலையையும் சரி செய்து விட வேண்டும். வீடு குடும்பமாக அன்றி கோயிலாகத் தென்பட வேண்டும். எப்படி கோயிலின் வாயுமண்டலம் அனைவரையும் ஈர்க்கிறது அதே போல் உங்களுடைய வீட்டிலிருந்து தூய்மையின் நறுமணம் வர வேண்டும். எப்படி அகர்பத்தியின் நறுமணம் நாலாபுறங்களிலும் பரவுகிறது, இதே விதமாக தூய்மையின் நறுமணம் தொலைதூரம் வரை பரவ வேண்டும், இதைத் தான் தூய்மையான இல்லறம் என்று கூறுவது. நல்லது.
வரதானம் –
தன்னுடைய வெற்றி உறுதியானது என்று புரிந்து எப்பொழுதும் கவலையின்றி இருக்கக்கூடிய நிச்சயபுத்தி உடையவர் ஆகுக.
எந்தக் குழந்தைகள் எப்பொழுதும் தந்தை மேல், தன்னுடைய வாழ்க்கைப் பங்கின் மேல், மேலும் வாழ்க்கை நாடகத்தின்படி ஒவ்வொரு விநாடி நடப்பதில் 100 சதவிகிதம் நிச்சயபுத்தி உடையவராக இருக்கிறாரோ அவருடைய வெற்றி உறுதியானது. உறுதியான வெற்றி ஏற்படும் காரணத்தினால் எப்பொழுதும் கவலையின்றி இருப்பார். அவருடைய முகத்திலிருந்து ஒருபொழுதும் கவலையின் ரேகைகள் தென்படாது. அவருக்கு இந்தக் காரியம் மற்றும் இந்த எண்ணம் ஏற்கனவே சித்தியானது என்ற நிச்சயம் எப்பொழுதும் இருக்கும். அவருக்கு ஒருபொழுதும் எந்த விஷயத்திலும் கேள்வி எழ முடியாது.
சுலோகன்:
கேட்பது - கூறுவதில் பாவனையை மற்றும் உள்நோக்கத்தை மாற்றி விடுவது தான் வாயுமண்டலத்தைக் கெடுப்பது.